என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இருப்பினும் ஆகம முறைப்படி சாமிக்கு தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் மற்றும் நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சிலர், கோவிலுக்கு வெளியே நின்று சாமியை தரிசனம் செய்து செல்வதை பார்க்க முடிந்தது.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் மற்றும் நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சிலர், கோவிலுக்கு வெளியே நின்று சாமியை தரிசனம் செய்து செல்வதை பார்க்க முடிந்தது.
இன்று வைகாசி மாத சஷ்டி நாளாகும். எனவே இந்தநாளில், முருகக் கடவுளை விரதமிருந்து தரிசியுங்கள். நம் கஷ்டங்களையும் வாழ்வில் ஏற்பட்ட நஷ்டங்களையும் தீர்த்தருள்வான் கந்தகுமாரன்.
மாதந்தோறும் வருகிற சஷ்டியில், விரதமிருந்து முருகனைத் தரிசித்து, வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். விரதம் இருக்க இயலாதவர்கள், அந்தநாள் முழுவதும் சிவமைந்தனை நினைத்தபடி, கவசங்களைப் பாராயணம் செய்வார்கள். சஷ்டி கவசம் படிப்பார்கள். வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள்.
சஷ்டி திதியில் கந்தனை விரதம் இருந்து வழிபடுவது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், காலையும் மாலையும் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், நம் சிக்கல்களெல்லாம் தீரும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும்!
சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், காலை அல்லது மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். தனிக்கோயில் என்றில்லாமல், சிவன், அம்மன் கோயில்களில் முருகனுக்கு சந்நிதி இருக்கும். அங்கு சென்றும் தரிசிக்கலாம். முருகக்கடவுளுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்குளிர தரிசிக்கலாம்.
வீட்டில், முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். கஷ்டங்களெல்லாம் தீரும். வாழ்வில் நஷ்டங்களெல்லாம் முடிவுக்குக் கொண்டுவருவார் வள்ளிமணாளன். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
இன்று முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை விரதம் இருந்து வழிபடுங்கள். மனதில் உள்ள பயமெல்லாம் போக்கி, காரியத்தில் வெற்றியைத் தேடித் தந்தருள்வார் ஞானகுமாரன்!
சஷ்டி திதியில் கந்தனை விரதம் இருந்து வழிபடுவது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், காலையும் மாலையும் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், நம் சிக்கல்களெல்லாம் தீரும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும்!
சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், காலை அல்லது மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். தனிக்கோயில் என்றில்லாமல், சிவன், அம்மன் கோயில்களில் முருகனுக்கு சந்நிதி இருக்கும். அங்கு சென்றும் தரிசிக்கலாம். முருகக்கடவுளுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்குளிர தரிசிக்கலாம்.
வீட்டில், முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். கஷ்டங்களெல்லாம் தீரும். வாழ்வில் நஷ்டங்களெல்லாம் முடிவுக்குக் கொண்டுவருவார் வள்ளிமணாளன். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
இன்று முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை விரதம் இருந்து வழிபடுங்கள். மனதில் உள்ள பயமெல்லாம் போக்கி, காரியத்தில் வெற்றியைத் தேடித் தந்தருள்வார் ஞானகுமாரன்!
ஒவ்வொரு ஆண்டும் தொடங்குகின்ற பொழுதே முக்கிய தினங்களைக் குறித்துவைத்துக் கொண்டு செயல்படவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தொடங்குகின்ற பொழுதே முக்கிய தினங்களைக் குறித்துவைத்துக் கொண்டு செயல்படவேண்டும். குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி, கிரகண நாட்கள், கிரிவல நாட்கள், முன்னோர்களின் திதி தினங்கள், சிவராத்திரி, மகான்கள் பிறந்த தினங்கள், நமது பிறந்த நட்சத்திர தினங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் பிறந்த தினங்கள், திருமணத் தேதிகள், ராமநவமி, கோகு லாஷ்டமி, வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, ஏகாதசி, சஷ்டி, பிரதோஷம் போன்றவற்றை மனதில் பதித்து வைத்துக்கொண்டு, அந்தப்புண்ணிய நாட்களில் நல்ல எண்ணங்களோடு செயல்பட்டு இறைவனையும், முன்னோர்களையும் நினைத்து வழிபடவேண்டும்.
அந்த நாட்களில் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கலாம். முதியவர்களுக்கு ஆடை தானம் வழங்கலாம். வசதியில்லாத குழந்தைகளின் கல்விக்காக உதவலாம். கல்யாணக் கனவுகளையும் நிறைவேற்ற ஒரு தொகையை நிதிஉதவி செய்யலாம். அன்றைதினம் ஏதேனும் ஒரு நல்ல காரியமாவது நீங்கள் செய்தால், அந்த நல்ல காரியத்தால் உங்கள் வாழ்க்கையில் உன்னதமான பலன் கிடைக்கும்.
