என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய துளசி தோன்றியதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
துளசி என்றால் ‘தன்னிகரில்லாதவள்’ என்று அர்த்தமாகும். துளசி என்பது ஒரு வகை செடியின் இலையாகும். இதை துள + சி என்பார்கள். இதற்கு ‘ஒப்பில்லாத செடி’ என்று பொருள்.
துளசிக்கு ‘திருத்துழாய்’ என்றும் ஒரு பெயர் உண்டு. வைணவக் கோவில்களில் துளசிக்கு தனி இடம் உண்டு. துளசி கலந்த நீரைத்தான் தீர்த்தமாக வழங்குகிறார்கள்.மகாலட்சுமியின் சொரூபமான துளசி, எப்போதும் திருமாலின் மார்பை அலங்கரிக்கும் சிறப்புப் பெற்றது. இதன் மூலம் மகாவிஷ்ணு எப்போதும் துளசியில் வாசம் செய்வதாக சொல்கிறார்கள்.
மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இத்தகைய சிறப்புடைய துளசி தோன்றியதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
மநு வம்சத்தை சேர்ந்த தர்மவத்வசன் எனும் அரசனின் மனைவி மாதவி 100 ஆண்டுகள் கர்ப்பம் தரித்து அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். ஒப்பில்லாத அழகுடன் திகழ்ந்தால் அந்த குழந்தைக்கு துளசி என்று பெயரிட்டனர். அந்த குழந்தை வளர்ந்து பெரியவள் ஆனவதும் நாராயணனை திருமணம் செய்ய வேண்டும் என்று தவம் செய்தாள். பிரம்மன் அவள் முன் தோன்றி, பூமியில் நீ துளசி விருட்சமாக பிறந்து கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்வாய்’ என்ற வரம் கொடுத்தார்.
அதன்படி துளசியை விஷ்ணு மணந்து வைகுண்டம் அழைத்து சென்றார். எத்தனையோ லீலைகளை நடத்திக் காட்டிய கண்ணன், துளசியின் சிறப்பையும் ஒரு லீலை மூலம் உலகறிய செய்தார்.ஒரு தடவை கண்ணன் மீது அதிக அன்பு வைத்திருப்பவர் யார் என்று சத்தியபாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதை உறுதிபடுத்த கண்ணன் தராசில் ஒரு பக்கம் அமர்ந்து கொள்ள, மறுபக்க தராசில் சத்தியபாமா பொன்னும் மணியுமாக குவித்தார்.
தராசு சமநிலைக்கு வரவில்லை. அடுத்து வந்த ருக்மணி, ஒரு சிறு துளசியை எடுத்த தராசு தட்டில் வைக்க, தராசு சமநிலைக்கு வந்தது. துளசியின் பெருமையை சொல்ல இந்த ஒரு புராண நிகழ்வே போதுமானதாகும்.
அன்னதானம், ரத்த தானம் உள்பட நீங்கள் எத்தனையோ தானங்கள் செய்திருப்பீர்கள். துளசியை நீங்கள் தானமாக கொடுத்து இருக்கிறீர்களா?
ஒரு தடவை துளசி இலைகளை தானமாக கொடுத்துப் பாருங்கள். அது தரும் மேன்மைக்கு நிகராக எதுவு-மே இல்லை என்பதை உணரலாம். கார்த்திகை மாதம் துளசியை தானம் செய்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியமும், பலனும் கிடைக்கும்.
எப்போது தானம் செய்தாலும், எதை தானம் செய்தாலும், அதனுடன் ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. துளசியின் வேரில் தேவர்களும், தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். எனவே துளசியை வீட்டில் வளர்க்கலாம்.
வீட்டு மாடத்தில் வைத்திருக்கும் துளசி செடியை தெய்வமாக கருதி சுமங்கலி பெண்கள் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். துளசி செடிக்கு தினமும் காலை, மாலை இரு நேரமும் பூஜை நடத்த வேண்டும். பொதுவாக பசுக்கள் நிறைந்த இடம், புனித நதிக்கரைகள் மற்றும் பிருந்தாவனம் ஆகிய இடங்களில் துளசி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வீட்டில் துளசியை வளர்க்கும் போது, அதற்குரிய சுத்தம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசி அவதரித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கார்த்திகை பவுர் ணமி தினத்தன்று துளசி மாடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடுகள் செய்தால் நினைத்தது நடக்கும். பெண்கள் துளசியை எந்த அளவுக்கு வழிபாடு செய்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களிடம் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
துளசி செடியின் கீழ் தேங்கி இருக்கும் தண்ணீரில் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களும் அடங்கி இருப்பதாக ஐதீகம். அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் தோஷங்கள் விலகி விடும்.துளசித் தீர்த்தத்துக்கு இருக்கும் சிறப்பை பல தடவை மகாவிஷ்ணு வெளிப்படுத்தியுள்ளார். ‘துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த அளவுக்கு ஆனந்தம் அடைவேன்’ என்று மகாவிஷ்ணு கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல, ஒரு தடவை துளசிக்கு மகா விஷ்ணுவே பூஜை செய்தார் என்று ஹரிவம்சத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது. விஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரம் திருவோணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். திருவோணம் குளிர்ச்சியான நட்சத்திரமாகும். எனவே தான் அதிக குளிர்ச்சியில் இருக்கும் மகாவிஷ்ணுவுக்கு வெப்பத்தைத் தரும் துளசியை பூஜைக்குரிய பொருளாக வைத்துள்ளனர்.
துளசியை எடுக்கும் போது பயப்பக்தியுடன் பறிக்க வேண்டும். அதிகாலையில் நீராடி சந்தியா வந்தனம் செய்து, எல்லாவித அனுஷ்டானங் களையும் முடித்த பிறகே துளசி இலையை பறிக்க வேண்டும். துளசியை பறிக்கும்போது, அதற்குரிய ஸ்லோகத்தை சொல்லியபடி பறிப்பது மிகவும் நல்லது. துளசி பறிக்கும் போது நான்கு இலைகளும், நடுவில் துளிரும் உள்ளதையும் சேர்த்து பறிக்க வேண்டும். துளசிச் செடியில் பழையது, புதியது என்ற நிலை எதையும் பார்க்க முடியாது. ஆகையால் நாம் பறிக்கும் ஒவ்வொரு துளசியும் பூஜைக்கு உகந்ததாகும்.
ஆனால் அசுத்தமாக இருக்கும் போது துளசிச் செடி பக்கமே போகக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை, துவாதசி, மாதப்பிறப்பு, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் துளசியைப் பறிக்கக் கூடாது. உடலில் எண்ணைத்தேய்த்துக் கொண்டிருக்கும் போதும் துளசியைப் பறிக்க கூடாது. மதியம், இரவு மற்றும் சந்தியா நேரத்திலும் துளசியைப் பறிக்கக்கூடாது.
எப்போதும் தேவைக்கு ஏற்ப துளசி எடுப்பது நல்லது. விஷ்ணு பூஜை, பிரதிஷ்டை, தானம், விரதம் மற்றும் பித்ருகாரியங்களுக்கு துளசியை அவசியம் பயன்படுத்த வேண்டும். துளசி கலந்த தண்ணீரில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும். மரணத்தின் விளிம்பில் இருப்பவர்கள் துளசி தீர்த்தம் உட்கொண்டால் விஷ்ணு லோகம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.
ஹோமத்தில் துளசி குச்சிகளை போட்டு வழிபட்டால் நினைத்தது நடக்கும். துளசியின் நுனியில் பிரம்மா, அடியில் சிவபெருமான், மத்தியில் விஷ்ணு விசிக்கின்றனர். 12 ஆதித்தியர்கள், 11 ருத்ரர்கள், 8 வசுக்கள் மற்றும் அக்னி தேவர்கள் வாசம் செய்கின்றனர். துளசி இலை பட்ட தண்ணீர் கங்கைக்கு சமமாக கருதப்படுகிறது.
