என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசியமாக ஓடிப்போய் திருமணம் செய்வது ஒரு பேஷன்போல் ஆகிவிட்டது. அதன் பின்விளைவுகள் தெரியாமல் இளமை வேகத்தில், ‘அதையும் அனுபவித்து பார்த்துவிடலாமே!’ என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படத்தான் செய்கிறது.
திருமணம் முடிந்த பின்புதான் குடும்ப பிரச்சினைகள் உருவாகும் என்றில்லை. திருமணத்திற்கு முன்பேயும் பிரச்சினைகள் தொடங்கிவிடுகின்றன. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு கசப்பு உருவாகி, அது திருமணம் என்ற நிலையை அடையாமலே சில பந்தங்கள் நின்றுபோய்விடுகிறது. ஒருசில இளைஞர்களும், இளம்பெண்களும் திருமணத்திற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, திருமணத்திற்கு முந்தைய நாள் பிடித்தமானவர்களோடு ஓடிப்போய்விடுவதும் நடக்கிறது. பெரும்பாலான ஜோடிகள் தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உருவானதுமே, தங்களை பிரித்துவிடுவார்கள் என்று பயந்து சொல்லிக்கொள்ளாமலே ஓடிப்போய் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள்.
குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசியமாக ஓடிப்போய் திருமணம் செய்வது ஒரு பேஷன்போல் ஆகிவிட்டது. அதன் பின்விளைவுகள் தெரியாமல் இளமை வேகத்தில், ‘அதையும் அனுபவித்து பார்த்துவிடலாமே!’ என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் பெற்று வளர்த்த பெற்றோரை, பிள்ளைகள் பெருமைப்படுத்த வேண்டிய முக்கிய தருணமாக திருமணத்தை சமூகம் பார்க்கிறது. தனது மகனோ, மகளோ தனக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ளும்போது, தமது கவுரவத்திற்குரிய வாய்ப்பு அதன் மூலம் பறிபோகிறது என்றுதான் பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகிறார்கள்.
பெற்றோருக்கு தெரியாமல் சில ஜோடிகள் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள என்ன காரணம்?
“எங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு பிரச்சினைகள் வலுப்பதால்தான், வீட்டைவிட்டு ஓடிப்போகிறோம். என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறும்போது, தப்பித்து செல்வது மட்டுமே தெரிந்த வழியாக இருக்கிறது. அதனால்தான் அந்த வழியை தேர்வு செய்கிறோம்” என்கிறார்கள், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட ஜோடிகள்.
ஆனால் இதில் இருக்கும் உண்மை ஒன்றை ஓடிப்போகும் ஜோடிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். பெற்றோர்களையே சமாளிக்கத் தெரியாமல் தப்பி ஓடும் இவர்கள், எதிர்காலத்தில் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்வார்கள்! எதிர்காலத்தில் இவர்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஓடி ஒளியத்தானே விரும்புவார்கள். பிரச்சினைகளை எதிர்கொண்டு வெல்லும் வெற்றிகரமான தம்பதிகளாக இவர்களால் மாற முடியாது.
பல்வேறு விதமான மனிதர்களை கொண்டதுதான் இந்த சமூகம். இந்த சமூகத்தின் சூழ்நிலைகளும், எண்ண ஓட்டங்களும், கருத்துக்களும் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். திருமணத்தை அன்றும் இன்றும் இந்த சமூகம் ஒரே மாதிரிதான் பார்க்கிறது. தங்கள் மரபுரீதியாகத்தான் திருமணம் நடக்கவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது.
பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைப்பதை பெற்றோர்கள் கடமையாக மட்டுமல்ல உரிமையாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். நேற்று வந்த காதல் அந்த உரிமையை அவர்களிடமிருந்து பறித்துவிடுவதாக கருதுகிறார்கள். திருமணக் கனவு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது பெற்றோர் களுக்கும் உண்டு. அதை பற்றிய கவுரவ கனவு பல வருடங்களாக அவர்களிடம் இருந்துகொண்டிருக்கும். தங்கள் மகன் அல்லது மகள் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும்போது பல வருட கனவும், கவுரவமும் கலைந்துபோய்விட்டதாக கருதுகிறார்கள்.
திருமணத்தில் பெற்றோருக்கு மட்டுமல்ல, உறவினர்களுக்கும் கனவு இருக்கிறது. அதனால்தான் தன்னுடன் இருக்கும் உறவுகளையும் கவுரவப்படுத்தும் விதத்தில் இந்தியத் திருமணங்களை அமைத்திருக்கிறார்கள். திருமணத்தின்போது நடக்கும் சம்பிரதாயங்கள், வழிமுறைகள் அனைத்தும் உறவினர்களையும் மகிழ்விக்கும் விதமாகவே இருக்கும். அப்படிப்பட்ட பாதுகாப்பு நிறைந்த பாரம்பரியத்தை உதறிவிட்டு ஓடுவது நல்ல தொடக்கம் அல்ல!
இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் பலர் குறிப்பிட்ட காலமே தாக்குப்பிடிக்கிறார்கள். பின்பு திரும்பவும் பிறந்த வீட்டிற்கு வருகிறார்கள். தங்களை மன்னித்து திரும்ப ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் திரும்புகிறார்கள். என்ன செய்தாலும் பெற்றோர்கள் மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்ற வறட்டு தைரியம், சிலரை ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள தூண்டுகிறது.
காதலித்து திருமணம் செய்து கொள்வதில் தவறு இல்லை. ஆனால் அந்த திருமணம் சமூக அந்தஸ்தை பாதுகாக்க கூடியதாக இருக்கவேண்டும். ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதில் ஒரு திரில் இருப்பதாக கருதி, அதை செய்யத் துணியக்கூடாது. அதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறது என்று அவசரப்படாமல் சிந்திக்கவேண்டும். முரட்டு தைரியத்துடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அதன் பின்னால் இருக்கும் பிரச்சினைகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஓடிப்போகும் தம்பதிகளை விட்டு அவர்களது வாழ்க்கையும் - நிம்மதியும் ஓடிப்போய்விடும். வாழ்க்கை ஓடாமல் இருக்க பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசியமாக ஓடிப்போய் திருமணம் செய்வது ஒரு பேஷன்போல் ஆகிவிட்டது. அதன் பின்விளைவுகள் தெரியாமல் இளமை வேகத்தில், ‘அதையும் அனுபவித்து பார்த்துவிடலாமே!’ என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் பெற்று வளர்த்த பெற்றோரை, பிள்ளைகள் பெருமைப்படுத்த வேண்டிய முக்கிய தருணமாக திருமணத்தை சமூகம் பார்க்கிறது. தனது மகனோ, மகளோ தனக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ளும்போது, தமது கவுரவத்திற்குரிய வாய்ப்பு அதன் மூலம் பறிபோகிறது என்றுதான் பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகிறார்கள்.
பெற்றோருக்கு தெரியாமல் சில ஜோடிகள் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள என்ன காரணம்?
“எங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு பிரச்சினைகள் வலுப்பதால்தான், வீட்டைவிட்டு ஓடிப்போகிறோம். என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறும்போது, தப்பித்து செல்வது மட்டுமே தெரிந்த வழியாக இருக்கிறது. அதனால்தான் அந்த வழியை தேர்வு செய்கிறோம்” என்கிறார்கள், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட ஜோடிகள்.
