என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • சட்னி தயார் செய்யும்போது புளிக்கு பதில் தோல் சீவிய மாங்காய் சேர்க்கலாம்.
    • அடைக்கு மாவு அரைக்கும்போது பரங்கிக்காய் சேர்த்து அரைத்தால் அடை பஞ்சு போல இருக்கும்.

    * பிரெட்டை முக்கோண வடிவில் டோஸ்ட் செய்து தாளித்த தயிரை அதன் மேல் ஊற்றினால் பிரெட் தயிர் வடை ரெடி.

    * காலி பிளவர், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஏலக்காய், சோம்பு, கிராம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த கலவை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். இந்த காலிபிளவர் சட்னி, இட்லி, சப்பாத்திக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

    * தோசை மாவு அரைக்கும்போது கொஞ்சம் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால், தோசை பளபளவென்று மெல்லியதாக வரும்.

    * இட்லிக்கு சட்னி தயார் செய்யும்போது புளிக்கு பதில் தோல் சீவிய மாங்காய்த்துண்டை சேர்த்து அரைத்தால் சட்னியின் சுவை பிரமாதமாக இருக்கும்.

    * ஒரு கரண்டி நெய்யை அடுப்பில் வைத்து காய்ச்சி அதை பஜ்ஜி மாவோடு கலந்து பஜ்ஜி செய்தால், பஜ்ஜி வாசனையாக இருக்கும்.

    * ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதை தவிர்க்கலாம்.

    * மீன்களை எண்ணெய்யில் பொரிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவும். இதை தவிர்க்க மீன்களைப் பொரிக்கும்போது அடுப்பின் அருகில் பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.

    * மீன் பாத்திரத்தில் மீன் வாசம் இருந்தால் சீயக்காய்த்தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை துலக்கினால் மீன் வாசம் போய்விடும்.

    * ரவா தோசை தயாரிக்கும்போது இரவே ரவையை தண்ணீரில் கரைத்து வைக்கவும். மறுநாள் காலை தோசை வார்ப்பதற்குமுன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை சிவப்பாக மொறுமொறுவென இருக்கும்.

    * பன்னீர் துண்டுகளை ஒரு டப்பாவில் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து உடன் ஒரு ஸ்பூன் வினிகரை ஊற்றி மூடி பிரிட்ஜில் வைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

    * வெள்ளை உளுந்தை வறுத்து விழுதாக அரைத்து தக்காளி சட்னியுடன் சேர்த்தால் சட்னி கம கம வாசனையாக இருக்கும்.

    * முந்திரி, பாதாம், கசகசா போன்றவைகளை அரைப்பதற்கு முன்பு ஊற வைத்து பிரிட்ஜில் வைத்து அரைத்தால் விரைவில் அரைபடும்.

    * அடைக்கு அரைக்கும்போது ஒரு கீற்று பரங்கிக்காயைச் சேர்த்து அரைத்தால் அடை பஞ்சு போல இருக்கும்.

    * அரிசி கொதிக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி தூவினால், உலை நீர் கொதித்து வெளியே வழியாது.

    • குழந்தைகள் ஆர்வமாக செய்யும் விஷயங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
    • பிறர் முன்பு திட்டுவது குழந்தைகளின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும்.

    குழந்தைகள் எத்தகைய குணாதிசயம், சுபாவம் கொண்டவர்களாக விளங்குகிறார்கள் என்பதை பெற்றோரின் வளர்ப்புமுறைதான் தீர்மானிக்கிறது. அவர்கள் எந்த அளவுக்கு பொறுப்புணர்வோடு பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்களின் வாழ்க்கை பாதை கட்டமைக்கப்படுகிறது.

    சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிள்ளைகள் பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பதற்கு பெற்றோரின் வளர்ப்பில் தென்படும் குறைபாடுகளே காரணமாக அமையும். அவை குறித்தும், அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.


    குழந்தைகளை பாராட்டுவதில்லை

    குழந்தைகள் ஆர்வமாக செய்யும் விஷயங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவை மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தாலோ, பாராட்டும்படியாக இருந்தாலோ மனதார வாழ்த்த வேண்டும். இன்னும் சிறப்பாக செயல்படும்படி ஊக்குவிக்க வேண்டும். அப்படி புகழ்ந்து பேசுவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

    'தாம் சிறப்பாக செயல்படுகிறோம்' என்று அவர்களும் தங்களை பற்றி பெருமை கொள்வார்கள். அப்படி அல்லாமல் குழந்தைகள் எது செய்தாலும் 'இதெல்லாம் ஒரு விஷயமா?' என்று பெற்றோர் சாதாரணமாக கடந்து செல்வது ஏற்புடையதாக இருக்காது. தாம் என்ன செய்தாலும் பெற்றோர் உற்சாகப்படுத்தமாட்டார்கள் என்ற மன நிலை பிள்ளைகளை ஆட்படுத்திவிடும்.

    பெற்றோர் தம்மை மதிப்பதில்லை என்ற மனநிலைக்கும் வந்துவிடுவார்கள். அது பிடிவாத குணத்தை அவர்களுக்குள் விதைப்பதற்கு அடித்தளமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர் ஊக்குவித்து கொண்டாட வேண்டும்.


    மற்றவர்கள் முன்பு விமர்சனம் செய்தல்

    பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்டி திருத்துவது பெற்றோரின் கடமை. அதேவேளையில் அந்த தவறை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதோ, அவர்கள் முன்பு திட்டுவதோ பிள்ளைகளுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.

    அப்படி பிறர் முன்பு திட்டுவது அவர்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும். பெற்றோரின் கருத்துக்கு மதிப்பு கொடுக்காமல் பிடிவாதம் கொண்டவர்களாக மாறுவதற்கு வித்திடக்கூடும்.