துளசியை ஒவ்வொரு துவாதசி திதி தினத்தன்றும் பிரம்மனே பூஜை செய்கிறார். அது போல மற்ற தேவர்களும் பூஜிக்கிறார்கள். எனவே யார் ஒருவர் துளசியை பூஜித்து வருகிறாரோ அவர்களது பாவம் விலகி விடும்.
துளசியில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. தினமும் 10 துளசி இலையை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். துளசி சாறுக்கு பார்வை குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. துளசி தீர்த்தம் வயிற்றுக் கோளாறுகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் போக்கும். ஜீரண சக்தி மேம்படும். இதயம், கல்லீரல் சீராக செயல்படும்.
வீட்டில் துளசி வளர்ப்பதால் சுத்தமான காற்றை நாம் பெற முடியும். புகை மற்றும் மாசுவை தூய்மைப் படுத்தும் ஆற்றல் துளசிக்கு உண்டு. எனவே அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் துளசி உயர்வானது. புனிதமானது. ஈடு இணையற்றது. இத்தகைய சிறப்புடைய துளசியை வைணவத் தலங்களுக்கு செல்லும் போது மறக்காமல் வாங்கிச் செல்ல வேண்டும். துளசி சார்த்தி நீங்கள் வழிபடும் போது பெருமாளின் அருளை மிக எளிதாகப் பெற முடியும்.
அது மட்டுமின்றி மகா விஷ்ணுவின் வைகுண்டத்துக்கு சென்று மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ வழி ஏற்படும். துளசி வழிபாடு செய்யும் இளம் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். செல்வம் சேரும்.
துளசிக்கு ‘திருத்துழாய்’ என்றும் ஒரு பெயர் உண்டு. வைணவக் கோவில்களில் துளசிக்கு தனி இடம் உண்டு. துளசி கலந்த நீரைத்தான் தீர்த்தமாக வழங்குகிறார்கள்.மகாலட்சுமியின் சொரூபமான துளசி, எப்போதும் திருமாலின் மார்பை அலங்கரிக்கும் சிறப்புப் பெற்றது. இதன் மூலம் மகாவிஷ்ணு எப்போதும் துளசியில் வாசம் செய்வதாக சொல்கிறார்கள்.
மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இத்தகைய சிறப்புடைய துளசி தோன்றியதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
மநு வம்சத்தை சேர்ந்த தர்மவத்வசன் எனும் அரசனின் மனைவி மாதவி 100 ஆண்டுகள் கர்ப்பம் தரித்து அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். ஒப்பில்லாத அழகுடன் திகழ்ந்தால் அந்த குழந்தைக்கு துளசி என்று பெயரிட்டனர். அந்த குழந்தை வளர்ந்து பெரியவள் ஆனவதும் நாராயணனை திருமணம் செய்ய வேண்டும் என்று தவம் செய்தாள். பிரம்மன் அவள் முன் தோன்றி, பூமியில் நீ துளசி விருட்சமாக பிறந்து கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்வாய்’ என்ற வரம் கொடுத்தார்.
அதன்படி துளசியை விஷ்ணு மணந்து வைகுண்டம் அழைத்து சென்றார். எத்தனையோ லீலைகளை நடத்திக் காட்டிய கண்ணன், துளசியின் சிறப்பையும் ஒரு லீலை மூலம் உலகறிய செய்தார்.ஒரு தடவை கண்ணன் மீது அதிக அன்பு வைத்திருப்பவர் யார் என்று சத்தியபாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதை உறுதிபடுத்த கண்ணன் தராசில் ஒரு பக்கம் அமர்ந்து கொள்ள, மறுபக்க தராசில் சத்தியபாமா பொன்னும் மணியுமாக குவித்தார்.
தராசு சமநிலைக்கு வரவில்லை. அடுத்து வந்த ருக்மணி, ஒரு சிறு துளசியை எடுத்த தராசு தட்டில் வைக்க, தராசு சமநிலைக்கு வந்தது. துளசியின் பெருமையை சொல்ல இந்த ஒரு புராண நிகழ்வே போதுமானதாகும்.
அன்னதானம், ரத்த தானம் உள்பட நீங்கள் எத்தனையோ தானங்கள் செய்திருப்பீர்கள். துளசியை நீங்கள் தானமாக கொடுத்து இருக்கிறீர்களா?
ஒரு தடவை துளசி இலைகளை தானமாக கொடுத்துப் பாருங்கள். அது தரும் மேன்மைக்கு நிகராக எதுவு-மே இல்லை என்பதை உணரலாம். கார்த்திகை மாதம் துளசியை தானம் செய்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியமும், பலனும் கிடைக்கும்.
எப்போது தானம் செய்தாலும், எதை தானம் செய்தாலும், அதனுடன் ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. துளசியின் வேரில் தேவர்களும், தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். எனவே துளசியை வீட்டில் வளர்க்கலாம்.
வீட்டு மாடத்தில் வைத்திருக்கும் துளசி செடியை தெய்வமாக கருதி சுமங்கலி பெண்கள் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். துளசி செடிக்கு தினமும் காலை, மாலை இரு நேரமும் பூஜை நடத்த வேண்டும். பொதுவாக பசுக்கள் நிறைந்த இடம், புனித நதிக்கரைகள் மற்றும் பிருந்தாவனம் ஆகிய இடங்களில் துளசி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வீட்டில் துளசியை வளர்க்கும் போது, அதற்குரிய சுத்தம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசி அவதரித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கார்த்திகை பவுர் ணமி தினத்தன்று துளசி மாடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடுகள் செய்தால் நினைத்தது நடக்கும். பெண்கள் துளசியை எந்த அளவுக்கு வழிபாடு செய்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களிடம் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
துளசி செடியின் கீழ் தேங்கி இருக்கும் தண்ணீரில் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களும் அடங்கி இருப்பதாக ஐதீகம். அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் தோஷங்கள் விலகி விடும்.துளசித் தீர்த்தத்துக்கு இருக்கும் சிறப்பை பல தடவை மகாவிஷ்ணு வெளிப்படுத்தியுள்ளார். ‘துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த அளவுக்கு ஆனந்தம் அடைவேன்’ என்று மகாவிஷ்ணு கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல, ஒரு தடவை துளசிக்கு மகா விஷ்ணுவே பூஜை செய்தார் என்று ஹரிவம்சத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது. விஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரம் திருவோணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். திருவோணம் குளிர்ச்சியான நட்சத்திரமாகும். எனவே தான் அதிக குளிர்ச்சியில் இருக்கும் மகாவிஷ்ணுவுக்கு வெப்பத்தைத் தரும் துளசியை பூஜைக்குரிய பொருளாக வைத்துள்ளனர்.
துளசியை எடுக்கும் போது பயப்பக்தியுடன் பறிக்க வேண்டும். அதிகாலையில் நீராடி சந்தியா வந்தனம் செய்து, எல்லாவித அனுஷ்டானங் களையும் முடித்த பிறகே துளசி இலையை பறிக்க வேண்டும். துளசியை பறிக்கும்போது, அதற்குரிய ஸ்லோகத்தை சொல்லியபடி பறிப்பது மிகவும் நல்லது. துளசி பறிக்கும் போது நான்கு இலைகளும், நடுவில் துளிரும் உள்ளதையும் சேர்த்து பறிக்க வேண்டும். துளசிச் செடியில் பழையது, புதியது என்ற நிலை எதையும் பார்க்க முடியாது. ஆகையால் நாம் பறிக்கும் ஒவ்வொரு துளசியும் பூஜைக்கு உகந்ததாகும்.
