என் மலர்
ஆரோக்கியம்
இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பது நல்ல பலனைத் தரும். இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
செலரி - 2
ஆப்பிள் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பார்ஸ்லே - அரை இன்ச்
லெமன் ஜூஸ் - அரைடீஸ்பூன்

செய்முறை:
செலரி, ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
இஞ்சி தோல் நீக்கி கொள்ளவும்.
நறுக்கிய செலரி, ஆப்பிள், இஞ்சி, பார்ஸ்லே, லெமன் ஜூஸ் அனைத்தையும் ஜூஸரில் அரைத்து எடுத்து டம்ளரில் ஊற்றி பருகவும்.
செலரி - 2
ஆப்பிள் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பார்ஸ்லே - அரை இன்ச்
லெமன் ஜூஸ் - அரைடீஸ்பூன்

செய்முறை:
செலரி, ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
இஞ்சி தோல் நீக்கி கொள்ளவும்.
நறுக்கிய செலரி, ஆப்பிள், இஞ்சி, பார்ஸ்லே, லெமன் ஜூஸ் அனைத்தையும் ஜூஸரில் அரைத்து எடுத்து டம்ளரில் ஊற்றி பருகவும்.
ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள்-செலரி ஜூஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெரிகோஸ் வெயின் ஆண் பெண் என இரு பாலருக்கும் வரும். இருப்பினும் பெண்களை அதிகமாக தாக்குகிறது என்கின்றனர்.
வெரிகோஸ் வெயின் ஆண் பெண் என இரு பாலருக்கும் வரும். இருப்பினும் பெண்களை அதிகமாக தாக்குகிறது என்கின்றனர். இந்த வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம் அதிகமான உடல் எடையால் இரத்த அழுத்தம் அதிகமாவது ஆகும். வெரிகோஸ் வெயின் என்பது காலின் தொடைப்பகுதிக்கு கீழோ அல்லது முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டிருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும்வேதனையும் குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும்.
கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குறைக்க ஒரு இயற்கை முறை கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை: பச்சை தக்காளி பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். நன்றாக தண்ணீர் பதம் வரும் வரை அரைக்கவும். இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மேலும் இந்த தக்காளி பழங்களை தோலை உரித்து விட்டு வெரிகோஸ் வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கவும் செய்யலாம்.
இந்த இயற்கை முறை வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்துகிறது என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. இதை தினமும் சரியான அளவில் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதனுடன் சேர்த்து உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். உடற்பயிற்சியுடன் இந்த முறையை பயன்படுத்தினால் விரைவில் வெரிகோஸ் வெயின் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
வெரிகோஸ் வெயின் சிகிச்சை எடுக்கும் போது உங்கள் மருத்துவரிடம் டயாபெட்டீஸ் ஹைபர் டென்ஷன் இருக்கா என்பதை அறிந்து கொள்வது நல்லது. பச்சை தக்காளியில் உள்ள அல்கலாய்டு சோலனின் இயற்கையாகவே நமது உடலில் இரத்தம் கட்டுதலை குறைக்கிறது. இது உங்கள் நரம்புகளின் சுவர்களை வலிமையாக்குகிறது. எனவே எளிதாக வெரிகோஸ் வெயினை குணப்படுத்துகிறது.
கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குறைக்க ஒரு இயற்கை முறை கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை: பச்சை தக்காளி பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். நன்றாக தண்ணீர் பதம் வரும் வரை அரைக்கவும். இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மேலும் இந்த தக்காளி பழங்களை தோலை உரித்து விட்டு வெரிகோஸ் வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கவும் செய்யலாம்.
இந்த இயற்கை முறை வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்துகிறது என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. இதை தினமும் சரியான அளவில் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதனுடன் சேர்த்து உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். உடற்பயிற்சியுடன் இந்த முறையை பயன்படுத்தினால் விரைவில் வெரிகோஸ் வெயின் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
வெரிகோஸ் வெயின் சிகிச்சை எடுக்கும் போது உங்கள் மருத்துவரிடம் டயாபெட்டீஸ் ஹைபர் டென்ஷன் இருக்கா என்பதை அறிந்து கொள்வது நல்லது. பச்சை தக்காளியில் உள்ள அல்கலாய்டு சோலனின் இயற்கையாகவே நமது உடலில் இரத்தம் கட்டுதலை குறைக்கிறது. இது உங்கள் நரம்புகளின் சுவர்களை வலிமையாக்குகிறது. எனவே எளிதாக வெரிகோஸ் வெயினை குணப்படுத்துகிறது.
ஊரடங்கு காரணமாக நொறுக்கு தீனிகள் காலியானதால் குடும்பத் தலைவிகளே சமையல் குறிப்புகளை அலசி தின்பண்டங்களை தயாரிக்கிறார்கள். இந்த பண்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் வீட்டு சிறையில் இருந்து மீள முடியாமல், அகப்பட்டு கிடக்கிறார்கள். ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும், வெளியே சென்று விளையாடலாம் என்ற ஆர்வம் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் உள்ள குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒளிபரப்பாகும் கார்ட்டூன் உள்பட சில நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தும், செல்போன்களில் விளையாடியும் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.
பொதுவாக தொலைக்காட்சி பார்க்கும்போதும், செல்போன்களில் விளையாடும்போதும் என பல்வேறு தருணங்களில் குழந்தைகள் ஏதாவது ஒரு நொறுக்கு தீனியை ருசித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். ஊரடங்கு தகவல் வெளியானதும் பெரும்பாலானோர் தங்களுடைய வீட்டில் குழந்தைகளுக்காக நொறுக்கு தீனி வகைகளை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்தனர். ஆனால் வாங்கி வைத்த நொறுக்கு தீனிகள் அனைத்தும் பெரும்பாலான வீடுகளில் சில நாட்களிலேயே காலியாகிவிட்டன.
ஊரடங்கு நாட்களில் கடுமையான கிராக்கி இருந்ததால், பெரும்பாலான மளிகைக்கடைகளிலும் நொறுக்கு தீனிகள் விரைவாகவே விற்று தீர்ந்துவிட்டன. சென்னையில் உள்ள பெரும்பாலான மளிகை கடைகளில் நொறுக்கு தீனி வைக்கப்படும் ரேக்குகள் காலியாக கிடப்பதையே காணமுடிகிறது. நொறுக்கு தீனிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டு கைதிகளாய் தவிக்கும் குழந்தைகள் தங்களுடைய பெற்றோரிடம் நொறுக்கு தீனிகளை கேட்டும் அடம் பிடித்து பாடாய் படுத்துகின்றனர்.
கடைகளிலும் நொறுக்கு தீனி வகைகள் கிடைக்காத நிலையில், தாங்களே வீடுகளில் தின்பண்டங்களை செய்யவேண்டும் என்று குடும்பத்தலைவிகள் பலரும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். இதற்காக குடும்பத் தலைவிகள் தங்களுடைய பெற்றோரிடம் ஆலோசனை கேட்டும், ‘யூடியூப்’ வீடியோக்கள், சமையல் குறிப்பு புத்தகங்களை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்தும் அலசுகிறார்கள். ஒரு வழியாக தாங்களே தின்பண்டங்களையும் செய்து, குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வருகிறார்கள்.
முறுக்கு, வடை, பஜ்ஜி வகைகள், வெங்காய பக்கோடா, மிட்டாய் வகைகள், பால் கோவா என பல்வேறு நொறுக்கு தீனிகளை செய்து அசத்தி வருகிறார்கள். ஊரடங்கு காலக்கட்டம் தங்களுக்கு நொறுக்கு தீனிகளை செய்து படிப்பதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளதாக சிலர் கருதுகிறார்கள். குடும்ப தலைவிகளின் புதுவிதமான நொறுக்கு தீனிகளுக்கு, குழந்தைகளிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதேபோல், எப்போதும் கட்டவிழ்த்த காளையாக வலம்வரும் ஆண்கள் ஊரடங்கால் வீட்டுக்குள் கட்டிவைக்கப்பட்டு இருக்கிறார்கள். டி.வி. பார்ப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது என்று பொழுதை போக்குகிறார்கள். அதேசமயம் அவ்வப்போது சமையலிலும் மனைவிகளுக்கு ஒத்தாசையாக இருந்து வருகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் மட்டுமின்றி, தங்கள் கணவர்களுக்கும் விதவிதமாக சமைத்து ஆசைதீர உணவு அளித்து மகிழ்கிறார்கள் குடும்பத்தலைவிகள்.
இத்தனை நாளாக உப்புமா, இட்லி, தோசை என்று மட்டுமே சாப்பிட்டு பழகிய ஆண்கள் தற்போது தினம் தினம் கிடைக்கும் ருசியான உணவுகளால் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். ‘இப்படியெல்லாம் சமைப்பியா நீ...’ என்று வியந்து மனைவிமார்களை பாராட்டி வருகிறார்கள்.
அதேவேளை சமைத்த உணவுகளையும், கணவர் மற்றும் குடும்பத்தாரின் பாராட்டுகளையும் பெற்ற பெண்கள் உடனடியாக அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுகிறார்கள். மற்றவர்கள் அதை பாராட்டுவதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியும் கொள்கிறார்கள்.
இதுகுறித்து குடும்பதலைவிகள் கூறும்போது, “ஊரடங்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. கெட்டதிலும் ஒரு நன்மை நடக்கும் என்பார்கள். அதுபோல கடைகளில் வாங்கும் நொறுக்கு தீனிகள் பெரும்பாலும் ஆரோக்கியமானது இல்லை. இதனால் உடலுக்கு சத்தான பண்டங்களை சமையல் குறிப்புகளை பார்த்து தயாரிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் பண்டங்களை குழந்தைகள் ஆர்வமாக சாப்பிடுகிறார்கள்” என்றனர்.
எது எப்படியோ கொரோனா பயத்தால் வீடுகளில் முடங்கியிருக்கும் ஆண்களுக்கு வாய்க்கு ருசியாக சாப்பாடு கிடைக்கிறது. இதனால் பண்டிகை கால மகிழ்ச்சி இல்லங்களில் நிலவி வருகிறது.
பொதுவாக தொலைக்காட்சி பார்க்கும்போதும், செல்போன்களில் விளையாடும்போதும் என பல்வேறு தருணங்களில் குழந்தைகள் ஏதாவது ஒரு நொறுக்கு தீனியை ருசித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். ஊரடங்கு தகவல் வெளியானதும் பெரும்பாலானோர் தங்களுடைய வீட்டில் குழந்தைகளுக்காக நொறுக்கு தீனி வகைகளை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்தனர். ஆனால் வாங்கி வைத்த நொறுக்கு தீனிகள் அனைத்தும் பெரும்பாலான வீடுகளில் சில நாட்களிலேயே காலியாகிவிட்டன.