அந்த நாட்களில் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கலாம். முதியவர்களுக்கு ஆடை தானம் வழங்கலாம். வசதியில்லாத குழந்தைகளின் கல்விக்காக உதவலாம். கல்யாணக் கனவுகளையும் நிறைவேற்ற ஒரு தொகையை நிதிஉதவி செய்யலாம். அன்றைதினம் ஏதேனும் ஒரு நல்ல காரியமாவது நீங்கள் செய்தால், அந்த நல்ல காரியத்தால் உங்கள் வாழ்க்கையில் உன்னதமான பலன் கிடைக்கும்.
முப்பெரும் தேவியரில் ஒருவரான சரஸ்வதிக்கு கலைமகள், பத்மாக்ஷி, விமலா, ஞானமுத்ரா, சாவித்ரி, செளதாமினி, பிரம்மி, சுபத்ரா எனப்பல பெயர்கள் உள்ளன.
பிரம்மா உலகைப் படைக்கின்றபோது அவரது உடல் இரு கூறுகளாகப் பிரிந்து ஒரு பகுதி ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் மாறுகின்றது. அந்தப் பெண்ணே சரஸ்வதி என்று சில புராணங்கள் கூறுகின்றன. சரஸ்வதி தேவி பிரம்மாவின் நாவில் தோன்றியவர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
தேவிபாகவதத்தில் சரஸ்வதி தேவியானவள் சாத்வீக குணமுடையவள், மஞ்சள் வண்ண ஆடை அணிந்தவள் என்றும், அணிகலன்கள் சூடி கைகளில் சுவடியும், வீணையும் ஏந்தியவள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிக்வேதத்தில் கலைவாணியானவள் பாடலில் உறைபவள், ஒலியில் உறைந்திருப்பவள், இசையில் கலந்திருப்பவள், அறிவின் உறைவிடம், நினைவின் உறைவிடம், சகல கல்விக்கும் சொந்தமானவள், மொழி மற்றும் எழுத்தின் வடிவானவள் என்றும் விஞ்ஞானம், கல்வி அறிவு போன்ற எண்ணற்ற கலைகளின் ஒருமித்த வடிவு என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. வேதங்கள் சரஸ்வதியை நதியாகக் குறிப்பிடுகின்றன. வேதம் என்பது அறிவு, அறிவின் ஆதாரம் மற்றும் அறிவின் கர்ப்பம் சரஸ்வதி என்று புராணங்கள் கூறுகின்றன.
“அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள்” என்கிறது கந்தபுராணம். சரஸ்வதியைப்பற்றி தமிழில் “சரஸ்வதி அந்தாதி” எனும் நூலைக் கம்பரும், “சகலகலாவல்லி மாலை” என்ற நூலைக் குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.
சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், செளரம் என அனைத்திலும் சமயங்கடந்த தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகின்றாள்.
தேவிபாகவதத்தில் சரஸ்வதி தேவியானவள் சாத்வீக குணமுடையவள், மஞ்சள் வண்ண ஆடை அணிந்தவள் என்றும், அணிகலன்கள் சூடி கைகளில் சுவடியும், வீணையும் ஏந்தியவள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிக்வேதத்தில் கலைவாணியானவள் பாடலில் உறைபவள், ஒலியில் உறைந்திருப்பவள், இசையில் கலந்திருப்பவள், அறிவின் உறைவிடம், நினைவின் உறைவிடம், சகல கல்விக்கும் சொந்தமானவள், மொழி மற்றும் எழுத்தின் வடிவானவள் என்றும் விஞ்ஞானம், கல்வி அறிவு போன்ற எண்ணற்ற கலைகளின் ஒருமித்த வடிவு என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. வேதங்கள் சரஸ்வதியை நதியாகக் குறிப்பிடுகின்றன. வேதம் என்பது அறிவு, அறிவின் ஆதாரம் மற்றும் அறிவின் கர்ப்பம் சரஸ்வதி என்று புராணங்கள் கூறுகின்றன.
“அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள்” என்கிறது கந்தபுராணம். சரஸ்வதியைப்பற்றி தமிழில் “சரஸ்வதி அந்தாதி” எனும் நூலைக் கம்பரும், “சகலகலாவல்லி மாலை” என்ற நூலைக் குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.
சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், செளரம் என அனைத்திலும் சமயங்கடந்த தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகின்றாள்.
சிவபெருமானின் பக்தனாக மாறியிருந்த அந்த சூதாடி, இந்திரனிடம் இருந்த ஐராவதம் என்ற யானையை, அகத்தியருக்கு தானமாக அளித்தான்.
