என் மலர்
ஆரோக்கியம்
முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த கீரையை வைத்து சத்தான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை - அரை கப்
தக்காளி - ஒன்று
எலுமிச்சை - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
பூண்டு - 3 பற்கள்
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித் தழை (காம்புடன்) - சிறிது
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை

செய்முறை :
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்தெடுக்கவும்.
பிறகு அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்
பின்பு அத்துடன் தூள் வகைகளைச் சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவேண்டும் .
பிறகு தக்காளி குழைய வதங்கியதும் முருங்கைக்கீரையை வேக வைத்த நீருடன் சேர்த்து, தேவையான அளவு சுடு நீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்துவிடவேண்டும்
நுரை பொங்கி வரும் போது உப்பு சேர்த்து ஒரு கொதிவரவிட்டு இறக்கவும்.
முருங்கைக்கீரை - அரை கப்
தக்காளி - ஒன்று
எலுமிச்சை - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
பூண்டு - 3 பற்கள்
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித் தழை (காம்புடன்) - சிறிது
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - ஒன்று

செய்முறை :
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்தெடுக்கவும்.
பிறகு அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்
பின்பு அத்துடன் தூள் வகைகளைச் சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவேண்டும் .
பிறகு தக்காளி குழைய வதங்கியதும் முருங்கைக்கீரையை வேக வைத்த நீருடன் சேர்த்து, தேவையான அளவு சுடு நீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்துவிடவேண்டும்
நுரை பொங்கி வரும் போது உப்பு சேர்த்து ஒரு கொதிவரவிட்டு இறக்கவும்.
ஆரோக்கியமான, சுவையான முருங்கைக்கீரை ரசம் தயார்
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்கள் பட்டுப்புடவையின் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.
காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் அறிந்த ஒன்று. எனவே பட்டுப்புடவைகளை கெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான். பெண்கள் தங்களது விலை உயர்ந்த ஆடைகளை பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம்.
ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்
* விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.
* விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் “ஃபால்ஸ்” தைத்து அணியவும். ஃபால்ஸைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.
* அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.
* விலை உயர்ந்த ஆடையில் ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.
* விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட “ஓடோனில்”லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியின் வாசனையை தரும்.
* ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கருப்பதற்கு காரணமாக அமைகிறது. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.
* அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.
* விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.
மேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.
ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்
* விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.
* விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் “ஃபால்ஸ்” தைத்து அணியவும். ஃபால்ஸைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.
* அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.
* விலை உயர்ந்த ஆடையில் ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.
* விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட “ஓடோனில்”லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியின் வாசனையை தரும்.
* ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கருப்பதற்கு காரணமாக அமைகிறது. பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.
* அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.
* விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.
மேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்.
கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தமடையும் பல அறிகுறிகளையும் காட்டும்.
கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தமடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும்.
சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். இது ஆபத்தானதாக கருதப்பட்டாலும் கூட, அனைத்து நேரங்களிலும் இதனால் குழந்தையை இழந்து விட மாட்டோம். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் அறிந்து கொள்ளலாம்.
முதலில், கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லபோனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் இரத்தத்தின் தோற்றமே (நிறம், அடர்த்தி, அளவு) பிரச்சனையின் அளவையும் கூறி விடும். “கருமையான சிகப்பு அல்லது பழுப்பு நிற இரத்தம் என்றால் பழமையானதாகும். இதனால் கர்ப்பத்தின் மீது தாக்கம் இருக்காது. அதனை ஸ்பாட்டிங்காக கருதுவார்கள். இது இயல்பான ஒன்றே. இதனால் கர்ப்பத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது.
பிங்க் நிற சளி இரத்தம் என்றால் அது கருப்பை வாயிலிருந்து வெளியேற்றல், சிராய்ப்பு அல்லது வேறு சில பிரச்சனைகளால் வந்திருக்கும்.
அடர்த்தியான இரத்தம் என்றால் அது நற்பதமான இரத்தமாகும். இரத்த கசிவின் அளவை பொறுத்து கர்ப்பத்தின் மீது அது தாக்கத்தை கொண்டிருக்கும்.
இயல்பான ஒன்று. கருவுற்ற முட்டை கருப்பையின் உட்பூச்சில் இணைக்கப்படும் போது இது ஏற்படும். கருத்தரித்த 10-14 நாட்களுக்கு பிறகு இந்த கசிவை காணலாம்.
பொதுவாக இடுப்பு சோதனையின் போது இது கண்டறியப்படும். ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பு, அழற்சி அல்லது கருப்பை வாயில் அடைக்கப்பட்ட இரத்த குழாய்கள் போன்றவைகளால் கருப்பை வாய் விழுது வளரும்.
எளிமையான முறையில் இந்த விழுதுகளை நீக்கி விடலாம். அவை குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவையால் கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் இரத்த கசிவு ஏற்படலாம். ஆனால் முதல் மூன்று மாதம் கழித்து கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.
மூன்றாம் மூன்று மாத காலத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான முக்கிய பொதுவான காரணம் இதுவாகும். கருப்பையின் கீழ்பகுதியில் நஞ்சுக்கொடி வளர்ந்து, கர்ப்பப்பை வாய் பாதையை மூடுவதால் இந்த பிரச்சனை தொடங்கும்.
இந்த பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் பெண்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கப்படுவார்கள். அதேப்போல் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடுக்கப்படுவார்கள். கர்ப்ப காலம் முடியும் வரை இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், கண்டிப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை வெளியே எடுக்கப்படும்.
சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். இது ஆபத்தானதாக கருதப்பட்டாலும் கூட, அனைத்து நேரங்களிலும் இதனால் குழந்தையை இழந்து விட மாட்டோம். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் அறிந்து கொள்ளலாம்.
முதலில், கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லபோனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் இரத்தத்தின் தோற்றமே (நிறம், அடர்த்தி, அளவு) பிரச்சனையின் அளவையும் கூறி விடும். “கருமையான சிகப்பு அல்லது பழுப்பு நிற இரத்தம் என்றால் பழமையானதாகும். இதனால் கர்ப்பத்தின் மீது தாக்கம் இருக்காது. அதனை ஸ்பாட்டிங்காக கருதுவார்கள். இது இயல்பான ஒன்றே. இதனால் கர்ப்பத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது.
பிங்க் நிற சளி இரத்தம் என்றால் அது கருப்பை வாயிலிருந்து வெளியேற்றல், சிராய்ப்பு அல்லது வேறு சில பிரச்சனைகளால் வந்திருக்கும்.
அடர்த்தியான இரத்தம் என்றால் அது நற்பதமான இரத்தமாகும். இரத்த கசிவின் அளவை பொறுத்து கர்ப்பத்தின் மீது அது தாக்கத்தை கொண்டிருக்கும்.
இயல்பான ஒன்று. கருவுற்ற முட்டை கருப்பையின் உட்பூச்சில் இணைக்கப்படும் போது இது ஏற்படும். கருத்தரித்த 10-14 நாட்களுக்கு பிறகு இந்த கசிவை காணலாம்.
பொதுவாக இடுப்பு சோதனையின் போது இது கண்டறியப்படும். ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பு, அழற்சி அல்லது கருப்பை வாயில் அடைக்கப்பட்ட இரத்த குழாய்கள் போன்றவைகளால் கருப்பை வாய் விழுது வளரும்.
எளிமையான முறையில் இந்த விழுதுகளை நீக்கி விடலாம். அவை குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவையால் கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் இரத்த கசிவு ஏற்படலாம். ஆனால் முதல் மூன்று மாதம் கழித்து கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.
மூன்றாம் மூன்று மாத காலத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான முக்கிய பொதுவான காரணம் இதுவாகும். கருப்பையின் கீழ்பகுதியில் நஞ்சுக்கொடி வளர்ந்து, கர்ப்பப்பை வாய் பாதையை மூடுவதால் இந்த பிரச்சனை தொடங்கும்.
