என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுதே தூங்கி விட்டால், அதன் வயிறு நிறைந்திருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்; அப்படி நிறையவில்லை எனில் தூங்கும் குழந்தையை மெதுவாக எழுப்பி விட வேண்டும்.
    அன்னை தாய்ப்பால் கொடுக்கும் பொழுது, குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை நித்திரை கொள்ள ஆரம்பித்து விடும்; அதுவும் தாயின் மார்பகத்தில் வாய் வைத்து பால் குடிக்க ஆரம்பித்த உடன் சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தை உறக்கத்தில் மூழ்கி கனவுகளில் மிதக்கத் தொடங்கி விடும். இவ்வாறு அடிக்கடி உறங்குவதால்,

    குழந்தையால் சரியாக பால் அருந்த முடியாது; இதன் விளைவு குழந்தையின் உடல் எடை மற்றும் வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும். மேலும் தாய்க்கும் குழந்தை முழுமையாக பால் அருந்திய திருப்தி ஏற்படாது.

    எனவே, குழந்தைகள் பால் குடிக்கும் பொழுது ஏன் உறங்குகின்றன, அதற்கு என்ன காரணம் என்று தாய்மார்கள் அறிந்து, அதை நிவர்த்தி செய்ய முயற்சிப்பது அவசியம்.

    குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுதே தூங்கி விட்டால், அதன் வயிறு நிறைந்திருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்; அப்படி நிறையவில்லை எனில் தூங்கும் குழந்தையை மெதுவாக எழுப்பி விட வேண்டும். குழந்தையை எழுப்ப கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றலாம்:

    குழந்தையின் முதுகை மெதுவாக தட்டிக்கொடுத்து எழுப்ப முயலலாம்.

    குழந்தையின் ஆடைகளை நீக்கி விட்டு, வேற்று தேகத்துடன் இருக்க செய்தால், நீங்கள் ஆடைகளை களையும் பொழுதே குழந்தை முழித்து விடும்.

    குழந்தையின் உடல் உறுப்புகளில் மெதுவாக குசு சத்தம் வெளிப்படும் வகையில் ஊதி, குழந்தையை எழுப்பலாம்.

    குழந்தையின் கால் அல்லது கைகளில் உள்ளங்கால் மற்றும் உள்ளங்கையில் மிருதுவாக கிச்சு கிச்சு காட்டி எழுப்பலாம்.

    குழந்தைகளின் டையப்பரை மாற்றி விடுவது போல், அதை சற்று தொந்தரவு செய்து, குழந்தையின் தூக்கத்தை துரத்தலாம்.

    குழந்தை பால் குடிக்கும் போது தூங்கி விட்டால், அதனை ஒரு மார்பகத்திலிருந்து மற்ற மார்பகத்திற்கு மாற்றி, அந்த முலைக்காம்பை பற்றிக்கொள்ள செய்ய முயற்சிக்கலாம்; இந்த முயற்சியின் பொழுது கண்டிப்பாக குழந்தையின் தூக்கம் கலைந்துவிடும்.

    குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த பதிப்பில் படித்த அனைத்து விஷயங்களையும் நினைவில் கொண்டு, குழந்தையின் செய்கைகளை கூர்ந்து கவனித்து, அவர்களின் ஆரோக்கியம் காக்க பாடுபட வேண்டும். 
    மகளை சாதனையாளராக உருவாக்க தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறன்களை எப்படி கண்டுபிடித்து மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    மகளை சாதனையாளராக உருவாக்க தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறன்களை எப்படி கண்டுபிடித்து மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    கணவன், மனைவி இருவரும் வெளியே வேலைக்கு செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தாலும், அவர்கள் குழந்தைகளுக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கவேண்டும். அவர்களுடன் நேரத்தை பயனுள்ளமுறையில் செலவிட்டால்தான், அவர்களிடம் மறைந்திருக்கும் தனித்திறன்களை கண்டறியமுடியும்.

    குழந்தைகள் பெரும்பகுதி நேரத்தை தங்கள் பள்ளி ஆசிரியர்களுடன் செலவிடுகிறார்கள். அதனால் அவர்களது திறமைகளை ஆசிரியர்கள் அறிந்திருப்பார்கள். பெற்றோருக்கும்- குழந்தைகளின் ஆசிரியர்களுக்கும் இடையே மனந்திறந்த உரையாடல் இருந்தால் இருவரும் இணைந்து, குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

    படி.. படி.. என்று கூறி, கல்வியை மட்டும் குழந்தைகளிடம் திணித்தால் அவர்களிடம் இருக்கும் தனித்திறமைகளை அடையாளங்காண முடியாது. படிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டச் செய்யாமல் குழந்தைகளை சுதந்திரமாக அவர்களுக்கு பிடித்த துறைகளில் கவனம் செலுத்தச் சொல்லுங்கள். அதில் எதில் அவர்களுக்கு ஈடுபாடும், செயல் ஊக்கமும் இருக்கிறதோ அதை இனங்கண்டுமேம்படுத்துங்கள். படிப்பைவிட, விளையாட்டுத் துறையில் ஈடுபடும் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

    ‘உனக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை செய்’ என்று முடிவெடுக்கும் வாய்ப்பை குழந்தைகளுக்கு கொடுங்கள். ஒருசில நாட்கள் பயிற்சிக்கு சென்றுவிட்டு அதை தொடர விருப்பம் இல்லை என்றால், கட்டாயப்படுத்தாமல் அதில் இருந்து விலகவும், புதிதாக பிடித்தில் ஈடுபடவும் அனுமதிகொடுங்கள்.