ஆனால் அசுத்தமாக இருக்கும் போது துளசிச் செடி பக்கமே போகக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை, துவாதசி, மாதப்பிறப்பு, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் துளசியைப் பறிக்கக் கூடாது. உடலில் எண்ணைத்தேய்த்துக் கொண்டிருக்கும் போதும் துளசியைப் பறிக்க கூடாது. மதியம், இரவு மற்றும் சந்தியா நேரத்திலும் துளசியைப் பறிக்கக்கூடாது.
எப்போதும் தேவைக்கு ஏற்ப துளசி எடுப்பது நல்லது. விஷ்ணு பூஜை, பிரதிஷ்டை, தானம், விரதம் மற்றும் பித்ருகாரியங்களுக்கு துளசியை அவசியம் பயன்படுத்த வேண்டும். துளசி கலந்த தண்ணீரில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும். மரணத்தின் விளிம்பில் இருப்பவர்கள் துளசி தீர்த்தம் உட்கொண்டால் விஷ்ணு லோகம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.
ஹோமத்தில் துளசி குச்சிகளை போட்டு வழிபட்டால் நினைத்தது நடக்கும். துளசியின் நுனியில் பிரம்மா, அடியில் சிவபெருமான், மத்தியில் விஷ்ணு விசிக்கின்றனர். 12 ஆதித்தியர்கள், 11 ருத்ரர்கள், 8 வசுக்கள் மற்றும் அக்னி தேவர்கள் வாசம் செய்கின்றனர். துளசி இலை பட்ட தண்ணீர் கங்கைக்கு சமமாக கருதப்படுகிறது.
துளசியை ஒவ்வொரு துவாதசி திதி தினத்தன்றும் பிரம்மனே பூஜை செய்கிறார். அது போல மற்ற தேவர்களும் பூஜிக்கிறார்கள். எனவே யார் ஒருவர் துளசியை பூஜித்து வருகிறாரோ அவர்களது பாவம் விலகி விடும்.
துளசியில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. தினமும் 10 துளசி இலையை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். துளசி சாறுக்கு பார்வை குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. துளசி தீர்த்தம் வயிற்றுக் கோளாறுகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் போக்கும். ஜீரண சக்தி மேம்படும். இதயம், கல்லீரல் சீராக செயல்படும்.
வீட்டில் துளசி வளர்ப்பதால் சுத்தமான காற்றை நாம் பெற முடியும். புகை மற்றும் மாசுவை தூய்மைப் படுத்தும் ஆற்றல் துளசிக்கு உண்டு. எனவே அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் துளசி உயர்வானது. புனிதமானது. ஈடு இணையற்றது. இத்தகைய சிறப்புடைய துளசியை வைணவத் தலங்களுக்கு செல்லும் போது மறக்காமல் வாங்கிச் செல்ல வேண்டும். துளசி சார்த்தி நீங்கள் வழிபடும் போது பெருமாளின் அருளை மிக எளிதாகப் பெற முடியும்.
அது மட்டுமின்றி மகா விஷ்ணுவின் வைகுண்டத்துக்கு சென்று மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ வழி ஏற்படும். துளசி வழிபாடு செய்யும் இளம் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். செல்வம் சேரும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (நவம்பர்) நடக்கும் முக்கிய விழாக்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (நவம்பர்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
1-ந்தேதி மாதத் திரய ஏகாதசி, 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம், 6-ந்தேதி வைணவ ஆச்சாரியார் திருமலைநம்பி சாத்துமுறை, 8-ந்தேதி நாக சதுர்த்தியையொட்டி பெரிய சேஷ வாகன வீதி உலா, வைணவ ஆச்சாரியார் மணவாள மகாமுனிகள் சாத்துமுறை, 10-ந்தேதி புஷ்ப யாகத்தை முன்னிட்டு அங்குரார்ப்பணம், 11-ந்தேதி புஷ்ப யாகம், வைணவ ஆச்சாரியார் வேதாந்த மகாதேசிகன் சாத்துமுறை, 16-ந்தேதி கைசிக துவாதசி ஆஸ்தானம், சதுர்மாச விரதம் நிறைவு, 18-ந்தேதி காத்திகை தீப உற்சவம், 19-ந்தேதி திருமங்கை ஆழ்வார் சாத்துமுைற.
மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.
இதையும் படிக்கலாம்..ஆதிசங்கர மானஸ பூஜா ஸ்லோகம்
அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள மாட வீதியில் அருணாசலேஸ்வரர், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமி தேர்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா முக்கிய விழாவாகும்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7-ம் நாள் விழாவான 16-ந் தேதியன்று தேரோட்டமும், 10-ம் நாள் விழாவான 19-ந் தேதியன்று பரணிதீபம், மகாதீபம் ஏற்றப்படும்.
அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள மாட வீதியில் அருணாசலேஸ்வரர், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமி தேர்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த தேர்கள் தகர கொட்டகை மற்றும் பைபர் சீட்களால் ஆன கெட்டகையால் மூடப்பட்டு இருக்கும். தீபத்திருவிழாவை முன்னிட்டு தேர்களை புனரமைப்பு செய்வதற்காக கொட்டகைகள் அகற்றப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும் தீபத்திருவிழா கடந்த ஆண்டை போல கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்று குறையும் பட்சத்தில் திருவிழா நடத்த முதல்-அமைச்சர் அனுமதி அளிப்பார் என கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதனால் இந்த ஆண்டு தீபத்திருவிழா எப்படி நடைபெற உள்ளது என்று கேள்விக்குறியாக உள்ளது.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7-ம் நாள் விழாவான 16-ந் தேதியன்று தேரோட்டமும், 10-ம் நாள் விழாவான 19-ந் தேதியன்று பரணிதீபம், மகாதீபம் ஏற்றப்படும்.
அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள மாட வீதியில் அருணாசலேஸ்வரர், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமி தேர்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த தேர்கள் தகர கொட்டகை மற்றும் பைபர் சீட்களால் ஆன கெட்டகையால் மூடப்பட்டு இருக்கும். தீபத்திருவிழாவை முன்னிட்டு தேர்களை புனரமைப்பு செய்வதற்காக கொட்டகைகள் அகற்றப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும் தீபத்திருவிழா கடந்த ஆண்டை போல கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்று குறையும் பட்சத்தில் திருவிழா நடத்த முதல்-அமைச்சர் அனுமதி அளிப்பார் என கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதனால் இந்த ஆண்டு தீபத்திருவிழா எப்படி நடைபெற உள்ளது என்று கேள்விக்குறியாக உள்ளது.
கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் மழை பெய்து வருகிறது. தேர்களை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கொட்டகைகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மரத் தேர்கள் மழையில் நனைந்தபடி உள்ளது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தேர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்...அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடக்கம்
இந்து தர்மம் தழைக்கச் செய்த மாபெரும் ஞானி ஜகத்குரு ஆதிசங்கரர். எப்போதும் நன்மையே செய்பவர்; எப்போதும் இன்பத்தையே தருபவர். ஆதிசங்கர மானஸ பூஜா ஸ்லோகத்தை பார்க்கலாம்.
ஸ்ரீ குருப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேச்வர:
குரு ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:||
அஜ்ஞான திமிராந்ந்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜன சலாகயா|
சக்ஷுர் உன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம:||
ஆதிசங்கர மானஸ பூஜா ஸ்லோகம்.:—
ஸத்யானந்த ஸ்வரூபாய போதைக ஸுக காரிணே|
நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே ||
நம: சாந்தாத்மனே துப்யம் நமோ குஹ்யதமாய ச |
அசிந்த்யாயாப்ரமேயாய அனாதினிதனாய ச ||
அமானினே மானதாய புண்ய ச்லோகாய மானினே |
சிஷ்ய சிக்ஷண தக்ஷாய லோக ஸம்ஸ்திதி ஹேதவே||
ஸ்வனுஷ்டித ஸ்வதர்மாய தர்ம மார்க ப்ரதர்சினே|
சமாதி ஷட்காச்ரயாய ஸ்திதப்ரஜ்ஞாய தீமதே ||
பக்த ஹார்த்த தமோபேத திவ்ய தேஜஸ்ஸ்வரூபிணே||
- இதனைப் பாராயணம் செய்து தூப தீப, நேவேத்யம் செய்து, ஆரத்தி எடுத்து சுலபமாகப் பூஜை செய்யலாம். அவர் இயற்றிய தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம் பாராயணம் செய்யலாம்.
