என் மலர்tooltip icon

    சமையல்

    சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட அருமையான சில்லி நண்டை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நண்டு - அரை கிலோ
    பூண்டு - 10 பல்
    உப்பு - தேவையான அளவு
    தக்காளி - 2
    சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
    சோளமாவு - 2 மேசைக்கரண்டி
    அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
    முட்டை - ஒன்று

    சில்லி நண்டு
     
    செய்முறை :

    கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

    நண்டை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கின பூண்டினைப் போட்டு வதக்கவும்.

    அத்துடன் மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கி பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதித்தவுடன் அதில் சுத்தம் செய்த நண்டுகளைப் போட்டு வேகவிடவும். நீரின் அளவு, நண்டு துண்டங்கள் முழுவதும் நனையும் அளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்

    அடுத்து அதில் தக்காளி விழுது, சர்க்கரை, வினிகர், இவையனைத்தையும் கொதிக்கும் குழம்பில் போடவும்.

    ஒரு சிட்டிகை அஜினோமோட்டோ மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.

    சுமார் 10 நிமிடங்கள் வெந்த பிறகு, குழம்பினைக் கெட்டியாக்க அதில் சோளமாவினைச் சேர்க்கவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனையும் குழம்பில் சேர்க்கவும்.

    சற்று நேரத்தில் குழம்பு கெட்டியானவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.

    சூப்பரான சில்லி நண்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் இந்த மஞ்சள் பாலை குடித்து வந்தால் தொற்றை எதிர்த்து போராடும் ஆற்றலை அதிகரிக்கிறது. இன்று இந்த பாலை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பால் - 120 மில்லி
    மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - சிறிதளவு
    மிளகு தூள் – 1 சிட்டிகை
    பட்டைப்பொடி - 1 சிட்டிகை
    தேன் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    இஞ்சியை தோல் நீக்கி கொரகொரப்பாக தட்டிக்கொள்ளவும்.

    அதன் பிறகு இஞ்சி, மஞ்சள் தூள், பட்டைப்பொடி, மிளகு ஆகிய நான்கையும் சேர்க்க வேண்டும்.

    அதன் பிறகு மஞ்சள் வாசனை போகிற அளவிற்கு நன்கு கொதிக்கவைத்து இறக்கி விட வேண்டும்.

    பிறகு அதை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து பருக வேண்டும்.

    செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் அபார பலன்களை கொண்டதுதான் கோல்டன் மில்க் என்று அழைக்கப்படும் மஞ்சள் பால்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
    நாட்டு சர்க்கரை தூள் - 2 டேபிள்ஸ்பூன்
    கெட்டியான பால் - 1 கப்
    லவங்க பட்டை தூள் - சிறிதளவு

    ஹாட் சாக்லேட் மில்க்

    செய்முறை:


    முதலில் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்துக்கொள்ளவும்.

    அகன்ற கிண்ணத்தில் சிறிதள்வு பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை, பட்டை தூள், கோகோ பவுடர் ஆகியவற்றை போட்டு கட்டி பிடிக்காமல் நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.

    இந்த கலவையை அடுப்பில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.

    அதேபோல் மீதமிருக்கும் பாலையும் கொதிக்க வைக்கவும். பால் கொதிக்க தொடங்கியதும் இறக்கி சாக்லேட் கலவையுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நுரை வரும்வரை அடித்து கலக்கி பரிமாறலாம்.

    சூப்பரான ஹாட் சாக்லேட் மில்க் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் நலம் காக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வீட்டிலேயே விதவிதமாக தயாரித்து ருசிக்கலாம். இன்று அரிசி ரவாயில் சத்தான டிபன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி ரவா - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    புளி - நெல்லிக்காய் அளவு
    உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு -1 டீஸ்பூன் வீதம்
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    கொத்தமல்லி கார பால்ஸ்

    செய்முறை:

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகாய், கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல், புளி ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    பின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றவும்.

    அதில் அரைத்த விழுதை கொட்டவும்.

    அதுபோல் நெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து அரிசி ரவாவை கொட்டி லேசாக கிளறி, கால் மணி நேரம் மூடி வைத்து வேகவிட்டு இறக்கவும்.

    ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவி ஏற்றி ருசிக்கலாம்.

