என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    பட்டாணி, முட்டை சேர்த்து செய்யும் இந்த கீமா சப்பாத்தி, பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டை - 4
    ப்ரெஷ் பட்டாணி - 1/2 கப்
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிது

    தாளிக்க :

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    பிரிஞ்சி இலை - 1
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 2
    அன்னாசிப்பூ - 1
    பெரிய வெங்காயம் - 1

    பட்டாணி முட்டை கீமா

    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும்.

    தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும்.

    பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.

    பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    மசாலா வாடை போனதும் அதனுடன் துருவி வைத்திருக்கும் முட்டை துருவல் சேர்க்கவும்.

    இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

    சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான பட்டாணி முட்டை கீமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை (ஞாயிற்று கிழமை) சன்டே ஸ்பெஷலாக வாய்க்கு ருசியாக நாட்டு கோழியில் தயாரிக்கப்படும் நாட்டு கோழி குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி - ஒரு கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா பவுடர் - ஒரு ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
    தனியா தூள் - ஒரு ஸ்பூன்
    தேங்காய் - அரை மூடி
    கசகசா - ஒரு ஸ்பூன்
    முந்திரி - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    நாட்டு கோழி குருமா

    செய்முறை :

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.

    மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுத்தால் சுவையான நாட்டு கோழி குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அல்வாவில் பல வெரைட்டிகள் உள்ளது. அதில் ஒன்று தான் பீட்ரூட் அல்வா. இந்த இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பீட்ரூட் - 4
    பால் - 2 கப்
    சர்க்கரை - 1/2 கப்
    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
    நெய் - 3 டேபிள் ஸ்பூன்
    முந்திரி - சிறிது
    உலர் திராட்சை - சிறிது
    பாதாம் - சிறிது
    கண்டென்ஸ்டு மில்க் - தேவையான அளவு (விருப்பமிருந்தால்)

    பீட்ரூட் அல்வா

    செய்முறை :

    முதலில் பீட்ரூட்டை கழுவி, தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, பாதாம் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வறுத்து, பின் அதனை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்கி, பின் அதில் பால் சேர்த்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

    பிறகு அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட்டு, பின் தேவையான அளவு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கலவை கெட்டியாகும் வரை நன்கு பிரட்டி இறக்கவும்.

    பின்னர் அதில் முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை தூவி பரிமாறினால், பீட்ரூட் அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான இந்த வடையை செய்து கொடுக்கலாம். இன்று வடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு - 1/4 கப்
    கடலை பருப்பு - 1/2 கப்
    காய்ந்த சிவப்பு மிளகாய் - 5
    சோம்பு - 1/2 தேக்கரண்டி
    கல் உப்பு - தேவையான அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 2
    பீட்ருட் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    பீட்ருட் வடை

    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.

    துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சுத்தமாக கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    பருப்பு வகைகள் நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு, அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்

    ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு அரைத்த மாவை ஒரு பௌலில் சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, நைசாக துருவிய பீட்ருட்

    ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறிய சிறிய

    வடையாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சுவையான, ஆரோக்கியமான பீட்ருட் வடை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் சீஸ் பால் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 4,
    கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 100 கிராம்,
    சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    பிரெட் சீஸ் பால்

    செய்முறை:

    பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவை போட்டு உப்பு, பிரெட் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீஸ் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான பிரெட் சீஸ் பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க தேவைப்படும் பொருட்கள் :

    தயிர் - ஒரு கப்
    பூண்டு - ஒன்று
    இஞ்சி - ஒரு துண்டு
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சைமிளகாய் - 2
    லவங்கம் - 4
    எலுமிச்சை - பாதி
    மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    கஸ்தூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    பிரியாணிக்கு தேவையான பொருட்கள்:

    அரிசி - அரை கிலோ (ஊறவைக்கவும்)
    சிக்கன் லெக்பீஸ் - 8
    வெங்காயம் - 3
    தக்காளி - 3
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
    புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா 2

    தந்தூரி சிக்கன் பிரியாணி

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வதற்கு முதலில் சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    சிக்கனை சுத்தம் செய்த பின் அரைத்த கலவையை சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

    சிக்கன் நன்றாக ஊறியதும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் சிக்கனை முக்கால் பதம் வேகும் வரை பொரித்து எடுக்கவும்.

    பின்பு மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் கரம்மசாலா தூளை போட்டு நன்றாக கிளறிவிடவும்.

    அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்துள்ள அரிசியை அவற்றில் கலந்து எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.

    அடுத்து அதில் பொரித்த சிக்கனை போட்டு 15 நிமிடம் தம்மில் போடவேண்டும்.