மௌனவ்யாக்யா
பரப்ரஹ்ம தத்வம்
யுவானாம் வர்ஷிஷ்டாந்தே
- என ஆரம்பிக்கும் குரு ஸ்லோகம் ஒவ்வொரு ஸ்லோகம் முடிவிலும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே என்று முடிவதால் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. அதனைப் பாராயணம் செய்தும் குருவருள் பெறலாம். அகண்டமண்டலாகாரம் எனத் துவங்கும் குரு ஸ்லோகமும் சாலச் சிறந்தது. அவரவர் கால அவகாசத்திற்கு ஏற்ப ஏதெனும் ஒரு குருஸ்லோகம் தினமும் பாராயணம் செய்வது அவசியம்.
த்யானமூலம் குரோர் மூர்த்தி: பூஜாமூலம் குரோர் பதம்
மந்த்ர மூலம் குரோர் வாக்யம் மோக்ஷ மூலம் குரோ: க்ருபா
என்று சாஸ்த்ரங்களில் கூறியிருக்கபடியால் குருதான்
அனைத்திற்கும் மூல காரணமாயிருப்பவர்.
ஆதிசங்கரர் நம் ஷண்மத, ஸனாதன தர்மத்தின்
காரண கர்த்தா! அவரை மனதில் இருத்தி பூஜை செய்து குருவருளைப் பெறுவோமாக.
ஸ்ரீ குருப்யோ நமஹ !
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய குரு சங்கர
குரு ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:||
அஜ்ஞான திமிராந்ந்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜன சலாகயா|
சக்ஷுர் உன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம:||
ஆதிசங்கர மானஸ பூஜா ஸ்லோகம்.:—
ஸத்யானந்த ஸ்வரூபாய போதைக ஸுக காரிணே|
நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே ||
நம: சாந்தாத்மனே துப்யம் நமோ குஹ்யதமாய ச |
அசிந்த்யாயாப்ரமேயாய அனாதினிதனாய ச ||
அமானினே மானதாய புண்ய ச்லோகாய மானினே |
சிஷ்ய சிக்ஷண தக்ஷாய லோக ஸம்ஸ்திதி ஹேதவே||
ஸ்வனுஷ்டித ஸ்வதர்மாய தர்ம மார்க ப்ரதர்சினே|
சமாதி ஷட்காச்ரயாய ஸ்திதப்ரஜ்ஞாய தீமதே ||
பக்த ஹார்த்த தமோபேத திவ்ய தேஜஸ்ஸ்வரூபிணே||
- இதனைப் பாராயணம் செய்து தூப தீப, நேவேத்யம் செய்து, ஆரத்தி எடுத்து சுலபமாகப் பூஜை செய்யலாம். அவர் இயற்றிய தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம் பாராயணம் செய்யலாம்.
மௌனவ்யாக்யா
பரப்ரஹ்ம தத்வம்
யுவானாம் வர்ஷிஷ்டாந்தே
- என ஆரம்பிக்கும் குரு ஸ்லோகம் ஒவ்வொரு ஸ்லோகம் முடிவிலும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே என்று முடிவதால் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. அதனைப் பாராயணம் செய்தும் குருவருள் பெறலாம். அகண்டமண்டலாகாரம் எனத் துவங்கும் குரு ஸ்லோகமும் சாலச் சிறந்தது. அவரவர் கால அவகாசத்திற்கு ஏற்ப ஏதெனும் ஒரு குருஸ்லோகம் தினமும் பாராயணம் செய்வது அவசியம்.
த்யானமூலம் குரோர் மூர்த்தி: பூஜாமூலம் குரோர் பதம்
மந்த்ர மூலம் குரோர் வாக்யம் மோக்ஷ மூலம் குரோ: க்ருபா
என்று சாஸ்த்ரங்களில் கூறியிருக்கபடியால் குருதான்
அனைத்திற்கும் மூல காரணமாயிருப்பவர்.
ஆதிசங்கரர் நம் ஷண்மத, ஸனாதன தர்மத்தின்
காரண கர்த்தா! அவரை மனதில் இருத்தி பூஜை செய்து குருவருளைப் பெறுவோமாக.
ஸ்ரீ குருப்யோ நமஹ !
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய குரு சங்கர
சிவ குரு சங்கர சம்போ சங்கர சதாசிவ சங்கர…
இதையும் படிக்கலாம்...108 திவ்ய தேசங்களும் எங்கிருக்கிறது என்பதை சொல்லும் பாடல்
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8.42 மணி முதல் 9.45 மணிக்குள் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. விழா 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.
6-ந் தேதி கிருஷ்ணன் கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், 10-ந் தேதி வேட்டை சிவன் கோவிலுக்கு சாமி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 11-ந் தேதி தேதி சாமி தளியல் ஆற்றுக்கு ஆறாட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருவிழா நாட்களில் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு பூஜைகள் நடைபெறும். கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் திருவிழா நாட்களில் நடத்தும் வழிபாடுகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ள கதகளி நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. திருவிழாவையொட்டி நாகர்கோவிலை சேர்ந்த சிவ திருச்சிற்றம்பலம் குழுவினர் கோவில் சுற்றுப்புறத்தில் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
6-ந் தேதி கிருஷ்ணன் கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், 10-ந் தேதி வேட்டை சிவன் கோவிலுக்கு சாமி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 11-ந் தேதி தேதி சாமி தளியல் ஆற்றுக்கு ஆறாட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருவிழா நாட்களில் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு பூஜைகள் நடைபெறும். கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் திருவிழா நாட்களில் நடத்தும் வழிபாடுகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ள கதகளி நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. திருவிழாவையொட்டி நாகர்கோவிலை சேர்ந்த சிவ திருச்சிற்றம்பலம் குழுவினர் கோவில் சுற்றுப்புறத்தில் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
இந்த ஆலய இறைவனின் திருநாமம் பாசுபதநாதர், இறைவியின் திருநாமம் நல்லநாயகி, சற்குணாம்பாள் என்பதாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது.
சைவ திருத்தலங்களில் களம் என்பதாய் முடியும் திருத்தலங்கள் மூன்று. அவை திருஅஞ்சைக்களம், திருநெடுங்களம், திருவேட்களம். இவற்றில் திருஅஞ்சைக்களம், கேரளாவின் கொடுங்கோளூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற சிவத்தலங்களில் மலைநாட்டில் அமைந்த ஒரே தலம் இதுவே. இத்தல இறைவன் பெயர் அஞ்சை களத்தீசர். இறைவியின் திருநாமம் உமையம்மை என்பதாகும்.
அடுத்து திருநெடுங்களம், திருச்சி–தஞ்சை நெடுஞ்சாலையில் தூவாக்குடியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது காவிரியின் தென்கரை தலங்களில் ஒன்றாகும். இறைவன் நெடுங்களநாதர், இறைவி மங்கள நாயகி. வங்கியசோழன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம் இது.
மூன்றாவது திருவேட்களம். இது பூலோக கயிலாயம் எனப்படும் சிதம்பரத்திற்கு கிழக்கே 2 கிலோமீட்டர் தொலைவில், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கிறது. காவிரியின் வடகரை தலம். இறைவனின் திருநாமம் பாசுபதநாதர், இறைவியின் திருநாமம் நல்லநாயகி, சற்குணாம்பாள் என்பதாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது.
