என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பத்தே நிமிடத்தில் இந்த சட்னியை செய்யலாம். இந்த சட்னி ஆரோக்கியமானதும் கூட. இட்லி, தோசைக்கு, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 1
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 5 பற்கள்
    கடலை மாவு - 1 டீஸ்பூன
    வெல்லம் - 3/4 டீஸ்பூன
    தண்ணீர் - 1 1/2 கப்
    மஞ்சள் - 1/4 டீஸ்பூன
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன

    தாளிக்க :

    எண்ணெய் - 2 டீஸ்பூன
    கடுகு - 1 டீஸ்பூன
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன
    வெந்தையம் - 1/4 டீஸ்பூன
    சீரகம் - 1 டீஸ்பூன
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    காய்ந்த மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    பாம்பே சட்னி

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கடலை மாவை 1 -1/2 கப் தண்ணீரில் கட்டியாகாமல் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தையம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி , பூண்டு, வெங்காயம் சேர்த்து வதங்கியதும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    வதங்கியதும் கரைத்த கடலை மாவை ஊற்றி கலக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

    பின் நன்குக் கலக்கிவிட்டு சிறு தீயில் 4- 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் கடலை மாவு சட்னி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நமது பிள்ளைகள் திறமையானவர்களாக, நல்லவர்களாக உருவாகுவார்கள் என்று முதலில் நாம் உறுதியாக நம்ப வேண்டும். அவர்களை நாம் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
    இன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்லதை தெரிந்து கொள்ள நான்கு வழிகள் இருக்கிறது என்றால், கெட்டதை அறிந்து கொள்ள ஆயிரம் வழிகள் கிடைக்கின்றன. இதற்கு மத்தியில்தான் திறமையான இளைஞர்கள் உருவாக வேண்டியதிருக்கிறது. ஆகவே அவர்களை நாம் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நமது பிள்ளைகள் திறமையானவர்களாக, நல்லவர்களாக உருவாகுவார்கள் என்று முதலில் நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

    பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்தபோது, ஒரு மாணவியின் கைவினைப் பொருள் தயாரிப்பை பார்த்து பாராட்டினேன்.

    அப்பொழுது அவள் என்னிடம் மிக நெருக்கமாக வந்து, “என்னை உங்களுக்கு பிடிக்குமா ஆன்டி?” என்று கேட்டாள்.

    “ஆமாம் செல்லம்.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா” என்று நான் கூறியவுடன், அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.

    “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டவுடன் “நான் படிப்பதெல்லாம் மறந்து போய் பரீட்சையில் பெயில் ஆகி விடுகிறேன். மிஸ் திட்டுறாங்க, யாரும் என்னோட பேச மாட்டேங் கிறாங்க.. என்னை யாருக்கும் பிடிக்கல..” என்று தொடர்ந்து அழ, அவளை அரவணைத்துக் கொண்டு “உன்னால் முடியும். நிச்சயமாக நீ நல்ல மார்க் வாங்குவாய்” என்று நான் சொன்னவுடன் அவள் முகத்தில் புன்னகை வெளிப்பட்டது.

    வகுப்பு முடிந்ததும் அவள் ஆசிரியையை சந்தித்து “அவள் மனதில் உன்னால் முடியும் நிச்சயம் நீ வெல்வாய் என்று நம்பிக்கையை விதையுங்கள். அதையே அவள் பெற்றோரும் கூறும்படி சொல்லுங்கள்” என்றேன். அதன் பின்பு அவள் கல்வித்திறன் மேம்பட்டது. இதுதான் சரியான அணுகுமுறை.

    பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளீர்களோ, அந்த அளவு கண்காணிப்பும் அவசியம். பிள்ளைகள் மேல் எந்த அளவு அன்பை காட்டுகின்றீர்களோ, அந்த அளவு கண்டிப்பும் தேவை. ஆனால் அது தண்டனையாக இல்லாமல், தான் செய்தது தவறு என்பதை அவர்கள் உணரும் வண்ணம் இருக்கவேண்டும்.

    பெற்றோர்களாகிய நாம், பிள்ளைகளின் கல்வி, உடல்நலம், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏனைய திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றில் காட்டும் அக்கறை போல பிள்ளைகளின் மன நலனில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த காரணத்தினால்தான் பெற்றோர்-பிள்ளைகள் இடையே கருத்து மோதல் பல வீடுகளில் ஏற்படுகிறது.

    ‘அந்த காலத்தில் நாங்க எப்படி இருந்தோம் தெரியுமா?’ என்று நம் பிள்ளைகளிடம், கேள்வி கேட்கும் முன் கொஞ்சம் யோசிப்போம். யோசித்தால் இன்று இவர்களின் மாற்றத்திற்கு நாமும் காரணம் என்பதை புரிந்துகொள்ளலாம்.

    பிள்ளைகளுக்கு பெற்றோரின் அன்பு தேவை. அரவணைப்பு தேவை. பிள்ளைகளின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நடக்கவேண்டும். பிள்ளைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை தெரிந்து, அதை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும். பிள்ளைகளிடம் சுய கட்டுப்பாட்டை வளர்க்கவேண்டும். முறையான முயற்சியுடன் திறமைகளைத் தானே முன்வந்து வளர்க்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். கொடுத்த வேலையை அதிக கண் காணிப்பு இன்றி நிறைவேற்றும் ஆற்றலை மேம்படுத்தவேண்டும். நல்ல மனப்பக்குவம், நல்லொழுக்கம், தலைமைப் பண்புகள், பண்பு நெறி எனும் சீரிய அம்சங்களில் பிள்ளைகளை ஜொலிக்கச் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்கள், தகுதியான நல்ல பிள்ளைகளாக, கவலை கொள்ள வேண்டிய அம்சங்கள் எதுவும் இல்லாதவர்களாக வளர்வார்கள்.