    அரைமணி நேரம் கழித்து பாத்திரத்தை திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மஷ்ரூம் சேர்த்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மஷ்ரூம் - 1 கப்,
    சர்க்கரை - 1 கப்
    நெய்  - 3 டேபிள் ஸ்பூன்
    மில்க் மெய்டு - 2 டேபிள் ஸ்பூன்
    முந்திரி - 4
    திராட்சை - 4
    பால்  - 1 லிட்டர்
    பாதாம் - 4
    பிஸ்தா - 10
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    கேசரி பவுடர் - 1 சிட்டிகை

    மஷ்ரூம் கீர்

    செய்முறை:

    மஷ்ரூமை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து கொள்ளவும்.

    அதே கடாயில் மஷ்ரூமை போட்டு வறுத்து பாலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து பால் அரை லிட்டர் சுண்டும் வரை கொதிக்க விடவும்.

    அடுத்து பாலில் சர்க்கரை, மில்க்மெய்டு, குங்குமப்பூ, கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    கீர் திக்கான பதம் வந்தவுடன் வேறு பாத்திரத்தில் மாற்றவும்.

    அதன் மேல் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை சேர்த்து சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பருகலாம்.

    அருமையான மஷ்ரூம் கீர் ரெடி.

    - இந்துமதி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் மீந்து போன இட்லியை வைத்து மாலையில் வித்தியாசமான சுவை கொண்ட மசாலா இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மினி இட்லி - 6 (ஆறவைத்து)
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு

    மசாலா மினி இட்லி

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் கரம் மசாலா தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

    அடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதனுடன் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.

    இதில் 2 அல்லது 3 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்னர் ஆற வைத்த மினி இட்லிகளை அப்படியே கூட சேர்த்துக் கொள்ளலாம்.

    இட்லி உடைந்துவிடாமல் மென்மையாக கிளறவும் 3 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

    சுவையான மசாலா மினி இட்லி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோயா, பட்டாணி சேர்த்து செய்யும் புலாவ் அருமையாக இருக்கும். இன்று இந்த புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :       

    பாசுமதி அரிசி - ஒரு கப்  
    சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,   
    ஜாதிபத்திரி - சிறிய துண்டு,   
    பிரியாணி இலை - ஒன்று,   
    வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,   
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   
    பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,   
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,   
    மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) - தலா ஒரு டீஸ்பூன்,   
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    சோயா பட்டாணி புலாவ்

    செய்முறை:     

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, பிரியாணி இலை சேர்த்து தாளித்த  பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் பச்சைப் பட்டாணி, சோயா உருண்டைகள், கொத்தமல்லி, அரிசி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும்.

    சூப்பரான சோயா பட்டாணி புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு, பருப்பு சேர்த்து செய்யும் உருண்டைக் குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    உருளைக்கிழங்கு - 3,
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 50 கிராம்,
    துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    தக்காளி - 1,
    காய்ந்த மிளகாய் - 3,
    பூண்டு - 5 பல்,
    சின்னவெங்காயம் - 30 கிராம்,
    புளி  - அரை எலுமிச்சை அளவு,  
    பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    சோம்பு - ஒரு டீஸ்பூன்,
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    உருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு

    செய்முறை :

    பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்

    கடலைப்பருப்பு, துவரம்பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு பூண்டு, காய்ந்த மிளகாய், சோம்பு, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து கொரகொரவென தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயத்தைச் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    இத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    சிறிது தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு, உப்பு, கெட்டியாகக் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    கொதி வரும்போது பொரித்த உருண்டையையும் குழம்பில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிரெஞ்ச் டோஸ்ட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரெட் - 10
    முட்டை - 2
    பால் - 1/2 கப்
    சீனி - 4 மேசைக்கரண்டி + தேவைக்கேற்ப
    வெண்ணெய் அல்லது நெய் -  தேவைக்கேற்ப

    பிரெஞ்ச் டோஸ்ட்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால், சீனியும் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்து வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் இட்டு, பிரெட் துண்டுகளை ஒவ்வொன்றாக முட்டையில் தோய்த்து, தோசைக்கல்லில் போட்டு வெந்தும் திருப்பி போட்டு இருபக்கமும் மொறு மொறு என்று சுட்டெடுக்கவும்.

    சுவையான பிரெஞ்ச் டோஸ்ட் தயார்.
    சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கத்தரிக்காய் - 1/4 கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 2
    தேங்காய் - 2 துண்டுகள்
    பூண்டு - 10 பல்
    கடுகு - 1/4 ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 ஸ்பூன்
    மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
    தனியா பொடி - 1
    மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
    புளி தண்ணீர் - 1 கப்
    நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கீற்று
    கொத்தமல்லி - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

     எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

    செய்முறை

    கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள காம்பை விட்டு ஒரு கத்தரிக்காயை (பூ போல) நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, கொத்தமல்லி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும்.

    மிக்சியில் வதக்கிய வெங்காயம், தக்காளியை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.

    அடுத்து கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.

    கத்தரிக்காய் சற்று வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும்.

    இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும்.

    அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்து கத்தரிக்காய் வெந்து குழம்பு திக்கான பதத்துடன் எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×