இந்த பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் பெண்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கப்படுவார்கள். அதேப்போல் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடுக்கப்படுவார்கள். கர்ப்ப காலம் முடியும் வரை இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், கண்டிப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை வெளியே எடுக்கப்படும்.
கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் முகக்கவசம் அணிவதில் சிக்கல் இருக்கிறது. மற்றவர்கள் பேசுவதை அவர்களின் உதட்டு அசைவை வைத்துத்தான் யூகிப்பார்கள். தங்களை போல் கேட்கும், பேசும் தன்மையை இழந்தவர்களுடன் உதட்டு உச்சரிப்பின் மூலமும், சைகை மொழி பேசியும்தான் தகவல்களை பரிமாறிக்கொள்வார்கள்.
முகக்கவசம் அணியும்போது வாய்ப்பகுதி முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும் என்பதால் மற்றவர்கள் பேசுவதை அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது. இந்தநிலையில் வாய்பேசாதோர், காதுகேளாதோருக்கு உதவும் நோக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஆஸ்லே லாரன்ஸ், முகக்கவசம் ஒன்றை தயாரித்திருக்கிறார்.
இந்த முகக்கவசம் வாய்ப்பகுதி மட்டும் தெரியும்படி பிளாஸ்டிக் இழைகளால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. காதுகேளாதோர் தொடர்பான படிப்பை படித்துவரும் ஆஸ்லே, உணர்வு ரீதியாக காதுகேளாதோரின் மனநிலையை கருத்தில் கொண்டு இந்த முகக்கவசத்தை உருவாக்கி இருக்கிறார். சமூகவலைத்தளத்தில் அந்த முகக்கவசத்தை பகிர்ந்தவர், ‘‘தற்போது புழக்கத்தில் இருக்கும் முகக்கவசங்கள் காது கேளாதவர் களுக்கு பொருத்தமாக இருக்காது.
ஏனெனில் வாய்ப்பகுதி மூடப்பட்டுவிடுவதால் அவர்களால் சைகை மொழியை பயன்படுத்த முடியாது. உதட்டு உச்சரிப்பு மூலமும் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியாது. மற்றவர்கள் பேசுவதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போய் விடும். முகக்கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் நிறைய பேர் தங்களுக்கு சவுகரியமான முகக்கவசத்தை தாங்களே உருவாக்கிக்கொள்கிறார்கள். அதை பார்த்தபோதுதான் நாம் ஏன் காது கேளாதவர்களுக்கு முகக்கவசம் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. இந்த முகக்கவசத்தை அணிவதன் மூலம் மருத்துவர் களையும் எளிதாக அணுக முடியும்’’ என்கிறார்.
21 வயதாகும் ஆஸ்லே தனது தாயாரின் உதவியுடன் இந்த முகக்கவசத்தை வடிவமைத்திருக் கிறார். வாய்பேச முடியாதவர்களுக்கு இலவசமாக வினியோகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமூகவலைத்தளத்தில் ஆதரவும் திரட்டி வருகிறார். தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்கள், காதுகேளாதவர்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவர்களுக்கு முகக்கவசத்தை உருவாக்குவதற்கான பயிற்சியும் வழங்க திட்டமிட்டிருக்கிறார்.
இந்த முகக்கவசத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. காது கேட்கும் தன்மை இழந்த ஒருவர் கூறுகையில், ‘‘முகக்கவசம் அணிந்திருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை யூகிப்பதற்கு கடினமாக இருக்கிறது. இந்த வகை முகமூடியை அணியும்போது என்னை போன்றவர்களிடம் என்னால் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். இது நிச்சயம் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார், மற்றொருவர், ‘‘இப்படி யொரு முகக்கவசத்தை பற்றி சிந்தித்திருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இது அற்புதமான விஷயம். இந்த முகக்கவசத்திற்கு தேவையும், அவசியமும் இருக்கிறது’’ என்கிறார்.
முகக்கவசம் அணியும்போது வாய்ப்பகுதி முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும் என்பதால் மற்றவர்கள் பேசுவதை அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது. இந்தநிலையில் வாய்பேசாதோர், காதுகேளாதோருக்கு உதவும் நோக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஆஸ்லே லாரன்ஸ், முகக்கவசம் ஒன்றை தயாரித்திருக்கிறார்.
இந்த முகக்கவசம் வாய்ப்பகுதி மட்டும் தெரியும்படி பிளாஸ்டிக் இழைகளால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. காதுகேளாதோர் தொடர்பான படிப்பை படித்துவரும் ஆஸ்லே, உணர்வு ரீதியாக காதுகேளாதோரின் மனநிலையை கருத்தில் கொண்டு இந்த முகக்கவசத்தை உருவாக்கி இருக்கிறார். சமூகவலைத்தளத்தில் அந்த முகக்கவசத்தை பகிர்ந்தவர், ‘‘தற்போது புழக்கத்தில் இருக்கும் முகக்கவசங்கள் காது கேளாதவர் களுக்கு பொருத்தமாக இருக்காது.
ஏனெனில் வாய்ப்பகுதி மூடப்பட்டுவிடுவதால் அவர்களால் சைகை மொழியை பயன்படுத்த முடியாது. உதட்டு உச்சரிப்பு மூலமும் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியாது. மற்றவர்கள் பேசுவதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போய் விடும். முகக்கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் நிறைய பேர் தங்களுக்கு சவுகரியமான முகக்கவசத்தை தாங்களே உருவாக்கிக்கொள்கிறார்கள். அதை பார்த்தபோதுதான் நாம் ஏன் காது கேளாதவர்களுக்கு முகக்கவசம் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. இந்த முகக்கவசத்தை அணிவதன் மூலம் மருத்துவர் களையும் எளிதாக அணுக முடியும்’’ என்கிறார்.
21 வயதாகும் ஆஸ்லே தனது தாயாரின் உதவியுடன் இந்த முகக்கவசத்தை வடிவமைத்திருக் கிறார். வாய்பேச முடியாதவர்களுக்கு இலவசமாக வினியோகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமூகவலைத்தளத்தில் ஆதரவும் திரட்டி வருகிறார். தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்கள், காதுகேளாதவர்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவர்களுக்கு முகக்கவசத்தை உருவாக்குவதற்கான பயிற்சியும் வழங்க திட்டமிட்டிருக்கிறார்.
இந்த முகக்கவசத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. காது கேட்கும் தன்மை இழந்த ஒருவர் கூறுகையில், ‘‘முகக்கவசம் அணிந்திருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை யூகிப்பதற்கு கடினமாக இருக்கிறது. இந்த வகை முகமூடியை அணியும்போது என்னை போன்றவர்களிடம் என்னால் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். இது நிச்சயம் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார், மற்றொருவர், ‘‘இப்படி யொரு முகக்கவசத்தை பற்றி சிந்தித்திருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது. இது அற்புதமான விஷயம். இந்த முகக்கவசத்திற்கு தேவையும், அவசியமும் இருக்கிறது’’ என்கிறார்.
நீங்கள் மகிழ்ச்சியான மனிதராக உருவாக வேண்டும் என்றால் உங்களிடம் குறிப்பிட்ட சில குணாதிசயங்கள் இருக்கவேண்டும். அவை உங்களிடம் இருக்கிறதா? என்பதை கண்டறிய இதுவே சிறந்த நேரம்.
நீங்கள் மகிழ்ச்சியான மனிதராக உருவாக வேண்டும் என்றால் உங்களிடம் குறிப்பிட்ட சில குணாதிசயங்கள் இருக்கவேண்டும். அவை உங்களிடம் இருக்கிறதா? என்பதை கண்டறிய இதுவே சிறந்த நேரம். ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு இந்த பரிசோதனைக்கு தயாராகுங்கள். உங்களுக்காக 12 கேள்விகள்:-
1. மற்றவர்கள் நல்ல விஷயங்கள் செய்யும்போது பாராட்டுவீர்களா?
