என் மலர்
சமையல்
ஓணம் சத்யாவில் இடம்பெறும் உணவுப் பட்டியல் நீளமானது. அதில் முக்கியமான உணவுகளை நீங்களும் உங்கள் வீடுகளிலே தயார் செய்து உண்ணலாம்.
தேவையான பொருட்கள் :
சேனைக்கிழங்கு (இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கியது) - ஒரு கப்
வெள்ளரிக்காய் (இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கியது)- இரண்டு கப்
முருங்கைக் காய்- 50 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
கேரட் - 20 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
பூசணிக்காய்- 20 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
புடலங்காய்- 10 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு
புளிப்பு மாங்காய் (அதே அளவில் நறுக்கியது)- 20 கிராம்
தேங்காய் துருவல்- ஒன்றரை கப்
பச்சை மிளகாய்- நான்கு
கறிவேப்பிலை- தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- ஒரு மேஜைகரண்டி
செய்முறை:
சேனைக்கிழங்கு, வெள்ளரிக்காய், முருங்கைக்காள், கேரட், பூசணிக்காய், புடலங்காயை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு முக்கால் பாகத்திற்கு வேகவையுங்கள்.
அதில் உள்ள நீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு, காய்கறிகளில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, புளிப்பு மாங்காய் சேர்த்து வேகவிடுங்கள்.
வெந்ததும், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை அதில் இடித்து சேர்த்து சூடாக்கி, மேலே தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் சூடாக்குங்கள்.
தீயை அணைத்த பின்பு அதே பாத்திரத்தில் பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து பரிமாறுங்கள்.
சூப்பரான அவியல் ரெடி.
சேனைக்கிழங்கு (இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கியது) - ஒரு கப்
வெள்ளரிக்காய் (இரண்டு அங்குல நீளத்தில் நறுக்கியது)- இரண்டு கப்
முருங்கைக் காய்- 50 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
கேரட் - 20 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
பூசணிக்காய்- 20 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
புடலங்காய்- 10 கிராம் (அதுபோல் நறுக்கவும்)
மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு
புளிப்பு மாங்காய் (அதே அளவில் நறுக்கியது)- 20 கிராம்
தேங்காய் துருவல்- ஒன்றரை கப்
பச்சை மிளகாய்- நான்கு
கறிவேப்பிலை- தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- ஒரு மேஜைகரண்டி
செய்முறை:
சேனைக்கிழங்கு, வெள்ளரிக்காய், முருங்கைக்காள், கேரட், பூசணிக்காய், புடலங்காயை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு முக்கால் பாகத்திற்கு வேகவையுங்கள்.
அதில் உள்ள நீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு, காய்கறிகளில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, புளிப்பு மாங்காய் சேர்த்து வேகவிடுங்கள்.
வெந்ததும், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை அதில் இடித்து சேர்த்து சூடாக்கி, மேலே தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மீண்டும் சூடாக்குங்கள்.
தீயை அணைத்த பின்பு அதே பாத்திரத்தில் பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து பரிமாறுங்கள்.
சூப்பரான அவியல் ரெடி.
புளிப்பு மாங்காய்க்கு பதில் புளித்த தயிர் பயன்படுத்தலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் ருசியான உணவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இன்று எரிசேரி ரெசிபிவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சேனை - 100 கிராம்
நேந்திரங்காய்- ஒன்று
கறிவேப்பிலை- தேவைக்கு
மிளகு தூள்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- 100 கிராம்
தேங்காய் துருவல்- ஒரு கப்
சீரகம்- ஒரு தேக்கரண்டி
நெய்- 25 கிராம்
கடுகு- ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை- தேவைக்கு
செய்முறை:
சேனையையும், நேந்திரங்காயையும் துண்டுகளாக்கி இரண்டாவது எண்ணில் உள்ள பொருட்களில் சேர்த்து நன்றாக வேகவையுங்கள்.
கால் கப் தேங்காய் துருவலில் சீரகம் சேர்த்து அரைத்து அதை வேகவைத்த காய்கறியில் சேருங்கள்.
மீதமுள்ள தேங்காய் துருவலை நன்றாக அரைத்து, எண்ணெயை சூடாக்கி அதில் கொட்டி வறுத்து பிரவுன் நிறமாகும்போது எடுத்து குழம்பில் சேருங்கள்.
சேனை - 100 கிராம்
நேந்திரங்காய்- ஒன்று
கறிவேப்பிலை- தேவைக்கு
மிளகு தூள்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- 100 கிராம்
தேங்காய் துருவல்- ஒரு கப்
சீரகம்- ஒரு தேக்கரண்டி
