என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
பூசணிக்காயை சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்று பூசணிக்காயை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பூசணிக்காயை சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலிருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் சரும வளர்ச்சிக்கு புத்துணர்வூட்டும். பூசணிக்காயை துருவலாக்கி அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவரலாம்.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் 3 டேபிள்ஸ்பூன் பூசணி சாறுடன் 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு, தலா ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, மோர் ஆகியவற்றை கலந்து பிசைந்து முகத்திலும், கழுத்திலும் பூசி வரலாம். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும்.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளிச் தோற்றத்தை பெறுவதற்கு பூசணி சாறுடன் தயிர், முட்டை சேர்த்து பயன்படுத்த வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் பூசணிக்காய் சாறுடன் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1 டேபிள்ஸ்பூன் தயிரை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு முறை செய்துவந்தால் சருமம் அழகாகும்.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் 3 டேபிள்ஸ்பூன் பூசணி சாறுடன் 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு, தலா ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, மோர் ஆகியவற்றை கலந்து பிசைந்து முகத்திலும், கழுத்திலும் பூசி வரலாம். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும்.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளிச் தோற்றத்தை பெறுவதற்கு பூசணி சாறுடன் தயிர், முட்டை சேர்த்து பயன்படுத்த வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் பூசணிக்காய் சாறுடன் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1 டேபிள்ஸ்பூன் தயிரை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு முறை செய்துவந்தால் சருமம் அழகாகும்.
பச்சைப்பயறு வைத்து செய்யும் பெசரட்டு சத்து நிறைந்தது. இந்த சந்து நிறைந்த இந்த பெசரட்டுடன் மசாலா சேர்த்து செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
பச்சைப் பயறு - 1 கப்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
வெங்காயம் - 1 (விரும்பினால்)
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம்
தாளிக்க:
எண்ணெய், சீரகம்.
காய்கறி :
வெங்காயம்,
கேரட்,
குடைமிளகாய்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லித் தழை.

செய்முறை :
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 8 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
இரண்டும் நன்றாக ஊறியதும் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கலந்துகொள்ளவும்.
மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், துருவிய கேரட், கறிவேப்பிலை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
மேலே காய்கறிக் கலவையை சிறிது பரவலாகத் தூவவும், தோசைத் திருப்பியால் லேசாக ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்தவும்.
சுற்றி எண்ணெய் விட்டு முறுகலாக வேகவைக்கவும்.
திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
சூப்பரான மசாலா பெசரட்டு ரெடி.
பச்சைப் பயறு - 1 கப்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
வெங்காயம் - 1 (விரும்பினால்)
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம்
தாளிக்க:
எண்ணெய், சீரகம்.
காய்கறி :
வெங்காயம்,
கேரட்,
குடைமிளகாய்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லித் தழை.

செய்முறை :
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 8 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
இரண்டும் நன்றாக ஊறியதும் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கலந்துகொள்ளவும்.
மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், துருவிய கேரட், கறிவேப்பிலை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
மேலே காய்கறிக் கலவையை சிறிது பரவலாகத் தூவவும், தோசைத் திருப்பியால் லேசாக ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்தவும்.
சுற்றி எண்ணெய் விட்டு முறுகலாக வேகவைக்கவும்.
திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
சூப்பரான மசாலா பெசரட்டு ரெடி.
அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும். காய்கறிக் கலவை மேலே தூவி தயாரிக்க சிரமப்படும் புதிதானவர்கள், மாவுக் கலவையிலேயே இந்த வதக்கிய கலவையைக் கலந்து செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை உள்ளவர்களிடமும் இல்லாதவர்களிடமும் உள்ள பொதுவான கருத்து, அது செலவழிக்கத் தூண்டக்கூடியது என்பது. அது ஒருவகையில் உண்மைதான். பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது.
சரி, கிரெடிட் கார்டு கடன் வரம்பு என்றால் என்ன?
ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதல் வட்டிக் கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதே அந்த கார்டுக்கான கடன் வரம்பு.
இந்த அதிகபட்ச வரம்பு, உங்களின் சம்பளம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன், பணியின் வகை, இடம் மற்றும் மற்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிகக் கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும்.
உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தால், அதைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும் என விரும்பி, ரூ. ஒரு லட்சமாகக் குறைப்பதன் மூலம் குறைவாகச் செலவழிக்கலாம், அந்த வரம்பைத் தாண்டி செலவுகள் போகாது என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் அது சரியல்ல. அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்...
முதலாவதாக, அதிகக் கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணுக்கான குறியீடு. இந்தக் கடன் மதிப்பெண் என்பது முக்கியமாக, உங்களின் செலவழிக்கும் திறன் மற்றும் அதற்காகக் கடன் பெற்ற பணத்தை வட்டியில்லா காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது நல்ல நிதி நிர்வாகத்துக்கான குறியீடும் ஆகும்.

உங்களின் கடன் வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாகக் குறைத்த பின்னர், அதை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதையும் உங்களின் சம்பளத்தைக் கொண்டு செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே உங்களின் செலவழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும், விலையுயர்ந்த பொருட்களுக்காக செலவு செய்வதைக் குறைக்க வேண்டும்.
