என் மலர்tooltip icon

    சமையல்

    தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பட்டாணி மசாலா கூட்டு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பட்டாணி - 2 கப்
    சின்னவெங்காயம் - அரை கப்
    நெய் - 4 டீஸ்பூன்
    கருவாப்பட்டை - 1
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கல் உப்பு - தேவைக்கு
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    தக்காளி - 3
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தனித்தனியே அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், பட்டை ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்கவும்.

    அதில் அரைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகுவரை வதக்கவும்.

    பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியா தூள் ஆகியவற்றை கொட்டி லேசாக கிளறவும்.

    பின்னர் தக்காளி, பட்டாணியை அடுத்தடுத்து கொட்டி நன்றாக வதக்கவும்.

    வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவிடவும்.

    எண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சூப்பரான பட்டாணி மசாலா கூட்டு ரெடி.

    குறிப்பு: பாக்கெட்டில் அடைத்து விற்கும் பட்டாணியை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு.
    தேவையான பொருட்கள் :

    கடுகு - 2 டேபிள்ஸ்பூன்,
    புளி - கோலிகுண்டு அளவு,
    உளுந்து - 1/2 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2,
    பெருங்காயத்தூள் - சிறிது
    தேங்காய் துண்டு - 2,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு வாணலியில் வெறும் கடுகு போட்டு பொரித்து எடுக்கவும்.

    பிறகு எண்ணெய் விட்டு உளுந்து, காய்ந்த மிளகாய், தேங்காய், புளி போட்டு சிவக்க வறுக்கவும். அதில் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

    அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.

    சுவையான கடுகு துவையல் ரெடி.

    இது சற்று துவர்ப்புடன் இருக்கும். தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்கை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த கேக்கை வீட்டிலேயே ஈஸியாக, முட்டை சேர்க்காமல், சிம்பிளாக செய்யலாம்.
    தேவையான பொருட்கள்:

    கலவை: 1

    மைதா - ஒன்றரை கப்
    பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
    டூட்டி ஃப்ரூட்டி - அரை கப்
    உப்பு - 1 சிட்டிகை

    கலவை: 2

    சர்க்கரை - அரை கப்
    எண்ணெய் - 1/8 கப் + 1 டேபிள் ஸ்பூன்
    வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
    தண்ணீர் அரை  கப்

    கலவை: 3

    கெட்டியான தயிர் - அரை கப்
    வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
    பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு பௌலில் சர்க்கரை, எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு சர்க்கரை கரையும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் சிறு பௌலில் 1 டீஸ்பூன் மைதாவுடன், டூட்டி ஃப்ரூட்டியைப் போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, 2 முறை சலித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ளவும்.

    பின் 1 டேபிள் ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டியை தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொண்டு, மீதமுள்ளதை மைதா கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பின்னர் மற்றொரு பௌலில் தயிர், பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    இறுதியில் கலவை 1, கலவை 2 மற்றும் கலவை 3 ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    பின்பு 180 டிகிரி C-யில் மைக்ரோ ஓவனை சூடேற்ற வேண்டும்.

    பின் பேக்கிங் ட்ரேயில் பேப்பரால் செய்யப்பட்ட கப் கேக் லைனரை வைத்து, அதற்குள் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி, அதன் மேல் தனியாக எடுத்து வைத்துள்ள டூட்டி ஃப்ரூட்டியை தூவி, மைக்ரோ ஓவனில் பேக்கிங் ட்ரேயை வைத்து, 25-30 நிமிடம் பேக்கிங் செய்து எடுத்தால், டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். செரிமானப் பிரச்சனை நீங்கும். பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 4
    மிளகு - 1 டீஸ்பூன்
    இஞ்சி - 2 துண்டு
    பூண்டு - 6 பல்
    லவங்க பட்டை - 2
    தனியா தூள் - 2 டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - கால் கப்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    பீட்ரூட், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, பூண்டு, இஞ்சி, லவங்க பட்டை, தனியா தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    பின்னர் வதக்கிய பொருட்களை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு கலந்து பீட்ரூட்டை வேகவைத்துக்கொள்ளவும்.

    நன்கு வெந்ததும் அதில் அரைத்த மசாலா கலவையை கொட்டி, மசாலா வாசம் நீங்கி கெட்டி பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான பீட்ரூட் மிளகு சாப்ஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடைகளில் கிடைக்கும் ஃப்ரைடு ரைஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    காளான்கள் - 15
    இஞ்சி, பூண்டு - ஒரு தேக்க‌ர‌ண்டி
    வெங்காய‌த்தாள் - சிறிதளவு
    பெரிய வெங்காயம் - ஒன்று
    ப‌ச்சை மிள‌காய் - 3
    சோயா சாஸ் - 4 தேக்கரண்டி
    மிள‌குத்தூள் - ஒரு தேக்க‌ர‌ண்டி
    சாத‌ம் - 4 கப் (வ‌டித்து ஆறவைத்தது)
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    முத‌லில் பட்டன் காளான்களை எடுத்துக்கொண்டு நீரில் சுத்தப்படுத்தி, நன்கு நறுக்கிக்கொள்ளவும்.