முன்னொரு காலத்தில் சூதாடி ஒருவன் இருந்தான். அவன், சூதாடுவதன் மூலம் பணம் ஈட்டியதோடு, அனைத்து கெட்ட பழக்கங்களும் கைவரப்பெற்றவனாக இருந்தான். அதோடு இறைவனையும், சாதுக்களையும் அவதூறாக பேசி வந்தான். ஒரு நாள் அவனது தந்திரத்தால், சூதாட்டத்தில் பெரும் பணம் ஈட்டினான். அதனால் மகிழ்ச்சி அடைந்தவன், சந்தனம், மாலை ஆகியவற்றுடன் விலைமாதுவின் வீட்டை நோக்கிப் பயணப்பட்டான். மது போதை காரணமாக கால்கள் தள்ளாட நடந்தவன், ஓரிடத்தில் கால் இடறி கீழே விழுந்து நினைவிழந்தான்.
நினைவு திரும்பியதும் அவனது மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். இதுவரையான தனது தீய வாழ்க்கையைப் பற்றி நினைத்து வருந்தினான். மனதில் ஏதோ ஒரு தெளிவு பிறந்திருந்தது. அந்த சுத்தமான மனதுடன், அங்கிருந்த சிவலிங்கத்திற்கு தன் கையில் இருந்த சந்தனம், மாலை ஆகியவற்றை அணிவித்து விட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றான். ஆனால் அன்று இரவே அவனது உயிர் பிரிந்தது. எமதூதர்கள் வந்து, அந்த சூதாடியை எமலோகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
எமதர்மராஜன், சூதாடியைப் பார்த்து “நீ செய்துள்ள இழிவான செயல்கள் காரணமாக நரகத்தில் மிகவும் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அதைக்கேட்டு மிகவும் அச்சம் அடைந்த அந்த சூதாடி, “சுவாமி.. நான் ஏதாவது புண்ணியம் கூட செய்திருக்கலாம் அல்லவா? தயவுசெய்து அதற்கான பலனையும் பார்த்து தீர்ப்பு கூறுங்கள்” என்று வேண்டிக்கொண்டான்.
உடனே எமதர்மராஜன் தனது உதவியாளரான சித்ரகுப்தனை பார்த்தார். அவர், “சூதாடியே.. நீ இறப்பதற்கு முன் சிறிதளவு சந்தனத்தை, சிவலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்துள்ளாய். அதன் பயனாக, நீ சொர்க்கத்தில் மூன்று நாழிகை நேரம் அரசனாக வீற்றிருக்கும் தகுதியைப் பெற்றுள்ளாய்” என்றார்.
அதைக் கேட்ட சூதாடி, “சுவாமி.. அப்படியானால் முதலில் சொர்க்கத்தில் நான் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க அனுமதி தாருங்கள். அதன்பிறகு நரகத்தில் நான் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை மொத்தமாக அனுபவித்துக்கொள்கிறேன்” என்று கேட்டான்.
அவனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சூதாடி, சொர்க்கலோகம் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு இந்திரனிடம் நடந்தவற்றைக் கூறி, ‘மூன்று நாழிகை நேரம் நீ இந்திரப் பதவியை துறக்க வேண்டும். இவனது அரச பதவி காலம் முடிந்ததும் நீ மீண்டும் பதவி ஏற்றுக்கொள்ளலாம்’ என்று சொல்லப்பட்டது.
அதன்படி இந்திரன் அரியணையில் இருந்து இறங்க, சொர்க்கலோகம் எனப்படும் தேவர்களின் உலகத்திற்கு, சூதாடி அரசனானான். ‘மூன்று நாழிகை நேரத்தில் என்ன செய்யலாம்’ என்று சிந்தித்தவன், ஈசனை சரணடைந்தான். அதோடு பொருளின் மீது, போதையின் மீது இருந்த பற்று அவனுக்கு அறவே அற்றுப் போயிருந்தது. ஆகையால் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பொன்னையும், பொருளையும் பிறருக்கு தானமாக கொடுக்கத் தொடங் கினான்.
சிவபெருமானின் பக்தனாக மாறியிருந்த அந்த சூதாடி, இந்திரனிடம் இருந்த ஐராவதம் என்ற யானையை, அகத்தியருக்கு தானமாக அளித்தான். உச்சைச்ரவஸ் என்ற குதிரையை விஸ்வாமித்திர முனிவருக்கு வழங்கினான். காமதேனு என்னும் பசுவை வசிஷ்டருக்கும், சிந்தாமணி என்னும் ரத்தினத்தை காலவ மகரிஷிக்கும், கற்பக மரத்தை கவுண்டின்ய முனிவருக்கும் அளித்துவிட்டான். இப்படி தனது மூன்று நாழிகை நேர அரசப் பதவி காலம் நிறைவடையும் வரை, ஒவ்வொரு பொருளாக மற்றவர்களுக்கு தானம் அளித்துக் கொண்டே இருந்தான். மூன்று நாழிகை நேரம் முடிந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் அரியணையில் இருந்து இறங்கிப் போய்விட்டான்.