ரூ. 2 லட்சம் வரம்புள்ள கிரெடிட் கார்டில் ரூ. 50 ஆயிரம் செலவு செய்தால், அது மொத்த வரம்பில் 25 சதவீதமாக இருக்கும். அதுவே ரூ. ஒரு லட்சம் வரம்புள்ள அட்டை எனில் செலவு 50 சதவீதமாக இருக்கும். கடன் வரம்பில் எப்போதும் 30 சதவீதம் வரை செலவழிப்பது என்பது ஆரோக்கியமானது என்பது வல்லுநர் கருத்து. அதிக வரம்புள்ள அட்டையில், 30 சதவீதம் என்பதே நல்ல தொகையாக இருக்கும் என்பதால் பெரிய செலவுகளை இந்த வரம்புக்கு உட்பட்டுச் செய்யலாம்.
கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான். அதிகபட்ச கடன் வரம்புடன், உங்களுக்குத் தேவைப்படும் புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது திடீரெனப் பழுதான துணி துவைக்கும் எந்திரத்தின் பாகங்களை வாங்கமுடியும். இம்முறையில் அவசரகால மற்றும் திட்டமிட்ட செலவுகளின்போது பணத்தை நிர்வாகம் செய்யலாம்.
கைக்கு வராத சம்பளத்தை மனதில் வைத்து திரும்பி செலுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கி, அதிக கிரெடிட் கார்டு தொகையை திரும்பச் செலுத்துதல் என்னும் முடிவில்லா சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, திட்டமிட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள்.
பொதுவாக, உங்களின் நோக்கம் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, குறைப்பதாக அல்ல. அதிக கடன் வரம்பு, எதிர்காலத்தில் உங்களின் பெரிய செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.
சரி, கிரெடிட் கார்டு கடன் வரம்பு என்றால் என்ன?
ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதல் வட்டிக் கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதே அந்த கார்டுக்கான கடன் வரம்பு.
இந்த அதிகபட்ச வரம்பு, உங்களின் சம்பளம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன், பணியின் வகை, இடம் மற்றும் மற்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிகக் கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும்.
உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தால், அதைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும் என விரும்பி, ரூ. ஒரு லட்சமாகக் குறைப்பதன் மூலம் குறைவாகச் செலவழிக்கலாம், அந்த வரம்பைத் தாண்டி செலவுகள் போகாது என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் அது சரியல்ல. அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்...
முதலாவதாக, அதிகக் கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணுக்கான குறியீடு. இந்தக் கடன் மதிப்பெண் என்பது முக்கியமாக, உங்களின் செலவழிக்கும் திறன் மற்றும் அதற்காகக் கடன் பெற்ற பணத்தை வட்டியில்லா காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது நல்ல நிதி நிர்வாகத்துக்கான குறியீடும் ஆகும்.

உங்களின் கடன் வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாகக் குறைத்த பின்னர், அதை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதையும் உங்களின் சம்பளத்தைக் கொண்டு செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே உங்களின் செலவழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும், விலையுயர்ந்த பொருட்களுக்காக செலவு செய்வதைக் குறைக்க வேண்டும்.
ரூ. 2 லட்சம் வரம்புள்ள கிரெடிட் கார்டில் ரூ. 50 ஆயிரம் செலவு செய்தால், அது மொத்த வரம்பில் 25 சதவீதமாக இருக்கும். அதுவே ரூ. ஒரு லட்சம் வரம்புள்ள அட்டை எனில் செலவு 50 சதவீதமாக இருக்கும். கடன் வரம்பில் எப்போதும் 30 சதவீதம் வரை செலவழிப்பது என்பது ஆரோக்கியமானது என்பது வல்லுநர் கருத்து. அதிக வரம்புள்ள அட்டையில், 30 சதவீதம் என்பதே நல்ல தொகையாக இருக்கும் என்பதால் பெரிய செலவுகளை இந்த வரம்புக்கு உட்பட்டுச் செய்யலாம்.
கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான். அதிகபட்ச கடன் வரம்புடன், உங்களுக்குத் தேவைப்படும் புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது திடீரெனப் பழுதான துணி துவைக்கும் எந்திரத்தின் பாகங்களை வாங்கமுடியும். இம்முறையில் அவசரகால மற்றும் திட்டமிட்ட செலவுகளின்போது பணத்தை நிர்வாகம் செய்யலாம்.
கைக்கு வராத சம்பளத்தை மனதில் வைத்து திரும்பி செலுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கி, அதிக கிரெடிட் கார்டு தொகையை திரும்பச் செலுத்துதல் என்னும் முடிவில்லா சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, திட்டமிட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள்.
பொதுவாக, உங்களின் நோக்கம் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, குறைப்பதாக அல்ல. அதிக கடன் வரம்பு, எதிர்காலத்தில் உங்களின் பெரிய செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.
ஆத்ய பிராணாயாமம் நுரையீரல் கோளாறுகளை போக்குகிறது. நுரையீரலின் மேல்பகுதி வலுப்படுகிறது. இந்த பிராணாயாமத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
நுரையீரலின் மேல்பாக சுவாச முறை:
செய்முறை: வஜ்ராசனத்தில் அமரவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்தவும். முழங்கைகளையும் மடக்கி, இரு உள்ளங்கை களையும் முதுகின் மேல் இணைத்து வைக்கவும். இரு உள்ளங்கை களுக்கும் நடுவில் முதுகெலும்பு வரும்படி இருக்கட்டும்.
