என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
10 மாதங்களுக்கு பின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது முதல் கோவில், மசூதி, தேவாலயம் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
கோவில்களில் பக்தர்களுக்கு வினியோகிக்கும் பிரசாதம் நிறுத்தப்பட்டது. தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது. இதனால், 10 மாதங்களுக்கு பின் மாநிலம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
நேற்று முதல் கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாரம் வழங்கப்பட்டது.
கோவில்களில் பக்தர்களுக்கு வினியோகிக்கும் பிரசாதம் நிறுத்தப்பட்டது. தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது. இதனால், 10 மாதங்களுக்கு பின் மாநிலம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
நேற்று முதல் கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாரம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித் திட்டை என்ற இடத்தில் உள்ளது, உலகநாயகியம்மை உடனாய வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில். இந்தக் கோவிலில் உள்ள சில சுவாரசிய தகவல்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித் திட்டை என்ற இடத்தில் உள்ளது, உலகநாயகியம்மை உடனாய வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில். தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த ஆலயம். இந்தக் கோவிலில் உள்ள சில சுவாரசிய தகவல்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.
அழியாத இடம்
ஒவ்வொரு யுகம் முடியும் போதும், பிரளயம் தோன்றி அதன் அழிவின் முடிவில் புதிய யுகம் தோன்றும் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. அப்படி ஒரு யுகத்தின் முடிவில் பிரளயம் உண்டானது. பூமியெங்கும் மழை வெள்ளம் கொட்டித் தீர்த்தது. உலகம் முழுவதும் இருந்த அனைத்து உயிர்களும், இடங்களும் அழிந்தன. ஆனால் பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது. அந்த இடத்தில் இறையருள் நிறைந்திருந்ததே அதற்கு காரணம். அந்த இடமே தென்குடித் திட்டை ஆகும். பேரழிவு ஊழிக் காலத்திலும், வெள்ளத்தில் மூழ்காத திட்டை திருத்தலம் சிறப்புக்குரியதாகும்.
ஈசனுக்கு நிகரான சக்தி
சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இது தான் வாழ்க்கை தத்துவம். ஒன்றும் ஒன்றைப் பிரிந்து வாழாது. அதை உலக மக்களுக்கு உணர்த்துவதற்காகவே தன்னில் இருந்து ஒரு பகுதியை சக்தியாக பிரித்து உமாதேவியை இறைவன் உண்டாக்கினார். சக்தியும் சிவமும் நிகர் என்பதை உணர்த்தும் வகையில், திட்டை திருக்கோவிலில் சிவலிங்க மூலவருக்கு நிகராக, உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதிக்கு முன்புள்ள மண்டபத்தின் மேலே 12 ராசிகள் செதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிக்காரர்கள், தங்களுக்கான ராசிக்கட்டத்தின் கீழ் நின்று அம்மனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும். திருமணத் தடை, மாங்கல்ய தோஷம் நீங்க அருள் புரிவதால், இந்த அன்னை ‘மங்களாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார்.
மும்மூர்த்திகள் வழிபட்ட தலம்
பிரளயத்தின் முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்கும் பணி தொடங்க வேண்டியதிருந்தது. இதற்காக தன்னுடைய சக்தியான உமாதேவியுடன் இணைந்து அண்டத்தைப் படைத்தார், பரம்பொருள். மேலும் அந்த அண்டங்களை பரிபாலனம் செய்வதற்காக சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளைப் படைத்தார். ஆனால் மாயை வயப்பட்டிருந்த அந்த மூவரும் பேரிருள் சூழ்ந்த இந்த அண்டத்தைக் கண்டு பயந்தனர். அந்த இருளில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, பெருவெள்ளத்தின் நடுவில் திரளாக இருந்த திட்டையை அடைந்தனர். பின்னர் தங்களின் மாயை விலக வேண்டி இறைவனை வேண்டினர். பரம்பொருளான ஈசனும், அவர்களின் அச்சத்தைப் போக்க தன்னுடைய உடுக்கையை முழக்கினார். அதிலிருந்து தோன்றிய மந்திர ஒலிகள், மும்மூர்த்திகளையும் அமைதியடையச் செய்தது. பின்னர் பரம்பொருள் அவர்கள் மூவருக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை பிரித்துக் கொண்டு, அதற்கான ஞானத்தையும், சக்தியையும் வழங்கினார். மும்மூர்த்திகளும் இறைவனை வழிபட்ட தலம் இது.
