என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் ஆடி பரணியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இன்று ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படும் நிலையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆடி மாதம் என்பதால் முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முதல் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உருவாவதால் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று பரணி நட்சத்திரத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் நடந்தது.
பரணி மற்றும் மறுநாள் வரும் கிருத்திகை நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் காவடி சுமந்து சென்று கோவிலில் செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க சாமி தரிசனம் செய்யவும், காவடி எடுத்து வரவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் பக்தர்களின் வருகையை தடுக்க கோவிலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இந்த நிலையில் நேற்று பரணி நட்சத்திரத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் நடந்தது.
பரணி மற்றும் மறுநாள் வரும் கிருத்திகை நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் காவடி சுமந்து சென்று கோவிலில் செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க சாமி தரிசனம் செய்யவும், காவடி எடுத்து வரவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் பக்தர்களின் வருகையை தடுக்க கோவிலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் புண்ணிய தலமாக கொடுமுடி திருத்தலம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயமாக இது விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம். அதுபோல இங்கு மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால், இது ‘கொடுமுடி’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை ‘மகுடேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது.
ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும், தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க மேரு மலையை கையாண்டனர். ஆதிசேஷன் மேரு மலையை சுற்றி வளைத்துக் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை விடுவிக்க முயற்சித்தார். இந்த போட்டியில் மேரு மலை சிறு சிறு துண்டுகளாகி, நாலா பக்கமும் சிதறியது. அவை ஒவ்வொன்றும் சிவலிங்கமாக மாறியது. அப்படி உருவானதே கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் என்று சொல்லப்படுகிறது.
பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் ‘பிரம்மபுரி’ என்றும், திருமால் பூஜித்ததால் ‘அரிகரபுரம்’ என்றும், கருடன் இத்தல இறைவனை பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் ‘அமுதபுரி’ என்றும் இந்த தலத்துக்கு பல பெயர்கள் உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட இந்த ஆலயம், தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில், 210-வது திருத்தலமாகத் திகழ்கிறது.
கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது. கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிலர் இந்த மரம் அதையும் விட பழமையானது, இதன் வயதை கணக்கிட முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் மூன்று முகம் கொண்ட பிரம்மதேவனை தரிசனம் செய்யலாம். வன்னி மரத்தின் அடியில் இவர் தரிசனம் தருகிறார். ஆதிசேஷனால் உருவான ஆலயம் என்பதால், இங்கு நாகர் வழிபாடு மிகவும் விசேஷம். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தற்போதும் நடைபெற்று வருகிறது. வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் இதுபோன்று செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிககப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். குழந்தைப் பேறு கிடைக்கவும் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். நாக தோஷம் இருப்பவர்கள், வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
இந்தக் கோவிலில் வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரமும், குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஈரோட்டில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கொடுமுடி உள்ளது. கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையம் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக உள்ளது.
ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும், தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க மேரு மலையை கையாண்டனர். ஆதிசேஷன் மேரு மலையை சுற்றி வளைத்துக் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை விடுவிக்க முயற்சித்தார். இந்த போட்டியில் மேரு மலை சிறு சிறு துண்டுகளாகி, நாலா பக்கமும் சிதறியது. அவை ஒவ்வொன்றும் சிவலிங்கமாக மாறியது. அப்படி உருவானதே கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் என்று சொல்லப்படுகிறது.
பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் ‘பிரம்மபுரி’ என்றும், திருமால் பூஜித்ததால் ‘அரிகரபுரம்’ என்றும், கருடன் இத்தல இறைவனை பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் ‘அமுதபுரி’ என்றும் இந்த தலத்துக்கு பல பெயர்கள் உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட இந்த ஆலயம், தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில், 210-வது திருத்தலமாகத் திகழ்கிறது.
கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது. கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிலர் இந்த மரம் அதையும் விட பழமையானது, இதன் வயதை கணக்கிட முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் மூன்று முகம் கொண்ட பிரம்மதேவனை தரிசனம் செய்யலாம். வன்னி மரத்தின் அடியில் இவர் தரிசனம் தருகிறார். ஆதிசேஷனால் உருவான ஆலயம் என்பதால், இங்கு நாகர் வழிபாடு மிகவும் விசேஷம். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தற்போதும் நடைபெற்று வருகிறது. வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் இதுபோன்று செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிககப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். குழந்தைப் பேறு கிடைக்கவும் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். நாக தோஷம் இருப்பவர்கள், வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
இந்தக் கோவிலில் வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரமும், குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஈரோட்டில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கொடுமுடி உள்ளது. கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையம் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக உள்ளது.
2 நாட்கள் தரிசனத்துக்கு தடை விதித்திருப்பதன் எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். காவடி ஆட்டம் ஆடி பக்தர்கள் உற்சாகம் அடைந்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதேபோல் மாத கிருத்திகை, வார விடுமுறை உள்ளிட்ட நாட்களிலும் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதும்.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஆடி மாத கிருத்திகையான இன்றும் (திங்கட்கிழமை), ஆடிப்பெருக்கான நாளையும் (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி மேற்கண்ட 2 நாட்களிலும் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதாலும், 2 நாட்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கபட்டிருப்பதாலும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை முதலே பழனி அடிவாரத்தில் உள்ள கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் மலைக்கோவிலுக்கு செல்லும் வழிகளான குடமுழுக்கு நினைவரங்கம், படிப்பாதை, மின்இழுவை ரெயில்நிலையம், பாதவிநாயகர் கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் தரிசன வழிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த பக்தர் குழுவினர் காவடி எடுத்து பழனி கிரிவீதியில் ஆடி வந்தனர். இது பக்தர்கள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பக்தர்கள் பலர் முடிகாணிக்கை செலுத்தினர்.
இதற்கிடையே பக்தர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கவும், கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பழனி சுகாதாரத்துறை சார்பில் பஸ்நிலையம், கோவில் நுழைவு வாயில் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஆடி மாத கிருத்திகையான இன்றும் (திங்கட்கிழமை), ஆடிப்பெருக்கான நாளையும் (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி மேற்கண்ட 2 நாட்களிலும் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதாலும், 2 நாட்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கபட்டிருப்பதாலும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை முதலே பழனி அடிவாரத்தில் உள்ள கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் மலைக்கோவிலுக்கு செல்லும் வழிகளான குடமுழுக்கு நினைவரங்கம், படிப்பாதை, மின்இழுவை ரெயில்நிலையம், பாதவிநாயகர் கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் தரிசன வழிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த பக்தர் குழுவினர் காவடி எடுத்து பழனி கிரிவீதியில் ஆடி வந்தனர். இது பக்தர்கள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பக்தர்கள் பலர் முடிகாணிக்கை செலுத்தினர்.
இதற்கிடையே பக்தர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கவும், கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பழனி சுகாதாரத்துறை சார்பில் பஸ்நிலையம், கோவில் நுழைவு வாயில் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
இன்று ஆடிக்கிருத்திகையும், நாளை ஆடிப்பெருக்கும் கொண்டாடப்படுவதாலும், வார விடுமுறை தினம் என்பதாலும், திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-ம் அலை குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டதால், கோவில் கடற்கரை, நாழிக்கிணறு பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
பல மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருந்தது. வார விடுமுறை நாட்களிலும், செவ்வாய், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் 3-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் வழிபட பக்தர்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் நேற்று முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரையிலும், வருகிற 8-ந்தேதியும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இன்று ஆடிக்கிருத்திகையும், நாளை ஆடிப்பெருக்கும் கொண்டாடப்படுவதாலும், வார விடுமுறை தினம் என்பதாலும், திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெரும்பாலானவர்கள் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், பல்வேறு வாகனங்களிலும் கோவிலுக்கு வந்தனர்.