ஊரடங்கு நாட்களில் கடுமையான கிராக்கி இருந்ததால், பெரும்பாலான மளிகைக்கடைகளிலும் நொறுக்கு தீனிகள் விரைவாகவே விற்று தீர்ந்துவிட்டன. சென்னையில் உள்ள பெரும்பாலான மளிகை கடைகளில் நொறுக்கு தீனி வைக்கப்படும் ரேக்குகள் காலியாக கிடப்பதையே காணமுடிகிறது. நொறுக்கு தீனிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டு கைதிகளாய் தவிக்கும் குழந்தைகள் தங்களுடைய பெற்றோரிடம் நொறுக்கு தீனிகளை கேட்டும் அடம் பிடித்து பாடாய் படுத்துகின்றனர்.
கடைகளிலும் நொறுக்கு தீனி வகைகள் கிடைக்காத நிலையில், தாங்களே வீடுகளில் தின்பண்டங்களை செய்யவேண்டும் என்று குடும்பத்தலைவிகள் பலரும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். இதற்காக குடும்பத் தலைவிகள் தங்களுடைய பெற்றோரிடம் ஆலோசனை கேட்டும், ‘யூடியூப்’ வீடியோக்கள், சமையல் குறிப்பு புத்தகங்களை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்தும் அலசுகிறார்கள். ஒரு வழியாக தாங்களே தின்பண்டங்களையும் செய்து, குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வருகிறார்கள்.
முறுக்கு, வடை, பஜ்ஜி வகைகள், வெங்காய பக்கோடா, மிட்டாய் வகைகள், பால் கோவா என பல்வேறு நொறுக்கு தீனிகளை செய்து அசத்தி வருகிறார்கள். ஊரடங்கு காலக்கட்டம் தங்களுக்கு நொறுக்கு தீனிகளை செய்து படிப்பதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளதாக சிலர் கருதுகிறார்கள். குடும்ப தலைவிகளின் புதுவிதமான நொறுக்கு தீனிகளுக்கு, குழந்தைகளிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதேபோல், எப்போதும் கட்டவிழ்த்த காளையாக வலம்வரும் ஆண்கள் ஊரடங்கால் வீட்டுக்குள் கட்டிவைக்கப்பட்டு இருக்கிறார்கள். டி.வி. பார்ப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது என்று பொழுதை போக்குகிறார்கள். அதேசமயம் அவ்வப்போது சமையலிலும் மனைவிகளுக்கு ஒத்தாசையாக இருந்து வருகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் மட்டுமின்றி, தங்கள் கணவர்களுக்கும் விதவிதமாக சமைத்து ஆசைதீர உணவு அளித்து மகிழ்கிறார்கள் குடும்பத்தலைவிகள்.
இத்தனை நாளாக உப்புமா, இட்லி, தோசை என்று மட்டுமே சாப்பிட்டு பழகிய ஆண்கள் தற்போது தினம் தினம் கிடைக்கும் ருசியான உணவுகளால் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். ‘இப்படியெல்லாம் சமைப்பியா நீ...’ என்று வியந்து மனைவிமார்களை பாராட்டி வருகிறார்கள்.
அதேவேளை சமைத்த உணவுகளையும், கணவர் மற்றும் குடும்பத்தாரின் பாராட்டுகளையும் பெற்ற பெண்கள் உடனடியாக அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுகிறார்கள். மற்றவர்கள் அதை பாராட்டுவதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியும் கொள்கிறார்கள்.
இதுகுறித்து குடும்பதலைவிகள் கூறும்போது, “ஊரடங்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. கெட்டதிலும் ஒரு நன்மை நடக்கும் என்பார்கள். அதுபோல கடைகளில் வாங்கும் நொறுக்கு தீனிகள் பெரும்பாலும் ஆரோக்கியமானது இல்லை. இதனால் உடலுக்கு சத்தான பண்டங்களை சமையல் குறிப்புகளை பார்த்து தயாரிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் பண்டங்களை குழந்தைகள் ஆர்வமாக சாப்பிடுகிறார்கள்” என்றனர்.
எது எப்படியோ கொரோனா பயத்தால் வீடுகளில் முடங்கியிருக்கும் ஆண்களுக்கு வாய்க்கு ருசியாக சாப்பாடு கிடைக்கிறது. இதனால் பண்டிகை கால மகிழ்ச்சி இல்லங்களில் நிலவி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதால் மூத்த குடிமக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை எவை? என்பது குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதால் மூத்த குடிமக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை எவை? என்பது குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் அதிலும் குறிப்பாக உடல்நல குறைபாடுடன் இருப்பவர்களுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதையடுத்து சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வயதானவர்களுக்கான சிகிச்சை பிரிவுடன் இணைந்து மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களை பராமரிப்பவர்களுக்காக விரிவான ஆலோசனைகளை தயாரித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில் மூத்த குடிமக்கள் எதை செய்யவேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
அதன்படி மூத்த குடிமக்கள் செய்யக்கூடியவை:
* எப்போதும் வீட்டிலேயே இருக்கவேண்டும்.
* பார்வையாளர்கள் வீட்டுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது.
* சந்திப்பு தவிர்க்க முடியாதது என்றால் 1 மீட்டர் இடைவெளியை பின்பற்றவேண்டும்.
* தனியாக இருக்கிறீர்கள் என்றால் அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு அக்கம், பக்கத்தில் நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்களில் ஒருவரை சார்ந்து இருக்கலாம்.
* குறைவானோர் அல்லது அதிகமானோர் வீட்டில் கூடுவதை தவிர்க்கவேண்டும்.
* வீட்டில் எப்போதும் துடிப்புடன் இருக்கவேண்டும்.
* சின்ன, சின்ன உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்வதை பரிசீலிக்கவேண்டும்.
* சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும் கைகளை நன்றாக கழுவி சுத்தமாக பராமரிக்கவேண்டும்.
* கண்ணாடி உள்பட அடிக்கடி தொடும் பொருட்களை சீரான இடைவெளியில் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
* தும்மல், இருமல் வந்தால் டிஷ்யூ பேப்பர் அல்லது கைக்குட்டையை பயன்படுத்தவேண்டும். பின்னர் டிஷ்யூ பேப்பர் மற்றும் கைக்குட்டையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கைகளை நன்றாக கழுவவேண்டும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீட்டில் சமைக்கப்பட்ட சத்தான உணவுகளோடு, தண்ணீர் குடிப்பதையும், பழச்சாறு பருகுவதையும் உறுதி செய்யவேண்டும்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட தினசரி மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
* உடல்நிலையை சீராக கவனிக்கவேண்டும். காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது பிற உடல்நலக் குறைபாடு ஏற்பட்டாலோ அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டும்.
* உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களோடு இல்லை என்றால், போன் அல்லது காணொலி காட்சி மூலமாகவோ உரையாடுங்கள். ஒரு வேளை உதவி தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.
* கோடைக்காலம் என்பதால் அதிகப்படியான தண்ணீர் குடிக்கவேண்டும்.
எதை செய்யக்கூடாது?
* கொரோனா நோய் தொற்று இருந்தால், அவர்களோடு நெருங்கி பழகக்கூடாது.
* நண்பர்களிடமோ, அருகாமையில் இருப்பவர்களிடமோ கை குலுக்குவதோ, கட்டித் தழுவுவதோ கூடாது.
* கூட்ட நெரிசல் காணப்படும் பூங்காக்கள், சந்தைகள் மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லக் கூடாது.
* இருமல், தும்மல் வந்தால் வெறும் கைகளோடு முகத்தை பொத்தக்கூடாது.
* கண்களையோ, முகத்தையோ அல்லது மூக்கையோ தொடக்கூடாது.
* சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளக்கூடாது.
* வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லக்கூடாது. முடிந்த அளவுக்கு தொலைபேசி மூலமாக ஆலோசனைகளை பெறவேண்டும்.

மூத்த குடிமக்களை கவனிப்பவர்கள் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை வருமாறு:
* மூத்த குடிமக்களுக்கு உதவி செய்யும் முன்பு கைகளை நன்கு சுத்தமாக கழுவவேண்டும்.
* மூத்த குடிமக்களை கவனித்துக்கொள்ளும்போது மூக்கு மற்றும் வாயை டிஷ்யூ பேப்பர் மற்றும் துணியால் பொத்திக்கொள்ளவேண்டும்.
* அடிக்கடி பயன்படுத்தப்படும் தரையை நன்கு சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஊன்றுகோல், நடப்பதற்கு உதவும் உபகரணங்கள், சக்கர நாற்காலிகளை சுத்தமாக வைக்கவேண்டும்.
* மூத்த குடிமக்கள் கை கழுவுவதற்கு உதவி செய்யவேண்டும்.
* மூத்த குடிமக்கள் சரியான அளவு உணவு மற்றும் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யவேண்டும்.
செய்யக்கூடாதவை:
* மூத்த குடிமக்களை முழுமையாக படுக்கையில் வைத்திருக்கக்கூடாது.
* பொழுதுபோக்குகளை புதுப்பிக்கவேண்டும்
* கைகளை கழுவாமல் மூத்த குடிமக்களை தொடக் கூடாது.
உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் செய்யக்கூடியவை:
மனநலம் பாதிப்பு மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மூத்த குடிமக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை வருமாறு:
* வீட்டில் இருக்கும் உறவினர்களை தொடர்புகொள்ளவேண்டும்.
* கூட்டம் சேர்ப்பதை தவிர்த்துவிட்டு, அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றி தொடர்பு கொள்ளலாம்.
* அமைதியான சுற்றுச்சூழலை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
* வாசித்தல், இசையை ரசித்து கேட்டல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பழைய பொழுதுபோக்குகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.
* மிகவும் நம்பத்தகுந்தவர்கள் சொல்லும் தகவலை மட்டுமே நம்பவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.
* சலிப்பு, தனிமையில் இருக்கிறோம் என்பதற்காக புகையிலை, மது மற்றும் பிற போதை வஸ்துகளை பயன்படுத்தக்கூடாது.
* ஏற்கனவே மன நோய் இருந்தால் 08046110007 என்ற எண்ணை தொடர்புக்கொள்ளலாம்.
* மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலோ, அதிகமாக மயக்கம் வந்தாலோ, சரியாக பேச முடியவில்லை என்றாலோ உதவி எண்ணை தொடர்புக்கொள்ளலாம்.
* தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது.
* அறையில் தன்னை அடைத்துவைக்கக்கூடாது.
* உணர்வுப்பூர்வமான செய்திகளையோ அல்லது சமூக ஊடகங்களின் பதிவுகளையோ பின்தொடரக்கூடாது.
* ஆதாரப்பூர்வமற்ற செய்திகள் மற்றும் தகவல்களை பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் அதிலும் குறிப்பாக உடல்நல குறைபாடுடன் இருப்பவர்களுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதையடுத்து சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வயதானவர்களுக்கான சிகிச்சை பிரிவுடன் இணைந்து மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களை பராமரிப்பவர்களுக்காக விரிவான ஆலோசனைகளை தயாரித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில் மூத்த குடிமக்கள் எதை செய்யவேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
அதன்படி மூத்த குடிமக்கள் செய்யக்கூடியவை:
* எப்போதும் வீட்டிலேயே இருக்கவேண்டும்.
* பார்வையாளர்கள் வீட்டுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது.
* சந்திப்பு தவிர்க்க முடியாதது என்றால் 1 மீட்டர் இடைவெளியை பின்பற்றவேண்டும்.
* தனியாக இருக்கிறீர்கள் என்றால் அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு அக்கம், பக்கத்தில் நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்களில் ஒருவரை சார்ந்து இருக்கலாம்.
* குறைவானோர் அல்லது அதிகமானோர் வீட்டில் கூடுவதை தவிர்க்கவேண்டும்.
* வீட்டில் எப்போதும் துடிப்புடன் இருக்கவேண்டும்.
* சின்ன, சின்ன உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்வதை பரிசீலிக்கவேண்டும்.
* சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும் கைகளை நன்றாக கழுவி சுத்தமாக பராமரிக்கவேண்டும்.
* கண்ணாடி உள்பட அடிக்கடி தொடும் பொருட்களை சீரான இடைவெளியில் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
* தும்மல், இருமல் வந்தால் டிஷ்யூ பேப்பர் அல்லது கைக்குட்டையை பயன்படுத்தவேண்டும். பின்னர் டிஷ்யூ பேப்பர் மற்றும் கைக்குட்டையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கைகளை நன்றாக கழுவவேண்டும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீட்டில் சமைக்கப்பட்ட சத்தான உணவுகளோடு, தண்ணீர் குடிப்பதையும், பழச்சாறு பருகுவதையும் உறுதி செய்யவேண்டும்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட தினசரி மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
* உடல்நிலையை சீராக கவனிக்கவேண்டும். காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது பிற உடல்நலக் குறைபாடு ஏற்பட்டாலோ அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டும்.
* உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களோடு இல்லை என்றால், போன் அல்லது காணொலி காட்சி மூலமாகவோ உரையாடுங்கள். ஒரு வேளை உதவி தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.
* கோடைக்காலம் என்பதால் அதிகப்படியான தண்ணீர் குடிக்கவேண்டும்.
எதை செய்யக்கூடாது?
* கொரோனா நோய் தொற்று இருந்தால், அவர்களோடு நெருங்கி பழகக்கூடாது.
* நண்பர்களிடமோ, அருகாமையில் இருப்பவர்களிடமோ கை குலுக்குவதோ, கட்டித் தழுவுவதோ கூடாது.
* கூட்ட நெரிசல் காணப்படும் பூங்காக்கள், சந்தைகள் மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லக் கூடாது.
* இருமல், தும்மல் வந்தால் வெறும் கைகளோடு முகத்தை பொத்தக்கூடாது.
* கண்களையோ, முகத்தையோ அல்லது மூக்கையோ தொடக்கூடாது.
* சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளக்கூடாது.
* வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லக்கூடாது. முடிந்த அளவுக்கு தொலைபேசி மூலமாக ஆலோசனைகளை பெறவேண்டும்.
* குடும்ப உறுப்பினர்களையோ அல்லது உறவினர்களையோ வீட்டுக்கு அழைக்கக்கூடாது.

மூத்த குடிமக்களை கவனிப்பவர்கள் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை வருமாறு:
* மூத்த குடிமக்களுக்கு உதவி செய்யும் முன்பு கைகளை நன்கு சுத்தமாக கழுவவேண்டும்.
* மூத்த குடிமக்களை கவனித்துக்கொள்ளும்போது மூக்கு மற்றும் வாயை டிஷ்யூ பேப்பர் மற்றும் துணியால் பொத்திக்கொள்ளவேண்டும்.
* அடிக்கடி பயன்படுத்தப்படும் தரையை நன்கு சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஊன்றுகோல், நடப்பதற்கு உதவும் உபகரணங்கள், சக்கர நாற்காலிகளை சுத்தமாக வைக்கவேண்டும்.
* மூத்த குடிமக்கள் கை கழுவுவதற்கு உதவி செய்யவேண்டும்.
* மூத்த குடிமக்கள் சரியான அளவு உணவு மற்றும் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யவேண்டும்.
செய்யக்கூடாதவை:
* மூத்த குடிமக்களை முழுமையாக படுக்கையில் வைத்திருக்கக்கூடாது.
* பொழுதுபோக்குகளை புதுப்பிக்கவேண்டும்
* கைகளை கழுவாமல் மூத்த குடிமக்களை தொடக் கூடாது.
உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் செய்யக்கூடியவை:
மனநலம் பாதிப்பு மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மூத்த குடிமக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை வருமாறு:
* வீட்டில் இருக்கும் உறவினர்களை தொடர்புகொள்ளவேண்டும்.
* கூட்டம் சேர்ப்பதை தவிர்த்துவிட்டு, அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றி தொடர்பு கொள்ளலாம்.
* அமைதியான சுற்றுச்சூழலை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
* வாசித்தல், இசையை ரசித்து கேட்டல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பழைய பொழுதுபோக்குகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.
* மிகவும் நம்பத்தகுந்தவர்கள் சொல்லும் தகவலை மட்டுமே நம்பவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.
* சலிப்பு, தனிமையில் இருக்கிறோம் என்பதற்காக புகையிலை, மது மற்றும் பிற போதை வஸ்துகளை பயன்படுத்தக்கூடாது.
* ஏற்கனவே மன நோய் இருந்தால் 08046110007 என்ற எண்ணை தொடர்புக்கொள்ளலாம்.
* மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலோ, அதிகமாக மயக்கம் வந்தாலோ, சரியாக பேச முடியவில்லை என்றாலோ உதவி எண்ணை தொடர்புக்கொள்ளலாம்.
* தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது.
* அறையில் தன்னை அடைத்துவைக்கக்கூடாது.
* உணர்வுப்பூர்வமான செய்திகளையோ அல்லது சமூக ஊடகங்களின் பதிவுகளையோ பின்தொடரக்கூடாது.
* ஆதாரப்பூர்வமற்ற செய்திகள் மற்றும் தகவல்களை பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது.
இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம் உடலை அழகாக்க, சில அழகு குறிப்புகள் இந்த பகுதியில் நாம் படித்து கொள்வோம் வாங்க.
கற்றாழை ஒரு குளிர்ச்சி தன்மையுடைய பொருள் என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த கற்றாழை ஜெல், பல மருத்துவ பயன்களை கொண்டது. பல ஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வாக அமைகின்றது.
சரி இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம் உடலை அழகாக்க, சில அழகு குறிப்புகள் இந்த பகுதியில் நாம் படித்து கொள்வோம் வாங்க.
வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.
பொடுகு பிரச்சனை, முடி உதிர்வு பிரச்சனை நீங்க கற்றாழை ஜெல்மிகவும் பயன்படுகிறது. மேலும் தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது.
தலைமுடி நன்கு வளர ஒரு மடல் கற்றாழையை எடுத்து அவற்றில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிட்டு, அவற்றில் இதுக்கும் ஜெல்லை எடுத்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கட்டிகள் இல்லாதவாறு அரைத்து கொள்ளவும். பின்பு அரைத்த இந்த கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும்.
இப்பொழுது இந்த ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து தலைமுடியின் வேர்பகுதில் நன்றாக ஸ்ப்ரே செய்து, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து தலை அலச வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் தலைமுடி நன்றாக வளரும், பொடுகு பிரச்சனை இருக்காது, முடி உதிர்வு பிரச்சனை இருக்காது. இருப்பினும் இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும். கற்றாழை ஜெல் முகத்தில் உள்ள கருவளையங்களை மறைய செய்ய ரொம்பவே பயன்படுகிறது.
எனவே கற்றாழை ஜெல்லை கண்களில் உள்ள கருவளையங்களின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கருவளையங்கள் மறையும் இருப்பினும் இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வர வேண்டும்.
மேலும் சருமத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் இருந்தால் இந்த கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்யலாம். சில பேருக்கு கழுத்து பகுதி மிகவும் கருப்பாக இருக்கும். அவர்கள் இந்த கற்றாழை ஜெல்லை கழுத்து பகுதில் நன்றாக அப்ளை செய்து, கொஞ்ச நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
இப்படி செய்வதினால் கழுத்து பகுதில் உள்ள கருமை நிறம் மறைந்து விடும். இருப்பினும் இந்த முறையை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது.
பல பேருக்கு இருக்கின்ற ஒரு பிரச்சனை, பாதவெடிப்பு பிரச்சனை என்று சொல்லலாம். இந்த பாத வெடிப்பு மறைய கற்றாழை ஜெல்லினை பாத வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த முறையை தொடர்ந்து செய்து வர பாத வெடிப்பு பிரச்சனை உடனே சரியாகும்.
சரி இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம் உடலை அழகாக்க, சில அழகு குறிப்புகள் இந்த பகுதியில் நாம் படித்து கொள்வோம் வாங்க.
வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.
பொடுகு பிரச்சனை, முடி உதிர்வு பிரச்சனை நீங்க கற்றாழை ஜெல்மிகவும் பயன்படுகிறது. மேலும் தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது.
தலைமுடி நன்கு வளர ஒரு மடல் கற்றாழையை எடுத்து அவற்றில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிட்டு, அவற்றில் இதுக்கும் ஜெல்லை எடுத்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கட்டிகள் இல்லாதவாறு அரைத்து கொள்ளவும். பின்பு அரைத்த இந்த கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும்.
இப்பொழுது இந்த ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து தலைமுடியின் வேர்பகுதில் நன்றாக ஸ்ப்ரே செய்து, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து தலை அலச வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் தலைமுடி நன்றாக வளரும், பொடுகு பிரச்சனை இருக்காது, முடி உதிர்வு பிரச்சனை இருக்காது. இருப்பினும் இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும். கற்றாழை ஜெல் முகத்தில் உள்ள கருவளையங்களை மறைய செய்ய ரொம்பவே பயன்படுகிறது.