சந்திரன் செலுத்தும் நன்றி
இந்தக் கோவிலின் மூலவரான வசிஷ்டேஸ்வரர் வீற்றிருக்கும் கருவறை விமானம், சந்திரக்காந்தக் கல் மற்றும் சூரியக்காந்தக் கல் கொண்டு கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். தன்னுடைய மாமனார் தட்சனால் தினமும் ஒரு கலையாக அழியும் சாபத்தைப் பெற்றிருந்தான், சந்திரன். அதன்படி தினம் ஒரு கலையாக அழிந்து தேய்ந்து வந்தான். இதையடுத்து சந்திரன், திங்களூர் வந்து கயிலாசநாதரை வழிபட்டு தன் சாபம் நீங்கப்பெற்றான். அப்படி தன்னுடைய சாபத்தைப் போக்கிய ஈசனுக்கு, திட்டையில் உள்ள திருத்தலத்திற்கு வந்து தன்னுடைய நன்றியை தெரிவித்தான், சந்திரன். இப்போதும் அந்த நன்றியை கருவறையின் மேல் உள்ள சந்திரக் காந்தக் கல்லாக இருந்து செலுத்துகிறான். இந்தக் கல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டு நீரை, இத்தல மூலவரின் மீது நித்ய அபிஷேகமாக செய்து கொண்டிருக்கிறது. 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை, இத்தல இறைவன்மீது ஒருசொட்டு நீர் விழுவதை இன்றும் நாம் தரிசிக்க முடியும்.
அழியாத இடம்
ஒவ்வொரு யுகம் முடியும் போதும், பிரளயம் தோன்றி அதன் அழிவின் முடிவில் புதிய யுகம் தோன்றும் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. அப்படி ஒரு யுகத்தின் முடிவில் பிரளயம் உண்டானது. பூமியெங்கும் மழை வெள்ளம் கொட்டித் தீர்த்தது. உலகம் முழுவதும் இருந்த அனைத்து உயிர்களும், இடங்களும் அழிந்தன. ஆனால் பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது. அந்த இடத்தில் இறையருள் நிறைந்திருந்ததே அதற்கு காரணம். அந்த இடமே தென்குடித் திட்டை ஆகும். பேரழிவு ஊழிக் காலத்திலும், வெள்ளத்தில் மூழ்காத திட்டை திருத்தலம் சிறப்புக்குரியதாகும்.
ஈசனுக்கு நிகரான சக்தி
சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இது தான் வாழ்க்கை தத்துவம். ஒன்றும் ஒன்றைப் பிரிந்து வாழாது. அதை உலக மக்களுக்கு உணர்த்துவதற்காகவே தன்னில் இருந்து ஒரு பகுதியை சக்தியாக பிரித்து உமாதேவியை இறைவன் உண்டாக்கினார். சக்தியும் சிவமும் நிகர் என்பதை உணர்த்தும் வகையில், திட்டை திருக்கோவிலில் சிவலிங்க மூலவருக்கு நிகராக, உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதிக்கு முன்புள்ள மண்டபத்தின் மேலே 12 ராசிகள் செதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிக்காரர்கள், தங்களுக்கான ராசிக்கட்டத்தின் கீழ் நின்று அம்மனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும். திருமணத் தடை, மாங்கல்ய தோஷம் நீங்க அருள் புரிவதால், இந்த அன்னை ‘மங்களாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார்.