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக வந்த பக்தர்களை அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் உள்ள மெயின் ஆர்ச் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பக்தர்கள், கோபுரத்தை தரிசனம் செய்வதற்காக மட்டுமேனும் அனுமதிக்குமாறு கூறினர். இதற்கு போலீசார் அனுமதிக்காததால், பக்தர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சில பக்தர்கள், கோவில் டோல்கேட் அருகில் நின்று கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், திருச்செந்தூர் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடியது. கோவிலுக்கு பக்தர்கள் செல்லாதவாறு ஆங்காங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
பல மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருந்தது. வார விடுமுறை நாட்களிலும், செவ்வாய், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் 3-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் வழிபட பக்தர்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் நேற்று முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரையிலும், வருகிற 8-ந்தேதியும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இன்று ஆடிக்கிருத்திகையும், நாளை ஆடிப்பெருக்கும் கொண்டாடப்படுவதாலும், வார விடுமுறை தினம் என்பதாலும், திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெரும்பாலானவர்கள் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், பல்வேறு வாகனங்களிலும் கோவிலுக்கு வந்தனர்.
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக வந்த பக்தர்களை அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் உள்ள மெயின் ஆர்ச் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பக்தர்கள், கோபுரத்தை தரிசனம் செய்வதற்காக மட்டுமேனும் அனுமதிக்குமாறு கூறினர். இதற்கு போலீசார் அனுமதிக்காததால், பக்தர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சில பக்தர்கள், கோவில் டோல்கேட் அருகில் நின்று கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், திருச்செந்தூர் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடியது. கோவிலுக்கு பக்தர்கள் செல்லாதவாறு ஆங்காங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல அழகோடும் பொலிவோடும் காணப்படுவர். அவர்கள் தங்கள் கிருத்திகை தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் மேலும் அழகும் அறிவும் பெறுவர்.
இன்று கிருத்திகை நட்சத்திரம். பொதுவாக, கிருத்திகை நட்சத்திரம் என்பதே முருகன் வழிபாட்டுக்கு உகந்த நட்சத்திரம் என்பார்கள். அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்புக்குரியது.
கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களே கிருத்திகை நட்சத்திரங்களாகத் திகழ்ந்து ஒளிவீசுகிறார்கள். முருகப்பெருமான் தன் தாயினும் மேலாகப் போற்றும் கார்த்திகைப் பெண்களின் தினத்தில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் முருகன் மிகவும் மகிழ்வான். குறிப்பாக, ஆறுமுகனாக இன்று விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.
மேலும் கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம். சூரியனே ஆரோக்கியத்துக்கு அதிபதி. எனவே, கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருக வழிபாடு செய்வதன் மூலம் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். பொதுவாகவே, கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல அழகோடும் பொலிவோடும் காணப்படுவர். அவர்கள் தங்கள் கிருத்திகை தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் மேலும் அழகும் அறிவும் பெறுவர். அதிலும் குறிப்பாக, ஆடிக்கிருத்திகை அன்று முருகனை வழிபட்டால் அவை மேம்படும்.
வழக்கமாக இந்த நாளில் முருகப்பெருமானின் ஆலயங்கள் களைகட்டும். பால்குடங்களும் காவடிகளும் நிறைந்து காணப்படும். ஆனால், இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை அத்தகைய கொண்டாட்டங்கள் இன்றி அவரவர் வீடுகளில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடாக மாறியிருக்கிறது. இந்த நாளில் விரதம் இருந்து வீட்டில் முருகனை வழிபாடு செய்ய வேண்டும்.
எனவே, இந்த நாள் முழுவதும் முருகப்பெருமானின் சடாட்சர மந்திரமான, `சரவணபவ’ என்னும் மந்திரத்தை ஓதுவோம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் வகுப்பு, வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றை மேற்கொள்வோம். இந்த நாளில் முருகப்பெருமானுக்கு அவல் பாயாசம் செய்து நிவேதனம் செய்வது மிகவும் விசேஷம். இதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சச்சரவுகள் குறைந்து அமைதியும் அன்பும் பெருகும் என்பது ஐதிகம்.
கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களே கிருத்திகை நட்சத்திரங்களாகத் திகழ்ந்து ஒளிவீசுகிறார்கள். முருகப்பெருமான் தன் தாயினும் மேலாகப் போற்றும் கார்த்திகைப் பெண்களின் தினத்தில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் முருகன் மிகவும் மகிழ்வான். குறிப்பாக, ஆறுமுகனாக இன்று விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.
மேலும் கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம். சூரியனே ஆரோக்கியத்துக்கு அதிபதி. எனவே, கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருக வழிபாடு செய்வதன் மூலம் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். பொதுவாகவே, கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல அழகோடும் பொலிவோடும் காணப்படுவர். அவர்கள் தங்கள் கிருத்திகை தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் மேலும் அழகும் அறிவும் பெறுவர். அதிலும் குறிப்பாக, ஆடிக்கிருத்திகை அன்று முருகனை வழிபட்டால் அவை மேம்படும்.
வழக்கமாக இந்த நாளில் முருகப்பெருமானின் ஆலயங்கள் களைகட்டும். பால்குடங்களும் காவடிகளும் நிறைந்து காணப்படும். ஆனால், இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை அத்தகைய கொண்டாட்டங்கள் இன்றி அவரவர் வீடுகளில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடாக மாறியிருக்கிறது. இந்த நாளில் விரதம் இருந்து வீட்டில் முருகனை வழிபாடு செய்ய வேண்டும்.
எனவே, இந்த நாள் முழுவதும் முருகப்பெருமானின் சடாட்சர மந்திரமான, `சரவணபவ’ என்னும் மந்திரத்தை ஓதுவோம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் வகுப்பு, வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றை மேற்கொள்வோம். இந்த நாளில் முருகப்பெருமானுக்கு அவல் பாயாசம் செய்து நிவேதனம் செய்வது மிகவும் விசேஷம். இதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சச்சரவுகள் குறைந்து அமைதியும் அன்பும் பெருகும் என்பது ஐதிகம்.
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதுமே பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்வார்கள். இன்று அந்த கோவிலிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
சென்னை:
கொரோனாபரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் முக்கியமான முருகன், அம்மன் கோவில்களில் தரிசனத்துக்கு தமிழக அரசு நேற்று தடை விதித்தது.
இதன்படி வடபழனி முருகன் கோவிலில் இன்று தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் தங்களது வேண்டுதல்களை கோவிலுக்கு வந்து பக்தர்கள் நிறைவேற்றினார்கள்.
பொங்கல் வைத்து எடுத்து வந்து கோவில் அருகில் முடி காணிக்கை செலுத்தினார்கள். இதேபோன்று கந்தகோட்டம் முருகன் கோவிலிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்ட போதிலும் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சூளை அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் பெண்கள் அதிகளவில் கூடி அம்மனை வழிபடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக அங்கு கூட்டம் கூடுவதை தடுக்க இன்று தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.


திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ஆண்டாள் குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புட்லூர் பூங்காவனத்தம்மன் கோவில் ஆகிய கோவில்களில் இன்று முதல் 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கோவிலுக்கு வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வயலூர் முருகன் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் இன்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதுமே பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்வார்கள். இன்று அந்த கோவிலிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பழனி முருகன் கோவிலிலும் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்கள் மற்றும் முருகன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் தமிழக அரசு நேற்று முக்கியமான அம்மன் கோவில்கள், முருகன் கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
ஆனால் இன்று காலையில் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களும் திடீரென மூடப்பட்டன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலுக்கு இன்று காலையில் வழக்கம் போல பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர். ஆனால் கோவில் திறக்கப்படாமல் மூடி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் திடீரென எதற்காக கோவிலை மூடி இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயம் ஆகியவை மூடப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் முன் அறிவிப்பு இன்றி இந்த 2 கோவில்களும் மூடப்பட்டது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாபரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் முக்கியமான முருகன், அம்மன் கோவில்களில் தரிசனத்துக்கு தமிழக அரசு நேற்று தடை விதித்தது.