ஆனால் இதில் இருக்கும் உண்மை ஒன்றை ஓடிப்போகும் ஜோடிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். பெற்றோர்களையே சமாளிக்கத் தெரியாமல் தப்பி ஓடும் இவர்கள், எதிர்காலத்தில் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்வார்கள்! எதிர்காலத்தில் இவர்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஓடி ஒளியத்தானே விரும்புவார்கள். பிரச்சினைகளை எதிர்கொண்டு வெல்லும் வெற்றிகரமான தம்பதிகளாக இவர்களால் மாற முடியாது.
பல்வேறு விதமான மனிதர்களை கொண்டதுதான் இந்த சமூகம். இந்த சமூகத்தின் சூழ்நிலைகளும், எண்ண ஓட்டங்களும், கருத்துக்களும் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். திருமணத்தை அன்றும் இன்றும் இந்த சமூகம் ஒரே மாதிரிதான் பார்க்கிறது. தங்கள் மரபுரீதியாகத்தான் திருமணம் நடக்கவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது.
பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைப்பதை பெற்றோர்கள் கடமையாக மட்டுமல்ல உரிமையாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். நேற்று வந்த காதல் அந்த உரிமையை அவர்களிடமிருந்து பறித்துவிடுவதாக கருதுகிறார்கள். திருமணக் கனவு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது பெற்றோர் களுக்கும் உண்டு. அதை பற்றிய கவுரவ கனவு பல வருடங்களாக அவர்களிடம் இருந்துகொண்டிருக்கும். தங்கள் மகன் அல்லது மகள் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும்போது பல வருட கனவும், கவுரவமும் கலைந்துபோய்விட்டதாக கருதுகிறார்கள்.
திருமணத்தில் பெற்றோருக்கு மட்டுமல்ல, உறவினர்களுக்கும் கனவு இருக்கிறது. அதனால்தான் தன்னுடன் இருக்கும் உறவுகளையும் கவுரவப்படுத்தும் விதத்தில் இந்தியத் திருமணங்களை அமைத்திருக்கிறார்கள். திருமணத்தின்போது நடக்கும் சம்பிரதாயங்கள், வழிமுறைகள் அனைத்தும் உறவினர்களையும் மகிழ்விக்கும் விதமாகவே இருக்கும். அப்படிப்பட்ட பாதுகாப்பு நிறைந்த பாரம்பரியத்தை உதறிவிட்டு ஓடுவது நல்ல தொடக்கம் அல்ல!
இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் பலர் குறிப்பிட்ட காலமே தாக்குப்பிடிக்கிறார்கள். பின்பு திரும்பவும் பிறந்த வீட்டிற்கு வருகிறார்கள். தங்களை மன்னித்து திரும்ப ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் திரும்புகிறார்கள். என்ன செய்தாலும் பெற்றோர்கள் மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்ற வறட்டு தைரியம், சிலரை ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள தூண்டுகிறது.
காதலித்து திருமணம் செய்து கொள்வதில் தவறு இல்லை. ஆனால் அந்த திருமணம் சமூக அந்தஸ்தை பாதுகாக்க கூடியதாக இருக்கவேண்டும். ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதில் ஒரு திரில் இருப்பதாக கருதி, அதை செய்யத் துணியக்கூடாது. அதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறது என்று அவசரப்படாமல் சிந்திக்கவேண்டும். முரட்டு தைரியத்துடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அதன் பின்னால் இருக்கும் பிரச்சினைகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஓடிப்போகும் தம்பதிகளை விட்டு அவர்களது வாழ்க்கையும் - நிம்மதியும் ஓடிப்போய்விடும். வாழ்க்கை ஓடாமல் இருக்க பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.
2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.
3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.
5. அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.
6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.
7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.
1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.
2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.
3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.
5. அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.
6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.
7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.
கேழ்வரகு மாவில் கூழ், அடை, புட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேழ்வரகு மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 1 கப்,
வேர்க்கடலை - 1/4 கப்,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தலா 1 கைப்பிடி,

செய்முறை :
முருங்கைக்கீரை, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கலந்த மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் மாவை எடுத்து பக்கோடாவாக கிள்ளி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
கேழ்வரகு மாவு - 1 கப்,
வேர்க்கடலை - 1/4 கப்,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தலா 1 கைப்பிடி,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
முருங்கைக்கீரை, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கலந்த மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் மாவை எடுத்து பக்கோடாவாக கிள்ளி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவது புருவங்கள். புருவங்களின் அழகை பாதுகாக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே மிகவும் நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் நாளடைவில் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வாக்சிங் முறையில் புருவங்களை நீக்ககூடாது சிலர் பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் உண்டு.
இந்த முறை மிகவும் ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது மிகவும் அடர்த்தியாக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வளரும். எனவே இவ்வாறு செய்யகூடாது. புருவங்கள் நரைத் திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காயவைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐப்ரோபென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது மிகவும் அழகாக, இயற்கையாக இருக்கும்.
கண்களுக்கு அடிக்கடி ஐபேட் உபயோகிக்கலாம். இது கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும், புருவங்களின் சீராக வளர்வதற்கும் உதவும். புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகவும் சிறந்தவை. அவற்றை சூடுபடுத்தாமல் அப்படியே மசாஜ் செய்ய உபயோகிக்க வேண்டும்.
இந்த முறை மிகவும் ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது மிகவும் அடர்த்தியாக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வளரும். எனவே இவ்வாறு செய்யகூடாது. புருவங்கள் நரைத் திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காயவைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐப்ரோபென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது மிகவும் அழகாக, இயற்கையாக இருக்கும்.
கண்களுக்கு அடிக்கடி ஐபேட் உபயோகிக்கலாம். இது கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும், புருவங்களின் சீராக வளர்வதற்கும் உதவும். புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகவும் சிறந்தவை. அவற்றை சூடுபடுத்தாமல் அப்படியே மசாஜ் செய்ய உபயோகிக்க வேண்டும்.
தம்பதியர்கள் எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும்.
தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.
இந்த 28 நாளில் முதல் 4 - 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.
இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம். இந்த கருமுட்டை 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.
உங்களுக்கு எப்போது பீரியட் (மாதவிலக்கு) தொடங்குகிறது எனக் காலண்டரில் குறித்து வைக்கப் பழகி கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.
எந்த நாளில் மாதவிலக்கு வருகிறது எனத் தெரிந்து, குறித்து வைத்தால்தான் உங்களால் கருமுட்டை வெளிவரும் நாளை சரியாக கணக்கிட முடியும்.
பல பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரும். சிலருக்கு 30 அல்லது 34 நாட்களுக்கு ஒருமுறை கூட வரலாம். பெண்களின் உடல்நிலை பொருத்து மாறுப்படும்.

உதாரணமாக,
உங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி மாதவிலக்கு முதல் நாளாகத் தொடங்கி இருந்தால், அடுத்த மாதவிலக்கு உங்களுக்கு டிசம்பர் 29-ம் தேதியில் மாதவிலக்கு வரும் என்றால் அந்த தேதியும் மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கான மாதவிலக்குக்கான காலகட்டம் (மென்சுரல் சைக்கிள்). உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி, 28 நாட்களுக்கு ஒரு முறை.
