என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பத்ர தீப திருவிழாவையொட்டி, நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையன்று பத்ர தீப திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பத்திர தீப திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
அன்று காலையில் கணபதி ஹோமம், சுவாமி வேணு வனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் மற்றும் அபிஷேக தீபாராதனைகளும், காந்திமதி அம்பாளுக்கு அபிஷேக தீபாராதனைகளும், அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றது.
நேற்று மாலையில் சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க விளக்கில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் தங்க விளக்கிலும், அதன் அருகில் உள்ள 2 வெள்ளி விளக்குகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து விளக்குகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்தல், 11 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு வசந்த மண்டபத்தில் மகேசுவர பூஜை நடைபெறுகிறது.மாலை 6.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்பாள் கோவிலில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் உலா வருகின்றனர். அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்று காலையில் கணபதி ஹோமம், சுவாமி வேணு வனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் மற்றும் அபிஷேக தீபாராதனைகளும், காந்திமதி அம்பாளுக்கு அபிஷேக தீபாராதனைகளும், அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றது.
நேற்று மாலையில் சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க விளக்கில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் தங்க விளக்கிலும், அதன் அருகில் உள்ள 2 வெள்ளி விளக்குகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து விளக்குகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்தல், 11 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு வசந்த மண்டபத்தில் மகேசுவர பூஜை நடைபெறுகிறது.மாலை 6.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்பாள் கோவிலில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் உலா வருகின்றனர். அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலம் நடந்தது.
மார்த்தாண்டம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலம் நடந்தது.
திருக்கொடியை பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் ஜோசப் கிரேசியஸ் கையில் ஏந்தி செல்ல, தொடர்ந்து அருட்பணியாளர்கள், பங்கு அருட்பணி பேரவையினர், இறைமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு வளாகத்தை அடைந்ததும் அங்குள்ள கொடிமரத்தில் குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசுரெத்தினம் கொடியேற்றி வைத்து திருப்பலிக்கு தலைமை தாங்கினார்.
கொடியேற்றம் மற்றும் திருப்பலிக்கு திருத்தல பங்கு அருட்பணியாளர் அந்தோணி முத்து, இணைப்பணியாளர் மரிய மார்ட்டின், அருள்வாழ்வு வழிகாட்டி டென்சிங் மற்றும் அருட்பணியாளர்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். அருட்பணி ஆன்டணி ஜெயக்கொடி மறையுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் வெட்டுவெந்நி திருத்தல பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர், செயலாளர் லில்லிபாய், துணைச் செயலாளர் பிரைட்சிங், பொருளாளர் தங்கையன் மற்றும் உறுப்பினர்கள், இறைமக்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் மாலை செபமாலை, திருப்பலி நடைபெறும்.
12-ந்தேதி காலை 10 மணிக்கு செபமாலை, நவநாள், திருப்பலி, 14-ந்தேதி காலை 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது.
திருக்கொடியை பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் ஜோசப் கிரேசியஸ் கையில் ஏந்தி செல்ல, தொடர்ந்து அருட்பணியாளர்கள், பங்கு அருட்பணி பேரவையினர், இறைமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு வளாகத்தை அடைந்ததும் அங்குள்ள கொடிமரத்தில் குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசுரெத்தினம் கொடியேற்றி வைத்து திருப்பலிக்கு தலைமை தாங்கினார்.
கொடியேற்றம் மற்றும் திருப்பலிக்கு திருத்தல பங்கு அருட்பணியாளர் அந்தோணி முத்து, இணைப்பணியாளர் மரிய மார்ட்டின், அருள்வாழ்வு வழிகாட்டி டென்சிங் மற்றும் அருட்பணியாளர்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். அருட்பணி ஆன்டணி ஜெயக்கொடி மறையுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் வெட்டுவெந்நி திருத்தல பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர், செயலாளர் லில்லிபாய், துணைச் செயலாளர் பிரைட்சிங், பொருளாளர் தங்கையன் மற்றும் உறுப்பினர்கள், இறைமக்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் மாலை செபமாலை, திருப்பலி நடைபெறும்.
12-ந்தேதி காலை 10 மணிக்கு செபமாலை, நவநாள், திருப்பலி, 14-ந்தேதி காலை 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது.