நெய்- 25 கிராம்
கடுகு- ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை- தேவைக்கு
செய்முறை:
சேனையையும், நேந்திரங்காயையும் துண்டுகளாக்கி இரண்டாவது எண்ணில் உள்ள பொருட்களில் சேர்த்து நன்றாக வேகவையுங்கள்.
கால் கப் தேங்காய் துருவலில் சீரகம் சேர்த்து அரைத்து அதை வேகவைத்த காய்கறியில் சேருங்கள்.
மீதமுள்ள தேங்காய் துருவலை நன்றாக அரைத்து, எண்ணெயை சூடாக்கி அதில் கொட்டி வறுத்து பிரவுன் நிறமாகும்போது எடுத்து குழம்பில் சேருங்கள்.
நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கலந்து பரிமாறலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். ஓணம் அன்று செய்யும் ஸ்பெஷல் ரெசிபியான அடை பிரதமன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் - 4 டம்ளர்
வெல்லம் - 2 டம்ளர்
ஏலக்காய் தூள் - சுவைக்கு
பால் - 1 டம்ளர்
நெய் - தேவைக்கு
தேங்காய் துண்டுகள் - கைப்பிடியளவு
முந்திரி - தேவையான அளவு
உலர்திராட்சை - 2 ஸ்பூன்
செய்முறை:
வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஒர் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.
அடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும்.
அனைத்தும் நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.
அரிசி - 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் - 4 டம்ளர்
வெல்லம் - 2 டம்ளர்
ஏலக்காய் தூள் - சுவைக்கு
பால் - 1 டம்ளர்
நெய் - தேவைக்கு
தேங்காய் துண்டுகள் - கைப்பிடியளவு
முந்திரி - தேவையான அளவு
உலர்திராட்சை - 2 ஸ்பூன்
செய்முறை:
வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஒர் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.
அடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும்.
அனைத்தும் நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.
தித்திப்பான அடை பிரதமன் தயார்
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேரளாவில் ஓணம் பண்டிகை அன்று பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள். அதில் ஒலன் என்ற ரெசிபியும் ஒன்று. இன்று இந்த உணவு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணி - 200 கிராம்
சிவப்பு பயிறு (சிவப்பு காராமணி அல்லது பெரும்பயிறு) - அரை கப்
பச்சை மிளகாய் - 5
தேங்காய் - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை :
முதலில் வெள்ளை பூசணியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சிவப்பு பயிறை குக்கரில் வேக வைத்து எடுத்து வைக்கவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து பிழிந்து முதல் மற்றும் இரண்டாம் பால் எடுக்கவும்.
வாணலியில் பூசணித் துண்டுகள், பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, இரண்டாம் தேங்காய் பால் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும்.
காய் வெந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பயிறை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கரண்டியால் காய் மற்றும் பயிறை லேசாக மசித்து விடவும்.
பிறகு முதல் தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டில் சேர்க்கவும்.
சுவையான ஓலன் தயார்
வெள்ளை பூசணி - 200 கிராம்
சிவப்பு பயிறு (சிவப்பு காராமணி அல்லது பெரும்பயிறு) - அரை கப்
பச்சை மிளகாய் - 5
தேங்காய் - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை :
முதலில் வெள்ளை பூசணியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சிவப்பு பயிறை குக்கரில் வேக வைத்து எடுத்து வைக்கவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து பிழிந்து முதல் மற்றும் இரண்டாம் பால் எடுக்கவும்.
வாணலியில் பூசணித் துண்டுகள், பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, இரண்டாம் தேங்காய் பால் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும்.
காய் வெந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பயிறை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கரண்டியால் காய் மற்றும் பயிறை லேசாக மசித்து விடவும்.
பிறகு முதல் தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டில் சேர்க்கவும்.
சுவையான ஓலன் தயார்
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் எடையை குறைக்க சப்பாத்தி சாப்பிடுபவர்கள் வெள்ளிரிக்காய் சேர்த்து செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். இன்று இந்த சப்பாத்தி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் - 1
கோதுமை மாவு - 1 கப்
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 3

செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, துருவிய வெள்ளரிக்காய், கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
வெள்ளரிக்காய் - 1
கோதுமை மாவு - 1 கப்
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 3
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, துருவிய வெள்ளரிக்காய், கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போ சூடான ரொட்டியுடன் உங்க விருப்பத்துக்கேத்தபடி சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிடுங்க.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அவல் வைத்து 10 நிமிடத்தில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் - 1 கப்
ஏலக்காய் பொடி - சிட்டிகை அளவு
முந்திரி - 10
பால் - 3 கப்
சர்க்கரை - 1/2 கப்
பாதாம் - 5

செய்முறை :
பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துகொள்ளவும்.
சிவப்பு அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி விட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.
பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அவல் சேர்க்கவேண்டும்.
பின்னர் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
அவல் வெந்தவுடன் இறக்கி பரிமாறும் போது முந்திரி, பாதாம் சேர்த்து பரிமாறவும்.
சிவப்பு அவல் - 1 கப்
ஏலக்காய் பொடி - சிட்டிகை அளவு
முந்திரி - 10
பால் - 3 கப்
சர்க்கரை - 1/2 கப்
பாதாம் - 5

செய்முறை :
பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துகொள்ளவும்.
சிவப்பு அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி விட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.
பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அவல் சேர்க்கவேண்டும்.
பின்னர் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
அவல் வெந்தவுடன் இறக்கி பரிமாறும் போது முந்திரி, பாதாம் சேர்த்து பரிமாறவும்.
சூப்பரான பாயாசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அல்சர், வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்கள் இந்த சூப் செய்து பருகலாம். விரைவில் நல்ல பலனைத்தரும். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் பால் - 1 கப்
பெரிய வெங்காயம் - 3
இஞ்சி - சிறிய நெல்லிக்காய் அளவு
எலுமிச்சை பழம் - பாதி பழம்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 6
நல்லெண்ணெய் - தேவையான அளவு
பசும்பால் - 1 கப்

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யை விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொதிக்கும் கலவையுடன் ஊற்றவும்..
நன்கு கொதி வந்த பின்பு தேங்காய் பால் சூப்புக்கு தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கி பரிமாறவும்.
தேங்காய் பால் - 1 கப்
பெரிய வெங்காயம் - 3
இஞ்சி - சிறிய நெல்லிக்காய் அளவு
எலுமிச்சை பழம் - பாதி பழம்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 6
நல்லெண்ணெய் - தேவையான அளவு
பசும்பால் - 1 கப்
சோள மாவு - 2 ஸ்பூன்

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யை விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொதிக்கும் கலவையுடன் ஊற்றவும்..
நன்கு கொதி வந்த பின்பு தேங்காய் பால் சூப்புக்கு தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான தேங்காய் பால் சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
முட்டை - 1
வேகவைத்த முட்டை - 4
உருளைக்கிழங்கு - அரை கிலோ
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய் பால் - அரை கப்
மைதா மாவு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
ரொட்டித்தூள் - தேவையான அளவு

செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேக வைத்து முட்டைகளை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு அடித்து வைக்கவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும்.
இதனை முட்டை கலவையில் முக்கி, ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
முட்டை - 1
வேகவைத்த முட்டை - 4
உருளைக்கிழங்கு - அரை கிலோ
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய் பால் - அரை கப்
மைதா மாவு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
ரொட்டித்தூள் - தேவையான அளவு
பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேக வைத்து முட்டைகளை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு அடித்து வைக்கவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும்.
இதனை முட்டை கலவையில் முக்கி, ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
சுவைாயன முட்டை உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பத்தே நிமிடத்தில் இந்த சட்னியை செய்யலாம். இந்த சட்னி ஆரோக்கியமானதும் கூட. இட்லி, தோசைக்கு, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பற்கள்
கடலை மாவு - 1 டீஸ்பூன
வெல்லம் - 3/4 டீஸ்பூன
தண்ணீர் - 1 1/2 கப்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன
தாளிக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன
கடுகு - 1 டீஸ்பூன
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன
வெந்தையம் - 1/4 டீஸ்பூன
சீரகம் - 1 டீஸ்பூன
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடலை மாவை 1 -1/2 கப் தண்ணீரில் கட்டியாகாமல் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தையம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி , பூண்டு, வெங்காயம் சேர்த்து வதங்கியதும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வதங்கியதும் கரைத்த கடலை மாவை ஊற்றி கலக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் நன்குக் கலக்கிவிட்டு சிறு தீயில் 4- 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பற்கள்
கடலை மாவு - 1 டீஸ்பூன
வெல்லம் - 3/4 டீஸ்பூன
தண்ணீர் - 1 1/2 கப்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன
தாளிக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன
கடுகு - 1 டீஸ்பூன
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன
வெந்தையம் - 1/4 டீஸ்பூன
சீரகம் - 1 டீஸ்பூன
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடலை மாவை 1 -1/2 கப் தண்ணீரில் கட்டியாகாமல் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தையம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி , பூண்டு, வெங்காயம் சேர்த்து வதங்கியதும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வதங்கியதும் கரைத்த கடலை மாவை ஊற்றி கலக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் நன்குக் கலக்கிவிட்டு சிறு தீயில் 4- 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் கடலை மாவு சட்னி தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெத்திலி மீன் - கால் கிலோ
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 4
மிளகாய் - 4
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம், வெந்தயம் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் பால் - கால் கப்

