என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    ரமலான் பண்டிகையின் போது இஸ்லாம் மக்கள் அதிகமாக ஹலீம் செய்வார்கள். இன்று சிக்கன் ஹலீம் செய்வது எவ்வளவு சுலபம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
    கோதுமை - 2 கப்
    வெங்காயம்  - 3
    துவரம் பருப்பு - 1/2 கப்
    பட்டை - 2
    பிரியாணி இலை - 2
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    தனியாதூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - 1/2 கப்
    புதினா - 1/2 கப்
    பச்சைமிளகாய் - 4
    எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    துவரம் பருப்பை நன்றாக கழுவி வேக வைத்துகொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் கடாயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் ஊற வைத்திருக்கும் கோதுமையை போட்டு, அதில் 6 கப் தண்ணீர் விட்டு, 1/2 மணி நேரம் நன்கு கோதுமை மென்மையாக வேகும் வரை கொதிக்க விடவும்.

    பிறகு அதில் வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை சேர்த்து நன்றாக குழைய வேக வைக்கவும்.

    பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து சிக்கனை போட்டு நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள், உப்பு, மிளகுதூள், சீரகப் பொடி மற்றும் 1/2 மணி நேரம் கிரேவி கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.

    இந்த மசாலாவை கோதுமை கலவையில் போட்டு நன்றாக கலக்கவும். அனைத்து நன்றாக சேர்ந்து வந்ததும் அதனை இறக்கி அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் தூவி விட்டு எலுமிச்சை சாற்றை அதில் பிழிந்து விட்டு ஒரு முறை கிளறி பொன்னிறமாக வதக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை தூவி பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் ஹலீம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான சுவையான லஞ்ச் செய்து கொடுக்க விரும்பினால் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    பட்டன் காளான்கள் - 20
    இஞ்சி, பூண்டு - சிறிதளவு,
    வெங்காய‌த்தாள் - சிறிதளவு
    பெரிய வெங்காயம் - ஒன்று
    ப‌‌ச்சை மிள‌காய் - 3
    சோயா சாஸ் - 4 தேக்கரண்டி
    மிள‌குத்தூள் - ஒரு தேக்க‌ர‌ண்டி
    சாத‌ம் - 4 கப் ( உதிரியாக வ‌டித்து ஆறவைத்தது)
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :
     
    பட்டன் காளானை நீரில் சுத்தப்படுத்தி, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
     
    ஒரு பெரிய வாணலியில், சிறிதளவு எண்ணெயை விட்டு சூடானதும் வெங்காய‌ம், பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

    அடுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து, சிறிது நேர‌ம் வத‌க்கிவிட்டு, நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் சிறிதளவு உப்பு, சோயா சாஸ் சேர்த்து, வடித்து வைத்திருந்த சாதத்தைக் கொட்டி கிளறவும்.
     
    கடைசியாக மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து வாணலி சூட்டிலேயே கலந்து இறக்கினால் சூடான சுவையான மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புலாவ், சப்பாத்தி, நாண், சாத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    சிக்கன் - அரை கிலோ
    சோம்பு - 1 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 7
    பூண்டு - 10 பல்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்



    செய்முறை

    சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்து கொள்ளவும்.

    மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அடுப்பை மிதமான தீயில் மூடிவைத்து வேக விடவும்.

    தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

    கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை செய்து கொடுக்கலாம். இன்று தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    அரிசி மாவு - 2 கப்
    உளுத்தம் பருப்பு மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)



    செய்முறை :

    முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    ஒரு பிளாஸ்டிக் ஷீட் அல்லது ஒரு துணியில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும். ( நன்றாக எண்ணெய் அடங்கிய பின்னர் தான் எடுக்க வேண்டும்)

    இதே போன்று அனைத்து மாவையும் தட்டி, பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான தட்டை தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய் ஊறுகாய் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊறுகாயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 200 கிராம்,
    கடுகுத்தூள்  - ஒரு டீஸ்பூன்,
    ஆம்சூர்பொடி  - ஒரு டீஸ்பூன்,
    வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன்,   
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    பச்சை மிளகாயை வட்ட வடிவில் கொஞ்சம் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும்.

    நறுக்கிய பச்சை மிளகாயுடன் கடுகுத்தூள், மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

    கடைசியாக, கடுகு எண்ணெய் விட்டுக் கலந்து… ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைத்து, தினமும் குலுக்கி விட வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள தயார்.

