search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kolu"

    • கொலு படிகளை ஒற்றைப்படையில் தான் வைக்க வேண்டும்.
    • கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது.

    நவராத்திரி என்றால் கொலு பொம்மை தான் முதலில் நமது நினைவிற்கு வரும். கொலுப் படிகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் வைக்க வேண்டும். எனவே கொலு படிகள் அமைக்கும் போது 3 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். கொலு படிகள் அமைக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும்.

    கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது. மேலே உள்ள படியில் இறைவனின் பொம்மைகளை வைப்பார்கள். ஆதற்கு கீழே ரிஷிகள் முனிகள் சித்தர்கள் போன்ற பொம்மைகள், அதற்கு கீழே மனிதர்கள், பின் விலங்குகள்,பறவைகள், போன்றவற்றை வைப்பார்கள். அதாவது கொலு படிகளில் கீழிருந்து ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, ஐந்தறிவு, ஆறறிவு, ரிஷிகள், தெய்வங்கள் என்ற வரிசையில் பொம்மைகளை அடுக்கி வைத்து கொலுப் படிகளின் நடுவில் கலசம் வைப்பார்கள்.

    நவராத்திரி கொலுப் படியில் இருக்கும் கலசத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம், அட்சதை மற்றும் பூக்கள் மற்றும் வஸ்திரம் சார்த்தி பூஜித்தி வருவார்கள். மாலையில் தினமும் சுண்டல் செய்து நிவேதனம் செய்து வீட்டில் கொலு பார்க்க வருபவர்களுக்கு வழங்க வேண்டும். பத்து நாட்கள் முடிந்த பிறகு கலசத்தில் வைத்த தேங்காயை வைத்து இனிப்பு பண்டங்களைச் செய்யலாம்.

    ஒரு சிலர் வீட்டில் பத்து நாட்களும் விளக்கு எரிய வைப்பார்கள். இதற்கு அகண்ட தீபம் என்று பொருள். இதில் மூன்று வித எண்ணெய் நல்லெண்ணெய், நெய் இலுப்பெண்ணெய்)அல்லது ஐந்து வித எண்ணெய் கலந்து தீபம் ஏற்றலாம்.

    கொலுப்படி மற்றும் பொம்மைகள் வைக்க இயலாதவர்கள் எளிமையாக வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் படத்தை வைத்து அதற்கு முறையாக பூஜைகள், நைவேத்தியங்கள் படைத்து எளிய முறையில் வழிபடலாம்.

    நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் காலை மாலை என இரண்டு வேளை பூஜை செய்ய வேண்டும். அம்மன் பற்றிய பாடல்களை பாடுவார்கள். வீட்டிற்கு அக்கம் பக்கம், தெரிந்தவர்கள் மற்றும் விருந்தினர்களை அழைத்தது வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழம், தட்சினை சுண்டல், மற்றும் நீங்கள் விரும்பினால் ஏதாவது பரிசுப்பொருட்கள அல்லது ரவிக்கை போன்றவற்றை அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கேற்ப கொடுக்கலாம்.

    சிறு குழந்தைகள் வந்தால் அவர்கள் வயதிற்கேற்ற பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இந்த ஒன்பது நாட்களுள் ஏதாவது ஒரு நாள் ஒரு கன்னிப் பெண்ணை அழைத்து உணவளித்து வெற்றிலை, பாக்கு உடை எடுத்து அளிக்கலாம். இதனை செய்வது மிகவும் சிறப்பு.

    இத்தகைய சிறப்புமிக்க்க நவராத்திரி பண்டிகையையொட்டி சென்னை வடபழனியை சேர்ந்த பிரேமலதா-அரவிந்தன் தம்பதி லண்டனில் உள்ள தனது வீட்டில் கொலு வைத்துள்ளனர்.