மும்மூர்த்திகள் வழிபட்ட தலம்
பிரளயத்தின் முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்கும் பணி தொடங்க வேண்டியதிருந்தது. இதற்காக தன்னுடைய சக்தியான உமாதேவியுடன் இணைந்து அண்டத்தைப் படைத்தார், பரம்பொருள். மேலும் அந்த அண்டங்களை பரிபாலனம் செய்வதற்காக சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளைப் படைத்தார். ஆனால் மாயை வயப்பட்டிருந்த அந்த மூவரும் பேரிருள் சூழ்ந்த இந்த அண்டத்தைக் கண்டு பயந்தனர். அந்த இருளில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, பெருவெள்ளத்தின் நடுவில் திரளாக இருந்த திட்டையை அடைந்தனர். பின்னர் தங்களின் மாயை விலக வேண்டி இறைவனை வேண்டினர். பரம்பொருளான ஈசனும், அவர்களின் அச்சத்தைப் போக்க தன்னுடைய உடுக்கையை முழக்கினார். அதிலிருந்து தோன்றிய மந்திர ஒலிகள், மும்மூர்த்திகளையும் அமைதியடையச் செய்தது. பின்னர் பரம்பொருள் அவர்கள் மூவருக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை பிரித்துக் கொண்டு, அதற்கான ஞானத்தையும், சக்தியையும் வழங்கினார். மும்மூர்த்திகளும் இறைவனை வழிபட்ட தலம் இது.
சந்திரன் செலுத்தும் நன்றி
இந்தக் கோவிலின் மூலவரான வசிஷ்டேஸ்வரர் வீற்றிருக்கும் கருவறை விமானம், சந்திரக்காந்தக் கல் மற்றும் சூரியக்காந்தக் கல் கொண்டு கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். தன்னுடைய மாமனார் தட்சனால் தினமும் ஒரு கலையாக அழியும் சாபத்தைப் பெற்றிருந்தான், சந்திரன். அதன்படி தினம் ஒரு கலையாக அழிந்து தேய்ந்து வந்தான். இதையடுத்து சந்திரன், திங்களூர் வந்து கயிலாசநாதரை வழிபட்டு தன் சாபம் நீங்கப்பெற்றான். அப்படி தன்னுடைய சாபத்தைப் போக்கிய ஈசனுக்கு, திட்டையில் உள்ள திருத்தலத்திற்கு வந்து தன்னுடைய நன்றியை தெரிவித்தான், சந்திரன். இப்போதும் அந்த நன்றியை கருவறையின் மேல் உள்ள சந்திரக் காந்தக் கல்லாக இருந்து செலுத்துகிறான். இந்தக் கல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டு நீரை, இத்தல மூலவரின் மீது நித்ய அபிஷேகமாக செய்து கொண்டிருக்கிறது. 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை, இத்தல இறைவன்மீது ஒருசொட்டு நீர் விழுவதை இன்றும் நாம் தரிசிக்க முடியும்.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது பெருவிழாவுக்கு முன்னதாக கிராம தேவதைகளுக்கு உற்சவம் நடைபெறும். முதலில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அய்யனார், செல்லியம்மன் கோவிலுக்கும், அதன்பிறகு விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகரின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான ஆழத்துக்கு விநாயகருக்கும் பத்து நாள் உற்சவம் நடைபெறும்.
அந்த வகையில் அய்யனார், செல்லியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, பால்குடம் எடுத்தல், செடல் உற்சவம், தேரோட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஆழத்து விநாயகர் உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் தேர் திருவிழாவும், நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவையொட்டி வருகிற 22-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல் என்ற ஐதீக நிகழ்ச்சியும், 25-ந்தேதி தேரோட்டமும், 26-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 27- ந்தேதி தெப்ப உற்சவமும், 28-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், மார்ச் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அய்யனார், செல்லியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, பால்குடம் எடுத்தல், செடல் உற்சவம், தேரோட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஆழத்து விநாயகர் உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் தேர் திருவிழாவும், நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவையொட்டி வருகிற 22-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல் என்ற ஐதீக நிகழ்ச்சியும், 25-ந்தேதி தேரோட்டமும், 26-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 27- ந்தேதி தெப்ப உற்சவமும், 28-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், மார்ச் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமையன்று சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியை ஜபித்து வாருங்கள்.
