என் மலர்tooltip icon

    சமையல்

    குழந்தைகளுக்கு சத்தான உணவு செய்து கொடுக்க விரும்பினால் சாமை, வெஜிடபிள் சேர்த்து சூப்பரான பிரியாணி செய்யலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாமை அரிசி - 500 கிராம்,  
    வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ - தலா 100 கிராம்
    பச்சைப்பட்டாணி - 50 கிராம்,
    தயிர் - அரை கோப்பை, இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு,
    சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி,
    மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்.
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:
    நெய் -100 மி.கி,
    ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2,
    பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

    இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    பின் புதினாவை சேர்த்து நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த்தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதி வந்ததும் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின் சாமை அரிசியைச் சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்பு 5 நிமிடம் தீயை மிதமாக வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

    பிரியாணி பதம் வந்ததும் இறக்கி புதினா தூவி பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளன. கொள்ளுவை நம் அன்றாட உனவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும்.
    தேவையான பொருட்கள்

    கொள்ளுப்பயிறு - ஒரு கப்,
    முட்டைக்கோஸ் - சிறிய துண்டு
    வெங்காயம் - 1,
    கேரட் - 1,
    குடைமிளகாய் - பாதி
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,
    கொத்தமல்லி - சிறிதளவு
    சோம்புப்பொடி - ஒருடீஸ்பூன்.
    பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.

    செய்முறை


    முட்டைக்கோஸ், வெங்காயம், குடைமிளகாய், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொள்ளுப்பயிறை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்.

    பின்பு தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து கொள்ளவும்.

    அந்தக் கலவையுடன் முட்டைக்கோஸ், வெங்காயம், குடைமிளகாய், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி, கரம் மசாலா, உப்பு, சோம்புப்பொடி சேர்த்து நன்கு பிசைந்து  கொள்ளவும்.

    பிசைந்த மாவை விருப்பமாக வடிவில் தட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த கட்லெட்டுகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான சுவையான கட்லெட் வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வால்நட்ஸ் மசால் வடை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கடலை பருப்பு - 1 1/4 கப்
    வால்நட்ஸ் - 3/4 கப்
    சோம்பு - 1 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1 துண்டு
    கறிவேப்பில்லை - சிறிதகளவு
    கொத்தமல்லி இலை - சிறிதகளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலை பருப்பை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    சிறிதளவு வால்நட்ஸ், கடலைப்பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.

    நன்றாக ஊறிய கடலை பருப்புடன், வால்நட்ஸ், சோம்பு, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.

    அரைத்த கடலை பருப்பு கலவையுடன், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை, ஊறவைத்த கடலை பருப்பு, நறுக்கிய வால்நட்ஸ் சேர்த்து நன்கு பிசையவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிதளவு எடுத்து, தட்டி, எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

    பொன்னிறமானதும், வடையை எடுக்கவும்.

    சுவையான வால்நட்ஸ் மசாலா வடை தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் சாலட் சாப்பிடுவது ஒரு நல்ல உணவு பழக்கவழக்கமாக கருதப்படுகின்றது. எனவே இன்று முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முளை கட்டிய பச்சை பயறு - 1 கப்
    காய்ந்த மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகு துாள், சீரக தூள் - தலா 1/2 டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிது
    துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    செய்முறை

    பச்சை பயிறை முதல் நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் நன்றாக வடித்து அதை ஹாட் பேக்கிலோ அல்லது துணியில் கட்டியோ ஒரு நாள் வைக்கவும். மறுநாள் பயறு நன்றாக முளைத்திருக்கும்.

    முளைகட்டிய பச்சை பயறை, இரு நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    அதோடு, துருவிய கேரட், சீரகம், மிளகு துாள், மாங்காய் துாள், கொத்தமல்லித்தழை, உப்பு கலந்து பரிமாறவும்.

    சூப்பரான முளை கட்டிய பச்சை பயறு சாலட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, நாண், சப்பாத்தி மற்றும் அனைத்து வகை சாதங்களுக்கும் ஏற்ற சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கத்தரிக்காய் - 250 கிராம்
    வெங்காயம் - 3
    மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
    புளி - சிறு எலுமிச்சை அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - 1 கப்

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் கத்தரிக்காய்களை கழுவி காம்பு நீக்கி நான்காய் கீறிக் கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து, தேங்காய் துருவல், மிளகாய் தூள், அரிந்த வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் புளிக் கலவையை கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிய பின் கலவையை எடுத்து கீறிய கத்தரிக்காய்களுக்குள் நிரப்பவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை அடுக்கி வைக்கவும். மீதமுள்ள மசாலா கலவையை அதன்மீது கொட்டி மூடிவைத்து மிதமான தீயில் வேகவைக்கவும்.

    சிறிது நேரம் கழித்து கத்தரிக்காய்களை திருப்பி போடவும்.

    எல்லாப் பக்கங்களும் வெந்தபின் எடுத்தால் ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் மசாலா ரெடி!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதையை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று தர்பூசணி, சப்ஜா விதை சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி - 150 கிராம்,
    சப்ஜா விதை - 1 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
    தேன் - தேவைக்கு,
    புதினா இலை - சிறிது.

    செய்முறை :

    தர்பூசணியை தோல் விதை நீக்கி அரைத்துக் கொள்ளவும்.