மூன்று ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே கடும் பனியை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆடி, புரட்டாசி மாதங்களில் வந்த அமாவாசைகளுக்கு ஆறுகளுடன் கூடிய வழிபாட்டு தலங்களில் மக்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் மக்கள் வீடுகளிலேயே எளிமையாக முன்னோர்களை வழிபட்டனர். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையொட்டி தை அமாவாசையான இன்று பவானி கூடுதுறை, கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் மக்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே கடும் பனியை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மக்கள் வரத்தொடங்கினர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பவானி கூடுதுறையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தினர்.
கூட்டம் காரணமாக பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதனால் அருகில் உள்ள காலி இடங்களில் முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து தர்ப்பணம் திதி கொடுத்து பவானி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ் வரரை வழிபட்டனர்.
பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் புனித நீராடி வழிபட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். 108 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தது.
இதேப்போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். இதேபோல் காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளிலும் பொதுமக்கள் ஆங்காங்கே முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து நீராடி வழிபட்டனர்.
கொடுமுடி காவிரி ஆற்றிலும் தை அமாவாசையையொட்டி பக்தர்கள் புனித நீராட நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காலை முதலே ஏராளமான பேர் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர் கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்ததால் காவிரி கரையே களை கட்டியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம், சமூக பாதுகாப்பு இடைவெளி குறித்து அறிவித்து கொண்டிருந்தனர். தை அமாவாசையையொட்டி கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் இன்று இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வீடுகளிலேயே எளிமையாக முன்னோர்களை வழிபட்டனர். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையொட்டி தை அமாவாசையான இன்று பவானி கூடுதுறை, கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் மக்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே கடும் பனியை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மக்கள் வரத்தொடங்கினர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பவானி கூடுதுறையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தினர்.
கூட்டம் காரணமாக பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதனால் அருகில் உள்ள காலி இடங்களில் முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து தர்ப்பணம் திதி கொடுத்து பவானி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ் வரரை வழிபட்டனர்.
பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் புனித நீராடி வழிபட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். 108 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தது.
இதேப்போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். இதேபோல் காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளிலும் பொதுமக்கள் ஆங்காங்கே முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து நீராடி வழிபட்டனர்.
கொடுமுடி காவிரி ஆற்றிலும் தை அமாவாசையையொட்டி பக்தர்கள் புனித நீராட நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காலை முதலே ஏராளமான பேர் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர் கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்ததால் காவிரி கரையே களை கட்டியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம், சமூக பாதுகாப்பு இடைவெளி குறித்து அறிவித்து கொண்டிருந்தனர். தை அமாவாசையையொட்டி கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் இன்று இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தை அமாவாசையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கடற்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடினார்கள். அங்கு ஏராளமான கூட்டம் அலைமோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
நெல்லை :
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தை அமாவாசையில் முன்னோர்களுக்கு ஆறு மற்றும் கடல் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள். இன்று தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தலையணை மற்றும் கோவிலில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆற்றில் புனிதநீராடினார்கள்.
இதையொட்டி பாபநாசம் படித்துறை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிலர் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் சென்று தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் பகுதி ஆகியவற்றிலும் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆற்றில் நீராடினார்கள்.
இதையொட்டி தாமிபரணி ஆற்று பகுதியில் சிறப்பு பூஜை நடத்துவதற்காக ஏராளமான அர்ச்சகர்களும் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பம் குடும்பமாக சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள். இதனால் தாமிபரணி ஆற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருச்செந்தூரில் தை அமாவாசை விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்தஆண்டு தை அமாவாசையையொட்டி திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடற்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடினார்கள். அங்கு ஏராளமான கூட்டம் அலைமோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கரையிலும் தை அமாவாசை விழா மிகவும் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள தெர்மல்நகரில் காலை முதலே ஏராளமான பக்தர் கள் கடற்கரையில் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி னார்கள்.
தூத்துக்குடி அருகே உள்ள பழையகாயலில் தாமிரபரணி ஆற்றின் மூன்று பிரிவுகள் ஒன்றாக சேர்ந்து சங்கமிக்கும் இடமான மூணாற்று முக்கு, மற்றும் சங்குமுகம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினார்கள். பழையகாயல் கடற்கரை அருகே உள்ள பிள்ளையார் கோவிலிலும் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதனால் அருவிகரைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த ஆண்டு தை அமாவாசையை முன்னிட்டு அனைத்து நீர்நிலைகள் அருகே உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கூடியதால் பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையொட்டி அந்த பகுதயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கூட்டத்தையும் ஒழுங்குபடுத்தினர்.
