என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேசிகர் பிரம்மோற்சவம் 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். தற்போது கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் வருகிற 17-ந்தேதி வரை வெளியூர் பக்தர்கள் வர தடை விதித்ததோடு, 17-ந்தேதி வரை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு 4 மணியளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பெருமாள் மற்றும் தேசிகர் முன்னிலையில் தேசிகர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பிறகு தேசிகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கொரோனா வழிகாட்டுதல்படி உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழா குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேசிகர் பிரம்மோற்சவ விழாவின்போது வழக்கமாக காலை, மாலையில் சாமி வீதி உலா நடைபெறுவது இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில் உட்பிரகாரத்தில் பெருமாள், தாயார் மற்றும் தேசிகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். வருகிற 15-ந்தேதி ரத்தனங்கி சேவை மற்றும் 17-ந்தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது என்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து கையில் கிருமி நாசினி தெளித்து உடல் வெப்ப பரிசோதனை செய்து கடும் கட்டுப்பாட்டுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு 4 மணியளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பெருமாள் மற்றும் தேசிகர் முன்னிலையில் தேசிகர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பிறகு தேசிகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கொரோனா வழிகாட்டுதல்படி உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழா குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேசிகர் பிரம்மோற்சவ விழாவின்போது வழக்கமாக காலை, மாலையில் சாமி வீதி உலா நடைபெறுவது இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில் உட்பிரகாரத்தில் பெருமாள், தாயார் மற்றும் தேசிகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். வருகிற 15-ந்தேதி ரத்தனங்கி சேவை மற்றும் 17-ந்தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது என்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து கையில் கிருமி நாசினி தெளித்து உடல் வெப்ப பரிசோதனை செய்து கடும் கட்டுப்பாட்டுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை 10 நாட்கள் நவராத்திரி உற்சவம் நடக்கிறது. வருகிற 20-ந்தேதி சாந்தாபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நவராத்திரி விழா கட்டுப்பாட்டுகளுடன் நடந்து வருகிறது.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி தளர்வுகளுடன் நவராத்திரி திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் வருகிற 15-ந்தேதிவரை 10 நாட்கள் நவராத்திரி உற்சவம் நடக்கிறது. 10 நாட்களும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலிக்கிறார்.
இன்று (7-ந்தேதி) ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்திலும், நாளை ஊஞ்சல் வைபவமும், 9-ந்தேதி கோலாட்டம், 10-ந்தேதி திருநீல கண்டயாழப்பாணருக்கு தங்கபலகை கொடுத்தல், 11-ந்தேதி சங்கீத சீயாமளை நிகழ்ச்சியும் நடக்கிறது.
12-ந்தேதி பாண பத்திரருக்கு திருமுகம் கொடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி அம்மன் மகிஷாசுரமர்தினி வேடத்திலும், 14-ந்தேதி சிவபூஜையும் நடக்கிறது.
நவராத்திரி நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரைபோட்டு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
தொடர்ந்து கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை இரவு 8.30 மணி வரை நடக்கும். மேற்கண்ட நேரங்களில் அர்ச்சனைகள் நடத்தப்பட மாட்டாது.
கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்படும். கோவில் கொலு சாவடியில் திருவிளையாடல்களை விளக்கும் கொலு பொம்மைகள் வைக்கப்படும். கொலு பொம்மைகள் கொடுக்க விரும்புபவர்கள் உள்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் ஒப் படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நவராத்திரி நாட்களில் அரசு விதிமுறைப்படி நாளை (8-ந்தேதி), 9-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் பட மாட்டார்கள். மற்ற நாட்களில் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்யலாம்.
வருகிற 20-ந்தேதி (புதன் கிழமை), சாந்தாபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடக்கிறது.
மேற்கண்ட தகவலை இணை ஆணையர் செல்லத் துரை தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி தளர்வுகளுடன் நவராத்திரி திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் வருகிற 15-ந்தேதிவரை 10 நாட்கள் நவராத்திரி உற்சவம் நடக்கிறது. 10 நாட்களும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலிக்கிறார்.
இன்று (7-ந்தேதி) ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்திலும், நாளை ஊஞ்சல் வைபவமும், 9-ந்தேதி கோலாட்டம், 10-ந்தேதி திருநீல கண்டயாழப்பாணருக்கு தங்கபலகை கொடுத்தல், 11-ந்தேதி சங்கீத சீயாமளை நிகழ்ச்சியும் நடக்கிறது.
