என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலைநேர டிபன் மசாலா மினி இட்லி
Byமாலை மலர்14 Sep 2019 8:37 AM GMT (Updated: 14 Sep 2019 8:37 AM GMT)
காலையில் மீந்து போன இட்லியை வைத்து மாலையில் வித்தியாசமான சுவை கொண்ட மசாலா இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மினி இட்லி - 6 (ஆறவைத்து)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் கரம் மசாலா தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
அடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதனுடன் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
இதில் 2 அல்லது 3 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் ஆற வைத்த மினி இட்லிகளை அப்படியே கூட சேர்த்துக் கொள்ளலாம்.
இட்லி உடைந்துவிடாமல் மென்மையாக கிளறவும் 3 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
மினி இட்லி - 6 (ஆறவைத்து)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் கரம் மசாலா தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
அடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதனுடன் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
இதில் 2 அல்லது 3 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் ஆற வைத்த மினி இட்லிகளை அப்படியே கூட சேர்த்துக் கொள்ளலாம்.
இட்லி உடைந்துவிடாமல் மென்மையாக கிளறவும் 3 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான மசாலா மினி இட்லி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X