என் மலர்tooltip icon

    சமையல்

    குழந்தைகளுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பரங்கிக்காய் வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பரங்கிக்காய் - கால் கிலோ
    சேமியா - 100 கிராம் (பொடிக்கவும்)
    சர்க்கரை - தேவைக்கு
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்
    தண்ணீர் - 4 கப்
    பால் - 1 லிட்டர் (காய்ச்சவும்)
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    முந்திரிபருப்பு - 10
    உலர் திராட்சை - 10

    பரங்கிக்காய் சேமியா பாயாசம்

    செய்முறை:

    பரங்கிக்காயின் தோலை சீவி விதையை நீக்கி துருவிக்கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சேமியாவை கொட்டி வறுக்கவும்.

    பின்னர் பரங்கிக்காயை கொட்டி சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

    நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.

    அது கரைந்ததும் பாலை சேர்க்கவும்.

    நெய்யில் முந்திரி பருப்பையும், உலர்திராட்சையையும் வதக்கி பாயசத்தில் சேர்க்கவும்.

    ஏலக்காய் தூளையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான பரங்கிக்காய் சேமியா பாயாசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சத்தான வெஜிடபிள் மோமோஸை ஸ்நாக்ஸ் அல்லது டிபன் போன்று சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்
    வெங்காயம் - 1
    கேரட் - 2
    முட்டைகோஸ் - அரை கப்  
    குடைமிளகாய் - 1
    சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
    சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    வெஜிடபிள் மோமோஸ்

    செய்முறை:

    வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, எண்ணெய், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

    இறுதியாக, சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி வைக்கவும்.

    பிசைந்து மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரி அளவிற்கு தேய்த்து கொள்ளவும்.

    இதன் நடுவில், வேகவைத்த காய்களை மசாலாவை வைத்து, அனைத்து பக்கமும் சேர்த்து மூடிவிடவும்.

    இதனை, இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான வெஜிடபிள் மோமோஸ் ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொட்டுக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்தசோகை வராமல் தடுக்கிறது. குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டது. இந்த பொட்டுக்கடலையை வைத்து சத்தான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பொட்டுக்கடலை - 200 கிராம்
    வெல்லம் - 100 கிராம்
    முந்திரிப் பருப்பு - 10
    நெய் - 3 மேஜைக்கரண்டி
    மிதமான வெந்நீர் - 50 அல்லது 75 ml

    பொட்டுக்கடலை லட்டு

    செய்முறை :

    பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

    வெல்லத்தை துருவி கொள்ளவும்.

    இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.

    பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

    எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.

    சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி.

    இது குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சத்தான லட்டு.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் நீர்சத்து குறைவாக காணப்படுபவர்கள் இந்த காய்கறிக்கஞ்சியை குடிக்கும் பொழுது உடலில் நீர்சத்து அதிகரிக்கும். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி - 1/2 கப்
    பச்சை பயிறு - 1/2 கப்
    கேரட் - 1
    வெள்ளரிக்காய் - சிறிதளவு
    பீன்ஸ் - 5
    தக்காளி - 1
    சாம்பார் வெங்காயம் - 1 கைப்பிடி
    பூண்டு - 4
    வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 5
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    பச்சை பயிறு காய்கறி கஞ்சி

    செய்முறை

    முதலில் அரிசி, பச்சை பயிறை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

    கேரட், வெள்ளரிக்காய், பீன்ஸ், தக்காளி, சாம்பார் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதித்தவுடன் ஊறவைத்த அரிசி, பருப்பை போட்டு வேக வைக்கவும்.

    அரிசி, பருப்பு பாதியளவு வெந்ததும் அதனுடன் உப்பு, காய்கறிகளை சேர்த்து வேக விடவும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, வெந்தயம், பூண்டு  போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    வதக்கிய வெங்காயம், தக்காளியை அரிசி கலவையுடன் சேர்த்து வேக விடவும்.

    30 நிமிடங்கள் கஞ்சியானது நன்றாக கொதித்து அரிசி மற்றும் காய்கறிகள் வெந்தவுடன் கீழ இறக்கி அனைவருக்கும் பரிமாறலாம்.