12-ந்தேதி பாண பத்திரருக்கு திருமுகம் கொடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி அம்மன் மகிஷாசுரமர்தினி வேடத்திலும், 14-ந்தேதி சிவபூஜையும் நடக்கிறது.
நவராத்திரி நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரைபோட்டு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
தொடர்ந்து கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை இரவு 8.30 மணி வரை நடக்கும். மேற்கண்ட நேரங்களில் அர்ச்சனைகள் நடத்தப்பட மாட்டாது.
கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்படும். கோவில் கொலு சாவடியில் திருவிளையாடல்களை விளக்கும் கொலு பொம்மைகள் வைக்கப்படும். கொலு பொம்மைகள் கொடுக்க விரும்புபவர்கள் உள்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் ஒப் படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நவராத்திரி நாட்களில் அரசு விதிமுறைப்படி நாளை (8-ந்தேதி), 9-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் பட மாட்டார்கள். மற்ற நாட்களில் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்யலாம்.
வருகிற 20-ந்தேதி (புதன் கிழமை), சாந்தாபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடக்கிறது.
மேற்கண்ட தகவலை இணை ஆணையர் செல்லத் துரை தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது. அம்புபோடும் நிகழ்ச்சியை உள்திருவிழாவாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று (7-ந்தேதி) தொடங்குகிறது. மேலும் வருகின்ற 15-ந்தேதி வரை தொடர்ந்து திருவிழா நடக்கிறது. இதையொட்டி கோவிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் சுவாமி புறப்பாடு செய்யக்கூடிய அனைத்து வாகனங்களும் கொலுபொம்மைகளாக வைக்கப்படும். மேலும் கோவர்தனம்பிக்கைக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்படுகிறது.
இன்று (வியாழக்கிழமை) ராஜராஜேஸ்வரி, நாளை (8-ந்தேதி) ஊஞ்சல், 9-ந்தேதி பட்டாபிஷேகம், 10-ந்தேதி திருக்கல்யாணம், 11-ந்தேதி தபசு காட்சி, 12-ந்தேதி மகிஷாசுரவர்த்தினி, 13-ந்தேதி சிவபூஜை, 14-ந்தேதி சரஸ்வதி பூஜை என்று தினமும் அலங்காரம் செய்யப்படுகிறது.
திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதற்காக பசுமலையில் உள்ள அம்புபோடும் மண்டபத்திற்கு ஆண்டுதோறும் தங்க குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் புறப்பட்டு செல்வது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கால் அம்பு போடும் மண்டபத்தில் அம்புபோடும் நிகழ்ச்சி தவிர்க்கப்படுகிறது.இதே சமயம் வருகின்ற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று அம்பு போடும் உற்சவம் கோவிலுக்குள் உள்ள திருவாச்சிமண்டபத்தில் உள்திருவிழாவாக நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இன்று (வியாழக்கிழமை) ராஜராஜேஸ்வரி, நாளை (8-ந்தேதி) ஊஞ்சல், 9-ந்தேதி பட்டாபிஷேகம், 10-ந்தேதி திருக்கல்யாணம், 11-ந்தேதி தபசு காட்சி, 12-ந்தேதி மகிஷாசுரவர்த்தினி, 13-ந்தேதி சிவபூஜை, 14-ந்தேதி சரஸ்வதி பூஜை என்று தினமும் அலங்காரம் செய்யப்படுகிறது.
திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதற்காக பசுமலையில் உள்ள அம்புபோடும் மண்டபத்திற்கு ஆண்டுதோறும் தங்க குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் புறப்பட்டு செல்வது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கால் அம்பு போடும் மண்டபத்தில் அம்புபோடும் நிகழ்ச்சி தவிர்க்கப்படுகிறது.இதே சமயம் வருகின்ற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று அம்பு போடும் உற்சவம் கோவிலுக்குள் உள்ள திருவாச்சிமண்டபத்தில் உள்திருவிழாவாக நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
திருவாடானை தாலுகா ஓரியூரில் புனித அருளானந்தரின் 42 அடி உயர சொரூபம் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக மிக எளிமையான முறையில் திறப்பு விழா நடத்தப்பட்டது.
திருவாடானை தாலுகா ஓரியூரில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அருளானந்தர் திருத்தலம் உள்ளது. இங்கு புனித அருளானந்தருக்கு 42 அடி உயரத்தில் புதிதாக சொரூபம் நிறுவப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக மிக எளிமையான முறையில் திறப்பு விழா நடத்தப்பட்டது.