மூச்சை முழுவதுமாக இரு நாசிகளின் வழியாக வெளியே விடவும். இரு நாசிகளின் வழியாக மூச்சை நிதானமாகவும், ஆழமாகவும் இழுத்து, ஓரிரு வினாடிகள் நிறுத்தி இரு நாசிகளின் வழியாக வெளியே விடவும். இப்படி தொடர்ந்து 3 முதல் 6 முறை செய்யவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும்.
மூச்சை உள்ளுக்கு இழுக்கும்போது கழுத்துக்கு கீழே உள்ள காறை எலும்பு பகுதியை அதாவது மார்பின் மேல் பகுதியை உயர்த்தவும். வயிற்றுப் பாகத்தை சுருக்கிக் கொள்ளவும். வெளிமூச்சின் போது காறை எலும்புகளை கீழே இறக்கி, வயிற்றுப் பகுதியை தளர்வாக வைத்துக் கொள்ளவும்.
இந்த பயிற்சியை 3 முதல் 6 சுற்று பயிற்சி செய்யலாம். பிறகு கைகளை கீழே இறக்கி சில வினாடிகள் ஓய்வு பெறலாம். பிறகு மஹத்யோக பிராணாயாம பயிற்சியை செய்யவும்.
ஆத்ய பிராணாயமத்தின் போது, மூச்சுக்காற்றின் பெரும்பகுதி நுரையீரலின் மேல்பாகத்திற்கு செல்கிறது. இதனால் நுரையீரலின் உருண்ட மேல்பாகம் முழுவதும் காற்று நிரம்புகிறது. அப்பகுதியில் ஏற்படும் கோளாறுகளை போக்குகிறது. நுரையீரலின் மேல்பகுதி வலுப்படுகிறது.
செய்முறை: வஜ்ராசனத்தில் அமரவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்தவும். முழங்கைகளையும் மடக்கி, இரு உள்ளங்கை களையும் முதுகின் மேல் இணைத்து வைக்கவும். இரு உள்ளங்கை களுக்கும் நடுவில் முதுகெலும்பு வரும்படி இருக்கட்டும்.
மூச்சை முழுவதுமாக இரு நாசிகளின் வழியாக வெளியே விடவும். இரு நாசிகளின் வழியாக மூச்சை நிதானமாகவும், ஆழமாகவும் இழுத்து, ஓரிரு வினாடிகள் நிறுத்தி இரு நாசிகளின் வழியாக வெளியே விடவும். இப்படி தொடர்ந்து 3 முதல் 6 முறை செய்யவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும்.
மூச்சை உள்ளுக்கு இழுக்கும்போது கழுத்துக்கு கீழே உள்ள காறை எலும்பு பகுதியை அதாவது மார்பின் மேல் பகுதியை உயர்த்தவும். வயிற்றுப் பாகத்தை சுருக்கிக் கொள்ளவும். வெளிமூச்சின் போது காறை எலும்புகளை கீழே இறக்கி, வயிற்றுப் பகுதியை தளர்வாக வைத்துக் கொள்ளவும்.
இந்த பயிற்சியை 3 முதல் 6 சுற்று பயிற்சி செய்யலாம். பிறகு கைகளை கீழே இறக்கி சில வினாடிகள் ஓய்வு பெறலாம். பிறகு மஹத்யோக பிராணாயாம பயிற்சியை செய்யவும்.
ஆத்ய பிராணாயமத்தின் போது, மூச்சுக்காற்றின் பெரும்பகுதி நுரையீரலின் மேல்பாகத்திற்கு செல்கிறது. இதனால் நுரையீரலின் உருண்ட மேல்பாகம் முழுவதும் காற்று நிரம்புகிறது. அப்பகுதியில் ஏற்படும் கோளாறுகளை போக்குகிறது. நுரையீரலின் மேல்பகுதி வலுப்படுகிறது.
உடலின் முதல் சக்தி நீர்தான். உடலில் நீர் குறையும்பொழுது எண்ணம் செயல்பாடுகள் குறைந்து விடுவதால் சோர்வும், இயலாமையும் ஏற்படுகின்றது.
உடலுக்கு நீர் சத்து மிக அவசியம். தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என ஒயாது அறிவுறுத்தப்பட்டு வந்தாலும் பலர் இதில் கவனக்குறைவாகவே இருந்து விடுகின்றனர் என்று தோன்றுகின்றது. அதுவும் உடற்பயிற்சி, நோய் வாய்படுதல், ஜுரம், உஷ்ணமான சிதோஷ்ண நிலை போன்றவை உடலின் நீர் சத்தினை குறைக்கச் செய்யும்.
உடலில் 70 சதவீதத்திற்கு மேல் நீர் சத்துதான் உள்ளது.இது குறையும்போது எண்ணற்ற உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் 92 சதவீதம் நீர் உள்ளது. மூளையில் 75 சதவீதமும், தசைகளில் 75 சதவீதமும் நீர் உள்ளது. எலும்புகளில் 22 சதவீதம் நீர் உள்ளது. ஆகவேத்தான் நீரின்றி அமையாது உலகு என்பது போல் ‘நீரின்றி அமையாது உடல் என்றும் ஆகின்றது.
உடலின் முதல் சக்தி நீர்தான். உடலில் நீர் குறையும்பொழுது எண்ணம் செயல்பாடுகள் குறைந்து விடுவதால் சோர்வும், இயலாமையும் ஏற்படுகின்றது.