    பெற்றோர் உச்சரிக்கும் எந்த வார்த்தையும் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும்படி அமைந்துவிடக்கூடாது. அவர்கள் செய்யும் தவறுகள் எதுவானாலும் அவர்களிடமே நேருக்கு நேர் பேசி அதனை சரி செய்வதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு அல்லாமல் கடுமையாக திட்டுவது மன ரீதியாக குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பெற்றோர் என்ன செய்தாலும் தம்மை கண்டிப்பார்கள் என்ற எண்ணம் உருவாகி, வீண் பிடிவாதம் அவர்களுக்குள் எழ வழிவகுத்துவிடும்.

    அதற்கு இடம் கொடுக்காமல் சிறு வயதிலேயே அவர்கள் செய்யும் தவறுகளை மென்மையான அணுகுமுறையுடன் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்வதற்கு வழிகாட்டினால் எதையும் சுமூகமாக எதிர்கொள்ளும் பக்குவம் கொண்ட பிள்ளைகளாக வளர்வார்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் அது நலம் சேர்க்கும்.

    தன் நண்பர்களோ, உறவுகளோ தவறு செய்திருந்தாலும் அதனை அவர்கள் மனம் புண்படாதபடி திருத்திக்கொள்வதற்கு ஆலோசனை தரும் இடத்தில் இருப்பார்கள்.


    தக்க சமயத்தில் அறிவுரை வழங்காமல் இருத்தல்

    எந்தவொரு காரியத்தை குழந்தைகள் செய்வதாக இருந்தாலும் அவர்களுக்கு தக்க அறிவுரை கூற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. அந்த அறிவுரை அவர்கள் தொடங்கும் காரியத்தை சிறப்பாக முடிப்பதற்கு வழிகாட்ட வேண்டும்.

    திட்டமிடுதல், இலக்கு நிர்ணயித்தல், எதிர்கொள்ளும் இடையூறுகளை சமாளித்தல் என எல்லா நிலையிலும் பிள்ளைகளுக்கு பின்புலமாக இருந்து செயல்பட வேண்டும். அப்படி செய்யாமல் அவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வது, 'நீ எது செய்தாலும் அது சிறப்பாக முடியாது' என்று மனம் நோகும்படி பேசுவது பெற்றோர் மீது தேவையற்ற அதிருப்தியை ஏற்படுத்தும்.

    நம் உணர்வுகளை பெற்றோர் மதிப்பதில்லையே என்ற ஆதங்கம் பிள்ளைகளை பிடிவாத குணம் கொண்டவராக மாற்றக்கூடும்.


    அடிக்கடி தொந்தரவு செய்தல்

    பெற்றோர் ஏதேனும் ஒரு வேலையை பிள்ளைகளிடம் ஒப்படைத்தால் அதனை அவர்கள் நிறைவேற்றி கொடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும். அந்த வேலை பற்றிய செயல்பாடுகளில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்களா? தொடர்ந்து ஆர்வமாக வேலையை தொடர்கிறார்களா? என்று கண்காணிக்கலாம்.

    ஆனால் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை மீது குறை சொல்லிக்கொண்டே இருப்பது, அடிக்கடி திருத்தம் சொல்லிக்கொண்டே இருப்பது, 'இப்படி செய்தால்தான் சரியாக இருக்கும்' என்று கருத்து கூறுவது, வேலையில் சிறு தவறு செய்தாலும் கண்டிப்பது போன்ற செயல்பாடுகள் பிள்ளைகளிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தும்.

    அந்த வேலை மீதான ஆர்வத்தை குறைக்கக்கூடும். எப்போதும் நம்மை குறைசொல்வதுதான் பெற்றோரின் மன நிலையாக இருக்கிறது என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுவார்கள்.

    அடுத்து பெற்றோர் சொல்லும் வேலையை பிடிவாதமாக மறுக்கும் மன நிலைக்கு ஆளாகக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் பிள்ளைகளை அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

    நன்றி சொல்லாமல் இருத்தல்

    பிறர் நமக்கு செய்யும் உதவிகளுக்கு உடனடியாக நன்றி தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்து கொடுக்கும் வேலைக்கு நன்றி சொல்வதற்கு பெற்றோர் முன்வர வேண்டும்.

    வயதில் சிறியவர்தானே நாம் எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடத்தில் வெளிப்படக்கூடாது. நன்றி சொல்வதற்கு வயது பொருட்டல்ல.

    செய்யும் வேலை, உதவியின் தன்மைக்கேற்ப நன்றி சொல்ல முன் வர வேண்டும். இந்த பழக்கத்தை குழந்தைகள் சிறு வயதிலேயே கற்றுக்கொள்வதற்கு பெற்றோரே 'ரோல் மாடலாக' இருக்க வேண்டும்.

    அதைவிடுத்து 'இதெல்லாம் ஒரு வேலையா? இதை செய்ததற்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டுமா?' என்ற மனப்பான்மை உருவாகுவதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது.


    ஒழுக்கத்தை கடைப்பிடித்தல்

    பெற்றோரின் நடத்தைகள் எப்படி இருக்குமோ அதனை பின்பற்றித்தான் பிள்ளைகள் வளர்வார்கள். அதனால் ஒழுக்கம் விஷயத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

    ஒழுக்கம் வாழ்வின் உயர்வுக்கு இன்றியமையாதது என்பதை சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அதுவே பின்னாளில் அவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றும்.

    • கழுத்தருகில் ஏதாவது கட்டிகள் இருந்தாலும் விக்கல் ஏற்படும்.
    • தண்ணீரை வேகமாக குடிக்கலாம்.

    மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதி உதரவிதானம் (டயப்ரம்) எனப்படுகிறது. இது நம் வாழ்நாள் முழுவதும் விடாது செயல்படும் உறுப்பாகும். இது மூச்சு விடுவதற்கும், உணவு வயிற்றுக்கு செல்வதற்கும் துணை செய்கிறது. இந்த தசைப்பகுதி திடீரென விரிந்து சுருங்கும் போது விக்கல் ஏற்படுகிறது.


    காரணங்கள்

    ஜீரணக் கோளாறு, குறைந்த அளவு புரதச்சத்துள்ள உணவுகளை எடுப்பது, கொழுப்புச் சத்துள்ள உணவை அதிகமாக உட்கொள்வது, அதிக காரத்துடன் உணவை எடுத்துக் கொள்வது, மாவுப் பண்டங்கள் அதிகமாக சாப்பிடுவது, ருசியான சாப்பாடு என்று மூச்சு விடக் கூட முடியாதபடி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, வேகவேகமாக சாப்பிடுவது போன்றவற்றால் இந்த தசைப்பகுதி சுருங்கி விரிவதால் விக்கல் ஏற்படுகிறது.

    கல்லீரல் வீக்கம், இரைப்பை வீக்கம், உணவுக் குழாய் பாதிப்பு, நுரையீரலின் அடிப்பாகத்தில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு ரத்தத்தில் ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படாமல் தேங்கும் பொழுது, கழுத்தருகில் ஏதாவது கட்டிகள் இருந்தாலும் விக்கல் ஏற்படும். ஏனெனில் பெர்னிக் என்னும் நரம்பு கழுத்து தண்டுவடத்திலிருந்து ஆரம்பித்து மார்புப் பகுதிக்குள் உதரவிதான தசை வரை வருகிறது.


    கண் சிவத்தல், கண்ணீர் வருதல், தொண்டை வறட்சி மற்றும் தொடர்ந்து விக்கல் ஏற்படும் போது வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சல் ஏற்படுவது உண்டு. தொடர்ச்சியாக விக்கல் இருந்தால் இது பல பிரச்சினைகளுக்கான எச்சரிக்கையாக இருப்பதால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

    விக்கலை தடுக்கும் முறைகள்:

    1) மூச்சு விடுவதை தற்காலிகமாக நிறுத்தும்போது விக்கல் நின்று விடும். இதனால் தான் மூச்சை இழுத்துப் பிடித்தாலோ, தம் பிடித்தாலோ விக்கல் சட்டென்று நின்று விடுகிறது.

    2) தண்ணீரை வேகமாக குடிக்கலாம். தண்ணீர் குடிக்கும் போது நாம் மூச்சு விடுவதில்லை. அப்போது உதரவிதான தசை இயல்பாக சுருங்கி விரிவதால் விக்கலும் நின்றுவிடும்.


    3) அதிர்ச்சியாக ஏதாவது பேசினால் நாம் திடீரென விக்கித்துப் போய்விடுவோம். அதன் பலனாகவும் விக்கல் நின்று விடும்.

    4) சீரகம், திப்பிலி இரண்டையும் வறுத்து பொடி செய்து சிறிதளவு தேனில் சாப்பிட விக்கல் நின்று விடும்.

    • பக்கவாட்டில் படுத்து தூங்க முயற்சி செய்ய வேண்டும்.
    • சற்று உயரமான தலையணையை பயன்படுத்துவது நல்லது.

    தூக்கத்தில் தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்து மூச்சுக் குழாயின் உள்சுற்றளவு குறைகிறது. இந்த குறுகிய பாதையில் காற்று செல்லும்போது குறட்டை ஏற்படுகிறது. குறட்டையானது பெரும்பாலும் பாதிப்பில்லாதது என்றாலும், அது தூக்கத்தை சீர்குலைத்து பகல்நேர சோர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ரத்த சர்க்கரை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.


    குறட்டை ஏற்படுவதற்கு முக்கிய காரணம்:

    மரபணு காரணங்கள், உடல் பருமன், சளி, ஒவ்வாமை, சைனஸ் பிரச்சினைகளால் ஏற்படும் மூக்கடைப்பு, மூக்கு செப்டம் விலகல், சிறிய தாடை போன்ற முக கட்டமைப்பு காரணங்கள், தொண்டை சதை (டான்சில்) வீக்கம், மல்லாந்து படுத்து தூங்கும் பழக்கம் (இதில் நாக்கு பின்வாங்கி சுவாசபாதையை தடுக்கும்), தைராய்டு குறைபாடு, புகைப்பழக்கம், மது பழக்கம், இரவில் அதிக தூக்க மாத்திரை உட்கொள்ளுதல்.

    நீரிழிவு நோயாளிகளில் 4 பேரில் ஒருவருக்கு தூக்கத்தில் குறட்டையால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு குறட்டை விடும் போது ஏற்படும் மூச்சுத்திணறல், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கி, இன்சுலின் எதிர்மறை நிலையை ஊக்குவிக்கிறது.

    அது மட்டுமல்ல, குறட்டை விடும் போது சிலருக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை குறைத்து, கார்டிசால் போன்ற ஹார்மோன் அளவை அதிகரிக்க செய்து, ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது.

    மேலும் குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.


    குறட்டை வராமல் தடுக்க சர்க்கரை நோயாளிகள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.

    1) தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொண்டும், நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும்.

    2) புகைப் பழக்கம் மற்றும் மதுபழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.

    3) மூக்கடைப்பு பிரச்சினை உள்ளவர்கள் நாசி பாதைகளை திறக்க மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்த நாசி டைலேட்டர்கள் அல்லது ஒவ்வாமை மருந்துகளை பயன்படுத்தலாம்.

    4) போதுமான அளவு தண்ணீர் குடித்து நீரேற்றத்துடன் இருங்கள். ஏனெனில் நீரிழப்பு தொண்டை திசுக்களை வறட்சியடையச் செய்து குறட்டையை மோசமாக்கும்.