    இன்றைய தாய்மார்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் மகள்களிடம் பேசுவதே தங்களுக்கு சவாலான விஷயமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது மகள்கள் தங்களிடம் மனந்திறந்து பேசுவதில்லை என்று குறைபடுகிறார்கள். அவர்களுடன் பேசுவதற்கென்று தனி நேரம் எதுவும் ஒதுக்கவேண்டியதில்லை. அவர்கள் ஏதாவது செய்துகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்து, அந்த வேலையை செய்துகொண்டே அவர்களுடன் பேசலாம். பிள்ளைகளோடு சேர்ந்து வீட்டிலேயே சின்ன சின்ன வேலைகள் செய்யலாம், சேர்ந்து சாப்பிடலாம், அவர் களோடு விளையாடலாம். இப்படி அவர்களோடு நேரம் செலவிட்டால், பிள்ளைகளிடம் மனந்திறந்து பேச நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

    தாய் பொறுமையாகக் கேட்டால்தான் பிள்ளைகள் மனந்திறந்து பேசுவார்கள். நாம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தால், நம்மிடம் பேசத் தயங்குவார்கள். பிள்ளைகளிடம் நாம் நட்போடு பழகினால், வெளிப்படையாகப் பேசுவார்கள். ‘என்னை உன் நண்பன் மாதிரி நினைச்சுக்கோ, எதுவாக இருந்தாலும் சொல்லு’ என்று சொன்னால் மட்டும் போதாது. அதே உணர்வுடன் பழகவேண்டும். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளை அசட்டை செய்யாமல், அவர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல், பிள்ளைகள் விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக காது கொடுத்து கேட்க வேண்டும்.

    “என் அம்மாவிடம் எதை பத்தி வேண்டுமானாலும் தயங்காமல் பேசலாம். நான் பேசும்போது என் அப்பா குறுக்கே பேசமாட்டார். என்னை பத்தி தப்புக்கணக்கு போட மாட்டார். நான் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியாக கேட்பார். அதுக்கப்புறம் எனக்கு தேவையான, நல்ல ஆலோசனைகளை கொடுப்பார்” என்று அவளது தோழியிடம், உங்கள் மகள் பேசும் அளவுக்கு நீங்கள் அவளிடம் நம்பிக்கையை பெறுங்கள்.

    சில விஷயங்களைப் பற்றி மகள்களிடம் பேசும்போது, உதாரணமாக காதலிப்பதைப் பற்றிப் பேசும்போது அதிலிருக்கும் ஆபத்துகளைப் பற்றி மட்டும் சொல்லாமல் அவர்கள் சரியான தீர்மானம் எடுக்க உதவ வேண்டும். காதலிப்பதற்கு முன்னால் அந்த நபரை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள என்ன செய்யவேண்டும்? சரியான நபரை தேர்ந்தெடுப்பது எப்படி? தற்போது காதல் தேவையா? உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பது எப்படி? என்பதை எல்லாம் தெளிவாக உணர்த்தவேண்டும். ஒருவரின் புற அழகை விட அக அழகு முக்கியம், பொறுமை முக்கியம் என்பதை தோழமையுணர்வுடன் சொல்லவேண்டும். அப்படி சொல்லும்போது பிள்ளைகள் ‘நமக்கு யாரையாவது பிடித்திருந்தால், அதை அப்பா-அம்மாவிடம் மறைக்காமல் சொல்லவேண்டும்’ என்று கருதுவார்கள். ஒருவேளை யாரையாவது காதலித்தால்கூட பொறுமையாக காத்திருப்பார்களே தவிர தவறான முடிவு எடுக்க மாட்டார்கள்.

    ‘நம் பிள்ளைகள் மீது நம்பிக்கைவைப்போம். அவர்கள் நல்லவர்களாக வளர்வார்கள்’ என்பது நல்ல பண்பாடு. நல்ல பழக்கங்களை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதைவிட, நாம் அவைகளை கடைப்பிடித்து அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். எங்கோ இருக்கும் தலைவர்கள் நமது குழந்தை களுக்கு முன்மாதிரியில்லை. அவர்கள் முன்னால் வாழ்ந்துகாட்டும் நாமே அவர்களுக்கு முன்மாதிரியாவோம்.

    -ஆ.ஆண்டனி ரோஸ்லின்,

    தொழில் முனைவு மற்றும் மனிதவள ஆலோசகர், மதுரை.
    உலக அளவில் மக்களிடம் மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது; மகிழ்ச்சி குறைந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான், ‘வாருங்கள் மனந்திறந்து பேசலாம்.. மன அழுத்தத்தை போக்கலாம்’ என்ற கோஷத்தை, உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்திருக்கிறது.
    உலக அளவில் மக்களிடம் மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது; மகிழ்ச்சி குறைந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான், ‘வாருங்கள் மனந்திறந்து பேசலாம்.. மன அழுத்தத்தை போக்கலாம்’ என்ற கோஷத்தை, உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்திருக்கிறது.

    மகிழ்ச்சியை குறைக்கும் மன அழுத்தத்தை, திட்டமிட்ட சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தி, குணப்படுத்தி விடலாம். போதைப்பொருள் பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்தால், மன அழுத்தத்தில் இருந்து மீள்வது மிகவும் சுலபம்தான்.

    லேசான மன அழுத்த பாதிப்பு கொண்டவர்களுக்கு மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனை மட்டுமே போதுமானது. நிபுணர்கள் சொல்வதை பின்பற்றி நடக்கவேண்டும். சில பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு மன அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் அதில் இருந்து மீள, குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் அவசியம்.

    மனஅழுத்த அறிகுறி கொண்ட சிலர் எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். சதா நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அளவு கடந்த கோபத்தை வெளிக்காட்டுவர். சிலரோ திடீரென்று தனிமையைத் தேடிச்செல்வர். பின்பு அளவுக்கு அதிகமாக கூட்டத்தோடு நெருங்கிப் பழகிக் கொண்டாடுவார்கள். இந்த தலைகீழ் மாற்றங்கள்கூட ஒருவகை மன அழுத்தத்தின் வெளிப்பாடுதான்.

    பெண்களைப் பொறுத்தவரையில் மூன்று பருவ நிலைகளில், இயற்கையாகவே மன அழுத்தம் தோன்றும். மாதவிலக்கு தொடங்கும் சில நாட்களுக்கு முன்பும், பிரசவத்திற்கு பிறகும், மாதவிலக்கு முழுமையாக நின்றுபோகும் ‘மெனோபாஸ்’ காலகட்டத்திலும் பெண்களின் உடலில் இயற்கையாகவே ஹார்மோன் சுரப்பதில் சீரற்ற நிலை உருவாகும். அப்போதெல்லாம் அவர்களுக்கு மன அழுத்தம் உருவாகி, மறையும். இதை குடும்பத்தினர் உணர்ந்து பெண்களின் மனநிலை அறிந்து ஆதரவாக நடந்துகொள்ளவேண்டும்.