உடலில் நீர் சத்து குறையும் பொழுது சுவாசப் பாதை சுருங்குகிறது. நீர் சத்து குறையும்பொழுது இருக்கும் நீரினை தக்க வைக்க உடல் அதிக கொலங் டிராலினை உற்பத்தி செய்யும். இதனால் உடலில் கொழுப்பு சத்து கூடுகின்றது.
நீர்சத்து குறையும் பொழுது உடலின் கழிவுகளால் கிருமிகள் உருவாகின்றன. ஏனெனில் கழிவுகளை வெளியேற்ற உடலில் நீர்சத்து போதுமான அளவு இல்லை. இதனால் சிறுநீரகங்கள், சிறுநீரகப்பை, குழாய்களில் கிருமி தாக்குதல் ஏற்படும். குடல் அதிகம் நீரை உறிஞ்சும் உறுப்பு. நீர் சத்து குறையும் பொழுது கழிவுகள் பெருங்குடலுக்குச் செல்ல மிக நீண்ட நேரம் ஆவதால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது.
ஒவ்வொரு மூட்டிலும் உள்ள கார்டிலேஜ் அதிக நீர் சத்து கொண்டது. நீர்சத்து குறையும்பொழுது இந்த கார்டிலேஜ் பலவீனப்படுவதால் மூட்டுவலி, மூட்டு மடித்து நீட்ட இயலாமை ஏற்படும். நீர் சத்து குறைவு செல்களின் சக்தியினைக் குறைத்து விடும். இதன் காரணமாக ஒருவர் அதிகம் உண்பார். இதனால் அவர்களின் எடை கூடி விடுகின்றது.
நீர்சத்து குறைந்து இருப்பது தொடரும் பொழுது உடலின் மிகப்பெரிய உறுப்பான தோல் சுருங்கத் தொடங்கி முதுமை தோற்றத்தினை அளிக்கின்றது. சாதாரணமாக ஒரு மனிதன் 8-10 கப் நீரினை உடலிலிருந்து சுவாசம், வியர்வை, சிறுநீர், கழிவுப் பொருள் வெளியேற்றம் இவற்றின் மூலம் இழக்கின்றான்.
இனி முறையாய் நீர் குடிப்பதனை பழக்கப்படுத்திக் கொள்வோமாக.
உடலில் 70 சதவீதத்திற்கு மேல் நீர் சத்துதான் உள்ளது.இது குறையும்போது எண்ணற்ற உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் 92 சதவீதம் நீர் உள்ளது. மூளையில் 75 சதவீதமும், தசைகளில் 75 சதவீதமும் நீர் உள்ளது. எலும்புகளில் 22 சதவீதம் நீர் உள்ளது. ஆகவேத்தான் நீரின்றி அமையாது உலகு என்பது போல் ‘நீரின்றி அமையாது உடல் என்றும் ஆகின்றது.
உடலின் முதல் சக்தி நீர்தான். உடலில் நீர் குறையும்பொழுது எண்ணம் செயல்பாடுகள் குறைந்து விடுவதால் சோர்வும், இயலாமையும் ஏற்படுகின்றது.
உடலில் நீர் சத்து குறையும் பொழுது சுவாசப் பாதை சுருங்குகிறது. நீர் சத்து குறையும்பொழுது இருக்கும் நீரினை தக்க வைக்க உடல் அதிக கொலங் டிராலினை உற்பத்தி செய்யும். இதனால் உடலில் கொழுப்பு சத்து கூடுகின்றது.
நீர்சத்து குறையும் பொழுது உடலின் கழிவுகளால் கிருமிகள் உருவாகின்றன. ஏனெனில் கழிவுகளை வெளியேற்ற உடலில் நீர்சத்து போதுமான அளவு இல்லை. இதனால் சிறுநீரகங்கள், சிறுநீரகப்பை, குழாய்களில் கிருமி தாக்குதல் ஏற்படும். குடல் அதிகம் நீரை உறிஞ்சும் உறுப்பு. நீர் சத்து குறையும் பொழுது கழிவுகள் பெருங்குடலுக்குச் செல்ல மிக நீண்ட நேரம் ஆவதால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது.
ஒவ்வொரு மூட்டிலும் உள்ள கார்டிலேஜ் அதிக நீர் சத்து கொண்டது. நீர்சத்து குறையும்பொழுது இந்த கார்டிலேஜ் பலவீனப்படுவதால் மூட்டுவலி, மூட்டு மடித்து நீட்ட இயலாமை ஏற்படும். நீர் சத்து குறைவு செல்களின் சக்தியினைக் குறைத்து விடும். இதன் காரணமாக ஒருவர் அதிகம் உண்பார். இதனால் அவர்களின் எடை கூடி விடுகின்றது.
நீர்சத்து குறைந்து இருப்பது தொடரும் பொழுது உடலின் மிகப்பெரிய உறுப்பான தோல் சுருங்கத் தொடங்கி முதுமை தோற்றத்தினை அளிக்கின்றது. சாதாரணமாக ஒரு மனிதன் 8-10 கப் நீரினை உடலிலிருந்து சுவாசம், வியர்வை, சிறுநீர், கழிவுப் பொருள் வெளியேற்றம் இவற்றின் மூலம் இழக்கின்றான்.
இனி முறையாய் நீர் குடிப்பதனை பழக்கப்படுத்திக் கொள்வோமாக.