செவ்வாய் பகவானை, செவ்வாய் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கி வழிபடுங்கள். செவ்வாய்க்கிழமையன்று வணங்குவதும் நவக்கிரகங்களைச் சுற்றி வரும் போது, செவ்வாய் பகவானை மனதில் வேண்டிக்கொண்டு, செவ்வாய் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்
எனும் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். செவ்வாய் பகவான் காயத்ரியை 54 முறை அல்லது 108 முறை என தினமுமே சொல்லி வழிபடலாம்.
சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியை ஜபித்து வாருங்கள்.
சொந்த வீட்டு கனவை நிறைவேற்றி அருளுவார் செவ்வாய் பகவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்து அருளுவார். செவ்வாய் முதலான தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுவார் செவ்வாய் பகவான்.
செவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம் :
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்
எனும் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். செவ்வாய் பகவான் காயத்ரியை 54 முறை அல்லது 108 முறை என தினமுமே சொல்லி வழிபடலாம்.
சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியை ஜபித்து வாருங்கள்.
சொந்த வீட்டு கனவை நிறைவேற்றி அருளுவார் செவ்வாய் பகவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்து அருளுவார். செவ்வாய் முதலான தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுவார் செவ்வாய் பகவான்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை ஏழுமலையான் 7 வாகனங்களில் வலம் வருவார்.
இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை, திருப்பதி புறநகர் மாவட்ட போலீசார் இணைந்து ஆலோசனை நடத்தினர்.
தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை பிரிவு அதிகாரி கோபிநாத் ஜாட்டி, புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கட அப்பலா நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.
ரத சப்தமி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதிகள், கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கும் வாகன சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வினியோகம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுப்பது, அலிபிரியில் தரிசன டோக்கன்களை பரிசோதனை செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் திருமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முனிராமையா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை ஏழுமலையான் 7 வாகனங்களில் வலம் வருவார்.
இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை, திருப்பதி புறநகர் மாவட்ட போலீசார் இணைந்து ஆலோசனை நடத்தினர்.
தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை பிரிவு அதிகாரி கோபிநாத் ஜாட்டி, புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கட அப்பலா நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.
ரத சப்தமி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதிகள், கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கும் வாகன சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வினியோகம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுப்பது, அலிபிரியில் தரிசன டோக்கன்களை பரிசோதனை செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் திருமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முனிராமையா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து ருணவிமோசனேஸ்வரரையும் இங்கே சிவ துர்கையையும் விஷ்ணு துர்கையையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால் கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுத்து அருளிக்காப்பார் ருணவிமோசனேஸ்வரர்.
கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது கும்பகோணம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்குதான் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சாரபரமேஸ்வரர்.
கடன் நிவர்த்தி ஸ்தலம் என்று போற்றப்படுகிற திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து, ருணவிமோசனேஸ்வரரை மனதார தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும் என்று போற்றுகிறார்கள்.
’கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று கம்பர் பெருமான் கடன் போல் பெரிய பிரச்சினையும் துக்கமும் ஏதுமில்லை என்று எடுத்துரைத்துள்ளார். ‘எவ்வளவு சம்பாதிச்சும் கடன் தொல்லை கழுத்தை நெரிக்குதே’ என்று புலம்புகிறவர்களும் வருந்துகிறவர்களும் அவசியம் இந்தத் தலத்துக்கு வந்து சாரபரமேஸ்வரரை தரிசித்து வேண்டிக்கொண்டால், விரைவில் கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து ருணவிமோசனேஸ்வரரையும் இங்கே சிவ துர்கையையும் விஷ்ணு துர்கையையும் தரிசித்து பிரார்த்தனை செய்வோம். கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுத்து அருளிக்காப்பார் ருணவிமோசனேஸ்வரர்.
கடன் நிவர்த்தி ஸ்தலம் என்று போற்றப்படுகிற திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து, ருணவிமோசனேஸ்வரரை மனதார தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும் என்று போற்றுகிறார்கள்.
’கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று கம்பர் பெருமான் கடன் போல் பெரிய பிரச்சினையும் துக்கமும் ஏதுமில்லை என்று எடுத்துரைத்துள்ளார். ‘எவ்வளவு சம்பாதிச்சும் கடன் தொல்லை கழுத்தை நெரிக்குதே’ என்று புலம்புகிறவர்களும் வருந்துகிறவர்களும் அவசியம் இந்தத் தலத்துக்கு வந்து சாரபரமேஸ்வரரை தரிசித்து வேண்டிக்கொண்டால், விரைவில் கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து ருணவிமோசனேஸ்வரரையும் இங்கே சிவ துர்கையையும் விஷ்ணு துர்கையையும் தரிசித்து பிரார்த்தனை செய்வோம். கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுத்து அருளிக்காப்பார் ருணவிமோசனேஸ்வரர்.
சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். அசைவ உணவை தவிர்க்கிறார்கள். ஆடம்பர செலவை குறைத்து அதற்கு செலவிடும் பணத்தை சேகரித்து ஏழைகளுக்கு உதவுகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை அனுசரிக்கிறார்கள்.
இயேசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடை பிடிக்கப்படுகிறது.
இந்த நாட்களில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்ட போது அவர் பட்ட துன்பங்கள் நினைவு கூறப்படுகிறது.
இந்த தவக்காலம் வருடந்தோறும் சாம்பல் புதன் அன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு நாளை சாம்பல்புதன் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நாளை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இதில் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குறுத்தோலைகளை சேமித்து எரித்து சாம்பல் ஆக்கப்படுகிறது.
பின்னர் அதை புனிதப்படுத்தி கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் பூசுகிறார்கள். மனிதர்களின் மரணத்தை நினைவூட்டும் வகையிலும் மனமாற்றம் அடைந்து புதுவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும் இந்த சாம்பல் நெற்றியில் பூசப்படுகிறது.
சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். அசைவ உணவை தவிர்க்கிறார்கள். ஆடம்பர செலவை குறைத்து அதற்கு செலவிடும் பணத்தை சேகரித்து ஏழைகளுக்கு உதவுகிறார்கள்.
இந்த நாட்களில் கிறிஸ்தவ ஆலய வழிபாடுகளில் இயேசுவின் சிலுவை துயரம் நினைவுகூறப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயங்களில் இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தை நினைவூட்டும் சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த தவக்காலத்தில் ஏழைகளுக்கு உணவு அளிப்பது, வருமானம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு பொருள் உதவி செய்வது, ஆஸ்பத்திரியில், சிறையில் துன்பப்படுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய வியாழக் கிழமை பெரிய வியாழனாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் இயேசு சிலுவையில் அறையப் படுவதற்கு முன்பு தனது சீடர்களுக்கு அவர் கடைசி இரவு உணவு வழங்கியது நினைவுகூறப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள் பொதுமக்களின் பாவங்களை கழுவி முத்தமிடுகிறார்கள். போப் ஆண்டவரும் சாதாரண மக்களின் பாதங் களை கழுவி முத்தமிடுவது வாடிக்கையாக உள்ளது.
மறுநாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிலுவை மரணத்தை நினைவுகூரும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. புனித சனிக்கிழமை ஆலயங்களில் வழிபாடு நடைபெறுவது இல்லை. அன்று நள்ளிரவு ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஞாயிறு அன்று ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தையும் புனித வாரத்தையும் அனுசரிக்கிறார்கள். ஈஸ்டர் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
இயேசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடை பிடிக்கப்படுகிறது.
இந்த நாட்களில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்ட போது அவர் பட்ட துன்பங்கள் நினைவு கூறப்படுகிறது.
இந்த தவக்காலம் வருடந்தோறும் சாம்பல் புதன் அன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு நாளை சாம்பல்புதன் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நாளை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இதில் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குறுத்தோலைகளை சேமித்து எரித்து சாம்பல் ஆக்கப்படுகிறது.