    5) மல்லாக்க படுத்து தூங்காமல் பக்கவாட்டில் படுத்து தூங்க முயற்சி செய்ய வேண்டும்.

    6) சற்று உயரமான தலையணையை பயன்படுத்துவது சுவாச பாதையை திறந்து வைத்து குறட்டையை குறைக்க உதவும்.

    • சுமார் 15 சதவீதம் பேருக்கு இந்தபிரச்சினை இருக்கிறது.
    • டாக்டரின் ஆலோசனை இல்லாமல் காதிற்குள் மருந்துகள் போடக்கூடாது.

    நீங்கள் அவதிப்படுவதாக சொல்கின்ற 'பல்சடைல் டின்னிடஸ்' என்பது காதிற்குள் கேட்கும் ஒரு வகை சீரான தாளத்துடன் துடிக்கக்கூடிய சப்தத்தோடு சேர்ந்த காதிரைச்சல் என்பதேயாகும்.


    அதாவது உங்களைச் சுற்றி எந்தவித சப்தமும் இல்லாதபோதும் உங்கள் காதிற்குள் மட்டும் உங்கள் இதயத்துடிப்பின் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை 'சீர்தாள துடிப்புக் காதிரைச்சல்' என்றும் அழைக்கலாம்.

    இந்த சப்தம் ஒருபக்க காதிலோ அல்லது இருபக்க காதிலோ கேட்கலாம். சப்தம் காதிற்குள் அதுவாகவே ஏற்படும். பின் சில நிமிடங்களில் அதுவாகவே போய்விடும். சிலருக்கு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். மொத்த ஜனத்தொகையில் சுமார் 15 சதவீதம் பேருக்கு இந்தபிரச்சினை இருக்கிறது.

    இந்த 'சீர்தாள துடிப்புக் காதிரைச்சல்' ஏற்படுவதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். வயதானவர்களிடம் தான் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது.


    ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக சப்தத்தை ஒரே நேரத்தில் ஒரேயடியாக கேட்பது, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்து, தலை போன்ற இடங்களிலுள்ள ரத்தக்குழாய்களில் வீக்கம், காதிற்குள் அதிக அளவில் மெழுகு சேருவது, தலை கழுத்துப் பகுதியில் கட்டிகள், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தொற்று, இதய நோயுள்ளவர்கள், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்கள், ஹைப்பர்தைராயிடிசம் பிரச்சினை உள்ளவர்கள், ரத்தசோகை உள்ளவர்கள், இதுபோக இன்னும் பல காரணங்கள் காதிரைச்சலை உண்டாக்குகின்றன.

    பதற்றம், மனச்சோர்வு, மனக்கவலை, எரிச்சலூட்டும் செயல்கள், சரியான தூக்கமின்மை, காது கேட்கும் திறன் குறைந்து போதல், போக்குவரத்து நெரிசல் மற்றும் மிக அதிக சப்தம் உள்ள இடங்களில் அதிக நேரம் நிற்பது இவைகள் எல்லாம் கூட காதிரைச்சலை உண்டுபண்ணும். காதிரைச்சல் உள்ள பலருக்கு காது கேளாமையும் லேசாக இருக்கக்கூடும்.

    இந்த பிரச்சினை உள்ளவர்கள் ரத்த பரிசோதனை, ஆடியோகிராம், ஸ்கேன் முதலிய பரிசோதனைகளின் முடிவுகளுடன் காது மூக்கு தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணரைச் சந்தித்து அவரது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும்.

    டாக்டரின் ஆலோசனை இல்லாமல் காதிற்குள் மருந்துகள் போடக்கூடாது. குச்சி, பென்சில், கோழி இறகு, பட்ஸ் போன்றவற்றை காதிற்குள் போட்டுக் குடையக் கூடாது.


    மிக அதிக சப்தம் கேட்கும் இடங்களில் வேலை பார்ப்பவர்கள் காதிற்குள் கேட்கும் ஒலியைக் குறைக்க 'இயர் ப்ளக்' என்று சொல்லக்கூடிய ரப்பராலான காது செருகிகளை மாட்டிக் கொள்ளுதல் நல்லது.

    பேச்சு சிகிச்சை, ஒலி சிகிச்சை, காது கேட்கும் கருவிகளை உபயோகப்படுத்துதல் போன்றவைகள் இந்த காதிரைச்சல் பிரச்சினைக்கு செய்யப்படும் ஆரம்ப சிகிச்சை ஆகும்.

    காதிரைச்சல் என்பது ஒரு நோயினுடைய பிரச்சினையே தவிர இது நோயல்ல. என்ன நோயினால் இரைச்சல் ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடித்து அதை சரி செய்தால் காதிரைச்சல் சரியாகிவிடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.
    • விட்டமின் பி-12 ஊட்டச்சத்து சரியான அளவு உணவில் இருக்க வேண்டும்.

    ஒரு பெண்ணின் வாழ்க்கையை முழுமை செய்யும் விஷயம் தாய்மைப்பேறு அடைவதாகும். குழந்தையை கருவில் தாங்கி அதை சீராக போற்றி வளர்த்து, பெற்றெடுத்து, சீரும் சிறப்புமாக வளர்க்கும் பொறுப்பு தாய்க்கே உரியது.

    குழந்தைப்பேறுக்குப் பின்னர் உடலில் உள்ள காயங்களை ஆற்றும் வகையில் மஞ்சள் செயல்படுகிறது. மஞ்சளில் விட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் அடங்கியிருப்பதால் உடலின் உட்புற மற்றும் வெளிப்புற காயங்களை அது விரைவாக குணப்படுத்துவதோடு, உடல் வீக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது. அதனால் ஒரு டம்ளர் பசும்பாலுடன் சிறிதளவு நல்ல மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.