பாபநாசம், நெல்லை போன்ற முக்கிய பகுதிகளில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு ஆற்றில் உள்ள கழிவுபொருட்களை அகற்றி தூய்மைபடுத்தினர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தை அமாவாசையில் முன்னோர்களுக்கு ஆறு மற்றும் கடல் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள். இன்று தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தலையணை மற்றும் கோவிலில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆற்றில் புனிதநீராடினார்கள்.
இதையொட்டி பாபநாசம் படித்துறை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிலர் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் சென்று தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் பகுதி ஆகியவற்றிலும் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆற்றில் நீராடினார்கள்.
இதையொட்டி தாமிபரணி ஆற்று பகுதியில் சிறப்பு பூஜை நடத்துவதற்காக ஏராளமான அர்ச்சகர்களும் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பம் குடும்பமாக சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள். இதனால் தாமிபரணி ஆற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருச்செந்தூரில் தை அமாவாசை விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்தஆண்டு தை அமாவாசையையொட்டி திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடற்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடினார்கள். அங்கு ஏராளமான கூட்டம் அலைமோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கரையிலும் தை அமாவாசை விழா மிகவும் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள தெர்மல்நகரில் காலை முதலே ஏராளமான பக்தர் கள் கடற்கரையில் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி னார்கள்.
தூத்துக்குடி அருகே உள்ள பழையகாயலில் தாமிரபரணி ஆற்றின் மூன்று பிரிவுகள் ஒன்றாக சேர்ந்து சங்கமிக்கும் இடமான மூணாற்று முக்கு, மற்றும் சங்குமுகம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினார்கள். பழையகாயல் கடற்கரை அருகே உள்ள பிள்ளையார் கோவிலிலும் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதனால் அருவிகரைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த ஆண்டு தை அமாவாசையை முன்னிட்டு அனைத்து நீர்நிலைகள் அருகே உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கூடியதால் பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையொட்டி அந்த பகுதயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கூட்டத்தையும் ஒழுங்குபடுத்தினர்.
பாபநாசம், நெல்லை போன்ற முக்கிய பகுதிகளில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு ஆற்றில் உள்ள கழிவுபொருட்களை அகற்றி தூய்மைபடுத்தினர்.
கோயம்புத்தூர் வேம்படி சுடலைமாடன் கோவில் வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் தீருவதுடன், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ளது, ஜனதா நகர். இங்கு பிரசித்தி பெற்ற வேம்படி சுடலைமாடன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் சிவனணைந்த பெருமாள், வேம்படி சுடலை மாடன், பிரம்மசக்தி, பலவேசக்காரன், கருப்பசாமி, சத்திராதி முண்டன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.
வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் தீருவதுடன், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் செய்வினை கோளாறு, பேய், பிசாசு தொல்லைகள் நீங்குவதுடன் தொழில் வளமும் பெருகும்.
வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் தீருவதுடன், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் செய்வினை கோளாறு, பேய், பிசாசு தொல்லைகள் நீங்குவதுடன் தொழில் வளமும் பெருகும்.
தை அமாவாசையையொட்டி இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
அமாவாசை தினங்களில் முன்னோர் வழிபாடு செய்வது மரபாக இருந்து வருகி றது. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் நீர்நிலை உள்ள பகுதிகளில் திரளும் பொது மக்கள் புனித நீராடி தங்களது மறைந்த முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதன் மூலம் முன்னோர்களின்ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
கொரோனா பரவல் காரணமாக ஆடி அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் குவிந்தனர். திருச்சி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
இதற்கான ஏராளமான சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் தயார் நிலையில் இருந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் வைத்து முன்னோர்களின் நினைவாக பல்வேறு பூஜைகள் செய்து வழிபட்ட பொது மக்கள் பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் கரைத்து பின்னர் புனித நீராடி வழிபட்டனர்.
முன்னதாக புரோகிதர்கள் முன்னோர்களின் பெயர்களை படித்து வேதங்கள் ஓதி இந்த வழிபாட்டை நடத்தினர். தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். ஆனாலும் பெரும்பாலான பக்தர்கள் முகக்கவசம் அணியாமலேயே வந்திருந்தனர். இருந்த போதிலும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக்கொண்டே இருந்தனர்.
தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் பாதுகாப்புடன் பக்தர்கள் புனித நீராடினர். சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் நீராடினர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு படையினர் அங்கு தயார் நிலையில் இருந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அம்மா மண்டபத்தில் கட் டப்பட்டிருந்த பசு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக் கீரை வழங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த மேடையில் விளக் கேற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
இதேபோல் முசிறி காவிரிக்கரை, புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில் பல்லவன் குளம், அறந்தாங்கி அருகே மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் தை அமாவாசை தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக ஆடி அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் குவிந்தனர். திருச்சி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
இதற்கான ஏராளமான சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் தயார் நிலையில் இருந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் வைத்து முன்னோர்களின் நினைவாக பல்வேறு பூஜைகள் செய்து வழிபட்ட பொது மக்கள் பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் கரைத்து பின்னர் புனித நீராடி வழிபட்டனர்.
முன்னதாக புரோகிதர்கள் முன்னோர்களின் பெயர்களை படித்து வேதங்கள் ஓதி இந்த வழிபாட்டை நடத்தினர். தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். ஆனாலும் பெரும்பாலான பக்தர்கள் முகக்கவசம் அணியாமலேயே வந்திருந்தனர். இருந்த போதிலும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக்கொண்டே இருந்தனர்.
தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் பாதுகாப்புடன் பக்தர்கள் புனித நீராடினர். சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் நீராடினர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு படையினர் அங்கு தயார் நிலையில் இருந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அம்மா மண்டபத்தில் கட் டப்பட்டிருந்த பசு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக் கீரை வழங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த மேடையில் விளக் கேற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
இதேபோல் முசிறி காவிரிக்கரை, புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில் பல்லவன் குளம், அறந்தாங்கி அருகே மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் தை அமாவாசை தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தை அமாவாசையான இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை, தோஷங்கள் அடங்கிய பூஜைகள் செய்தனர்.
ராமேசுவரம் :
இந்தியாவில் அமைந்துள்ள 12 ஜோதி லிங்கத் தில் தமிழகத்தில் கடைக் கோடியான ராமேசுவரம் பகுதியிலுள்ள ராமநாத சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஜோதிலிங்கமும் ஒன்று.
இங்கு உலகமுழுவதும் இருந்து ஆண்டுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். காசிக்கு நிகராக கருதப்படும் அக்னிதீர்த்தம் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை, புரட்டாசி சிவராத்திரி தினம், மகாளய அமாவாசை நாட்களில் இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள்.
கொரோனா பரவல் காரணமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி வீதி உலா, தேரோட்டம் மற்றும் வெள்ளி தேரோட்டம் போன்ற வழிபாடுகளை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைய தொடங்கியது.இதனால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.
அதன்படி கடந்த ஜனவரி 1-ந்தேதி கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ளித்தது. அதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பல்வேறுகட்ட தளர்வுகளில் கோவில்களுக்கு விதித்திருந்த அனைத்து தடைகளையும் தமிழக அரசு நீக்கியது. இதன்காரணமாக கடந்த 2-ந் தேதி பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தத்தில் நீராட அனுமதியளிக்கப்பட்டனர்.
அதன்படி தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே ஆயிரக்கணக்காண பக்தர்கள் கார், வேன், அரசு பஸ் மூலம் வந்தவண்ணம் இருந்தனர்.
தை அமாவாசையான இன்று(11-ந் தேதி) அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை, தோஷங்கள் அடங்கிய பூஜைகள் செய்தனர். இதனால் அப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராடினர். 3-ம் பிரகரத்தில் பல மணி நேரம் பக்தர்கள் வரிசையாக காத்திருந்து ராமநாதசுவாமி சுவாமி, பர்வதவர்ததினி அம்பாளை தரிசித்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு இன்று பகல் முழுவதும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.
முன்னதாக காலையில் சுவாமி ராமர், லட்சுமணன், சீதை கருட வாகனத்திலும், மற்றும் ராமநாதசுவாமி, பிரியாவிடை மற்றும் பர்வத வர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடகி அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் அமைந்துள்ள மண்டகப்படியில் எழுந்தருளினர். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இன்று எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காட்சி அளித்தது. இதையொட்டி மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பாதுகாப்புபணியில் 100க்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
கோயிலை சுற்றி 4 ரத வீதிகள், அக்னீ தீர்த்தக் கடல் பகுதி, சன்னதி தெரு, கோயிலின் உள்பிரகாரங்கள் என அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமாரா மூலம் போலீசார் கண்காணித்து வந்தனர்.