இதன்படி வடபழனி முருகன் கோவிலில் இன்று தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் தங்களது வேண்டுதல்களை கோவிலுக்கு வந்து பக்தர்கள் நிறைவேற்றினார்கள்.
பொங்கல் வைத்து எடுத்து வந்து கோவில் அருகில் முடி காணிக்கை செலுத்தினார்கள். இதேபோன்று கந்தகோட்டம் முருகன் கோவிலிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்ட போதிலும் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சூளை அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் பெண்கள் அதிகளவில் கூடி அம்மனை வழிபடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக அங்கு கூட்டம் கூடுவதை தடுக்க இன்று தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
திருத்தணி முருகன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குமரக்கோட்டம், வல்லக்கோட்டை, குன்றத்தூர் முருகன் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இன்று அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவில்களில் வழக்கம் போல பூஜைகள் மட்டும் நடைபெற்றன.

இதேபோன்று திருப்போரூர் முருகன் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்படவில்லை.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கோவிலுக்கு வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வயலூர் முருகன் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் இன்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதுமே பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்வார்கள். இன்று அந்த கோவிலிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பழனி முருகன் கோவிலிலும் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்கள் மற்றும் முருகன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் தமிழக அரசு நேற்று முக்கியமான அம்மன் கோவில்கள், முருகன் கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
ஆனால் இன்று காலையில் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களும் திடீரென மூடப்பட்டன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலுக்கு இன்று காலையில் வழக்கம் போல பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர். ஆனால் கோவில் திறக்கப்படாமல் மூடி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் திடீரென எதற்காக கோவிலை மூடி இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயம் ஆகியவை மூடப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் முன் அறிவிப்பு இன்றி இந்த 2 கோவில்களும் மூடப்பட்டது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நாளை மறுநாள் (3-ந் தேதி) ஆடிப்பெருக்கு நாளாகும். அன்று நீர்நிலைகள் இருக்கும் பகுதிகளில் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்- பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை செய்ய உத்தரவிட்டுள்ளார். நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது.
இந்த ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்பாள் சன்னதியில் இன்று காலை 10 மணிக்குகொடியேற்றம் நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் சுவாமி கோவிலில் இருந்து அன்னை காந்திமதியம்மாள் தனது கோவிலுக்கு எழுந்தருளினார்.
கொடியேற்றத்தையொட்டி கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு கோபுர ஆரத்தி மற்றும் நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. முன்னதாக கோவில் உட்பிரகாரத்தில் கொடிபட்டம் வலம் வந்து பூஜைகள் நடைபெற்றது. மூலஸ்தானத்தில் அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வருகிற 4-ந்தேதி காலை அம்பாளுக்கு வளைகாப்பு வைபவமும், 10-ம் திருநாளன்று அம்பாளுக்கு ஆடிப்பூர முளைப்பாரி கட்டும் வைபவம் ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெறுகிறது.
தற்போது தமிழகத்தில் 3-வது அலை வராமல் தடுக்கும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தடை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை செய்ய உத்தரவிட்டுள்ளார். நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் கோவில்களில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் கட்டளைதாரர்கள் கட்டளைக்கு தேவையான அபிஷேக பொருட்கள், புஷ்ப வகைகள் மற்றும் பரிவட்டங்களை கோவில் அலுவலகத்தில் வழங்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி கோவிலின் நான்கு வாசல்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது.
இந்த ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்பாள் சன்னதியில் இன்று காலை 10 மணிக்குகொடியேற்றம் நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் சுவாமி கோவிலில் இருந்து அன்னை காந்திமதியம்மாள் தனது கோவிலுக்கு எழுந்தருளினார்.
கொடியேற்றத்தையொட்டி கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு கோபுர ஆரத்தி மற்றும் நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. முன்னதாக கோவில் உட்பிரகாரத்தில் கொடிபட்டம் வலம் வந்து பூஜைகள் நடைபெற்றது. மூலஸ்தானத்தில் அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வருகிற 4-ந்தேதி காலை அம்பாளுக்கு வளைகாப்பு வைபவமும், 10-ம் திருநாளன்று அம்பாளுக்கு ஆடிப்பூர முளைப்பாரி கட்டும் வைபவம் ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெறுகிறது.