லவங்கப்பட்டை, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. எந்த பிரச்சனைக்கு லவங்கப்பட்டையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
லவங்கப்பட்டை, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. சமையலிலும் தவிர்க்கமுடியாத பொருளாக பயன்படு்கிறது. இனிப்பு மற்றும் கார வகை உணவுகள், பலகாரங்களிலும் சேர்க்கப்படுகிறது. லவங்கப்பட்டையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
லவங்கப்பட்டையை வெதுவெப்பான நீரில் ஊற வையுங்கள். அந்த நீரை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம். மேலும் சுவாச கோளாறுகள், இதய நோய் சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் சூடான நீரில் லவங்கப்பட்டை தூளை கலந்து பருகிவரலாம். தினமும் ஒரு கப் லவங்கப்பட்டை நீர் பருகுவது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலிகளை குறைக்க உதவும்.
உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கும் லவங்கப்பட்டை நீர் நிவாரணம் அளிக்கும். அதனுடன் தேன் சேர்த்து பருகலாம். அதிக பசி உணர்வை கட்டுப்படுத்தும். அதன்மூலம் உடல் எடை இழப்புக்கு வழிவகை செய்யும்.
மூட்டு வலி மற்றும் கீல்வாத பாதிப்புக்கு ஆளாகுபவர்களும் லவங்கப்பட்டை நீரை பருகி வரலாம். அதிகப்படியான வலியைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் துணை புரியும். கீல்வாத பாதிப்புகளை கட்டுப்படுத்தும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக தக்கவைத்துக்கொள்வதற்கு லவங்கபட்டை நீரை பருகி வரலாம். எனினும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் டாக்டர்களின் ஆலோசனை பெற்று, அதன் பிறகு லவங்கப்பட்டை நீரை பருகுவது நல்லது.
மூளையின் சீரான இயக்கத்திற்கு லவங்கபட்டை நீர் உறுதுணை புரியும். மறதி நோய் உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்து.
இந்த நீரை பருகினால் புற்றுநோயில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். லவங்கப்பட்டையில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி-கார்சிஜினோஜெனிக் சேர்மம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால் தினமும் லவங்கப்பட்டை நீர் பருகி வருவது நல்லது.
லவங்கப்பட்டையை வெதுவெப்பான நீரில் ஊற வையுங்கள். அந்த நீரை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம். மேலும் சுவாச கோளாறுகள், இதய நோய் சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் சூடான நீரில் லவங்கப்பட்டை தூளை கலந்து பருகிவரலாம். தினமும் ஒரு கப் லவங்கப்பட்டை நீர் பருகுவது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலிகளை குறைக்க உதவும்.
உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கும் லவங்கப்பட்டை நீர் நிவாரணம் அளிக்கும். அதனுடன் தேன் சேர்த்து பருகலாம். அதிக பசி உணர்வை கட்டுப்படுத்தும். அதன்மூலம் உடல் எடை இழப்புக்கு வழிவகை செய்யும்.
மூட்டு வலி மற்றும் கீல்வாத பாதிப்புக்கு ஆளாகுபவர்களும் லவங்கப்பட்டை நீரை பருகி வரலாம். அதிகப்படியான வலியைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் துணை புரியும். கீல்வாத பாதிப்புகளை கட்டுப்படுத்தும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக தக்கவைத்துக்கொள்வதற்கு லவங்கபட்டை நீரை பருகி வரலாம். எனினும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் டாக்டர்களின் ஆலோசனை பெற்று, அதன் பிறகு லவங்கப்பட்டை நீரை பருகுவது நல்லது.
மூளையின் சீரான இயக்கத்திற்கு லவங்கபட்டை நீர் உறுதுணை புரியும். மறதி நோய் உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்து.
இந்த நீரை பருகினால் புற்றுநோயில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். லவங்கப்பட்டையில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி-கார்சிஜினோஜெனிக் சேர்மம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால் தினமும் லவங்கப்பட்டை நீர் பருகி வருவது நல்லது.
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பேரீச்சம்பழ கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
நவீன மருத்துவ ஆய்வுகள் பேரிச்சம் பழத்தை உணவில் சேர்ப்பது, உடல் வழியாக மூளையை ஊடுருவி நியூரோ டீஜெனெரேட்டிவ் எனப்படும் ஞாபக மறதி/மூளை சிதைவை உண்டாக்கும் இன்டெர்லுக்கின் (I L- 6) போன்ற குறிப்பான்களை தடுத்து, மூளை செல்களில் உண்டாகும் படலங்கள் செல்களின் தொடர்பை வலுவிழக்க செய்து செல் சாவிற்கு வழிவகுத்துவிடாமல் தடுக்கிறது. பேரீச்சம்பழத்தை பூரணமாக வைத்து கொழுக்கட்டைகளாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுப்பது சிறந்த ஆரோக்கியமான தின்பண்டமாகவும் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும் இயற்கை உணவாகும்.