தேவேந்திரன் திரும்பி வந்து பார்த்தபோது, அமராவதி எனப்படும் சொர்க்கலோகமே பொன் பொருட்கள் இன்றி வெறுமையாக காட்சி தந்தன. உடனே கோபத்துடன் எமலோகம் சென்றவன், “எமதர்மரே.. நீங்கள் என்னுடைய பதவியை ஒரு சூதாடிக்கு கொடுத்து தகாத பணியை செய்து விட்டீர்கள். அவன் அமராவதியையே வறுமைக்குரியதாக மாற்றிவிட்டுச் சென்றுவிட்டான். என்னுடைய பொன், பொருள், ரத்தினங்கள் அனைத்தையும் முனிவர்களுக்கு தானம் அளித்து விட்டான்” என்று முறையிட்டான்.
அதற்கு எமதர்மன், “தேவர்களின் அரசனான நீங்கள், இழந்துவிட்ட பொருட்களை எண்ணிதான் மிகவும் வருந்துகிறீர்கள். உங்களுக்கு அவற்றின் மீதான பற்று இன்னும் போகவில்லையா?.. நீங்கள் இதுவரை பல நூறு யாகங்களைச் செய்து பெற்ற பலனைவிட, இந்த மூன்று நாழிகை நேரத்தில் அந்த சூதாடி செய்த தானங்களால் அதிக பலனை அடைந்துவிட்டான். அதோடு இனி அவன் அனுபவிக்க இருந்த நரக தண்டனையும் ரத்தாகிப்போனது. தன்னிடம் அதிகாரம் கிடைத்த பின்னும், அதை அனுபவிக்கத் துடிக்காமல், மற்றவர்களுக்கு நற்காரியங்களைச் செய்பவனே மேலானவன். நீங்கள் முனிவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து, அவர்களிடம் இருந்து பொன், பொருள், ரத்தினங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.
நினைவு திரும்பியதும் அவனது மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். இதுவரையான தனது தீய வாழ்க்கையைப் பற்றி நினைத்து வருந்தினான். மனதில் ஏதோ ஒரு தெளிவு பிறந்திருந்தது. அந்த சுத்தமான மனதுடன், அங்கிருந்த சிவலிங்கத்திற்கு தன் கையில் இருந்த சந்தனம், மாலை ஆகியவற்றை அணிவித்து விட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றான். ஆனால் அன்று இரவே அவனது உயிர் பிரிந்தது. எமதூதர்கள் வந்து, அந்த சூதாடியை எமலோகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
எமதர்மராஜன், சூதாடியைப் பார்த்து “நீ செய்துள்ள இழிவான செயல்கள் காரணமாக நரகத்தில் மிகவும் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அதைக்கேட்டு மிகவும் அச்சம் அடைந்த அந்த சூதாடி, “சுவாமி.. நான் ஏதாவது புண்ணியம் கூட செய்திருக்கலாம் அல்லவா? தயவுசெய்து அதற்கான பலனையும் பார்த்து தீர்ப்பு கூறுங்கள்” என்று வேண்டிக்கொண்டான்.
உடனே எமதர்மராஜன் தனது உதவியாளரான சித்ரகுப்தனை பார்த்தார். அவர், “சூதாடியே.. நீ இறப்பதற்கு முன் சிறிதளவு சந்தனத்தை, சிவலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்துள்ளாய். அதன் பயனாக, நீ சொர்க்கத்தில் மூன்று நாழிகை நேரம் அரசனாக வீற்றிருக்கும் தகுதியைப் பெற்றுள்ளாய்” என்றார்.
அதைக் கேட்ட சூதாடி, “சுவாமி.. அப்படியானால் முதலில் சொர்க்கத்தில் நான் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க அனுமதி தாருங்கள். அதன்பிறகு நரகத்தில் நான் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை மொத்தமாக அனுபவித்துக்கொள்கிறேன்” என்று கேட்டான்.
அவனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சூதாடி, சொர்க்கலோகம் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு இந்திரனிடம் நடந்தவற்றைக் கூறி, ‘மூன்று நாழிகை நேரம் நீ இந்திரப் பதவியை துறக்க வேண்டும். இவனது அரச பதவி காலம் முடிந்ததும் நீ மீண்டும் பதவி ஏற்றுக்கொள்ளலாம்’ என்று சொல்லப்பட்டது.
அதன்படி இந்திரன் அரியணையில் இருந்து இறங்க, சொர்க்கலோகம் எனப்படும் தேவர்களின் உலகத்திற்கு, சூதாடி அரசனானான். ‘மூன்று நாழிகை நேரத்தில் என்ன செய்யலாம்’ என்று சிந்தித்தவன், ஈசனை சரணடைந்தான். அதோடு பொருளின் மீது, போதையின் மீது இருந்த பற்று அவனுக்கு அறவே அற்றுப் போயிருந்தது. ஆகையால் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பொன்னையும், பொருளையும் பிறருக்கு தானமாக கொடுக்கத் தொடங் கினான்.