பின்னர் அதை புனிதப்படுத்தி கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் பூசுகிறார்கள். மனிதர்களின் மரணத்தை நினைவூட்டும் வகையிலும் மனமாற்றம் அடைந்து புதுவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும் இந்த சாம்பல் நெற்றியில் பூசப்படுகிறது.
சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். அசைவ உணவை தவிர்க்கிறார்கள். ஆடம்பர செலவை குறைத்து அதற்கு செலவிடும் பணத்தை சேகரித்து ஏழைகளுக்கு உதவுகிறார்கள்.
இந்த நாட்களில் கிறிஸ்தவ ஆலய வழிபாடுகளில் இயேசுவின் சிலுவை துயரம் நினைவுகூறப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயங்களில் இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தை நினைவூட்டும் சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த தவக்காலத்தில் ஏழைகளுக்கு உணவு அளிப்பது, வருமானம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு பொருள் உதவி செய்வது, ஆஸ்பத்திரியில், சிறையில் துன்பப்படுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய வியாழக் கிழமை பெரிய வியாழனாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் இயேசு சிலுவையில் அறையப் படுவதற்கு முன்பு தனது சீடர்களுக்கு அவர் கடைசி இரவு உணவு வழங்கியது நினைவுகூறப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள் பொதுமக்களின் பாவங்களை கழுவி முத்தமிடுகிறார்கள். போப் ஆண்டவரும் சாதாரண மக்களின் பாதங் களை கழுவி முத்தமிடுவது வாடிக்கையாக உள்ளது.
மறுநாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிலுவை மரணத்தை நினைவுகூரும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. புனித சனிக்கிழமை ஆலயங்களில் வழிபாடு நடைபெறுவது இல்லை. அன்று நள்ளிரவு ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஞாயிறு அன்று ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தையும் புனித வாரத்தையும் அனுசரிக்கிறார்கள். ஈஸ்டர் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள காவடிப்புரை முருகன் கோவிலில் மாசி திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள காவடிப்புரை முருகன் கோவிலில் மாசி திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. முன்னதாக நாளை காலை பூஜையும், மாலை 5 மணிக்கு பஜனையும் நடக்கிறது.
2-ம் நாள் காலை 8 மணிக்கு காவடி அபிஷேகமும், 11 மணிக்கு காவடி ஊர்வலம் வருதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு பஜனையும் நடக்கிறது. 3-ம் நாள் விழாவில் காலை 10 மணிக்கு காவடி ஏழு ஊர் சுற்றி ஊர்வலம் வருதல் நிகழ்ச்சியும், பூஜையும் நடக்கிறது.
4-ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு காவடி அபிஷேகமும், காலை 11 மணிக்கு பஜனையும், நண்பகல் 12 மணிக்கு முருகனுக்கு சிறப்பு பூஜையும், மதியம் ஒரு மணிக்கு சமபந்தி விருந்தும், மாலை 5 மணிக்கு காவடி நடைபயணமாக திருச்செந்தூருக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
2-ம் நாள் காலை 8 மணிக்கு காவடி அபிஷேகமும், 11 மணிக்கு காவடி ஊர்வலம் வருதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு பஜனையும் நடக்கிறது. 3-ம் நாள் விழாவில் காலை 10 மணிக்கு காவடி ஏழு ஊர் சுற்றி ஊர்வலம் வருதல் நிகழ்ச்சியும், பூஜையும் நடக்கிறது.
