என் மலர்
சமையல்
இந்த ரசம் குமட்டல், வாந்தி, சோர்வு, மயக்கத்தைப் போக்கும். பசியைத் தூண்டும். உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
புளி, துவரம் பருப்பு - தலா 100 கிராம்,
கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
மஞ்சள்தூள் மற்றும் வேப்பம்பூவைச் சேர்த்து வறுக்கவும்.
இதில், கரைத்த புளியை ஊற்றி, கொதிக்கவிடவும்.
வேகவைத்த துவரம்பருப்பில், தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும்.
பொங்கி வரும்போது, பெருங்காயத்தூளைச் சேர்த்து இறக்கவும்.
கடைசியில், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவவும்.
சூப்பரான வேப்பம்பூ பருப்பு ரசம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் மோதகத்தைச் செய்வதற்கு பதினைந்து நிமிடங்களே போதுமானதாகும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
டார்க் சாக்லேட்- ¾ கப்,
ஃப்ரெஷ் க்ரீம் - ½ கப்,
கன்டென்ஸ்டு மில்க் - ½ கப்,
நறுக்கப்பட்ட பிஸ்கெட் துண்டுகள் - 2 கப்,
நறுக்கப்பட்ட பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் - ¼ கப்,

செய்முறை:
அகலமான நான் ஸ்டிக் வாணலியில் ஃப்ரெஷ் க்ரீம், கன்டென்ஸ்டு மில்க் மற்றும் டார்க் சாக்லேட்டை ஒன்றாகப் போட்டு கலக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் வைத்துள்ள இவற்றைக் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இரண்டு நிமிடங்களுக்குப்பிறகு ஒரு கெட்டியான பேஸ்ட் போன்ற பதத்திற்கு வந்தவுடன் நறுக்கப்பட்ட பிஸ்கட் மற்றும் முந்திரி, பாதாம் போன்றவற்றையும் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கிளற வேண்டும்.
இந்தக் கலவை மேலும் கெட்டியாகி மாவுப்பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு வேறொரு தட்டில் இந்தக் கலவையை மாற்றி முற்றிலுமாக ஆறவைக்க வேண்டும்.
ஆறிய பின் மோதக அச்சில் நெய் தடவி இந்த கலவையை கெட்டியாக அடைத்து பின்பு அதிகப்படியாக இருக்கும் மாவை எடுத்தோமானால் அழகான, சுவையான சாக்லேட் மோதகங்கள் தயார்.
இந்த மோதகத்தைச் செய்வதற்கு பதினைந்து நிமிடங்களே போதுமானதாகும்.
டார்க் சாக்லேட்- ¾ கப்,
ஃப்ரெஷ் க்ரீம் - ½ கப்,
கன்டென்ஸ்டு மில்க் - ½ கப்,
நறுக்கப்பட்ட பிஸ்கெட் துண்டுகள் - 2 கப்,
நறுக்கப்பட்ட பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் - ¼ கப்,
நெய் - சிறிதளவு.

செய்முறை:
அகலமான நான் ஸ்டிக் வாணலியில் ஃப்ரெஷ் க்ரீம், கன்டென்ஸ்டு மில்க் மற்றும் டார்க் சாக்லேட்டை ஒன்றாகப் போட்டு கலக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் வைத்துள்ள இவற்றைக் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இரண்டு நிமிடங்களுக்குப்பிறகு ஒரு கெட்டியான பேஸ்ட் போன்ற பதத்திற்கு வந்தவுடன் நறுக்கப்பட்ட பிஸ்கட் மற்றும் முந்திரி, பாதாம் போன்றவற்றையும் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கிளற வேண்டும்.
இந்தக் கலவை மேலும் கெட்டியாகி மாவுப்பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு வேறொரு தட்டில் இந்தக் கலவையை மாற்றி முற்றிலுமாக ஆறவைக்க வேண்டும்.
ஆறிய பின் மோதக அச்சில் நெய் தடவி இந்த கலவையை கெட்டியாக அடைத்து பின்பு அதிகப்படியாக இருக்கும் மாவை எடுத்தோமானால் அழகான, சுவையான சாக்லேட் மோதகங்கள் தயார்.
இந்த மோதகத்தைச் செய்வதற்கு பதினைந்து நிமிடங்களே போதுமானதாகும்.
குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் இந்த மோதகங்களை காற்றுப்புகாத டப்பாக்களில் வைத்து ஒருவாரம் வரையிலும் பயன்படுத்தலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த துவையல் தலைசுற்றல், வாந்தி, வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுண்டடைக்காய் வற்றல் - கால் கப்
பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல்- சிறிதளவு
மிளகு - கால் டீஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
மிக்சியில் சுண்டைக்காய் வற்றல், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, உப்பு, சிறிது தண்ணீல் சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து துவையலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சத்தான சுண்டைக்காய் வற்றல் துவையல் ரெடி.
சுண்டடைக்காய் வற்றல் - கால் கப்
பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல்- சிறிதளவு
மிளகு - கால் டீஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
மிக்சியில் சுண்டைக்காய் வற்றல், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, உப்பு, சிறிது தண்ணீல் சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து துவையலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சத்தான சுண்டைக்காய் வற்றல் துவையல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால் அவர்களின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த பாசுமதி அரிசி - 1 கப்
தக்காளி - 1
தக்காளி கெட்சப் - 2 ஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
முட்டை - 3
பூண்டு - 10 பல்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
வினிகர் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முட்டையை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தாள், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் வெங்காயத்தாள் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் வேக வைத்த சாதம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
அதில் தக்காளி கெட்சப், உப்பு, சோயா சோஸ், வினிகர் மற்றும் மிளகு தூள் போட்டு கிளறி விட வேண்டும். பின் முட்டைத் துண்டுகளை சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும்.
பின் அந்த சாதத்தை நன்றாக கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
உதிரியாக வடித்த பாசுமதி அரிசி - 1 கப்
தக்காளி - 1
தக்காளி கெட்சப் - 2 ஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
முட்டை - 3
பூண்டு - 10 பல்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
வினிகர் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முட்டையை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தாள், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் வெங்காயத்தாள் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் வேக வைத்த சாதம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
அதில் தக்காளி கெட்சப், உப்பு, சோயா சோஸ், வினிகர் மற்றும் மிளகு தூள் போட்டு கிளறி விட வேண்டும். பின் முட்டைத் துண்டுகளை சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும்.
பின் அந்த சாதத்தை நன்றாக கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தக்காளி முட்டை சாதம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது.
தேவையானப் பொருட்கள் :
கொய்யாப்பழம் நறுக்கியது - 1 கப்
நாட்டு சர்க்கரை - சுவைக்கேற்ப
பால் - 2கப்
தண்ணீர் - 1கப்
வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
ஜஸ் கட்டி - தேவையான அளவு
செய்முறை:
கொய்யாப்பழம், நாட்டு சர்க்கரை இரண்டையும் மிக்சியில்போட்டு அரைக்கவும்.
அதனுடன் பால் , தண்ணீர் வெண்ணிலா எசன்ஸ் இவை அனைத்தையும் மிக்ஸியில்போட்டு நன்றாக அடிக்கவும்.
கொய்யாப்பழ ஜூஸ் ரெடி.
கொய்யாப்பழம் நறுக்கியது - 1 கப்
நாட்டு சர்க்கரை - சுவைக்கேற்ப
பால் - 2கப்
தண்ணீர் - 1கப்
வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
ஜஸ் கட்டி - தேவையான அளவு
செய்முறை:
கொய்யாப்பழம், நாட்டு சர்க்கரை இரண்டையும் மிக்சியில்போட்டு அரைக்கவும்.
அதனுடன் பால் , தண்ணீர் வெண்ணிலா எசன்ஸ் இவை அனைத்தையும் மிக்ஸியில்போட்டு நன்றாக அடிக்கவும்.
கொய்யாப்பழ ஜூஸ் ரெடி.
இது குழங்தைகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை தூண்டும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரளாவில் உன்னக்காய் ரெசிபி மிகவும் பிரபலம். இந்த ஸ்நாக்ஸை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - ஒன்று
சர்க்கரை - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
உடைத்த முந்திரி பருப்பு - 6
திராட்சை - 5

செய்முறை :
நேந்திரம் பழத்தை தோலோடு குக்கரில் போட்டு 2 கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசிலுக்கு வேக விடுங்கள். பின் ஆவி அடங்கியதும் எடுத்து நன்கு மசித்துக் கொள்ளுங்கள். கட்டியில்லாது மசித்தால் சப்பாத்தி மாவு போல் வரும். பழம் நன்கு பழுத்தால் சரியாக வராது. மசித்த பழத்தை தனியே வையுங்கள்.