    குழந்தை பேற்றுக்குப்பின் பின்னர் தாயின் உடலில் பல்வேறு சத்துக்களின் இழப்பு ஏற்பட்டு, உடல் பலவீனமும் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டிய பெரும் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும். அதனால், அவர்களுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.

    குழந்தை பெற்றெடுத்த பின்னர் தாயின் உடல் நிலையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடல் மற்றும் மனநிலையில் அந்த தாய் பல சிக்கல்களை சந்திக்கிறாள். அந்த சிக்கல்களை தாங்கும் அளவுக்கு அவள் தன்னை உடல் ரீதியாக தகுதியுள்ளவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று தாய்-சேய் நல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அந்த வகையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பது அந்த தாய்க்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் உடல் நலனை ஏற்படுத்தும். அத்துடன் பிரசவத்தால் ஏற்பட்ட உடல் வலி, காயங்கள் ஆகியவை விரைவில் குணமடையும் விதத்திலும் அந்த உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். தேவையான அளவிற்கு தாய்ப்பால் சுரக்க உதவுவதாகவும் அந்த உணவு அமைவதும் அவசியம்.

    ஒரு நாளைக்கு 3 முதல் 4 அவுன்ஸ் புரதச்சத்து அடங்கிய உணவுகளை அந்த தாய் எடுத்துக் கொள்வது நல்லது. அத்துடன் 4 அல்லது 5 முறை பால் மற்றும் பால் பொருட்களை உண்ணலாம். அதன் மூலம் உடலுக்கு தேவைப்படும் புரதம், கால்சியம் ஆகியவை ஈடுகட்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், முட்டை, பன்றி இறைச்சி, பருப்புகள், பல்வேறு விதைகள் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    விட்டமின் பி-12 ஊட்டச்சத்து சரியான அளவு உணவில் இருக்க வேண்டும். அதன் மூலம் உடல் சோர்வு, எடை குறைதல், வாந்தி வருதல் ஆகிய சிக்கல்கள் விலகும். பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உடல் சோர்வை அகற்றும் விதமாக இரும்புச்சத்து, விட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் தக்காளி, சிட்ரஸ் பழங்கள், உருளைக்கிழங்கு, பிரக்கோலி ஆகியவற்றை உண்ணலாம். அத்துடன் கீரை வகைகள், எள் சேர்த்த தின்பண்டங்களையும் உட்கொள்ளலாம்.

    • அறுபது நிமிடம் நடைப்பயிற்சி செய்வது உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க போதுமான நேரத்தை அளிக்கும்.
    • தொடர்ந்து 60 நிமிடங்கள் நடப்பது உடலுக்கும், தசைகளுக்கும் பலம் சேர்க்கும்.

    நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பலரும் அதனை தவறாமல் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக, காலை 6 மணி, மாலை 6 மணி என 60 நிமிடங்கள் நடப்பதும், 6 நிமிடங்கள் வார்ம்-அப் பயிற்சி செய்வதும், 6 நிமிடங்கள் உடலை குளிர்வடையச் செய்வதும்தான் நடைப்பயிற்சியின் பலன்களை அதிகமாக்கும். இந்த நடைப்பயிற்சி முறையை 6-6-6 நடைப்பயிற்சி என்கிறார்கள். இதன்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது எத்தகைய பயன்களை தரும் என்பதை அறிந்து கொள்வோம்.

    காலை 6 மணி

    தினமும் சராசரியாக 30 நிமிடங்கள் நடப்பது இதய நோய் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் உள்ளன. புதிய காற்றை சுவாசிக்கவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் அது சிறந்த நேரமாக அமையும். அத்துடன் உடலை உற்சாகமாக செயல்பட வைக்கும், மனத்தெளிவை தூண்டும்.

    அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கும் வித்திடும். பிற உடற்பயிற்சிகளை செய்வதற்கு போதிய நேரம் கிடைக்காவிட்டாலும் காலையில் சுறுசுறுப்பாக இருப்பதும், நடைப்பயிற்சி செய்வதும் இதயநோய் மற்றும் பக்கவாத நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று ஐரோப்பிய இதயவியல் சங்கம் கூறுகிறது.

    மாலை 6 மணி

    மாலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்த உதவிடும். அன்றைய நாளின் வேலைப்பளுவின்போது ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் வழிவகை செய்யும். அத்துடன் மாலை நேர நடைப்பயிற்சி உடலை தளர்வடைய செய்து நிம்மதியான தூக்கத்திற்கு வித்திடும். அன்றைய நாளில் நடந்த அனைத்தையும் சிந்தித்து பார்ப்பதற்கான நேரமாகவும் மாலை நேர நடைப்பயிற்சியை மாற்றிக்கொள்ளலாம். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது சிறிது நேரத்தையாவது இந்த நடைப்பயிற்சியை செய்வதற்கு ஒதுக்கலாம். அது முடியாவிட்டால் அலுவலக வளாகத்திலாவது 2 நிமிடங்கள் வேகமாக நடக்கலாம்.

    60 நிமிடம்

    அறுபது நிமிடம் நடைப்பயிற்சி செய்வது உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க போதுமான நேரத்தை அளிக்கும். இதய ஆரோக்கியம், நுரையீரல் செயல் திறனை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் இருப்பவர்கள், நடைப்பயிற்சியை மட்டுமே தங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடியவர்கள் வாரத்தில் 5 முறையாவது குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    அப்படி தொடர்ந்து 60 நிமிடங்கள் நடப்பது உடலுக்கும், தசைகளுக்கும் பலம் சேர்க்கும். மனதை முழுமையாக மீட்டமைக்கும். அப்படி ஒரு மணிநேரம் நடப்பது உடல் நலனில் அக்கறை கொள்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும். தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துவிடும்.