சிவபெருமானின் பக்தனாக மாறியிருந்த அந்த சூதாடி, இந்திரனிடம் இருந்த ஐராவதம் என்ற யானையை, அகத்தியருக்கு தானமாக அளித்தான். உச்சைச்ரவஸ் என்ற குதிரையை விஸ்வாமித்திர முனிவருக்கு வழங்கினான். காமதேனு என்னும் பசுவை வசிஷ்டருக்கும், சிந்தாமணி என்னும் ரத்தினத்தை காலவ மகரிஷிக்கும், கற்பக மரத்தை கவுண்டின்ய முனிவருக்கும் அளித்துவிட்டான். இப்படி தனது மூன்று நாழிகை நேர அரசப் பதவி காலம் நிறைவடையும் வரை, ஒவ்வொரு பொருளாக மற்றவர்களுக்கு தானம் அளித்துக் கொண்டே இருந்தான். மூன்று நாழிகை நேரம் முடிந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் அரியணையில் இருந்து இறங்கிப் போய்விட்டான்.
தேவேந்திரன் திரும்பி வந்து பார்த்தபோது, அமராவதி எனப்படும் சொர்க்கலோகமே பொன் பொருட்கள் இன்றி வெறுமையாக காட்சி தந்தன. உடனே கோபத்துடன் எமலோகம் சென்றவன், “எமதர்மரே.. நீங்கள் என்னுடைய பதவியை ஒரு சூதாடிக்கு கொடுத்து தகாத பணியை செய்து விட்டீர்கள். அவன் அமராவதியையே வறுமைக்குரியதாக மாற்றிவிட்டுச் சென்றுவிட்டான். என்னுடைய பொன், பொருள், ரத்தினங்கள் அனைத்தையும் முனிவர்களுக்கு தானம் அளித்து விட்டான்” என்று முறையிட்டான்.
அதற்கு எமதர்மன், “தேவர்களின் அரசனான நீங்கள், இழந்துவிட்ட பொருட்களை எண்ணிதான் மிகவும் வருந்துகிறீர்கள். உங்களுக்கு அவற்றின் மீதான பற்று இன்னும் போகவில்லையா?.. நீங்கள் இதுவரை பல நூறு யாகங்களைச் செய்து பெற்ற பலனைவிட, இந்த மூன்று நாழிகை நேரத்தில் அந்த சூதாடி செய்த தானங்களால் அதிக பலனை அடைந்துவிட்டான். அதோடு இனி அவன் அனுபவிக்க இருந்த நரக தண்டனையும் ரத்தாகிப்போனது. தன்னிடம் அதிகாரம் கிடைத்த பின்னும், அதை அனுபவிக்கத் துடிக்காமல், மற்றவர்களுக்கு நற்காரியங்களைச் செய்பவனே மேலானவன். நீங்கள் முனிவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து, அவர்களிடம் இருந்து பொன், பொருள், ரத்தினங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.
சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை.
சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
பஞ்சமி திதியில் வாராஹி தேவியை விரதம் இருந்து மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.
வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து மகிழ்ந்து அருள்வாளாம் அன்னை!
மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி.
மிளகும் சீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாகச் செய்து தேவியை வணங்கலாம்.
சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
பஞ்சமி திதியில் வாராஹி தேவியை விரதம் இருந்து மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.
வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து மகிழ்ந்து அருள்வாளாம் அன்னை!
மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி.
மிளகும் சீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாகச் செய்து தேவியை வணங்கலாம்.
திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள் நம் வீட்டு பெரியோர்கள்.
காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம்.
இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. மேலும், அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத் தான்.
திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள் நம் வீட்டு பெரியோர்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் ஏற்றுவது காமாட்சியம்மன் விளக்கை தான்.
மேலும் காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.
இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. மேலும், அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத் தான்.
திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள் நம் வீட்டு பெரியோர்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் ஏற்றுவது காமாட்சியம்மன் விளக்கை தான்.
மேலும் காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.