நெய்யை சூடாக்கி திராட்சை, முந்திரி போட்டு சிவந்ததும் முட்டை உடைத்து ஊற்றி சற்று கிளறியவுடன் தீயை அணைத்து விட்டு தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து கலக்கி வையுங்கள்.
பிறகு கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மசித்த பழத்தில் பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து கையில் வைத்து தட்டையாக தட்டவும்.
அதன் நடுவில் 1/2 தேக்கரண்டி பூரணத்தை வைத்து ஓரத்தை உள்ளிழுத்து மூடி கொழுக்கட்டை போல் மென்மையாக கையால் அழுத்தி ரக்பி பந்து (egg shape)ஷேப்புக்கு கொண்டு வரவும்
அதேபோல் மாவு அனைத்திலும் செய்யவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த வற்றை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
முட்டை - ஒன்று
சர்க்கரை - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
உடைத்த முந்திரி பருப்பு - 6
திராட்சை - 5
நேந்திரம் பழம் - 3

செய்முறை :
நேந்திரம் பழத்தை தோலோடு குக்கரில் போட்டு 2 கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசிலுக்கு வேக விடுங்கள். பின் ஆவி அடங்கியதும் எடுத்து நன்கு மசித்துக் கொள்ளுங்கள். கட்டியில்லாது மசித்தால் சப்பாத்தி மாவு போல் வரும். பழம் நன்கு பழுத்தால் சரியாக வராது. மசித்த பழத்தை தனியே வையுங்கள்.
நெய்யை சூடாக்கி திராட்சை, முந்திரி போட்டு சிவந்ததும் முட்டை உடைத்து ஊற்றி சற்று கிளறியவுடன் தீயை அணைத்து விட்டு தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து கலக்கி வையுங்கள்.
பிறகு கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மசித்த பழத்தில் பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து கையில் வைத்து தட்டையாக தட்டவும்.
அதன் நடுவில் 1/2 தேக்கரண்டி பூரணத்தை வைத்து ஓரத்தை உள்ளிழுத்து மூடி கொழுக்கட்டை போல் மென்மையாக கையால் அழுத்தி ரக்பி பந்து (egg shape)ஷேப்புக்கு கொண்டு வரவும்
அதேபோல் மாவு அனைத்திலும் செய்யவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த வற்றை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான கேரளா உன்னக்காய் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த சூப் குடித்தால் குடல் புழுக்கள் நீங்கும். வயிற்றில் புண், கிருமித் தொற்று இருந்தால் சரியாகும். பசியைத் தூண்டி, செரிமான ஆற்றலைக் கொடுக்கும். உடலுக்கு புத்துணர்வைத் தரும்.
தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ - 4 டீஸ்பூன்,
கொள்ளு - 50 கிராம்,
மிளகு - 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 2,
அன்னாசிப் பூ - 5 கிராம்,
நல்லெண்ணெய் - 25 மி.லி,
கடுகு, மஞ்சள் தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,

செய்முறை:
கொள்ளுவை நன்றாக வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
நல்லெண்ணெயில் வேப்பம்பூவை வறுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரை, நன்றாகக் கொதிக்கவிடவும்.
இதில் மஞ்சள் தூள் சேர்த்து, கொள்ளுப் பொடியைக் கட்டி இல்லாமல் கரைத்துச் சேர்க்கவும்.
இதில், வறுத்த வேப்பம்பூ, உப்பு சேர்க்க வேண்டும்.
மிளகு, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ இவற்றை நன்றாக அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பூண்டு, அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்துக் கலக்கவும்.
இந்தக் கலவையைக் கொதிக்கும் சூப்பில் கொட்டி, கலக்கி இறக்கவும்.
வேப்பம்பூ - 4 டீஸ்பூன்,
கொள்ளு - 50 கிராம்,
மிளகு - 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 2,
அன்னாசிப் பூ - 5 கிராம்,
நல்லெண்ணெய் - 25 மி.லி,
கடுகு, மஞ்சள் தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
பூண்டு - 50 கிராம்.

செய்முறை:
கொள்ளுவை நன்றாக வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
நல்லெண்ணெயில் வேப்பம்பூவை வறுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரை, நன்றாகக் கொதிக்கவிடவும்.