     அதேபோன்று சென்னை தி.நகர் தண்டபாணி தெருவை சேர்ந்த சங்கர்-லட்சுமி தம்பதியினர் நவராத்திரி பண்டிகையை யொட்டி தங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளார்கள்.

    • ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி
    • வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி

    அறிவினுக் கறிவாய் ஆனாய் போற்றி

    செறிஉயிர் நாத்தொறும் திகழ்வோய் போற்றி

    ஆட்சிகொள் அரசரும் அழியாய் போற்றி

    காட்சிசேர் புலவர்பால் கனிவோய் போற்றி

    இல்லக விளக்கம் இறைவி போற்றி

    நல்லக மாந்தரை நயப்பாய் போற்றி

    ஈரமார் நெஞ்சினார் இடந்தோய் போற்றி

    ஆரமார் தொடையால் அணிவோய் போற்றி

    உலகியல் நடத்தும் ஒருத்தி போற்றி

    அலகில் உயர்க்கிறி வளிப்போய் போற்றி

    ஊனமில் வெள்ளை உருவினாய் போற்றி

    கானக் குயில்மொழிக் கன்னியே போற்றி

    எண்ணிலாப் புகழுடை எந்தாய் போற்றி

    பண்ணியல் தமிழின் பாவாய் போற்றி

    ஏழுல குந்தொழும் இறைவி போற்றி

    சூழநல் அன்பரின் துணைத்தாய் போற்றி

    ஐதுசேர் வெண்கலை ஆடையாய் போற்றி

    மைதீர் முத்து மாலையாய் போற்றி

    ஒட்டக் கூத்தர்க் குதவினோய் போற்றி

    வட்டவெண் தாமரை வாழ்வோய் போற்றி

    ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி

    போதுசேர் அருட்கண் பொற்கோடி போற்றி

    ஒளவைமூ தாட்டியாய் ஆனாய் போற்றி

    கௌவையே இல்லாக் கலைமகள் போற்றி

    கல்விக் கரசே கலைக்கடல் போற்றி

    நல்விற் புருவ நங்காய் போற்றி

    செங்கையில் புத்தகம் சேர்த்தோய் போற்றி

    அங்கையில் படிகம் அடக்கியோய் போற்றி

    சமை குண்டிகைக்கைத் தாயே போற்றி

    அமைவுகொள் ஞான அருட்கையாய் போற்றி

    அஞ்சலென் றருள்தரும் அன்னே போற்றி

    மடமறு நான்முகன் வாழ்வே போற்றி

    திடமுறு செந்தமிழ்த் தெளிவே போற்றி

    கண்கண்ட தெய்வக் கண்மணி போற்றி

    பண்கண்ட பாவிற் படர்ந்தனை போற்றி

    தந்தையும் தாயுமாய்த் தழைப்போய் போற்றி

    மைந்தரோ டொக்கலாய் வளர்வோய் போற்றி

    நல்லோர் சொற்படி நடப்போய் போற்றி

    பல்லோர் பரவும் பனுவலோய் போற்றி

    மன்னரும் வணங்க வைப்போய் போற்றி

    உன்னரும் பெருமை உடையோய் போற்றி

    யாவர்க்கும் இசைந்த யாயே போற்றி

    பாவும் பொருளுமாய்ப் படர்வோய் போற்றி

    பூரப் பரிவரு பொற்கொடி போற்றி

    வார நெஞ்சினர் வழித்துணை போற்றி

    சிலம்பொலிச் சிற்றடித் திருவருள் போற்றி

    நலஉமை இடக்கணாம் நாயகி போற்றி

    வள்ளைக் கொடிச் செவி மானே போற்றி

    பிள்ளை மொழித் தமிழ்ப் பிராட்டி போற்றி

    அழகின் உருவ அணங்கே போற்றி

    பழகு தமிழின் பண்ணே போற்றி

