என் மலர்tooltip icon

    சமையல்

    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான மீன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீன் துண்டுகள் - 500 கிராம்
    முட்டை - 1
    உருளைக்கிழங்கு - 100 கிராம்
    மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    பச்சைமிளகாய் - 3
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க

    மீன் வடை

    செய்முறை :

    மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் அதை எடுத்து முள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் உதிர்த்த மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் கலவையில் சிறிது எடுத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.

    ருசியான மீன் வடை தயார்.

    இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தினை அரிசி, காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - ஒரு கப்,
    வெங்காயம், கேரட் - தலா ஒன்று,
    பச்சைப் பட்டாணி - அரை கப்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    தினை அரிசி வெஜிடபிள் உப்புமா

    செய்முறை :

    வெங்காயம், கேரட், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும். இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதித்ததும் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் வேக வைக்கவும்.

    தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான தினை அரிசி வெஜிடபிள் உப்புமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை உணவான இட்லியை எப்படி மறுபடியும் சுவையான மற்றும் புதுமையான முறையில் மாலை நேர சிற்றுண்டியாக மாற்றுவது என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஒரு கப் நறுக்கிய தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
    கடுகு
    கடலைபருப்பு
    மஞ்சள் தூள் - அரை டேபிள்ஸ்பூன்
    இட்லி - 5
    கொத்தமல்லி - தேவையான அளவு
    உப்பு - சுவைக்கு
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

    மசாலா இட்லி

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லியை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு உப்பு மற்றும் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

    அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து பிறகு அரை ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்த பின்பு அந்தக் கலவையை சிறிது நேரம் நன்கு வேக வைக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து இட்லி துண்டுகள் அந்த மசாலா கலவையில் சேரும் வரை கவனமாக உடையாமல் கிளறி விடவும்.

    கடைசியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

    சூடான சுவையான மசாலா இட்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு மால்ட். இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 5 டேபிள் ஸ்பூன்
    பால் - 2 கப்
    தண்ணீர் - அரை கப்
    நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    பாதாம் பொடி/நறுக்கிய பாதாம் - 3 டேபிள் ஸ்பூன்

    ராகி மால்ட்

    செய்முறை :

    கேழ்வரகு மாவை வாணலியில் போட்டு 5 நிமிடம் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    1/2 கப் பாலில் ராகி மாவை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு மீதமுள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கலந்து வைத்துள்ள கேழ்வரகு கலவையை சேர்த்து கட்டிகள் சேராதவாறு கைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

    பிறகு அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.

    இறுதியில் அதில் ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து கிளறி இறக்கி, பாதாம் பொடியை சேர்த்து பரிமாறவும்.

    சுவையான சத்தான ராகி மால்ட் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காளானில் கிரேவி, 65, செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காளான், குடைமிளகாய் வைத்து டிக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - 10
    குடைமிளகாய் - 2
    பெரிய வெங்காயம் - 1
    மிளகாய் - 2
    பூண்டு - 5 பல்
    மிளகு தூள் - அரை டீஸ்பூன்
    சோம்பு  - சிறிதளவு
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    கடுகு - சிறிதளவு
    தனியா - சிறிதளவு

    காளான் - குடைமிளகாய் டிக்கா

    செய்முறை :

    காளானை சுத்தம் செய்து வைக்கவும்.

    குடைமிளாய், வெங்காயத்தை வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும்.

    நறுக்கிய வெங்காயத்துடன் மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.

    பூண்டு, மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    சோம்பு, வெந்தயம், தனியா, கடுகு போன்றவற்றை வறுத்து பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் வறுத்து பொடித்த கலவையை கொட்டி கிளறவும்.

    பச்சை வாசனை போனதும் இறக்கி அதனுடன் குடை மிளகாய், காளான் துண்டுகளை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஊறிய காளான், குடை மிளகாயை டிக்கா குச்சியில் குத்தி எண்ணெயில் போட்டு பொரித்து பரிமாறவும்.

    சூப்பரான காளான் டிக்கா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி உணவில் கம்பு சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கம்பு மாவு - 1 கப்
    பச்சை மிளகாய் - 3
    கறிவேப்பிலை - 1 கொத்து
    முட்டை கோஸ் - 100 கிராம்
    கேரட் - 2
    உருளைக்கிழங்கு - 1
    கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    பால் - அரை கப்

    கம்பு வெஜிடபிள் சப்பாத்தி

    செய்முறை :

    முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, கேரட்டை துருவிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு அதில் உப்பு, துருவிய காய்கறிகள், கரம்மசாலா தூள், பால், ப.மிளகாய், போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

    பிரைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுங்கள்.

    ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நண்டு சூப்பை சாப்பிட்டால் தெரியும் அதன் ருசி. இந்த நண்டு சூப்பை செய்வது எவ்வாறு என்பதை அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    நண்டு - அரை கிலோ
    வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
    எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    பூண்டு - 4 பல்
    இஞ்சி - 1 துண்டு
    மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
    வெங்காயத் தாள் - 3
    கான்ப்ளார் பவுடர் - ஒன்றரை தேக்கரண்டி
    பால் - கால் கப்

    நண்டு சூப்

    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆறவிட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும்.

    வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும்.

    பாலில் கான்ப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும்.

    கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, கான்ப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத்தாள் தூவினால் சுவை மிகுந்த நண்டு சூப் தயார்.

    ஜலதோஷம் பிடித்தால் அதை துரத்துவதற்கு நல்ல மருந்து.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருப்பு உளுந்து, புரதச் சத்துமிக்க தானியம் ஆகும். எலும்புகள் வலுவடைய இது உதவும். எனவே… துவையல், அடை, இட்லி மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தயாரிக்கும்போது கருப்பு உளுந்து சேர்ப்பது நல்லது.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கல் அரிசி - 250 கிராம்,
    கருப்பு உளுந்து - 100 கிராம்,
    துவரம்பருப்பு - 1 கப்,
    வெங்காயம் - 3,
    காய்ந்த மிளகாய் - 5,
    இஞ்சி - சிறு துண்டு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    கருப்பு உளுந்து அடை

    செய்முறை:

    வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    புழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, துவரம்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும்.

    அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    இந்த மாவில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

    சத்தான கருப்பு உளுந்து அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா அருமையாக இருக்கும். இன்று இந்த போண்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 2,
    தோசை அல்லது இட்லி மாவு - 2 கப்,
    பச்சை மிளகாய் - 2,
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு,
    பச்சைப் பட்டாணி - கால் கப்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா

    செய்முறை:

    வாழைக்காயை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

    தோசை அல்லது இட்லி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும்.

    பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சுவையான வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா தயார்!

    இதற்கு, தக்காளி சட்னி சரியான ஜோடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ‘சிக்’கென்ற உடல் வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவாக இந்த சாலட்டை சாப்பிடலாம். இன்று இந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைத்தண்டு - பெரிய துண்டு,
    வெள்ளரிக்காய் - 1 சிறியது,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    வாழைத்தண்டு - வெள்ளரிக்காய் சாலட்

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடங்கள் வேக வைத்த கொள்ளவும்.

    வெள்ளரிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, வாழைத்தண்டு கலவையில் கொட்டி, மீண்டும் ஒருமுறை கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சத்தான வாழைத்தண்டு - வெள்ளரிக்காய் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக பிரியாணி அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. இதில் பல வகைகள் உண்டு. அதில் மீன் பிரியாணியும் ஒன்று. அதை செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
    தேவைப்படும் பொருட்கள்

    பாஸ்மதி அரிசி  -  3/4 கிலோ
    மீன் - 3/4 கிலோ (பெரிய வகை துண்டு மீன்)
    வெங்காயம் - 3
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி, பூண்டு விழுது -  3 மேசைக்கரண்டி
    பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை - தலா 2
    தயிர் - ஒன்றரை கப்
    மிளகாய் தூள் - 2+1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 + 1/2 தேக்கரண்டி
    வெள்ளை மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
    சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
    கெட்டி தேங்காய் பால் - ஒரு கப்
    எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
    எண்ணெய் புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு

    மீன் பிரியாணி

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேசைக் கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்த மசாலாவில் பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

    நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மசாலாவில் பிரட்டி வைத்த மீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்தெடுக்க வேண்டும்.

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்க வேண்டும்.

    பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

    அதனுடன் தக்காளி மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

    பின் புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு, தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு 2 நிமிடம் வேக விட வேண்டும்.

    பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு கொதிக்க விட்டு, மீனை தனியாக எடுத்து வைக்கவும்.

    பின் அரிசியை களைந்து போட்டு, மூடி போட்டு 15 நிமிடம் சிம்மில் வேக வைத்ததும் நன்கு கிளறிவிட்டு, தனியாக எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு இறக்கினால் கமகமக்கும் மீன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்பினால் அரிசி மாவில் களி செய்து சாப்பிடலாம். இன்று இந்த களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    அரிசி மாவு - 1 கப்
    மோர் - ½ கப்
    மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - சிறிதளவு
    இந்துப்பு - சிறிதளவு

    தாளிக்க  :


    கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - சிறிதளவு

    அரிசி மாவு களி

    செய்முறை :

    அரிசி மாவை மோருடன் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.

    வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை இதில் போட்டு கிளறவும். மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். கட்டி சேராமல் பார்த்துக் கொள்ளவும். சரியானப் பதத்துக்கு வந்த பிறகு இறக்கி விடலாம்.

    சுவையான அரிசி மாவு களி ரெடி.

    இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். பெரியவர்களுக்காக செய்தால் மோர் மிளகாய் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×