என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    பாவ் பாஜி மும்பையில் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இந்த பாவ் பாஜியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    உருளைக்கிழங்கு - 4
    பட்டாணி - 100 கிராம்
    காலிபிளவர் - 100 கிராம்
    கேரட் - 1 சிறியது
    குடைமிளகாய் - 1
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    பாவ் பாஜி மசாலா - 1 மேஜைக்கரண்டி
    வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி



    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு, குடை மிளகாய், கேரட் இரண்டையும் தோல் சீவி துண்டுகளாக  வெட்டி வைக்கவும். காலி பிளவரையும் நறுக்கி வைக்கவும்.

    குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், காலிபிளவர், பட்டாணி, சிறிது உப்பு சேர்த்து 3 விசில் வரும் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
     
    விசில் அடங்கியதும் மூடியை திறந்து வெந்த காய்கறிகளை ஒரு மத்து கொண்டு நன்கு மசித்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    குடைமிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் காஷ்மீரி மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து  ஒரு நிமிடம் கிளறவும்.

    பிறகு மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி 100 மில்லி தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.

    மசாலா கெட்டியானதும் வெண்ணெய் சேர்த்து கிளறி பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான பாவ் பாஜி மசாலா ரெடி.

    பாவ் பன் செய்முறை

    தேவையான அளவுக்கு பாவ் பன் எடுத்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசை கல்லை வைத்து லேசாக சூடானதும் 2 மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் கரைந்ததும் பன்னை அதில் சேர்த்து இருபுறமும் லேசாக சூடு படுத்தி எடுத்துக் கொள்ளவும்.

    சூடு படுத்திய பாவ் பன்னோடு இந்த மசாலாவை சேர்த்து அதன் மேல் சிறிது வெண்ணெய் வைத்து பரிமாறவும்.

    சூப்பரான பாவ் பாஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து பல்வேறு உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பழுத்த மாம்பழம் - 4
    சர்க்கரை - 200 கிராம்
    லெமன் ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி



    செய்முறை :

    மாம்பழங்களை நன்றாக கழுவி அதன் தோலை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை விழுதை போட்டு 5 நிமிடம் வரை கிளறவும்.
        
    பிறகு அதனுடன் சர்க்கரை, லெமன் ஜூஸ் சேர்த்து ஜாம் பதம் வரும் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

    ஜாம் பதம் தெரிந்து கொள்ள ஒரு சிறிய தட்டை ப்ரீஸரில் வைக்கவும். ஜாமை சிறிது எடுத்து அந்த குளிர்ந்த தட்டில் வைக்கவும். இவ்வாறு செய்வதால் ஜாம் உடனே ரூம் டெம்பரேச்சருக்கு வந்து விடும். அதை ஒரு விரலால் நடுவே கோடு போடவும். இரண்டு பக்கமும் ஒட்டாமல் தனித்தனியாக பிரிந்தால் அது தான் சரியான பதம். ஜாம் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். பிரிஜ்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.

    தோசை, இட்லி, பூரி பிரெட்டுடன் சேர்த்து  சாப்பிட நன்றாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தக்காளி - கால் கிலோ
    பூண்டு - 6 பல்
    காய்ந்த மிளகாய் - 6
    வெந்தயப் பொடி - ஒரு டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    நல்லெண்ணெய், - தேவையான அளவு
    புளி - சிறிதளவு
    பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளுங்கள்.

    மிளகாய் ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைத்து, பூண்டு, புளி, தக்காளியைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக சுருண்டு வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெந்தயப் பொடியைத் தூவி இறக்கிவையுங்கள்.

    இந்தத் தக்காளி ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிட கொடுப்பது நல்லது. இந்த சீசனில் கிடைக்கும் நுங்கை வைத்து பலூடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நுங்குத் துண்டுகள் - 10
    சப்ஜா விதைகள் - 2 டீஸ்பூன்,
    விருப்பமான பழக்கலவை - கால் கப்,
    விருப்பமான நட்ஸ் கலவை - 4 டீஸ்பூன்,
    பதநீர் - கால் கப்,
    நுங்கு புட்டிங் - ஒரு கப்.