    இளமை குன்றா ஏந்திழாய் போற்றி

    வளமை குளிர்மை மன்னினாய் போற்றி

    அறனும் பொருளும் அருள்வோய் போற்றி

    வறனறு இன்பம் மலிந்தோய் போற்றி

    சொன்ன கலைகளின் தொடர்பே போற்றி

    மன்னிய முத்தின் வயங்குவாய் போற்றி

    கம்பர்க் கருளிய கருத்தே போற்றி

    நம்பினோர்க் கின்பருள் நல்லோய் போற்றி

    காண்டகும் எண்ணெண் கலையாய் போற்றி

    வேண்டா வெண்மையை விலக்குவோய் போற்றி

    கிட்டற் கரிய கிளிமோழி போற்றி

    வெட்ட வெளியாம் விமலை போற்றி

    கீர்த்தியார் வாணியாம் கேடிலாய் போற்றி

    ஆர்திதியார் அன்பரின் அகத்தாய் போற்றி

    குமர குருபரர்க் குதவினோய் போற்றி

    அமரரும் வணங்கும் அம்மே போற்றி

    கூர்மையும் சீர்மையும் கொண்டோய் போற்றி

    ஆர்வலர் ஏத்த அருள்வோய் போற்றி

    கெடலரும் பாவின் கிழத்தி போற்றி

    விடலரும் அறிவின் வித்தே போற்றி

    கேள்வி கல்விக் கிழமையோய் போற்றி

    ஆள்வினை அருளும் அமிழ்தே போற்றி

    கையகப் கழுநிர்க் கலைமகள் போற்றி

    பொய்தீர் அருங்கலைப் பொருளே போற்றி

    கொண்டற் கூந்தற் கொம்பே போற்றி

    வண்டமிழ் வடமொழி வளனே போற்றி

    கோதில் பலமொழிக் குருந்தே போற்றி

    போதில் உறையும் பொன்னே போற்றி

    சங்கொத் தொளிர்நிறத் தாளே போற்றி

    அங்கண் அருள்நிறை அம்மா போற்றி

    சாதலும் பிறத்தலும் தவிர்ந்தோய் போற்றி

    போதலும் இருத்தலும் போக்கினோய் போற்றி

    சினமும் செற்றமும் தீர்ந்தோய் போற்றி

    மனமும் கடந்த மறை பொருள் போற்றி

    சீரார் சிந்தா தேவியே போற்றி

    ஏரார் செழுங்கலை இன்பே போற்றி

    சுடரே விளக்கே தூயாய் போற்றி

    இடரே களையும் இயல்பினாய் போற்றி

    சூழும் தொண்டரின் தொடர்பே போற்றி

    ஏழுறும் இசையின் இசைவே போற்றி

    செவ்விய முத்தமிழ்த் திறனே போற்றி

    ஒளவியம் அறுக்கும் அரசி போற்றி

    சேவடிச் செல்வம் அளிப்போய் போற்றி

    பாவடிப் பயனே படைத்தருள் போற்றி

    சைவம் தாங்கும் தனிக்கொடி போற்றி

    மையெலாம் போக்கும் மருந்தே போற்றி

    சொல்லோடு பொருளின் சுவையருள் போற்றி

    அல்லொடு பகலுன் அடைக்கலம் போற்றி

    சோர்விலா அறிவின் தொடர்பே போற்றி

    தீர்விலா நுண்கலைத் திறனே போற்றி

    தமிழ்க்கலை தமிழ்ச்சுவை தந்தருள் போற்றி

    தமிழ்மந் திரமொழித் தண்பயன் போற்றி

    தாயே நின்னருள் தந்தாய் போற்றி

    தாயே நின் திருவடி தொழுதனம் போற்றி

    திருவுடன் கல்வித் திறனருள் போற்றி

    இரு நிலத் தின்பம் எமக்கருள் போற்றி

    • ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க் கருள்வாய் போற்றி
    • ஓம் திருப்புக ழுடையாய் போற்றி