    தொடர்ந்து 60 நிமிடங்கள் நடப்பது உடலுக்கும், தசைகளுக்கும் பலம் சேர்க்கும். மனதை முழுமையாக மீட்டமைக்கும்.

    • குளிர்ந்த நீர் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
    • மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது பலனளிக்கும்.

    ஐஸ்கட்டி போல் ஜில்லென குளிர்ந்திருக்கும் நீரில் குளியல் போடுவது கூட ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதுதான். 'குளிர் நீர் தெரபி' எனப்படும் இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    * தசை வலி

    உடற்பயிற்சியின்போதோ, கடுமையான உடல் உழைப்பின்போதோ ஏற்படும் தசை வலியை போக்க குளிர்ந்த நீர் சிகிச்சை உதவும். ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த நாளங்களின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் பணியை எளிதாக்கும். மேலும் குளிர்ந்த நீர் சிகிச்சை உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைப்பதன் மூலம் தசைகளுக்கு புத்துயிர் அளிக்கும். லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றும். கடுமையான உடல் செயல்பாடுகளுக்கு பிறகு ஏற்படும் தசை வலியையும் குறைக்கும்.

    * தூக்கம்

    குளிர்ந்த நீர் சிகிச்சை நன்றாக தூங்கவும் உதவிடும். உடல் வெப்பநிலை குளிர்ச்சி சூழலில் இருப்பது தூக்கத்திற்கு உகந்தது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தூங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் குளியல் போடுவது ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

    * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    குளிர்ந்த நீர் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதனால் சட்டென்று நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பும் குறையும். குளிர் நீர் சிகிச்சை மேற்கொண்டவர்கள் வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதாக நெதர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

    * மனநிலையை மேம்படுத்தும்

    ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டு மன ரீதியாக பலவீனமாக இருந்தாலோ, மன வேதனைக்கு ஆளானாலோ மன நிலையை மேம்படுத்துவதற்கு குளிர்ந்த நீர் குளியல் துணை புரியும். அப்படி உடலில் குளிர் வெப்பநிலை வெளிப்படுவது நோராட்ரெனலின் உற்பத்தியை அதிகரிக்கும். இது மூளையை தூண்டி கவனமுடன் செயல்படுவதற்கு ஊக்கமளிக்கும். மன நிலையை செம்மைப்படுத்தவும் வழி வகுக்கும்.

    * மனச்சோர்வை போக்கும்

    மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது பலனளிக்கும். இந்த குளிர் நீர் குளியல் மூளையில் இருந்து நரம்பு மண்டலம் வழியாக பயணிக்கும் நரம்புகளை தூண்டி அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவிடும். உடலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி சோர்வை விரட்டிவிடும். அதிலும் மனதளவில் மந்தமாகவும், சோர்வாகவும் உணர்ந்தால் குளிர்ந்த நீர் சிகிச்சை சிறந்த தீர்வாக அமையும். மனத்தெளிவை உண்டாக்கும். கவனிக்கும் திறனையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் வலுப்படுத்தும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாசிப் பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.
    • வாழைப்பழம் இதய ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.

    2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.


    பருப்பு உணவுகள்

    இரண்டு வயது குழந்தைக்கு பருப்பு சம்பந்தப்பட்ட உணவை தினமும் உண்ணக்கொடுக்கும்போது, உடலில் புரதத்தின் அளவு சரியாக தக்க வைக்கப்படும். பருப்பு வகைகளில் பல வகைகள் இருக்கிறது. இருப்பினும் பாசிப் பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.

    ஆரோக்கியமான எண்ணெய்கள்

    ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், சோயா பீன்ஸ், பிற நட்ஸ் வகைகள் மற்றும் அவற்றின் எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றை இரண்டு வயது குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாம்.

    பால் பொருட்கள்

    பால் பொருட்களான பால், தயிர், பன்னீர் அனைத்தும் கால்சியம் நிறைந்தவை. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. உங்கள் குழந்தைக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால், கால்சியம் பற்றாக்குறையை ஈடுசெய்ய கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


    வாழைப்பழங்கள்

    மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இதய ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. தசை வலிமைக்கு தேவையான சத்துக்கள் வாழைப்பழங்களில் காணப்படுகின்றன. இந்த நன்மை பயக்கும் பழத்தை தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் இணைத்து சாப்பிடலாம்.

    கேரட்

    கேரட் 'வைட்டமின்-ஏ' நிறைந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கீரை மற்றும் பிற காய்கறிகளிலும் வைட்டமின்-ஏ அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.


    கோழி

    கோழி மற்றும் பிற அசைவ உணவுகளில் எளிதில் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்து உள்ளது. இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு சக்தி அளிக்க உதவுகிறது. ரத்த சோகையைத் தடுக்கிறது.

    சிட்ரஸ் பழங்கள்

    எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவை வைட்டமின்-சி உள்ளடக்கத்திற்கு புகழ் பெற்றவை. வைட்டமின்-சி குறைபாடு ஸ்கர்வி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். ஈறுகள் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் வைட்டமின்-சி உதவுகிறது. மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றிலும் வைட்டமின்-சி உள்ளது.


    மீன்

    அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டவைகளுள் மீன் ஒரு நல்ல மூலமாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. இதய அமைப்பை பலப்படுத்துகின்றன.

    வைட்டமின்-டி

    இது ஒரு உணவு அல்ல என்றாலும், உடல் உறிஞ்சும் சத்தாகும். உடல் வளர்ச்சியில் வைட்டமின்-டி முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    • மார்ச் 8-ந் தேதி ஒரு மாபெரும் பேரணியை பெண்கள் நடத்தினார்.
    • பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக அறிவிப்பு

    சர்வதேச பெண்கள் தினம் இந்த வாரம் (மார்ச் 8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த தினம் தோன்றியது, கொண்டாட்டத்தில் அல்ல, போராட்டத்தில்.