மன்னார்குடி அருகிலுள்ள கழுவத்தூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மன்னார்குடி அருகிலுள்ள கழுவத்தூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவாலயம் உள்ளது. சீதையை ராவணன் கடத்திச் சென்றபோது பறவைகளின் அரசனான ஜடாயு அவனை மறித்தார். ராவணனோ அவரது இறக்கையை வெட்டி வீழ்த்தினான். காயத்துடன் கிடந்த அவர் ராமனிடம் ராவணன் சீதையைக் கடத்தி செல்லும் விஷயத்தைச் சொல்லி உயிர் விட்டார் அவருக்கு ராமன் ஈமக்கிரியை செய்து வைத்தார். ஜடாயு இந்தப்பகுதியில் தங்கியிருந்தபோது பூஜித்த சிவலிங்கத்திற்கு ஜடாயுபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.1
இந்தக் கோயில் குறித்து கல்வெட்டு ஆய்வாளர் கூறுவதாவது. 11 நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கற்கோயில் இது : சோழ மண்டலத்து அருமொஃஸி தேவ வள நாட்டு புறங்கறம்பை நாட்டுக் கெழுவத்தூர் என ராஜராஜசோழனின் கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் உள்ளது. அம்பாளின் பெயர் சவுந்திர நாயகி. கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டதாம். முழுமையாக சிதிலமடைந்து விட்டது. இருப்பினும் மூலவர் சிலைகள் விக்னேஸ்வரர் சண்முகர் சண்டிகேஸ்வரர் அம்மன் சன்னதி கோபுரங்கள் நவக்கிரக மண்டபம் சகஸ்ரலிங்கம் ஆகியவை அப்படியே இருந்தன. இதையடுத்து இவற்றை மீண்டும் பிரதிஷ்டை செய்ய திருப்பணி நடந்து வருகிறது.
வேலைப்பாடு மிக்க கருங்கல் நந்தி மண்டபம் இங்குள்ளது. இங்குள்ள நர்த்தன வினாயகர் மான் மழு ஏந்திய அதிகார நந்தி அவரது மனைவி சயஸ் சிறகுகளுடன் மனித வடிவிலுள்ள ஜடாயு சிற்பங்கள் சிறப்பானவை. கருவறையில் தெற்கில் தட்சிணா மூர்த்தி வீற்றிருக்கிறார். இவர் அமர்ந்துள்ள பாறையின் கீழ் பாம்பு புலி சிங்கம் பறவைகள் படுத்த நிலையில் காளை இருப்பது வித்தியாசமானது.
மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.
செல்லும் வழி மன்னார்குடி முத்துப்பேட்டை ரோட்டில் 20 கிமீ தூரத்தில் கழுவத்தூர்.
இந்தக் கோயில் குறித்து கல்வெட்டு ஆய்வாளர் கூறுவதாவது. 11 நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கற்கோயில் இது : சோழ மண்டலத்து அருமொஃஸி தேவ வள நாட்டு புறங்கறம்பை நாட்டுக் கெழுவத்தூர் என ராஜராஜசோழனின் கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் உள்ளது. அம்பாளின் பெயர் சவுந்திர நாயகி. கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டதாம். முழுமையாக சிதிலமடைந்து விட்டது. இருப்பினும் மூலவர் சிலைகள் விக்னேஸ்வரர் சண்முகர் சண்டிகேஸ்வரர் அம்மன் சன்னதி கோபுரங்கள் நவக்கிரக மண்டபம் சகஸ்ரலிங்கம் ஆகியவை அப்படியே இருந்தன. இதையடுத்து இவற்றை மீண்டும் பிரதிஷ்டை செய்ய திருப்பணி நடந்து வருகிறது.
வேலைப்பாடு மிக்க கருங்கல் நந்தி மண்டபம் இங்குள்ளது. இங்குள்ள நர்த்தன வினாயகர் மான் மழு ஏந்திய அதிகார நந்தி அவரது மனைவி சயஸ் சிறகுகளுடன் மனித வடிவிலுள்ள ஜடாயு சிற்பங்கள் சிறப்பானவை. கருவறையில் தெற்கில் தட்சிணா மூர்த்தி வீற்றிருக்கிறார். இவர் அமர்ந்துள்ள பாறையின் கீழ் பாம்பு புலி சிங்கம் பறவைகள் படுத்த நிலையில் காளை இருப்பது வித்தியாசமானது.
மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.
செல்லும் வழி மன்னார்குடி முத்துப்பேட்டை ரோட்டில் 20 கிமீ தூரத்தில் கழுவத்தூர்.
நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு வர ஆர்வமாக இருந்த நிலையில் தடைகள் அமைக்கப்பட்டிருந்ததை கண்டு பக்தர்களும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் சென்றனர்.
குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 16-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும் அதனைத் தொடர்ந்து சித்திரை மாதம் கடைசி நாள் தேரோட்டமும் வைகாசி ஒன்றாம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறும்.
கெங்கையம்மன் திருவிழா இந்த ஆண்டு குறைந்த அளவு பக்தர்களை கொண்டே நடைபெற்றது.
தற்போது கொரோனா பரவலால் தடை உத்தரவு அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் திருவிழாக்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.இதனால் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா தடைப்படும் நிலையிலிருந்தது இதுகுறித்து கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து திருவிழா நடத்த அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் குறைந்த அளவு கோவில் பணியாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கொண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்தார்.
இதனையடுத்து நள்ளிரவு சுமார் 1 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட அம்மன் சிரசு கோவிலின் உள்ளே வலம் வந்தது. இதைத் தொடர்ந்து சண்டாளச்சி அம்மன் உடலில் கெங்கை அம்மன் சிரசு பொருத்தப்பட்டது.