    ஓம் திருவே போற்றி

    ஓம் திருவளர் தாயே போற்றி

    ஓம் திருமாலின் தேவி போற்றி

    ஓம் திருவெலாம் தருவாய் போற்றி

    ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி

    ஓம் திருப்புக ழுடையாய் போற்றி

    ஓம் திருஞான வல்லி போற்றி

    ஓம் திருவருட் செல்வி போற்றி

    ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி

    ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி

    ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி

    ஓம் தீப சோதியே போற்றி

    ஓம் தீதெல்லாம் தீர்ப்பாய் போற்றி

    ஓம் தூப சோதியே போற்றி

    ஓம் துயரந்தீர்த் தருள்வாய் போற்றி

    ஓம் திருப்பாற் கடலாய் போற்றி

    ஓம் தருவழு தருள்வாய் போற்றி

    ஓம் அன்னையே அருளே போற்றி

    ஓம் அழகெலாம் உடையாய் போற்றி

    ஓம் அயன்பெறு தாயே போற்றி

    ஓம் அறுமுகன் மாமி போற்றி

    ஓம் அமரர்குல விளக்கே போற்றி

    ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி

    ஓம் அன்பருக் கினியாய் போற்றி

    ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி

    ஓம் ஆனந்த வல்லியே போற்றி

    ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி

    ஓம் ஆவிநல் வடிவே போற்றி

    ஓம் இச்சை கிரியை போற்றி

    ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி

    ஓம் இன்பப் பெருக்கே போற்றி

    ஓம் இகபர சுகமே போற்றி

    ஓம் ஈகையின் பொலிவே போற்றி

    ஓம் ஈறிலா அன்னை போற்றி

    ஓம் எண்குண வல்லி போற்றி

    ஓம் ஓங்கார சக்தி போற்றி

    ஓம் ஒளிமிகு தேவி போற்றி

    ஓம் கற்பக வல்லி போற்றி

    ஓம் காமரு தேவி போற்றி

    ஓம் கனக வல்லியே போற்றி

    ஓம் கருணாம்பிகையே போற்றி

    ஓம் குத்து விளக்கே போற்றி

    ஓம் குலமகள் தொழுவாய் போற்றி

    ஓம் மங்கல விளக்கே போற்றி

    ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி

    ஓம் தூங்காத விளக்கே போற்றி

    ஓம் தூயவர் தொழுவாய் போற்றி

    ஓம் பங்கச வல்லி போற்றி

    ஓம் பாவலர் பணிவாய் போற்றி

    ஓம் பொன்னி அம்மையே போற்றி

    ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி

    ஓம் நாரணன் நங்கையே போற்றி

    ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி

    ஓம் நவரத்தின மணியே போற்றி

    ஓம் நவநிதி நீயே போற்றி

    ஓம் அஷ்டலக்குமியே போற்றி

    ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி

    ஓம் ஆதிலட்சுமியே போற்றி

    ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி

    ஓம் கஜலட்சுமியே போற்றி

    ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி

    ஓம் தைரியலட்சுமியே போற்றி

    ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி

    ஓம் தனலட்சுமியே போற்றி

    ஓம் தனதானியம் தருவாய் போற்றி

    ஓம் விஜயலட்சுமியே போற்றி

    ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி

    ஓம் வரலட்சுமியே போற்றி

    ஓம் வரமெலாம் தருவாய் போற்றி

    ஓம் முத்துலட்சுமியே போற்றி

    ஓம் முத்தியை அருள்வாய் போற்றி

    ஓம் மூவேந்தர் தொழுவாய் போற்றி

    ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி

    ஓம் கண்ணேஎம் கருத்தே போற்றி

    ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி

    ஓம் விண்ணேஎம் விதியே போற்றி

    ஓம் விவேகம தருள்வாய் போற்றி

    ஓம் பொன்னேநன் மணியே போற்றி

    ஓம் போகம தருள்வாய் போற்றி

    ஓம் பூதேவி தாயே போற்றி

    ஓம் புகழெலாம் தருவாய் போற்றி

    ஓம் சீதேவி தாயே போற்றி

    ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி

    ஓம் மதிவதன வல்லி போற்றி

    ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி

    ஓம் நித்திய கல்யாணி போற்றி

    ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி

    ஓம் கமலக்கண்ணி போற்றி

    ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி

    ஓம் தாமரைத் தாளாய் போற்றி

    ஓம் தவநிலை அருள்வாய் போற்றி

    ஓம் கலைஞானச் செல்வி போற்றி

    ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி

    ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி

    ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி

    ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி

    ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி

    ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி

    ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி

    ஓம் வேதமல்லியே போற்றி

    ஓம் வேட்கை தணிப்பாய் போற்றி

    ஓம் பிறர்பொருள் கவர எண்ணாப் பெரியர்க் கருள்வாய் போற்றி

    ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க் கருள்வாய் போற்றி

    ஓம் அறநெறி வழுவிலாத அடியவர்க் கருள்வாய் போற்றி

    ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி

    ஓம் அருண்இலக் குமியே போற்றி

    • ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி
    • ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி

    ஓம் அபிராமியே போற்றி

    ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி

    ஓம் அம்பிகையே போற்றி

    ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி

    ஓம் அன்பின் உருவே போற்றி

    ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி

    ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி

    ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஆற்றல் தருவாய் போற்றி

    ஓம் இமய வல்லியே போற்றி

    ஓம் இல்லறம் காப்பாய் போற்றி

    ஓம் இரு சுடர் ஒளியே போற்றி

    ஓம் இருளை நீக்குவாய் போற்றி

    ஓம் ஈசனின் பாதியே போற்றி

    ஓம் ஈஸ்வரியே போற்றி

    ஓம் உமையவளே போற்றி

    ஓம் உளைமான் கொண்டாய் போற்றி

    ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி

    ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி

    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி

    ஓம் என் துணை இருப்பாய் போற்றி

    ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி

    ஓம் எம்பிராட்டியே! போற்றி

    ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி

    ஓம் ஐமுகன் துணையே போற்றி

    ஓம் ஐயுறவு தீர்ப்பாய் போற்றி

    ஓம் ஒளிர்வு முகத்தவளே போற்றி

    ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் கங்காணியே போற்றி

    ஓம் காமாட்சியே போற்றி

    ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் கருணை ஊற்றே போற்றி

    ஓம் கற்பூர நாயகியே போற்றி

    ஓம் கற்பிற்கரசியே போற்றி

    ஓம் காம கலா ரூபிணியே போற்றி

    ஓம் கிரிசையே போற்றி

    ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி

    ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி

    ஓம் கூர்மதி தருவாய் போற்றி

    ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி

    ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி

    ஓம் குமரனின் தாயே! போற்றி

    ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி

    ஓம் கொற்றவையே! போற்றி

    ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி

    ஓம் கோமதியே! போற்றி

    ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி

    ஓம் சங்கரியே போற்றி

    ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி

    ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி

    ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி

    ஓம் சக்தி வடிவே! போற்றி

    ஓம் சாபம் களைவாய் போற்றி

    ஓம் சிம்ம வாகனமே! போற்றி

    ஓம் சீலம் தருவாய் போற்றி

    ஓம் சிறுநகை புரிபவளே போற்றி

    ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி

    ஓம் சுந்தர வடிவழகியே போற்றி

    ஓம் சுபீட்சம் அளிப்பாய் போற்றி

    ஓம் செங்கதிர் ஒளியே போற்றி

    ஓம் சேவடி பணிகிறேன் போற்றி

    ஓம் சோமியே! போற்றி

    ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி

    ஓம் தண்கதிர் முகத்தவனே போற்றி

    ஓம் தாயே! நீயே! போற்றி

    ஓம் திருவருள் புரிபவளே போற்றி

    ஓம் தீங்கினை ஒழிப்பாய் போற்றி

    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி

    ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி

    ஓம் திசையெட்டும் புகழ்கொண்டாய் போற்றி

    ஓம் தீரம் அளிப்பாய் போற்றி

    ஓம் துர்க்கையே! அம்மையே! போற்றி

    ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி

    ஓம் துணிவினைத் தருவாய் போற்றி

    ஓம் தூயமனம் தருவாய் போற்றி

    ஓம் நாராயணீயே! போற்றி

    ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி

    ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி

    ஓம் நீதியினைக் காப்பாய் போற்றி