எனவே கற்றாழை ஜெல்லை கண்களில் உள்ள கருவளையங்களின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கருவளையங்கள் மறையும் இருப்பினும் இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வர வேண்டும்.
மேலும் சருமத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் இருந்தால் இந்த கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்யலாம். சில பேருக்கு கழுத்து பகுதி மிகவும் கருப்பாக இருக்கும். அவர்கள் இந்த கற்றாழை ஜெல்லை கழுத்து பகுதில் நன்றாக அப்ளை செய்து, கொஞ்ச நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
இப்படி செய்வதினால் கழுத்து பகுதில் உள்ள கருமை நிறம் மறைந்து விடும். இருப்பினும் இந்த முறையை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது.
பல பேருக்கு இருக்கின்ற ஒரு பிரச்சனை, பாதவெடிப்பு பிரச்சனை என்று சொல்லலாம். இந்த பாத வெடிப்பு மறைய கற்றாழை ஜெல்லினை பாத வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த முறையை தொடர்ந்து செய்து வர பாத வெடிப்பு பிரச்சனை உடனே சரியாகும்.
கர்ப்பம் குறித்த விழிப்புணர்வு, 20 வயதிற்கு மேல் நம் உடல் எப்படி மாற்றம் அடைகிறது, மனரீதியாக தாய்மையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
தாய்மை அடைவதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. கர்ப்பம் குறித்த விழிப்புணர்வு, 20 வயதிற்கு மேல் நம் உடல் எப்படி மாற்றம் அடைகிறது, மனரீதியாக தாய்மையை எப்படி எதிர்கொள்வது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், அன்பான குடும்ப சூழல் என கர்ப்பம் காலம் இனிமையாகவும், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கவும் இந்த அம்சங்களெல்லாம் அவசியமாகின்றது. இந்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.
உங்கள் உடல் 20 வயது - 24 வயதில் எப்படி இருக்கும்
இந்த காலகட்டங்களில் உடல் சீராக இருக்கும். மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனைகள் அதிகம் வராது. கரு உருவாவதற்கான வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும். இந்த வயது வரம்பிற்குள் உட்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 % கருத்தரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கர்ப்ப காலங்களில் உயர் ரத்த அழுத்தமும், கர்ப்பகால நீரிழிவு பிரச்சனைகளும் 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வருவதை காட்டிலும் 50 % வரும் வாய்ப்புகள் 20 - 24 வயதுள்ளவர்களுக்கு வருவது குறைவு.
பெரும்பாலும் இந்த வயதில் இருப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான காலம் அவகாசம் இன்னும் அதிகமாக இருக்கிறது என்று எண்ணுகிறார்கள். குழந்தை பிறந்த பிறகு தங்களுடைய வெளித்தோற்றத்தை பற்றி கவலை கொள்வார்கள். இந்த வயதில் பெண்கள் திருமணம், வேலை இதற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை விட தாய்மை அடைவதற்கு குறைவாகவே கொடுக்கிறார்கள்.
இந்த காலங்களில் கருச்சிதைவு ஆவதற்கு வெறும் 9.5 % வாய்ப்புகளே உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். ஒப்பீட்டளவில் இந்த காலகட்டங்களில் கருமுட்டைகள் வளமையாக இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் டவுண் சிண்ட்ரோம் எனப்படும் கிரோமோசோம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் வருவது மிக குறைவு. மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப புற்று நோய் வரும் வாய்ப்பும் குறைவாக இருக்கும்.
வயது 25 - 34
இந்த வயதுக்கு உட்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவும், சரியான உடற்பயிற்சியும் செய்தால் பிரசவத்தை எளிமையாக எதிர்கொள்ளலாம். மேலும் இதனால் பிரசவத்திற்கு பின்னும் உடலை பழைய மாதிரி திரும்ப கொண்டு வர முடியும். ஆனால் 30 வயதிற்கு பிறகு கருமுட்டைகளின் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். உடலில் படிபடியாகவே இதன் மாற்றங்கள் நடைபெறும். குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படும் போது செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வெற்றிகரமாக முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த 25 வயது
34 வயது காலகட்டத்தில் கருச்சிதைவுக்கான வாய்ப்பு 10 % ஆக உள்ளது. மேலும் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை கையாளவதற்கான பக்குவம் இருக்கும். தாய்மையை சிறிது அனுபவத்தோடு எதிர்கொள்வீர்கள். 30 வயது மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் ஆவதற்கான வாய்ப்பு 20-24 வயது உடையவர்களிவிட இரண்டு மடங்கு அதிகம் என்கிறார்கள். 30 வயதிற்கு மேல் பிரசவத்தின்போது கருச்சிதைவு ஏற்பட 11.7 % வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது. இந்த வயது பெண்களுக்கு பிறக்கும் 952 குழந்தைகளில் 1 குழந்தை டவுன் சின்றோமால் பாதிப்படைகிறது. பிரசவத்தின்போதும் குழந்தை வளர்ப்பிலும் மனதளவில் தெளிவுடன் செயல்படுவார்கள்.
35 வயதிற்கு மேல்
இந்த காலகட்டத்தில் கருமுட்டைகளின் சக்தி பெருமளவு குறைந்துவிடும். உடலிலும் சக்தி இழக்கின்றனர். மேலும் 10% -20% வரை உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் காரணமாக வயிற்றிலிருக்கும் கருவின் மீது அழுத்தும் ஏற்பட்டு குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சனைகள் உருவாகிறது. இதனால் கருவை காப்பாற்ற வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. மேலும் 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கர்ப்பகால நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதும் அதிகமாகிறது. 35 வயதிற்கு மேல் கருச்சிதைவு ஏற்பட 18% வாய்ப்புகள் உள்ளது.
35- 40 வயது
35-40 வயதுள்ளவர்களுக்கு ஹார்மோன் தூண்டுதலால் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இதனால் இரட்டை குழந்தைகள், மூவர் மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க வாய்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 35 வயதை கடந்தவர்கள் கருதரிக்கும்போது தாயின் உடல் நலம், கருவின் வளர்ச்சி குறித்த மருத்துவ சோதனை செய்து பார்ப்பது அவசியம். அதன் பிறகு அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் தாய் சேய் இருவருக்கும் நல்லது.
வயது அதிகமாகும் போது வாழ்க்கையில் வசதி, அனுபவம் பெருகுவது போல் உடலில் மாற்றங்களும், நோய்களும் வரத் தான் செய்யும். சரியான காரணம் இல்லாமல் தாய்மையை தள்ளிப்படுவது எல்லா நேரங்களிலும் நன்மையாக அமையும் என்று சொல்ல முடியாது. எல்லா வயதிலும் உடல் மன ஆரோக்கியம், விழிப்புணர்ச்சி, சரியான ஆலோசனை எல்லா பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிறது.
உங்கள் உடல் 20 வயது - 24 வயதில் எப்படி இருக்கும்
இந்த காலகட்டங்களில் உடல் சீராக இருக்கும். மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனைகள் அதிகம் வராது. கரு உருவாவதற்கான வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும். இந்த வயது வரம்பிற்குள் உட்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 % கருத்தரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கர்ப்ப காலங்களில் உயர் ரத்த அழுத்தமும், கர்ப்பகால நீரிழிவு பிரச்சனைகளும் 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வருவதை காட்டிலும் 50 % வரும் வாய்ப்புகள் 20 - 24 வயதுள்ளவர்களுக்கு வருவது குறைவு.
பெரும்பாலும் இந்த வயதில் இருப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான காலம் அவகாசம் இன்னும் அதிகமாக இருக்கிறது என்று எண்ணுகிறார்கள். குழந்தை பிறந்த பிறகு தங்களுடைய வெளித்தோற்றத்தை பற்றி கவலை கொள்வார்கள். இந்த வயதில் பெண்கள் திருமணம், வேலை இதற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை விட தாய்மை அடைவதற்கு குறைவாகவே கொடுக்கிறார்கள்.
இந்த காலங்களில் கருச்சிதைவு ஆவதற்கு வெறும் 9.5 % வாய்ப்புகளே உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். ஒப்பீட்டளவில் இந்த காலகட்டங்களில் கருமுட்டைகள் வளமையாக இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் டவுண் சிண்ட்ரோம் எனப்படும் கிரோமோசோம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் வருவது மிக குறைவு. மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப புற்று நோய் வரும் வாய்ப்பும் குறைவாக இருக்கும்.
வயது 25 - 34
இந்த வயதுக்கு உட்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவும், சரியான உடற்பயிற்சியும் செய்தால் பிரசவத்தை எளிமையாக எதிர்கொள்ளலாம். மேலும் இதனால் பிரசவத்திற்கு பின்னும் உடலை பழைய மாதிரி திரும்ப கொண்டு வர முடியும். ஆனால் 30 வயதிற்கு பிறகு கருமுட்டைகளின் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். உடலில் படிபடியாகவே இதன் மாற்றங்கள் நடைபெறும். குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படும் போது செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வெற்றிகரமாக முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த 25 வயது
34 வயது காலகட்டத்தில் கருச்சிதைவுக்கான வாய்ப்பு 10 % ஆக உள்ளது. மேலும் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை கையாளவதற்கான பக்குவம் இருக்கும். தாய்மையை சிறிது அனுபவத்தோடு எதிர்கொள்வீர்கள். 30 வயது மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் ஆவதற்கான வாய்ப்பு 20-24 வயது உடையவர்களிவிட இரண்டு மடங்கு அதிகம் என்கிறார்கள். 30 வயதிற்கு மேல் பிரசவத்தின்போது கருச்சிதைவு ஏற்பட 11.7 % வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது. இந்த வயது பெண்களுக்கு பிறக்கும் 952 குழந்தைகளில் 1 குழந்தை டவுன் சின்றோமால் பாதிப்படைகிறது. பிரசவத்தின்போதும் குழந்தை வளர்ப்பிலும் மனதளவில் தெளிவுடன் செயல்படுவார்கள்.
35 வயதிற்கு மேல்
இந்த காலகட்டத்தில் கருமுட்டைகளின் சக்தி பெருமளவு குறைந்துவிடும். உடலிலும் சக்தி இழக்கின்றனர். மேலும் 10% -20% வரை உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் காரணமாக வயிற்றிலிருக்கும் கருவின் மீது அழுத்தும் ஏற்பட்டு குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சனைகள் உருவாகிறது. இதனால் கருவை காப்பாற்ற வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. மேலும் 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கர்ப்பகால நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதும் அதிகமாகிறது. 35 வயதிற்கு மேல் கருச்சிதைவு ஏற்பட 18% வாய்ப்புகள் உள்ளது.