செய்முறை:
நெத்திலி மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
புளியை நீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்.
கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
பிறகு வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் உப்பு தூவி கிளறவும்.
பின்னர் கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
கொதிக்க தொடங்கியதும் நெத்திலி மீன், தேங்காய் பால் சேர்க்கவும்.
நெத்திலி மீன் - கால் கிலோ
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 4
மிளகாய் - 4
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம், வெந்தயம் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் பால் - கால் கப்
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:
நெத்திலி மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
புளியை நீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்.
கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
பிறகு வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் உப்பு தூவி கிளறவும்.
பின்னர் கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
கொதிக்க தொடங்கியதும் நெத்திலி மீன், தேங்காய் பால் சேர்க்கவும்.
கெட்டியாகி தொக்கு பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகள் பருகலாம். இன்று காளான் கிரீம் சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காளான் - 200 கிராம்
பெ.வெங்காயம் - 1
பூண்டு - 10 பல்
பிரிஞ்சி இலை - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, வெண்ணெய் - தேவைக்கு
மைதா - 4 டீஸ்பூன்
பால் - கால் லிட்டர்
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
காளான், பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு வெண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் மைதா மாவை கொட்டி வறுக்கவும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறிவிட்டு கொதிக்க விடவும்.
அது கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து கிரீம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.
அது வதங்கியதும் பிரிஞ்சி இலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு காளானை சேர்த்து கிளறவும்.
அது வெந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் கிரீம், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.
காளான் - 200 கிராம்
பெ.வெங்காயம் - 1
பூண்டு - 10 பல்
பிரிஞ்சி இலை - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, வெண்ணெய் - தேவைக்கு
மைதா - 4 டீஸ்பூன்
பால் - கால் லிட்டர்
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
காளான், பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு வெண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் மைதா மாவை கொட்டி வறுக்கவும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறிவிட்டு கொதிக்க விடவும்.
அது கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து கிரீம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.
அது வதங்கியதும் பிரிஞ்சி இலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு காளானை சேர்த்து கிளறவும்.
அது வெந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் கிரீம், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.
அடுத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது. தால் மக்கானியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதயம் சார்ந்த நோய்கள் போன்றவை வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து - 1 கப்
கடலை பருப்பு - கால் கப்
சி.வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 5 (நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
வெண்ணெய் - 5 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உளுந்தையும், கடலை பருப்பையும் நீரில் நன்கு கழுவிவிட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
குக்கரில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் பருப்பு, உளுந்தை கொட்டி வேகவைத்து இறக்கவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகத்தை போட்டு தளித்த பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தக்காளி, மிளகாய், இஞ்சி - பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்னர் வேகவைத்த பருப்பு, உளுந்தை கொட்டி நன்றாக கிளறி எல்லாம் வெந்ததும் இறக்கவும்.
அதில் வெண்ணெய், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
இதற்கு பெயர்தான் தால் மக்கானி. தால் என்றால் பருப்பு. மக்கானி என்றால் வெண்ணெய்.
கருப்பு உளுந்து - 1 கப்
கடலை பருப்பு - கால் கப்
சி.வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 5 (நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
வெண்ணெய் - 5 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உளுந்தையும், கடலை பருப்பையும் நீரில் நன்கு கழுவிவிட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
குக்கரில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் பருப்பு, உளுந்தை கொட்டி வேகவைத்து இறக்கவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகத்தை போட்டு தளித்த பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தக்காளி, மிளகாய், இஞ்சி - பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்னர் வேகவைத்த பருப்பு, உளுந்தை கொட்டி நன்றாக கிளறி எல்லாம் வெந்ததும் இறக்கவும்.
அதில் வெண்ணெய், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
இதற்கு பெயர்தான் தால் மக்கானி. தால் என்றால் பருப்பு. மக்கானி என்றால் வெண்ணெய்.
தால் மக்கானியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதயம் சார்ந்த நோய்கள் போன்றவை வராமல் தற்காத்துக்கொள்ளலாம். கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