    ‘ஹைப்போ தைராய்டு’ நோய் இருப்பவர்களுக்கும் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தோன்றும். இப்போது பெரும்பாலானவர்கள் ‘ஏ.சி’ அறைக்குள்ளேயே வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். வீட்டிலும், அலுவலகத்திலும், காரிலும், உடற்பயிற்சி செய்யும் ஜிம்மிலும், ஷாப்பிங் செய்யும் கடைகளிலும், ‘ஏ.சி’யிலேயே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் உடலில் வெயிலோ, இயற்கை வெளிச்சமோ படுவதே இல்லை. உடலில் வெயில் படாமலே இருந்தாலும் மனநிலையில் மாற்றம் ஏற்படும். அதுவும் மன அழுத்தத்திற்கான அறிகுறியாக மாறும்.

    சிறுவர், சிறுமியர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் இருத்தல், சாப்பிட விருப்பம் இல்லாமல் இருத்தல், அதிக கோபம் கொள்ளுதல், சத்தத்தை சகித்துக்கொள்ள முடியாமை, நண்பர்களோடு சேர்ந்து விளையாட விரும்பாமல் எப்போதும் தனிமையில் இருத்தல் போன்ற குணாதிசயங்கள் உங்கள் குழந்தைகளிடம் இருந்தால் கவனியுங்கள். எதிர்காலத்தில் அவர்கள் மன அழுத்தத்தின் பிடியில் அகப்படலாம்.

    பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆறு மாதங்கள் அதற்கான மாத்திரைகளை சாப்பிட்டு அதில் இருந்து மீண்டிருப்பதாக தன்னம்பிக்கையோடு அவர் கூறியுள்ளார். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டு மானாலும் மன அழுத்தம் ஏற்படலாம். அதில் இருந்து எல்லோராலும் மீள முடியும்.

    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், ஹாரிபாட்டர் கதைகள் மூலம் உலகப்புகழ் பெற்ற ஜே.கே.ரவுலிங், உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி போன்ற ஏராளமான பிர பலங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதில் இருந்து மீண்டு வெற்றியாளராகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.

    மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக வாழ, தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உருவாக்குங்கள். குடும்ப உறவுகளை மேம்படுத்துங்கள். நட்பு வட்டத்தை ஏற்படுத்துங்கள். நெருக்கமானவர்களிடம் மனந்திறந்து பேசுங்கள். உடற்பயிற்சி செய்யும்போது மூளையில் என்டோர்பின் சுரக்கும். அது மனதுக்கு சந்தோஷத்தையும், உடலுக்கு உற்சாகத்தையும் தரும். சமூகத்தோடு இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மனதுக்குள் எதையும் பூட்டி வைக்காமல் மனந் திறந்து பேசுங்கள். செல்போனை அதிக நேரம் பயன் படுத்துகிறவர்களுக்கும், இன்டர்நெட்டை அதிக அளவில் பயன்படுத்துகிறவர்களுக்கும் மன அழுத்த பாதிப்பு நிறைய ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் அவைகளில் மூழ்கிப்போகாதீர்கள்.

    உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் மனம் விட்டுப் பேசுங்கள். நீங்கள் மனம்விட்டு பேசுவது, உங்களிடம் பேசுபவரையும் மனம்விட்டு பேசச்செய்யும். அதன் மூலம் உங்களுக்கும், அவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.
    பல விதமான நோய்த்தொற்றுகளையும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்தே தடுக்க முடியும்.
    பல விதமான நோய்த்தொற்றுகளையும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்தே தடுக்க முடியும்.

    ஆவிபிடித்தல் சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. தீவிரமான சளி மற்றும் இருமல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள் 100 மிலி தண்ணீரில் நான்கு பல் தோல் உரித்த அல்லது உரிக்காத, பூண்டைச் சேர்த்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றைக் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஆவிபிடிக்கவும். இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை நீங்கி சுவாசப்பாதை சீராகும்.

    பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கொண்டு தயாராகும் நீரை ஆவிபிடிக்கும்போது நுரையீரலில் உள்ள நோய்த்தொற்றுகள் அழிக்கப்படும். இதை நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை எனச் சில நாள்கள் தொடர்ந்து ஆவிபிடிப்பது சிறந்தது. கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக நுரையீரல் கருதப்படும் நிலையில், இந்த முறையில் ஆவிபிடிப்பது நல்ல பயனளிக்கும்.
    தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனைகளை பார்க்கலாம்.
    இந்திய திருமணங்கள் புனிதமானவை. அதனால்தான் அவை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் முக்கியத்துவம் பெற்று திகழ்கின்றன. அது மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்திய கலாசார திருமண முறைகளால் கவரப்படுகிறார்கள். வெளிநாட்டு ஆணும், பெண்ணும் இந்திய திருமணமுறைகளை ஏற்று திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய திருமண முறைகளில் முதலிரவும் முக்கியத்துவம் பெறுகிறது. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கும், எதிர்கால வாழ்க் கைக்கு திட்டமிடுவதற்கும், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்வதற்கும் அந்த இரவை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அன்று மனோரீதியாக நெருங்கி, உடல் ரீதியாக நிறைவடைகிறார்கள்.

    தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனை!

    உடல்ரீதியான இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முதலில் புதுமணத் தம்பதிகள் மனோரீதியாக தயாராகவேண்டும். குறிப்பாக பெண்ணின் மனதில் பயமும், பதற்றமும், ஈடுபாடின்மையும் இருந்துகொண்டிருந்தால் உறவை ஆர்வமாக்கும் வழுவழுப்பு திரவம் சுரக்காது. அதனால் பாலுறவு வலி நிறைந்த அனுபவமாகிவிடும். அத்தகைய வலிக்கு சிகிச்சை தேவையில்லை. ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து மனம்விட்டுப்பேசி, முன்விளையாட்டுகளிலும் ஈடுபட்டால் அவர்களாகவே இந்த பிரச்சினையை தீர்த்து, வலியின்றி தாம்பத்ய உறவை மேற்கொள்ளலாம்.