35- 40 வயது
35-40 வயதுள்ளவர்களுக்கு ஹார்மோன் தூண்டுதலால் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இதனால் இரட்டை குழந்தைகள், மூவர் மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க வாய்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 35 வயதை கடந்தவர்கள் கருதரிக்கும்போது தாயின் உடல் நலம், கருவின் வளர்ச்சி குறித்த மருத்துவ சோதனை செய்து பார்ப்பது அவசியம். அதன் பிறகு அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் தாய் சேய் இருவருக்கும் நல்லது.
வயது அதிகமாகும் போது வாழ்க்கையில் வசதி, அனுபவம் பெருகுவது போல் உடலில் மாற்றங்களும், நோய்களும் வரத் தான் செய்யும். சரியான காரணம் இல்லாமல் தாய்மையை தள்ளிப்படுவது எல்லா நேரங்களிலும் நன்மையாக அமையும் என்று சொல்ல முடியாது. எல்லா வயதிலும் உடல் மன ஆரோக்கியம், விழிப்புணர்ச்சி, சரியான ஆலோசனை எல்லா பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிறது.
இருமல், சளி தொல்லையால் அவதிப்படுவர்கள் இந்த அதிமதுரம் தேங்காய் பாலை குடித்தால் நிவாரணம் பெறலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அதிமதுரம் - 5 துண்டுகள்
தேங்காய்ப் பால் - 1 டம்ளர்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
தூளாக்கிய வெல்லம் - தேவைக்கு

செய்முறை:
அதிமதுர துண்டுகளை தூளாக்கி நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதை அரைத்து பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.
மீண்டும் கொதிக்கும் போது சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
அதிமதுரம் - 5 துண்டுகள்
தேங்காய்ப் பால் - 1 டம்ளர்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
தூளாக்கிய வெல்லம் - தேவைக்கு
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:
அதிமதுர துண்டுகளை தூளாக்கி நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதை அரைத்து பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.
மீண்டும் கொதிக்கும் போது சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
இதனை ஆறவைத்து பருகலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண் குழந்தைகளின் தாய் பிள்ளைகளை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கூடம், பள்ளிக்கு செல்லும் வழி, அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு சந்தேகம் ஏற்படாத வண்ணம் தாய் கண்காணிக்க வேண்டும்.
பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளை எவ்வாறு கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப் புத் துறை அதிகாரி ஆர்.சுந்தர் கூறியதாவது:-
மனம் விட்டு பேச வேண்டும்
பெண் குழந்தைகளின் தாய் பிள்ளைகளை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கூடம், பள்ளிக்கு செல்லும் வழி, அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு சந்தேகம் ஏற்படாத வண்ணம் தாய் கண்காணிக்க வேண்டும். அவர்கள் செல்போனில் யாருடன் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? சமூக வலைதளங்களில் என்ன பார்க்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகளிடம் பெற்றோர் அதிலும் குறிப்பாக தாயார் மனம் விட்டு பேச வேண்டும். தவறு நடந்ததை போன்று கேட்க கூடாது. பொதுவாக இன்று பள்ளியில் என்ன நடந்தது என்பதுபோன்று பொதுவாக விசாரிக்க வேண்டும். குழந்தைகளிடம் பெற்றோர் மனம் விட்டு பேசும் சூழ்நிலையை குடும்பத்தில் ஏற்படுத்தும் போது தான் பாலியல் குற்றங்கள் நடந்திருந்தால் குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லி விடுவார்கள்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை அடிக்கடி சென்று மாணவ-மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? என்பது பற்றி விழிப்புணர்வு அளித்து வருகிறோம். முதல் கட்டமாக பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நர்சுகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். ஒரு கிராமத்தில் சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடந்தால் அது பற்றி அந்த கிராம நிர்வாக அலுவலர் தான் முதலில் போலீசில் புகார் அளிப்பார். மேலும் அவர்களின் கவனத்துக்கு பாலியல் குற்றங்கள் பற்றி தெரியவந்தால் அதை மறைக்காமல் உடனடியாக போலீசுக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒரு இடத்தில் பாலியல் குற்றங்கள் நடந்தால் அதை மறைப்பதும் சட்டப்படி குற்றம்.
முகாம்கள் மூலம் புகார்
கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தும் போது தான் பெரும்பாலான சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக பெற்றோர் புகார் அளிக்கவில்லை என்று அர்த்தமில்லை. பாலியல் குற்றங்கள் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கும் போதுதான் அதுபற்றி சிறுமிகள் புகார் அளிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலை அவர்களின் வீடுகளில் இருப்பது இல்லை. பள்ளிகளில் தவறான தொடுதல் என்றால் என்ன? என்பன போன்ற விழிப்புணர்வுகள் ஆசிரியைகளை கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன.
அடுத்த கட்டமாக ஊராட்சி தலைவருக்கும் விழிப்புணர்வு நடத்த உள்ளோம். பாலியல் குற்றங்கள் மட்டுமல்லாமல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இடைநிற்றல் போன்றவை பற்றி அவர்களுக்கு தகவல் தெரிந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனம் விட்டு பேச வேண்டும்
பெண் குழந்தைகளின் தாய் பிள்ளைகளை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கூடம், பள்ளிக்கு செல்லும் வழி, அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு சந்தேகம் ஏற்படாத வண்ணம் தாய் கண்காணிக்க வேண்டும். அவர்கள் செல்போனில் யாருடன் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? சமூக வலைதளங்களில் என்ன பார்க்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகளிடம் பெற்றோர் அதிலும் குறிப்பாக தாயார் மனம் விட்டு பேச வேண்டும். தவறு நடந்ததை போன்று கேட்க கூடாது. பொதுவாக இன்று பள்ளியில் என்ன நடந்தது என்பதுபோன்று பொதுவாக விசாரிக்க வேண்டும். குழந்தைகளிடம் பெற்றோர் மனம் விட்டு பேசும் சூழ்நிலையை குடும்பத்தில் ஏற்படுத்தும் போது தான் பாலியல் குற்றங்கள் நடந்திருந்தால் குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லி விடுவார்கள்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை அடிக்கடி சென்று மாணவ-மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? என்பது பற்றி விழிப்புணர்வு அளித்து வருகிறோம். முதல் கட்டமாக பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நர்சுகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். ஒரு கிராமத்தில் சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடந்தால் அது பற்றி அந்த கிராம நிர்வாக அலுவலர் தான் முதலில் போலீசில் புகார் அளிப்பார். மேலும் அவர்களின் கவனத்துக்கு பாலியல் குற்றங்கள் பற்றி தெரியவந்தால் அதை மறைக்காமல் உடனடியாக போலீசுக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒரு இடத்தில் பாலியல் குற்றங்கள் நடந்தால் அதை மறைப்பதும் சட்டப்படி குற்றம்.
முகாம்கள் மூலம் புகார்
கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தும் போது தான் பெரும்பாலான சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக பெற்றோர் புகார் அளிக்கவில்லை என்று அர்த்தமில்லை. பாலியல் குற்றங்கள் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கும் போதுதான் அதுபற்றி சிறுமிகள் புகார் அளிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலை அவர்களின் வீடுகளில் இருப்பது இல்லை. பள்ளிகளில் தவறான தொடுதல் என்றால் என்ன? என்பன போன்ற விழிப்புணர்வுகள் ஆசிரியைகளை கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன.
அடுத்த கட்டமாக ஊராட்சி தலைவருக்கும் விழிப்புணர்வு நடத்த உள்ளோம். பாலியல் குற்றங்கள் மட்டுமல்லாமல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இடைநிற்றல் போன்றவை பற்றி அவர்களுக்கு தகவல் தெரிந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைகள் விஷயத்தில் அடிப்பது சரியா? அடித்தால் குழந்தைகளை சரிசெய்து விட முடியுமா? இதுவரை நீங்கள் நினைத்திருந்தது தவறு. ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் விஷயத்தில் அடிப்பது சரியா? அடித்தால் குழந்தைகளை சரிசெய்து விட முடியுமா? இதுவரை நீங்கள் நினைத்திருந்தது தவறு. ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோர், ஆசிரியர், வீட்டில் உள்ள பெரியவர் யாராக இருந்தாலும் குழந்தையை அடிப்பது என்பது குற்றம்.
நாம் குழந்தைகள் நம் சொத்தாக, நம் உரிமையாகப் பார்க்கிறோம். உண்மையில், அவர்கள் நம் மூலம் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மை போல அவர்களின் இயல்பு, சுபாவம், கனவு, ஒழுக்கம், நடவடிக்கை எல்லாம் ஒரேபோல இருக்கும் என எதிர்பார்ப்பது சரியல்ல.
அன்பு ஒன்றே மிகப் பெரிய ஆயுதம். அதை தீட்டிக் கொள்ளுங்கள் போதும். அன்புக்கும் செல்லத்துக்கும் வித்தியாசம் உண்டு. அன்பு, குழந்தைகளைப் பண்பானவர்களாக மாற்றும். செல்லம் கொடுப்பது, குழந்தைகளைக் கெடுக்கும். இந்த வித்தியாசம் புரியட்டும். ‘எங்கம்மாவ கேட்காம நான் இதை செய்ய மாட்டேன்’. அன்பால் வளர்க்கும் பிள்ளை சொல்வது. ‘இதை எனக்கு கொடுத்து விடு, இது எனக்கே சொந்தம்’… செல்லத்தால் வளரும் பிள்ளை சொல்வது.
இரண்டும் இருவேறு குணங்களைத் தரும். அம்மாவோ அப்பாவோ தன் கண் அசைவால் கோபத்தை தெரிவித்துகூட குழந்தையை திருத்தி விட முடியும். இந்த வளர்ப்பு முறையை மிக சிறந்த முறை. இதற்கு புரிதலும் பெருந்தன்மையும் பெற்றோருக்கு வேண்டும். செம அடியை அடிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கண் அசைவும் புரியாது நீங்கள் வாய் வலிக்க கத்தினாலும் கேட்காது.
சென்சிடீவ்வான குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், முடியாத காரியம் அல்ல. முயன்றால் அன்பால் அரவணைப்பால் பெற்றோரின் பண்பால் நிச்சயம் குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும். இதற்கு முதலாக நீங்கள் பண்பானவர்களாக மாறிக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக மாறிவிடுங்கள். பின் எல்லாம் சுபமே.