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாயையும் வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    ஒரு பெரிய வாணலியில், சிறிதளவு எண்ணெயை விட்டு சூடானதும் வெங்காய‌ம், பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

    அடுத்து பூண்டு, இஞ்சியை சேர்த்து, சிறிது நேர‌ம் வத‌க்கிவிட்டு, நறுக்கிய காளான் துண்டுகளை வாணலியில் சேர்க்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, வடித்து வைத்திருந்த சாதத்தைக் கொட்டி கிளறவும்.

    பின்னர் மிளகுத்தூள், சோயா சாஸ் முதலியவற்றைச் சேர்த்து இறக்கி, அதன் மேல் சில வெங்காயத்தாள்களை தூவி கலந்தால் சூடான அட்டகாசமான சுவையில் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சூப்பில் பல கீரைகளை சேர்ப்பதால், அதன் அனைத்து சத்துக்களும் முழுமையாக குழந்தைகளுக்கு கிடைக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பொடியாக நறுக்கிய முளைக்கீரை - ஒரு கைப்பிடி
    பொடியாக நறுக்கிய சிறுகீரை - ஒரு கைப்பிடி
    பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - ஒரு கைப்பிடி
    பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
    சோள மாவு - 2 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
    வெண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    முதலில் சோள மாவை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முளைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரையை நெய் விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.

    கீரை நன்கு வதங்கியதும் அதில் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் கரைத்து வைத்த சோள மாவை ஊற்றி கொதிக்கவிட்டு, வெண்ணெய் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சத்தான மல்டி கீரை சூப் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஸ்வீட் சோமாஸ் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகள் சேர்த்து சுவையான சோமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 3 கப்,
    ரவை - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு  - தேவைக்கேற்ப,
    எண்ணெய்  - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    மசாலா செய்வதற்கு:

    உருளைக்கிழங்கு  - 200 கிராம்,
    கேரட் துருவல்  - 4 டேபிள்ஸ்பூன்,
    உப்பு  - தேவைக்கேற்ப,
    ஊறவைத்த பச்சைப் பட்டாணி  - கால் கப்,
    மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்  - தலா ஒரு சிட்டிகை,
    கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை  - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம்  - ஒன்று,
    பச்சை மிளகாய்  - 2,
    எண்ணெய்  - 2 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை:

    கோதுமை மாவு, உப்பு, ரவையுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, 20 நிமிடம் ஊறவிடவும்.

    கழுவி, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணியுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேகவிடவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவலயும் சேர்த்துக் கிளறி, வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

    பிசைந்த கோதுமை மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக இட்டு... 2 டேபிள்ஸ்பூன் மசாலாவை உள்ளே வைத்து மூடி நன்றாக அழுத்தி, சோமாஸிகளாக செய்யவும்.

    கடாயில் எண்ணெயைக் காயவைத்து செய்துவைத்த சோமாஸ்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

    குறிப்பு: சோமாஸ் மேக்கரில் சிறிய சப்பாத்தியையும், மசாலாவையும் வைத்து மூடி, அழுத்தி ஓரங்களில் வெளியே வருவதை எடுத்துவிட்டு, உள்ளே இருப்பதை எண்ணெயில் பொரித்து எடுத்தால், அழகிய வளைவுகளுடன் ஓரங்கள் கண்கவரும் விதத்தில் இருக்கும். சோமாஸ் பொரிக்கும்போது அடுப்பை 'சிம்’மில் வைத்து ஓரங்கள் பிரிந்து விடாதவாறு பார்த்துப் பொரிக்க வேண்டும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மிகவும பிடித்த சிற்றுண்டி தான் மசாலா கார்ன் சாலட். மாலை வேளையில் எண்ணெயில் பொரித்த பலகாரங்களுக்கு பதிலாக இதை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிக விருப்பமாக சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    ஸ்வீ ட் கார்ன் -  கப்
    சாட் மசாலா - 2 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
    பிளாக் சால்ட் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    வெண்ணெய் -  1 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி ? சிறிதளது

    செய்முறை

    கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஸ்வீ ட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.

    முதலில் வாணலியில் வெண்ணெய்யை உருக்கி அதில் வேகவைத்த ஸ்வீட்கார்னை போட்டு மிதமான தீயில்  5 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். பிறகு அதை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்போது மசாலா கார்ன் சால்ட் ரெடி.

    விருப்பமிருந்தால் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், குடைமிளகாய், வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலுக்கு அதிக சத்துக்கள் கிடைக்கும்.