    செய்முறை :

    நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைக்கவும்.

    உயரமான கண்ணாடி டம்பளர்களில் முதலில் சிறிதளவு ஊறிய சப்ஜா விதைகளை சேர்க்கவும். அதன் மீது சிறிதளவு பழக்கலவை சேர்க்கவும். பிறகு பதநீர், நுங்கு புட்டிங்கை சேர்க்கவும். அதன் மீது மீண்டும் பழக் கலவை சிறிதளவு தூவவும். அதன் மீது நுங்குத் துண்டுகள் சேர்க்கவும். இறுதியாக நட்ஸ் வகைகளை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

    குளுகுளு நுங்கு பலூடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் வடை அல்லது வட இந்திய ஸ்டைல் தகி வடை மிகவும் புகழ் பெற்ற வாய்க்கு ருசியான ரெசிபி. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உளுந்து - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்
    வறுத்த சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி இலை - 1 கப்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    தண்ணீர் - 1 டம்ளர்
    கெட்டித் தயிர் - 400 கிராம்
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டேபிள்
    ஸ்பூன் சாட் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்  
    கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
    மாங்காய் சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
    மாதுளை பழ விதைகள் - அலங்கரிக்க



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வறுத்த சீரகத்தை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    உளுந்தம் பருப்பை 4 மணிநேரம் ஊற வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும். அதனுடன் உப்பு, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் போன்றவற்றையும் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    இந்த மாவுக் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வறுத்து பொடித்த சீரகம், சிறிதளவு கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு வடைகளாக தட்டி சூடான எண்ணெய் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.

    வடை ரெடியானதும் அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். வடை மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும். வடை நன்றாக மென்மையாக ஊறியவுடன் அதில் உள்ள தண்ணீரை பிழிந்து விட்டு தனியாக வைக்கவும்.

    தயிரில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்.  

    ஊறிய வடையை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மேல் மேல் இனிப்பு தயிரை ஊற்றவும்.

    அடுத்து அதன் மேல் சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு, மாங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி இவற்றை தூவவும்.

    கடைசியாக மாதுளை விதைகள், கொத்தமல்லி இலைகளை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான தகி வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் வெந்தய குழம்பை ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று கிராமத்து ஸ்டைலில் வெந்தய குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுண்டைக்காய் வற்றல் - 3 டீஸ்பூன்,
    சின்ன வெங்காயம் - 15,
    தனியா - 1 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 8,
    வெந்தயம் - 3 டீஸ்பூன்,
    புளி - ஒரு எலுமிச்சை அளவு,
    கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
    பெரிய தக்காளி - 1,
    நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன்,
    மிளகு - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),
    வெல்லம் - சிறிது,
    கறிவேப்பிலை - ஒரு கொத்து.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மீதியுள்ள வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.

    இத்துடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை நன்றாகக் குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.

    அடுத்து அதில் உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.

    குழம்பு திக்கான பதம் வந்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்.

    சுவையான வெந்தயகுழம்பு தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரவையில் பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று ரவையில் எப்படி பொங்கல் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ரவை - 2 கப்
    பச்சைப் பருப்பு - அரை கப்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    தாளிக்க:

    நெய் - தேவையான அளவு
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    சீரகம் - 1 டீஸ்பூன்
    முந்திரி - தேவையான அளவு
    மிளகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை



    செய்முறை :

    முதலில் முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் ரவையைப் போட்டு சூடு வர வறுத்துக்கொள்ளவும்.

    அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

    மீண்டும் வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்து, ஒரு கப் ரவைக்கு இரண்டே கால் கப் தண்ணீர் என ஊற்றி கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

    தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

    மீண்டும் ஒரு கொதி வந்ததும் ரவையை சிறிதுசிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். ரவை முழுவதையும் சேர்த்த பிறகு, நன்றாகக் கிளறிவிட்டு 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும். நீண்ட நேரம் அடுப்பிலேயே இருந்தால் ரவை பொங்கலுக்குப் பதில் ரவை உப்புமாவாக மாறிவிடும்.

    தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன், முட்டை சேர்த்து சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    சிக்கன் துண்டு - 4 பெரியது எலும்புடன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    சோயாசாஸ் - 1/2 ஸ்பூன்
    முட்டை வெள்ளை கரு - 2
    பால் - அரை கப்
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
    பட்டர் - தேவையான அளவு '



    செய்முறை  :

    முட்டையை நன்றாக அடித்து கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து 3 கப் தண்ணீர் சேர்த்து உப்பு, சோயா சாஸ் சேர்த்து வேக வைக்கவும்.

    வெந்தததும் தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும்.

    சிக்கனில் உள்ள துண்டுகளை தனியாக பிரித்து எடுத்து உதிர்த்து கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கிய பின்னர் சிக்கன், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சிக்கன் வடித்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

    தனியாக பால், தண்ணீர் சேர்த்து காய்ச்சி சூப்பில் சேர்க்கவும்.

    கடைசியாக அடித்து வைத்துள்ள முட்டை வெள்ளை கருவை ஒரு கையால் ஊற்றி கொண்டே மறு கையால் சூப்பை கிளறவும்.

    தேவைக்கு மிளகு தூள், உப்பு சேர்த்து பரிமாறவும். .

    சுவையான சிக்கன் - முட்டை சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து விதவிதமான உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாம்பழத் துண்டுகள் - 2 கப்,
    பால் - கால் லிட்டர்,
    ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு,
    சர்க்கரை - தேவையான அளவு.



    செய்முறை :

    சிறிது மாம்பழ துண்டுகளை தனியாக எடுத்த வைக்கவும்.

    மீதமுள்ள மாம்பழத் துண்டுகளுடன் சர்க்கரை, தேவையான அளவு பால் விட்டு மிக்சியில் நன்றாக நுரைக்க அடிக்கவும்.

    அதனுடன் மீதமுள்ள பால், ஐஸ்கட்டிகள் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக நுரைக்க அடித்து கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேலே துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள மாம்பழ துண்டுகளை போட்டு பருகவும்.

    சூப்பரான மாம்பழ மில்க் ஷேக் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகள், வேர்க்கடலை பொடி தூவி ஊத்தப்பம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊத்தப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 1 கப்,
    வேர்க்கடலைப் பொடி - தேவையான அளவு,
    வெங்காயம், தக்காளி - தலா 1,
    கொத்தமல்லி -  சிறிது,
    தோல் சீவிய இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்,
    கேரட் துருவல் - 5 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தோசை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கேரட் துருவல், உப்பு, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் மீது தேவையான அளவு வேர்க்கடலைப் பொடியை தூவவும்.

    பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான வேர்க்கடலைப் பொடி மசாலா ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மில்க்ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குளுகுளு காபி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 10
    பால் - அரை லிட்டர்
    காபி பவுடர் - 2 தேக்கரண்டி
    ஏலக்காய் - 4
    சர்க்கரை - தேவைக்கு
    ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு



    செய்முறை :

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி அது கொதிக்க ஆரம்பித்ததும் காபி பவுடரை கொட்ட வேண்டும்.

    அதனுடன் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கி விட வேண்டும்.

    மிக்சியில் பேரீச்சம் பழத்தை போட்டு சிறிது பால் சேர்த்து அரைக்க வேண்டும்.

    இறுதியில் மீதமிருக்கும் பால், ஐஸ்கட்டிகள் போன்றவற்றை சேர்த்து அடித்து கலக்க வேண்டும்.

    அடுத்து அதில் காபி டிகாஷன் விட்டு நுரைக்க அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

    சூப்பரான காபி மில்க் ஷேக் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாங்காயை சட்னி செய்து, மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாங்காய் - 2
    பாசிப்பருப்பு - 1/4 கப்
    வரமிளகாய் - 4
    சீரகம் - 1 டீஸ்பூன்
    வெல்லம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான பொருட்கள்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    வரமிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை :

    மாங்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்கவும்.

    பின்பு அதே வாணலியில் சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

    அடுத்து மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×