பக்தர்களின் வசதிகளுக்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் கோவில் இணை ஆணையர் கல்யாணி உத்தரவின் பேரில் கணக் கீட்டாளர் சீனீவாசன், கோவில் பொறியாளர் மயில் வாகனன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ககாரின்ராஜ், பேஷ்கார் அண்ணா துரை, இணை ஆணையர் நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் விழா பொறுப்பு அலுவலர் கலைச்செல்வம் உள்பட திருக்கோயில் அலு வலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
10 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் களை கட்டி காணப்பட்டது.
இந்தியாவில் அமைந்துள்ள 12 ஜோதி லிங்கத் தில் தமிழகத்தில் கடைக் கோடியான ராமேசுவரம் பகுதியிலுள்ள ராமநாத சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஜோதிலிங்கமும் ஒன்று.
இங்கு உலகமுழுவதும் இருந்து ஆண்டுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். காசிக்கு நிகராக கருதப்படும் அக்னிதீர்த்தம் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை, புரட்டாசி சிவராத்திரி தினம், மகாளய அமாவாசை நாட்களில் இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள்.
கொரோனா பரவல் காரணமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி வீதி உலா, தேரோட்டம் மற்றும் வெள்ளி தேரோட்டம் போன்ற வழிபாடுகளை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைய தொடங்கியது.இதனால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.
அதன்படி கடந்த ஜனவரி 1-ந்தேதி கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ளித்தது. அதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பல்வேறுகட்ட தளர்வுகளில் கோவில்களுக்கு விதித்திருந்த அனைத்து தடைகளையும் தமிழக அரசு நீக்கியது. இதன்காரணமாக கடந்த 2-ந் தேதி பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தத்தில் நீராட அனுமதியளிக்கப்பட்டனர்.
அதன்படி தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே ஆயிரக்கணக்காண பக்தர்கள் கார், வேன், அரசு பஸ் மூலம் வந்தவண்ணம் இருந்தனர்.
தை அமாவாசையான இன்று(11-ந் தேதி) அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை, தோஷங்கள் அடங்கிய பூஜைகள் செய்தனர். இதனால் அப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராடினர். 3-ம் பிரகரத்தில் பல மணி நேரம் பக்தர்கள் வரிசையாக காத்திருந்து ராமநாதசுவாமி சுவாமி, பர்வதவர்ததினி அம்பாளை தரிசித்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு இன்று பகல் முழுவதும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன.
முன்னதாக காலையில் சுவாமி ராமர், லட்சுமணன், சீதை கருட வாகனத்திலும், மற்றும் ராமநாதசுவாமி, பிரியாவிடை மற்றும் பர்வத வர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடகி அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் அமைந்துள்ள மண்டகப்படியில் எழுந்தருளினர். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இன்று எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காட்சி அளித்தது. இதையொட்டி மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பாதுகாப்புபணியில் 100க்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
கோயிலை சுற்றி 4 ரத வீதிகள், அக்னீ தீர்த்தக் கடல் பகுதி, சன்னதி தெரு, கோயிலின் உள்பிரகாரங்கள் என அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமாரா மூலம் போலீசார் கண்காணித்து வந்தனர்.
பக்தர்களின் வசதிகளுக்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் கோவில் இணை ஆணையர் கல்யாணி உத்தரவின் பேரில் கணக் கீட்டாளர் சீனீவாசன், கோவில் பொறியாளர் மயில் வாகனன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ககாரின்ராஜ், பேஷ்கார் அண்ணா துரை, இணை ஆணையர் நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் விழா பொறுப்பு அலுவலர் கலைச்செல்வம் உள்பட திருக்கோயில் அலு வலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
10 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் களை கட்டி காணப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யஸ்வரர் கோவில் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே குவிந்த பொதுமக்கள் இறந்த மூதாதையர்களுக்கு அரிசி, காய்கறி, பழங்கள், எள் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். நம் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்து அவர்களின் பரிபூரணமான ஆசியை பெறக்கூடிய அற்புதநாள். அதிலும் 3 அமாவாசைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த திதி நாளாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை என 3 அமாவாசையிலும் தவறாமல் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். அதன்படி இன்று தை அமாவாசை ஆகும். இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நீர்நிலைகள், புனித தலங்களில் குவிந்த மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யஸ்வரர் கோவில் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.