ஒருபோதும் இல்லை - 1
அரிதாக பாராட்டுவேன் - 2
எப்போதாவது - 3
பெரும்பாலும் - 4
எல்லா நேரமும் - 5
2. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நீங்கள் மேம்பட்டிருப்பதாக உணர்கிறீர்களா?
இல்லை - 1
அரிதாக உணர்கிறேன் - 2
எப்போதாவது உணர்கிறேன் - 3
பெரும்பாலும் உணர்கிறேன் - 4
எல்லா நேரமும் உணர்கிறேன் - 5
3. ஒருவரை பார்த்ததும் அவரிடம் நட்பு பாராட்டுவீர்களா?
ஒருபோதும் இல்லை - 1
அரிதாக - 2
எப்போதாவது - 3
பெரும்பாலும் - 4
எல்லாநேரமும் - 5
4. வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடி ஒவ்வொன்றும் அனுபவம் என்று கருதுகிறீர்களா?
இல்லை - 1
அரிதாக கருதுவேன் - 2
எப்போதாவது கருதுவேன் - 3
பெரும்பாலும் கருதுவேன் - 4
எல்லா நேரமும் கருதுவேன் - 5
5. நெருக்கமான நண்பனால் அலட்சியப்படுத்தப்பட்டால் மனங்கலங்கி போய்விடுவீர்களா?
ஒருபோதும் இல்லை - 5
அரிதாக - 4
எப்போதாவது - 3
பெரும்பாலும் - 2
எல்லா நேரமும் - 1
6. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வீர்களா?
ஒருபோதும் இல்லை - 1
அரிதாக - 2
எப்போதாவது - 3
பெரும்பாலும் - 4
எல்லாநேரமும் - 5
7. உங்கள் மனநிலை, உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று நினைப்பீர்களா?
ஒருபோதும் அப்படி நினைப்ப தில்லை - 1
அரிதாக நினைப்பேன் - 2
எப்போதாவது நினைப்பேன் - 3
பெரும்பாலும் நினைப்பேன் - 4
எல்லா நேரமும் நினைப்பேன் - 5
8. உங்களுக்கு பிடித்தமான 10 பேரின் பெயரை உங்களால் வேகமாக சொல்ல முடியுமா?
முடியாது - 1
அரிதாக முடியும் - 2
எப்போதாவது முடியும் - 3
பெரும்பாலும் முடியும் - 4
எல்லா நேரமும் முடியும் - 5
9. கடந்த மாதத்தைப் பற்றி நினைக்கும்போது உடனே வெற்றிதானே உங்கள் நினைவுக்கு வரும்?
இல்லை - 1
அரிதாக வெற்றி நினைவுக்கு வரும் - 2
எப்போதாவது நினைவுக்கு வரும் - 3
பெரும்பாலும் நினைவுக்கு வரும் - 4
எல்லா நேரமும் வெற்றி நினைவுக்கு வரும் - 5
10. நண்பனை விமர்சிப்பதைவிட அதிகம் பாராட்டத்தானே செய்வீர்கள்?
இல்லை - 1
அரிதாக பாராட்டுவேன் - 2
எப்போதாவது பாராட்டுவேன் - 3
பெரும்பாலும் பாராட்டுவேன் - 4
எல்லா நேரமும் பாராட்டுவேன் - 5
11. தேவையற்ற விமர்சனங்களுக்கு உள்ளாகும்போது நிலைகுலைந்து போவீர்களா?
இல்லை - 5
ஆம்.. அரிதாக - 4
ஆம்.. எப்போதாவது - 3
ஆம்.. பெரும்பாலும் - 2
ஆம்..எல்லா நேரமும் - 1
12. வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாகதான் இருக்கிறீர்களா?
இல்லை - 1
அரிதாக மகிழ்ச்சியடைகிறேன் - 2
எப்போதாவது மகிழ்ச்சியடைகிறேன் - 3
பெரும்பாலும் மகிழ்ச்சியடைகிறேன் - 4
எல்லா நேரமும் மகிழ்ச்சியடைகிறேன் - 5
-கேள்விகளுக்கு நிதானமாக சிந்தித்து பொருத்தமான பதிலில் ‘டிக்’ அடியுங்கள்.
- ‘டிக்’ அடித்ததன் அருகில் இருக்கும் மதிப்பெண்களை கூட்டுங்கள்.
39-க்கும் கீழ்:
உங்களிடம் எதிர்மறை சிந்தனை அதிகம் இருக்கிறது. மகிழ்ச்சி குறைவாக இருக்கிறது. மகிழ்ச்சியை அதிகரிக்க தன்னம்பிக்கையும், பாசிட்டிவ் சிந்தனையும் உங்களுக்கு உடனடி அவசியம்.
40 முதல் 44 வரை:
உங்களிடம் துக்கமும், மகிழ்ச்சியும் மாறி மாறி ஏற்படும். எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல், மகிழ்ச்சியை மேம்படுத்துங்கள்.
45 முதல் 49 வரை:
உங்களிடம் போதுமான மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் அது குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
50 முதல் 54 வரை:
நீங்கள் மகிழ்ச்சியான மாமனிதர். உங்களிடம் ‘பாசிட்டிவ் திங்கிங்’ அதிகமாக இருக்கிறது.
55-க்கு மேல் :
நீங்கள் மகிழ்ச்சியின் மைந்தர். உங்களை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.
1. மற்றவர்கள் நல்ல விஷயங்கள் செய்யும்போது பாராட்டுவீர்களா?
ஒருபோதும் இல்லை - 1
அரிதாக பாராட்டுவேன் - 2
எப்போதாவது - 3
பெரும்பாலும் - 4
எல்லா நேரமும் - 5
2. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நீங்கள் மேம்பட்டிருப்பதாக உணர்கிறீர்களா?
இல்லை - 1
அரிதாக உணர்கிறேன் - 2
எப்போதாவது உணர்கிறேன் - 3
பெரும்பாலும் உணர்கிறேன் - 4
எல்லா நேரமும் உணர்கிறேன் - 5
3. ஒருவரை பார்த்ததும் அவரிடம் நட்பு பாராட்டுவீர்களா?
ஒருபோதும் இல்லை - 1
அரிதாக - 2
எப்போதாவது - 3
பெரும்பாலும் - 4
எல்லாநேரமும் - 5
4. வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடி ஒவ்வொன்றும் அனுபவம் என்று கருதுகிறீர்களா?
இல்லை - 1
அரிதாக கருதுவேன் - 2
எப்போதாவது கருதுவேன் - 3
பெரும்பாலும் கருதுவேன் - 4
எல்லா நேரமும் கருதுவேன் - 5
5. நெருக்கமான நண்பனால் அலட்சியப்படுத்தப்பட்டால் மனங்கலங்கி போய்விடுவீர்களா?
ஒருபோதும் இல்லை - 5
அரிதாக - 4
எப்போதாவது - 3
பெரும்பாலும் - 2
எல்லா நேரமும் - 1
6. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வீர்களா?
ஒருபோதும் இல்லை - 1
அரிதாக - 2
எப்போதாவது - 3
பெரும்பாலும் - 4
எல்லாநேரமும் - 5
7. உங்கள் மனநிலை, உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று நினைப்பீர்களா?
ஒருபோதும் அப்படி நினைப்ப தில்லை - 1
அரிதாக நினைப்பேன் - 2
எப்போதாவது நினைப்பேன் - 3
பெரும்பாலும் நினைப்பேன் - 4
எல்லா நேரமும் நினைப்பேன் - 5
8. உங்களுக்கு பிடித்தமான 10 பேரின் பெயரை உங்களால் வேகமாக சொல்ல முடியுமா?