    சத்தான காய்கறி கஞ்சி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான ஹாஷ் பிரவுன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2 (பெரியது),
    மைதா - 3 டேபிள் ஸ்பூன்,
    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    வரமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    நெய் (அல்லது) எண்ணெய் - 2 டீஸ்பூன் (உருளைக்கிழங்கை வதக்க),
    எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு,
    வெங்காய பொடி - 1 டீஸ்பூன் (தேவையெனில்),
    செடார் சீஸ் (optional) - 2 டேபிள் ஸ்பூன்.

    ஹாஷ் பிரவுன்

    செய்முறை

    முதலில் உருளைக்கிழங்கை தோல் உரித்து துருவி அதை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து அதை வடிகட்டி வைக்கவும்.

    பின் அதை ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் (அல்லது) எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    இந்த கலவை ஆறிய பின் அதில் உப்பு, மைதா, மிளகுத்தூள், வரமிளகாய்த்தூள், செடார் சீஸ், வெங்காய பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கட்லெட் போல் தட்டி (முக்கோண வடிவம்) கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்தவற்றை போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து சூடாக சாஸுடன் பரிமாறவும்.

    இது காலை உணவுக்கு உகந்தது.

    சூப்பரான ஹாஷ் பிரவுன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொடி இட்லி இப்பொழுது அனைத்து உணவகங்களிலும் பிரபலமாக உணவாக உள்ளது. இட்லி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட பொடி இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள்.
    இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள்

    கறிவேப்பிலை - கால் கப்
    காய்ந்த மிளகாய்- அரை கப்
    உளுத்தம்பருப்பு -  கால் கப்
    கடலைப்பருப்பு - கால் கப்
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மிளகு - 4 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி

    பொடி இட்லி செய்ய தேவையான பொருட்கள்

    நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - கால் தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 10 இலைகள்
    கொத்தமல்லி - சிறிதளவு
    சின்ன இட்லி - 20
    இட்லி பொடி - 2 தேக்கரண்டி
    நெய் - 2 தேக்கரண்டி

    பொடி இட்லி

    செய்முறை

    கறிவேப்பிலை இலைகளை கழுவி காயவைத்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும் அல்லது கறிவேப்பிலை இலைகள் சுருண்டு வரும்வரை வறுக்கவும்.

    காய்ந்த மிளகாயை மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    அடுத்து அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுக்கவும்.

    பின்னர் கடலை பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் சில நிமிடங்களுக்கு வறுத்து எடுக்கவும்.

    வறுத்த பொருட்களை ஆற வைத்து ஆறியதும் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து ஒரு மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது இட்லி பொடி தயார்.

    (மேற்கண்டவற்றை வறுப்பதற்கு எண்ணெய் சேர்க்க தேவையில்லை வெறும் வாணலியில் வறுக்கவும்.)

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பொடி இட்லி செய்ய ஆறிய இட்லிகளை பயன்படுத்தவும் அல்லது சூடான இட்லியை ஆறவைத்து பயன்படுத்தவும்.

    ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இட்லிகளை சேர்த்து கலக்கவும்.

    அதனுடன் இரண்டு தேக்கரண்டி இட்லி பொடி சேர்க்கவும்.

    பின்னர் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.

    அதனை மிதமான சூட்டில் கிளறவும்.

    மென்மையாக கிளறி, நன்கு கலந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான பொடி இட்லி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் உள்ள சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகில் சத்தான சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - அரை கப்
    தூளாக்கிய வெல்லம் - அரை கப்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    முந்திரி பருப்பு - 5
    கருப்பு எள் - 1 டீஸ்பூன்
    உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    சுக்கு தூள் - அரை டீஸ்பூன்

    ராகி லட்டு

    செய்முறை:

    அகன்ற பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தூளாக்கிய வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் எள்ளை கொட்டி சிறு தீயில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.

    நெய்யில் முந்திரி பருப்பு, உலர் திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.

    கேழ்வரகு மாவையும் வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.

    வறுத்த மாவுடன் வெல்ல பாகு, உலர் திராட்சை, எள், முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை கொட்டி கிளறி இறக்கவும்.