4-ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு காவடி அபிஷேகமும், காலை 11 மணிக்கு பஜனையும், நண்பகல் 12 மணிக்கு முருகனுக்கு சிறப்பு பூஜையும், மதியம் ஒரு மணிக்கு சமபந்தி விருந்தும், மாலை 5 மணிக்கு காவடி நடைபயணமாக திருச்செந்தூருக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
பாபநாசத்தில் புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு மின் அலங்கார தேர் பவனி வந்தது. தேர் திருவிழாவில் பாபநாசம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பாபநாசத்தில் புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா நடந்தது. இதையொட்டி கஞ்சி வார்த்தல் நடந்தது. புனித செபஸ்தியார் திருத்தல பங்குத்தந்தை பிரான்சிஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அந்தோணியாரின் மின் அலங்கார தேர் பவனி வந்தது. தேர் திருவிழாவில் பாபநாசம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அந்தோணியாரின் மின் அலங்கார தேர் பவனி வந்தது. தேர் திருவிழாவில் பாபநாசம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
11 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற பழனி முருகன் கோவில் தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி 56 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் சமீபத்தில் நடந்த தைப்பூச திருவிழாவின் 5-வது நாளில் மட்டும் கோவில் நிர்வாகம் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.
இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் மீண்டும் தங்கரத புறப்பாட்டை தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக 15-ந்தேதி (நேற்று) முதல் தங்கரத புறப்பாட்டை தொடங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
அப்போது சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சப்பரத்தில் எழுந்தருளி தங்கரத புறப்பாடு நடைபெறும் பகுதிக்கு சென்றார். அங்கு சின்னக்குமாரருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் வெளிப்பிரகாரத்தில் இருந்து தங்கரத புறப்பாடு தொடங்கியது.
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா என சரண கோஷங்களை எழுப்பினர். 11 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி 56 பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் செங்கோட்டையனின் மகன் கதிர்ஈஸ்வர், செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் மீண்டும் தங்கரத புறப்பாட்டை தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக 15-ந்தேதி (நேற்று) முதல் தங்கரத புறப்பாட்டை தொடங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
அப்போது சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சப்பரத்தில் எழுந்தருளி தங்கரத புறப்பாடு நடைபெறும் பகுதிக்கு சென்றார். அங்கு சின்னக்குமாரருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் வெளிப்பிரகாரத்தில் இருந்து தங்கரத புறப்பாடு தொடங்கியது.
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா என சரண கோஷங்களை எழுப்பினர். 11 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி 56 பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் செங்கோட்டையனின் மகன் கதிர்ஈஸ்வர், செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
அய்யம்பேட்டை பட்டுக்குடி கிராமத்தில் உள்ள ஏகவுரியம்மன் கோவிலில் திருவிழா விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி கிராமத்தில் உள்ள ஏகவுரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. பின்னர் செங்கமலை ஆண்டவருக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும், தப்பாட்டம் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. பின்னர் செங்கமலை ஆண்டவருக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும், தப்பாட்டம் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
பிப்ரவரி மாதம் 16-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 22-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
16-ம் தேதி செவ்வாய் கிழமை :
* வசந்த பஞ்சமி
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
17-ம் தேதி புதன் கிழமை :
* சஷ்டி விரதம்
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்
18-ம் தேதி வியாழக்கிழமை :
* சந்திராஷ்டமம்- ஹஸ்தம், சித்திரை
19-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* கார்த்திகை விரதம், ரத சப்தமி
* சந்திராஷ்டமம் - சுவாதி
20-ம் தேதி சனிக்கிழமை :
* அஷ்டமி
* சந்திராஷ்டமம் - விசாகம்
21-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* நவமி
* சந்திராஷ்டமம் - அனுஷம்
22-ம் தேதி திங்கள் கிழமை :
* தசமி
* சந்திராஷ்டமம் - கேட்டை
* வசந்த பஞ்சமி
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
17-ம் தேதி புதன் கிழமை :
* சஷ்டி விரதம்
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்
18-ம் தேதி வியாழக்கிழமை :
* சந்திராஷ்டமம்- ஹஸ்தம், சித்திரை
19-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* கார்த்திகை விரதம், ரத சப்தமி
* சந்திராஷ்டமம் - சுவாதி
20-ம் தேதி சனிக்கிழமை :
* அஷ்டமி
* சந்திராஷ்டமம் - விசாகம்
21-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* நவமி
* சந்திராஷ்டமம் - அனுஷம்
22-ம் தேதி திங்கள் கிழமை :
* தசமி
* சந்திராஷ்டமம் - கேட்டை






