என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து மொறுமொறு சிக்கன் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
    ரொட்டி தூள் - 150 கிராம்
    எண்ணெய் - தேவையான அளவு
    பூண்டு, இஞ்சி அரைப்பு, மக்காச்சோள மாவு, உப்பு போன்றவை தேவையான அளவு
    வினிகர், சோயா சாஸ் - 1 சிறிய தேக்கரண்டி
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    தயிர் - 3 தேக்கரண்டி



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டுக்கலவையில் துண்டாக்கப்பட்ட இறைச்சியை போட்டு மிளகாய்த்தூள், தயிர், வினிகர், சோயா சாஸ், மக்காச்சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் இறைச்சி துண்டுகளை அதில் இருந்து எடுத்து ரொட்டி தூள் மீது பரப்பவும். அப்படியே இறைச்சி துண்டுகளை கொதிக்கும் எண்ணெயில் வறுத்தெடுத்து, சூடாக பரிமாறலாம்.

    இது மொறு மொறுப்பாகவும் வாசனையுடனும் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடையில் ஐஸ் லெமன் டீ குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று இந்த ஐஸ் லெமன் டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேயிலைத் தூள் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை - 2
    சர்க்கரை - 8 டீஸ்பூன்
    புதினா இலைகள் - சிறிது
    ஐஸ் கட்டிகள் - 1 டம்ளர்



    செய்முறை :

    இரண்டு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் தேயிலைத் தூளைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டிக்கொள்ளுங்கள்.

    ஒரு எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு எலுமிச்சை பழத்தை மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    தேநீரில் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.

    கண்ணாடி டம்ளரில் ஐஸ் துண்டுகளைக் கால் பகுதி வரை நிரப்புங்கள்.

    இதில் அரை டம்ளர் அளவுக்குத் தேநீரைச் சேருங்கள்.

    பிறகு கால் டம்ளர் தண்ணீரை ஊற்றுங்கள்.

    நறுக்கிய எலுமிச்சைத் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு, ஜில்லென்று பரிமாறுங்கள்.

    குளுகுளு ஐஸ் லெமன் டீ ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கீமா சப்பாத்தி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த கீமா சப்பாத்தியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 500 கிராம்
    தயிர் - 1/2 கப்
    வெங்காயம் - 2 (நறுக்கியது)
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 1/2 கப்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    சப்பாத்திக்கு...

    கோதுமை மாவு - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெதுவெதுப்பான நீர் - 1 கப்
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்



    செய்முறை  :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பௌலில் கோதுமை மாவை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    கீமாவை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    அரை மணிநேரம் ஆன பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    அடுத்து ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 10 நிமிடம் தொடர்ந்து வதக்கி விட வேண்டும்.

    பிறகு கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை மட்டனை வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று சிறு வட்டமாக தேய்த்து, நடுவே ஒரு டேபிள் ஸ்பூன் கீமாவை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக கீமா வெளியே வராதவாறு தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு சப்பாத்திகளாக போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான கீமா ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மா‌ம்பழ‌ம் - 2
    சர்க்கரை - 1 கப்
    பால் - 2 கப்
    ஏல‌க்கா‌ய் - 2
    நெய் - தேவையான அளவு
    முந்திரி - சிறிதளவு



    செ‌ய்முறை :

    மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ நறுக்கிப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

    முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.

    சு‌த்தமான வா‌ய் அக‌ண்ட பாத்திரத்தில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள்.

    அடிக்கடி நெய் சேர்த்து கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது ஏல‌க்கா‌யை ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து சே‌ர்‌க்கவு‌ம்.

    பா‌த்‌திர‌த்‌தி‌ல் தளதளவெ‌ன்று அ‌‌ல்வா வ‌ந்தது‌ம், ‌வறுத்த முந்திரியை சேர்த்து சி‌றிது நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

    சூப்பரான மா‌ம்பழ அ‌ல்வா தயா‌ர்

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரைநோயாளிகளுக்கு உகந்த கோதுமை சேமியாவை வைத்து எளிய முறையில் சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை சேமியா - 250 கிராம்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    தக்காளி - ஒன்று ,
    பீன்ஸ் - 3,
    கேரட் - ஒன்று,
    பிரிஞ்சி இலை - ஒன்று,
    பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு,
    காலிஃப்ளவர் - சிறிதளவு (காலிஃப்ளவரில் இருந்து நறுக்கிய சிறிய பூக்கள்),
    உருளைக்கிழங்கு - ஒன்று,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    தனியாத்தூள் (மல்லித்தூள்) - கால் டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    சுடுநீரில் கோதுமை சேமியாவைப் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுக்கவும்.

    உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    பாத்திரத்தில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் பூக்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுதுது கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து இதனுடன் வேகவைத்த காய்கறி, மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

    பிறகு, கோதுமை சேமியா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.

    வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை சேமியா பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோவக்காய் பொரியல். இன்று இந்த பொரியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோவக்காய் - அரை கிலோ,
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
    உப்பு - தேவைக்கேற்ப.

    அரைக்க :

    தேங்காய் - ஒரு சில்லு,
    வரமிளகாய் - 2,
    சின்ன வெங்காயம் - 4,

    தாளிக்க:

    எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை



    செய்முறை :

    அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    கோவக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்த பின்னர் நீளமாக நறுக்கிய கோவக்காயை சேர்த்து வதக்கவும்.