இதில் மஞ்சள் தூள் சேர்த்து, கொள்ளுப் பொடியைக் கட்டி இல்லாமல் கரைத்துச் சேர்க்கவும்.
இதில், வறுத்த வேப்பம்பூ, உப்பு சேர்க்க வேண்டும்.
மிளகு, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ இவற்றை நன்றாக அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பூண்டு, அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்துக் கலக்கவும்.
இந்தக் கலவையைக் கொதிக்கும் சூப்பில் கொட்டி, கலக்கி இறக்கவும்.
சத்தான வேப்பம்பூ கொள்ளு சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் பீட்ரூட் கோலா உருண்டை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1
தேங்காய் - 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பொரிக்கடலை - 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 5 பர்
இஞ்சி - சிறுதுண்டு
பட்டை - 1
ஏலக்காய் - 1
சீரகம் - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
உப்பு - தேவையான அளவு

செய்முறை
ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாகநறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
மிக்சியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அதனுடன் துருவிய துருவிய பீட்ரூட், சின்ன வெங்காயம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பீட்ரூட் கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு அடுப்பை மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்
பீட்ரூட் - 1
தேங்காய் - 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பொரிக்கடலை - 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 5 பர்
இஞ்சி - சிறுதுண்டு
பட்டை - 1
ஏலக்காய் - 1
சீரகம் - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
பொரிக்க தேவையான எண்ணெய்

செய்முறை
ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாகநறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
மிக்சியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அதனுடன் துருவிய துருவிய பீட்ரூட், சின்ன வெங்காயம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பீட்ரூட் கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு அடுப்பை மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்
சுவையான மற்றும் சத்தான பீட்ரூட் கோலா உருண்டை ரெடி
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான சத்தான உணவு பாசிப்பயறு கஞ்சி. இந்த கஞ்சி சத்தானதும் கூட. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலப...மேலும்
தேவையான பொருட்கள்
மட்டை அரிசி அல்லது பச்சரிசி அல்லது சிகப்பு அரிசி - ஒரு டம்ளர்
பாசிப்பயறு - அரை டம்ளர்
சின்ன வெங்காயம் - 4
ப. மிளகாய் - மூன்று
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவியது - தேவைக்கு
செய்முறை
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் முதலில் அரிசி, பச்சை பயறை சேர்த்து நன்றாகக் கழுவி விட்டு பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், வெந்தயம், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வைக்கவும்.
விசில் அடங்கியவுடன் கரண்டியின் பின் பகுதியை வைத்து நன்றாக மசித்து விடவும். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி விடவும்.
தண்ணியாக பிடிக்கும் என்றால் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவைக்கு ஏற்றவாறு துருவிய தேங்காயை அதனுடன் கலந்து பரிமாறலாம்.
கேரளாவில் இதனுடன் சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிடுவார்கள்.
மட்டை அரிசி அல்லது பச்சரிசி அல்லது சிகப்பு அரிசி - ஒரு டம்ளர்
பாசிப்பயறு - அரை டம்ளர்
சின்ன வெங்காயம் - 4
ப. மிளகாய் - மூன்று
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவியது - தேவைக்கு
செய்முறை
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் முதலில் அரிசி, பச்சை பயறை சேர்த்து நன்றாகக் கழுவி விட்டு பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், வெந்தயம், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வைக்கவும்.
விசில் அடங்கியவுடன் கரண்டியின் பின் பகுதியை வைத்து நன்றாக மசித்து விடவும். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி விடவும்.
தண்ணியாக பிடிக்கும் என்றால் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவைக்கு ஏற்றவாறு துருவிய தேங்காயை அதனுடன் கலந்து பரிமாறலாம்.
கேரளாவில் இதனுடன் சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிடுவார்கள்.