தேவையான பொருட்கள் :
கிளறிய அணில் கொழுக்கட்டை மாவு
அரிந்த பேரிச்சம்பழம் - 50 கிராம்
அரிந்த பிஸ்தா/பாதம்
முந்திரி
நெய் -1/2 டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
செய்முறை :
பேரீச்சம்பழத்தை வாணலியில் போட்டு லேசாக இளகியவுடன், மசித்து, அரிந்து வைத்துள்ள பாதம், பிஸ்தா, முந்திரி பருப்பு வகைகள் கலந்து இறக்கி நெய், தேங்காய் துருவல் சேர்த்து பூரணமாக்கி கொள்ளவும், அதை மேல் மாவுடன் சேர்த்து அச்சில் வைத்து பிடித்து 6-7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
அணில் தயாரிப்புகளை ஆன்லைனில் பெற, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் - https://shop.theanilgroup.com/
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று சாக்லேட் பனீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
திகட்டாத தின்பண்டத்தில் குழந்தைகளின் பட்டியலில் சாக்லேட்டிற்கே முதலிடம், அதிகமாக செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் உடல் நலம் கருதி பெற்றோர்கள் அதை வெகுவாக தவிர்த்தும் குழந்தைகளை கண்டித்தும் வருகின்றனர். ஆனால் சாக்லேட்டின் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ள தூய கோகோ பவுடர் இருதய நோய்கள் வராமல் காத்து, தோலுக்கு ஊட்டமளிக்கும். அதனுடன் பனீர் சேர்த்து கொழுக்கட்டையாக, குழந்தைகளுக்கும் பெரியவர்களும் ஆரோக்கியமான இனிப்பாக சாப்பிட தரலாம். பன்னீரில் உள்ள புரோட்டீன் எலும்பு, பற்களுக்கு ஊட்டமளித்து, நல்ல எதிர்ப்புசக்தியை தூண்டுவதாகவும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
கிளறிய அணில் கொழுக்கட்டை மாவு
கோகோ பவுடர் - 1டேபிள் ஸ்பூன்
பனீர் துருவல் - 1 கப்
சர்க்கரை போடாத பால்கோவா -50 கிராம்
பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா, பாதம் சிறிதளவு
செய்முறை :
பனீர் துருவல், சர்க்கரை போபோடாத பால்கோவா, பொடித்த சர்க்கரை, பாதம் மற்றும் பிஸ்தாவை ஒன்றாக சேர்த்து பிசைந்து பூரணமாக தயார்செய்து கொள்ளவும்.
மேல் மாவுடன் கோகோ பவுடரை சேர்த்து நன்றாக பிசைந்து தயாராக உள்ள பூரணத்தை அதனுள் வைத்து கொழுக்கட்டை அச்சில் பிடித்து 6-7 நிமிடங்கள் வேகவைக்கவும். அணில் தயாரிப்புகளை ஆன்லைனில் பெற, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் - https://shop.theanilgroup.com/
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பால் கோவா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய:
இனிப்பு கோவா - ஒரு கப்,

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு. பூரணம்
ஒரு பாத்திரத்தில் இனிப்பு கோவா, உடைத்த பாதாம், முந்திரியை போட்டு ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய:
இனிப்பு கோவா - ஒரு கப்,
உடைத்த பாதாம், முந்திரி - தலா 3 டீஸ்பூன்.

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு. பூரணம்
ஒரு பாத்திரத்தில் இனிப்பு கோவா, உடைத்த பாதாம், முந்திரியை போட்டு ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
சூப்பரான பால் கோவா கொழுக்கட்டை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாட்பட்ட நோய் பாதிப்பு அல்லது சில குறிப்பிட்ட நோய் பாதிப்புகள் உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக கருதப்படுகிறது.
நாட்பட்ட நோய் பாதிப்பு அல்லது சில குறிப்பிட்ட நோய் பாதிப்புகள் உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக கருதப்படுகிறது. கொப்பளங்களைப் போக்க பல எளிய தீர்வுகள் இருந்தாலும், அவை உடலில் ஏற்படத் தொடங்கும்போதே அதற்கான சிகிச்சையை பின்பற்றி அவற்றைப் போக்குவது நல்லது.
சருமத்தில் உண்டாகும் சீழ் நிறைந்த தடிப்புகள் கொப்பளங்கள் ஆகும். பொதுவாக இவை சிவப்பு நிறத்தில் தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதி பொதுவாக வலி நிறைந்து காணப்படும். அவ்வப்போது சீழ் வடிதலும் இருக்கும். இவை தொற்று பாதிப்பால் உண்டாவதால் உடலின் மற்ற இடங்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது மற்றும் சிறிய அளவில் இருந்து பெரிய அளவாக வளரவும் வாய்ப்புகள் உள்ளது.
பொதுவாக உடலில் முடி அதிகம் இருக்கும் இடங்களில் கொப்பளங்கள் தோன்றலாம். கொப்பளங்கள் உருவாவது மற்றும் தொற்றுவதில் இருந்து எப்படி தடுப்பது கொப்பளங்கள் உருவாவதை கணிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் சருமம் தடிக்கும் வரை கொப்பளம் உருவாவதை நாம் அறிந்து கொள்ள முடியாது. அப்படி தடிப்புகள் உண்டான இடங்களை கிள்ளவோ, சொரியவோ, கீறவோ கூடாது என்பது முக்கியமாக அறிவுறுத்தப்படுகிறது.
வலியுடன் கூடிய சரும தடிப்புகள் இருந்தால் நாளடைவில் அது கட்டியாக உருவாகலாம். ஆகவே அந்த இடத்தில் வெந்நீர் ஒத்தடம் தருவதால் வலி குறைந்து சீழ் கட்டாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. வெதுவெதுப்பான துணியால் ஒத்தடம் தருவதால், சீழ் கட்டியாக மாறாமல், எளிதில் தடிப்பு கரைந்து விடலாம்.