    ஓம் பகவதியே! போற்றி

    ஓம் பவானியே போற்றி

    ஓம் பசுபதி நாயகியே போற்றி

    ஓம் பாக்கியம் தருவாய் போற்றி

    ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி

    ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி

    ஓம் புகழினை அளிப்பாய் போற்றி

    ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா! போற்றி

    ஓம் பொன் ஒளி முகத்தவளே போற்றி

    ஓம் போர் மடத்தை அளிப்பாய் போற்றி

    ஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி

    ஓம் மாதங்கியே போற்றி

    ஓம் மலைமகளே போற்றி

    ஓம் மகமாயி தாயே போற்றி

    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

    ஓம் தவன் தங்கையே போற்றி

    ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி

    ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி

    ஓம் வேதவல்லியே! போற்றி

    ஓம் வையம் வாழ்விப்பாய்! போற்றி

    ஓம் ஜெயஜெய தேவியே! போற்றி

    ஓம் ஜெயங்கள் அளிப்பாய்! போற்றி

    ஓம் துர்க்கா தேவியே! போற்றி

    • நடராஜர் சன்னதியில் கொலு வைக்கப்பட்டிருந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கொலு கண்காட்சியை பார்வையிட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி விழா வெகு விமரிசயைாக தொடங்கியது.

    விழாவில் கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார். சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் துரை ராயப்பன், கோவில் ஊழியர் ராஜ்மோகன், டாக்டர் பாண்டியன், ஓய்வு பெற்ற தலைமையாசியர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதல் நாள் நிகழ்வில் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலின் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் மகன்கள் பூர்ணசந்திரன், தமிழிசை வேந்தன், காளிதாஸ் ஆகியோரின் சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும், தவிலிசை கலைஞர்களான ஆதிரெங்கம் தவிலிசை மாமுரசு பாலசங்கர், தவிலிசை இளவரசு, ஜெகதீஷ் ஆகியோரின் தவிலிசை நிகழ்ச்சியும் நடந்தது.

    முன்னதாக நவராத்திரி விழாவை முன்னிட்டு நடராஜர் சன்னதியில் கொலு வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து கொலுவை பார்வையிட்டனர்.

    தொடர்ந்து, வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி குழுவினர் செய்துள்ளனர்.

    • இந்தாண்டு நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • திருச்செந்தூர் கோவிலில் சுமார் 450-க்கும் மேற்பட்ட வண்ணமயமான புதிய சிலை பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையாக நவராத்திரி திருவிழாவை 10 நாள்கள் அம்மனுக்கு உகந்த நாட்களாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா நட்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும் உள்ளது. நவராத்திரியை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் விரதமிருந்து தெய்வங்கள், மனிதன், மற்ற உயிரினங்கள் ஆகியவற்றை சிறிய சிலை பொம்மைகளாக வடிவமைத்து கொலுவாக அடுக்கி வைத்து நாள்தோறும் பூஜை செய்வது வழக்கமாகும். அதே போல கோவில்களிலும் கொலு வைக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்தாண்டு நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்பிரகாரத்தில் 5 அடுக்குகள் கொண்ட செட்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரிசையாக 5 இடங்களில் வண்ண வண்ண சுவாமி, அம்மன், தேச தலைவர்கள் உள்ளிட்ட பொம்மைகளால் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட வண்ணமயமான புதிய சிலை பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 மகாதேவர் சன்னிதி முன்பு தெப்பம் வைத்து முளைப்பாரியும் வளர்க்கப்படுகிறது. பக்தர்கள் கொலுவை பார்த்து வழிபடும் வகையில் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர்.

