search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வரகரிசி காய்கறி தோசை
    X
    வரகரிசி காய்கறி தோசை

    சத்து நிறைந்த வரகரிசி காய்கறி தோசை

    வரகு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அரிசி மிகவும் உகந்தது. இந்த அரிசியுடன் காய்கறி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வரகரிசி - கால் கிலோ,
    இட்லி அரிசி - கால் கிலோ
    உளுந்து - 50 கிராம்
    வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    காய்கறி மசாலா செய்யத் தேவையானவை

    கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் - சிறிதளவு
    உருளைக் கிழங்கு - சிறியது 1
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
    குடைமிளகாய் - 1
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பூண்டு - 2 பல்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    வரகரிசி காய்கறி தோசை

    செய்முறை


    கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கை துருவிக்கொள்ளவும்.

    குடைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வரகரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்தை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறியதும் மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    போதுமான உப்பைச் சேர்த்து மாவை நன்கு கரைத்து புளிக்கவையுங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

    அதனுடன் துருவிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ்,தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

    காய்கறிகள் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், போதுமான உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

    வதக்கிய பொருட்களைப் புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுங்கள்.

    தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×