என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கேரளா ஸ்பெஷல் சத்தான பயறு கஞ்சி
Byமாலை மலர்2 Sep 2020 6:10 AM GMT (Updated: 2 Sep 2020 6:10 AM GMT)
கேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான சத்தான உணவு பாசிப்பயறு கஞ்சி. இந்த கஞ்சி சத்தானதும் கூட. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலப...மேலும்
தேவையான பொருட்கள்
மட்டை அரிசி அல்லது பச்சரிசி அல்லது சிகப்பு அரிசி - ஒரு டம்ளர்
பாசிப்பயறு - அரை டம்ளர்
சின்ன வெங்காயம் - 4
ப. மிளகாய் - மூன்று
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவியது - தேவைக்கு
செய்முறை
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் முதலில் அரிசி, பச்சை பயறை சேர்த்து நன்றாகக் கழுவி விட்டு பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், வெந்தயம், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வைக்கவும்.
விசில் அடங்கியவுடன் கரண்டியின் பின் பகுதியை வைத்து நன்றாக மசித்து விடவும். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி விடவும்.
தண்ணியாக பிடிக்கும் என்றால் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவைக்கு ஏற்றவாறு துருவிய தேங்காயை அதனுடன் கலந்து பரிமாறலாம்.
கேரளாவில் இதனுடன் சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிடுவார்கள்.
மட்டை அரிசி அல்லது பச்சரிசி அல்லது சிகப்பு அரிசி - ஒரு டம்ளர்
பாசிப்பயறு - அரை டம்ளர்
சின்ன வெங்காயம் - 4
ப. மிளகாய் - மூன்று
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவியது - தேவைக்கு
செய்முறை
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் முதலில் அரிசி, பச்சை பயறை சேர்த்து நன்றாகக் கழுவி விட்டு பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், வெந்தயம், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வைக்கவும்.
விசில் அடங்கியவுடன் கரண்டியின் பின் பகுதியை வைத்து நன்றாக மசித்து விடவும். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி விடவும்.
தண்ணியாக பிடிக்கும் என்றால் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவைக்கு ஏற்றவாறு துருவிய தேங்காயை அதனுடன் கலந்து பரிமாறலாம்.
கேரளாவில் இதனுடன் சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிடுவார்கள்.
சுவையான மற்றும் சத்தான கஞ்சி தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X