    சூப்பரான கொத்தமல்லி கார பால்ஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளை கவரும் விதத்தில் ரோல் வடிவில் உணவுகளை தயார் செய்து சுவைக்க கொடுக்கலாம். இன்று பிரெட், சென்னா, சீஸ் பயன்படுத்தி ரோல் தயார் செய்வது குறித்து பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 10
    சீஸ் துண்டுகள் - 10
    வேகவைத்த சென்னா - 1 கப்
    பெ.வெங்காயம் - 1
    குடைமிளகாய் - 1
    கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
    கரம் மசாலாதூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    தக்காளி சாஸ் - சிறிதளவு

    பிரெட் சென்னா சீஸ் ரோல்

    செய்முறை:

    கொத்தமல்லி, பெரிய வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வேக வைத்த சென்னாவை மிக்சியில் போட்டு லேசாக மசித்துகொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் வெங்காயம், குடை மிளகாயை கொட்டி லேசாக வதக்கவும்.

    பின்னர் அதனுடன் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பச்சை வாசம் நீங்கியதும் சென்னா, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கிக்கொள்ளவும்.

    சூடு ஆறியதும் நன்றாக பிசைந்து நீள் வாக்கில் 10 துண்டுகளாக உருட்டிவைத்துக்கொள்ளவும்.

    பின்னர் அவற்றின் மேல் சீஸ் துண்டுகளை வைத்து சுருட்டிக்கொள்ளவும்.

    பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து அவற்றின் மேல் சென்னா மசாலா கலவையை வைத்து நான்கு புறமும் மூடியிருக்கும்படி உருட்டி வைத்துக்கொள்ளவும்.

    தோசைக்கல்லில் சிறிதளவு நெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் ரோலை வைத்து இரு புறமும் கருகாமல் புரட்டிப்போட்டு எடுக்கவும்.

    அதன் மீது தக்காளி சாஸ் ஊற்றி ருசிக்கலாம்.
     
    சூப்பரான பிரெட் சென்னா சீஸ் ரோல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் அதிமதுரம் சுக்கு சூப் செய்து பருகலாம். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அதிமதுரம் தூள் - அரை டீஸ்பூன்
    சுக்குப் பொடி - அரை டீஸ்பூன்
    திப்பிலி பொடி - கால் டீஸ்பூன்
    பாதாம் - 6
    தண்ணீர் - 2 கப்

    செய்முறை:

    அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

    நன்கு கொதித்ததும் பாத்திரத்தை கீழே இறக்கிவிட வேண்டும். சுடு நீரில் அதிமதுரம் பொடி, சுக்குப்பொடி, திப்பிலி பொடி ஆகியவற்றை கொட்டி இரண்டு நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

    நீராவியில் பொடிகள் அனைத்தும் வெந்ததும், நன்றாக கலக்கி சூட்டோடு பருகலாம்.

    பருகும் போதே பாதாமை மென்று சாப்பிட்டால் கசப்பு தெரியாமல் இருக்கும்.

    சூப்பரான அதிமதுரம் சூப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலுக்கு புத்துணர்ச்சியும், உடல் சூட்டை குறைக்கவும் உதவும் இளநீருடன் சியா விதை, லெமன் சேர்த்து சத்தான பானம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இளநீர் - 1 கப்
    சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சிறிதளவு

    செய்முறை

    இளநீரில் சியா விதைகளைப் போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்தால் இளநீர்- சியா பானம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நல்லி எலும்பில் செய்யும் நல்லி நிஹாரி தோசை, இட்லி, புலாவ், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை அறிந்த கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    சதையுடன் நல்லி எலும்பு - கால் கிலோ
    வெங்காயம் - அரை கப்
    இஞ்சி-  சிறிய துண்டு
    நெய் - 2 ஸ்பூன்
    உப்பு- தேவையான அளவு
    சீரகம் -  1 ஸ்பூன்
    சோம்பு - 1 ஸ்பூன்
    பிரியாணி இலை- 2
    மிளகு - 1 ஸ்பூன்
    இலவங்கப்பட்டை- 2
    ஜாதிக்காய்- 1
    அன்னாசி பூ- 1
    கிராம்பு- 2
    ஏலக்காய் - 4
    பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
    கசகசா - 1 ஸ்பூன்
    மிளகாய் - 5
    இஞ்சி பேஸ்ட்- 1 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    நல்லி நிஹாரி

    செய்முறை

    சதையுடன் நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நல்லி எலும்பை போட்டு அதனுடன் தண்ணீர், உப்பு சேர்த்து விசில்விட்டு வேகவைக்கவும்