    பெண்கள் தினத்துக்கும், அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷியப் புரட்சி இயக்கத்துக்கும் பங்கு உண்டு என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

    1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேச பெண்கள் தினமாக ஐ.நா. சபை அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.


    இந்த நாளின் வரலாறு தெரியுமா?

    மார்ச் 8-ந் தேதி ஒரு மாபெரும் பேரணியை பெண்கள் நடத்தினார். வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தியும், வாக்களிக்கும் உரிமை கோரியும் சுமார் 15 ஆயிரம் உழைக்கும் பெண்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

    இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி.

    இந்த நாளை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர். பெண்ணுரிமைப் போராளி கிளாரா ஜெட்கின்.

    டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா, அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர்.

    அதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    ஆனால் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. சபை, மார்ச் 8-ந் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது.

    அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக் கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது. இதன்படி ஐ.நா.சபை அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம், 'சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமை யாக சிந்தி.

    சமூகம், அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது.

    ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள்தான் இந்த நாளின் பின்னணியில் இருக்கின்றன .

    முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது 1917-ஆண்டு, ரஷியாவில் போர் வேண் டாம். 'அமைதியும் ரொட்டியும்' தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ந் தேதி பெண்கள் போராட்டத்தை தொடங்கினர். நான்குநாள்கள் நடந்த இந்த போராட்டம், சர்வ தேசமகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது.

    நான்கு நாள்கள் நீடித்த இந்த போராட்டம் கடைசியில் ரஷிய மன்னரான ஜார், அரியணை துறப்பதற்கு காரணமாக அமைந்தது. மன்னராட்சி முடிவுக்கு வந்த நிலை யில், அதற்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம், பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது.

    இந்த மாற்றம்தான், 1917-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷியப் புரட்சிக்கு காரணமாக அமைந்தது. அப்படி புரட்சியின் பின்புலமாக இருந்த மகளிர் தினம், பெண்களின் பெருமை போற்றும் நாளாக உருவெடுத்துள்ளது.

    • வறண்ட சருமம், ஜெரோசிஸ் அல்லது ஜெரோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது.
    • உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    வறண்ட சருமம் என்பது தோல் வறட்சியாக கரடுமுரடாக, செதில்களாக உலர்ந்து காணப்படும் நிலையாகும். இந்த உலர்ந்த திட்டுகள் உருவாகும் இடம் நபருக்கு நபர் மாறுபடும். இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலையாகும். வறண்ட சருமம், ஜெரோசிஸ் அல்லது ஜெரோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு வாழ்வியல் மருத்துவ காரணங்கள் உள்ளது.


    தோல் பராமரிப்பு:

    மனித உடல் செல்களின் அழிவை ஏற்படுத்தும் பொருட்களை செல்களில் இருந்து அகற்றி செல்களின் அழிவை தடுப்பவை ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும். வைட்டமின்களில் ஏ, சி, ஈ மற்றும் தாதுக்களில் செலினியம், துத்தநாகம், அமினோ அமிலங்களில் குளுட்டத்தயோன், எல் அர்ஜினின் போன்றவை மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஆகும். இவை உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் இளமையுடனும் நோய் அணுகாமல், தோல் வசீகரத்துடனும் திகழலாம்.

    பாதாம், பிஸ்தா, வால்நட், அனைத்து வகை கைக்குத்தல் அரிசி, காளான்கள், கடல் சிப்பி, பூண்டு, பருப்பு, வாழைப் பழங்கள் போன்றவற்றில் செலினியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.


    பூசணி விதை, காளான், கடல் சிப்பி, இறால், கோழி இறைச்சி, சாக்லெட், பருப்பு வகைகள், கொண்டைக் கடலை, பீன்ஸ், முந்திரிப் பருப்பு போன்ற உணவு வகைகளில் துத்தநாகம் சத்து நிறைந்துள்ளது.

    கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பசலைக் கீரை, பால் ஏடு, முலாம் பழம், முட்டை, மத்திச்சாளை மீன்கள், பப்பாளி, பிரக்கோலி, மாம்பழம், பச்சைப் பட்டாணி, முருங்கைக் கீரை, ஆரஞ்சு போன்ற உணவு வகைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

    தோலை பராமரிப்பதற்கு சத்தான உணவுகள் மட்டும் அல்லாது, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். மன உளைச்சல், மன அழுத்தம் கூடாது. தினமும் ஆறு முதல் ஏழு மணிநேரம் தூக்கம் அவசியம். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.


    1) தோல் வறட்சி நீங்கி பளபளப்புடன், வாசனையுடன் திகழ நலுங்குமா பயன்படுத்த வேண்டும். நலுங்குமா தயாரிக்கும் முறை: பாசிப்பயறு, வெட்டி வேர், சந்தனத் தூள், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, விலாமிச்சு வேர், கிச்சிலிக் கிழங்கு ஆகிய இந்த ஏழு பொருட்களையும் சம அளவில் எடுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை சோப்பிற்கு பதிலாக தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி, சொறி, சிரங்கு நீங்கி, தோல் பளபளப்புடன் வாசனையுடன் இருக்கும்.

    2) தோல் சொரசொரப்புடன் காணப்பட்டால், அருகம்புல் சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, அதை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு தோலில் தேய்த்து பின்பு குளித்து வந்தால் தோல் வறட்சிகள் நீங்கிவிடும்.