கருமுட்டை எப்போது வெளிவரும் என்றால், அடுத்த மாதவிலக்கு தொடங்கும் முன்னராக 2 வாரத்துக்கு முன்பு கருமுட்டை வெளிவரும்.
உங்களது மாதவிலக்கு சைக்கிள் 28 நாட்களுக்கு ஒருமுறை என்றால், கருமுட்டை வெளிவரும் நாள் 14-வது நாள்.
28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 14-ம் நாள் கருமுட்டை வரும்
30 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 16-ம் நாள் கருமுட்டை வரும்
34 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 20-ம் நாள் கருமுட்டை வரும்
இந்த கருமுட்டை வெளிவரும் நாட்களில், அதற்கு முன் நாளன்று, உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.
இதெல்லாம் சீராக மாதவிலக்கு வருபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் எளிதாகக் கணக்கிட்டு கொள்ளலாம்.
பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.
இந்த 28 நாளில் முதல் 4 - 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.
இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம். இந்த கருமுட்டை 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.
உங்களுக்கு எப்போது பீரியட் (மாதவிலக்கு) தொடங்குகிறது எனக் காலண்டரில் குறித்து வைக்கப் பழகி கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.
எந்த நாளில் மாதவிலக்கு வருகிறது எனத் தெரிந்து, குறித்து வைத்தால்தான் உங்களால் கருமுட்டை வெளிவரும் நாளை சரியாக கணக்கிட முடியும்.
பல பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரும். சிலருக்கு 30 அல்லது 34 நாட்களுக்கு ஒருமுறை கூட வரலாம். பெண்களின் உடல்நிலை பொருத்து மாறுப்படும்.

உதாரணமாக,
உங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி மாதவிலக்கு முதல் நாளாகத் தொடங்கி இருந்தால், அடுத்த மாதவிலக்கு உங்களுக்கு டிசம்பர் 29-ம் தேதியில் மாதவிலக்கு வரும் என்றால் அந்த தேதியும் மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கான மாதவிலக்குக்கான காலகட்டம் (மென்சுரல் சைக்கிள்). உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி, 28 நாட்களுக்கு ஒரு முறை.
கருமுட்டை எப்போது வெளிவரும் என்றால், அடுத்த மாதவிலக்கு தொடங்கும் முன்னராக 2 வாரத்துக்கு முன்பு கருமுட்டை வெளிவரும்.
உங்களது மாதவிலக்கு சைக்கிள் 28 நாட்களுக்கு ஒருமுறை என்றால், கருமுட்டை வெளிவரும் நாள் 14-வது நாள்.
28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 14-ம் நாள் கருமுட்டை வரும்
30 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 16-ம் நாள் கருமுட்டை வரும்
34 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 20-ம் நாள் கருமுட்டை வரும்
இந்த கருமுட்டை வெளிவரும் நாட்களில், அதற்கு முன் நாளன்று, உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.
இதெல்லாம் சீராக மாதவிலக்கு வருபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் எளிதாகக் கணக்கிட்டு கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் நல்ல பலனை காணலாம். இன்று ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
புதினா - 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை :
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிக்சியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
புதினா - 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - சிறிதளவு

செய்முறை :
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிக்சியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டிய ஜூசுடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து பருகவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
இந்த ஸ்விஸ் பந்து பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு தண்டு வலிமை அடையும். இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும்.
தொப்பையை குறைக்க நிறைய பயிற்சிகள் வந்தாலும் ஒரு சில பயிற்சிகள் தான் நல்ல பலனை தருகின்றன. அவைகளில் மிக முக்கியமானது ஸ்விஸ் பந்து பயிற்சி. இந்த பயிற்சியை செய்வது மிகவும் எளிமையானது.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பது உறுதி..இந்த பயிற்சி செய்ய முதலில் சுவற்றிற்கும் உங்களுக்கும் இடையே 2 அடி இடைவெளி இருக்கும் படி பின்புறமாக படத்தில் உள்ளபடி திரும்பி நிற்கவும்.
ஸ்விஸ் பந்தை உங்கள் முதுகு பக்கத்திற்கும், சுவற்றிற்கும் இடையே வைத்து கொள்ளவும். முதுகிற்கும், சுவற்றிற்கும் ஸ்விஸ் பந்து பேலன்சாக இருக்கும் படிசெய்யவும். இப்போது மெதுவாக கீழே இறங்கி சேரில் அமருவது போல் ஸ்விஸ் பந்துக்கு இணையாக அமர வேண்டும்.
பின்னர் அதே போல் ஸ்விஸ் பந்தை மேலே உருட்டிய படி நிற்கவும். படத்தில் உள்ளபடி ஒவ்வொரு முறையும் உட்கார்ந்து எழ வேண்டும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக 25 முதல் 30 முறை செய்யலாம்.
இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் உங்கள் இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற சதை படிப்படியாக குறைந்திருப்பதை பார்க்கலாம். இந்த பயிற்சி செய்வதால் முதுகு தண்டு வலிமை அடையும்.
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பது உறுதி..இந்த பயிற்சி செய்ய முதலில் சுவற்றிற்கும் உங்களுக்கும் இடையே 2 அடி இடைவெளி இருக்கும் படி பின்புறமாக படத்தில் உள்ளபடி திரும்பி நிற்கவும்.
ஸ்விஸ் பந்தை உங்கள் முதுகு பக்கத்திற்கும், சுவற்றிற்கும் இடையே வைத்து கொள்ளவும். முதுகிற்கும், சுவற்றிற்கும் ஸ்விஸ் பந்து பேலன்சாக இருக்கும் படிசெய்யவும். இப்போது மெதுவாக கீழே இறங்கி சேரில் அமருவது போல் ஸ்விஸ் பந்துக்கு இணையாக அமர வேண்டும்.
பின்னர் அதே போல் ஸ்விஸ் பந்தை மேலே உருட்டிய படி நிற்கவும். படத்தில் உள்ளபடி ஒவ்வொரு முறையும் உட்கார்ந்து எழ வேண்டும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக 25 முதல் 30 முறை செய்யலாம்.
இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் உங்கள் இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற சதை படிப்படியாக குறைந்திருப்பதை பார்க்கலாம். இந்த பயிற்சி செய்வதால் முதுகு தண்டு வலிமை அடையும்.
அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள்.
அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள். ஆனால், இதுதவிர ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது.
அலர்ஜிகல் மற்றும் நான் அலர்ஜிகல் என்று கூறப்படுகிறது. அலர்ஜி, காற்று தூசு, வெளியில் உள்ள காற்று மாசு, அதிக குளிர்ச்சி இதுதவிர அடிக்கடி சளி ஏற்படுதல், மூக்கொழுகுதல், அடுக்குத் தும்மல், சைனஸ் மற்றும் மரபியல் காரணம் போன்றவையும் இதற்கான முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது.
பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம். சைனஸ் மற்றும் அதிக சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கும் டான்சில் எனப்படும் தொண்டையில் வளரும் சதையின் அளவைப் பொறுத்தும் ஆஸ்துமா வருகிறது. இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.