கொப்பளங்கள் உள்ளவர்கள் பயன்படுத்தும் துண்டு அல்லது ஆடைகளை மற்றவர் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். முன்கூட்டியே கட்டிகள் கண்டறியப்பட்டால், இறுக்கமாக ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். குறுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினி சோப்பு பயன்படுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்யலாம். கொப்பளங்களுக்கு அதன் தீவிர தன்மையைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படலாம்.
வெந்நீர் ஒத்தடம் சிறிய அளவு வலியில்லாத கொப்பளங்கள் தானாக குணமாகிவிடும். அப்படி குணமாகவில்லை என்றால் வெந்நீர் ஒத்தடம் நல்ல தீர்வைத் தரும். பெரிதாக வளர்ந்த கொப்பளங்களைப் போக்க நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பட்ட ஒத்தடம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சை நல்ல பலனத் தரும். சூடு ஒத்தடம் தருவதால் வெள்ளை இரத்த அணுக்களின் ஓட்டம் அதிகரித்து விரைந்து காயங்கள் குணமடைகிறது. சூடு ஒத்தடத்தை சரியான வழியில் பின்பற்றினால் ஆச்சர்யமான விளைவுகளைக் காண முடியும்.
டீ ட்ரி ஆயில் டீ ட்ரீ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவதால் அவற்றின் கிருமி எதிர்ப்பு தன்மை காரணமாக கொப்பளங்கள் எளிதில் குணமாக முடியும். மஞ்சள் மஞ்சளுக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மைகள் இருப்பதால் கொப்பளங்களைப் போக்க சிறந்த தீர்வைத் தருகிறது. மஞ்சளை சருமத்தின் மேல்புறமாக தடவலாம் அல்லது மஞ்சள் கலந்த நீரை பருகலாம்.
வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றிற்கு கிருமி எதிர்ப்பு தன்மை உள்ளது. இவை கொப்பளங்களை எதிர்த்து போராடுகிறது. கிருமிநாசினி தன்மை உள்ள இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால் கொப்பளங்கள் நீண்ட காலம் சருமத்தில் இருப்பதில்லை. கொப்பளங்கள் பெரிதாக, வலி அதிகமாக, சீழ் அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் சென்று கொப்பளத்தை வெட்டி எடுக்க வேண்டியது அவசியமாகும்.
கொப்பளத்தைக் குத்தி அதில் உள்ள சீழை வெளியேற்றி காயத்தை மருத்துவர்கள் அகற்றுவார்கள். இந்த சிகிச்சையுடன் நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சையை சேர்த்து அளிப்பதால், வலி குறைந்து தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது. கொப்பளத்தின் நிலையை அறிந்து தீவிரத்தை உணர்ந்து மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
சருமத்தில் உண்டாகும் சீழ் நிறைந்த தடிப்புகள் கொப்பளங்கள் ஆகும். பொதுவாக இவை சிவப்பு நிறத்தில் தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதி பொதுவாக வலி நிறைந்து காணப்படும். அவ்வப்போது சீழ் வடிதலும் இருக்கும். இவை தொற்று பாதிப்பால் உண்டாவதால் உடலின் மற்ற இடங்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது மற்றும் சிறிய அளவில் இருந்து பெரிய அளவாக வளரவும் வாய்ப்புகள் உள்ளது.
பொதுவாக உடலில் முடி அதிகம் இருக்கும் இடங்களில் கொப்பளங்கள் தோன்றலாம். கொப்பளங்கள் உருவாவது மற்றும் தொற்றுவதில் இருந்து எப்படி தடுப்பது கொப்பளங்கள் உருவாவதை கணிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் சருமம் தடிக்கும் வரை கொப்பளம் உருவாவதை நாம் அறிந்து கொள்ள முடியாது. அப்படி தடிப்புகள் உண்டான இடங்களை கிள்ளவோ, சொரியவோ, கீறவோ கூடாது என்பது முக்கியமாக அறிவுறுத்தப்படுகிறது.
வலியுடன் கூடிய சரும தடிப்புகள் இருந்தால் நாளடைவில் அது கட்டியாக உருவாகலாம். ஆகவே அந்த இடத்தில் வெந்நீர் ஒத்தடம் தருவதால் வலி குறைந்து சீழ் கட்டாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. வெதுவெதுப்பான துணியால் ஒத்தடம் தருவதால், சீழ் கட்டியாக மாறாமல், எளிதில் தடிப்பு கரைந்து விடலாம்.

கொப்பளங்கள் உள்ளவர்கள் பயன்படுத்தும் துண்டு அல்லது ஆடைகளை மற்றவர் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். முன்கூட்டியே கட்டிகள் கண்டறியப்பட்டால், இறுக்கமாக ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். குறுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினி சோப்பு பயன்படுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்யலாம். கொப்பளங்களுக்கு அதன் தீவிர தன்மையைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படலாம்.
வெந்நீர் ஒத்தடம் சிறிய அளவு வலியில்லாத கொப்பளங்கள் தானாக குணமாகிவிடும். அப்படி குணமாகவில்லை என்றால் வெந்நீர் ஒத்தடம் நல்ல தீர்வைத் தரும். பெரிதாக வளர்ந்த கொப்பளங்களைப் போக்க நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பட்ட ஒத்தடம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சை நல்ல பலனத் தரும். சூடு ஒத்தடம் தருவதால் வெள்ளை இரத்த அணுக்களின் ஓட்டம் அதிகரித்து விரைந்து காயங்கள் குணமடைகிறது. சூடு ஒத்தடத்தை சரியான வழியில் பின்பற்றினால் ஆச்சர்யமான விளைவுகளைக் காண முடியும்.
