search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளிய போது எடுத்த படம்.
    X
    நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளிய போது எடுத்த படம்.

    நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்: இன்று தீர்த்தவாரி

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். இன்று தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்க கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

    ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான இன்று (திங்கட்கிழமை) நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்திர புஷ்கரணி வந்தடைகிறார். அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயன பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் சென்றடைகிறார். அங்கு திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவடைகிறது.

    Next Story
    ×