பொதுவாக மிகச்சிறிய வயதிலேயே ஆஸ்துமா ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மரபியல் மற்றும் அலர்ஜியே முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால், இது குழந்தையின் 6 வயதுக்குள் குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு 6 வயதிற்கு மேல் தொடருமானால் அது அவர்களின் மரபியலின் தீவிரமான காரணமாகவும் இருக்கலாம். இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் மாசே ஆகும்.
அலர்ஜிகல் மற்றும் நான் அலர்ஜிகல் என்று கூறப்படுகிறது. அலர்ஜி, காற்று தூசு, வெளியில் உள்ள காற்று மாசு, அதிக குளிர்ச்சி இதுதவிர அடிக்கடி சளி ஏற்படுதல், மூக்கொழுகுதல், அடுக்குத் தும்மல், சைனஸ் மற்றும் மரபியல் காரணம் போன்றவையும் இதற்கான முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது.
பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம். சைனஸ் மற்றும் அதிக சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கும் டான்சில் எனப்படும் தொண்டையில் வளரும் சதையின் அளவைப் பொறுத்தும் ஆஸ்துமா வருகிறது. இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.
பொதுவாக மிகச்சிறிய வயதிலேயே ஆஸ்துமா ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மரபியல் மற்றும் அலர்ஜியே முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால், இது குழந்தையின் 6 வயதுக்குள் குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு 6 வயதிற்கு மேல் தொடருமானால் அது அவர்களின் மரபியலின் தீவிரமான காரணமாகவும் இருக்கலாம். இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் மாசே ஆகும்.
மனஅழுத்தம், ஓய்வின்றி பணி செய்தல், உடற்பயிற்சியின்மை, உணவு கட்டுப்பாடு இன்மை, தீய பழக்கங்கள் ஆகியவை நிம்மதியான வாழ்வை கெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
மனிதன் நலமாக வாழ நோய் நொடியின்றி மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் இன்றி நலமாக இருக்க வேண்டும். இன்றைய உலகு மிகவும் வேகமானதாக இருக்கின்றது. எதற்கெடுத்தாலும் அவசரம். இத்தகைய சூழலில் இருந்து கொஞ்சம் விடுபட்டு மனிதன் மாறவேண்டும். மனஅழுத்தம், ஓய்வின்றி பணி செய்தல், உடற்பயிற்சியின்மை, உணவு கட்டுப்பாடு இன்மை, தீய பழக்கங்கள் ஆகியவை நிம்மதியான வாழ்வை கெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
மன அழுத்தம்
சிறு சிறு விஷயங்களைப் பெரிதுபடுத்தி தேவையில்லாமல் கவலைப்பட்டு மனஅமைதியைப் பாதிக்க வைப்பதால் வருகின்ற மனஅழுத்தம் நிம்மதியைக் குலைக்கின்றது. மன அழுத்தத்தினால் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. இரத்த அழுத்தம் கூடுகின்றது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்த தியானம் மற்றும் யோகா உதவுகின்றன.
யோகாவினால் ஏற்படக்கூடிய நன்மை மனித சமுதாயத்திற்கு மிகவும் முக் கியம். யோகா மனதையும், உடலையும் அமைதியாக்கு கிறது. மனத்தாக்கத்திலிருந்து மனிதனை விடுபட வைக்கிறது. உன்னதமான நீண்ட நல்வாழ் விற்கு வழிவகுக்கிறது. தினமும் சிறுது நேரம் யோகா மற்றும் தியானம் தவறாமல் செய்துவந் தால் மன அழுத்தம் குறைந்து நிச்சயம் நிம்மதி உண்டாகும்.
எத்தகைய பணியில் இருந்தாலும் மனிதனுக்கு ஓய்வு மிகவும் அவசியம். உடல் உறுப்புகளுக்கும், மூளைக்கும் ஓய்வு தேவை. சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் குறைந்தது 30 நிமிடம் ஓய்வு புத்துணர்ச்சியை தர வல்லது.
உடற்பயிற்சி
காலை நேர நடை பயணம், மிதமான உடற்பயிற்சி நாள் முழுவதும் சுறுசுறுப்போடு பணி ஆற்ற உறுதுணையாக அமைகின்றது. சர்க்கரை சத்து அதிகம் உள்ளவர்கள் காலை நடைபயணம் அவசியம் மேற்கொள்ள வேண்டும். ரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரையை கட்டுப்படுத்த இத்தகைய நடைபயணம் மற்றும் உடற்பயிற்சி உதவுகின்றது.
நடைபயிற்சியை காலையில் செய்ய முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். வெளியில் சென்று பூங்கா, சாலை ஓரம் மற்றும் மைதானங்களில் நடைபயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே அவரவர் வசதிக்கேற்ப சாதனங்கள் மூலம் பயிற்சி மேற் கொள்ளலாம். நடை மற்றும் உடற்பயிற்சி உடல் பருமனை குறைக்க மிகவும் உதவுகின்றன. ஆரம்பத்தில் காலை வேளையில் நடப்பது மிகவும் சிரமமாக தெரியலாம். அதுவே கொஞ்சம் பழகி விட்டால் தினமும் காலைக்கடன்கள் மாதிரி ஒரு நாள் நடைபயிற்சி இல்லா விட்டால் எதையே பறிகொடுத்த மாதிரி தோன்றும்.
நமது முன்னோர்கள் நம்மை நடக்க வைக்க கோவில்கள் கட்டி வலம் வரச் செய்தனர். மலைக்கோவில்களில் கிரிவலம், நடைபயணமாக செல்லுதல் ஆகியவை நமது உடல் ஆரோக்கியமாக அமையச் செய்த ஏற்பாடுகளாகும். ஆக நடை மற்றும் மிதமான உடற்பயிற்சி சிறந்த ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவை.
உணவுக்கட்டுப்பாடு
உண்டு சுருங்குதல் வெண்டிற்கு அழகு எனது முதுமொழி. உண்டி சுருங்குதல் வெண்டிற்கு மட்டுமல்ல அனைவரும் சிறந்தது. சைவ உணவே சாலச்சிறந்தது. இன்றைய உலகில துரித உணவு, பொறித்த உணவு மற்றும் தந்தூரி உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மக்கள் விரும்பி வேண்டி இந்த வகை உணவுகளை அருந்தி வருகின்றன. இத்தகைய உணவு வகைகள் ஆரோக்கியக் கேட்டினை விளைவிக்க வல்லவை.
பச்சைக் காய்கறிகள் கூட்டு (Vegetable Salad) சாப்பிடுவதால் உடம்பிற்கு எவ்வித கேடும் வருவதில்லை. வேக வைத்த காய்கறிகள், பழவகைகள் மனித ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நீரின்றி அமையாது உலகு என்பது முதுமொழி. நீரின்றி மனித உடம்பும் அமையாது. தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நலம். பால் மனித சமுதாயத்திற்கு இயற்கை தந்த வரப்பிரசாதம். மிகச்சிறந்த உணவு, பாலைத்தவிர்க்கவே கூடாது. பால் குழந்தை முதல் பெரியோர் வரை அருந்த வேண்டிய ஒன்றாகும். ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களும் கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது.