    3) ஆவாரம் பூ தோல் வறட்சி, வியர்வை நாற்றத்தை நீக்குகிறது. ஆவாரம் பூ பொடி காலை, இரவு 500 மி.கி. வீதம் சாப்பிட்டு வந்தால் தோல் பளபளக்கும். இதை நலுங்குமா பொடியிலும் சேர்த்து குளியல் பொடியாக பயன்படுத்தலாம்.

    4) பி.எச் 5.5 அளவுள்ள குளியல் சோப்புகளை பயன்படுத்தினால் தோல் வறட்சி, சொர சொரப்பு இருக்காது.

    5) தேங்காய்ப் பால் சிறிதளவு எடுத்து அதனுடன் குங்குமப் பூ சேர்த்துக் காய்ச்சி, உடலில் தேய்த்து மாலை வெயிலில் சிறிது நேரம் காய்ந்து, பிறகு குளித்து வந்தால் உடல் மேன்மை அடையும். தோல் பளபளப்பாகும். தோல் நல்ல வனப்புடன் இருக்க தேங்காய்ப் பாலில் காய்ச்சிய விர்ஜின் தேங்காய் எண்ணெய்யை உடலில் தடவி ஒரு மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும்.

    • பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் லெக்டின்கள் நிறைந்துள்ளன.
    • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லதல்ல என்பது பொதுவான நம்பிக்கை.

    உடல் ஆரோக்கியத்தை சீராக பேணுவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உணவு, ஊட்டச்சத்து விஷயத்தில் சரியான புரிதலின்றி செயல்படுகிறார்கள். அதனால் அவை சார்ந்த கட்டுக்கதைகளும் ஏராளம் உலவுகின்றன. அவற்றுள் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி பார்ப்போம்.

    கட்டுக்கதை 1 : காலை உணவை தவிர்த்தால் உடல் எடை அதிகரிக்கும்.

    உண்மை: காலை உணவு முக்கியமானதுதான். அதனை தவிர்ப்பது நல்லதல்ல. அதேவேளையில் காலை உணவு சாப்பிடாவிட்டால் மதிய உணவை அதிகமாக சாப்பிட தோன்றும், உடல் எடை அதிகரிக்கும் என்பதெற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை.

    கட்டுக்கதை 2: நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

    உண்மை: காலை-மதியம், மதியம்-இரவு உணவுக்கு இடையே நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவிடும். இருப்பினும் நீங்கள் எந்தவகையான நொறுக்குத்தீனி தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியமானது. அவை ஆரோக்கியமற்றவையாக இருந்தால் உடல் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நொறுக்குத்தீனி வகைகளில் பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் இடம் பெறுவது நல்லது.

    கட்டுக்கதை 3: உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவிடும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். நச்சு நீக்கம் செய்ய வேண்டியது அவசியமானது.

    உண்மை: நச்சு நீக்கம் என்பது கட்டுக்கதை. ஏனெனில் நச்சு நீக்க உணவுகள் பயனுள்ளவை, பாதுகாப்பானவை என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை. அவை பெரும்பாலும் அறிவியல் ரீதியாக ஆதரிக்கப்படாத, மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டவை.

    அவற்றை தொடர்ந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் சாதாரண உணவை உட்கொள்ள தொடங்கும்போது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கக்கூடும். மேலும் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் இயற்கையான நச்சு நீக்க அமைப்புகளுக்கு தீங்குவிளைவிக்கும்.

    கட்டுக்கதை 4: குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை உட்கொள்வது நல்லது.

    உண்மை: குறைந்த கொழுப்பு உணவுகள் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்களை உள்ளடக்கி இருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலான உணவுகள் அதிகப்படியான பசி, எடை அதிகரிப்பு உள்பட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். பதப்படுத்தப்படாத உணவுகள் மற்றும் இயற்கையாகவே கொழுப்பு குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவதுதான் சிறந்தது.

    கட்டுக்கதை 5: பீன்ஸ் நச்சுத்தன்மை வாய்ந்தவை.

    உண்மை: பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் லெக்டின்கள் நிறைந்துள்ளன. அவை விஷத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் பீன்ஸை சமைக்கும்போது லெக்டினின் வீரியம் குறையக்கூடும். அத்துடன் பீன்ஸ் நார்ச்சத்து நிரம்பப்பெற்றது. உடல் எடை இழப்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

    கட்டுக்கதை 6: சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருளைக்கிழங்கை விட ஆரோக்கியமானது.

    உண்மை: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லதல்ல என்பது பொதுவான நம்பிக்கை. பெரும்பாலானவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட விரும்புகிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை வள்ளிக்கிழங்கும், உருளைக்கிழங்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டவைதான். சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக உள்ளடங்கி இருக்கிறது.

    கட்டுக்கதை 7: சிவப்பு ஒயின் இதயத்திற்கு ஆரோக்கியமானது.

    உண்மை: மது பானங்களால் எந்த நன்மையும் இல்லை. எந்த வகை மதுபானமாக இருந்தாலும் அதனை பருகுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும், மிதமான அளவு சிவப்பு ஒயின் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தாது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    கட்டுக்கதை 8: முட்டை உட்கொள்வது இதயத்திற்கு நல்லதல்ல.

    உண்மை: புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த சூப்பர் உணவாக முட்டை கருதப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வாரத்திற்கு 7 முட்டைகள் வரை சாப்பிடலாம். இதய நோய் அபாயத்தை அதிகரிக்காது. முட்டை உட்கொள்வது சில வகை பக்கவாதம் மற்றும் மாகுலர் சிதைவு எனப்படும் கடுமையான கண் நோய்களை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    கட்டுக்கதை 9: சமச்சீரான உணவு பழக்கத்துக்கு இறைச்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    உண்மை: உணவியல் நிபுணர்களின் கருத்துப்படி இறைச்சியை உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள்தான் பிரதான உணவாக அமைய வேண்டும்.

    ×