    சப்ஜா விதையை தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

    தர்பூசணி ஜூஸ், ஊறிய சப்ஜா விதை, தேன், எலுமிச்சைச்சாறு, புதினா இலை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

    குளுகுளு தர்பூசணி சப்ஜா ஜூஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை குறைபாடு, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை போன்ற அத்தனை பிரச்சனைகளும் தீருகின்றன.
    தேவையான பொருட்கள்
     
    முருங்கைக்காய் -  4
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    உப்பு - தேவைக்கேற்ப

    மசாலா அரைக்க :

    தேங்காய் துருவல் - தேவையானஅளவு
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 10
    காய்ந்த மிளகாய் -  7
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

    செய்முறை

    முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

    மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் முருங்கைக்காய், அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைக்கவும்.

    ஈசியான முருங்கைகாய் மசாலா தயார்.

    இதே முறையில் முருங்கைக்காய்க்கு பதிலாக கத்தரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் வீணாக்காமல் சமைக்கும் முறைகளில் ஒன்று துவையல். துவையல் மூலம் காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் அழியாமல், முழுமையாய் நமது உடலில் சேருகின்றன.
    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி தழை - 1 கப்
    புதினா - 2 டேபிள்ஸ்பூன்
    வெல்லம் - 50 கிராம்
    உப்பு - சுவைக்கு
    எண்ணெய் - தேவையான அளவு
    மிளகாய் வற்றல் - 2
    கடுகு - 1 டீஸ்பூன்
    புளி - நெல்லிக்காய அளவு

    செய்முறை

    கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கொத்தமல்லி தழை, புதினா, உப்பு, புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அத்துடன் வெல்லம் சேர்த்து கலந்து ஆறவிட்டு மிக்சியில் சிறிது நீர்விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு கடுகு தாளித்துக்கொட்டி பரிமாறவும்.

    இந்த துலையலை சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். அல்லது மோர் சாதம், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடைக்கு இதமாக தர்பூசணி பழத்தில் விதவிதமான ரெசிபிகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தர்பூசணியில் அல்வா செய்யும் விதம் குறித்து பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி பழம் - 1  
    வெல்லம் - அரை கிலோ
    தேங்காய் பால் - கால் கப்
    ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
    முந்திரி பருப்பு - 5  
    பாதாம் - 10
    நெய் - சிறிதளவு

    செய்முறை:

    தர்பூசணி பழத்தை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக்கிக்கொள்ளவும்.

    பாதாம், முந்திரியை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    பாகு பதத்துக்கு வந்ததும் தர்பூசணி கூழ், தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும்.

    அவ்வப்போது சிறிதளவு நெய் ஊற்றி கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் முந்திரி பருப்பு, பாதாம், ஏலக்காய் தூள் தூவி இறக்கவும்.

    பின்னர் ஆறியதும் துண்டுகளாக நறுக்கி அல்வாவை சுவைக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கரித்தூள் கூந்தல், சருமம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தகுந்த பொருட்களை கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நமது தொப்பையை விரைவில் குறைக்க கரித்தூள் பயன்படுகிறது.
    தேவையான பொருட்கள்

    செயலாக்கப்பட்ட கரித்தூள்  - 1 டேபிள் ஸ்பூன்
    லெமன் ஜூஸ்  - 1 டேபிள் ஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்
    வெதுவெதுப்பான நீர்  - 1 டம்ளர்

    செய்முறை

    ஒரு கிளாஸ் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள், தேன் மற்றும் லெமன் ஜூஸை தேவையான அளவு கலந்து கொள்ளவும்.

    நன்றாக கலக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

    இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரெட்டில் ஜாம் தடவி சாப்பிட்ட பழக்கம் போய் இன்று பீனட் பட்டர்தான் பலருடைய சாய்ஸ். கடையில் பீனட் பட்டர் வாங்குவதை விட வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை - 1 கப்
    கடலை அல்லது ரைஸ் பிராண்ட் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
    உப்பு - 1 சிட்டிகை
    தேன் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    வறுத்த வேர்க்கடலையாக இருந்தாலும் அதன் தோலை நீக்கிவிடுங்கள். முழு காய்ந்த கடலையாக இருந்தால் அதை உரித்து கடாயில் வறுத்துக்கொள்ளுங்கள்.

    பின் அதன் தோலை நீக்கிவிட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

    கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    கொஞ்சம் மசிந்ததும் எண்ணெய் மற்றும் தேன், உப்பு சேர்த்து மீண்டும் மைய அரையுங்கள்.

    அவ்வளவுதான் பீனட் பட்டர் தயார்.

    இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முள்ளு முருங்கை இலை(கல்யாண முருங்கை) மருத்துவ குணம் நிறைந்தது. பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. நாள் பட்ட சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி கொண்டது.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - 1 கப்
    உளுந்து - 1 கைப்பிடி
    முள்ளு முருங்கை இலை - 10, 12
    சிறிதாக நறுக்கிய வெங்காயம் -அரை கப்                                               
    மிளகு - 3/4 தேக்கரண்டி
    சீரகம் 1 தேக்கரண்டி
    உப்பு- 1/2 தேக்கரண்டி

    செய்முறை:      
                                                                                                              
    கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

    உளுந்து, அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, கீரை, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கவும்.

    உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலக்கவும், மாவு தயார். இந்த மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான, சுவையான கல்யாண முருங்கை தோசை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×