    இந்த ஊறுகாய் இரண்டு, மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இன்று காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பச்சை மிளகாய் - 15
    குடை மிளகாய் - 1
    சின்ன வெங்காயம் - 15
    தக்காளி - 1
    உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
    புளி - சிறிய உருண்டை
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.

    பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

    காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.

    * இதை அனைத்து விதமான சாதத்தோடும் பரிமாற சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காராமணி குழம்பை சாதம், தோசை அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால், நன்றாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காராமணி - 1 கப்
    புளி - 1 எலுமிச்சை அளவு
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    உப்பு - தேவையான அளவு
    சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    பட்டை - 2
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    வர மிளகாய் - 2
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காராமணியை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்க வேண்டும்.

    பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்த காராமணியை போட்டு, அதில் 2 கப் தண்ணீர் விட்டு, 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    மற்றொரு வாணயிலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, வரமிளகாய், சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார் பொடி, புளித் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி விட வேண்டும்.

    நன்றாக கொதித்து வரும் போது வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது அருமையான காராமணி கறி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பலூடா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சப்ஜா பலூடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சப்ஜா விதை - ஒரு ஸ்பூன்
    பால் - ஒரு டம்ளர்
    சேமியா - சிறிதளவு
    ஐஸ்கிரீம் - 2 க்யூப்
    பாதாம், வால்நட், முந்திரி - சிறிதளவு
    ப்ரவுன் சுகர் - தேவையான அளவு
    ஸ்ட்ராபெர்ரி, மாதுளை,  நாவல்பழம் - சிறிதளவு.



    செய்முறை :

    சப்ஜா விதையை இரவே ஊற வைத்துக் கொள்ளவும். அது 3 அல்லது 4 ஸ்பூன் அளவிற்கு வந்து விடும்.

    எல்லா பழத்தையும் தனித்தனியாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.

    சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும். பலூடா கிளாஸில் சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும்.

    ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, மாதுளம் ஜூஸ் விட்டு அதன் மேல் ஐஸ்கிரீம் போட வேண்டும்.

    மறுபடி சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும்.

    ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, நாவல்பழம் ஜூஸ் விட்டு மறுபடி சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும்.

    ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் விட்டு அதன் மேல் ஜஸ்கிரீம் போட வேண்டும்.

    அதன் மீது சர்க்கரை கலக்கிய பாலை விட்டு லேசாக கலந்துவிடவும்.  

    ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

    சூப்பரான சப்ஜா பலூடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வாழைக்காய் மிளகு வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    கடுகு - 1 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...

    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 5
    மிளகு - 3 டீஸ்பூன்



    செய்முறை :

    வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும்.

    வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

    வேக வைத்த வாழைக்காயை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!!!
     
    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
     
    வெயில் காலத்தில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கை சேர்த்து மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தனியா - 2 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    அரிசி - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - ¼ கப்
    உருளைக்கிழங்கு - 4
    தயிர் - 1½ கோப்பை
    கொத்தமல்லை தழை - சிறிதளவு
    நீர் - ½ கப்
    துருவிய தேங்காய் - ¼ கப்
    உப்பு - சுவைக்கு

    தாளிக்க :

    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - ½ தேக்கரண்டி
    கறிவேப்பிலை சிறிதளவு
    ஓமம் - ½ தேக்கரண்டி



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பாஸ்தாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்தா - 1 கப்
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    முட்டை - 3
    பெரிய வெங்காயம் - ஒன்று
    குடைமிளகாய் - 1/4 பாகம்
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    முதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும்.

    முட்டை உதிரியாக வந்தவுடன் அதில் வேக வைத்த பாஸ்தா சேர்த்து சுருள கிளறி விட்டு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான சுவையான முட்டை பாஸ்தா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து பல்வேறு சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிப்பும் தித்திப்புமான சிறு மாம்பழங்கள் - 2,
    புளித்த மோர் - 2 கப்,
    அரிசி - ஒரு டீஸ்பூன்,
    சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன்,
    வெந்தயம் - கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    காய்ந்த மிளகாய் - 2,
    தேங்காய் துருவல் - ஒரு கப்,
    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கப் தண்ணீர் விட்டு மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.

    மிக்சியில் தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்ததை மோரில் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வெந்து கொண்டுஇருக்கும் மாம்பழங்களுடன் கலக்கவும் (தேவையானால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்).

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானமும் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.

    குழம்பு பொங்கி வரும்போது கீழே இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

    சூப்பரான மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×