    ஈடுபட்ட உடன் எந்த துறையிலும் வெற்றியும், பதக்கமும் கிடைக்காது. கலந்துகொள்வதற்கான சான்றிதழ் மட்டுமே கிடைத்தாலும், குழந்தைகளை குறைசொல்லாமல், அவர்கள் தொடர்ந்து கலந்துகொள்ள ஊக்கம் கொடுங்கள்.

    வெற்றி பெற்றால் பதக்கமும், பாராட்டும்தான் கிடைக்கும். தோல்வியடைந்தால் சிறந்த அனுபவமும், முழுமையாக தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். அதனால் தோல்வியையும் நேசிக்க குழந்தைகளை பக்குவப்படுத்துங்கள். தோல்வியடைந்தவர்களால்தான் சிறந்த வெற்றியாளர்களாக முடியும்.

    சாதனையாளர்களை உருவாக்க விரும்பும் பெற்றோர்களுக்கு தியாகமும், பொறுமையும் தேவை. குழந்தையை கொண்டு போய் அப்படியே பயிற்சிமையத்தில் சேர்த்துவிட்டு அவர்கள் தங்கள் வேலையை பார்க்க சென்றுவிடக்கூடாது. குழந்தை பயிற்சி பெறும்போது, அவர்களும் உடனிருக்கவேண்டும். கூர்ந்து கவனித்து, அவர்களும் ஓரளவாவது அதை புரிந்துகொண்டு குழந்தைக்கு வழிகாட்டவேண்டும். ஈடுபாடு கொண்ட பெற்றோர்களால்தான் சாதனைக் குழந்தைகளை உருவாக்கமுடியும்.
    தற்போதைய சூழலில் தனிக்குடித்தனம், மற்றும் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் குழந்தைகள் நலம் என்பது சற்று கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாக உள்ளது.
    அக்காலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தனர் குழந்தைகள் வளர்ப்பிலும் நலத்திலும் தாத்தா பாட்டி உடனிருந்தனர். அவர்களின் பராமரிப்பில் குழந்தைகள் நலமுடன் இருந்தனர். தற்போதைய சூழலில் தனிக்குடித்தனம், மற்றும் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய நிலையில் குழந்தைகள் நலம் என்பது சற்று கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாக உள்ளது.

    குழந்தைகள் நலனில் 3 ஆண்டுகள் என்பது மிக முக்கியமாக உள்ள ஆண்டாகும். சிறப்பு கவனம் அவசியமாகும். தடுப்பூசிகள் போடுவதில் கவனம் செலுத்த வேண்டும். சிறு சிறு நோய்களுக்காக கவனம் செலுத்தி சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படாமல் இருக்க தாய்மார்கள் 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

    குழந்தைகள் இருக்கும் அறை அவர்கள் பயன்படுத்தும் துணிகள் ஆகியவை சுகாதாரமாக இருக்க வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க தாணியக் கஞ்சி காய்கறி சாதம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

    பணத்தின் முக்கியத்துவத்தை குழந்தை பருவத்திலேயே கற்றுத்தர வேண்டும். வேலைக்கு செல்லும் பெற்றோராக இருப்பினும் குழந்தைகளுடன் குறைந்தது 3 மணி நேரமாவது செலவிட வேண்டும். புரதச் சத்திற்கும் ஊட்டச்சத்திற்கும் மாவு என்று தனியாக தர வேண்டாம். நாம் தரும் உணவில் பருப்பு வகைகள்,கடலை வகைகள் பயறு வகைகள் உள்ளிட்டவைகளை சேர்த்து தரலாம்.

    குழந்தைகள் நலம் என்றால் உடல் நலத்துடன் மன நலமும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகள் நல்ல மன நலத்துடன் இருக்க பெற்றோர்தான் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். குழந்தைகள் முன் பெற்றோர் சண்டை போடுவது, மோசமாக பேசுவது போன்ற செயல்கள் குழந்தைகளை பாதிக்கும். அதிக செல்லம் கொடுப்பது. அதிகமாக கண்டிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். குழந்தைகளின் நற்செயல்களை ஊக்கப்படுத்த வேண்டும். அடுத்த குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம்.

    தற்போது குண்டான குழந்தைகள் அதாவது குழந்தை பருவத்திலேயே குண்டாக இருக்கும் பிரச்சினை உள்ளது. குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை சரியான அளவில் சரியான நேரத்திற்கு குழந்தைகளுக்கு தர வேண்டும்.

    குழந்தைகள் எடை கூடாமல் இருக்க காலை உணவில் ஓட்ஸ் பால் பழம் தரலாம். குளிர் பானங்களை தவிர்த்து இயற்கை பழ ரசங்களை தரலாம்.
    மதிய உணவில் காய்கறிகள், காய்கறி சூப், சாலட் காய்கறி சாதம், பச்சைக் காய்கறிகள் சேர்க்க வேண்டும்.

    இரவு உணவில் கோதுமை உணவு முளை கட்டிய பயறு உள்ளிட்டவை சேர்க்கலாம். குழந்தைகள் நலமுடன் இருக்க அவர்கள் ஓடி ஆடி விளையாட வேண்டும். அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாட அனுமதிக்க வேண்டும். நடனம் நீச்சல், யோகா போன்ற பயிற்சிகள் செய்ய வைக்கலாம்.