மகாபாரதத்தில் துரியோதனன் ஏற்பாட்டின்படி, தருமன் சகுனியோடு பகடையாடினான். பகடை ஆட்டத்தில் தோற்றவர் பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் (தலைமறைவு வாழ்க்கை) வாழவேண்டும் என்பது விதி. இதன்படி தோற்ற பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். வனவாசம் முடிந்து வந்ததும், பாண்டவர்கள் நாட்டிற்கு திரும்பி பங்கு கேட்பார்கள் என்பதால் அவர்களை போர் மூலமாக வீழ்த்த பல்வேறு தேசத்து அரசர்களையும், படைவீரர்களையும் துரியோதனன் திரட்டிக் கொண்டிருந்தான்.
இதுபற்றி பாண்டவர்களுக்கு வியாசர் தெரிவித்தார். பலம் பொருந்திய அவர்களது படைகளுடன் போரிட உங்களுக்கு தெய்வத்தின் அனுக்கிரகமும், பலமான அஸ்திரங்களும் தேவை என்பதையும் அவர் நினைவுறுத்தினார். விரைவாக படையை திரட்டும்படியும், தெய்வீக ஆற்றல் மிகுந்த அஸ்திரங்களை இறைவனிடம் கேட்டுப்பெறும் படியும் அறிவுறுத்தினார். இதற்கான ஆயத்தப்பணியில் பாண்டவர்கள் ஈடுபட்டனர்.
அர்ச்சுனன், தான் தவம் செய்ய தகுந்த இடம் தேடி அலைந்தான். அப்போது வயது முதிர்ந்த அந்தணர் வேடத்தில் வந்த இந்திரன், சிவனை நோக்கி தியானம் செய்யும்படி கூறினான். தவம் செய்ய உகந்த இடம் எது? என்று தன் மானசீக குருவான கிருஷ்ணரிடம் வேண்டினான் அர்ச்சுனன்.
அவனது வேண்டுதலால் மகிழ்ந்த கிருஷ்ணர், தில்லை வனமான சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மூங்கில் வனத்தை தேர்ந்தெடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தார். கிருஷ்ணர் கூறியபடி அவ்விடத்திற்கு வந்து சேர்ந்த அர்ச்சுனன், ஒற்றைக் காலில் நின்றபடி சிவனை நோக்கி தவம் மேற்கொண்டான்.
அர்ச்சுனன் தவம் செய்வதை அறிந்த துரியோதனன், மூகாசுரன் என்னும் அசுரனை அனுப்பி வைத்தான். அதே நேரத்தில் அர்ச்சுனனுக்கு அருள்புரிவதற்காக ஈசன், வேடுவ வேடம் கொண்டு அங்கு வந்தார். பன்றி உருவம் எடுத்து வந்த அசுரன், அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முயன்றான். இதை உணர்ந்த அர்ச்சுனன், அந்த பன்றியின் மீது அம்பு தொடுத்தான். அதைக் கண்டு விலகி ஓடிய பன்றியை, அம்பு துரத்திச் சென்று வீழ்த்தியது. கண் விழித்த அர்ச்சுனன், பன்றியைத் தேடி வந்தான். அங்கு அவன் கண்ட காட்சி திகைக்கச் செய்தது. தன்னுடைய அம்பு மட்டுமல்லாது, பன்றியின் மீது மற்றொரு அம்பும் தைத்திருந்தது.
அப்போது வேடன் உருவில் இருந்த ஈசன் அங்கு வந்தார். அவர், ‘பன்றியை எய்து வீழ்த்தியது நான்தான். ஆகையால் அதை வீழ்த்திய பெருமை என்னையே சாரும். அது எனக்கே சொந்தம்’ என்றார்.
அர்ச்சுனன் அதை ஏற்க மறுத்தான். இதனால் இருவருக்கும் இடையே தொடங்கிய சொற்போர், ஒரு கட்டத்தில் வில்போராக மாறியது. இந்த போரில் அர்ச்சுனனால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் அக்னி தேவனிடம் இருந்து பலம் பொருந்திய காண்டீபத்தை அர்ச்சுனன் பெற்றான். ஆனால் அதை சிவபெருமான் பறித்து இரண்டாக முறித்து எறிந்தார்.
இதுபொறுக்காத அர்ச்சுனன் முறிந்த அம்பை எடுத்து, ஈசனின் தலையில் அடித்தான். இதையடுத்து ஈசன், தன் காலால் அர்ச்சுனனை உந்தித்தள்ள அவன் மேல்நோக்கிச் சென்றான். அப்போதுதான், வந்திருப்பது சாதாரண வேடன் இல்லை என்பதை அர்ச்சுனன் உணர்ந்தான். ஈசனை நினைத்து மனமுருக மன்னிப்பு வேண்டினான். இதையடுத்து அவன் கீழே வரும் வேளையில் அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் விழச்செய்து காப்பாற்றினார்.
பின்னர் இறைவன் அம்பாளுடன் அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்தார். மேலும் பாசுபத அஸ்திரத்தையும் அளித்தார். அர்ச்சுனனுடன் இறைவன் களம் புகுந்ததால், இந்த ஊர் திருவேட்களம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் பாசுபத அஸ்திரம் வழங்கியதால், பாசுபதநாதர் என்று பெயர் பெற்றார். அர்ச்சுனன் விழுந்த தீர்த்தம் கிருபசாகரம் என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சம் மூங்கில். பாடல்பெற்ற காவிரி வடகரை சிவத்தலங்களில், இது இரண்டாவது திருத்தலமாகும். தலவரலாற்றின் அடிப்படையில் இவ்வாலயம் மகாபாரத வரலாற்றுடன் தொடர்புடையதாகவும், கவுரவர்களை வெல்ல பாண்டவர்களுக்கு வல்லமை அளித்த திருத்தலமாகவும் விளங்குகின்றது.
கோவில் அமைப்பு
மூன்று நிலைகளுடனும் ஐந்து கலசங்களுடனும் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது ராஜகோபுரம். இதற்கு முன்பாக வளர்ந்து நிற்கும் நாகலிங்க மரமும், எதிரில் நான்கு பக்கமும் படிக்கட்டுகளுடன் அழகுற காட்சியளிக்கும் தல தீர்த்தமான கிருபாசாகரமும் கோவிலுக்கு கொள்ளை அழகு சேர்க்கின்றது. கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், துவாஜாரோகண மண்டபமும், பிரகார சுற்றில் சித்தி விநாயகர், சோமாஸ்கந்தர், நால்வருடன் சொக்கநாதர்–மீனாட்சி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சந்திர–சூரியர் சன்னிதிகள் உள்ளன.