    ‘வஜைனஸ்மஸ்’ என்ற உறுப்பு இறுக்க பாதிப்பால் புதுப்பெண்கள் தாம்பத்ய உறவை சரிவர மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதுண்டு. அத்தகைய பாதிப்பிற்குள்ளான பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. ‘வஜைனஸ்மஸ்’ பாதிப்பு இருக்கும் பெண்கள் உறவுக்கு தயாராகும்போது அவர்களது உறுப்பை சுற்றியுள்ள தசைநார்கள் இறுகி சுருங்கி, உறுப்பை மூடும் அளவுக்கு முறுக்கிக்கொள்ளும். அப்போது தாம்பத்யம் செய்யமுடியாது. அதை மீறி கணவன் வலுகட்டாயமாக உறவு கொள்ள முயன்றால் அது பெண்ணுக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.

    வஜைனஸ்மஸ் பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடலுறவை பற்றிய பயம் இருந்தாலும், கடந்த காலத்தில் பாலியல் வன்புணர்வு கொடுமையை அனுபவித்திருந்தாலும், இந்த பாதிப்பு தோன்றும். உடல்ரீதியாக ஆராய்ந்தால், உறுப்பு பகுதியில் வளர்ச்சிக்குறைபாடு கொண்ட பெண்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவார்கள். அங்கிருக்கும் காயங்கள், தழும்புகள், கட்டிகள், படைகள் போன்ற வைகளும் வஜைனஸ்மஸ்க்கு காரணம்.

    கருப்பை நழுவி கீழ்நோக்கி வந்து துருத்திக்கொண்டிருக்கும் ‘பிரலேப்ஸ் யூட்ரெஸ்’ என்ற பாதிப்பும் உடலுறவை வேதனைக்குரியதாக்கிவிடும். இது தவிர பிறப்பு உறுப்பு அழற்சி, கருப்பைக்கழுத்து அழற்சி, எண்டோமெட்ரியத்தில் ஏற்படும் அழற்சி போன்றவைகளாலும் வஜைனஸ்மஸ் ஏற்படும்.

    பெண்களின் தாம்பத்ய ஈடுபாட்டிற்கு கிளர்ச்சி நிலை மிக முக்கியம். ஆனால் தற்போது நிலவிவரும் வேலையின்மை, பொருளாதார சிக்கல் போன்றவைகளால் ‘கிளர்ச்சியின்மை’க்கு உருவாகும் பெண்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. கணவனும்- மனைவியும் அந்தரங்கமாக தொட்டு உறவாடவேண்டும். அப்போதுதான் உடலும், மனமும் இன்பத்திற்கு தயாராகும். தயாரானால்தான் உடலில் இயல்பான மாற்றங்கள் உருவாகி கிளர்ச்சி தோன்றும்.

    அந்த தருணத்தில் கருப்பைக் கழுத்து மற்றும் உறுப்பு பகுதியில் இருக்கும் சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கும். ஈரக்கசிவு தோன்றும். அது கிளர்ச்சியை மேன்மைப்படுத்தி தாம்பத்யத்தில் இணையவைக்கும். பொதுவாகவே ஆண்கள் விரைவாக கிளர்ச்சியடைந்துவிடுவார்கள். பெண்கள், ஆண்களைப்போல் விரைவாக கிளர்ச்சியடைவதில்லை. தனது மனைவியை கிளர்ச்சியடையச் செய்வதும், அவளை திருப்தியடையச் செய்வதும் ஆணின் கடமை. கிளர்ச்சியடையாத பெண்களுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வு நவீன பாலியல் மருத்துவத்தில் உள்ளது. 
    தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இதற்கான சித்த மருத்துவம் சார்ந்த தீர்வுகளை இங்கு காண்போம்.
    தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இது அனைத்து வயதினருக்கும் ஏற்படுகின்ற பொதுவான பாதிப்புதான். இதற்கான சித்த மருத்துவம் சார்ந்த தீர்வுகளை இங்கு காண்போம்.

    * தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ வேண்டும். மேலும் கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக் குழைத்து தடவ உதடு வெடிப்பு நீங்கும்.

    * நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து தடவிவர நல்ல பலன் தெரியும். கேரட் சாறு, கிளசரின், பசும்பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகும்.

    * உதடுகளில் ஈரப்பதம் குறையாமலிருக்க அடிக்கடி நீரையும், பழச்சாறுகளையும் பருக வேண்டும் இது உதடு வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

    * காலை, மாலை வேளைகளில் ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து உதட்டில் பூசிவர வேண்டும். புண்ணாகிப்போன உதடுவெடிப்புகள் குணமாக நல்லெண்ணெயையோ, நெய்யையோ தடவ அப்புண்கள் விரைவில் குணமாகும்.

    * எலுமிச்சையின் சாற்றை உதட்டுப்புண்கள் ஆறிய பிறகு தடவிவர உதடுகள் பழைய நிறத்தையும், பளபளப்பையும் பெரும். 
    பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகள் பருகலாம். இன்று காளான் கிரீம் சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான் - 200 கிராம்
    பெ.வெங்காயம் - 1
    பூண்டு - 10 பல்
    பிரிஞ்சி இலை - சிறிதளவு
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு, வெண்ணெய் - தேவைக்கு
    மைதா - 4 டீஸ்பூன்
    பால் - கால் லிட்டர்
    எண்ணெய் - சிறிதளவு

    செய்முறை:

    காளான், பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு வெண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் மைதா மாவை கொட்டி வறுக்கவும்.

    பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறிவிட்டு கொதிக்க விடவும்.

    அது கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து கிரீம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.

    அது வதங்கியதும் பிரிஞ்சி இலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    பிறகு காளானை சேர்த்து கிளறவும்.

    அது வெந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதிக்க தொடங்கியதும் கிரீம், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.

    அடுத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திருமண வயதை அதிகரிக்கும்போது பெண்கள் தங்கள் கல்வி தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தாய்மை அடையும்போது தாய்க்கும், சேய்க்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும் நிலை ஏற்படும்.
    வளரிளம் பருவ பெண்களின் அனைத்து விதமான பிரச்சினைகளையும் ஆராய்வதற்காக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்த பட்சமாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதனை மறுபரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    18 வயதிற்குள்ளேயே பெண்களை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் நாட்டின் பல பகுதியில் இருக்கத்தான் செய்கிறது. “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 வயதுக்குட்பட்ட பெண்களில் 1.5 மில்லியன் பேருக்கு திருமணம் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன” என்று யுனிசெப் கூறுகிறது.