    குழந்தைகள் நலமுடன் இருக்க பெற்றோராகிய நாம் சிறு கவனத்தை அவர்கள் உடல் மற்றும் மன நலத்தில் செலுத்த வேண்டும்.
    குழந்தைகளை விளையாட விடாததால் உடல்திறன் மற்றும் மன வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை விளையாடவிடுவதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.
    வெளியே விளையாடினால் ஏதேனும் பாதிப்பு வந்துவிடும் என்று வீட்டிலேயே பொத்திபொத்தி பாதுகாக்கின்றனர். இதனால், குழந்தைகளின் உடல்திறன் மற்றும் மன வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளை விளையாடவிடுவதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.

    உடல் உழைப்பு இன்மை, ஜங்க் புஃட் காரணமாக நகர்ப்புற குழந்தைகளில் நான்கில் ஒருவர் உடல்பருமனாக உள்ளனர். அதுவும், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில், 26 சதவிகிதம் பேரும் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில், 4.5 சதவிகிதம் பேரும் உடல்பருமனாக உள்ளனர். ஓடியாடி விளையாடும்போது தேவையற்ற கலோரி, கொழுப்பு எரிக்கப்படுகிறது. இதனால், குழந்தைகள் ஃபிட்டாக இருப்பர்.

    விளையாடும்போது மற்ற குழந்தைகளுடன் பழக்கம் ஏற்படுகிறது. இது, கூட்டுறவு மற்றும் சமூகத்துடன் இணைந்து செயல்படும் திறனை வளர்க்க உதவுகிறது. இது, குழந்தையின் படைப்பாற்றலை அதிகரிக்கவும், பிரச்னைகளைச் சமாளிக்கும் திறனை, முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும் உதவுகிறது. குழுவாக விளையாடும்போது பிரச்னை ஏற்பட்டால், அதை சமாளிக்கும் திறனும் அவர்களுக்கு ஏற்படுகிறது. வீட்டிலேயே அடைந்துகிடக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திறன் மிகக் குறைவாகவே இருக்கிறது.

    ‘குழந்தைகள் விளையாடும்போதுதான் அவர்கள் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கிறது’ என்கிறது ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’ ஆய்வு. குழுவாக விளையாடும்போது, குறிப்பிட்ட விஷயத்தில் கவனத்தைச் செலுத்தும் திறன், சமாளிக்கும் திறன், இதற்காக கை, கால், கண்கள் என ஐம்புலன்களையும் ஒருங்கிணைத்து செயல்படும் திறன் மேம்படுகிறது.

    “பள்ளிகளில் விளையாட்டு நேரம் என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது. குறைந்தது 15 நிமிடங்களாவது குழந்தைகளை விளையாட அனுமதிக்கும்போதுதான் அவர்களது கல்வி கற்கும் திறன் மேம்படும்” என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

    ஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.
    ஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.

    * வெற்றி பெறுவதற்கு, குறுக்கு வழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    * தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

    * ஒவ்வொரு பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்துக்கு அதிக நேரமும், எளிதான பாடத்துக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். தொடர்ந்து படிக்காமல், இடையிடையே ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு முறையும் ஈடுபாட்டோடு படிக்க முடியும்.

    * படிக்கும் இடம் முக்கியமானது. அமைதியான இடமாக இருக்க வேண்டும். ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருக்கும் போது, மற்ற புத்தகங்கள் உங்கள் பார்வையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் கவனம் சிதறாமல் ஒரே பாடத்தை படிக்க முடியும்.

    * அதிகாலை படிப்பது நல்லது. அப்போது, உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருக்கும். இது உங்களை படிக்க துõண்டும். படிக்கும் அறையில், கண்ணாடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது கவனத்தை சிதறச் செய்யும். கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி அமர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு, பாசிடிவ் எனர்ஜியை தரும்.

    * படிக்கும் போது, குறிப் பெடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் அனைத்து பாடத்தையும் திரும்ப படிக்க முடியாது. அந்த தருணத்தில், குறிப்பேடு பயன் தரும்.

    * போதிய துõக்கம் அவசியம். இரவு முழுவதும், விழித்திருந்து படிப்பது தவறு. நன்றாக உறங்கினால் தான், அடுத்த நாள் தேர்வை ஒழுங்காக எழுத முடியும்.

    * கேள்விக்கு எப்படி பதிலளிப்பது, என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வர். அப்படி இருக்கும் போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். கையெழுத்து நன்றாக இருப்பது அவசியம்.

    * படிக்கச் சொல்லி தொந்தரவு செய்கிறார்களே என ஒருபோதும் மாணவர்கள் எண்ணக் கூடாது. நீங்கள் படிப்பது, அவர்களுக்காக அல்ல; உங்களுக்காகத்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

    * தேர்வில் எக்காரணம் கொண்டும் மோசடியில் ஈடுபடாதீர். இது உங்கள் வாழ்க்கையை, ஏதாவது ஒரு வழியில் பாதிக்கும்.

    *  உங்கள் மீது நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். நிச்சயம் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

    * தேர்வு முடிந்ததும், அதைப் பற்றி பிற மாணவர்களுடன் விவாதிக்காதீர்கள். இது அடுத்த தேர்வுக்கு தயாராவதை பாதிக்கும். அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் மட்டுமே, எழுதிய தேர்வை பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.
    மாணவச் செல்வங்களே வகுப்பு புறக்கணிப்பும், வேண்டாத விடுமுறையும் இப்போது இன்பம் தருவதாக இருந்தாலும், பின்னாளில் வாழ்வில் வருத்தம் உண்டாக்குவதாக அமைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
    மாணவச் செல்வங்களே... பள்ளி - கல்லூரி வாழ்க்கையைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் காலம்தோறும் மாறக்கூடியது. அதில் வகுப்பு புறக்கணிப்பும், வேண்டாத விடுமுறையும் இப்போது இன்பம் தருவதாக இருந்தாலும், பின்னாளில் வாழ்வில் வருத்தம் உண்டாக்குவதாக அமைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    தொடர்ச்சியான பாடங்களும், பயிற்சிகளும் மாணவர்களான உங்களில் சிலருக்கு சலிப்பைத் தரலாம். இதில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் சிலரும் விதிவிலக்கின்றி அடங்குவர். பாடம் புரியவில்லை என்று சராசரி மாணவர்களும், தெரிந்த பாடம்தானே பிறகு படித்துக் கொள்ளலாம் என்று சிறந்த மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவது உண்டு.