கீரை வகைகள், கேரட், பட்டாணி, பாசிப்பயறு, வாழைத்தண்டு, கொண்டை கடலை ஆகியவற்றை உணவில் சேர்ப்பது நலம். உணவு இடை வேளைகளில் நொறுக்குத்தீனி தவிர்ப்பது நல்லது. மனிதன் நலமாக வாழ நோய், நொடியின்றி மனஅழுத்தம் மற்றும் மன உளைச்சல் இன்றி இருக்க வேண்டும்.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு என்றார் வள்ளுவர்.
* சுத்தம் சுகம் தரும் என்பது முதுமொழி
* உணவருந்துவதற்கு முன்பாக கைகளை சுத்தமாக கழுவிய பின்பே உணவருந்த வேண்டும். இந்தப் பழக்கத்தினை சிறுவயது முதலே நாம் கற்றுத்தர வேண்டும்.
“நொறுங்கத்தின்றால் நூறு வயது” என்று கூறுவார்கள். இன்றைய வேக உலகில் சாத ரணமாக தின்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. காலையில் பணிக்கு செல்வதற்கு முன் ஒரு வாய், இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு செல்கின்ற நிலை தான் உள்ளது. இதைச்சற்றே மாற்றி நிதானமாகச் சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். மாலை சிற்றுண்டியாக வேகவைத்த கடலை வகைகள், பாசிப்பயறு அல்லது ராகி உப்புமா நல்லது. அசைவ உணவில் மிகவும் சிறந்தது, மீன் புரோட்டின் நிறைந்தது. கொழுப்பு இல்லாதது. பொறித்த மீனை விட வேகவைத்த மீன் சாலச்சிறந்தது.
முட்டை
மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது. பொறித்த மாமிச வகைகள் கொழுப்பு சத்தினை கூட்ட வல்லது. கொழுப்புச் சத்து (கொலஸ்ட்ரால்) அளவு கூடக்கூட ரத்த நாளங்களில் அடைப்புக்கு வழி கோலுகிறது. குறிப்பாக இதய நாளங்களின் அடைப்பு மனித உயிருக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக அமைந்து விடுகிறது. அரிசியை குறைத்து, காய்கறிகளை கூட்டி, ராகி, கோதுமை வகை களை சேர்த்து பொறித்த உணவு வகைகளை தவிர்த்து சாப்பிடப் பழகி வந்தால் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம்.
சர்க்கரை நோய்
இன்றைய உலகில் அதிகம் பேர் இந்நோயினால் அவதிப் படுகின்றனர். சர்க்கரை நோயி னால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது இந்தியா அடுத்து சீனா, மூன்றாம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. 2030-ம் ஆண்டு இந்த எண்ணிக்கையில இரண்டு மடங்குக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிமாக உள்ள நிலைப் பாடு சிறுநீரகம், இதயம், கண், ரத்த நாளங்கள், நரம்புகள் ஆகிய உறுப்பிகளை மிகவும் பாதிக்கப்படக்கூடியவை ஆகும்.
சிறுநீரகத்தை சிறிது சிறிதாக செயலிழக்கச் செய்து ரத்த யூரியா (உப்புச்சத்து) அளவினை கூட்டுகிறது. தகுந்த சிகிச்சை மேற்கொள்ளா விடில் மொத்த சிறுநீரகத்தை யும் செயலிழக்க செய்து விடு கிறது. (Chronic Renal Failure) அதனை சரி செய்ய இரத்த சுத்திகரிப்பு (Haemodialysis) மாற்று சிறுநீரக சிகிச்சை மேற் கொள்ள வேண்டிய தாகிறது. இதய நாளங்கள் அடைப்பு, கை, கால்களை ரத்த நாளங்கள் அடைப்பு உண்டாக காரணமாக அமைந்துவிடுகிறது. கால்கள் பாதம் உள்ளிட்ட ரத்த நாளங்கள் அடைப்பு உண்டாக காரணமாக கால்கள் செயல் இழந்து விடுகின்றன. கண் விழித்திரையில் கோளாறு களை ஏற்படுத்தி பார்வை அற்ற நிலையை உண்டாக்கு கிறது. இந்த நிலைமையை மாற்ற லேசர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சாதாரண மக்கள் டயாலிஸில், லேசர் சிகிச்சை சிறுநீரக மாற்று சிகிச்சை இவற்றை யெல்லாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது. ஆக சர்க்கரை நோயை ஆரம்ப காலகட்டங்களில் கட்டுப்படுத்தி ஓரளவு நம்மை காப்பாற்றிக் கொள்ள நமது உணவுப் பழக்கங்களைப் சற்றே மாற்றி சீரான முறையான சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நலம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதம், கால் ஆகியவற்றில் சீரான கவனம் செலுத்த வேண்டும். காலிலும், பாதத்திலும் ஏற்படுகின்ற சிறுகாயங்கள், புண்கள் ஆகியவற்றை உடனடியாக கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
தீய பழக்கங்கள்
மது, புகையிலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மேற்கூறியவற்றை கடை பிடித்து ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ்வோமாக.
மன அழுத்தம்
சிறு சிறு விஷயங்களைப் பெரிதுபடுத்தி தேவையில்லாமல் கவலைப்பட்டு மனஅமைதியைப் பாதிக்க வைப்பதால் வருகின்ற மனஅழுத்தம் நிம்மதியைக் குலைக்கின்றது. மன அழுத்தத்தினால் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. இரத்த அழுத்தம் கூடுகின்றது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்த தியானம் மற்றும் யோகா உதவுகின்றன.
யோகாவினால் ஏற்படக்கூடிய நன்மை மனித சமுதாயத்திற்கு மிகவும் முக் கியம். யோகா மனதையும், உடலையும் அமைதியாக்கு கிறது. மனத்தாக்கத்திலிருந்து மனிதனை விடுபட வைக்கிறது. உன்னதமான நீண்ட நல்வாழ் விற்கு வழிவகுக்கிறது. தினமும் சிறுது நேரம் யோகா மற்றும் தியானம் தவறாமல் செய்துவந் தால் மன அழுத்தம் குறைந்து நிச்சயம் நிம்மதி உண்டாகும்.
எத்தகைய பணியில் இருந்தாலும் மனிதனுக்கு ஓய்வு மிகவும் அவசியம். உடல் உறுப்புகளுக்கும், மூளைக்கும் ஓய்வு தேவை. சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் குறைந்தது 30 நிமிடம் ஓய்வு புத்துணர்ச்சியை தர வல்லது.
உடற்பயிற்சி
காலை நேர நடை பயணம், மிதமான உடற்பயிற்சி நாள் முழுவதும் சுறுசுறுப்போடு பணி ஆற்ற உறுதுணையாக அமைகின்றது. சர்க்கரை சத்து அதிகம் உள்ளவர்கள் காலை நடைபயணம் அவசியம் மேற்கொள்ள வேண்டும். ரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரையை கட்டுப்படுத்த இத்தகைய நடைபயணம் மற்றும் உடற்பயிற்சி உதவுகின்றது.