    2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக் கெடுப்புப்படி 27 சதவீத சிறுமிகள் 18 வயதை நெருங்குவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். திருமணமான பெண்களில் 31 சதவீதம் பேர் 18 வயதிற்குள் குழந்தை பெற்றுவிடுகிறார்கள். இதுபோன்ற காரணங்களால் அந்த இளம் தாய்மார்களின் உடல் நலமும், மன நலமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அது ஆரோக்கியமற்ற இந்தியா உருவாகவும் காரணமாகி விடுகிறது.

    18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டு தாய்மை அடைந்து விடும் பெண்கள் உடல் அளவில் மிகுந்த பலவீனமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். பெற்ற குழந்தையை பேணி வளர்க்கும் அளவுக்கு அவர்களது உடலில் ஆற்றல் இல்லாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அதை தொடர்ந்து ரத்த சோகை போன்றவை உருவாகி அவர்கள் பல்வேறு நோய்களுக்கும் ஆட்பட்டு விடுகிறார்கள். பெரும்பாலும் அத்தகைய இளம் பெண்கள் கிராமங்களில் வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்களாக இருப்பதால், வேலைகளுக்கு செல்ல முடியாத அளவிற்கு ஆரோக்கிய சீர்கேடு அடைகிறார்கள். இந்த நிலையை மாற்றத்தான் பெண்களின் திருமண வயத்தை அதிகரிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசிக்க தொடங்கியுள்ளது.

    “18 வயதை கடந்த பிறகு திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுடன் ஒப்பிடுகையில், அதற்கு முன்னதாகவே கர்ப்பிணி ஆகிறவர்கள் எடை குறைந்தவர்களாகவும், ரத்த சோகைக்கு ஆளாகக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கல்வி, வாழ்க்கைத்தரத்திலும் பின் தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள்” என்று பல்வேறு ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

    திருமண வயதை அதிகரிக்கும்போது பெண்கள் தங்கள் கல்வி தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தாய்மை அடையும்போது தாய்க்கும், சேய்க்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும் நிலை ஏற்படும். 
    உங்கள் பிள்ளைகள் புத்திசாலித்தனமானவர்களாகவும், அறிவுக்கூர்மையுடையவர்களாகவும் வளர விரும்பினால், தூங்க செல்லும் முன்பு கதை வாசிக்கும் பழக்கத்தை பின்பற்றவையுங்கள்.
    குழந்தைகளை இரவில் தூங்க வைப்பது நிறைய பெற்றோருக்கு கடினமான விஷயமாக இருக்கிறது. சில குழந்தைகள் நள்ளிரவு நெருங்கும் வரை தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பார்கள். குழந்தைகள் நன்றாக தூங்கினால்தான் அவர்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். சுறுசுறுப்புடன் செயல்படவும் தூண்டும். இரவில் தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் வழக்கத்தை பின்பற்றலாம். அது குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பதோடு அவர்களது ஆளுமைத்திறனையும் வளர்க்கும்.

    உங்கள் பிள்ளைகள் புத்திசாலித்தனமானவர்களாகவும், அறிவுக்கூர்மையுடையவர்களாகவும் வளர விரும்பினால், தூங்க செல்லும் முன்பு கதை வாசிக்கும் பழக்கத்தை பின்பற்றவையுங்கள். நல்ல ஒழுக்கங்களை போதிக்கும் கதைகளைப் படிப்பதன் மூலம் நல்ல பண்புகளை பின்பற்றி வளர்வார்கள்.

    குழந்தை பருவத்தில் இருந்தே நீங்கள் அவர்களுக்கு கதை சொல்லும் வழக்கத்தை தொடரலாம். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். சிறந்த கற்பனைத்திறன், அறிவுத்திறன் கொண்டவர்களாகவும் வளர்வார்கள். நல்ல புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்வார்கள். குழந்தைகள் வளரும்போது அவர்களின் மூளையும் வளர்ச்சி பெறும். அப்போது கேட்கும் தகவல்களை சிறப்பாக உள்வாங்கினால் சரியான அறிவு வளர்ச்சியை பெறுவார்கள். அதற்கு கதை கேட்கும், படிக்கும் பழக்கம் உதவும்.

    குழந்தைகள் பேசும்போது அவர்களின் உடல் மொழிகளையும், உதட்டு அசைவுகளையும் ரசித்து பாருங்கள். அது அவர்களின் அறிவாற்றல் செயல்பாடுகளை அதிகரிக்க உதவும். கதை வாசிக்கும் பழக்கம் கொண்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை திறமையாக சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக விளங்குவார்கள். அவர்களின் தகவல்தொடர்பு திறனை மேம்படுத்துவதில் கதை சொல்லுதலும், கதை வாசிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. கதையில் வரும் சம்பவங்களை கேள்விகளாக கேட்டு பதில் சொல்வதற்கு ஊக்குவிப்பது அவர்களை தைரியமானவர்களாக உருவாக்க உதவும். மேலும் புதிய சொற்களை ஆர்வமாக கற்றுக்கொள்ளவும் முயற்சிப்பார்கள்.

    குழந்தைகள் தினமும் வீட்டில் உள்ளவர்கள் பேசும் மொழியை நன்றாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் தாய்மொழியில் சரளமாக பேச தொடங்குகிறார்கள். எவ்வளவு அதிகமாக கேட்கிறார்களோ, அதற்கேற்ப அதிக சொற்களையும் கற்றுக்கொள்வார்கள். அதற்கு கதை கேட்கும் வழக்கம் துணைபுரியும்.

    புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கம். குழந்தை பருவத்தில் இருந்தே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தால் அறிவாற்றல் மேம்படுவதுடன் சிந்தனைத்திறனும், கற்றல் திறனும் மேம்படும். ஆரம்பத்தில் குழந்தைகளை கவரும் கார்ட்டூன் புத்தகங்களுடன் கதை சொல்லிக்கொடுக்கும் பழக்கத்தை தொடங்கலாம்.