இறந்த மூதாதையர்களுக்கு அரிசி, காய்கறி, பழங்கள், எள் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர். கருகமணி, எலுமிச்சம் பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை கடலில் விட்டு புனித நீராடினர். பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் புனித நீராடி திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானை பக்தர்கள் வணங்கி சென்றனர்.
இதேப்போல் கோடியக் கரை அக்னிதீர்த்தம், ஆதி சேது சித்தர் கட்டம் கடற்கரை, சன்னதி கடல் ஆகிய பகுதிகளில் நீராடினார்கள். பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை துலா கட்டம், சீர்காழி சட்டைநாதர் கோவில் பிரம்ம தீர்த்த குளம், பூம்புகார் கடல் ஆகியவற்றிலும் பக்தர்கள் நீராடி தர்ப்பணம் செய்தனர்.
திருவாரூர், தியாகராஜர் கோவில் அருகே உள்ள கமலாலய குளத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் தியாகராஜர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
கங்கை நதிக்கு நிகரான காவிரி ஆறு ஓடும் திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் பித்ரு கடன் செலுத்துவது “காசிக்கு வீசம் கூட” என்று சிறப்பித்து கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் புனித நீராட பேரூராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி இன்று காவிரி ஆறு செல்லும் பாதையில் தடுப்பு அமைக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி பொதுமக்கள் ஆங்காங்கே காவிரி ஆற்றில் புனித நீராடி னர். படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தஞ்சையில் பலர் தங்களது வீட்டின் மாடியில் முன்னோர்கள் படங்களை சுத்தம் செய்து துளசி, வில்வம் சார்த்தி வழிபாடு நடத்தி தர்ப்பணம் செய்தனர். அப்போது அவர்களுக்கு பிடித்த உணவை படையலிட்டனர். மேலும் பசுவுக்கு அகத்திக்கீரையும், காகத்துக்கு படையலிட்ட உணவையும் வழங்கினர்.
அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யஸ்வரர் கோவில் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.
இறந்த மூதாதையர்களுக்கு அரிசி, காய்கறி, பழங்கள், எள் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர். கருகமணி, எலுமிச்சம் பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை கடலில் விட்டு புனித நீராடினர். பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் புனித நீராடி திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானை பக்தர்கள் வணங்கி சென்றனர்.
இதேப்போல் கோடியக் கரை அக்னிதீர்த்தம், ஆதி சேது சித்தர் கட்டம் கடற்கரை, சன்னதி கடல் ஆகிய பகுதிகளில் நீராடினார்கள். பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை துலா கட்டம், சீர்காழி சட்டைநாதர் கோவில் பிரம்ம தீர்த்த குளம், பூம்புகார் கடல் ஆகியவற்றிலும் பக்தர்கள் நீராடி தர்ப்பணம் செய்தனர்.
திருவாரூர், தியாகராஜர் கோவில் அருகே உள்ள கமலாலய குளத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் தியாகராஜர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
கங்கை நதிக்கு நிகரான காவிரி ஆறு ஓடும் திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் பித்ரு கடன் செலுத்துவது “காசிக்கு வீசம் கூட” என்று சிறப்பித்து கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் புனித நீராட பேரூராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி இன்று காவிரி ஆறு செல்லும் பாதையில் தடுப்பு அமைக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி பொதுமக்கள் ஆங்காங்கே காவிரி ஆற்றில் புனித நீராடி னர். படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தஞ்சையில் பலர் தங்களது வீட்டின் மாடியில் முன்னோர்கள் படங்களை சுத்தம் செய்து துளசி, வில்வம் சார்த்தி வழிபாடு நடத்தி தர்ப்பணம் செய்தனர். அப்போது அவர்களுக்கு பிடித்த உணவை படையலிட்டனர். மேலும் பசுவுக்கு அகத்திக்கீரையும், காகத்துக்கு படையலிட்ட உணவையும் வழங்கினர்.
சிவ பூஜைகளிலும் வழிபாடுகளிலும் பங்கேற்கும் போது, சிவ ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவது இன்னும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கல் ஆச்சார்யப் பெருமக்கள்.
சிவ மந்திரம் சொல்லி நாம் செய்கிற பூஜை மிக மிக வலிமையானது. அதேபோல், சிவ பூஜைகளிலும் வழிபாடுகளிலும் பங்கேற்கும் போது, சிவ ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவது இன்னும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கல் ஆச்சார்யப் பெருமக்கள்.