    ஆறியதும் லட்டாக பிடித்து சுவைக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து செய்யும் இந்த நட்ஸ் லட்டு குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை - அரை கப்
    வறுத்த எள் - 1 டீஸ்பூன்
    பொட்டுக்கடலை - கால் கப்
    ரஸ்க் - 4
    பொடித்த வெல்லம் - 100 கிராம்
    பேரீச்சம் பழம் - 4 (நறுக்கவும்)
    முந்திரி பருப்பு - 4 (நறுக்கவும்)
    உலர்திராட்சை - 4
    டூட்டிபுரூட்டி - சிறிதளவு

    நட்ஸ் லட்டு

    செய்முறை:

    முந்திரி பருப்பு, பேரீச்சம் பழம் ஆகியவற்றை நெய்யில் வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

    வேர்க்கடலை, எள், ரஸ்க், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.

    அதனுடன் வெல்லத்தையும் கலந்து கொள்ளவும்.

    இந்த கலவையுடன் நெய்யில் வறுத்தெடுத்த பேரீச்சம் பழம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ரூட்டி புரூட்டி போன்றவற்றை ஒன்றாக சேர்த்து கிளறவும்.

    பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சுவைக்கலாம்.

    சத்தான நட்ஸ் லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    பூரி, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் குடைமிளகாய் உருளைக்கிழங்கு கிரேவி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - 3
    உருளைக்கிழங்கு - 2
    தக்காளி - 1
    பூண்டு - 5 பல்
    இஞ்சி - சிறிதளவு
    கருவா பட்டை - சிறிதளவு
    சீரகம் - அரை டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    குடைமிளகாய் உருளைக்கிழங்கு கிரேவி

    செய்முறை:

    குடைமிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி பூண்டு சீரகம் இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கருவா பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதை கொட்டி கிளறவும்.

    அடுத்து அதில் குடை மிளகாயை சேர்க்கவும்.

    அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

    கிரேவி பதத்துக்கு வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான குடைமிளகாய் உருளைக்கிழங்கு கிரேவி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகை போல் கேழ்வரகு அவலிலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகு அவல் உப்புமா ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    கேழ்வரகு அவல் - ஒரு கப்
    வெங்காயம் - ஒன்று
    கடுகு - அரை டீஸ்பூன்
    உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    கேழ்வரகு அவல் உப்புமா
     
    செய்முறை:
     
    கேழ்வரகு அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர்  வெங்காயம் சேர்த்து, வதங்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேழ்வரகு அவலை சேர்க்கவும்.
     
    இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும். அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான சத்தான கேழ்வரகு அவல் உப்புமா ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் வாழைப்பூ புளிக்குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பூ - ஒரு கப்,
    புளிக்கரைசல் - ஒரு கப்,
    சின்ன வெங்காயம் - 5,
    வெல்லம், கடுகு, சீரகம் - தலா அரை டீ ஸ்பூன்,
    வெந்தயம் - கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை  - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    மசாலா தயாரிக்க:

    தேங்காய்த் துருவல் - அரை கப்,
    தனியா - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4,
    சின்ன வெங்காயம் - 5,
    பூண்டு - 5 பல்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    தக்காளி - ஒன்று

    வாழைப்பூ புளிக்குழம்பு

    செய்முறை:

    சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெறும் வாணலியில் தனியா, தேங்காய் துருவலை தனித்தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.

    அதே வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியம் ஆறவைத்து அதனுடன் தனியா, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்த பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், வெல்லம், வாழைப்பூ சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.

    இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    சூடான சாதத்துடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வரகு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அரிசி மிகவும் உகந்தது. இந்த அரிசியுடன் காய்கறி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வரகரிசி - கால் கிலோ,
    இட்லி அரிசி - கால் கிலோ
    உளுந்து - 50 கிராம்
    வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    காய்கறி மசாலா செய்யத் தேவையானவை

    கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் - சிறிதளவு
    உருளைக் கிழங்கு - சிறியது 1
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
    குடைமிளகாய் - 1
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பூண்டு - 2 பல்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    வரகரிசி காய்கறி தோசை

    செய்முறை


    கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கை துருவிக்கொள்ளவும்.

    குடைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வரகரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்தை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறியதும் மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    போதுமான உப்பைச் சேர்த்து மாவை நன்கு கரைத்து புளிக்கவையுங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

    அதனுடன் துருவிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ்,தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

    காய்கறிகள் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், போதுமான உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

    வதக்கிய பொருட்களைப் புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுங்கள்.

    தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×