    குழந்தைகள் எப்போதும் புதிய விஷயங்களை காணவும், கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருப்பார்கள். பிரமாண்டமான படங்களுடன் கூடிய கதை விளக்கங்கள் அவர்களை எளிதாக கவர்ந்திழுத்துவிடும். அதில் இடம்பெறும் புதிய சொற்களையும் ஆர்வமாக படிப்பார்கள். எழுச்சியூட்டும் கதைகளைப் படிப்பது, அதேபோன்ற ஆளுமை திறன் கொண்டவர்களாக வளர்வதற்கு ஊக்கப்படுத்தும். எதையும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் எதிர்கொள்ள வும் தயாராகுவார்கள். 
    கொ.மு., கொ.பி., என்று சொல்லத்தக்க விதத்தில் கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று இன்றைய தினம் இந்த கொரோனா மனித வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டிருக்கிறது.
    இந்த நூற்றாண்டில் இதுவரையில் பெரும்பாலான மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிற ஒரு வார்த்தையாக மாறி விட்டிருக்கிறது. அந்த அளவுக்கு மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொ.மு., கொ.பி., என்று சொல்லத்தக்க விதத்தில் கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று இன்றைய தினம் இந்த கொரோனா மனித வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டிருப்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற ஜி.ஓ.கியூ.ஐ.ஐ. என்னும் அதிநவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிற ஒருங்கிணைந்த தடுப்பு சுகாதார தள நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அம்பலத்துக்கு வந்துள்ளது.

    இந்த ஆய்வில் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றிய பார்வைதான் இது.

    தூக்க நேரம் குறைவு

    கொரோனா வைரஸ் தொற்று, மனித வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி 10 ஆயிரம் பேரை பேட்டி கண்டிருக்கிறார்கள். இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள முக்கிய தகவல், இந்தியர்கள் இப்போது ஒழுங்கற்ற தூக்க பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் ஆரோக்கியமாக சாப்பிடுகிறார்கள். ஆரோக்கியமாகவும், உடல் தகுதியுடனும் இருக்க மெனக்கிடுகிறார்கள் என்பதாகும்.

    முதல் 21 நாள் ஊரடங்கின்போது, இந்தியாவின் சராசரி தூக்க நேரம் அதிகரித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அது குறைந்துள்ளது.

    44 சதவீதம்பேர், வழக்கத்தை விட தாமதமாக தூங்கச்சென்றிருக்கிறார்கள். 10 சதவீதம்பேர், 2 மணி நேரம் தாமதமாக எழுந்து இருந்திருக்கிறார்கள்.

    ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் சராசரி தூக்க நேரம் என்பது 6 மணி நேரம் 54 நிமிடம். ஏப்ரலில் இது 4 நிமிடங்கள் குறைந்தது. ஊரடங்கின் தொடக்கத்தில் இருந்து இது 8 நிமிடங்கள் இன்னும் குறைந்துள்ளது.

    தூக்க நேரம் தொடர்ந்து குறைந்து வந்திருப்பது, நாம் தூக்கத்துக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்று காட்டுகிறது. ஆனால் இது நல்லதில்லை. தூக்கம்தான் நோய் எதிர்ப்புச்சக்தியை கட்டமைப்பதில் மூலைக்கல் ஆகும். 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

    ஊரடங்குக்கு முன்பாக 47, 48 சதவீத மக்கள் நள்ளிரவுக்கு பின்னர் தூங்கச்செல்வதை வழக்கமாக்கி இருந்தனர். மார்ச் 22-ந் தேதி ஊரடங்கு தொடங்கியபோது இது மாறியது. 55 சதவீதத்தினர் மார்ச் மாதத்தில் நள்ளிரவுக்கு பின்னர் தூங்கினர். ஏப்ரலில் இது 56 சதவீதமானது. மே மாதம் இது 54 சதவீதமாக குறைந்தது. ஜூனில் இது 51 சதவீதம் ஆனது.

    காலையில் எழ தாமதம்

    கொரோனா தாக்குதலுக்கு முன் ஜனவரி முதல் மார்ச் தொடக்கம் வரையில் 26-27 சதவீதத்தினர் காலை 8 மணிக்கு பின்னர்தான் எழுந்தனர். மார்ச் 22-க்கு பின்னர் 33 சதவீதத்தினர் 8 மணிக்கு பிறகு எழுகின்றனர். ஏப்ரலில் இது 35 சதவீதமாக அதிகரித்தது. ஆபீஸ் போகத்தேவையில்லை. வீட்டில் இருந்தே பணியாற்றலாம், வெளியே செல்லத்தேவையில்லை. இந்த காரணங்களால் நிதானமாக எழுந்திருக்க தொடங்கி இருக்கிறார்கள். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வெளியுலக ஒட்டுமொத்த செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும்கூட, நிலையில் மாற்றம் இல்லை.

    ஊரடங்குக்கு முன்பாக நீங்கள் எவ்வாறு சுறுசுறுப்பாக இருந்தீர்கள் என்று கேட்டபோது 51 சதவீதத்தினர், நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் செல்வதாக கூறினர். 20 சதவீதத்தினர் வீடுகளில் உடற்பயிற்சி செய்வதாக தெரிவித்தனர். 12 சதவீதத்தினர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதாக கூறினர். 11 சதவீதத்தினர் ஊரடங்குக்கு முன்னர் தாங்கள் சுறுசுறுப்பாக இல்லை என்று தெரிவித்தனர்.

    முதல் ஊரடங்கு போடப்பட்டபோது, பாதுகாப்பு காரணங்களையொட்டி ஜிம் போன்ற உடற்பயிற்சி, உடல் தகுதி கூடங்கள் மூடப்பட்டன. இதனால் 47 சதவீதத்தினர் வீடுகளில் உடற்பயிற்சி செய்து தங்களை சுறுசுறுப்பாக்கி கொண்டனர். 31 சதவீதத்தினர் தொடர்ந்து நடைப்பயிற்சி, ஜாக்கிங் பயிற்சி செய்வதாக கூறினர். அதே நேரத்தில் இந்த மாதிரி பயிற்சி எதுவும் செய்ய முடியாதோரின் எண்ணிக்கை ஊரடங்குக்கு முன்னர் 11 சதவீதமாக இருந்தது, ஊரடங்குக்கு பின்னர் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 46 சதவீதத்தினர் நடைப்பயிற்சி, ஜாக்கிங் போக தொடங்கி உள்ளனர்.