சுவையான மற்றும் சத்தான கஞ்சி தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அனைவருக்கும் மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாம்பழத்தை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் மோதகம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோவா - 1 கப்,
சர்க்கரை - ¼ கப்,
மாம்பழ விழுது - ½ கப்,
ஏலக்காய் பொடி - சிறிதளவு,
சிறிதளவு நெய்,

செய்முறை:
அடிகனமான வாணலியை அடுப்பில் சிறு தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு கப் கோவாவைப் போட்டு அது இளகும் வரை ஒன்று இரண்டு நிமிடங்கள் கிளற வேண்டும். கோவா இளகியதும் கால்கப் சர்க்கரையோ அல்லது இனிப்புச்சுவை அதிகம் தேவைப்பட்டால் அரைகப் சர்க்கரையோ சேர்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரை கரைந்து கோவாவுடன் நன்கு கலந்து வரும்பொழுது மாம்பழ விழுதை அத்துடன் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிலிருந்து எட்டு நிமிடங்கள் வரை கிளறும் பொழுது இந்தக் கலவையானது கெட்டியாக திரண்டு வரும்.
அப்போது ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூவைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் சிறுதீயில் கிளற வேண்டும்.
சிறிது நேரத்திலேயே மாவின் நிறமும், பதமும் மாறும். இப்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு இந்தக் கலவையை மாற்றி வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
நெய் தடவிய மோதக அச்சில் இந்தச் சிறுஉருண்டைகளை அழுத்தி எடுத்தால் அருமையான மாம்பழ மோதகங்கள் தயார்.
கோவா - 1 கப்,
சர்க்கரை - ¼ கப்,
மாம்பழ விழுது - ½ கப்,
ஏலக்காய் பொடி - சிறிதளவு,
சிறிதளவு நெய்,
குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை:
அடிகனமான வாணலியை அடுப்பில் சிறு தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு கப் கோவாவைப் போட்டு அது இளகும் வரை ஒன்று இரண்டு நிமிடங்கள் கிளற வேண்டும். கோவா இளகியதும் கால்கப் சர்க்கரையோ அல்லது இனிப்புச்சுவை அதிகம் தேவைப்பட்டால் அரைகப் சர்க்கரையோ சேர்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரை கரைந்து கோவாவுடன் நன்கு கலந்து வரும்பொழுது மாம்பழ விழுதை அத்துடன் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிலிருந்து எட்டு நிமிடங்கள் வரை கிளறும் பொழுது இந்தக் கலவையானது கெட்டியாக திரண்டு வரும்.
அப்போது ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூவைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் சிறுதீயில் கிளற வேண்டும்.
சிறிது நேரத்திலேயே மாவின் நிறமும், பதமும் மாறும். இப்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு இந்தக் கலவையை மாற்றி வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
நெய் தடவிய மோதக அச்சில் இந்தச் சிறுஉருண்டைகளை அழுத்தி எடுத்தால் அருமையான மாம்பழ மோதகங்கள் தயார்.
மாம்பழ சீசன் இல்லாத சமயங்களில் மாம்பழ விழுதுகள் கடைகளில் ரெடிமேடாக டப்பாக்களில் விற்பனை செய்வதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை பட்டாணி சேர்த்துசெய்யும் இந்த மோதகம் மிகவும் சத்தானது. இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு-1கப்,
தண்ணீர்-தேவையான அளவு,
ஏலக்காய்-சிறிதளவு,
நெய், உப்பு- சிறிதளவு,
மசித்த பச்சைப்பட்டாணி-1½ கப்,
துருவிய வெல்லம்-½ கப்,
கசகசா, முந்திரி, ஜாதிக்காய், சிறிதளவு.
செய்முறை:
தண்ணீரைக் கொதிக்க வைத்து உப்பை போட்டு அதில் அரிசி மாவைப் போட்டு கிளறி மிருதுவான பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது ஆறியதும் நெய் சேர்த்துப் பிசைந்து தனியாக மூடி வைக்கவும்.
அதே போல் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் மசித்த பட்டாணி, வெல்லம் மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய் தூள், கசகசா, முந்திரி இவற்றைப் போட்டுக் கிளறி ஓரளவு கெட்டிப் பதத்தில் இறக்கி வைக்கவும்.
பின்பு மோதக அச்சில் நெய் தடவி அதில் கொழுக்கட்டை மாவைத் தடவி அதனுள்ளே பூரணத்தை நிரப்பி அழுத்தி எடுத்தால் அருமையான மோதகங்கள் தயார்.
இவற்றை இட்லிப் பாத்திரத்திலோ அல்லது ஸ்டீமரிலோ வைத்துப் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
அரிசி மாவு-1கப்,
தண்ணீர்-தேவையான அளவு,
ஏலக்காய்-சிறிதளவு,
நெய், உப்பு- சிறிதளவு,
மசித்த பச்சைப்பட்டாணி-1½ கப்,
துருவிய வெல்லம்-½ கப்,
கசகசா, முந்திரி, ஜாதிக்காய், சிறிதளவு.