கர்ப்பக்கிரகம் மற்றும் அர்த்த மண்டபத்தின் கோஷ்டத்தில் உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் தனி சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார். கொடிமரம், பலிபீடம், நந்தியம்பெருமானையும் வணங்கி உள்ளே செல்ல, சபாமண்டபத்தில் வலதுபுறத்தில் கிரீடத்துடன் கூடிய நடராஜரும் சிவகாமியும் தரிசனம் தருகின்றனர். இடதுபக்கத்தில் நால்வர் உள்பட உற்சவ மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. இவைகளில் விநாயகர், வள்ளிதேவசேனா சமேத முருகன், சோமாஸ்கந்தர், சற்குணாம்பிகை, அஸ்திரதேவர் ஆகியோரது திருவுருவங்கள் மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
திருமேனியில் தழும்பு
கருவறையில் இறைவன் சிவலிங்க திருமேனியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அர்ச்சுனன் வில்லால் அடித்த தழும்பு இங்குள்ள இறைவன் திருமேனியில் உள்ளது. அம்பிகை சற்குணாம்பிகை தன் இருகரங்களில் நீலோத்பவ மலர், தாமரை மலர் ஏந்தி, மற்ற இருகரங்களில் வரத அபய முத்திரைக்காட்டி அருள்பாலிக்கின்றாள். அம்பிகை சன்னிதியின் நேர் எதிரில் மகாமண்டபத்தில் ஆலயத்தின் தலவரலாற்றுடன் தொடர்புடைய சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. இறைவனும் இறைவியும் வேடுவ வடிவத்தில் நாய்களுடன் செல்வது, அர்ச்சுனனுடன் போர்புரிவது, அர்ச்சுனன் தவம் செய்வது, மூகாசுரன் தவத்திற்கு இடையூறு செய்வது, இந்திரன், ரிஷப வாகன காட்சி, அர்ச்சுன அஸ்திரம், அம்புகளை சமர்ப்பணம் செய்வது போன்ற வரலாற்றுடன் தொடர்புடைய காட்சிகள் அழகுததும்புவதாகவும், கலையுணர்வும் இறையுணர்வும் தருவதாகவும் படைக்கப்பட்டுள்ளன.
சுவாமிக்கும் அம்பிகைக்கும் அடுத்ததாக பிரகாரத்தில் உள்ள முருகன் சன்னிதி மிகவும் சிறப்புக்குரியதாகும். திருவாசியுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் நுணுக்கமான கலைவேலைப்பாடு கொண்டிருக் கிறது. அருணகிரிநாதர் தம் திருப்புகழில் இவ்வாலய முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். இருகைகளாலும் அம்புவிடக் கூடிய அமைப்பில், அர்ச்சுனனின் சிலை உள்ளது. பாசுபதம் ஏந்திய மூர்த்தியும், அர்ச்சுனன் சிலையும் மிக பழங்காலத்தில் குளத்திலிருந்து கிடைத்ததாக கூறப்படுகின்றது. தலவிருட்சமான மூங்கில் புனர்பூச நட்சத்திரத்திற்குரியது என்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவேட்கள நாயகனை தரிசிப்பது விசேஷம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற இத்தலத்தை, நக்கீரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் மற்றும் ஆன்மிக அடியார்கள் பலர் தரிசித்து இறையருள் பெற்றுள்ளனர்.
வைகாசி விழா
நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடந்தேறும் இந்தக் கோவிலின் முக்கிய விழா வைகாசி விசாகமாகும். காலை அர்ச்சுனன் தவத்திற்கு செல்லுதல், மாலை 5 மணியளவில் சுவாமி வேடரூபம், அம்பிகை வேடுவச்சி, பூதகணங்கள் வேடக்கணங்களாகச் செல்லுதல், ஊர்வாழ் பழங்குடியினர் பன்றி வேடம் அணிந்து புராணவரலாறு கலைநிகழ்ச்சியாக நடத்தப்படும். வாண வேடிக்கையுடன் பாசுபதம் வழங்குதல், பஞ்சமூர்த்திகள் வீதிவலம் என்று விழா களை கட்டும்.
அடுத்து திருநெடுங்களம், திருச்சி–தஞ்சை நெடுஞ்சாலையில் தூவாக்குடியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது காவிரியின் தென்கரை தலங்களில் ஒன்றாகும். இறைவன் நெடுங்களநாதர், இறைவி மங்கள நாயகி. வங்கியசோழன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம் இது.
மூன்றாவது திருவேட்களம். இது பூலோக கயிலாயம் எனப்படும் சிதம்பரத்திற்கு கிழக்கே 2 கிலோமீட்டர் தொலைவில், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கிறது. காவிரியின் வடகரை தலம். இறைவனின் திருநாமம் பாசுபதநாதர், இறைவியின் திருநாமம் நல்லநாயகி, சற்குணாம்பாள் என்பதாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது.
மகாபாரதத்தில் துரியோதனன் ஏற்பாட்டின்படி, தருமன் சகுனியோடு பகடையாடினான். பகடை ஆட்டத்தில் தோற்றவர் பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் (தலைமறைவு வாழ்க்கை) வாழவேண்டும் என்பது விதி. இதன்படி தோற்ற பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். வனவாசம் முடிந்து வந்ததும், பாண்டவர்கள் நாட்டிற்கு திரும்பி பங்கு கேட்பார்கள் என்பதால் அவர்களை போர் மூலமாக வீழ்த்த பல்வேறு தேசத்து அரசர்களையும், படைவீரர்களையும் துரியோதனன் திரட்டிக் கொண்டிருந்தான்.
இதுபற்றி பாண்டவர்களுக்கு வியாசர் தெரிவித்தார். பலம் பொருந்திய அவர்களது படைகளுடன் போரிட உங்களுக்கு தெய்வத்தின் அனுக்கிரகமும், பலமான அஸ்திரங்களும் தேவை என்பதையும் அவர் நினைவுறுத்தினார். விரைவாக படையை திரட்டும்படியும், தெய்வீக ஆற்றல் மிகுந்த அஸ்திரங்களை இறைவனிடம் கேட்டுப்பெறும் படியும் அறிவுறுத்தினார். இதற்கான ஆயத்தப்பணியில் பாண்டவர்கள் ஈடுபட்டனர்.
அர்ச்சுனன், தான் தவம் செய்ய தகுந்த இடம் தேடி அலைந்தான். அப்போது வயது முதிர்ந்த அந்தணர் வேடத்தில் வந்த இந்திரன், சிவனை நோக்கி தியானம் செய்யும்படி கூறினான். தவம் செய்ய உகந்த இடம் எது? என்று தன் மானசீக குருவான கிருஷ்ணரிடம் வேண்டினான் அர்ச்சுனன்.
அவனது வேண்டுதலால் மகிழ்ந்த கிருஷ்ணர், தில்லை வனமான சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மூங்கில் வனத்தை தேர்ந்தெடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தார். கிருஷ்ணர் கூறியபடி அவ்விடத்திற்கு வந்து சேர்ந்த அர்ச்சுனன், ஒற்றைக் காலில் நின்றபடி சிவனை நோக்கி தவம் மேற்கொண்டான்.
அர்ச்சுனன் தவம் செய்வதை அறிந்த துரியோதனன், மூகாசுரன் என்னும் அசுரனை அனுப்பி வைத்தான். அதே நேரத்தில் அர்ச்சுனனுக்கு அருள்புரிவதற்காக ஈசன், வேடுவ வேடம் கொண்டு அங்கு வந்தார். பன்றி உருவம் எடுத்து வந்த அசுரன், அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முயன்றான். இதை உணர்ந்த அர்ச்சுனன், அந்த பன்றியின் மீது அம்பு தொடுத்தான். அதைக் கண்டு விலகி ஓடிய பன்றியை, அம்பு துரத்திச் சென்று வீழ்த்தியது. கண் விழித்த அர்ச்சுனன், பன்றியைத் தேடி வந்தான். அங்கு அவன் கண்ட காட்சி திகைக்கச் செய்தது. தன்னுடைய அம்பு மட்டுமல்லாது, பன்றியின் மீது மற்றொரு அம்பும் தைத்திருந்தது.
அப்போது வேடன் உருவில் இருந்த ஈசன் அங்கு வந்தார். அவர், ‘பன்றியை எய்து வீழ்த்தியது நான்தான். ஆகையால் அதை வீழ்த்திய பெருமை என்னையே சாரும். அது எனக்கே சொந்தம்’ என்றார்.
அர்ச்சுனன் அதை ஏற்க மறுத்தான். இதனால் இருவருக்கும் இடையே தொடங்கிய சொற்போர், ஒரு கட்டத்தில் வில்போராக மாறியது. இந்த போரில் அர்ச்சுனனால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் அக்னி தேவனிடம் இருந்து பலம் பொருந்திய காண்டீபத்தை அர்ச்சுனன் பெற்றான். ஆனால் அதை சிவபெருமான் பறித்து இரண்டாக முறித்து எறிந்தார்.