    ஜிம் போன்ற உடற்பயிற்சி கூடங்கள் முழுமையாக இயங்காத நிலையில் 32 சதவீதத்தினர் வீடுகளில் உடற்பயிற்சி செய்கிறார்கள். 6 சதவீதத்தினர் மாடிப்படியேறுவதை உடற்பயிற்சியாக எடுத்துக்கொள்கின்றனர். உடற்பயிற்சி எதுவும் செய்ய முடியாதவர்கள் எண்ணிக்கை ஊரடங்குக்கு முன்பு போல 11 சதவீதம் என்ற அளவுக்கு திரும்பி உள்ளது.

    சாப்பாடு

    சாப்பாட்டை பொறுத்தமட்டில், ஊரடங்குக்கு முன்னர் வாரம் 1 முறைக்கு மேல் 32.1 சதவீதத்தினர் வெளியே ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டனர். தற்போது இந்த எண்ணிக்கை 11.3 சதவீதமாக குறைந்து விட்டது.

    70 சதவீதத்தினர் வீட்டில் சமைத்த உணவுமுறையையே முழுமையாக பின்பற்றுவதாக கூறி உள்ளனர்.

    தற்போது நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு எந்தளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்று கேட்டபோது 53 சதவீதத்தினர் ஆரோக்கியமாகவும், 13 சதவீதத்தினர் மிகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக கூறினர். தற்போது, பெரும்பான்மையோர் வீட்டில் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

    4 சதவீதத்தினர் மட்டும் தங்களது தற்போதைய உணவுமுறை ஆரோக்கியமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
    முத்தம்… உறவுகள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு. முத்தம் என்றால் பொதுவாக தவறான கற்பிதங்களே இருக்கின்றன. தயவுசெய்து அதை கொச்சைப்படுத்த வேண்டாம்.
    முத்தம்… உறவுகள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு. செல்லக்குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திலிருந்து காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம் வரை எல்லாமே உணர்வின் ஊற்றுதான். முத்தம் என்றால் பொதுவாக தவறான கற்பிதங்களே இருக்கின்றன. தயவுசெய்து அதை கொச்சைப்படுத்த வேண்டாம்.

    காதலர்கள் ஒருவர் மாறி ஒருவர் கொடுக்கும் முத்தம் என்பது உணர்ச்சிப்பெருக்கில் வெளிப்படுவதாகும். அதை வெறும் காமம் சார்ந்ததாக பார்க்கக்கூடாது. அரவணைப்பு, தொடுதல், வருடுதலுடன் கொடுக்கும் முத்தத்தால் உடலில் பல்வேறு ஆரோக்கியமான பல மாற்றங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

    பொதுவாகவே கவலையில் இருக்கும் ஒருவரின் கரம் பற்றியோ, இறுக அணைத்து ஆறுதல் வார்த்தைகள் சொன்னால் அவர்களது பாதி கவலைகள் பறந்துவிடும். அப்படித்தான் இந்த முத்தமும். மிகச் சாதாரணமாக முத்தம் கொடுத்தாலே உறங்கிக்கிடந்த ஹார்மோன்கள் சிறப்பாக வேலை செய்யும்போது அழுத்தமாக முத்தம் கொடுக்கும்போது கேட்கவா வேண்டும்?

    முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நெருக்கத்தால் மனதில் உள்ள கவலைகள் நீங்கிவிடும். குறிப்பாக மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு முத்தம் ஒரு அற்புதமான மருந்து என்று சொல்லலாம். உதடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொடுக்கும் `பிரெஞ்ச் கிஸ்’ எனப்படும் முத்தத்தின்போது தலைவலி, மன அழுத்தம் போன்றவை விலகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    தியானத்துக்கு ஈடானது முத்தம் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். குறிப்பாக காதலர்கள் முத்தம் கொடுக்கும்போது அருகே என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு இருப்பார்கள். அதை ஒரு தியான நிலை என்றே சொல்லலாம். இதன்மூலம் முத்தம் கொடுப்பவருக்கும் முத்தம் பெறுபவருக்கும் மன இறுக்கம் தளர்ந்து உற்சாகம் பெருக்கெடுக்கும். கூடவே நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

    கன்னத்தில் முத்தமிடுவதைவிட இரு கன்னங்களையும் கைகளால் பற்றிக்கொண்டு பெண்ணின் நெற்றியில் முத்தம் கொடுப்பதே அன்பின் உச்சம். நம்பிக்கை அதிகரிக்கும் இந்த முத்தம் இருவருக்குமான நெருக்கத்தை அதிகரிக்க உதவும். கூடவே, உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிடுவதால் ஏற்படும் ரசாயன மாற்றங்களை வார்த்தைகளால் சொல்லிமாளாது.

    ஒருவர் மது அருந்தினால் எந்த அளவு போதை ஏற்படுமோ அந்த அளவு முத்தமிடும்போது போதை ஏறும் என்று கூறப்படுகிறது. கூடவே உடலில் ஒருவித கிளர்ச்சி ஏற்படுமாம். உதட்டுடன் உதடு ஒட்டிக்கொண்டு முத்தமிடும்போது ஆக்சிடோசின் சுரப்பு அவர்களுக்கிடையே நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தம்பதியருக்கு இது நல்ல பலன் தரும் என்கிறார்கள்.

    குழந்தையில்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிட்டுக்கொண்டால் சினை முட்டையின் வளர்ச்சி தூண்டப்படும் என்பது தெரியவந்துள்ளது. இதய நோய் குறைவதுடன் தைராய்டு ஹார்மோன் சுரப்பு சீரடைவதாகவும் கூறப்படுகிறது.