    • நவராத்திரி தொடங்கியதை முன்னிட்டு புதுக்கோட்டை கோவில்களில் கொலு அமைக்கப்பட்டது
    • தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை புதுநகர் கருமாரியம்மன் கோவிலில் முதல் வருடமாக கொலு கோவில் செயலா ளார் புதுநகர் குமார் ஏற்பா ட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கல ந்துக் கொண்டு வழிபட்டு பிரசாதம் பெற்று சென்ற னர்.இதே போல் சாந்தநாதா சுவாமி கோவில், அரிய நாச்சி அம்மன் கோவில், ஸ்ரீ பிரகதாம்பாள் கோவில் மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி அதிஷ்டானத்திலும் கொலு உற்சாகம் நடைபெற்றுவரு கிறது.இந்த கோவில்களில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    • 9 நாட்கள் நடக்கிறது
    • ஓய்வு பெற்ற துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    திருவண்டார்கோவிலில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலை ப்பள்ளியில் நவராத்திரி கொலு திருவிழா கொண்டாடும் வகையில் பள்ளி வளா கத்தில் கொலு பொம்மை கள் வைக்க ப்பட்டு நவராத்திரி ஹோமங்கள் நடைபெற்றது.

    கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. விழாவினை பள்ளியின் சேர்மன் அந்தோணிராஜ், பள்ளியின் முதல்வர் மிஸ்டிகன் ஆண்டோ ரிச்சர்ட் மற்றும் ஓய்வு பெற்ற துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி

    வைத்தனர். விழாவில் முப்பெரும் தேவியர்களுக்கு அர்ச்சனை மலர்கள், பழங்கள், நைவேத்தியம் கொண்டு பூஜைகள் செய்யப்பட்டன.

    மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ெகாலு திருவிழா தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறுகிது. விழாவி ற்கான ஏற்பா டுகளை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் அலுவலர் ஊழியர்கள் செய்திருந்தனர். 

    • இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகள்.
    • கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

    * கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

    * கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.

    • இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

    * மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.

    *நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

    * ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    * ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவிகளின் பொம்மைகள் இருக்க வேண்டும்.

    * ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம் பெறச்செய்யவேண்டும்.

    * எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    * ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

    • கொலு வைப்பதில் பலரும் பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
    • எங்களது வாசகர்களுக்கு எங்களால் முடிந்த குறிப்புகளை இங்கே தருகிறோம்.

    கொலு வைப்பதில் பலரும் பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். மற்றவர்களில் இருந்து தங்களது கொலு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். அவ்வாறு எண்ணும் எங்களது வாசகர்களுக்கு எங்களால் முடிந்த ஒருசில குறிப்புகளை இங்கே தருகிறோம்.

    குறிப்புகள்: கொலுவில் முக்கியமானது கலசம், தங்கக் கலசமாய் வைத்தால் கொலு பார்ப்பதற்கும் அழகாயிருக்கும், நிஜத்தங்கம் இப்போது வாங்குகிற விலை இல்லை. ஆகவே தங்கம் போல மினுக்கும் சம்கிகளைக் கொண்டு செய்யலாம். சிறிய ப்ளாஸ்டி குடம் வாங்குங்கள் சொம்பு சைசில் கடைகளில் இது கிடைக்கும். ப்ளாஸ்டிக் மாவிலை 5 நல்ல பச்சை நிறத் தில் வாங்கிக் கொள்ளுங்கள்.