    ‘இன்று அந்த ஆசிரியர்தான் வரவில்லையே ஜாலியாக வெளியே சென்று திரும்பலாம்’ என்று நினைப்பவர்கள் உண்டு. “தலைவர் படம் ரிலீஸ் ஆகிறது, முதல் ஷோ, ஸ்பெஷல் ஷோ பார்க்குறதுதான் கெத்து” என்று வகுப்பை புறக்கணிப்பதும், கூட்டாக சேர்ந்து கொண்டு விடுமுறை எடுத்து பொழுதுபோக்குவதும் சிலருக்கு இன்பமாக தெரிகிறது.

    பள்ளி- கல்லூரி வாழ்க்கையில் கிடைக்கும் சுதந்திரம் சிலருக்கு பட்டாம்பூச்சியாய் மாறிவிட்டதைப்போல உணர்வைத் தரலாம். இப்போது இஷ்டத்திற்கு வகுப்பை ‘கட்’ அடித்துவிட்டு சினிமாவிற்கோ அல்லது வேறு எங்கோ செல்வது பெரிய சாதனையாகக்கூட தெரியலாம். ஆனால் அது எதிர் காலத்தை பாதிக்கிறது என்பது இப்போது புரிவதில்லை.

    உங்களுக்காக எங்கோ உழைப்பைச் செய்து கொண்டிருக்கும் உங்கள் பெற்றோருக்கு இன்று இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் இறுதித் தேர்வு உங்களின் நடத்தையை தேர்வு முடிவாக காட்டும். அது வாழ்க்கைப் பாதையில் பிரதிபலிக்கும்.

    ‘இன்று வாழ்க்கையே சரியில்லை’ என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம், அன்று கல்விப் பருவத்தில் சரியாகப் படிக்காதவர்களாகவும், வகுப்பை புறக்கணித்து இன்பம் தேடியவர்களாகவும்தான் இருப்பார்கள். உங்கள் பெற்றோரோ, உறவினரோ கூட, “நீ நன்றாகப் படி, இல்லாவிட்டால் வாழ்க்கை கஷ்டமாகிவிடும்” என்று உதாரணம் காட்டி பேசுவதை கேள்விப்பட்டிருக்கலாம்.

    உங்களுக்கு அதுபோன்ற சிரமங்கள் ஏற்பட வேண்டாம். அந்தச் சிரமம் வேண்டாமென்றால், பள்ளி-கல்லூரிப் பருவத்தை அலட்சியத்துடன் எண்ணும் பழக்கத்தை நீங்கள் கைவிட வேண்டும். பள்ளி-கல்லூரிப் பருவம் இனிமையை, சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வீணாக்கிவிட்டு பின்னாளில் வருந்தக்கூடாது.

    கல்லூரிப் படிப்பை பொறுத்தவரை, ஒரு செமஸ்டருக்கு இத்தனை விடுமுறை வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை இருக்கும். காரணமற்ற விடுமுறைகளை அனுமதிக்கமாட்டார்கள். தேவையற்ற விடு முறைக்கு அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உண்டு. நீங்கள் அலட்சிய எண்ணத்துடனும், தவறான நடத்தையுடன் வகுப்பு புறக்கணிப்பிலும், தேவையற்ற விடுமுறையிலும் கல்லூரிக் காலத்தை கழித்தால், தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும். கூடுதல் விடுமுறைக்கு, தக்க அபராதம் கட்டி, ‘ஹால்டிக்கெட்’ பெற்றுக்கொள்ளும் விதிமுறை பல்கலைக்கழகங்களில் உண்டு. அதிகமான விடுமுறையால் செமஸ்டர் எழுதும் வாய்ப்பை இழந்த மாணவர்களும் இருக்கிறார்கள்.

    பள்ளி-கல்லூரிப் பருவத்தில் உயர்ந்த லட்சியத்துடன் செயல்பட வேண்டும். வேண்டாத விடுமுறையும், வகுப்பு புறக்கணிப்பும் உங்கள் வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
    இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது.
    இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் எல்லோரின் ‘செல்லப்பிள்ளைகள்’ போல் மாறிவிட்டன. இணைய தகவல்களை அள்ளிக் கொண்டு வருவது முதல், செல்பி, போட்டோக்கள், வீடியோக்கள், விளையாட்டுகள் என அத்தனை வாய்ப்புகளையும் ஸ்மார்ட்போன்கள் வாரி வழங்குகின்றன.

    இதனால் ஸ்மார்ட் போன் வைத்திருப்போரின் சுட்டுவிரலுக்கும் வேலைப்பளு அதிகமாகிவிட்டது. வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம் என்று ஸ்மார்ட் போன்களில் வரும் தகவல்கள், செய்திகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகையர் பற்றிய விமர்சன மீம்ஸ்களை பார்க்கும் ஆர்வம் மக்களிடையே ஆக்கிரமித்து இருப்பதே அதற்கு காரணம்.