முடியாது - 1
அரிதாக முடியும் - 2
எப்போதாவது முடியும் - 3
பெரும்பாலும் முடியும் - 4
எல்லா நேரமும் முடியும் - 5
9. கடந்த மாதத்தைப் பற்றி நினைக்கும்போது உடனே வெற்றிதானே உங்கள் நினைவுக்கு வரும்?
இல்லை - 1
அரிதாக வெற்றி நினைவுக்கு வரும் - 2
எப்போதாவது நினைவுக்கு வரும் - 3
பெரும்பாலும் நினைவுக்கு வரும் - 4
எல்லா நேரமும் வெற்றி நினைவுக்கு வரும் - 5
10. நண்பனை விமர்சிப்பதைவிட அதிகம் பாராட்டத்தானே செய்வீர்கள்?
இல்லை - 1
அரிதாக பாராட்டுவேன் - 2
எப்போதாவது பாராட்டுவேன் - 3
பெரும்பாலும் பாராட்டுவேன் - 4
எல்லா நேரமும் பாராட்டுவேன் - 5
11. தேவையற்ற விமர்சனங்களுக்கு உள்ளாகும்போது நிலைகுலைந்து போவீர்களா?
இல்லை - 5
ஆம்.. அரிதாக - 4
ஆம்.. எப்போதாவது - 3
ஆம்.. பெரும்பாலும் - 2
ஆம்..எல்லா நேரமும் - 1
12. வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாகதான் இருக்கிறீர்களா?
இல்லை - 1
அரிதாக மகிழ்ச்சியடைகிறேன் - 2
எப்போதாவது மகிழ்ச்சியடைகிறேன் - 3
பெரும்பாலும் மகிழ்ச்சியடைகிறேன் - 4
எல்லா நேரமும் மகிழ்ச்சியடைகிறேன் - 5
-கேள்விகளுக்கு நிதானமாக சிந்தித்து பொருத்தமான பதிலில் ‘டிக்’ அடியுங்கள்.
- ‘டிக்’ அடித்ததன் அருகில் இருக்கும் மதிப்பெண்களை கூட்டுங்கள்.
39-க்கும் கீழ்:
உங்களிடம் எதிர்மறை சிந்தனை அதிகம் இருக்கிறது. மகிழ்ச்சி குறைவாக இருக்கிறது. மகிழ்ச்சியை அதிகரிக்க தன்னம்பிக்கையும், பாசிட்டிவ் சிந்தனையும் உங்களுக்கு உடனடி அவசியம்.
40 முதல் 44 வரை:
உங்களிடம் துக்கமும், மகிழ்ச்சியும் மாறி மாறி ஏற்படும். எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல், மகிழ்ச்சியை மேம்படுத்துங்கள்.
45 முதல் 49 வரை:
உங்களிடம் போதுமான மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் அது குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
50 முதல் 54 வரை:
நீங்கள் மகிழ்ச்சியான மாமனிதர். உங்களிடம் ‘பாசிட்டிவ் திங்கிங்’ அதிகமாக இருக்கிறது.
55-க்கு மேல் :
நீங்கள் மகிழ்ச்சியின் மைந்தர். உங்களை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.
சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு சிறந்த ஃபேஸ்பேக் எப்படி வாழைப்பழத்தை பயன்படுத்தி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் சரும பிரச்சனைகளை சந்திக்கின்றன. குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் அனைத்தும் சரும அழகையே பாதிக்கின்றன. இவை அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வாழைப்பழம் ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது.
ஒரு பவுலில் பாதியளவு வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவு அல்லது கோதுமை மாவினை சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு 1/4 ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இவற்றை பயன்படுத்துவதற்கு முன். முகத்தை 5 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும்.
பின்பு முகத்தை அழுத்தமாக துடைத்து விட்டு. பின்பு தயாரித்த வாழைப்பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தும் மறைந்து சருமம் பளபளப்பாக மற்றும் வெள்ளையாக காணப்படும்.
சிலருக்கு முகம் எப்பொழுதும் பொலிவிழந்து காணப்படும். அப்படிப்பட்டவர்கள் பாதியளவு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கருமைகள் மறைந்து, சருமம் பொலிவுடன் காணப்படும்.
சன்லையிட் காரணமாக சருமம் வறட்சி அடைத்து காணப்படும். இந்த சரும வறட்சியை சரி செய்ய வாழைப்பழம் சிறந்த ஃபேஸ்பேக்காக பயன்படுகிறது. இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்டகண்ட ஃபேஸ்வாஷினை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
எனவே ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் அரை வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கினை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யவும், பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த முறையை தினமும் பின்பற்றலாம் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பின் பற்றலாம். இவ்வாறு அப்ளை செய்வதினால் சரும வறட்சி நீங்கி சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.
ஒரு பவுலில் பாதியளவு வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவு அல்லது கோதுமை மாவினை சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு 1/4 ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இவற்றை பயன்படுத்துவதற்கு முன். முகத்தை 5 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும்.
பின்பு முகத்தை அழுத்தமாக துடைத்து விட்டு. பின்பு தயாரித்த வாழைப்பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தும் மறைந்து சருமம் பளபளப்பாக மற்றும் வெள்ளையாக காணப்படும்.
சிலருக்கு முகம் எப்பொழுதும் பொலிவிழந்து காணப்படும். அப்படிப்பட்டவர்கள் பாதியளவு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கருமைகள் மறைந்து, சருமம் பொலிவுடன் காணப்படும்.
சன்லையிட் காரணமாக சருமம் வறட்சி அடைத்து காணப்படும். இந்த சரும வறட்சியை சரி செய்ய வாழைப்பழம் சிறந்த ஃபேஸ்பேக்காக பயன்படுகிறது. இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்டகண்ட ஃபேஸ்வாஷினை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
எனவே ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் அரை வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கினை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யவும், பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த முறையை தினமும் பின்பற்றலாம் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பின் பற்றலாம். இவ்வாறு அப்ளை செய்வதினால் சரும வறட்சி நீங்கி சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.
கோதுமை மாவுடன், தேங்காய் துருவல் சேர்த்து செய்யும் இந்த ரொட்டி இலங்கையில் மிகவும் பிரபலம். சத்தானதும் கூட. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
பச்சை மிளகாய் - ஒன்று
தேங்காய்த் துருவல் - அரை கப்

செய்முறை:
பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், மைதா மாவு, கோதுமை மாவு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கனமாக தட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் திரட்டி வைத்த ரொட்டியை போடவும்.
இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்து சைட் டிஷ் உடன் பரிமாறவும்.
மைதா மாவு - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
பச்சை மிளகாய் - ஒன்று
தேங்காய்த் துருவல் - அரை கப்
தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், மைதா மாவு, கோதுமை மாவு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கனமாக தட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் திரட்டி வைத்த ரொட்டியை போடவும்.
இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்து சைட் டிஷ் உடன் பரிமாறவும்.
சூப்பரான இலங்கை ரொட்டி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்சனையைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்சனையைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதைக் கொண்டு சுரப்பியில் உள்ள ஏற்ற இறக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தைராய்டு சுரபியின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.
மார்பகம் மற்றும் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப்படுகிறது.
லேப்ரோஸ்கோப் மூலம் உள்ளுறுப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது.
எக்ஸ்ரே மூலம் சில அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.
ஹிஸ்டிரோசல்பிங்கோகிராப்பி மூலம் கருப்பை சீர்குலைவுகளைக் கண்டறிந்து தெரிந்து கொள்வது.
அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்பப்பை மற்றும் கரு முட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது.
இவை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனை முறைகள் இன்று மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எளிதாகவும், இன்னும் சிறப்பாகவும் உங்கள் உடலில் இருக்கும் பிரச்சனையைக் கண்டறிந்து உங்கள் உடலில் இருக்கும் கருவுறாமைக்கான சிக்கல்களைச் சரி செய்ய முடிகிறது.
இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதைக் கொண்டு சுரப்பியில் உள்ள ஏற்ற இறக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தைராய்டு சுரபியின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.
மார்பகம் மற்றும் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப்படுகிறது.
லேப்ரோஸ்கோப் மூலம் உள்ளுறுப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது.
எக்ஸ்ரே மூலம் சில அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.
ஹிஸ்டிரோசல்பிங்கோகிராப்பி மூலம் கருப்பை சீர்குலைவுகளைக் கண்டறிந்து தெரிந்து கொள்வது.
அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்பப்பை மற்றும் கரு முட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது.
இவை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனை முறைகள் இன்று மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எளிதாகவும், இன்னும் சிறப்பாகவும் உங்கள் உடலில் இருக்கும் பிரச்சனையைக் கண்டறிந்து உங்கள் உடலில் இருக்கும் கருவுறாமைக்கான சிக்கல்களைச் சரி செய்ய முடிகிறது.
ஊரடங்கால் மக்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உண்டு என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடவேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
சென்னை :
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான அலுவலகங்களில் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் அலுவலக ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணிகளை கையாள தொடங்கி விட்டனர். குழந்தைகள் வேறு வழியில்லாமல் டி.வி. பார்த்தும், அறைக்குள்ளேயே விளையாடியும் பொழுதை கழித்து வருகிறார்கள். இப்படி வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து இதயவியல் மருத்துவர்கள் கூறியதாவது:-
உடல் உழைப்பு குறையும்போது பருமன் நிச்சயம் அதிகரிக்கும். உடல் பருமன் என்றைக்கும் நல்லது அல்ல. ஆரோக்கியமான உடல்தான் நம்மை நீண்ட காலம் வாழவைக்கும்.
தற்போது ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். வழக்கமான நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு முடிந்துவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள், இது தவறு.
20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை உடல் உழைப்பு இல்லாதபோது 5 கிலோ முதல் 10 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லதல்ல. எனவே தினமும் வீட்டிலேயே தியானம், யோகாவில் ஈடுபடுங்கள். முடிந்தவரை வீட்டு வளாகத்திலேயே நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். சும்மா உட்காராமால், பிள்ளைகளுடன் விளையாடி பரபரப்பாக இருங்கள். அடிக்கடி தூங்காதீர்கள். இதையெல்லாம் முறையாக கடைபிடித்தாலே உடல் பருமன் பிரச்சினையில் இருந்து எளிதில் தப்பித்து கொள்ளலாம்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடற்பயிற்சி ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியதாவது:-
உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத இந்த ஊரடங்கு காலத்தில் முடிந்தவரை கடின உணவுகளை குறைத்து கொள்ளுங்கள். அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணலாம். கீரைகளை அதிகம் உணவில் எடுத்து கொள்ளவேண்டும். குளிர்பானங்களுக்கு பதிலாக எலுமிச்சை ஜூஸ், மோர், லஸ்சி, இளநீர் போன்ற பானங்களை அருந்துவது உடலுக்கு நல்லது. நல்ல ஓய்வு என்பது இரவு தூக்கம் தான். எனவே இரவு தூக்கத்தில் சமரசம் செய்யாதீர்கள்.
இந்த ஊரடங்கு காலத்தில் குறித்த நேரத்தில் சாப்பிடுவது, குறித்த நேரத்தில் உறங்க செல்வதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இறைச்சி உணவுகள் சாப்பிட்டாலும் சுடுதண்ணீர் குடியுங்கள். வீட்டில் சிறிய சிறிய வேலைகளை செய்து முடிந்தவரை உங்கள் கலோரிகளை எரிக்க முயற்சி செய்யுங்கள். உடல் பருமன் பிரச்சினையில் சிக்கிடாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான அலுவலகங்களில் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் அலுவலக ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணிகளை கையாள தொடங்கி விட்டனர். குழந்தைகள் வேறு வழியில்லாமல் டி.வி. பார்த்தும், அறைக்குள்ளேயே விளையாடியும் பொழுதை கழித்து வருகிறார்கள். இப்படி வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து இதயவியல் மருத்துவர்கள் கூறியதாவது:-
உடல் உழைப்பு குறையும்போது பருமன் நிச்சயம் அதிகரிக்கும். உடல் பருமன் என்றைக்கும் நல்லது அல்ல. ஆரோக்கியமான உடல்தான் நம்மை நீண்ட காலம் வாழவைக்கும்.
தற்போது ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். வழக்கமான நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு முடிந்துவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள், இது தவறு.
20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை உடல் உழைப்பு இல்லாதபோது 5 கிலோ முதல் 10 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லதல்ல. எனவே தினமும் வீட்டிலேயே தியானம், யோகாவில் ஈடுபடுங்கள். முடிந்தவரை வீட்டு வளாகத்திலேயே நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். சும்மா உட்காராமால், பிள்ளைகளுடன் விளையாடி பரபரப்பாக இருங்கள். அடிக்கடி தூங்காதீர்கள். இதையெல்லாம் முறையாக கடைபிடித்தாலே உடல் பருமன் பிரச்சினையில் இருந்து எளிதில் தப்பித்து கொள்ளலாம்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடற்பயிற்சி ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியதாவது:-
உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத இந்த ஊரடங்கு காலத்தில் முடிந்தவரை கடின உணவுகளை குறைத்து கொள்ளுங்கள். அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணலாம். கீரைகளை அதிகம் உணவில் எடுத்து கொள்ளவேண்டும். குளிர்பானங்களுக்கு பதிலாக எலுமிச்சை ஜூஸ், மோர், லஸ்சி, இளநீர் போன்ற பானங்களை அருந்துவது உடலுக்கு நல்லது. நல்ல ஓய்வு என்பது இரவு தூக்கம் தான். எனவே இரவு தூக்கத்தில் சமரசம் செய்யாதீர்கள்.
இந்த ஊரடங்கு காலத்தில் குறித்த நேரத்தில் சாப்பிடுவது, குறித்த நேரத்தில் உறங்க செல்வதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இறைச்சி உணவுகள் சாப்பிட்டாலும் சுடுதண்ணீர் குடியுங்கள். வீட்டில் சிறிய சிறிய வேலைகளை செய்து முடிந்தவரை உங்கள் கலோரிகளை எரிக்க முயற்சி செய்யுங்கள். உடல் பருமன் பிரச்சினையில் சிக்கிடாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதற்காக வாட்ஸ்-அப் மூலம் மாணவர்களுக்கு வினாக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த புதிய யுக்திக்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதேபோன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால், மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு தேர்வை சந்திப்பது மிகவும் சிரமமான காரியம்.
இதனால் தனியார் பள்ளிக்கூடங்கள் புதிய யுக்தியை கையாள தொடங்கி உள்ளன. அதாவது, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை ஆரம்பித்து இருக்கின்றனர். வாட்ஸ்-அப் மூலம் பாடங்கள், வினா வங்கிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை வைத்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சில பள்ளி, கல்லூரிகளில் பிரத்யேக செல்போன் செயலிகள் உருவாக்கி, அதன்மூலம் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துரையாடல், சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சில தொடக்க பள்ளிக்கூடங்களில் வீடியோகால் மூலம் பாடல்கள், அடிப்படை கல்வி ஆகியவை ஆடல், பாடலுடன் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ? என்று காத்திருக்கும் நிலையில், வீட்டில் இருந்தபடியே கல்வியை கற்பிக்கும் பணிகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட தொடங்கி இருப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால், மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு தேர்வை சந்திப்பது மிகவும் சிரமமான காரியம்.