செய்முறை:
தண்ணீரைக் கொதிக்க வைத்து உப்பை போட்டு அதில் அரிசி மாவைப் போட்டு கிளறி மிருதுவான பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது ஆறியதும் நெய் சேர்த்துப் பிசைந்து தனியாக மூடி வைக்கவும்.
அதே போல் அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் மசித்த பட்டாணி, வெல்லம் மற்றும் ஏலக்காய், ஜாதிக்காய் தூள், கசகசா, முந்திரி இவற்றைப் போட்டுக் கிளறி ஓரளவு கெட்டிப் பதத்தில் இறக்கி வைக்கவும்.
பின்பு மோதக அச்சில் நெய் தடவி அதில் கொழுக்கட்டை மாவைத் தடவி அதனுள்ளே பூரணத்தை நிரப்பி அழுத்தி எடுத்தால் அருமையான மோதகங்கள் தயார்.
இவற்றை இட்லிப் பாத்திரத்திலோ அல்லது ஸ்டீமரிலோ வைத்துப் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
வெந்த பிறகு மோதகங்களை ஒவ்வொன்றாக எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓணம் சத்யாவில் இடம்பெறும் உணவுப் பட்டியல் நீளமானது. அதில் முக்கியமான உணவுகளை நீங்களும் உங்கள் வீடுகளிலே தயார் செய்து உண்ணலாம்.
தேவையான பொருட்கள் :
சேனைக்கிழங்கு (இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கியது) - ஒரு கப்
வெள்ளரிக்காய் (இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கியது)- இரண்டு கப்
முருங்கைக் காய்- 50 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
கேரட் - 20 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
பூசணிக்காய்- 20 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
புடலங்காய்- 10 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு
புளிப்பு மாங்காய் (அதே அளவில் நறுக்கியது)- 20 கிராம்
தேங்காய் துருவல்- ஒன்றரை கப்
பச்சை மிளகாய்- நான்கு
கறிவேப்பிலை- தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- ஒரு மேஜைகரண்டி
செய்முறை:
சேனைக்கிழங்கு, வெள்ளரிக்காய், முருங்கைக்காள், கேரட், பூசணிக்காய், புடலங்காயை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு முக்கால் பாகத்திற்கு வேகவையுங்கள்.
அதில் உள்ள நீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு, காய்கறிகளில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, புளிப்பு மாங்காய் சேர்த்து வேகவிடுங்கள்.
வெந்ததும், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை அதில் இடித்து சேர்த்து சூடாக்கி, மேலே தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் சூடாக்குங்கள்.
தீயை அணைத்த பின்பு அதே பாத்திரத்தில் பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து பரிமாறுங்கள்.
சூப்பரான அவியல் ரெடி.
சேனைக்கிழங்கு (இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கியது) - ஒரு கப்
வெள்ளரிக்காய் (இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கியது)- இரண்டு கப்
முருங்கைக் காய்- 50 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
கேரட் - 20 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
பூசணிக்காய்- 20 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
புடலங்காய்- 10 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு
புளிப்பு மாங்காய் (அதே அளவில் நறுக்கியது)- 20 கிராம்
தேங்காய் துருவல்- ஒன்றரை கப்
பச்சை மிளகாய்- நான்கு
கறிவேப்பிலை- தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- ஒரு மேஜைகரண்டி
செய்முறை:
சேனைக்கிழங்கு, வெள்ளரிக்காய், முருங்கைக்காள், கேரட், பூசணிக்காய், புடலங்காயை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு முக்கால் பாகத்திற்கு வேகவையுங்கள்.
அதில் உள்ள நீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு, காய்கறிகளில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, புளிப்பு மாங்காய் சேர்த்து வேகவிடுங்கள்.
வெந்ததும், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை அதில் இடித்து சேர்த்து சூடாக்கி, மேலே தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் சூடாக்குங்கள்.
தீயை அணைத்த பின்பு அதே பாத்திரத்தில் பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து பரிமாறுங்கள்.
சூப்பரான அவியல் ரெடி.
புளிப்பு மாங்காய்க்கு பதில் புளித்த தயிர் பயன்படுத்தலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