    செல்போன் நிறுவனங்களின் வியாபார போட்டிகள், உற்பத்தி அதிகரிப்பு, விலை மலிவு போன்றவற்றின் காரணமாக அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் போன்கள் வலம் வருகின்றன. இப்படி வீடுகள்தோறும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்மார்ட் போன்களால் எந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக பிரச்சினைகளும் கூடவே உள்ளன. குறிப்பாக குழந்தைச் செல்வங்கள், பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர் செல்போன்களில் உள்ள விளையாட்டுகளுக்கு அடிமையாகிப் போகிறார்கள்.

    பெற்றோரின் கைகளில் செல்போனை பார்த்துவிட்டால் போதும். வெடுக்கென பிடுங்கிக் கொண்டு ஓடுவது, பெற்றோருக்கு தெரியாமல் செல்போனை எடுத்துக் கொண்டு தனியிடத்துக்கு சென்று விளையாட்டுகளை பார்ப்பது என்று சிறுவயதினரின் சேட்டைகள் சகஜமாகிவிட்டது. அவ்வாறு தூக்கிக்கொண்டு ஓடும் குழந்தைகளின் கைகளில் இருந்து செல்போன்கள் கீழே விழுந்தும், சில குழந்தைகள் கோபத்தில் செல்போனை தூக்கி எறிந்தும் பெற்றோருக்கு செலவு வைத்துவிடுவதும் உண்டு. தங்களது குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு செல்போனை கொடுத்துவிட்டு அதைப்பார்த்து மகிழும் சில பெற்றோரும் உண்டு. ஆனால் அதுவே, பிள்ளைகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதை ஏனோ அவர்கள் உணருவதில்லை.

    முன்பெல்லாம் சிறுகுழந்தைகள் வீட்டு முற்றங்களில் நன்றாக ஓடி விளையாடுவது உண்டு. உடல் தசைகள் இறுக்கம் கொள்ளவும், அவர்களை திடகாத்திரமானவர்களாக அது மாற்றவும் உதவியது. அதனால்தான் முண்டாசுக் கவிஞன் பாரதி, ‘ஓடி விளையாடு பாப்பா...நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று மழலைகளுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆனால் இன்றைய நிலை ‘செல்லுக்குள் முடங்காதே பாப்பா...நீ செயலிழந்துபோவாய் பாப்பா’ என்று பாடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.



    இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. நகரங்களில் மட்டுமல்ல...கிராமங்களிலும்கூட இந்த நிலை வந்துகொண்டிருக்கிறது. கிராமங்களுக்கே உரித்தான ஓடிப்பிடிக்கும் விளையாட்டு, பம்பரம் சுற்றுதல், கண்ணாமூச்சி ஆட்டம், கில்லி, எறிபந்து, நொண்டியடித்தல், போலீஸ்-திருடன் விளையாட்டு, கோலிக்குண்டு போன்ற விளையாட்டுகள்கூட இந்தக்கால குழந்தைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்டது.

    இதனால் மழலைகளின் உடல் போதிய வலுப்பெறுவதில்லை. சுறுசுறுப்பு குறைந்து, இயல்பான செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். மேலும் செல்போனின் கதிர்வீச்சு குழந்தைகளை எளிதாக தாக்கும். செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. போதிய சுய சிந்தனை, கற்பனைத்திறனை பெறும் சக்தி அவர்களுக்கு குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள், அவர்கள்.

    அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் கடும் போட்டி காரணமாக உற்பத்தி செய்யப்படும் செல்போன்களில் தரமில்லாத பல போன்கள் அவ்வப்போது வெடித்துச் சிதறவும் செய்கிறது. இதனால் உடல்சேதம் மட்டுமல்லாமல் சில சமயங்களில் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுவிடுகிறது. அதற்கு, குழந்தைகளிடம் செல்போன்களை தராமல் இருப்பதே அவர்களது நல்வாழ்வுக்கு நலம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

    இதேபோல் குழந்தைப் பருவத்தை தாண்டி பள்ளி பருவத்தினரும், செல்போன்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருவதும் அதிகரித்து வருகிறது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியவர்கள் செல்போனில் படம் பார்ப்பதிலும், விளையாடுவதிலுமாக இருக்கிறார்கள். இது அவர்களது நல்ல எதிர்காலத்துக்கு அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் முட்டுக்கட்டையாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கு பெற்றோர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். குழந்தைகளின் படிப்பு, எதிர்காலத்தை கருதி அவர்கள் கல்வியில் வெற்றிமகுடம் சூட்டும்வரை செல்போன்களை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பதோடு, தங்களது செல்போன்களையும் அவர்கள் பயன்படுத்தாதவாறு கண்காணிக்கலாம். ஆரோக்கியமானவர்களாக தங்களது மழலைச் செல்வங்கள் உருவாக அவர்களை நான்கு சுவற்றுக்குள் அடைத்துவிடாமல், உடலுக்கு உற்சாகத்தை தரக்கூடிய விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.