இதுபொறுக்காத அர்ச்சுனன் முறிந்த அம்பை எடுத்து, ஈசனின் தலையில் அடித்தான். இதையடுத்து ஈசன், தன் காலால் அர்ச்சுனனை உந்தித்தள்ள அவன் மேல்நோக்கிச் சென்றான். அப்போதுதான், வந்திருப்பது சாதாரண வேடன் இல்லை என்பதை அர்ச்சுனன் உணர்ந்தான். ஈசனை நினைத்து மனமுருக மன்னிப்பு வேண்டினான். இதையடுத்து அவன் கீழே வரும் வேளையில் அங்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் விழச்செய்து காப்பாற்றினார்.
பின்னர் இறைவன் அம்பாளுடன் அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்தார். மேலும் பாசுபத அஸ்திரத்தையும் அளித்தார். அர்ச்சுனனுடன் இறைவன் களம் புகுந்ததால், இந்த ஊர் திருவேட்களம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் பாசுபத அஸ்திரம் வழங்கியதால், பாசுபதநாதர் என்று பெயர் பெற்றார். அர்ச்சுனன் விழுந்த தீர்த்தம் கிருபசாகரம் என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சம் மூங்கில். பாடல்பெற்ற காவிரி வடகரை சிவத்தலங்களில், இது இரண்டாவது திருத்தலமாகும். தலவரலாற்றின் அடிப்படையில் இவ்வாலயம் மகாபாரத வரலாற்றுடன் தொடர்புடையதாகவும், கவுரவர்களை வெல்ல பாண்டவர்களுக்கு வல்லமை அளித்த திருத்தலமாகவும் விளங்குகின்றது.
கோவில் அமைப்பு
மூன்று நிலைகளுடனும் ஐந்து கலசங்களுடனும் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது ராஜகோபுரம். இதற்கு முன்பாக வளர்ந்து நிற்கும் நாகலிங்க மரமும், எதிரில் நான்கு பக்கமும் படிக்கட்டுகளுடன் அழகுற காட்சியளிக்கும் தல தீர்த்தமான கிருபாசாகரமும் கோவிலுக்கு கொள்ளை அழகு சேர்க்கின்றது. கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், துவாஜாரோகண மண்டபமும், பிரகார சுற்றில் சித்தி விநாயகர், சோமாஸ்கந்தர், நால்வருடன் சொக்கநாதர்–மீனாட்சி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சந்திர–சூரியர் சன்னிதிகள் உள்ளன.
கர்ப்பக்கிரகம் மற்றும் அர்த்த மண்டபத்தின் கோஷ்டத்தில் உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் தனி சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார். கொடிமரம், பலிபீடம், நந்தியம்பெருமானையும் வணங்கி உள்ளே செல்ல, சபாமண்டபத்தில் வலதுபுறத்தில் கிரீடத்துடன் கூடிய நடராஜரும் சிவகாமியும் தரிசனம் தருகின்றனர். இடதுபக்கத்தில் நால்வர் உள்பட உற்சவ மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. இவைகளில் விநாயகர், வள்ளிதேவசேனா சமேத முருகன், சோமாஸ்கந்தர், சற்குணாம்பிகை, அஸ்திரதேவர் ஆகியோரது திருவுருவங்கள் மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
திருமேனியில் தழும்பு
கருவறையில் இறைவன் சிவலிங்க திருமேனியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அர்ச்சுனன் வில்லால் அடித்த தழும்பு இங்குள்ள இறைவன் திருமேனியில் உள்ளது. அம்பிகை சற்குணாம்பிகை தன் இருகரங்களில் நீலோத்பவ மலர், தாமரை மலர் ஏந்தி, மற்ற இருகரங்களில் வரத அபய முத்திரைக்காட்டி அருள்பாலிக்கின்றாள். அம்பிகை சன்னிதியின் நேர் எதிரில் மகாமண்டபத்தில் ஆலயத்தின் தலவரலாற்றுடன் தொடர்புடைய சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. இறைவனும் இறைவியும் வேடுவ வடிவத்தில் நாய்களுடன் செல்வது, அர்ச்சுனனுடன் போர்புரிவது, அர்ச்சுனன் தவம் செய்வது, மூகாசுரன் தவத்திற்கு இடையூறு செய்வது, இந்திரன், ரிஷப வாகன காட்சி, அர்ச்சுன அஸ்திரம், அம்புகளை சமர்ப்பணம் செய்வது போன்ற வரலாற்றுடன் தொடர்புடைய காட்சிகள் அழகுததும்புவதாகவும், கலையுணர்வும் இறையுணர்வும் தருவதாகவும் படைக்கப்பட்டுள்ளன.
சுவாமிக்கும் அம்பிகைக்கும் அடுத்ததாக பிரகாரத்தில் உள்ள முருகன் சன்னிதி மிகவும் சிறப்புக்குரியதாகும். திருவாசியுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் நுணுக்கமான கலைவேலைப்பாடு கொண்டிருக் கிறது. அருணகிரிநாதர் தம் திருப்புகழில் இவ்வாலய முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். இருகைகளாலும் அம்புவிடக் கூடிய அமைப்பில், அர்ச்சுனனின் சிலை உள்ளது. பாசுபதம் ஏந்திய மூர்த்தியும், அர்ச்சுனன் சிலையும் மிக பழங்காலத்தில் குளத்திலிருந்து கிடைத்ததாக கூறப்படுகின்றது. தலவிருட்சமான மூங்கில் புனர்பூச நட்சத்திரத்திற்குரியது என்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவேட்கள நாயகனை தரிசிப்பது விசேஷம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பெற்ற இத்தலத்தை, நக்கீரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் மற்றும் ஆன்மிக அடியார்கள் பலர் தரிசித்து இறையருள் பெற்றுள்ளனர்.
வைகாசி விழா
நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடந்தேறும் இந்தக் கோவிலின் முக்கிய விழா வைகாசி விசாகமாகும். காலை அர்ச்சுனன் தவத்திற்கு செல்லுதல், மாலை 5 மணியளவில் சுவாமி வேடரூபம், அம்பிகை வேடுவச்சி, பூதகணங்கள் வேடக்கணங்களாகச் செல்லுதல், ஊர்வாழ் பழங்குடியினர் பன்றி வேடம் அணிந்து புராணவரலாறு கலைநிகழ்ச்சியாக நடத்தப்படும். வாண வேடிக்கையுடன் பாசுபதம் வழங்குதல், பஞ்சமூர்த்திகள் வீதிவலம் என்று விழா களை கட்டும்.
காலை 6.45 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந் திருக்கும். சிதம்பரத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். இன்று தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான இன்று (திங்கட்கிழமை) நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்திர புஷ்கரணி வந்தடைகிறார். அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயன பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான இன்று (திங்கட்கிழமை) நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்திர புஷ்கரணி வந்தடைகிறார். அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயன பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் சென்றடைகிறார். அங்கு திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவடைகிறது.
