
பால் - 120 மில்லி
மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
மிளகு தூள் – 1 சிட்டிகை
பட்டைப்பொடி - 1 சிட்டிகை
தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை:
பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
இஞ்சியை தோல் நீக்கி கொரகொரப்பாக தட்டிக்கொள்ளவும்.
அதன் பிறகு இஞ்சி, மஞ்சள் தூள், பட்டைப்பொடி, மிளகு ஆகிய நான்கையும் சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு மஞ்சள் வாசனை போகிற அளவிற்கு நன்கு கொதிக்கவைத்து இறக்கி விட வேண்டும்.
பிறகு அதை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து பருக வேண்டும்.