    அதோடு பிள்ளைகளுக்கு கற்பனைத்திறன் ஊற்றெடுக்கும் வகையில் நூல்களை படிக்க வைத்தல், கதை, கட்டுரைகளை எழுத பயிற்சி அளித்தல், தனித்திறன்களை வெளிப்படுத்த உறுதுணையாக இருத்தல், பொது அறிவை புகுத்த நூலகங்களுக்கு அனுப்பி வைத்தல், வாழ்வில் ஒழுக்கநெறி கொண்டவர்களாக உருவாக நீதிக்கதைகள், நன்னெறிக்கதைகளை கற்றுவித்தல் ஆகியவற்றில் பெற்றோர்கள் ஈடுபாடு கொள்ள வேண்டும். எதிர்கால இந்தியாவுக்கு தேவை வெறும் அறிவார்ந்தவர்கள் மட்டுமல்ல... ஆரோக்கியம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை கட்டிக்காக்கும் இளைய சமுதாயமே. மொத்தத்தில் ஓடிவிளையாட வேண்டிய வயதில் சின்னஞ்சிறுசுகள் நான்கு சுவற்றுக்குள் முடங்கும் சூழல் முடிவுக்கு வந்தால் நலம்.

    -முக்கூடற்பாசன். 
    பண்டிகைகளுக்கு பெரியவர்களுக்கு புத்தாடை எடுக்கிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு கண்டிப்பாக புத்தாடை எடுத்து விட வேண்டும்.
    பண்டிகைகளுக்கு பெரியவர்களுக்கு புத்தாடை எடுக்கிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு கண்டிப்பாக புத்தாடை எடுத்து விட வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள் வீட்டை தலைகீழாக மாற்றி விடுவர். முன்பு தீபாவளி பண்டிகைக்கு என ஒருசில மாடல்களில்தான் ஆடைகள் வரும். தற்போது ஆண் குழந்தைகளுக்கு என விதவிதமான ஆடைகள் புதிய வடிவங்களுடன் விற்பனைக்கு வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் பல வண்ணச் சேர்க்கையுடன் தனிப்பட்ட இணைப்புகள் கொண்ட ஆடைகள் வருகின்றன. தீபாவளி வரவுகள் என்பது பாரம்பரிய ஆடை, வெஸ்டர்ன், கார்ட்டூன், ஜீன்ஸ், கோட்சூட் என பலவித ரகங்களில் அள்ளி கொள்ளும் வகையில் உள்ளன.

    சுட்டி பசங்க தீபாவளியன்று அணிய பாரம்பரிய ஆடை, பள்ளிகளுக்கு அணிந்து செல்ல வெஸ்டர்ன் என இரண்டு விதமான ஆடைகளை எடுத்து கொள்கின்றனர். குழந்தைகள் ஆசை படுகிறதே என பெரியவர்களும் எவ்வளவு விலை அதிகமாக இருப்பினும் வாங்கி தந்து விடுகின்றனர்.

    பாய்ஸ் எத்னிக் ஆடைகள்

    தீபாவளி என்றாலே வண்ணங்ளுக்கு பஞ்சமில்லை. அதில் குழந்தைகள் ஆடைகள் என்றால் எல்லா வண்ணமும் நன்றாகவே நடனமாடும். எத்னிக் ஆடைகள் எனும் பைஜாமா குர்தா, ஷெர் வாணி, வேட்டி சட்டை போன்றவை பிரதான இடம் பிடிக்கின்றன. இது இந்தியா முழுக்க ஒரே வகையில் அணிய கூடிய ஆடைகளாக இருக்கின்றன.

    வேட்டி சட்டை என்பது தென்னக பகுதியில் அதிகம் விரும்பப்படுகிறது. பைஜாமா குர்தா என்பதில் பேண்ட் பகுதி சுருக்கமான மடிப்புகளுடன், நீளமான குழல் வடிவில், வேட்டி போன்று மடித்து தைக்கப்பட்ட அமைப்பு என்றவாறு வருகிறது. இதன் குர்தா மேல்சட்டை என்பதுதான் அதிக வேலைப்பாடுகளுடன் வருகிறது. இது பருத்தி துணியில் அழகிய எம்பிராய்டரி செய்யப்பட்ட நீளமான குர்தா, குட்டை குர்தா என்ற இரு பிரிவுகள் உள்ளவாறு கிடைக்கின்றன. பார்க்க பரவசமூட்டும் வண்ண கலவையுடன் சற்று பளபளப்பு தன்மையுடன் சிம்பிள் லுக் சூப்பர் டிரஸ் என்றவாறு பைஜாமா குர்தா கிடைக்கின்றன.

    ஷெர்வாணி என்பது ஆடம்பரமான ஆடை வகை, அதுபோல் சற்று கனமான ஆடையும் கூட. தீபாவளி அன்று அணிய பிரம்மாண்டமான ஆடை. அதிக ஜொலிப்பு மற்றும் பளபளப்பும் கூடிய ஷெர்வாணியின் மேல் சட்டை அமைப்பு கற்கள், மணிகள், எம்பிராய்டரி போன்றவையுடன் பிரம்மாண்ட தோற்ற பொலிவுடன் கிடைக்கின்றன. இதில் தீபாவளிக்கு என புதிய வரவுகள் பல வந்துள்ளன. அவற்றின் உருவ அமைப்பு என்பது கீழ் பகுதியில் மாறுபட்ட வெட்டுக்கள் மற்றும் வளைவுகள் உள்ளவாறு கிடைக்கின்றன. சில ஷெர்வாணிகள் உட்புற கனமான துணியமைப்பு இன்றி மெல்லிய துணியுடன் எடை குறைந்த ஷெர்வாணியாகவும் உள்ளன. ஷெர்வாணியின் அதிக வேலைப்பாடு கொண்டவை சற்று விலை கூடுதலாகவே காணப்படுகிறது.