இதையும் படிக்கலாம்...ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்தக்கிணறுகள் இன்று திறப்பு: பக்தர்கள் புனித நீராடினர்
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண விழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஐப்பசி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மாலையில் பாகம்பிரியாள் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
9-ம் திருவிழாவான முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு காலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாகம்பிரியாள் அம்பாள் எழுந்தருளினார். இதையடுத்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளில் நடந்த இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, தேரடி மாடனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சங்கரராமேஸ்வரர்- பாகம்பிரியாள் அம்பாள் திருக்கல்யாண வைபவம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மாலையில் பாகம்பிரியாள் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
9-ம் திருவிழாவான முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு காலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாகம்பிரியாள் அம்பாள் எழுந்தருளினார். இதையடுத்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளில் நடந்த இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, தேரடி மாடனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சங்கரராமேஸ்வரர்- பாகம்பிரியாள் அம்பாள் திருக்கல்யாண வைபவம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களிடம் நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் முக்கியமானதாகும்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
மகா தீபத்திற்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக நெய் காணிக்கை செலுத்துவர். தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களிடம் நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில், நெய் காணிக்கையாக 1 கிலோவிற்கு ரூ.250-ம், அரை கிலோவிற்கு ரூ.150-ம், கால் கிலோவிற்கு ரூ.80-ம் வசூலிக்கப்படுகிறது.
பக்தர்கள் வழங்கும் நெய் காணிக்கை பணத்திற்கு கோவில் நிர்வாகம் மூலம் ரசீது வழங்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் முடிந்த பிறகு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களின் ரசீதை கோவில் அலுவலகத்தில் காண்பித்து தீப ‘மை’ பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தினர்.
மேலும் தீபத்திருவிழாவை முன்னிட்டு கோவிலில் மதுரையை சேர்ந்த அன்னை மீனாட்சி உழவார பணி குழு மூலம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
மகா தீபத்திற்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக நெய் காணிக்கை செலுத்துவர். தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களிடம் நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில், நெய் காணிக்கையாக 1 கிலோவிற்கு ரூ.250-ம், அரை கிலோவிற்கு ரூ.150-ம், கால் கிலோவிற்கு ரூ.80-ம் வசூலிக்கப்படுகிறது.
பக்தர்கள் வழங்கும் நெய் காணிக்கை பணத்திற்கு கோவில் நிர்வாகம் மூலம் ரசீது வழங்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் முடிந்த பிறகு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களின் ரசீதை கோவில் அலுவலகத்தில் காண்பித்து தீப ‘மை’ பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தினர்.
மேலும் தீபத்திருவிழாவை முன்னிட்டு கோவிலில் மதுரையை சேர்ந்த அன்னை மீனாட்சி உழவார பணி குழு மூலம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் திறக்கப்படாமல் மூடப்பட்டன. தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் வழக்கம்போல் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
6 மாதத்திற்கு மேலாக தீர்த்த கிணறுகள் மூடப்பட்டு கிடப்பதால் தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தீர்த்த கிணறை விரைந்து திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.
6 மாதத்திற்கு மேலாக தீர்த்த கிணறுகள் மூடப்பட்டு கிடப்பதால் தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தீர்த்த கிணறை விரைந்து திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.
அதன்பேரில் 190 நாட்களுக்குப் பின்பு இன்று (1-ந்தேதி) அதிகாலை 6 மணிமுதல் ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடினர்.
இதனால் இந்த புனித தீர்த்தங்களில் புனித நீர் இறைத்து ஊற்றும் தனியார் பணியாளர்கள் 424 பேர் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
இனிவரும் காலங்களில் கொரோனா குறைந்து பக்தர்களின் வருகை அதிகம் வரும் நிலை இருப்பதால் ராமேசுவரம் பகுதியில் கோவிலை சுற்றி சாலையோர வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் மற்றும் ஆட்டோ வாகனங்கள் உள்பட அனைத்து தொழிலாளிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்...மாங்கல்ய தோஷத்தால் ஏற்படும் விளைவுகள்
ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குச் ஜோதிட ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாமிடம் என்பது மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுள் ஸ்தானம் மற்றும் தாம்பத்திய உறவு பற்றியும் கூறும் இடமாகும்.
2-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 8-ம் இடத்தைப் பார்க்கும். 8-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 2-ம் இடத்தைப் பார்க்கும். 2-ம் இடத்திற்கும் 8-ம் இடத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. பெண்ணின் ஜனன கால ஜாதகத்தில் 2, 8-க்கு தொடர்புடைய பாவ கிரகங்கள் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்துகிறது.
இந்த தோஷத்தால் தம்பதிகளுக்குள் வாக்குவாதம் அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையால் பயனற்ற நிலை உண்டாகும். சுயமாக சிந்தித்து செயல்படத் தெரியாத ஆண், குடும்பத்தை முறையாக வழிநடத்தத் தெரியாத, சம்பாதிக்காத, சோம்பேறியாக, ஊதாரியாக வாழும் கணவர் அமைவார்.
இல்லையேல் சில குடும்பத் தலைவர்கள் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தன் விருப்பப்படியே மனைவி வாழ வேண்டும் என்று விரும்புவார். கைப்பாவையாக நடத்துவது, அடிமை போல் வேலை வாங்குவதும் 8-ம் மிடக் குறைபாட்டில் அடங்கும். வாழ்க்கைத் துணைக்கு தீராத, தீர்க்க முடியாத அதிகப்படியான கடன் அல்லது நோய் இருக்கும்.
தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக கருத்து வேறுபாடு இல்லாமல் பிரிந்து வாழ்வது அல்லது கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பிரிந்து வாழ்வது. அல்லது தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது.
2-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 8-ம் இடத்தைப் பார்க்கும். 8-ம் இடத்தில் நிற்கும் கிரகம் 2-ம் இடத்தைப் பார்க்கும். 2-ம் இடத்திற்கும் 8-ம் இடத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. பெண்ணின் ஜனன கால ஜாதகத்தில் 2, 8-க்கு தொடர்புடைய பாவ கிரகங்கள் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்துகிறது.
இந்த தோஷத்தால் தம்பதிகளுக்குள் வாக்குவாதம் அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையால் பயனற்ற நிலை உண்டாகும். சுயமாக சிந்தித்து செயல்படத் தெரியாத ஆண், குடும்பத்தை முறையாக வழிநடத்தத் தெரியாத, சம்பாதிக்காத, சோம்பேறியாக, ஊதாரியாக வாழும் கணவர் அமைவார்.
இல்லையேல் சில குடும்பத் தலைவர்கள் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தன் விருப்பப்படியே மனைவி வாழ வேண்டும் என்று விரும்புவார். கைப்பாவையாக நடத்துவது, அடிமை போல் வேலை வாங்குவதும் 8-ம் மிடக் குறைபாட்டில் அடங்கும். வாழ்க்கைத் துணைக்கு தீராத, தீர்க்க முடியாத அதிகப்படியான கடன் அல்லது நோய் இருக்கும்.
தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக கருத்து வேறுபாடு இல்லாமல் பிரிந்து வாழ்வது அல்லது கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பிரிந்து வாழ்வது. அல்லது தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது.
திருப்பரங்குன்றம் கோவிலில் சிம்மாசனத்தில் தெய்வானை அம்பாள் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து அருள்பாலித்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 2 முறை பூரத்திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆடி மாதத்தில் நடைபெறும் பூரத்திருவிழாவில் கோவர்த்தனாம்பிகையும், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் பூரத்திருவிழாவில் தெய்வானை அம்பாள் மட்டும் எழுந்தருளி நகர்வலம் வந்து அருள்பாலிப்பது வழக்கம்.
இந்த நிலையில் ஐப்பசி மாதபூரத்திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் தெய்வானை அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதனையடுத்து தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகைகளுடன் புதிய பட்டாடை அணிவிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடந்தது. அவை கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. இந்த நிலையில் சிம்மாசனத்தில் தெய்வானை அம்பாள் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து அருள்பாலித்தார்.
இந்த நிலையில் ஐப்பசி மாதபூரத்திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் தெய்வானை அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதனையடுத்து தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகைகளுடன் புதிய பட்டாடை அணிவிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடந்தது. அவை கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. இந்த நிலையில் சிம்மாசனத்தில் தெய்வானை அம்பாள் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து அருள்பாலித்தார்.






