
சிவப்பு அவல் - 1 கப்
ஏலக்காய் பொடி - சிட்டிகை அளவு
முந்திரி - 10
பால் - 3 கப்
சர்க்கரை - 1/2 கப்
பாதாம் - 5

செய்முறை :
பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துகொள்ளவும்.
சிவப்பு அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி விட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.
பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அவல் சேர்க்கவேண்டும்.
பின்னர் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
அவல் வெந்தவுடன் இறக்கி பரிமாறும் போது முந்திரி, பாதாம் சேர்த்து பரிமாறவும்.