நாம் குழந்தைகள் நம் சொத்தாக, நம் உரிமையாகப் பார்க்கிறோம். உண்மையில், அவர்கள் நம் மூலம் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மை போல அவர்களின் இயல்பு, சுபாவம், கனவு, ஒழுக்கம், நடவடிக்கை எல்லாம் ஒரேபோல இருக்கும் என எதிர்பார்ப்பது சரியல்ல.
அன்பு ஒன்றே மிகப் பெரிய ஆயுதம். அதை தீட்டிக் கொள்ளுங்கள் போதும். அன்புக்கும் செல்லத்துக்கும் வித்தியாசம் உண்டு. அன்பு, குழந்தைகளைப் பண்பானவர்களாக மாற்றும். செல்லம் கொடுப்பது, குழந்தைகளைக் கெடுக்கும். இந்த வித்தியாசம் புரியட்டும். ‘எங்கம்மாவ கேட்காம நான் இதை செய்ய மாட்டேன்’. அன்பால் வளர்க்கும் பிள்ளை சொல்வது. ‘இதை எனக்கு கொடுத்து விடு, இது எனக்கே சொந்தம்’… செல்லத்தால் வளரும் பிள்ளை சொல்வது.
இரண்டும் இருவேறு குணங்களைத் தரும். அம்மாவோ அப்பாவோ தன் கண் அசைவால் கோபத்தை தெரிவித்துகூட குழந்தையை திருத்தி விட முடியும். இந்த வளர்ப்பு முறையை மிக சிறந்த முறை. இதற்கு புரிதலும் பெருந்தன்மையும் பெற்றோருக்கு வேண்டும். செம அடியை அடிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கண் அசைவும் புரியாது நீங்கள் வாய் வலிக்க கத்தினாலும் கேட்காது.
சென்சிடீவ்வான குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், முடியாத காரியம் அல்ல. முயன்றால் அன்பால் அரவணைப்பால் பெற்றோரின் பண்பால் நிச்சயம் குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும். இதற்கு முதலாக நீங்கள் பண்பானவர்களாக மாறிக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக மாறிவிடுங்கள். பின் எல்லாம் சுபமே.
ஒரு மனிதன் தன் தாயுடன் வாழும் வாழ்க்கை 25 ஆண்டுகள் தான். ஆனால் மனைவியுடன் வாழும் வாழ்க்கை மூச்சு இருக்கும் வரை 75 ஆண்டுகள் என்று கூட சொல்லலாம்.
‘ஓர் ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் பின் நிற்கிறாள்’ என்பது பழமொழி. ‘ஓர் ஆணின் வெற்றிக்கு மனைவி முன் நிற்கிறாள்’ என்பது புதுமொழி. மாதா, பிதா, குரு மூன்றும் ஒரே வடிவில் மனைவி! இது மனைவி பற்றி நான் எழுதிய ஹைக்கூ. இக்கவிதையைப் படித்து விட்டு உச்சநீதிமன்றத்தின் நீதியரசர் கற்பக விநாயகம் அலைபேசியில் அழைத்து பாராட்டினார். மனைவியுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது சிறப்பு. எனக்கு பெங்களூருக்கு இடமாற்றம் வந்தபோது விருப்ப ஓய்வில் சென்று விடலாம் என முடிவெடுத்தேன். ஆனால் என் மனைவி வேண்டாம், மகன் திருமண அழைப்பிதழில் விருப்ப ஓய்வு என்று அச்சிட்டால் சிறப்பாக இருக்காது என்று தடுத்தார். கேட்டுக்கொண்டு முடிவை மாற்றினேன். ஒன்றே கால் வருடத்தில் மதுரைக்கே இடமாற்றம் கிடைத்தது.
கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மிக நேர்மையான அரசியல்வாதி. அவரது மனைவியின் மரணத்திற்கு பின் நேர்முகத்தில் குறிப்பிட்டு இருந்தார். எனக்கு எல்லாமுமாக இருந்தவள் என் மனைவி. என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு போராட்டத்திற்கு என்றுமே தடையாக இருந்தது இல்லை. அவளது இழப்பு எனக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டு இருந்தார்.
சில பேரிடம் உங்க மனைவி என்ன செய்றாங்க என்றால், வீட்டில் சும்மா இருக்காங்க என்பார்கள். அவர்களை கன்னத்தில் அறைய வேண்டும். வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் ஓய்வின்றி பார்க்கும் மனைவியை சும்மா இருக்கிறாள் என்று சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்பதை உணர வேண்டும். திருச்சி சிவா அவர்களும் மனைவி இறந்த பின் பேசி இருந்தார். இருக்கும் போது நான் அவளை மதிக்கவில்லை. அவளுடன் நேரம் செலவிடவில்லை. வாழும் போது அவள் அருமை அறியவில்லை. இறந்த பின்னே அவளின் இழப்பு பேரிழப்பு என்பதை உணர்ந்தேன் என்றார். மகாகவி பாரதியார், கவியரசு கண்ணதாசன் பாடிய வைர வரிகளை மனதில் கொள்ள வேண்டும். உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி! ஆம்! மனைவியின் கண்களில் கண்ணீர் வராமல் வாழ வைப்பவனே நல்ல கணவன்.
ஒரு மனிதன் தன் தாயுடன் வாழும் வாழ்க்கை 25 ஆண்டுகள் தான். ஆனால் மனைவியுடன் வாழும் வாழ்க்கை மூச்சு இருக்கும் வரை 75 ஆண்டுகள் என்று கூட சொல்லலாம். வளர்ப்பது, படிக்க வைப்பதுடன் தாயின் கடமை முடிந்து விடுகிறது. ஆனால் தறுதலையையும், தலைவனாக்குவது மனைவி. தென்றலையும் புயலாக்குவது மனைவி. ரவுடியை ரம்மியமாக்குவது மனைவி. முட்டாளையும் அறிவாளியாக்குவது மனைவி. ஆற்றுப்படுத்தி நெறிப்படுத்துவது மனைவி. மனிதனை மனிதனாக மாற்றுவது மனைவி. மனைவி இருப்பதால் தான் கணவன் கோபம் தவிர்த்து குடும்பத்தை நினைத்து விலங்கு குணம் விடுத்து மனிதனாக வாழ்கின்றான்.
அம்மா குடிக்காதே! என்றால் குடிப்பவனும், மனைவி குடிக்காதே! என்றால் கேட்டுக்கொள்வான். ஒழுக்கமுள்ளவனாக மாறி விடுவான். மனைவி கிழித்த கோட்டை தாண்டாத கணவன் உண்டு. அவள் கிழிக்கும் கோடு நன்மைக்காகவே இருக்கும்.
ஆட்டோ வாசகம் படித்தேன். மனைவி தந்த வரம், மனைவி சொல்லே மந்திரம், எல்லாம் அவளே, அவளின்றி ஓர் அணுவும் அசையாது. தலையணை மந்திரம் தலைவலி நீக்கும்.
மனைவி பெரும்பாலும் மேன்மைக்கும், நன்மைக்கும், உயர்வுக்கும் கருத்து சொல்வாள். மனைவி பேச்சை கேட்பதில் அன்னப்பறவையாக இருங்கள். நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள். கெட்டதாக இருந்தால் விட்டுவிடுங்கள். கலந்து பேசி முடிவெடுங்கள். கருத்தை கேளுங்கள். மனைவிக்கும் மனது உண்டு, மதித்து நடங்கள். திருவள்ளுவர் உலகப்புகழ் அடைய காரணம் வாசுகி. காந்தியடிகள் தேசப்பிதா ஆக காரணம் கஸ்தூரிபாய். பாரதியார் மகாகவி ஆகிடக் காரணம் செல்லம்மாள். இப்படி சாதனையாளர்கள் அனைவருக்கும் பக்கபலமாக இருந்து ஊக்குவித்தது மனைவி தான்.
கஸ்தூரிபாய் இறந்தபோது காந்தியடிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதார். எனக்கு அகிம்சையை கற்றுத்தந்த குரு கஸ்தூரிபாய் என்றார். நான் ஆரம்ப காலங்களில் ஆணாதிக்கம் செலுத்திய போதும், சினம் கொள்ளாமல் சீர்தூக்கிப் பார்த்து என்னை செம்மைப்படுத்தியவள் என்று சொல்லி அழுதார். மனைவி மனையை ஆள்பவள். இல்லாள் இல்லத்தை ஆள்பவள். மனைவியை மதித்து நடப்போம். மகுடம் சூட்டுவோம்!
கவிஞர் ரா.ரவி,
உதவி சுற்றுலா அலுவலர்,
விமான நிலையம், மதுரை .
கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மிக நேர்மையான அரசியல்வாதி. அவரது மனைவியின் மரணத்திற்கு பின் நேர்முகத்தில் குறிப்பிட்டு இருந்தார். எனக்கு எல்லாமுமாக இருந்தவள் என் மனைவி. என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு போராட்டத்திற்கு என்றுமே தடையாக இருந்தது இல்லை. அவளது இழப்பு எனக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டு இருந்தார்.
சில பேரிடம் உங்க மனைவி என்ன செய்றாங்க என்றால், வீட்டில் சும்மா இருக்காங்க என்பார்கள். அவர்களை கன்னத்தில் அறைய வேண்டும். வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் ஓய்வின்றி பார்க்கும் மனைவியை சும்மா இருக்கிறாள் என்று சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்பதை உணர வேண்டும். திருச்சி சிவா அவர்களும் மனைவி இறந்த பின் பேசி இருந்தார். இருக்கும் போது நான் அவளை மதிக்கவில்லை. அவளுடன் நேரம் செலவிடவில்லை. வாழும் போது அவள் அருமை அறியவில்லை. இறந்த பின்னே அவளின் இழப்பு பேரிழப்பு என்பதை உணர்ந்தேன் என்றார். மகாகவி பாரதியார், கவியரசு கண்ணதாசன் பாடிய வைர வரிகளை மனதில் கொள்ள வேண்டும். உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி! ஆம்! மனைவியின் கண்களில் கண்ணீர் வராமல் வாழ வைப்பவனே நல்ல கணவன்.