டீ ட்ரி ஆயில் டீ ட்ரீ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவதால் அவற்றின் கிருமி எதிர்ப்பு தன்மை காரணமாக கொப்பளங்கள் எளிதில் குணமாக முடியும். மஞ்சள் மஞ்சளுக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு தன்மைகள் இருப்பதால் கொப்பளங்களைப் போக்க சிறந்த தீர்வைத் தருகிறது. மஞ்சளை சருமத்தின் மேல்புறமாக தடவலாம் அல்லது மஞ்சள் கலந்த நீரை பருகலாம்.
வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றிற்கு கிருமி எதிர்ப்பு தன்மை உள்ளது. இவை கொப்பளங்களை எதிர்த்து போராடுகிறது. கிருமிநாசினி தன்மை உள்ள இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால் கொப்பளங்கள் நீண்ட காலம் சருமத்தில் இருப்பதில்லை. கொப்பளங்கள் பெரிதாக, வலி அதிகமாக, சீழ் அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் சென்று கொப்பளத்தை வெட்டி எடுக்க வேண்டியது அவசியமாகும்.
கொப்பளத்தைக் குத்தி அதில் உள்ள சீழை வெளியேற்றி காயத்தை மருத்துவர்கள் அகற்றுவார்கள். இந்த சிகிச்சையுடன் நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சையை சேர்த்து அளிப்பதால், வலி குறைந்து தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது. கொப்பளத்தின் நிலையை அறிந்து தீவிரத்தை உணர்ந்து மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவு உண்ணும் ஆர்வம் குறைந்து, நொறுக்குத்தீனிகளை எந்நேரம் பார்த்தாலும் அரைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் வந்துவிட்டது; பெற்றோர்களும் குழந்தை உணவை தான் சாப்பிடுவதில்லை இதையாவது சாப்பிடட்டும் என்று குழந்தையின் தேவைக்கு அதிகமாக நொறுக்குத்தீனிகளை வாங்கி குவித்து விடுகின்றனர்..! பெற்றோர் செயலில் மனம் மகிழ்ந்த குழந்தைகளும், அவற்றை தின்று வயிற்றை நிரப்பிக்கொண்டே, கூடவே உடல் எடையையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர்.
ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.! அப்படி குழந்தைகளுக்கு புற்றுநோய் அளிக்கும் நொறுக்குத்தீனிகள் எவை என்று பார்க்கலாம்..!

* உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது; இதை அக்ரிலாமைட் என்றும் அழைப்பர். மேலும் இதில் அதிக உப்பு சேர்ப்பதும் குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்..!
* தற்போதுள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் குதறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவையே! இவற்றைப் பருகுவதால், குழந்தைகளுக்கு pancreatic, colon and rectal cancer போன்ற புரியாத பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பானங்களில் அத்தனித்த சுவையை கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், குழந்தைகளுக்கு இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
* பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை குழந்தைகளில் புற்றுநோய் மற்றும் அவர்களின் உடற்செயலிய மாற்றத்தைக் ஏற்படுத்தி, அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை நிலைகுலைய செய்கின்றன..
* குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.
ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.! அப்படி குழந்தைகளுக்கு புற்றுநோய் அளிக்கும் நொறுக்குத்தீனிகள் எவை என்று பார்க்கலாம்..!
* PFOA (perfluorooctanoic acid), diacetyl and propyl gallate போன்ற வேதிப்பொருட்கள் இன்றைய எண்ணெயில்லாத பாப்கார்னை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் PFOA எனும் அமிலம் நச்சுத்தன்மை வாய்ந்தது; ஆனால் இதையெல்லாம் அறியாமல் பாப்கார்ன் குழந்தைகளின் உடலுக்கு நல்லது என்று பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்றனர்.

* உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது; இதை அக்ரிலாமைட் என்றும் அழைப்பர். மேலும் இதில் அதிக உப்பு சேர்ப்பதும் குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்..!
* தற்போதுள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் குதறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவையே! இவற்றைப் பருகுவதால், குழந்தைகளுக்கு pancreatic, colon and rectal cancer போன்ற புரியாத பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பானங்களில் அத்தனித்த சுவையை கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், குழந்தைகளுக்கு இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
* பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை குழந்தைகளில் புற்றுநோய் மற்றும் அவர்களின் உடற்செயலிய மாற்றத்தைக் ஏற்படுத்தி, அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை நிலைகுலைய செய்கின்றன..
* குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று கேரட் அல்வா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
அல்வா செய்ய :
கேரட் துருவல் - அரை கப்,
வெல்லத்தூள் - அரை கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
நெய் - தேவைக்கு,

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.
அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.
பிறகு வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேக விடவும். மேலே சிறிதளவு நெய் விட்டு சுருள கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
கேரட் அல்வா கொழுக்கட்டை ரெடி.
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
அல்வா செய்ய :
கேரட் துருவல் - அரை கப்,
வெல்லத்தூள் - அரை கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
நெய் - தேவைக்கு,
ஏலக்காய்த்துள் - சிட்டிகை.

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.
அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.
பிறகு வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேக விடவும். மேலே சிறிதளவு நெய் விட்டு சுருள கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
கேரட் அல்வா கொழுக்கட்டை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