நடைபயிற்சியை காலையில் செய்ய முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். வெளியில் சென்று பூங்கா, சாலை ஓரம் மற்றும் மைதானங்களில் நடைபயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே அவரவர் வசதிக்கேற்ப சாதனங்கள் மூலம் பயிற்சி மேற் கொள்ளலாம். நடை மற்றும் உடற்பயிற்சி உடல் பருமனை குறைக்க மிகவும் உதவுகின்றன. ஆரம்பத்தில் காலை வேளையில் நடப்பது மிகவும் சிரமமாக தெரியலாம். அதுவே கொஞ்சம் பழகி விட்டால் தினமும் காலைக்கடன்கள் மாதிரி ஒரு நாள் நடைபயிற்சி இல்லா விட்டால் எதையே பறிகொடுத்த மாதிரி தோன்றும்.
நமது முன்னோர்கள் நம்மை நடக்க வைக்க கோவில்கள் கட்டி வலம் வரச் செய்தனர். மலைக்கோவில்களில் கிரிவலம், நடைபயணமாக செல்லுதல் ஆகியவை நமது உடல் ஆரோக்கியமாக அமையச் செய்த ஏற்பாடுகளாகும். ஆக நடை மற்றும் மிதமான உடற்பயிற்சி சிறந்த ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவை.
உணவுக்கட்டுப்பாடு
உண்டு சுருங்குதல் வெண்டிற்கு அழகு எனது முதுமொழி. உண்டி சுருங்குதல் வெண்டிற்கு மட்டுமல்ல அனைவரும் சிறந்தது. சைவ உணவே சாலச்சிறந்தது. இன்றைய உலகில துரித உணவு, பொறித்த உணவு மற்றும் தந்தூரி உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மக்கள் விரும்பி வேண்டி இந்த வகை உணவுகளை அருந்தி வருகின்றன. இத்தகைய உணவு வகைகள் ஆரோக்கியக் கேட்டினை விளைவிக்க வல்லவை.
பச்சைக் காய்கறிகள் கூட்டு (Vegetable Salad) சாப்பிடுவதால் உடம்பிற்கு எவ்வித கேடும் வருவதில்லை. வேக வைத்த காய்கறிகள், பழவகைகள் மனித ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நீரின்றி அமையாது உலகு என்பது முதுமொழி. நீரின்றி மனித உடம்பும் அமையாது. தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நலம். பால் மனித சமுதாயத்திற்கு இயற்கை தந்த வரப்பிரசாதம். மிகச்சிறந்த உணவு, பாலைத்தவிர்க்கவே கூடாது. பால் குழந்தை முதல் பெரியோர் வரை அருந்த வேண்டிய ஒன்றாகும். ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களும் கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது.
கீரை வகைகள், கேரட், பட்டாணி, பாசிப்பயறு, வாழைத்தண்டு, கொண்டை கடலை ஆகியவற்றை உணவில் சேர்ப்பது நலம். உணவு இடை வேளைகளில் நொறுக்குத்தீனி தவிர்ப்பது நல்லது. மனிதன் நலமாக வாழ நோய், நொடியின்றி மனஅழுத்தம் மற்றும் மன உளைச்சல் இன்றி இருக்க வேண்டும்.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு என்றார் வள்ளுவர்.
* சுத்தம் சுகம் தரும் என்பது முதுமொழி
* உணவருந்துவதற்கு முன்பாக கைகளை சுத்தமாக கழுவிய பின்பே உணவருந்த வேண்டும். இந்தப் பழக்கத்தினை சிறுவயது முதலே நாம் கற்றுத்தர வேண்டும்.
“நொறுங்கத்தின்றால் நூறு வயது” என்று கூறுவார்கள். இன்றைய வேக உலகில் சாத ரணமாக தின்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. காலையில் பணிக்கு செல்வதற்கு முன் ஒரு வாய், இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு செல்கின்ற நிலை தான் உள்ளது. இதைச்சற்றே மாற்றி நிதானமாகச் சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். மாலை சிற்றுண்டியாக வேகவைத்த கடலை வகைகள், பாசிப்பயறு அல்லது ராகி உப்புமா நல்லது. அசைவ உணவில் மிகவும் சிறந்தது, மீன் புரோட்டின் நிறைந்தது. கொழுப்பு இல்லாதது. பொறித்த மீனை விட வேகவைத்த மீன் சாலச்சிறந்தது.
முட்டை
மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது. பொறித்த மாமிச வகைகள் கொழுப்பு சத்தினை கூட்ட வல்லது. கொழுப்புச் சத்து (கொலஸ்ட்ரால்) அளவு கூடக்கூட ரத்த நாளங்களில் அடைப்புக்கு வழி கோலுகிறது. குறிப்பாக இதய நாளங்களின் அடைப்பு மனித உயிருக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக அமைந்து விடுகிறது. அரிசியை குறைத்து, காய்கறிகளை கூட்டி, ராகி, கோதுமை வகை களை சேர்த்து பொறித்த உணவு வகைகளை தவிர்த்து சாப்பிடப் பழகி வந்தால் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம்.
சர்க்கரை நோய்
இன்றைய உலகில் அதிகம் பேர் இந்நோயினால் அவதிப் படுகின்றனர். சர்க்கரை நோயி னால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது இந்தியா அடுத்து சீனா, மூன்றாம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. 2030-ம் ஆண்டு இந்த எண்ணிக்கையில இரண்டு மடங்குக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிமாக உள்ள நிலைப் பாடு சிறுநீரகம், இதயம், கண், ரத்த நாளங்கள், நரம்புகள் ஆகிய உறுப்பிகளை மிகவும் பாதிக்கப்படக்கூடியவை ஆகும்.
சிறுநீரகத்தை சிறிது சிறிதாக செயலிழக்கச் செய்து ரத்த யூரியா (உப்புச்சத்து) அளவினை கூட்டுகிறது. தகுந்த சிகிச்சை மேற்கொள்ளா விடில் மொத்த சிறுநீரகத்தை யும் செயலிழக்க செய்து விடு கிறது. (Chronic Renal Failure) அதனை சரி செய்ய இரத்த சுத்திகரிப்பு (Haemodialysis) மாற்று சிறுநீரக சிகிச்சை மேற் கொள்ள வேண்டிய தாகிறது. இதய நாளங்கள் அடைப்பு, கை, கால்களை ரத்த நாளங்கள் அடைப்பு உண்டாக காரணமாக அமைந்துவிடுகிறது. கால்கள் பாதம் உள்ளிட்ட ரத்த நாளங்கள் அடைப்பு உண்டாக காரணமாக கால்கள் செயல் இழந்து விடுகின்றன. கண் விழித்திரையில் கோளாறு களை ஏற்படுத்தி பார்வை அற்ற நிலையை உண்டாக்கு கிறது. இந்த நிலைமையை மாற்ற லேசர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சாதாரண மக்கள் டயாலிஸில், லேசர் சிகிச்சை சிறுநீரக மாற்று சிகிச்சை இவற்றை யெல்லாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது. ஆக சர்க்கரை நோயை ஆரம்ப காலகட்டங்களில் கட்டுப்படுத்தி ஓரளவு நம்மை காப்பாற்றிக் கொள்ள நமது உணவுப் பழக்கங்களைப் சற்றே மாற்றி சீரான முறையான சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நலம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதம், கால் ஆகியவற்றில் சீரான கவனம் செலுத்த வேண்டும். காலிலும், பாதத்திலும் ஏற்படுகின்ற சிறுகாயங்கள், புண்கள் ஆகியவற்றை உடனடியாக கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
தீய பழக்கங்கள்
மது, புகையிலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மேற்கூறியவற்றை கடை பிடித்து ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ்வோமாக.