    கார்கோ பேண்ட் கலர்புல் ஷர்ட்

    சுட்டி பசங்க போடும் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் சற்று கடினமான துணியில் செய்த கார்கோ பேண்ட் வருகிறது. இது எண்ணற்ற பாக்கெட், கம்பி வளையம், ஜிப்கள், பொருத்தப்பட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்கோ பேண்ட்க்கு இணைப்பான பிரிண்டட் சட்டைகள் ஒற்றை நிற பின்னணியில் வடிவமைப்பு செய்யப்பட்டு கிடைக்கின்றன. இதற்கு மேல் பகுதியில் அணிய தனிப்பட்ட விஸ்ட் கோட் உள்ளது. கரடுமுரடான அமைப்பும், கலர்புல்லான தோற்ற பொலிவும் இணைந்து பசங்களின் கம்பீரத்தை அதிகரிக்க கூடிய இந்த கார்கோ மற்றும் கலர்புல் ஷர்ட் கோட் ஆடை அதிகம் விரும்பப்படுகிறது.

    இண்டோ- வெஸ்டர்ன் டிரஸ்

    இது இந்திய எத்னிக் போன்றும், அதே நேரம் மாடர்ன் லுக் தரும் வகையில் இரு பிரிவு ஆடை கலப்பாக உள்ளது. இதன் பேண்ட் பகுதி குழல் வடிவில் இறுக பிடிக்கும் வகையிலும், சில மாடல்கள் சுருக்க அமைப்புடன் காணப்படும். மேல் சட்டை என்பது நீளமான மற்றும் குட்டை அமைப்புடன் நீண்ட கைப்பகுதியுடன் ஓர் கம்பீர அமைப்புடன் உருவாக்கம் செய்யப்படும். அதிக தங்க நிற ஜொலிப்புடன் இறுக பற்றும் கழுத்து வடிவமைப்புடன் ஓர் ராயல் தோற்றப் பொலிவை தரும் வகையில் இது உள்ளது. மெத்தென்ற மேல் சட்டை அமைப்பும், மெல்லிய பேண்ட் என்பதும் கலந்த இண்டோ- வெஸ்டர்ன் டிரஸ் அனைத்து விழாக்களுக்கும் அணிய ஏற்றது. 
    குழந்தைகளே நீங்கள் செல்போனில் விளையாடுவதை சந்தோஷமாக நினைக்கிறீர்கள், ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    குட்டீஸ், உங்களுக்கு மிக மிகப் பிடித்த விளையாட்டுப் பொருள் என்றால், அது அம்மாவின் செல்போன்தானே. உங்களைப்போலவே உங்கள் தோழிகளும், நண்பர்களும் அம்மாவின் போன்களில் விளையாடுவதாக பெற்றோர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள். நீங்கள் செல்போனில் விளையாடுவதை சந்தோஷமாக நினைக்கிறீர்கள், ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தெரியுமா?

    செல்போனில் விளையாடும் நீங்கள் ஓடி விளையாட மறந்து வருகிறீர்கள். அதன் மூலம் கிடைக்கும் பயனையும் இழந்து வருகிறீர்கள். கிரிக்கெட், செஸ், கேரம், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற இன்னும் பல பாரம்பரிய விளையாட்டுகள் ஆரோக்கியம் தரக்கூடியவை. ஆனால் இந்த விளையாட்டுகளை செல்போன், கணினியில் விளையாடுவதால் எந்த பயனும் இல்லை. புதையல் எடுத்தல், ஷூட்டிங், குக்கிங், டெம்பிள்ரன், ரேஸ் என செல்போனில் நீங்கள் விளையாடும் அத்தனை விளையாட்டுகளும் சுவாரஸ்யமானவைதான். அவை உங்கள் மூளை வளர்ச்சியைத் தூண்டும் வேகத்தைப்போலவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வேகமும் அதிகமாக இருக்கிறது.

    “குழந்தைகளின் மூளை வளர்ச்சி, முதல் மூன்று வயது வரை வேகமாக இருக்கும் இருக்கும்.. அப்போது மூளையைத் தூண்டிவிடும் விளையாட்டுகளை விளையாடும் போது குழந்தைகளின் கற்பனைத்திறன், கூர்ந்து கவனிக்கும் திறன் மேம்பட்டுப் படைப்பாளியாக மாறுவார்கள். ஆனால், டிவி, கணினி, செல்போன் போன்ற சாதனங்கள், குழந்தைகளை முடக்கினால் ஒரு ரோபோ போல உருவாகி எதிர்காலத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும், பழக வேண்டும் எனத் தெரியாமல் தவறான முடிவு எடுப்பவர்களாக மாறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்” என்று நிபுணர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.



    கணினி மற்றும் போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு முதலில் ஏற்படுவது பார்வைக் கோளாறுதான். தொடர்ச்சியாக திரையைப் பார்ப்பதால் கண் எரிச்சல், தலைவலி ஏற்படும். இமைக்காமல் விளையாடுவதே இதற்கு காரணமாகும். சிறுவயதில் கண்ணாடி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு செல்போன் விளையாட்டுகளே முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல காதுகளையும் வெகுவாகப் பாதிக்கிறது.

    விளையாடும்போது ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும். எலும்புகளின் பலம் குறைந்து எலும்பு தேய்மானம், முதுகு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அது உங்கள் கவனத்தை இழுத்து மற்றவற்றில் உங்கள் மனதை ஈடுபடாத மனச்சிதைவை உண்டாக்குகிறது, நட்பை பாழாக்குகிறது, உறவுகளையும் சிதைக்கிறது. இன்னும் பல ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. செல்போன் கதிர்வீச்சுகள் இதயம், மூளை, சிறுநீரகத்தை பாதிப்பதாக அறிவுறுத்தப்படுகிறது.

