என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தினை அரிசி வெஜிடபிள் உப்புமா
Byமாலை மலர்24 July 2019 4:18 AM GMT (Updated: 24 July 2019 4:18 AM GMT)
சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தினை அரிசி, காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தினை அரிசி - ஒரு கப்,
வெங்காயம், கேரட் - தலா ஒன்று,
பச்சைப் பட்டாணி - அரை கப்,
காய்ந்த மிளகாய் - 2,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
செய்முறை :
வெங்காயம், கேரட், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும். இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்ததும் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் வேக வைக்கவும்.
தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
தினை அரிசி - ஒரு கப்,
வெங்காயம், கேரட் - தலா ஒன்று,
பச்சைப் பட்டாணி - அரை கப்,
காய்ந்த மிளகாய் - 2,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், கேரட், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும். இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்ததும் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் வேக வைக்கவும்.
தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான தினை அரிசி வெஜிடபிள் உப்புமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X