    இனிப்பு, புளிப்பு, காரம், ஆகிய மூன்று சுவைகளும் ஒன்று சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும் சிற்றுண்டி இது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குறைந்த நேரத்தில் ருசியான குழம்பு செய்ய வேண்டுமா? அப்படினா பருப்பு உருண்டை குழம்பை செய்யலாம். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு - 1 கப்
    துவரம்பருப்பு - கால் கப்
    இஞ்சி - 1 துண்டு
    மிளகு, சோம்பு, சீரகம் - சிறிதளவு
    கசகசா - சிறிதளவு
    தேங்காய் துருவல் - கால் கப்
    தக்காளி, பெ.வெங்காயம் - 3
    புளி - நெல்லிக்காய் அளவு
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு
    கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
    சாம்பார் வெங்காயம் - 10
    கொத்தமல்லிதழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.

    கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

    மிக்சியில் முதலில் இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றை போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனுடன் பருப்பு வகைகளை லேசாக அரைத்து, சிறிதளவு வெங்காயத்தையும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் தக்காளி, கசகசா, மீதமிருக்கும் வெங்காயம், சோம்பு மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் அரைத்து வைத்த மசாலாக்களை கொட்டி வதக்கவேண்டும்.

    பின்னர் அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

    பச்சை வாசம் நீங்கியதும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.

    அதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    நன்கு கொதித்து வந்ததும் வேக வைத்துள்ள உருண்டைகளை போட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எலுமிச்சை மிளகு டீ கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலிகளைக் குறைப்பதற்கும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. எந்தவொரு நோய்க்கும் எதிராகப் போராட உகந்தது.
    நல்ல ஆரோக்கியத்திற்காக மூலிகைத் தேநீர் பெரிதும் பயனளித்து வருகிறது . இஞ்சி, துளசி, புதினா, மிளகு மற்றும் இலவங்கப்பட்டை மிகவும் ஆரோக்கியமானவை, எந்தவொரு நோய்க்கும் எதிராகப் போராட உகந்தவை. இது கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலிகளைக் குறைப்பதற்கும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    எலுமிச்சை சாறு - 1 பழத்தினுடையது
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1/4 தேக்கரண்டி
    தேன் - 1 1/2 தேக்கரண்டி

    செய்முறை:

    2 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மிளகு மற்றும் மஞ்சள் தூளை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

    பின்னர் அதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் விட்டு குடிக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குட்டீஸ்களுக்கு சாக்லேட் ஸ்மூத்தி ரொம்ப பிடிக்கும். கடைகளில் கிடைக்கும் இந்த சாக்லேட் ஸ்மூத்தியை வீட்டிலேயே தயாரிக்கும் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    சாக்லேட் -100 கிராம்,
    ஸ்ட்ராபெர்ரி - 3-4 ,
    வாழைப்பழம் - 1 ,
    குளிர்ந்த பால் - 2 கப்,
    தயிர் - 1/4 கப்,
    தேன் - 2 தேக்கரண்டி ,
    இறுதியாக நறுக்கிய கலப்பு கொட்டைகள் (பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிஸ்தா) சில பருவகால பழங்களை அலங்கரிக்க,
    சாக்லேட் சிரப் - 1 தேக்கரண்டி.

    செய்முறை

    மிக்சிஜாரில் துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழங்கள், துண்டுகளாக்கப்பட்ட சாக்லேட் ஆகியவற்றைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

    இப்போது பால், தயிர், தேன் மற்றும் ஐஸ் கட்டி ஆகியவற்றை தேவையான அளவு கலந்து மீண்டும் கலக்கவும்.

    அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றவும்.

    இப்போது ஸ்ட்ராபெர்ரி, டிரை ப்ரூட்ஸ் போட்டு குளிர்ச்சியாகவும் குளிராகவும் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். இந்த முறையில் பழங்களை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    ஸ்டார் ஃப்ரூட் - 2,
    மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தலா 1 சிட்டிகை,
    கருப்பு திராட்சை, லாலிபாப் குச்சிகள்.

    செய்முறை

    ஸ்டார் ஃப்ரூட்டின் விளிம்பை மட்டும் பீட்டரில் சீவி விடவும்.

    மேல்புறம், கீழ்புறம் நறுக்கவும். பிறகு வட்ட வட்டமாக நறுக்கினால்  இயற்கையாகவே ஸ்டார் வடிவம் கிடைக்கும்.

    மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து நறுக்கிய பழத்தில் தூவவும்.

    லாலிபாப் குச்சியில்  முதலில் கருப்பு திராட்சை, ஸ்டார் பழம், மீண்டும் திராட்சை, ஸ்டார் பழம் என குத்தி அலங்கரித்து பரிமாறவும்.

    விரும்பினால் கருப்பு  திராட்சைக்கு பதில் பச்சை திராட்சை, செர்ரி குத்தி பரிமாறலாம்.

    அந்ததந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×