வட மாநில ஸ்பெஷலான கட்டா மிட்டா முரப்பாவை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த முரப்பாவை நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
புளிப்பான மாங்காய் பெரியது - 1 கிலோ
தண்ணீர் - 2 லிட்டர்
சிட்ரிக் அமிலம் - 1 1/2 டீஸ்பூன்.

செய்முறை :
மாங்காயை தோல் சீவி விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு ஒரு நாள் காய வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், சிட்ரிக் அமிலம் மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
பின் இந்த மாங்காய் துண்டுகளை அதில் போட்டு 1/4 மணிநேரம் வேகவிடவும். சிறிது நேரமாகி வெந்து பாகும் மாங்காயும் சேர்ந்து முரப்பா பதமாக கெட்டியாக வந்து, சீனி தேன் மாதிரி வந்ததும் இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் நிரப்பவும்.
இதனை ஒரு வாரம் கழித்து உபயோகிக்கவும்.
புளிப்பும், இனிப்புமாக இருக்கும்.
சிட்ரிக் அமிலத்தை கடைசியில் சேர்க்கலாம்.
புளிப்பான மாங்காய் பெரியது - 1 கிலோ
தண்ணீர் - 2 லிட்டர்
சிட்ரிக் அமிலம் - 1 1/2 டீஸ்பூன்.
சர்க்கரை - 1 1/2 கிலோ,

செய்முறை :
மாங்காயை தோல் சீவி விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு ஒரு நாள் காய வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், சிட்ரிக் அமிலம் மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
பின் இந்த மாங்காய் துண்டுகளை அதில் போட்டு 1/4 மணிநேரம் வேகவிடவும். சிறிது நேரமாகி வெந்து பாகும் மாங்காயும் சேர்ந்து முரப்பா பதமாக கெட்டியாக வந்து, சீனி தேன் மாதிரி வந்ததும் இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் நிரப்பவும்.
இதனை ஒரு வாரம் கழித்து உபயோகிக்கவும்.
புளிப்பும், இனிப்புமாக இருக்கும்.
சிட்ரிக் அமிலத்தை கடைசியில் சேர்க்கலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
ஆண்களுக்கு அந்தந்த ஹார்மோன் உற்பத்தி குறைபாட்டிற்கு ஏற்ற சிகிச்சைகள் மூலம் சரிசெய்து கொள்ளலாமே தவிர, சர்வரோக நிவாரணியாக ஒரே மருந்தில் எல்லா பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்துவிட முடியாது.
நம் உடலின் ஒவ்வொரு செல்லும் இன்னொரு செல்லுடன் ஹார்மோன் மூலம்தான் தொடர்பு கொள்கிறது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இயங்கத் தேவையான ஹார்மோன்களை ஒவ்வொரு நொடியும் உற்பத்தி செய்யக்கூடிய பல நாளமில்லாச் சுரப்பிகள் உள்ளன. தைராய்டு, அட்ரினல் மற்றும் பிட்யூட்ரி சுரப்பிகளில் உற்பத்தியாகி ரத்த ஓட்டம் அல்லது மற்ற உடல் திரவத்தின் வழியாக ஊடுருவி, உடலின் மற்ற உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு சென்று அவற்றின் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மாற்றியமைக்கக் கூடிய சக்தி உடையவை இந்த ஹார்மோன்கள். அதாவது உடல் எப்போது? என்ன செய்ய வேண்டும்? என்ற சமிக்ஞைகளைத் தரும் சிக்னல்களாக வேலை செய்கின்றன.
ஆண்களுக்கு வயதாகும்போது Testosterone ஹார்மோன் சுரப்பு குறையக்குறைய எலும்பு அடர்த்தியும் குறையும். இதனால் அடிக்கடி எலும்புமுறிவு ஏற்படும். இதுவரை சொன்னது எல்லாம் ஆண் ஹார்மோன்களினால் மட்டுமே, ஆண்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள். இதுதவிர, ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக வரக்கூடிய மற்ற ஹார்மோன்களால் தைராய்டு சுரப்பு குறைவு அல்லது அதிகம், பிட்யூட்ரி சுரப்பியில் குறைபாடு, அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் குறைபாடு போன்றவற்றால் வரக்கூடிய நோய்கள்.
இயக்கமற்ற வாழ்க்கைமுறையினால் கொழுப்பு ஹார்மோன் அதிகமாவதால் வரக்கூடிய உடல்பருமன் நோய். இதைத் தொடர்ந்து Pancreas சரியாக வேலைசெய்யாததால் இன்சுலின் சுரப்பு குறைந்து நீரிழிவு நோய் வருவது இதெல்லாம் முக்கிய ஹார்மோன் பிரச்னைகள். உடல்பருமன், நீரிழிவு நோய் வந்துவிட்டாலே உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடும்.
பெரும்பாலும் ஆண் மலட்டுத்தன்மைக்கு உயிரணு எண்ணிக்கை குறைவு, விதையின் வளர்ச்சியின்மை மற்றும் விரைவில் விந்தணு வெளியேற்றம், Erectile Dysfunction ஆகியவை காரணங்களாகின்றன. சிலருக்கு மனம் மற்றும் உடல்ரீதியிலான பிரச்சனைகளால் உடலுறவு கொள்வதில் கடினம், உடலுறவில் நாட்டமின்மையால் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகிறது.
ஆண்களின் 60, 70 வயதுகளில் ஹார்மோன் வளர்ச்சி பற்றாக்குறை மற்றும் தைராய்டு சுரப்பு ஹார்மோன் நிலை குறையலாம். இதனால் மூளையின் செயல்பாட்டுத் தன்மையை குறைக்கும் என சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்தந்த ஹார்மோன் உற்பத்தி குறைபாட்டிற்கு ஏற்ற சிகிச்சைகள் மூலம் சரிசெய்து கொள்ளலாமே தவிர, சர்வரோக நிவாரணியாக ஒரே மருந்தில் வயதாவதால் ஏற்படும் எல்லா பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்துவிட முடியாது. ஆன்டி ஏஜிங் ட்ரீட்மென்ட் செய்கிறார்கள் என்றாலும் ஆய்வுப்பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
ஆண்களுக்கு வயதாகும்போது Testosterone ஹார்மோன் சுரப்பு குறையக்குறைய எலும்பு அடர்த்தியும் குறையும். இதனால் அடிக்கடி எலும்புமுறிவு ஏற்படும். இதுவரை சொன்னது எல்லாம் ஆண் ஹார்மோன்களினால் மட்டுமே, ஆண்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள். இதுதவிர, ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக வரக்கூடிய மற்ற ஹார்மோன்களால் தைராய்டு சுரப்பு குறைவு அல்லது அதிகம், பிட்யூட்ரி சுரப்பியில் குறைபாடு, அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் குறைபாடு போன்றவற்றால் வரக்கூடிய நோய்கள்.