    தங்கநிற சம்கிகள் சிறு இலை வடிவில் இதை குண்டூசியால் குடம் முழுவதும் நெருக்கமாய் குத்தி விடுங்கள். குடத்தின் வாய்ப் பகுதிக்கு வெள்ளி நிறலேஸ் கிடைக்கும். அதை குடத்தின் வாய் அளவுக்கு கத்திரித்து பெவிகால் தடவி ஒட்டிவிடுங்கள். மாவிலைகளை குடத்தின் மேல் செருகி விட்டு ஒரு தேங்காயை நடுவில் வையுங்கள். தங்கக் கலசம் தயார்.

    கொலுவிற்கு 4 நாட்கள் முன்னதாகவே தோட்டத்திலோ தொட்டியிலோ கேழ்வரகு, கடுகு தெளித்து வையுங்கள். இவை முதல் நாள் கொலுவுக்கு செழித்து வளர்ந்திருக்கும். அந்தப் பயிர்களை அப்படியே தாய் மண்ணோடு எடுங்கள். பழைய அட்டைகளை முக்கோண அல்லது சதுர அல்லது செவ்வக வடிவில் கத்திரித்து வளர்ந்த பயிர்களை அதன் மீது சீராக வையுங்கள். இரண்டொரு நாளில் அவை மேலும் வளர்ந்து புதுப்பொலிவினைத்தரும்.

    பார்க் அமைக்கும் போது உபயோகித்த கொசு மேட்களை தரையில் வைத்தால் ப்ளாட்பாரம் போல தெரியும். உலர்த்திய காபிப்பொடியால் தார்சாலை நடுவில் அமைக்கலாம். சிறு ப்ளாஸ்டிக் கிண்ணங்களில் மண்ணை நிரப்பி அதில் வீட்டுத் தோட்டத்தில் வளரும் சிறு செடிகளையோ அல்லது கொத்தாய் புற்களையோ வைத்து பார்க்கில் இயற்கையான தொட்டி செடிகள் செய்யலாம். அவ்வப்போது நீர் தெளித்தால் போதும் இவை பசுமையாய் இருக்கும்.

    புத்தகங்களின் அட்டைப் பக்கத்தில் வரும் பெரிய கோபுரப் படங்களை அப்படியே கட் செய்து அட்டையில் ஒட்டி கொலு முகப்பில் வைக்கலாம். கொலுவிற்கு வருபவர்களுக்கு கொடுக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் ஒரு ரூபாய் நாணயம் போன்றவற்றை சிறு கவரில் போட்டு வைத்து விட்டால் தனித்தனியாய் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

    நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.
    ‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார். அன்னையின் அந்த வார்த்தையை சுரதா என்ற மன்னன் கடைப்பிடித்து, தன் பகைவர்களை வீழ்த்தியதோடு, பலவிதமான இன்னல்களில் இருந்தும் விடுதலை அடைந்தான். எனவே கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வது என்பது நவராத்திரி விழாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

    மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். பொம்மைகளை வைக்கும் மரபையும், அந்த பொம்மைகள் கூறும் தத்துவத்தையும் இங்கு காணலாம்.

    நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது பொருளாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார். நவராத்திரியில் வீட்டில் வைக்கப்படும் கொலு மேடையானது, 9 படிகள் கொண்ட தாக அமைக் கப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.

    முதலாம் படி

    கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளை கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.

    இரண்டாம் படி

    அடுத்ததாக அமைந்த இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற உயிர்களின் பொம்மைகளை கொலுவில் வைக்க வேண்டும்.

    மூன்றாம் படி


    மூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.

    நாலாம் படி

    நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.

    ஐந்தாம் படி

    ஐந்தறிவு கொண்ட உயிர்களான மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.

    ஆறாம் படி

    இந்த படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.

    ஏழாம் படி

    மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.

    எட்டாம் படி

    தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளைக் கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.

    ஒன்பதாம் படி

    பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும்.

    மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவே இதுபோன்ற வரிசையில் கொலு அமைக்கச் சொல்லப்பட்டுள்ளது.
    ×