ஒரு மனிதன் தன் தாயுடன் வாழும் வாழ்க்கை 25 ஆண்டுகள் தான். ஆனால் மனைவியுடன் வாழும் வாழ்க்கை மூச்சு இருக்கும் வரை 75 ஆண்டுகள் என்று கூட சொல்லலாம். வளர்ப்பது, படிக்க வைப்பதுடன் தாயின் கடமை முடிந்து விடுகிறது. ஆனால் தறுதலையையும், தலைவனாக்குவது மனைவி. தென்றலையும் புயலாக்குவது மனைவி. ரவுடியை ரம்மியமாக்குவது மனைவி. முட்டாளையும் அறிவாளியாக்குவது மனைவி. ஆற்றுப்படுத்தி நெறிப்படுத்துவது மனைவி. மனிதனை மனிதனாக மாற்றுவது மனைவி. மனைவி இருப்பதால் தான் கணவன் கோபம் தவிர்த்து குடும்பத்தை நினைத்து விலங்கு குணம் விடுத்து மனிதனாக வாழ்கின்றான்.
அம்மா குடிக்காதே! என்றால் குடிப்பவனும், மனைவி குடிக்காதே! என்றால் கேட்டுக்கொள்வான். ஒழுக்கமுள்ளவனாக மாறி விடுவான். மனைவி கிழித்த கோட்டை தாண்டாத கணவன் உண்டு. அவள் கிழிக்கும் கோடு நன்மைக்காகவே இருக்கும்.
ஆட்டோ வாசகம் படித்தேன். மனைவி தந்த வரம், மனைவி சொல்லே மந்திரம், எல்லாம் அவளே, அவளின்றி ஓர் அணுவும் அசையாது. தலையணை மந்திரம் தலைவலி நீக்கும்.
மனைவி பெரும்பாலும் மேன்மைக்கும், நன்மைக்கும், உயர்வுக்கும் கருத்து சொல்வாள். மனைவி பேச்சை கேட்பதில் அன்னப்பறவையாக இருங்கள். நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள். கெட்டதாக இருந்தால் விட்டுவிடுங்கள். கலந்து பேசி முடிவெடுங்கள். கருத்தை கேளுங்கள். மனைவிக்கும் மனது உண்டு, மதித்து நடங்கள். திருவள்ளுவர் உலகப்புகழ் அடைய காரணம் வாசுகி. காந்தியடிகள் தேசப்பிதா ஆக காரணம் கஸ்தூரிபாய். பாரதியார் மகாகவி ஆகிடக் காரணம் செல்லம்மாள். இப்படி சாதனையாளர்கள் அனைவருக்கும் பக்கபலமாக இருந்து ஊக்குவித்தது மனைவி தான்.
கஸ்தூரிபாய் இறந்தபோது காந்தியடிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதார். எனக்கு அகிம்சையை கற்றுத்தந்த குரு கஸ்தூரிபாய் என்றார். நான் ஆரம்ப காலங்களில் ஆணாதிக்கம் செலுத்திய போதும், சினம் கொள்ளாமல் சீர்தூக்கிப் பார்த்து என்னை செம்மைப்படுத்தியவள் என்று சொல்லி அழுதார். மனைவி மனையை ஆள்பவள். இல்லாள் இல்லத்தை ஆள்பவள். மனைவியை மதித்து நடப்போம். மகுடம் சூட்டுவோம்!
கவிஞர் ரா.ரவி,
உதவி சுற்றுலா அலுவலர்,
விமான நிலையம், மதுரை .
அம்மை நோய் வந்தால் அதை குணப்படுத்த மருந்து இல்லை. அதேநேரம் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் ஆன்ட்டி வைரல் மாத்திரைகள் இருக்கின்றன.
பொதுவாகவே வெப்பத்தை தாங்கக்கூடிய வைரஸ், வெப்பத்தை தாங்க இயலாத வைரஸ் என வைரஸ்கள் இரண்டு வகைப்படும். வெப்பத்தை தாங்க முடியாத வைரஸ்கள் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வெயில் காலத்தில் இந்த பிரச்சினைகளை அதிகம் பார்க்க முடியாது. ஆனால், அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ், வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ் வகையை சேர்ந்தது.
சாதாரண பருவ நிலையிலும் பரவக்கூடியது. குறிப்பாக கோடை காலத்தில் அதிகரிக்கக்கூடியது. பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை என அம்மையில் பல வகை உண்டு. ‘வேரிசெல்லா சூஸ்டர்’ என்ற வைரஸ்தான் சின்னம்மை நோய் ஏற்படக் காரணம்.
‘பாராமிக்ஸோ’ குடும்பத்தை சேர்ந்த வைரஸ், தட்டம்மையை ஏற்படுத்துகிறது.
அம்மை நோயின் அறிகுறியாக முதலில் காய்ச்சல் வரும். அதைத் தொடர்ந்து பசியின்மை, உடல் பலவீனம் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் நீர்க்கட்டியைப் போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர்கோத்துக் காணப்படும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடியும்.
பின்னர், நீர் வறண்டு கொப்புளங்கள் உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி, தொடர்ந்து மிதமான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இந்த காலத்தில் இருக்கும். ஏழு முதல் பத்து நாட்களுக்குள் கொப்புளங்கள் உலர்ந்துவிடும்.
அம்மை தாக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், வைத்தியர்கள் வந்து பார்க்க வசதியாகவும் அந்த காலத்தில் அம்மை நோய் தாக்கப்பட்டவர்களை கோவில்களில் தங்க வைத்திருப்பார்கள். அதை பலர் இப்போதும் பின்பற்றுகிறார்கள். அம்மை நோயை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
உடல் வெப்பம் அதிகமாகி நுரையீரல் காய்ச்சல் (நிமோனியா), நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளை காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற மற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை வேப்பிலையில் படுக்க வைப்பது, வேப்பிலை அரைத்துப் போட்டுக்கொள்வதுடன் விட்டுவிடக்கூடாது. அம்மை நோய் வந்தால் அதை குணப்படுத்த மருந்து இல்லை. அதேநேரம் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் ஆன்ட்டி வைரல் மாத்திரைகள் இருக்கின்றன. வலி, எரிச்சல் ஆகியவற்றை தடுக்கவும் மருந்துகள் உண்டு.
அதேநேரம், அம்மை நோய் தாக்குவதை தடுக்கக் குழந்தைகளுக்கு முறையாக தடுப்பூசி போட வேண்டும். இதுவரை அம்மை நோய் வராத பெரியவர்கள்கூட தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசிகளை சரியான காலத்தில் போட்டுக்கொள்வதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். அதேநேரம் எல்லா தடுப்பூசிகளும் எல்லா அம்மை நோய்களையும் வாழ்நாள் முழுக்க தடுப்பதில்லை.
ஆண் குழந்தைகளுக்கு ஆணுறுப்பிலோ, விதைப்பையிலோ அம்மைக் கொப்புளங்கள் தாக்கியிருந்தால் மருத்துவரிடம் கட்டாயமாக ஆலோசனை பெற்று, உரிய மருந்துமாத்திரையை உட்கொள்ள வேண்டும். பாதிப்பு கடுமையாக இருக்கும்பட்சத்தில் எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதேபோல் பெண் பிறப்புறுப்பில் அம்மை நோய் தாக்குதல் இருக்கும்பட்சத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கர்ப்பிணிகளை அம்மை நோய் தாக்கினால், உடனே பயப்பட அவசியம் இல்லை. மருத்துவர் ஆலோசனை மூலம் தாயையும் சேயையும் பாதுகாக்க முடியும்.
சாதாரண பருவ நிலையிலும் பரவக்கூடியது. குறிப்பாக கோடை காலத்தில் அதிகரிக்கக்கூடியது. பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை என அம்மையில் பல வகை உண்டு. ‘வேரிசெல்லா சூஸ்டர்’ என்ற வைரஸ்தான் சின்னம்மை நோய் ஏற்படக் காரணம்.
‘பாராமிக்ஸோ’ குடும்பத்தை சேர்ந்த வைரஸ், தட்டம்மையை ஏற்படுத்துகிறது.
அம்மை நோயின் அறிகுறியாக முதலில் காய்ச்சல் வரும். அதைத் தொடர்ந்து பசியின்மை, உடல் பலவீனம் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் நீர்க்கட்டியைப் போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர்கோத்துக் காணப்படும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடியும்.
பின்னர், நீர் வறண்டு கொப்புளங்கள் உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி, தொடர்ந்து மிதமான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இந்த காலத்தில் இருக்கும். ஏழு முதல் பத்து நாட்களுக்குள் கொப்புளங்கள் உலர்ந்துவிடும்.
அம்மை தாக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், வைத்தியர்கள் வந்து பார்க்க வசதியாகவும் அந்த காலத்தில் அம்மை நோய் தாக்கப்பட்டவர்களை கோவில்களில் தங்க வைத்திருப்பார்கள். அதை பலர் இப்போதும் பின்பற்றுகிறார்கள். அம்மை நோயை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
உடல் வெப்பம் அதிகமாகி நுரையீரல் காய்ச்சல் (நிமோனியா), நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளை காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற மற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை வேப்பிலையில் படுக்க வைப்பது, வேப்பிலை அரைத்துப் போட்டுக்கொள்வதுடன் விட்டுவிடக்கூடாது. அம்மை நோய் வந்தால் அதை குணப்படுத்த மருந்து இல்லை. அதேநேரம் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் ஆன்ட்டி வைரல் மாத்திரைகள் இருக்கின்றன. வலி, எரிச்சல் ஆகியவற்றை தடுக்கவும் மருந்துகள் உண்டு.
அதேநேரம், அம்மை நோய் தாக்குவதை தடுக்கக் குழந்தைகளுக்கு முறையாக தடுப்பூசி போட வேண்டும். இதுவரை அம்மை நோய் வராத பெரியவர்கள்கூட தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசிகளை சரியான காலத்தில் போட்டுக்கொள்வதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். அதேநேரம் எல்லா தடுப்பூசிகளும் எல்லா அம்மை நோய்களையும் வாழ்நாள் முழுக்க தடுப்பதில்லை.
ஆண் குழந்தைகளுக்கு ஆணுறுப்பிலோ, விதைப்பையிலோ அம்மைக் கொப்புளங்கள் தாக்கியிருந்தால் மருத்துவரிடம் கட்டாயமாக ஆலோசனை பெற்று, உரிய மருந்துமாத்திரையை உட்கொள்ள வேண்டும். பாதிப்பு கடுமையாக இருக்கும்பட்சத்தில் எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதேபோல் பெண் பிறப்புறுப்பில் அம்மை நோய் தாக்குதல் இருக்கும்பட்சத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கர்ப்பிணிகளை அம்மை நோய் தாக்கினால், உடனே பயப்பட அவசியம் இல்லை. மருத்துவர் ஆலோசனை மூலம் தாயையும் சேயையும் பாதுகாக்க முடியும்.
கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகள் வீட்டுக்குள் ஏதேனும் அசம்பாவிதமாக செய்துகொள்ளாமல் தடுக்க ஒரே வழி வீட்டை குழந்தைக்கேற்ற பாதுகாப்புச் சூழலாக மாற்றுவது தான்.
கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை சமாளிப்பது பெரும் கஷ்டம். பெற்றோராக நீங்கள் உஷாராக இருந்தாலும்கூட வீட்டுச்சூழலில் எந்நேரமும் குழந்தையை, உங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க முடியாது. குழந்தைகள் வீட்டுக்குள் ஏதேனும் அசம்பாவிதமாக செய்துகொள்ளாமல் தடுக்க ஒரே வழி வீட்டை குழந்தைக்கேற்ற பாதுகாப்புச் சூழலாக மாற்றுவது தான். இதைத்தான் "சைல்ட் ப்ரூஃபிங்" என்கின்றனர். இவற்றை செய்வதால் உங்கள் குழந்தையின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் தன்னிச்சையாக சுற்றுப்புறத்தை ஆய்ந்து விளையாட அனுமதிக்கப்படும்போது, அவர்கள் மனதில் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத் திறன் போன்றவை வளர்கின்றன.
பூட்டுகள்: அலமாரிகள் மற்றும் இழுப்பறைகளுக்கு பூட்டுகள் போடுவதால். குழந்தைகள் அவற்றில் உள்ள அபாயகரமான சாமான்களை எடுப்பதை தடுக்கலாம். சமையலறை மற்றும் பாத்ரூம் போன்ற இடங்களில் உயரம் குறைவான கேபினட்டுகள் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் கெமிக்கல் க்ளீனர்கள், மருந்துகள் மற்றும் கூரான உபகரணங்கள் இருக்கக்கூடும்.
மின்சார பிளக் மூடிகள்: எதையுமே தொட்டுப்பார்த்து தெரிந்து கொள்ள குழந்தைகள் முயற்சிக்கும் என்பதால் மின்சார பிளக் பாயிண்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். எனவே இவற்றுக்கு உறுதியான பிளாஸ்டிக் மூடிகள் வாங்கி பொருத்துவது அவசியம்.
வாயிற்கதவு: குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது அறையை விட்டு படிகளுக்கோ, பால்கனிக்கோ செல்லாமல் இருப்பதற்கு, ‘சேஃப்டி கேட்’ எனப்படும் வாயிற்கதவு மிக அவசியம். இந்த கதவுகளானது சுவரில் நிரந்தரமாக பொருத்தப்படுவதோடு, குழந்தைகள் எளிதில் வெளியே தாண்டி வராத அளவு, அவர்களுக்கான கதவுகள் போன்று இருக்கும். மேலும் அந்த மாதிரியான கதவுகளில் இடைவெளிகள் கூட இருக்கும். ஆகவே அந்த கதவுகளை சரியாக கவனமாக பார்த்து வாங்கி பொருத்த வேண்டும்.
மருந்து மற்றும் விஷப்பொருட்கள்:எதையுமே எடுத்தவுடன் வாயில் வைக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு இயற்கை என்பதால், இந்த விஷயத்தில்நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஆகவே மருந்து பாட்டில்கள், கெமிக்கல் பெட்டிகள் போன்றவற்றை சாதாரணமாக திறந்த மாதிரி வைத்திருக்காமல், உறுதியான மூடியுடன் கூடிய பெட்டியில் வைத்திருப்பது நல்லது.
ஃபர்னிச்சர்: குழந்தை எழுந்து நடக்க ஆரப்பித்தப் பிறகு, அறையில் உள்ள இருக்கை போன்ற கனமான சாமான்கள் நகராமல் இருக்க, சுவருடன் இணைந்த பிராக்கெட்டுகள் (mounting brackets) மற்றும் ஸ்ட்ராப்புகள் (wall straps) போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. இப்படி செய்யாவிட்டால், புத்தக அலமாரிகள் மற்றும் டிரஸ்ஸிங் மேஜைகளை குழந்தைகள் இழுத்து ஏற முயற்சித்து, மேலே தள்ளிக் கொள்ளக்கூடும். மேலும், கூரான முனைகள் உள்ள டீப்பாய் போன்றவற்றின் நான்கு முனைகளில் பம்பர் பேடுகளை (padded bumpers) பொருத்துவதும் அவசியம்.
ஜன்னல்: ப்ளைண்டுகள் (blinds) மற்றும் தொங்கு திரைகள் (drapes) போன்றவற்றிலுள்ள கயிறுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைகள் விஷயத்தில் அபாயமான ஒரு அம்சமாகும். ஆகவே இந்த கயிறுகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருப்பது நல்லது. மேலும் ஜன்னல்கள் திறந்திருக்கும் போது, அதன் வழியாக குழந்தைகள் விழுந்து விடாமல் இருக்க, ஜன்னலில் வலை போன்ற அமைப்பை பொருத்த வேண்டும்.
சமையலறை: சமையலறை என்பது குழந்தைகளுக்கு பல அபாய அம்சங்களுடன் காத்திருக்கிறது. ஏனெனில் அங்கு கூரான கருவிகள், ஆல்கஹால், மருந்துகள், தீக்குச்சிகள், பிளாஸ்டிக் பைகள், நச்சுக் கலந்த கெமிக்கல் பொருட்கள் போன்றவை இருப்பதால், எப்போதுமே அலமாரிகளில் வைத்து சேஃப்டி பூட்டுகள் மூலம் பத்திரப்படுத்த வேண்டும். குழந்தையை வைத்துக் கொண்டு சமைக்கும் போது பாத்திரங்களின் கைப்பிடிகள், ஸ்டவ்வின் பின்புறம் திரும்பியிருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். மைக்ரோவேவ் சாதனத்தை தொடக்கூடாது என்று குழந்தைக்கு சொல்லித் தர வேண்டும்.
மேற்கூறியவாறெல்லாம் பின்பற்றி வந்தால், குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பூட்டுகள்: அலமாரிகள் மற்றும் இழுப்பறைகளுக்கு பூட்டுகள் போடுவதால். குழந்தைகள் அவற்றில் உள்ள அபாயகரமான சாமான்களை எடுப்பதை தடுக்கலாம். சமையலறை மற்றும் பாத்ரூம் போன்ற இடங்களில் உயரம் குறைவான கேபினட்டுகள் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் கெமிக்கல் க்ளீனர்கள், மருந்துகள் மற்றும் கூரான உபகரணங்கள் இருக்கக்கூடும்.
மின்சார பிளக் மூடிகள்: எதையுமே தொட்டுப்பார்த்து தெரிந்து கொள்ள குழந்தைகள் முயற்சிக்கும் என்பதால் மின்சார பிளக் பாயிண்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். எனவே இவற்றுக்கு உறுதியான பிளாஸ்டிக் மூடிகள் வாங்கி பொருத்துவது அவசியம்.
வாயிற்கதவு: குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது அறையை விட்டு படிகளுக்கோ, பால்கனிக்கோ செல்லாமல் இருப்பதற்கு, ‘சேஃப்டி கேட்’ எனப்படும் வாயிற்கதவு மிக அவசியம். இந்த கதவுகளானது சுவரில் நிரந்தரமாக பொருத்தப்படுவதோடு, குழந்தைகள் எளிதில் வெளியே தாண்டி வராத அளவு, அவர்களுக்கான கதவுகள் போன்று இருக்கும். மேலும் அந்த மாதிரியான கதவுகளில் இடைவெளிகள் கூட இருக்கும். ஆகவே அந்த கதவுகளை சரியாக கவனமாக பார்த்து வாங்கி பொருத்த வேண்டும்.
மருந்து மற்றும் விஷப்பொருட்கள்:எதையுமே எடுத்தவுடன் வாயில் வைக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு இயற்கை என்பதால், இந்த விஷயத்தில்நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஆகவே மருந்து பாட்டில்கள், கெமிக்கல் பெட்டிகள் போன்றவற்றை சாதாரணமாக திறந்த மாதிரி வைத்திருக்காமல், உறுதியான மூடியுடன் கூடிய பெட்டியில் வைத்திருப்பது நல்லது.
ஃபர்னிச்சர்: குழந்தை எழுந்து நடக்க ஆரப்பித்தப் பிறகு, அறையில் உள்ள இருக்கை போன்ற கனமான சாமான்கள் நகராமல் இருக்க, சுவருடன் இணைந்த பிராக்கெட்டுகள் (mounting brackets) மற்றும் ஸ்ட்ராப்புகள் (wall straps) போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. இப்படி செய்யாவிட்டால், புத்தக அலமாரிகள் மற்றும் டிரஸ்ஸிங் மேஜைகளை குழந்தைகள் இழுத்து ஏற முயற்சித்து, மேலே தள்ளிக் கொள்ளக்கூடும். மேலும், கூரான முனைகள் உள்ள டீப்பாய் போன்றவற்றின் நான்கு முனைகளில் பம்பர் பேடுகளை (padded bumpers) பொருத்துவதும் அவசியம்.
ஜன்னல்: ப்ளைண்டுகள் (blinds) மற்றும் தொங்கு திரைகள் (drapes) போன்றவற்றிலுள்ள கயிறுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைகள் விஷயத்தில் அபாயமான ஒரு அம்சமாகும். ஆகவே இந்த கயிறுகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருப்பது நல்லது. மேலும் ஜன்னல்கள் திறந்திருக்கும் போது, அதன் வழியாக குழந்தைகள் விழுந்து விடாமல் இருக்க, ஜன்னலில் வலை போன்ற அமைப்பை பொருத்த வேண்டும்.
சமையலறை: சமையலறை என்பது குழந்தைகளுக்கு பல அபாய அம்சங்களுடன் காத்திருக்கிறது. ஏனெனில் அங்கு கூரான கருவிகள், ஆல்கஹால், மருந்துகள், தீக்குச்சிகள், பிளாஸ்டிக் பைகள், நச்சுக் கலந்த கெமிக்கல் பொருட்கள் போன்றவை இருப்பதால், எப்போதுமே அலமாரிகளில் வைத்து சேஃப்டி பூட்டுகள் மூலம் பத்திரப்படுத்த வேண்டும். குழந்தையை வைத்துக் கொண்டு சமைக்கும் போது பாத்திரங்களின் கைப்பிடிகள், ஸ்டவ்வின் பின்புறம் திரும்பியிருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். மைக்ரோவேவ் சாதனத்தை தொடக்கூடாது என்று குழந்தைக்கு சொல்லித் தர வேண்டும்.
மேற்கூறியவாறெல்லாம் பின்பற்றி வந்தால், குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.