இயக்கமற்ற வாழ்க்கைமுறையினால் கொழுப்பு ஹார்மோன் அதிகமாவதால் வரக்கூடிய உடல்பருமன் நோய். இதைத் தொடர்ந்து Pancreas சரியாக வேலைசெய்யாததால் இன்சுலின் சுரப்பு குறைந்து நீரிழிவு நோய் வருவது இதெல்லாம் முக்கிய ஹார்மோன் பிரச்னைகள். உடல்பருமன், நீரிழிவு நோய் வந்துவிட்டாலே உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடும்.
பெரும்பாலும் ஆண் மலட்டுத்தன்மைக்கு உயிரணு எண்ணிக்கை குறைவு, விதையின் வளர்ச்சியின்மை மற்றும் விரைவில் விந்தணு வெளியேற்றம், Erectile Dysfunction ஆகியவை காரணங்களாகின்றன. சிலருக்கு மனம் மற்றும் உடல்ரீதியிலான பிரச்சனைகளால் உடலுறவு கொள்வதில் கடினம், உடலுறவில் நாட்டமின்மையால் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகிறது.
ஆண்களின் 60, 70 வயதுகளில் ஹார்மோன் வளர்ச்சி பற்றாக்குறை மற்றும் தைராய்டு சுரப்பு ஹார்மோன் நிலை குறையலாம். இதனால் மூளையின் செயல்பாட்டுத் தன்மையை குறைக்கும் என சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்தந்த ஹார்மோன் உற்பத்தி குறைபாட்டிற்கு ஏற்ற சிகிச்சைகள் மூலம் சரிசெய்து கொள்ளலாமே தவிர, சர்வரோக நிவாரணியாக ஒரே மருந்தில் வயதாவதால் ஏற்படும் எல்லா பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்துவிட முடியாது. ஆன்டி ஏஜிங் ட்ரீட்மென்ட் செய்கிறார்கள் என்றாலும் ஆய்வுப்பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
குழந்தைகள் பார்த்து ரசிக்கும் கார்ட்டூன்கள் என்ன வகையாக இருக்கிறது என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்தும் ரசிக்கலாம்.
‘‘பொதுவாகவே, மழலைப்பருவத்தினருக்கு கதைகள் கேட்பது மிகவும் பிடிக்கும். 30, 40 வருடங்களுக்கு முன்னால் இப்போது உள்ளது போல நிறைய டி.வி.சேனல்களோ சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் பார்க்கும் கார்ட்டூன் சேனல்களோ எதுவும் கிடையாது.
அப்போது இருந்த ஒரே பொழுதுபோக்கு சாதனம் கதைதான். வீட்டில் இருந்த பெரியவர்களும் அதற்கேற்ற வகையில் கதைகள் சொல்வார்கள். பல சமயங்களில் கடவுள், விலங்குகள், கோமாளி, அரக்கர்கள் மாதிரி நடித்தும், விதவிதமான ஓசைகள் எழுப்பியும் குழந்தைகளை மகிழ்ச்சி அடைய செய்தனர். அதன் தொடர்ச்சியாகவே, இன்றைய கார்ட்டூன் சேனல்கள் இருக்கின்றன.
இவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கண்கவர் வண்ணங்கள், சுட்டி எலி, முட்டாள் பூனை, பிரம்மாண்ட யானை, தங்கள் மனதுக்குப் பிடித்த ஹீரோக்கள் சூப்பர் மேன், பேட்மேன் என சுவாரஸ்யமாகவும், விதவிதமாகவும் உலா வருவதால் குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை விரும்புவதும், அவற்றைப் பார்த்து சந்தோஷமாக இருப்பதும் நாளுக்குநாள் அதிகரிக்கிறது.’’
இன்று வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் யாரும் கிடையாது. பெற்றோர் வேலைக்குச் சென்று விடுகின்றனர். எனவே, குழந்தைகளின் தனிமையைப் போக்க கார்ட்டூன் சேனல்களைப் பார்க்க தாராளமாக அனுமதிக்கலாம். அதேநேரத்தில் வன்முறை சம்பவங்கள், திகிலூட்டும் அதிரடி காட்சிகள், தவறாக வழிநடத்தி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் தேவையற்ற தீய பழக்கவழக்கங்களைச் சிறுவர், சிறுமியரிடையே ஏற்படுத்தும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பெற்றோருக்கு இந்தத் தெளிவு வேண்டும்.
குழந்தைகள் பார்த்து ரசிக்கும் கார்ட்டூன்கள் என்ன வகையாக இருக்கிறது என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்தும் ரசிக்கலாம். இதன்மூலம் குழந்தைகளின் மகிழ்வும் கூடுதலாகும். குழந்தைகள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கவும் இது உதவியாக இருக்கும். சராசரியாக, ஒரு நாளில் 45 நிமிடங்கள் கார்ட்டூன்கள் பார்க்க அனுமதிக்கலாம். நேரம் காலம் அறியாமல், மணிக்கணக்காக கார்ட்டூன்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.’’
அப்போது இருந்த ஒரே பொழுதுபோக்கு சாதனம் கதைதான். வீட்டில் இருந்த பெரியவர்களும் அதற்கேற்ற வகையில் கதைகள் சொல்வார்கள். பல சமயங்களில் கடவுள், விலங்குகள், கோமாளி, அரக்கர்கள் மாதிரி நடித்தும், விதவிதமான ஓசைகள் எழுப்பியும் குழந்தைகளை மகிழ்ச்சி அடைய செய்தனர். அதன் தொடர்ச்சியாகவே, இன்றைய கார்ட்டூன் சேனல்கள் இருக்கின்றன.
இவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கண்கவர் வண்ணங்கள், சுட்டி எலி, முட்டாள் பூனை, பிரம்மாண்ட யானை, தங்கள் மனதுக்குப் பிடித்த ஹீரோக்கள் சூப்பர் மேன், பேட்மேன் என சுவாரஸ்யமாகவும், விதவிதமாகவும் உலா வருவதால் குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை விரும்புவதும், அவற்றைப் பார்த்து சந்தோஷமாக இருப்பதும் நாளுக்குநாள் அதிகரிக்கிறது.’’
இன்று வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் யாரும் கிடையாது. பெற்றோர் வேலைக்குச் சென்று விடுகின்றனர். எனவே, குழந்தைகளின் தனிமையைப் போக்க கார்ட்டூன் சேனல்களைப் பார்க்க தாராளமாக அனுமதிக்கலாம். அதேநேரத்தில் வன்முறை சம்பவங்கள், திகிலூட்டும் அதிரடி காட்சிகள், தவறாக வழிநடத்தி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் தேவையற்ற தீய பழக்கவழக்கங்களைச் சிறுவர், சிறுமியரிடையே ஏற்படுத்தும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பெற்றோருக்கு இந்தத் தெளிவு வேண்டும்.
குழந்தைகள் பார்த்து ரசிக்கும் கார்ட்டூன்கள் என்ன வகையாக இருக்கிறது என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்தும் ரசிக்கலாம். இதன்மூலம் குழந்தைகளின் மகிழ்வும் கூடுதலாகும். குழந்தைகள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கவும் இது உதவியாக இருக்கும். சராசரியாக, ஒரு நாளில் 45 நிமிடங்கள் கார்ட்டூன்கள் பார்க்க அனுமதிக்கலாம். நேரம் காலம் அறியாமல், மணிக்கணக்காக கார்ட்டூன்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.’’