இதனை மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி அர்ச்சித்து வைத்தார். தொழில் அதிபர் சேவியர் பிரிட்டோ புனித அருளானந்தர் சொரூபத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அனைத்து கட்டுமானப் பணி களையும் மேற்கொண்ட புனித அருளானந்தர் மேல் நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் பால் செங்கோல்ராஜ் கல்வெட்டை திறந்துவைத்தார். இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் முன்னிலையில் பங்கு இறைமக்களால் ஜெப வழிபாடு நடத்தப்பட்டது.
இதுகுறித்து அருட் தந்தையர்கள் கூறுகையில், புனித அருளானந்தர் சொரூபம் கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதுவரை புனித அருளானந்தருக்கு இதுபோன்று பெரிய அளவிலான சொரூபம் எங்கும் அமைக்கப்படவில்லை.
இங்கு முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 4-ந் தேதி புனித அருளானந்தர் மறை சாட்சியாக தன்னுயிர் ஈந்த நாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலியும், திருப்பவனியும், நற்கருணை ஆசீரும், அன்னதானமும் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
இதனை மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி அர்ச்சித்து வைத்தார். தொழில் அதிபர் சேவியர் பிரிட்டோ புனித அருளானந்தர் சொரூபத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அனைத்து கட்டுமானப் பணி களையும் மேற்கொண்ட புனித அருளானந்தர் மேல் நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் பால் செங்கோல்ராஜ் கல்வெட்டை திறந்துவைத்தார். இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் முன்னிலையில் பங்கு இறைமக்களால் ஜெப வழிபாடு நடத்தப்பட்டது.
இதுகுறித்து அருட் தந்தையர்கள் கூறுகையில், புனித அருளானந்தர் சொரூபம் கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதுவரை புனித அருளானந்தருக்கு இதுபோன்று பெரிய அளவிலான சொரூபம் எங்கும் அமைக்கப்படவில்லை.
இங்கு முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 4-ந் தேதி புனித அருளானந்தர் மறை சாட்சியாக தன்னுயிர் ஈந்த நாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலியும், திருப்பவனியும், நற்கருணை ஆசீரும், அன்னதானமும் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா பக்தர்கள் இன்றி மிகவும் எளிய முறையில் நடந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை, 9.30 மணிக்கு கொலுமண்டபத்திற்கு அம்மன் எழுந்தருளிய நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது. இதனையொட்டி மூலஸ்தானத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் இருந்து அம்மனை மேளதாளம் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கொலு மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். கொலு மண்டபத்தில் சாமி சிலைகள் மற்றும் பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழா பக்தர்கள் இன்றி மிகவும் எளிய முறையில் நடந்தது.
அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழா பக்தர்கள் இன்றி மிகவும் எளிய முறையில் நடந்தது.
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி நெல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலானது கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்பிரமணிய சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.
உத்தரவு பெற்ற அந்த பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூ போட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.
அடுத்த பொருள் வேறு ஒரு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை அந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் தற்போது திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, கொங்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி கே.எம்.மணிசிவராம் (வயது 47) என்ற பக்தரின் கனவில் உத்தரவான நிறைபடி நெல் நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மாதம் செப் 2-ந் தேதி முதல் வில், அம்பு ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.
சிவன்மலை ஆண்டவன் உத்தரவான பொருட்கள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்று விடும். தற்போது நிறைப்படி நெல் வைத்து பூஜிக்கப்படுவதால் நாடு முழுவதும் மழை பொழிவு அதிகரித்து, நெல் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும். எனினும் இதனுடைய தாக்கம் வரும் காலங்களில் தெரியும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
உத்தரவு பொருளை கொண்டு வந்து வைத்த பக்தர் கே.எம்.மணிசிவராம் கூறியதாவது:-
நான் பல முறை சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். சிவன்மலை சுப்பிரமணிய சாமி என்னுடைய கனவில் தோன்றி பலமுறை உணர்த்தியுள்ளார். இதுவரை நான் பசும்பால், உப்பு, அச்சு வெல்லம், பூ மாலை, இரும்பு சங்கிலி, மக்காச்சோளம் ஆகிய உத்தரவு பொருட்கள் என் கனவில் உத்தரவாகி பின்னர் இங்கு வந்து சாமியிடம் பூ கேட்டு உத்தரவு பொருள் வைக்கப்பட்டது.