சிவபெருமானின் இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடுங்கள்.
விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
சிவசிவ ஹரஹர மஹாதேவ
வில்வதள ப்ரிய சந்திர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
மெளலீஸ்வராய யோகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
குஞ்சேஸ்வராய குபேராஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
நடேஸ்வராய நாகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவ
கபாலீஸ்வரய்யா கற்கடேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஒரேயொரு வில்வம் சமர்ப்பித்து சிவனாரை வழிபட்டால், லட்சம் வில்வதளத்தை சமர்ப்பித்து வழிபட்ட பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சிவபெருமானின் இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடுங்கள்.
விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
சிவசிவ ஹரஹர மஹாதேவ
வில்வதள ப்ரிய சந்திர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
மெளலீஸ்வராய யோகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
குஞ்சேஸ்வராய குபேராஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
நடேஸ்வராய நாகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவ
கபாலீஸ்வரய்யா கற்கடேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஒரேயொரு வில்வம் சமர்ப்பித்து சிவனாரை வழிபட்டால், லட்சம் வில்வதளத்தை சமர்ப்பித்து வழிபட்ட பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
தை அமாவாசையான இன்று அதிகாலை முதலே நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
சென்னை :
ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) தை அமாவாசையாகும்.
ஆடி அமாவாசையின் போது கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் திதி கொடுப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் திதி கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்நிலையில் இன்று அமாவாசையின் போது திதி கொடுக்க அரசின் சார்பில் தடை எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இன்று காலை முதலே நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
சென்னையில் கடற்கரை, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில்களிலும் மற்றும் நீர் நிலைகளில் பக்தர்கள் அதிகாலையிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
ராமேசுவரம் அக்னி தீர்த்தத்தில் அதிகாலையிலேயே பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
அதே போல் காவிரி ஆற்றின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தை அமாவாசையான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முன்னோர்களுக்கு படையலிட்டு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
தை அமாவாசையான இன்று குற்றாலம், பாபாநாசம் தாமிரபரணி, வேதாரண்யம், கன்னியாகுமரி, திருச்செந்தூரிலும் அதிகாலை முதலே கடலில் நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) தை அமாவாசையாகும்.
ஆடி அமாவாசையின் போது கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் திதி கொடுப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் திதி கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்நிலையில் இன்று அமாவாசையின் போது திதி கொடுக்க அரசின் சார்பில் தடை எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இன்று காலை முதலே நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
சென்னையில் கடற்கரை, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில்களிலும் மற்றும் நீர் நிலைகளில் பக்தர்கள் அதிகாலையிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
ராமேசுவரம் அக்னி தீர்த்தத்தில் அதிகாலையிலேயே பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
அதே போல் காவிரி ஆற்றின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தை அமாவாசையான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முன்னோர்களுக்கு படையலிட்டு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
தை அமாவாசையான இன்று குற்றாலம், பாபாநாசம் தாமிரபரணி, வேதாரண்யம், கன்னியாகுமரி, திருச்செந்தூரிலும் அதிகாலை முதலே கடலில் நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மாதந்தோறும் அமாவாசைகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் தை அமாவாசை அன்று மட்டுமாவது இந்த விரதத்தை கடைப்பிடித்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை திதியை கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
11-2-2021 தை அமாவாசை
தை முதல் ஆனி வரையிலான 6 மாதங்களும் ‘உத்தராயன புண்ணிய காலம்’ எனப்படும். அதே போல், ஆடி முதல் மாா்கழி வரையான 6 மாதங்களும் ‘தட்சணாயன புண்ணிய காலம்’ ஆகும். இரண்டு அயனங்களும் தொடங்கும் காலம் என்பதால்தான், ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், தை மாதத்தில் வரும் அமாவாசையும் முன்னோர் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மாதந்தோறும் வரும் அமாவாசை திதிகளில் பித்ருக்கள் எனப்படும் மூதாதையர்களுக்கு நாம் தர்ப்பணம் அளித்து, விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் சிலருக்கு தன் முன்னோர்களின் இறந்த திதி தெரியாமல் இருக்கலாம். அல்லது மாதந்தோறும் அமாவாசைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாமல் போகலாம். அல்லது பலரும் தர்ப்பணம் பற்றி அறியாமல், இதுவரை திதி கொடுக்காமலும் இருந்து வந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் அனைவரும், தை அமாவாசை அன்று மட்டுமாவது இந்த விரதத்தை கடைப்பிடித்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை திதியை கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
தை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம் என்றாலும், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.
எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது ‘சிரார்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்.
தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல எமதர்மராஜா, அனுமதி தருவார். பித்ருக்கள் அனைவரும், அவரவர் சந்ததியினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும், உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்களாம். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் இட வேண்டியது அவசியம். இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களைக் குளிரச் செய்து குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் காக்கும்.
பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். அதனால் தான் வனத்தில் இருந்தபோது தன் தந்தைக்கு செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்த பிறகு, ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமர் செய்தார். அதே போல் தனக்காக உயர் நீத்த கழுகு பறவையான ஜடாயுவுக்கும், மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்குகளை செய்து முடித்து, தர்ப்பணம் கொடுத்தார். இப்படி முன்னோர்களுக்காக செய்யும் தர்ப்பணத்தால், நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கி, நன்மைகள் தேடி வரும்.
தை முதல் ஆனி வரையிலான 6 மாதங்களும் ‘உத்தராயன புண்ணிய காலம்’ எனப்படும். அதே போல், ஆடி முதல் மாா்கழி வரையான 6 மாதங்களும் ‘தட்சணாயன புண்ணிய காலம்’ ஆகும். இரண்டு அயனங்களும் தொடங்கும் காலம் என்பதால்தான், ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், தை மாதத்தில் வரும் அமாவாசையும் முன்னோர் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மாதந்தோறும் வரும் அமாவாசை திதிகளில் பித்ருக்கள் எனப்படும் மூதாதையர்களுக்கு நாம் தர்ப்பணம் அளித்து, விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் சிலருக்கு தன் முன்னோர்களின் இறந்த திதி தெரியாமல் இருக்கலாம். அல்லது மாதந்தோறும் அமாவாசைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாமல் போகலாம். அல்லது பலரும் தர்ப்பணம் பற்றி அறியாமல், இதுவரை திதி கொடுக்காமலும் இருந்து வந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் அனைவரும், தை அமாவாசை அன்று மட்டுமாவது இந்த விரதத்தை கடைப்பிடித்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை திதியை கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
தை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம் என்றாலும், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.
எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது ‘சிரார்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்.
தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல எமதர்மராஜா, அனுமதி தருவார். பித்ருக்கள் அனைவரும், அவரவர் சந்ததியினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும், உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்களாம். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் இட வேண்டியது அவசியம். இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களைக் குளிரச் செய்து குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் காக்கும்.
பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். அதனால் தான் வனத்தில் இருந்தபோது தன் தந்தைக்கு செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்த பிறகு, ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமர் செய்தார். அதே போல் தனக்காக உயர் நீத்த கழுகு பறவையான ஜடாயுவுக்கும், மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்குகளை செய்து முடித்து, தர்ப்பணம் கொடுத்தார். இப்படி முன்னோர்களுக்காக செய்யும் தர்ப்பணத்தால், நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கி, நன்மைகள் தேடி வரும்.
தை அமாவாசையையொட்டி நாளை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நாளை (வியாழக்கிழமை) தை அமாவாசையாகும்.
ஆடி அமாவாசையின் போது கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் திதி கொடுப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் திதி கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அமாவாசையின் போது திதி கொடுக்க இதுவரை அரசின் சார்பில் தடை எதுவும் அறிவிக்கப்படவில்லை. காவிரி ஆற்றின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தை அமாவாசையின் போது முன்னோர்களுக்கு படையலிட்டு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் தரப்பில் விசாரித்தபோது, அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு தடை எதுவும் இல்லை என்றனர். இதனைத் தொடர்ந்து தர்ப்பணம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஆடி அமாவாசையின் போது கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் திதி கொடுப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் திதி கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அமாவாசையின் போது திதி கொடுக்க இதுவரை அரசின் சார்பில் தடை எதுவும் அறிவிக்கப்படவில்லை. காவிரி ஆற்றின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தை அமாவாசையின் போது முன்னோர்களுக்கு படையலிட்டு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் தரப்பில் விசாரித்தபோது, அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு தடை எதுவும் இல்லை என்றனர். இதனைத் தொடர்ந்து தர்ப்பணம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.