தற்போது தமிழகத்தில் 3-வது அலை வராமல் தடுக்கும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தடை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை செய்ய உத்தரவிட்டுள்ளார். நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் கோவில்களில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் கட்டளைதாரர்கள் கட்டளைக்கு தேவையான அபிஷேக பொருட்கள், புஷ்ப வகைகள் மற்றும் பரிவட்டங்களை கோவில் அலுவலகத்தில் வழங்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி கோவிலின் நான்கு வாசல்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஆடி கிருத்திகையான நாளை முருகன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் காஞ்சிபுரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி ஜெயராமன் மேற்பார்வையில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆடி கிருத்திகையான நாளை முருகன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
கொரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், இளையனார்வேலூர் முருகன் கோவில் போன்ற கோவில்களில் அன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. அன்றைய தினம் வழக்கம்போல் ஆகம விதிகளின்படி கோவிலில் 3 கால பூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கோவில் செயல் அலுவலர்கள் பரந்தாமகண்ணன், சிந்துமதி, இளங்கோவன், அமுதா, கோவில் மேலாளர்கள் சுரேஷ், ரகு, மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆடி கிருத்திகையான நாளை முருகன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
கொரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், இளையனார்வேலூர் முருகன் கோவில் போன்ற கோவில்களில் அன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. அன்றைய தினம் வழக்கம்போல் ஆகம விதிகளின்படி கோவிலில் 3 கால பூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கோவில் செயல் அலுவலர்கள் பரந்தாமகண்ணன், சிந்துமதி, இளங்கோவன், அமுதா, கோவில் மேலாளர்கள் சுரேஷ், ரகு, மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு காவடி எடுத்து வரவும், தேர் திருவிழா நடத்தவும் தடைவிதித்து வேலூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வருகிற 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின்போது பக்தர்கள் காவடி எடுத்து வரவும், தெப்பத்திருவிழா நடத்தவும் தடைவிதித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், திருவிழா தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் சிவா வரவேற்றார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
கோவிலுக்கு காவடி எடுத்து வரவும், பொங்கல் வைப்பதற்கும், அலகு குத்தி பிரார்த்தனை செய்வதற்கும், அங்கப்பிரதட்சணம் செய்வதற்கும் மற்றும் இதர பிரார்த்தனைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்புடன் சாமி ஊர்வலம் செல்லவும், தெப்பத் திருவிழா நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
பக்தர்களை வரிசைப்படுத்தி ஒரு சமயத்தில் 20 நபர்களை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் பூ, தேங்காய், பழம் போன்றவற்றை விற்க தடை விதிக்கப்படுகிறது. கோவிலுக்குள் பிரார்த்தனைக்காக பக்தர்கள் அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி கிடையாது. இசைக் கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, பஜனை மற்றும் நாடகம் போன்றவற்றை நடத்துவதற்கும், பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்கும், பிரசாதம் வழங்குவதற்கும், குளங்களில் குளிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கூட்டத்தில் காட்பாடி தாசில்தார் சரண்யா மற்றும் காவல்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்து, மின்சாரம், தீயணைப்புத் துறை அதிகாரிகள், தெப்ப உற்சவ கமிட்டியினர் உள்ளிட்ட விழாக்குழுவினர், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மேலாளர் நித்யானந்தம் நன்றி கூறினார்.