    அடுத்து வாணலியில் சீரகம், சோம்பு, பிரியாணி இலை, மிளகு, பட்டை, ஜாதிக்காய், அன்னாசி பூ, கிராம்பு, ஜாதிக்காய், ஏலக்காய், பொட்டுக்கடலை, கச கசா, மிளகாய் வத்தல் போட்டு வறுத்து மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்துகொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து வேக வைத்த நல்லியை சேர்த்து அரைத்த மசாலா தூள், தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்

    கடைசியாக கொத்தமல்லி சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் நல்லி நிஹாரி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பேரிச்சம் பழம் பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.
    தேவையான பொருட்கள்

    பாதாம் பருப்பு - 10
    பேரீச்சம் பழம் - 5
    பசும் பால் - 1 கப்
    தேங்காய்ப் பால் - கால் கப்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    ஏலக்காய் - 1/8 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    நாட்டுச் சர்க்கரை - 1 டீஸ்பூன்

    பாதாம் பேரிச்சம்பழ பானம்

    செய்முறை

    பாதாம் பருப்பு மற்றும் பேரிச்சம் பழத்தினை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ளவும்.

    பசும் பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும்.

    அடுத்த நாள் காலை மிக்ஸியில் பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    அடுத்து தேங்காய்ப் பாலுடன் பசும் பாலினைக் கலந்து இதனை அரைத்து வைத்த பேஸ்ட்டுடன் கலக்கவும்.

    அடுத்து அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிரிட்ஜில் வைத்துக் குடிக்கவும்.

    சூப்பரான சத்தான பேரிச்சம்பழ பானம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாம் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு போன்றவற்றில் அல்வா செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இன்று சுவை மிகுந்த சுரைக்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சுரைக்காய் - 3 கப்
    நெய் - 3 டேபிள் ஸ்பூன்
    பால் - 3 கப்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    சர்க்கரை - 3/4 கப்
    பாதாம் - 7

    சுரைக்காய் அல்வா

    செய்முறை


    முதலில் சுரைக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    அடுத்து வாணலியில் நெய் ஊற்றி சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பால் ஊற்றி, வேக விட்டு ஏலக்காய் சேர்த்து வேகவிடவும்.

    சுரைக்காய் வெந்ததும் இறுதியாக சர்க்கரை மற்றும் பாதாம் சேர்த்து இறக்கினால், சுரைக்காய் அல்வா ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள், வயதானவர்களுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் சிவப்பு அரிசியில் புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு அரிசி அல்லது சிவப்பு புட்டு அரிசி - 2 கப்,
    பொடித்த நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம் - தேவைக்கு,
    முழு தேங்காய் - 1 (துருவியது),
    வாழைப்பழம் - தேவைக்கு,
    உப்பு - ஒரு சிட்டிகை.

    சிவப்பு அரிசி

    செய்முறை :

    சிவப்பு புட்டு அரிசியை, தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உலர்த்தி புட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும்.

    பின்பு மாவை லேசாக வறுத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து, சிறிது ஈரப்பதத்தோடு பிசையவும்.

    பின் புட்டுக்குழாயில் முதலில் சிறிது தேங்காய்த் துருவல், பின்பு சிறிது மாவு, இப்படி ஒவ்வொன்றாக சேர்த்து நிரப்பி ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

    பின்பு நாட்டுச் சர்க்கரை தூவி, பழத்துடன் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சிவப்பு அரிசி புட்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மூங்கில் அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த அரிசியை வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மூங்கில் அரிசி - கால் கப்,
    பால் - 4 கப்,
    வெல்லத்தூள் - அரை கப்,
    தேங்காய்த் துருவல் - அரை கப்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    உலர் திராட்சை, முந்திரி. - தேவையான அளவு
    ஏலக்காய்த்தூள்- சிறிதளவு

    மூங்கில் அரிசி பாயாசம்

    செய்முறை:

    மூங்கில் அரிசியை கழுவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து, மிக்சியில் சேர்த்து தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    பாலை பாதியாகும் வரை சுண்டக்காய்ச்சவும்.

    அடிகனமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து நன்கு வேகவைக்கவும்.

    வாணலியில் நெய்யைச் சூடாக்கி முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

    பிறகு, அதே நெய்யில் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    வேகவைத்த மூங்கில் அரிசி மாவுடன், பால், வெல்லத்தூள், தேங்காய்த் துருவல், முந்திரி, திராட்சை சேர்த்து, ஒரு கொதி விட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

    சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

    சூப்பரான மூங்கில் அரிசி பாயாசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×