இதனால் தனியார் பள்ளிக்கூடங்கள் புதிய யுக்தியை கையாள தொடங்கி உள்ளன. அதாவது, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை ஆரம்பித்து இருக்கின்றனர். வாட்ஸ்-அப் மூலம் பாடங்கள், வினா வங்கிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை வைத்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சில பள்ளி, கல்லூரிகளில் பிரத்யேக செல்போன் செயலிகள் உருவாக்கி, அதன்மூலம் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துரையாடல், சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சில தொடக்க பள்ளிக்கூடங்களில் வீடியோகால் மூலம் பாடல்கள், அடிப்படை கல்வி ஆகியவை ஆடல், பாடலுடன் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ? என்று காத்திருக்கும் நிலையில், வீட்டில் இருந்தபடியே கல்வியை கற்பிக்கும் பணிகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட தொடங்கி இருப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
மது உடலுக்கு கேடுபயக்கும். ஆனால் அந்த பழக்கத்தை கைவிட முடியாத முதியோர்கள் அதன் பாதிப்பை ஓரளவாவது குறைக்க என்னென்ன செய்யலாம் தெரியுமா?
பணியில் இருந்து ஓய்வு.. குடும்பத்தில் இருந்து தனிமை.. பொழுதுபோக்கே இல்லாத சூழல்.. இப்படி தவிக்கும் முதியோர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்ட அளவினர் மது அருந்தும் பழக்கம்கொண்டவர்களாக இருப்பது கவனிக்கத் தகுந்தது. மது உடலுக்கு கேடுபயக்கும். ஆனால் அந்த பழக்கத்தை கைவிட முடியாத முதியோர்கள் அதன் பாதிப்பை ஓரளவாவது குறைக்க என்னென்ன செய்யலாம் தெரியுமா?
ருசித்து குடியுங்கள்: வேகவேகமாக குடிப்பது பெரும்பாலானவர்களின் பழக்கம். அதனால் ஏற்படும் பாதி்ப்பு அதிகம். ஐரோப்பியர்கள் ரசித்து, ருசித்து குடிப்பார்கள். அதுவே பாதிப்பை குறைக்கும் வழி. ஒரே நேரத்தில் அதிகமாக குடித்தால் ஈரல் மற்றும் பான்கிரியஸ் செயல் அதிகரிக்கும். அதனால் இதயம் பலவீனமாகும். தொடர்ந்து மூன்று, நான்கு ‘பெக்’ குடித்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவும் அபாயகரமான அளவு குறைந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
மதுவும் தண்ணீரும்: மது உடலுக்குள் சென்றால், அதிகமான அளவு சிறுநீர் கழிக்கவேண்டியநிலை உருவாகும். அதனால் உடலில் நீர்ச்சத்து மற்றும் தாது சத்துக்குறைபாடு உருவாகும். அதை தொடர்ந்து அதிகபட்ச சோர்வு தோன்றி, நினைவிழப்பு வரைகூட செல்லலாம். ஆகவே மது அருந்தும் முன்பும், மது அருந்தும் போதும், பின்பும் போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டும். பருகினால் நீர்ச்சத்து இழப்பும், சோர்வும் உடலுக்கு ஏற்படாது.
மதுவோடு புகைவேண்டாம்: மது அருந்துகையில் ஒருபோதும் புகைக்கக்கூடாது. இரண்டையும் ஒன்றாக செய்தால் வாய் மற்றும் தொண்டையில் புற்றுநோய் ஏற்படும் சூழல் அதிகரிக்கும். புகைத்துக்கொண்டே குடித்தால், அளவு தெரியாமல் அதிகமாக குடித்துவிடுவார்கள். மதுவும், புகையும் உடலுக்கு கேடு பயக்கும் மிக முக்கியமான பொருட்கள் என்பதால், இரண்டையும் ஒன்று சேர்த்தால் உடல் மிகுந்த ஆபத்தை சந்திக்கும்.
பார்ட்டியில் மது: பார்ட்டிகளில் குறைந்த அளவில் மிக நிதானமாக மது அருந்துங்கள். இடை இடையே தண்ணீரோ, எலுமிச்சை சாறுவோ பருகுங்கள். காரமற்ற, எண்ணெய் இல்லாத உணவையும் மெல்ல மென்றுகொண்டிருங்கள். இவைகளை எல்லாம் சாப்பிடும்போது மதுவின் அளவு வெகுவாக குறைந்துவிடும். மது குறையும்போது உடல் பாதிப்பும் குறையும்.
கார் ஓட்ட வேண்டாம்: மது அருந்திவிட்டால் நிதானம் போய்விடும். மனதும் ஒருநிலையில் இயங்காது. பார்வைத்திறனும் பாதிக்கப்படும். சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு ஏற்ப, சமயோசிதமாக முடிவெடுக்கவும் இயலாது. அதனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டவேண்டாம்.
கலப்பு மதுவில் கவனம்: சிலர் பலவகை மதுவை ஒன்றாக கலந்து குடிப்பார்கள். அது தவறு. அதனால் தன்னிலை இழப்பும், பாதிப்பும் அதிகரிக்கும்.
கவலைதரும் ‘சைடு டிஷ்’: மது அருந்தும்போது வறுத்த மாமிச உணவுகள், மிக்சர் போன்றவைகளை பலரும் சாப்பிடு கிறார்கள். வறுத்த, பொரித்த உணவுகள் வயிற்றெரிச்சல், அசிடிட்டி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். அவைகளுக்கு பதிலாக சாலட் சாப்பிடலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்ட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் போன்றவைகள் உள்ளன. இவை, மதுவால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும். வேகவைத்த முட்டை, வறுத்த வேர்க்கடலை, முந்திரிபருப்பு போன்றவைகளும் சாப்பிடலாம்.
மதுவுக்கு பதில் ஒயின்: கறுப்பு நிறம்கொண்ட திராட்சையில் இருந்து ரெட் ஒயின் தயாரிக்கப்படுகிறது. அதில் ஒன்பது முதல் 14 சதவீதம் ஆல்ஹகால் அடங்கியிருக்கிறது. அதில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்ட் நிறைய உள்ளது. அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொழுப்பின் அளவை குறைத்து, இதயத்தின் இயக்கத்தையும் மேம்படுத்தும். பச்சை, மஞ்சள் நிற திராட்சைகளில் இருந்து ஒயிட் ஒயின் தயாராகிறது. இதுவும் இதயத்திற்கு ஏற்றது. அதனால் மதுவில் இருந்து ஒயினுக்கு மாறிவிடுங்கள். அதையும் அளவோடு பருகுங்கள்.
ஒருநாள் அளவு: ஒருநாள் எவ்வளவு பருகலாம் என்பது மிகவும் கவனிக்கத்தகுந்தது. ‘ஸ்டேன்டர்டு டிரிங்’ என்பது 60 மி.லி! ஒன்றரை என்பது 90 மி.லி! அதற்கு மேல் பருகக்கூடாது. அதுவும் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே பருகவேண்டும்.
ருசித்து குடியுங்கள்: வேகவேகமாக குடிப்பது பெரும்பாலானவர்களின் பழக்கம். அதனால் ஏற்படும் பாதி்ப்பு அதிகம். ஐரோப்பியர்கள் ரசித்து, ருசித்து குடிப்பார்கள். அதுவே பாதிப்பை குறைக்கும் வழி. ஒரே நேரத்தில் அதிகமாக குடித்தால் ஈரல் மற்றும் பான்கிரியஸ் செயல் அதிகரிக்கும். அதனால் இதயம் பலவீனமாகும். தொடர்ந்து மூன்று, நான்கு ‘பெக்’ குடித்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவும் அபாயகரமான அளவு குறைந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
மதுவும் தண்ணீரும்: மது உடலுக்குள் சென்றால், அதிகமான அளவு சிறுநீர் கழிக்கவேண்டியநிலை உருவாகும். அதனால் உடலில் நீர்ச்சத்து மற்றும் தாது சத்துக்குறைபாடு உருவாகும். அதை தொடர்ந்து அதிகபட்ச சோர்வு தோன்றி, நினைவிழப்பு வரைகூட செல்லலாம். ஆகவே மது அருந்தும் முன்பும், மது அருந்தும் போதும், பின்பும் போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டும். பருகினால் நீர்ச்சத்து இழப்பும், சோர்வும் உடலுக்கு ஏற்படாது.