இந்த ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வருகிற 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின்போது பக்தர்கள் காவடி எடுத்து வரவும், தெப்பத்திருவிழா நடத்தவும் தடைவிதித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், திருவிழா தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் சிவா வரவேற்றார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
கோவிலுக்கு காவடி எடுத்து வரவும், பொங்கல் வைப்பதற்கும், அலகு குத்தி பிரார்த்தனை செய்வதற்கும், அங்கப்பிரதட்சணம் செய்வதற்கும் மற்றும் இதர பிரார்த்தனைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்புடன் சாமி ஊர்வலம் செல்லவும், தெப்பத் திருவிழா நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
பக்தர்களை வரிசைப்படுத்தி ஒரு சமயத்தில் 20 நபர்களை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் பூ, தேங்காய், பழம் போன்றவற்றை விற்க தடை விதிக்கப்படுகிறது. கோவிலுக்குள் பிரார்த்தனைக்காக பக்தர்கள் அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி கிடையாது. இசைக் கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, பஜனை மற்றும் நாடகம் போன்றவற்றை நடத்துவதற்கும், பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்கும், பிரசாதம் வழங்குவதற்கும், குளங்களில் குளிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கூட்டத்தில் காட்பாடி தாசில்தார் சரண்யா மற்றும் காவல்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்து, மின்சாரம், தீயணைப்புத் துறை அதிகாரிகள், தெப்ப உற்சவ கமிட்டியினர் உள்ளிட்ட விழாக்குழுவினர், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மேலாளர் நித்யானந்தம் நன்றி கூறினார்.
உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்றொரு பழமொழி நம்மூரில் உண்டு. பொதுவாக இந்தப் பழமொழியை, தேக ஆரோக்கியத்துக்குத்தான் அதிக அளவில் உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள், மக்கள்.
ஆமாம், தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:
ஆமாம், தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது.இந்த விழா அரசின் வழிகாட்டுதலின் படி நடக்கிறது.
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை கொடியேற்ற உற்சவம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, அம்பாள் உள்புறப்பாடு ஆகியவை நடக்கிறது.
விழாவின் 10-வது நாளான 10-ந்தேதி காலை 8 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கோகிலாம்பிகை அம்மனுக்கு தீர்த்தவாரியும், சிறப்பு அபிஷேகமும், வளையல் சாத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 11-ந்தேதி மாலை 5.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், 6.30 மணிக்கு கோகிலாம்பிகைக்கு மகா தீபாராதனையும், பிரம்ம தீர்த்தத்தில் தெப்ப உற்சவமும், 12-ந்தேதி கோகிலாம்பிகை அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
இந்த விழா அரசின் வழிகாட்டுதலின் படி நடக்கிறது. பக்தர்கள் முக கவசத்துடன், சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
விழாவின் 10-வது நாளான 10-ந்தேதி காலை 8 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கோகிலாம்பிகை அம்மனுக்கு தீர்த்தவாரியும், சிறப்பு அபிஷேகமும், வளையல் சாத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 11-ந்தேதி மாலை 5.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், 6.30 மணிக்கு கோகிலாம்பிகைக்கு மகா தீபாராதனையும், பிரம்ம தீர்த்தத்தில் தெப்ப உற்சவமும், 12-ந்தேதி கோகிலாம்பிகை அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
இந்த விழா அரசின் வழிகாட்டுதலின் படி நடக்கிறது. பக்தர்கள் முக கவசத்துடன், சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 8-ந்தேதி பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இந்த கோவில் அமைந்திருந்தாலும் மலை ஏறும் அடிவாரமான தாணிப்பாறை பகுதி, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2015-ம் ஆண்டு முதல் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டுமே மலை ஏறி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 8-ந்தேதி பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.
கொரோனா முழுமையாக இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வருகிற 6, 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை என்று கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
எனவே மேற்கண்ட 4 நாட்களிலும் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என காவல் துறையினர், வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 6-ந்தேதி பிரதோஷ சிறப்பு பூஜைகளும், 8-ந் தேதி அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அமாவாசை சிறப்பு பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2015-ம் ஆண்டு முதல் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டுமே மலை ஏறி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 8-ந்தேதி பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.
கொரோனா முழுமையாக இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வருகிற 6, 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை என்று கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
எனவே மேற்கண்ட 4 நாட்களிலும் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என காவல் துறையினர், வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 6-ந்தேதி பிரதோஷ சிறப்பு பூஜைகளும், 8-ந் தேதி அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அமாவாசை சிறப்பு பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