    முத்தமிடுவது நல்லதுதான். ஆனால், உங்களுக்கு உரியவருக்கு முத்தமிடுங்கள். காதலியை முத்தமிடுவதில் தவறில்லை. அது எல்லை மீற வாய்ப்பு உள்ளது என்பதால் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை. சத்தமின்றி முத்தமிடுங்கள். அடுத்தவருக்கு இடையூறு இல்லாதவாறு முத்தமிடுங்கள், தவறில்லை.
    காலம் காலமாக பள்ளியில், கல்லூரியில், அலுவலகங்களில், வெளியிடங்களில் பெண்களின் வெளித்தோற்றத்தை வைத்துச் செய்யப்படும் கேலி, கிண்டல்கள் அவர்களை பாதிக்கின்றன.
    இணைய சமூக வலைதளங்களில் உலவுவதை இளம்பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். இதனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டாகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அழகானவர்களின் புகைப்படங்களை, காணொளிகளைப் பார்க்கும்போது அல்லது நட்சத்திரங்களின் மிகைப்படுத்தப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது பெண்களுக்குள் தாங்கள் அழகற்றவர் என்பது போன்ற எண்ணம் ஏற்படுகிறதா?

    காலம் காலமாக பள்ளியில், கல்லூரியில், அலுவலகங்களில், வெளியிடங்களில் பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் வெளித்தோற்றத்தை வைத்துச் செய்யப்படும் கேலி, கிண்டல்கள் பாதிக்கின்றன. தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களும், பயனர்களுக்கு அவர்களது தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் இடமாக மாறி வருகின்றன.

    அதாவது, சமூக இணையதளங்களின் தொடக்க காலத்தில் அவை மக்கள் தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களுடன் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் தளமாக விளங்கின. ஆனால், காலம் செல்லச் செல்ல தொலைக்காட்சி, ஊடகம் போன்றவற்றைப் போல சமூக வலைதளங்களிலும் பிரபலங்களின், குறிப்பாக திரை நட்சத்திரங்களின் ஆதிக்கம் மேலோங்கத் தொடங்கியது.

    எனவே, இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை, சமூக ஊடகங்கள் முகம் தெரியாதவர்களுடனான உறவுக்கான அடித்தளமாக விளங்கும் அதேநேரம், பலரது தோற்றத்தையும், செயல்பாட்டையும் பார்த்து தங்களது தோற்றம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் தாழ்வு மனப்பான்மையையும், ஒருவித மன அழுத்தத்தையும் அடையச் செய்வதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    கடந்த 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளில், ஒருவர் தனது உடல் தோற்றம் குறித்து கவலை அடைவதற்கான காரணங்களுள் ஒன்றாக சமூக ஊடகங்கள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.

    ‘‘இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் பலரது புகைப்படங்களைப் பார்ப்பவர்கள், அவர்களுடன் தங்களது தோற்றத்தை ஒப்பிடுகின்றனர்’’ என்று கூறுகிறார், ஆஸ்திரேலியாவின் மாக்கியூரி பல் கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் ஜாஸ்மின் பர்டெலி.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் 227 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், சமூக ஊடகங்களில் பெண்கள் தங்களது தோற்றத்தை திரை நட்சத்திரங்களுடனும், பிரபலங் களுடன் அதிகளவில் ஒப்பிடுவதும், தங்களது குடும்பத்தினருடன் பொருத்திப் பார்ப்பதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை பெண்கள், தங்களைப் பற்றிய நேர்மறையான தகவல்களை மட்டும்தான் பதிவு செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை குறித்த மற்றொரு பகுதியை அறியாதவர்கள், தங்களது வாழ்க்கையின் மோசமான நினைவுகளுடன் ஒப்பிடுகின்றனர். இதுவே பிரச்சினையின் தொடக்கமாக அமைகிறது என்று கூறுகிறார் ஜாஸ்மின்.

    வெஸ்ட் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான ஏமி ஸ்லேட்டர், 2017-ம் ஆண்டு வெளியிட்ட தனது ஆய்வுக் கட்டுரைக்காக இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் 160 மாணவிகளைச் சந்தித்தார். அதில், உடற்பயிற்சி சார்ந்த காணொளிகளை மட்டும் பார்க்கும் மாணவிகள், தங்களது உடல்நலம் குறித்து மிகவும் தாழ்வாக உணர்ந்ததாகவும், சுயமுன்னேற்றம் குறித்த வாசகங்களைப் படிப்பவர்கள் உற்சாகமாகக் காணப்பட்டதாகவும், காணொளி, சுயமுன்னேற்றம் ஆகிய இரண்டையுமே பார்த்தவர்களுக்கு வாழ்க்கைப்போக்கில் நல்ல பலன்களை அளித்ததை உணர்ந்ததாகவும் ஏமி கூறுகிறார்.

    அதேபோன்று கனடாவின் டொராண்டோவில் உள்ள யார்க் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் இரு வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவினர் ஐபாட் மூலம் செல்பி எடுத்து அதை பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யவும், மற்றொரு குழுவினர் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படத்தை மெருகூட்டும் செயலியில் செல்பி எடுத்து அதேபோன்று பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

    ஆச்சரியமளிக்கும் வகையில், இரு குழுக்களைச் சேர்ந்த மாணவிகளுமே தங்களது செல்பி குறித்த நேர்மறையான எண்ணங்களை விட எதிர்மறையான எண்ணங்களையே அதிகம் கொண்டிருந்தனர். அதாவது, செல்பியில் தன்னை வேறுவகையில் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்றும், தன்னுடைய படத்துக்கு எத்தனை ‘லைக்’குகள் கிடைத்திருக்கும் என்பதைப் பார்ப்பதற்கும் அவர்கள் ஆவலோடு காத்திருந்ததாகவும் அந்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இளம்பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிகளாக நிபுணர்கள் கூறியுள்ளவை...

    பெண்கள் தங்களை யாருடனும் ஒப்பிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

    உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்துக்கு ஸ்மார்ட்போன்தான் முக்கியக் காரணம் என்று நீங்கள் நினைத்தால், சிறிது காலத்துக்கு அவசியமான விஷயங்கள் தவிர மற்றவற்றுக்கு அதை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    சமூக வலைதளங்களில் நல்ல பதிவுகளை மட்டும் பார்க்க வேண்டுமென்று விரும்பினால், அதற்கேற்றாற்போல் தகவமைப்பு செய்ய வேண்டும்.

    சமூக வலைதளங்களில் நேர்மறையான எண்ணத்தை உண்டாக்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தெரிவுகளை இளம்பெண்கள் மாற்றி அமைக்கலாம்.

    இந்த அறிவுறுத்தல்கள் எல்லாம், இளம்பெண்களுக்கு மட்டுமல்ல, ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்தும் அனைவருக்கும்தான்.
    ×