என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான சாமை வெஜிடபிள் பிரியாணி
Byமாலை மலர்22 March 2021 9:31 AM GMT (Updated: 22 March 2021 9:31 AM GMT)
குழந்தைகளுக்கு சத்தான உணவு செய்து கொடுக்க விரும்பினால் சாமை, வெஜிடபிள் சேர்த்து சூப்பரான பிரியாணி செய்யலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சாமை அரிசி - 500 கிராம்,
வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ - தலா 100 கிராம்
பச்சைப்பட்டாணி - 50 கிராம்,
தயிர் - அரை கோப்பை, இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு,
சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி,
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
நெய் -100 மி.கி,
ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2,
பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.
செய்முறை
வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின் புதினாவை சேர்த்து நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த்தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின் சாமை அரிசியைச் சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு 5 நிமிடம் தீயை மிதமாக வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
சாமை அரிசி - 500 கிராம்,
வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ - தலா 100 கிராம்
பச்சைப்பட்டாணி - 50 கிராம்,
தயிர் - அரை கோப்பை, இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு,
சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி,
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
நெய் -100 மி.கி,
ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2,
பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.
செய்முறை
வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின் புதினாவை சேர்த்து நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த்தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின் சாமை அரிசியைச் சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு 5 நிமிடம் தீயை மிதமாக வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
பிரியாணி பதம் வந்ததும் இறக்கி புதினா தூவி பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X