    செல்போன் விளையாட்டுகளின் தோல்வியும், அம்மா போனை வாங்கிக் கொண்டால் வரும் ஏக்கமும், கோபமும், நாளைடைவில் மன பாதிப்பை உருவாக்குகிறது. அது தனிமைப்படவும், தன்னம்பிக்கை இழந்த மனிதராக நீங்கள் வளரவும் காரணமாக அமைகிறது. இரவில் விளையாடுவதால் தூக்கம் கெடுகிறது. அது மறுநாள் பள்ளிப்பாடங்களை எழுதுவது படிப்பது, பள்ளியில் பாடங்கள் கவனிப்பது போன்ற அனைத்தையும் பாதிக்கிறது. இதுபோன்ற தொடர்பாதிப்புகளால் கண்ணுக்குத் தெரியாமலே உங்கள் எதிர்காலம் பாழாகிறது.

    இப்படி பல வழிகளிலும் பாதிப்பை உருவாக்கும் செல்போன்களையும், செல்போன் விளையாட்டுகளையும் ஒதுக்கி வைப்பது புத்திசாலித்தனமாகும். நீங்கள் சமர்த்துக்குட்டி, இனி அதிகமாக செல்போனில் விளையாட மாட்டீர்கள்தானே!
    குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
    குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே! குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என மருத்துவத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    1. குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாய் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.

    2. சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.

    3. இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு இனிப்பு வகையறாக்களை வழங்கி வருவதே சிறப்பானது.

    4. அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. எப்போதும் ஏதேனும் கொறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான மதிய உணவையோ, இரவு உணவையோ தேவையான அளவு சாப்பிட மறுக்கும்.  வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை. குறைந்தபட்சம் குழந்தைகளிடமிருந்து அவற்றை முழுமையாய் மறையுங்கள்.



    5. இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

    6. பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதனால் உங்கள் குழந்தையை திட்டாதீர்கள்.

    7. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதையும், பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

    8. ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். எனினும், எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தாதீர்கள்.

    9. குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.

    சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். 
    தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுக்க வைப்பதில் என்னென்ன தவறுகள் இருக்கின்றன எனப் பார்க்கலாம்.
    தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுக்க வைப்பதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

    * 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.

    * ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.

    * குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். இது சிறந்த முறை எனலாம்.

    * கட்டிலில் படுக்க வைக்கும்போது, சமதளமான விரிப்பில் விரித்து, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

    * தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும்.

    * ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.



    * குழந்தை குப்புறப் படுக்காமல் மல்லாக்கத் தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.

    * குண்டாக இருப்பவர்கள் யாரும் குழந்தைக்கு அருகே படுக்க கூடாது.

    * ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகையான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.

    எந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம்

    * 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.

    * அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லது. அல்லது அதே அறையில் வேறு இடத்தில் தூங்க வைக்கலாம்.

    * ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.

    * நீண்ட நாட்கள் பெற்றோரின் இடையில் தூங்கும் குழந்தைகள், பெற்றோரை சார்ந்தே வாழவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறார்கள்.
    குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.
    குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும். நம் குழந்தைகள் நம்மைப் பார்த்தே வளர்கிறார்கள். நம்மிடம் சேமிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களிடமும் அந்தக் குணம் வரும். எனவே, குழந்தைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைச் சிறுவயது முதலே கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.

    1. கடைக்குச் சென்றால், குழந்தை கேட்கிறது என்று கண்களில் பட்டதையெல்லாத்தையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பொறுமையாக உணர்த்த வேண்டும். அதன்பின் அந்தப் பொருள் அவசியமா இல்லையா என்பதைக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லுங்கள்.

    2. சிறுசேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ, அல்லது அவர்களுக்குப் புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதியவையுங்கள்.

    3. சேமிப்பு என்பது காசு பணம் சேமிப்பது மட்டுமல்ல. எந்தப் பொருளானாலும் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. பென்சில், ரப்பர் என எந்தப் பொருளை வாங்கினாலும், அதை முழுவதுமாக உபயோகித்த பின்னரே, அடுத்து வாங்க வேண்டும் என்ற உறுதியைக் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்

    4. குழந்தையின் பிறந்தநாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்

    5. பாக்கெட் மணி கலாசாரத்துக்குப் பதில், சேவிங்க்ஸ் மணி கலாச்சாரத்துக்குக் குழந்தையைப் பழக்குங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட வேண்டும் எனச் சொல்லி, மாதம் ஒருமுறை சேமித்த பணத்தைக் குழந்தையைவிட்டே எண்ணிப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.

    6. குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.  

    7. சாக்லேட், பிஸ்கட் என எதுவானாலும் தேவையானதை மட்டுமே எடுத்துச் சாப்பிட பழக்குங்கள். மொத்த பாக்கெட்டையும் கையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைக்க கற்றுக்கொடுக்கலாம்  

    8. குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் பிறந்த நாளுக்கு, குழந்தை உண்டியலில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியில் சிறு பரிசை வாங்கிக்கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொள்ளுங்க. அந்தப் பரிசை உறவினர்கள், நண்பர்களிடம் 'என் மகள் / மகன் சேமிப்பில் வாங்கித்தந்தது' எனப் பெருமையாகச் சொல்லுங்கள்.

    9. குழந்தைகள், மற்றவர்களுக்குப் பரிசு அளிக்க விரும்பினால், உண்டியலைப் பரிசளிக்க ஊக்கம் அளியுங்கள். இது, அவர்களின் மனதில் சேமிப்புக்கான முக்கியத்துவத்தை உணரவைக்கும்.
    ×