    கோவக்காய் அரை வேக்காடு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

    தேங்காய் மற்றும் வெங்காயத்தின் பச்சை வாசனை அடங்கியதும், அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சுவையான கோவக்காய் பொரியல் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸை பலவாறு சமைக்கலாம். இன்று பூண்டு வெஜிடபிள் சேர்த்து சுவையான நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    நூடுல்ஸ் - 1 பாக்கெட்
    பூண்டு - 10 பற்கள்
    பச்சை மிளகாய் - 3  
    வெங்காயம் - 2
    கேரட் - 1
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நூடுல்ஸை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், நூடுல்ஸை போட்டு, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் வேக வைத்து இறக்கி, நீரை வடித்துவிட்டு, பின் குளிர்ந்த நீரால் நூடுல்ஸை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

    பிறகு அதில் சோயா சாஸ் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான பூண்டு வெஜ் நூடுல்ஸ் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான பல்வேறு உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று,
    பால் - ஒரு லிட்டர்,
    சர்க்கரை - தேவையான அளவு,
    பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் - தலா 3 டீஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    மாம்பழத்தின் தோல், கொட்டைகளை நீக்கி விட்டு துண்டுகளாக்கி மிக்சியில் கூழாக அரைத்தெடுக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறு தீயில் வைத்து காய்ச்சவும்.

    பால் பாதியாக சுண்டிய பிறகு ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

    பாலை நன்கு ஆற விடவும்.

    கடைசியாக அதனுடன் அரைத்த மாம்பழ கூழ் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிரவைத்து பரிமாறலாம்.

    சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நூடுல்ஸ் - 200 கிராம்
    மைதா மாவு - 200 கிராம்
    வெங்காயம் - 2
    கேரட் துருவல் - கால் கப்
    உருளைக்கிழங்கு - 2
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    முட்டைக்கோஸ் துருவல் - கால் கப்
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:


    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மைதா மாவை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டைக்கோஸ், கேரட், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, இறக்க வேண்டும்.

    அதனுடன் உருளைக்கிழங்கு, நூடுல்ஸ், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    பிசைந்து வைத்த மாவை பூரி போல் உருட்டி சமோசா வடிவல் மடித்து அதன் நடுவில் நூடுல்ஸ் மசாலாவை வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு ஓட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்துள்ள சமோசக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான நூடுல்ஸ் சமோசா ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் கிர்ணி பழம். கோடையில் கிடைக்கும் கிர்ணிப்பழத்தை வைத்து மில்க்‌ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிர்ணி பழம் - ஒன்று,
    பால் - அரை லிட்டர்,
    சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை:

    பாலை காய்ச்சி ஆற விட்டு குளிர வைக்கவும்.

    கிர்ணி பழத்தின் தோல், விதைகளை நீக்கி துண்டுகளாக்கவும்.

    துண்டுகளாக்கிய கிர்ணி பழத்தை மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, குளிர்ந்த பால் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

    கண்ணாடி டம்பளர்களில் ஊற்றி பருகலாம்.

    குளுகுளு கிர்ணிப்பழ மில்க்‌ஷேக் ரெடி.

    பலன்கள்: சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் கிர்ணி பழம். நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடான காப்பி அல்லது டீயுடன் சாப்பிட மெது பக்கோடா அருமையாக இருக்கும். இன்று இந்த மெது பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கடலைமாவு - 100 கிராம்
    அரிசி மாவு - 50 கிராம்
    வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
    சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    பூண்டுப்பல் - 6
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    சுடுவதற்கு எண்ணைய் - 200 கிராம் 



    செய்முறை  :

    வெங்காயத்தை மெலிதாக வெட்டி வைக்கவும்.

    கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும். க

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணையை போட்டு கையால் நன்றாக பிசைந்து வைக்கவும்.

    பிறகு உப்பு, சோடா உப்பு, நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் இவற்றுடன் ஒரு கை தண்ணீர் தெளித்து பிசையவும்.

    தண்ணீர் தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து மாவுக்கலவையை கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும்.  

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் மாவுக் கலவையை சிறிதாக எடுத்து உருட்டாமல் கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.   

    மீதமுள்ள மாவுக் கலவையையும் இதே போல் சுட்டு எடுத்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    சுவையான மெது பக்கோடா ரெடி.  

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அசைவ உணவுக்கு ஈடான சுவையை தரும் காளானுடன் சத்துக்கள் நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து ஒரு குழம்பு செய்தால், மிகவும் அலாதியான சுவையில் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பட்டன் காளான் - 15
    வெங்காயம் - 1
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    பசலைக்கீரை பேஸ்ட் பொருட்கள்...

    பசலைக் கீரை - 1 கட்டு
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 4
    பட்டை - 1
    ஏலக்காய் - 4
    கிராம்பு - 4
    அன்னாசிப்பூ - 1
    கொத்தமல்லி - ஒரு கட்டு



    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டன் காளானை நன்கு நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    பசலைக்கீரை பேஸ்ட்டிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட் போல், தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின்பு நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

    பிறகு பசலைக்கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    அடுத்து மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்ற, மூடி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

    காளான் நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×