சிறிது நேரத்திற்கு பின்பு சண்டாளச்சி அம்மன் உடலில் இருந்து கெங்கை அம்மன் சிரசு பிரிக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் வைக்கப்பட்டது. சுமார் 1½ மணிநேரத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் முடிவு பெற்றது.
கோவில் அருகே உள்ள தெருக்களின் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு வராவண்ணம் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு வர ஆர்வமாக இருந்த நிலையில் தடைகள் அமைக்கப்பட்டிருந்ததை கண்டு பக்தர்களும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் சென்றனர். மாவட்டத்தில் விடுமுறையுடன் நடைபெறும் மிகப்பெரிய திருவிழா சுமார் 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்துள்ளது.
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு விழா நடந்த காட்சி.
கெங்கையம்மன் திருவிழா இந்த ஆண்டு குறைந்த அளவு பக்தர்களை கொண்டே நடைபெற்றது.
தற்போது கொரோனா பரவலால் தடை உத்தரவு அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் திருவிழாக்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.இதனால் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா தடைப்படும் நிலையிலிருந்தது இதுகுறித்து கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து திருவிழா நடத்த அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் குறைந்த அளவு கோவில் பணியாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கொண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்தார்.
இதனையடுத்து நள்ளிரவு சுமார் 1 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட அம்மன் சிரசு கோவிலின் உள்ளே வலம் வந்தது. இதைத் தொடர்ந்து சண்டாளச்சி அம்மன் உடலில் கெங்கை அம்மன் சிரசு பொருத்தப்பட்டது.
சிறிது நேரத்திற்கு பின்பு சண்டாளச்சி அம்மன் உடலில் இருந்து கெங்கை அம்மன் சிரசு பிரிக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் வைக்கப்பட்டது. சுமார் 1½ மணிநேரத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் முடிவு பெற்றது.
கோவில் அருகே உள்ள தெருக்களின் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு வராவண்ணம் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு வர ஆர்வமாக இருந்த நிலையில் தடைகள் அமைக்கப்பட்டிருந்ததை கண்டு பக்தர்களும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் சென்றனர். மாவட்டத்தில் விடுமுறையுடன் நடைபெறும் மிகப்பெரிய திருவிழா சுமார் 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்துள்ளது.
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு விழா நடந்த காட்சி.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து மாட்சியுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; அவரது ஆட்சிக்கு முடிவு இராது” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது.
“வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து வருவார்” (From heaven Jesus Christ will come to judge the living and the dead) என திருத்தூதர்களின் ஏற்கையின் 7ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து மாட்சியுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; அவரது ஆட்சிக்கு முடிவு இராது” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது.
மாட்சியில் வருவார்
படைப்பிற்கும் வரலாற்றிற்கும் ஆண்டவராகவும், திருச்சபைக்குத் தலைவராகவும் திகழ்கின்ற மாட்சிப்பெற்ற கிறிஸ்து, மறைபொருளாக இந்த மண்ணுலகில் இருக்கிறார். இங்கு அவரது ஆட்சி ஏற்கனவே விதைக்கப்பட்டுள்ளது. அதுவே, திருச்சபையில் தொடக்க நிலையில் உள்ளது. ஒருநாள் அவர் மாட்சியோடு திரும்பி வருவார்; ஆனால் எந்த நேரத்தில் வருவார் என நமக்குத் தெரியாது. இதன் காரணமாகவே, “ஆண்டவரே வாரும்” (திருவெளிப்பாடு 22:20) என இறைவேண்டல் செய்தவாறு நாம் விழிப்புடன் காத்திருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையிலும், இறுதித் தீர்ப்பிலும், கடவுளின் நிலையான வெற்றி வெளிப்படும். இவ்வாறு இறையாட்சி நிலைநாட்டப்படும்.
தீர்ப்பு வழங்குவார்
நிலையில்லா இவ்வுலகு முடிவுறும் வேளையில், கிறிஸ்துவின் மாட்சிமிகு வருகை நிகழும். அந்நாளில் எக்காளம் முழங்க இறந்தோர் அனைவரும் உயிர்பெற்று எழுவர். வாழ்வோரும் அவர்களோடு கிறிஸ்துவின் முன்பு ஒன்றுகூட்டப்படுவர். அனைவருக்கும் மீட்பு அளிக்க வந்த கிறிஸ்து, உலக மீட்பராகத் தாம் பெற்றுக்கொண்ட அதிகாரத்தோடு தீர்ப்பு வழங்குவார். மறைவான எண்ணங்களையும், கடவுளோடும் பிறரோடும் நமக்குள்ள உறவுநிலைகள் அனைத்தையும் வெளிப்படுத்துவார். ஒவ்வொருவரும் தத்தம் செயல்களுக்கு ஏற்ப நிலை வாழ்வையோ தண்டனைத் தீர்ப்பையோ முடிவில்லாக் காலத்திற்கும் பெற்றுக்கொள்வர். இவ்வாறு “கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவு” (எபேசியர் 4:13) வரும்போது, “கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்” (1கொரிந்தியர் 15:28).