தற்போது நான் 7-வது முறையாக உத்தரவு பொருளான நிறைபடி நெல் கொண்டு வந்து சாமியிடம் பூ போட்டு கேட்டு உத்தரவு பெட்டியில் வைத்துள்ளேன். சென்ற முறை மக்காச்சோளம் கொண்டு வந்து வைத்தேன். மக்காச்சோளத்தின் விலை ஏறியது. அதுபோலவே நெல்லின் விலையும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். விலை ஏற்றத்திற்கு வாய்ப்புள்ளது. மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்கும். எல்லோரும் நலமுடன் வாழ்வார்கள்.
இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரவு பெற்ற அந்த பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூ போட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.
அடுத்த பொருள் வேறு ஒரு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை அந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் தற்போது திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, கொங்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி கே.எம்.மணிசிவராம் (வயது 47) என்ற பக்தரின் கனவில் உத்தரவான நிறைபடி நெல் நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மாதம் செப் 2-ந் தேதி முதல் வில், அம்பு ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.
சிவன்மலை ஆண்டவன் உத்தரவான பொருட்கள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்று விடும். தற்போது நிறைப்படி நெல் வைத்து பூஜிக்கப்படுவதால் நாடு முழுவதும் மழை பொழிவு அதிகரித்து, நெல் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும். எனினும் இதனுடைய தாக்கம் வரும் காலங்களில் தெரியும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
உத்தரவு பொருளை கொண்டு வந்து வைத்த பக்தர் கே.எம்.மணிசிவராம் கூறியதாவது:-
நான் பல முறை சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். சிவன்மலை சுப்பிரமணிய சாமி என்னுடைய கனவில் தோன்றி பலமுறை உணர்த்தியுள்ளார். இதுவரை நான் பசும்பால், உப்பு, அச்சு வெல்லம், பூ மாலை, இரும்பு சங்கிலி, மக்காச்சோளம் ஆகிய உத்தரவு பொருட்கள் என் கனவில் உத்தரவாகி பின்னர் இங்கு வந்து சாமியிடம் பூ கேட்டு உத்தரவு பொருள் வைக்கப்பட்டது.
தற்போது நான் 7-வது முறையாக உத்தரவு பொருளான நிறைபடி நெல் கொண்டு வந்து சாமியிடம் பூ போட்டு கேட்டு உத்தரவு பெட்டியில் வைத்துள்ளேன். சென்ற முறை மக்காச்சோளம் கொண்டு வந்து வைத்தேன். மக்காச்சோளத்தின் விலை ஏறியது. அதுபோலவே நெல்லின் விலையும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். விலை ஏற்றத்திற்கு வாய்ப்புள்ளது. மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்கும். எல்லோரும் நலமுடன் வாழ்வார்கள்.
இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) நவராத்திரி விழா தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.இந்த விழா காரணமாக அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) நவராத்திரி விழா தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழா தனிமையில் நடத்தப்படுகிறது.
விழாவையொட்டி தினமும் மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை கோவிலின் கிருஷ்ணசாமி முகமண்டபத்தில் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் மற்றும் பிற சுகந்த திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதேபோல், இரவு 7 மணி முதல் 8 மணி வரை கோவில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. 15-ந் தேதி உற்சவரை கஜ வாகனத்தில் வைத்து ஆஸ்தானம் செய்யப்படுகிறது. இந்த விழா காரணமாக அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழாவையொட்டி தினமும் மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை கோவிலின் கிருஷ்ணசாமி முகமண்டபத்தில் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் மற்றும் பிற சுகந்த திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதேபோல், இரவு 7 மணி முதல் 8 மணி வரை கோவில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. 15-ந் தேதி உற்சவரை கஜ வாகனத்தில் வைத்து ஆஸ்தானம் செய்யப்படுகிறது. இந்த விழா காரணமாக அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும், விரதம் இருந்து அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும்.
நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும்.
அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். அண்டம் என்றால் உலகம். சரம் என்றால் அசைகின்ற பொருட்கள். அசரம் என்றால் அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ!
அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். அண்டம் என்றால் உலகம். சரம் என்றால் அசைகின்ற பொருட்கள். அசரம் என்றால் அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று மாலை சேனாதிபதி உற்சவமும், அங்குரார்ப்பணமும் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பல வண்ண மலர்களால் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதில் தங்கப் பலிபீடம், கொடிமரம் ஆகியவை பிரத்யேக மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சேனாதிபதி உற்சவமும், அங்குரார்ப்பணமும் நடந்தது. கங்கணப்பட்டரும், பிரதான அர்ச்சகர்களும் புற்று மண் எடுத்து வந்து சிறப்புப்பூஜைகள் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவில் முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன்ரெட்டி பங்கேற்று மூலவருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார். மேலும் திருப்பதியில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதையொட்டி மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் எம்.ஹரிநாராயணன், திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கட அப்பலாநாயுடு மற்றும் தேவஸ்தான, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும் இன்று (வியாழக்கிழமை) அலிபிரியில் இருந்து திருமலை வரை சீரமைக்கப்பட்ட நடைபாதையை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தொடங்கி வைக்கிறார்.
வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பல வண்ண மலர்களால் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதில் தங்கப் பலிபீடம், கொடிமரம் ஆகியவை பிரத்யேக மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சேனாதிபதி உற்சவமும், அங்குரார்ப்பணமும் நடந்தது. கங்கணப்பட்டரும், பிரதான அர்ச்சகர்களும் புற்று மண் எடுத்து வந்து சிறப்புப்பூஜைகள் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவில் முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன்ரெட்டி பங்கேற்று மூலவருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார். மேலும் திருப்பதியில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதையொட்டி மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் எம்.ஹரிநாராயணன், திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கட அப்பலாநாயுடு மற்றும் தேவஸ்தான, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும் இன்று (வியாழக்கிழமை) அலிபிரியில் இருந்து திருமலை வரை சீரமைக்கப்பட்ட நடைபாதையை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தொடங்கி வைக்கிறார்.
மகாளய அமாவாசையான நேற்று பக்தர்களுக்கு தடையால் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை வெறிச்சோடியது. அதே நேரத்தில் அதன் அருகே உள்ள சங்குமால் கடலில் ஏராளமானோர் நீராடினார்கள்.
ராமேசுவரம் கோவிலுக்கு ஆடி, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து குவிவது வழக்கம். அங்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்து, ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான புரட்டாசி மகாளய அமாவாசை நேற்று வந்தது. இதையொட்டி கொரோனா பரவல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் நேற்று முன்தினமும், நேற்றும் என 2 நாட்களாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடவும், திதி, தர்ப்பண பூஜை செய்யவும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
இதனால் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியானது பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அக்னி தீர்த்த கடல் பகுதியில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இருந்தாலும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் நேற்று வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரத்தில் புனித நீராட வந்திருந்ததனர். அவ்வாறு வந்த பக்தர்கள் அக்னிதீர்த்த கடல் பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் உள்ள சங்குமால் கடல் பகுதியில் புனித நீராடிவிட்டு கோவில் வாசல் பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
கோவிலுக்குள் பக்தர்கள் செல்லவும் தடை இருந்ததால் வேண்டுதல்களை கோவில் வாசல்களிேலயே பக்தர்கள் நிறைவேற்றினர். குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடனாக பெண்கள் பலர், கிழக்கு வாசல் பகுதியில் உள்ள கம்பிகளில் தொட்டில்களை கட்டி தொங்க விட்டு இருந்தனர்.
இந்த ஆண்டுக்கான புரட்டாசி மகாளய அமாவாசை நேற்று வந்தது. இதையொட்டி கொரோனா பரவல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் நேற்று முன்தினமும், நேற்றும் என 2 நாட்களாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடவும், திதி, தர்ப்பண பூஜை செய்யவும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
இதனால் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியானது பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அக்னி தீர்த்த கடல் பகுதியில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இருந்தாலும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் நேற்று வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரத்தில் புனித நீராட வந்திருந்ததனர். அவ்வாறு வந்த பக்தர்கள் அக்னிதீர்த்த கடல் பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் உள்ள சங்குமால் கடல் பகுதியில் புனித நீராடிவிட்டு கோவில் வாசல் பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
கோவிலுக்குள் பக்தர்கள் செல்லவும் தடை இருந்ததால் வேண்டுதல்களை கோவில் வாசல்களிேலயே பக்தர்கள் நிறைவேற்றினர். குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடனாக பெண்கள் பலர், கிழக்கு வாசல் பகுதியில் உள்ள கம்பிகளில் தொட்டில்களை கட்டி தொங்க விட்டு இருந்தனர்.