மதுவோடு புகைவேண்டாம்: மது அருந்துகையில் ஒருபோதும் புகைக்கக்கூடாது. இரண்டையும் ஒன்றாக செய்தால் வாய் மற்றும் தொண்டையில் புற்றுநோய் ஏற்படும் சூழல் அதிகரிக்கும். புகைத்துக்கொண்டே குடித்தால், அளவு தெரியாமல் அதிகமாக குடித்துவிடுவார்கள். மதுவும், புகையும் உடலுக்கு கேடு பயக்கும் மிக முக்கியமான பொருட்கள் என்பதால், இரண்டையும் ஒன்று சேர்த்தால் உடல் மிகுந்த ஆபத்தை சந்திக்கும்.
பார்ட்டியில் மது: பார்ட்டிகளில் குறைந்த அளவில் மிக நிதானமாக மது அருந்துங்கள். இடை இடையே தண்ணீரோ, எலுமிச்சை சாறுவோ பருகுங்கள். காரமற்ற, எண்ணெய் இல்லாத உணவையும் மெல்ல மென்றுகொண்டிருங்கள். இவைகளை எல்லாம் சாப்பிடும்போது மதுவின் அளவு வெகுவாக குறைந்துவிடும். மது குறையும்போது உடல் பாதிப்பும் குறையும்.
கார் ஓட்ட வேண்டாம்: மது அருந்திவிட்டால் நிதானம் போய்விடும். மனதும் ஒருநிலையில் இயங்காது. பார்வைத்திறனும் பாதிக்கப்படும். சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு ஏற்ப, சமயோசிதமாக முடிவெடுக்கவும் இயலாது. அதனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டவேண்டாம்.
கலப்பு மதுவில் கவனம்: சிலர் பலவகை மதுவை ஒன்றாக கலந்து குடிப்பார்கள். அது தவறு. அதனால் தன்னிலை இழப்பும், பாதிப்பும் அதிகரிக்கும்.
கவலைதரும் ‘சைடு டிஷ்’: மது அருந்தும்போது வறுத்த மாமிச உணவுகள், மிக்சர் போன்றவைகளை பலரும் சாப்பிடு கிறார்கள். வறுத்த, பொரித்த உணவுகள் வயிற்றெரிச்சல், அசிடிட்டி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். அவைகளுக்கு பதிலாக சாலட் சாப்பிடலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்ட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் போன்றவைகள் உள்ளன. இவை, மதுவால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும். வேகவைத்த முட்டை, வறுத்த வேர்க்கடலை, முந்திரிபருப்பு போன்றவைகளும் சாப்பிடலாம்.
மதுவுக்கு பதில் ஒயின்: கறுப்பு நிறம்கொண்ட திராட்சையில் இருந்து ரெட் ஒயின் தயாரிக்கப்படுகிறது. அதில் ஒன்பது முதல் 14 சதவீதம் ஆல்ஹகால் அடங்கியிருக்கிறது. அதில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்ட் நிறைய உள்ளது. அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொழுப்பின் அளவை குறைத்து, இதயத்தின் இயக்கத்தையும் மேம்படுத்தும். பச்சை, மஞ்சள் நிற திராட்சைகளில் இருந்து ஒயிட் ஒயின் தயாராகிறது. இதுவும் இதயத்திற்கு ஏற்றது. அதனால் மதுவில் இருந்து ஒயினுக்கு மாறிவிடுங்கள். அதையும் அளவோடு பருகுங்கள்.
ஒருநாள் அளவு: ஒருநாள் எவ்வளவு பருகலாம் என்பது மிகவும் கவனிக்கத்தகுந்தது. ‘ஸ்டேன்டர்டு டிரிங்’ என்பது 60 மி.லி! ஒன்றரை என்பது 90 மி.லி! அதற்கு மேல் பருகக்கூடாது. அதுவும் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே பருகவேண்டும்.
உங்களுக்கு ஏற்படும் பெரும்பாலான சாதாரண உடல் நல பிரச்சினைகளுக்கு, உங்கள் சமையல் அறையிலேயே மருந்து இருக்கிறது. உங்கள் சமையல் அறை கூட மருத்துவமனைதான் என்பதை நினைவில் வையுங்கள்.
வீட்டிற்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனா பீதியால் பலரும் பயத்துடன் காணப்படுகிறார்கள். சாதாரண வாந்தியும், வயிற்று வலியும் கூட அவர்களை கவலைகொள்ள வைத்துவிடுகிறது. அப்படிப்பட்ட கவலை எதுவும் தேவையில்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவமனை செல்லவும் அவசியமில்லை. உங்களுக்கு ஏற்படும் பெரும்பாலான சாதாரண உடல் நல பிரச்சினைகளுக்கு, உங்கள் சமையல் அறையிலேயே மருந்து இருக்கிறது. உங்கள் சமையல் அறை கூட மருத்துவமனைதான் என்பதை நினைவில் வையுங்கள்.
பல்வலி பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் வரும். வலி வந்ததும் சிறிதளவு கடுகை மெல்லுங்கள். வலி கட்டுப்படும். கடுக்காய் தோட்டை சுட்டு கரியாக்கி அதில் சிறிதளவு படிகாரம், மிளகுதூள் கலந்து பல் தேய்த்து வந்தால், அது பல்வலிக்கு நிரந்தர தீர்வாக அமையும். கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து, வலியிருக்கும் பல் மீது வைத்தாலும் வலி விலகும்.
ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிதளவு தேன் கலந்து தினமும் நான்கு வேளை வீதம், ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் இருமல் சரியாகும். ஆடா தோடையுடன் சீரகம் சேர்த்து வறுத்து தண்ணீர் கலந்து கொதிக்கவைத்து, ஆறிய பின் பருகினாலும் இருமல் கட்டுப்படும். ஆடாதோடை சாறுடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி வெளியேறும்.
சிறிதளவு இந்துப்பூ, அதன் இரு மடங்கு அதிமதுரம், நான்கு மடங்கு திப்பிலி, ஆறு மடங்கு கடுக்காய் போன்றவற்றை, தனித்தனியாக அரைத்து ஒன்றாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். மலச்சிக்கல் ஏற்படும்போது இதனை சுடுநீரில் கலந்து பருகுங்கள்.
சுக்கு அரைத்து, அதை தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் நீங்கும். பூண்டு, சீரகம் ஆகியவற்றை சிவப்பு நிறம் போகும் வரை நெய்யில் வறுத்து எடுங்கள். சாப்பிடும்போது முதல் கவளம் சாதத்தில் அதனை சேர்த்து சாப்பிட்டாலும் விக்கல் விலகும்.
வயிற்று வலி ஏற்பட்டால் ஒருபிடி கறிவேப்பிலையை, புளித்த மோரிலோ, சுடுநீரிலோ அரைத்து பருகுங்கள். சிறிதளவு கடுகு எண்ணெய்யை சூடாக்கி தொப்புளை சுற்றி தேய்த்தாலும் வலி நீங்கும். கறிவேப்பிலை துளிரை மென்று சாப்பிட்டால் மலத்தில் ரத்தமும், சளியும் வெளியேறுவது நிற்கும். இந்துப்பூ, சீரகம், அதிமதுரம், திப்பிலி, சுக்கு, கடுக்காய்தோடு ஆகியவைகளை தூளாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை சிறிதளவு வெல்லத்தில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
வாயு தொந்தரவு ஏற்பட்டால் பாலில் பூண்டு போட்டு காய்ச்சி இரவில் பருகுங்கள். ஒரு வாரம் தொடர்ச்சியாக இதை பருகினால் வாயு தொந்தரவு அகலும். பூண்டுவை தீயில் சுட்டும் சாப்பிடலாம். சிறிதளவு பெருஞ்சீரகத்தை அரைத்து பசும்பாலில் கலந்து பருகினால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும், வாயு தொந்தரவு இருக்காது.
ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மென்றால் வாய் நாற்றம் நீங்கும். தினமும் காலையில் பல்தேய்த்து முடித்ததும் நாலைந்து துளசி இலைகளையோ அல்லது புதினா இலை களையோ மெல்லும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். கிராம்பு இலை, மாவிலை போன்றவற்றையும் மெல்லலாம்.
இஞ்சி சாறும், எலுமிச்சை சாறும் சம அளவில் எடுத்து சிறிதளவு இந்துப்பூவும் கலந்து தினமும் நான்கு வேளை பருகினால் ஜீரண பிரச்சினை நீங்கும். இஞ்சி சாறில் மிளகு, சீரகம் கலந்து மென்று தின்றால் புளித்த ஏப்பம் அகலும். இஞ்சி சாறில் சிறிதளவு உப்பு கலந்து ருசித்தால் வயிற்றுவலி, வாந்தி கட்டுப்படும்.
மாதவிடாய் காலத்தில் அதிக வலியால் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து மாதவிடாய் வரும் நாள் வரை தினமும் மூன்று முறை புதினா சாறு பருகவேண்டும். 15 மி.லி. புதினா சாறில் சிறிதளவு வெல்லம் கலந்துகொள்ளலாம். சிறிதளவு கற்றாழை ‘ஜெல்’ எடுத்து காலை, மாலை நேரங்களில் சாப்பிட்டாலும் மாதவிலக்கு வலி மறையும். எள்ளுவை தூளாக்கி சிறிதளவு சுடுநீரில் கலந்து தினமும் இரண்டு வேளை பருகினாலும் வலி கட்டுப்படும். உணவு சாப்பிட்ட பின்பே இதனை பருகவேண்டும். மாதவிலக்கு தொடங்குவதற்கு 7 நாட்களுக்கு முன்பிருந்து இதனை பருகி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
மூன்று பங்கு கறிவேப்பிலை, ஒரு பங்கு மிளகு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவு உருட்டி புளித்த மோரில் கலக்கி குடித்தால் வாய்ப்புண் ஆறும். கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி கொப்பளிப்பதும் நல்லது. நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து அதில் கருஞ்சீரக தூள் கலந்து குடிப்பதும் சிறந்தது.
பல்வலி பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் வரும். வலி வந்ததும் சிறிதளவு கடுகை மெல்லுங்கள். வலி கட்டுப்படும். கடுக்காய் தோட்டை சுட்டு கரியாக்கி அதில் சிறிதளவு படிகாரம், மிளகுதூள் கலந்து பல் தேய்த்து வந்தால், அது பல்வலிக்கு நிரந்தர தீர்வாக அமையும். கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து, வலியிருக்கும் பல் மீது வைத்தாலும் வலி விலகும்.
ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிதளவு தேன் கலந்து தினமும் நான்கு வேளை வீதம், ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் இருமல் சரியாகும். ஆடா தோடையுடன் சீரகம் சேர்த்து வறுத்து தண்ணீர் கலந்து கொதிக்கவைத்து, ஆறிய பின் பருகினாலும் இருமல் கட்டுப்படும். ஆடாதோடை சாறுடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி வெளியேறும்.
சிறிதளவு இந்துப்பூ, அதன் இரு மடங்கு அதிமதுரம், நான்கு மடங்கு திப்பிலி, ஆறு மடங்கு கடுக்காய் போன்றவற்றை, தனித்தனியாக அரைத்து ஒன்றாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். மலச்சிக்கல் ஏற்படும்போது இதனை சுடுநீரில் கலந்து பருகுங்கள்.
சுக்கு அரைத்து, அதை தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் நீங்கும். பூண்டு, சீரகம் ஆகியவற்றை சிவப்பு நிறம் போகும் வரை நெய்யில் வறுத்து எடுங்கள். சாப்பிடும்போது முதல் கவளம் சாதத்தில் அதனை சேர்த்து சாப்பிட்டாலும் விக்கல் விலகும்.
வயிற்று வலி ஏற்பட்டால் ஒருபிடி கறிவேப்பிலையை, புளித்த மோரிலோ, சுடுநீரிலோ அரைத்து பருகுங்கள். சிறிதளவு கடுகு எண்ணெய்யை சூடாக்கி தொப்புளை சுற்றி தேய்த்தாலும் வலி நீங்கும். கறிவேப்பிலை துளிரை மென்று சாப்பிட்டால் மலத்தில் ரத்தமும், சளியும் வெளியேறுவது நிற்கும். இந்துப்பூ, சீரகம், அதிமதுரம், திப்பிலி, சுக்கு, கடுக்காய்தோடு ஆகியவைகளை தூளாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை சிறிதளவு வெல்லத்தில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
வாயு தொந்தரவு ஏற்பட்டால் பாலில் பூண்டு போட்டு காய்ச்சி இரவில் பருகுங்கள். ஒரு வாரம் தொடர்ச்சியாக இதை பருகினால் வாயு தொந்தரவு அகலும். பூண்டுவை தீயில் சுட்டும் சாப்பிடலாம். சிறிதளவு பெருஞ்சீரகத்தை அரைத்து பசும்பாலில் கலந்து பருகினால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும், வாயு தொந்தரவு இருக்காது.
ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மென்றால் வாய் நாற்றம் நீங்கும். தினமும் காலையில் பல்தேய்த்து முடித்ததும் நாலைந்து துளசி இலைகளையோ அல்லது புதினா இலை களையோ மெல்லும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். கிராம்பு இலை, மாவிலை போன்றவற்றையும் மெல்லலாம்.
இஞ்சி சாறும், எலுமிச்சை சாறும் சம அளவில் எடுத்து சிறிதளவு இந்துப்பூவும் கலந்து தினமும் நான்கு வேளை பருகினால் ஜீரண பிரச்சினை நீங்கும். இஞ்சி சாறில் மிளகு, சீரகம் கலந்து மென்று தின்றால் புளித்த ஏப்பம் அகலும். இஞ்சி சாறில் சிறிதளவு உப்பு கலந்து ருசித்தால் வயிற்றுவலி, வாந்தி கட்டுப்படும்.
மாதவிடாய் காலத்தில் அதிக வலியால் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து மாதவிடாய் வரும் நாள் வரை தினமும் மூன்று முறை புதினா சாறு பருகவேண்டும். 15 மி.லி. புதினா சாறில் சிறிதளவு வெல்லம் கலந்துகொள்ளலாம். சிறிதளவு கற்றாழை ‘ஜெல்’ எடுத்து காலை, மாலை நேரங்களில் சாப்பிட்டாலும் மாதவிலக்கு வலி மறையும். எள்ளுவை தூளாக்கி சிறிதளவு சுடுநீரில் கலந்து தினமும் இரண்டு வேளை பருகினாலும் வலி கட்டுப்படும். உணவு சாப்பிட்ட பின்பே இதனை பருகவேண்டும். மாதவிலக்கு தொடங்குவதற்கு 7 நாட்களுக்கு முன்பிருந்து இதனை பருகி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
மூன்று பங்கு கறிவேப்பிலை, ஒரு பங்கு மிளகு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவு உருட்டி புளித்த மோரில் கலக்கி குடித்தால் வாய்ப்புண் ஆறும். கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி கொப்பளிப்பதும் நல்லது. நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து அதில் கருஞ்சீரக தூள் கலந்து குடிப்பதும் சிறந்தது.