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கான சாமி தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
கோவில் செயல் அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது:-
சித்தூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கோவில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில். கோவிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் ஊரடங்கால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
மாநில அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை அனைத்துக் கடைகளும் இயங்கும். அதற்குமேல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில அறநிலையத்துறை காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் தினமும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு மேல் பக்தர்களை யாரும் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை காணிப்பாக்கம் கோவில் நிர்வாகம் கடைப்பிடித்து வந்த நிலையில் நேற்று மாநில அறநிலையத்துறை காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) முதல் காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
எனவே கோவில் நிர்வாகம் தெரிவித்த நேரப்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வர வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு தினமும் நடக்கும் கல்யாண உற்சவம், திவ்ய தரிசனம், அபிஷேகம் ஆகிய பூஜைகள் தொடர்ந்து நடக்கும். பக்தர்கள் கல்யாண உற்சவம், அபிஷேகம் ஆகிய பூஜைகளில் பங்கேற்க வேண்டுமென்றால் முன் கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதற்கான இணையதளத்தை காணிப்பாக்கம் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பக்தர்கள் பல்வேறு பூஜைகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பூஜையில் பங்கேற்க வேண்டும். அதேபோல் பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கை செலுத்த வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் (இ.உண்டியல்) உண்டியல் காணிக்கை செலுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சித்தூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கோவில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில். கோவிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் ஊரடங்கால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
மாநில அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை அனைத்துக் கடைகளும் இயங்கும். அதற்குமேல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில அறநிலையத்துறை காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் தினமும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு மேல் பக்தர்களை யாரும் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை காணிப்பாக்கம் கோவில் நிர்வாகம் கடைப்பிடித்து வந்த நிலையில் நேற்று மாநில அறநிலையத்துறை காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) முதல் காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
எனவே கோவில் நிர்வாகம் தெரிவித்த நேரப்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வர வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு தினமும் நடக்கும் கல்யாண உற்சவம், திவ்ய தரிசனம், அபிஷேகம் ஆகிய பூஜைகள் தொடர்ந்து நடக்கும். பக்தர்கள் கல்யாண உற்சவம், அபிஷேகம் ஆகிய பூஜைகளில் பங்கேற்க வேண்டுமென்றால் முன் கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதற்கான இணையதளத்தை காணிப்பாக்கம் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பக்தர்கள் பல்வேறு பூஜைகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பூஜையில் பங்கேற்க வேண்டும். அதேபோல் பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கை செலுத்த வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் (இ.உண்டியல்) உண்டியல் காணிக்கை செலுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருமணம் கை கூடாமல் அவதிப்படுபவர்கள், நினைத்தது நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் நிறைவேறும்.
* திருவாரூர் அருகில் மணக்கால் அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது, ஸ்ரீதேவி - பூதேவி உடனாய வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில். இந்த ஆலயத்தில் யோக நரசிம்மருக்கு தனிச்சன்னிதி உள்ளது. இவருக்கு தொடர்ந்து 6 வாரங்கள், தேங்காய் உடைத்து, அதில் நெய் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நிறைவேறும்.
* வேலூர் மாவட்டத்தில் உள்ளது காவேரிப்பாக்கம். இதன் அருகே உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் திருமணம் ஆகாத ஆண்கள், 116 விரலி மஞ்சளால் கோர்க்கப்பட்ட மாலை, 5 தேங்காய், ஒரு கிலோ நெய், ஒரு கிலோ நல்லெண்ணெய் சமர்ப்பித்து அர்ச்சனை செய்தால் திருமணம் கை கூடும். பெண்கள், ரங்கநாயகி தாயாருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் மணப்பேறு வாய்க்கும். குழந்தை வரம் வேண்டுபவர்கள், தாயாருக்கு பால் அபிஷேகம் செய்வதோடு, வாசல்படியில் நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டு வணங்க வேண்டும்.
* வேலூர் மாவட்டத்தில் உள்ளது காவேரிப்பாக்கம். இதன் அருகே உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் திருமணம் ஆகாத ஆண்கள், 116 விரலி மஞ்சளால் கோர்க்கப்பட்ட மாலை, 5 தேங்காய், ஒரு கிலோ நெய், ஒரு கிலோ நல்லெண்ணெய் சமர்ப்பித்து அர்ச்சனை செய்தால் திருமணம் கை கூடும். பெண்கள், ரங்கநாயகி தாயாருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் மணப்பேறு வாய்க்கும். குழந்தை வரம் வேண்டுபவர்கள், தாயாருக்கு பால் அபிஷேகம் செய்வதோடு, வாசல்படியில் நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டு வணங்க வேண்டும்.