இனி வரும் 9 நாட்கள், அதனைத்தொடர்ந்து விஜயதசமி வழிபாடு என அடுத்த 10 நாட்களும் வீடுகளில் விரதம், கொலு வழிபாடு என்று பக்தி பெருக்கெடுத்து ஓட இருக்கிறது.
சென்னை :
இந்து பாரம்பரியத்தின் பண்டிகைகளில், நவராத்திரி திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிஷாசுரனுடன் 9 நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமியன்று வெற்றி பெற்றார். இந்த ஐதீகத்தின்படி, புரட்டாசி மாதம் 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.
இந்த நாட்களில் வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களையும் சுத்தம் செய்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்துவார்கள்.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக, 9 நாட்களிலும் கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும்.
தினமும் காலையும், மாலையும் இந்த கொலுவின் முன்பு கோலமிட்டு, விளக்கேற்றி, மலர்கள், படையலிட்டு வழிபாடு நடைபெறும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடையில் உள்ள 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொள்வோருக்கு விரும்பியது ஈடேறும் என்பதும், முப்பெரும் செல்வங்களான கல்வி, செல்வம், வீரத்தை அடைவார்கள் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.
நவராத்திரி திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இனி வரும் 9 நாட்கள், அதனைத்தொடர்ந்து விஜயதசமி வழிபாடு என அடுத்த 10 நாட்களும் வீடுகளில் விரதம், கொலு வழிபாடு என்று பக்தி பெருக்கெடுத்து ஓட இருக்கிறது.
இந்து பாரம்பரியத்தின் பண்டிகைகளில், நவராத்திரி திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிஷாசுரனுடன் 9 நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமியன்று வெற்றி பெற்றார். இந்த ஐதீகத்தின்படி, புரட்டாசி மாதம் 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.
இந்த நாட்களில் வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களையும் சுத்தம் செய்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்துவார்கள்.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக, 9 நாட்களிலும் கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும்.
தினமும் காலையும், மாலையும் இந்த கொலுவின் முன்பு கோலமிட்டு, விளக்கேற்றி, மலர்கள், படையலிட்டு வழிபாடு நடைபெறும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடையில் உள்ள 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொள்வோருக்கு விரும்பியது ஈடேறும் என்பதும், முப்பெரும் செல்வங்களான கல்வி, செல்வம், வீரத்தை அடைவார்கள் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.
நவராத்திரி திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இனி வரும் 9 நாட்கள், அதனைத்தொடர்ந்து விஜயதசமி வழிபாடு என அடுத்த 10 நாட்களும் வீடுகளில் விரதம், கொலு வழிபாடு என்று பக்தி பெருக்கெடுத்து ஓட இருக்கிறது.
இதையும் படிக்கலாம்...நவராத்திரி முதல் நாள்: விரதம் இருந்து வழிபடும் முறை
சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து, வீட்டில் தங்களால் முடிந்த அளவில் கொலுப் படிகள் அமைத்து அலங்கரித்து வழிபட வேண்டும். மேலும் பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்கள் மனமும், வயிறும் நிறையும் வகையில் செய்ய வேண்டும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும், விரதம் இருந்து அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும். துர்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும், சரஸ்வதி அஷ்டோத்திரமும் படித்து வணங்க வேண்டும். சிறுவயது பெண் பிள்ளைகள், கன்னிப்பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களை அம்மன் வடிவமாக ஆராதிக்க வேண்டும். சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து, வீட்டில் தங்களால் முடிந்த அளவில் கொலுப் படிகள் அமைத்து அலங்கரித்து வழிபட வேண்டும். மேலும் பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்கள் மனமும், வயிறும் நிறையும் வகையில் செய்ய வேண்டும். இதன் மூலம் அம்பிகையின் அருளை நாமும் பெறலாம்.
நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.
அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். அண்டம் என்றால் உலகம். சரம் என்றால் அசைகின்ற பொருட்கள். அசரம் என்றால் அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
இன்றைய நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்
நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.
அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். அண்டம் என்றால் உலகம். சரம் என்றால் அசைகின்ற பொருட்கள். அசரம் என்றால் அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
இன்றைய நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்
பழங்கள் : வாழைப்பழம்
கோலங்கள் : அரிசி மாவு






