என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலவர் – வில்வவனேசுவரர்
அம்மன் – வளைக்கைநாயகி
தல விருட்சம் – வில்வமரம்
தீர்த்தம் – எமதீர்த்தம்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருவைகாவூர், வில்வவனம்
தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.
அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.
சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர். மதியம் எமதீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். இரவில் சுவாமி, அம்பாள் இருவரும் ஒரு ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளுவர். இந்த சப்பர பவனியும் விசேஷமானது. இதற்காக மூங்கில் கீற்றில், தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சப்பரம் இது.
இங்கு துவாரபாலகர்கள் கிடையாது. பெருமாள், பிரம்மா இருவரும், துவாரபாலகர்கள் இடத்தில் உள்ளனர். அருகில் கையில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும், இங்கு சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர். இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள கலையம்சமான முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது. முருகன் கையிலுள்ள ரேகைககள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். கோயில் முகப்பில் வேடனை, புலி விரட்டிய சம்பவம் சுதை சிற்பமாக உள்ளது.
இந்த கோயிலில் உள்ள அம்பாள் “வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி)” மிகவும் அருள் வாய்ந்தவர். வெள்ளிக் கிழமை செவ்வாய் கிழமைகளில் மாலை 6 லிருந்து 7:30 க்குள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தல் விசேசம். குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும். இங்கு நின்று வழிபட்டுக்கொண்டிருக்கும்போதே சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். இவர் கூறியதுபோலவே எல்லா விசயங்கள் நிகழ்ந்திருப்பதாக இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர்.
வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாகத் புராணம் கூறுகிறது. ஊழிக் காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி, தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு “வில்வவனேசுவரர்” என்றும் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பரோ அது போல் சுவாமி, அம்பாள் சந்நிதிகள் உள்ளன. தீர்த்தங்களில் குளித்தாலோ அல்லது தெளித்து கொண்டாலோ பிணிகள் நீங்கும். தோசங்கள் விலகும்.
சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக – திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது என்பது ஐதீகம்.
இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்குநோக்கி காட்சி தருகிறது. உள் நுழைந்தால் நந்தி நம்மைநோக்கி திரும்பி (கிழக்குநோக்கி) இருப்பதைக் காணலாம். உள் கோபுரவாயில் நுழைந்தால் – வாயிலில் இடப்பால் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழலாம். வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சந்நிதியும், சுந்தரமூர்த்தி விநாயகர் சந்நிதியும், வள்ளிதெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை:
வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில்,
திருவைகாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம்.
அம்மன் – வளைக்கைநாயகி
தல விருட்சம் – வில்வமரம்
தீர்த்தம் – எமதீர்த்தம்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருவைகாவூர், வில்வவனம்
தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றைத் துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன.
அன்று மகா சிவராத்திரி நாள். ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார். அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார். பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.
சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, கருவறையில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர். மதியம் எமதீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். இரவில் சுவாமி, அம்பாள் இருவரும் ஒரு ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளுவர். இந்த சப்பர பவனியும் விசேஷமானது. இதற்காக மூங்கில் கீற்றில், தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சப்பரம் இது.
இங்கு துவாரபாலகர்கள் கிடையாது. பெருமாள், பிரம்மா இருவரும், துவாரபாலகர்கள் இடத்தில் உள்ளனர். அருகில் கையில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும், இங்கு சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர். இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள கலையம்சமான முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது. முருகன் கையிலுள்ள ரேகைககள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். கோயில் முகப்பில் வேடனை, புலி விரட்டிய சம்பவம் சுதை சிற்பமாக உள்ளது.
இந்த கோயிலில் உள்ள அம்பாள் “வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி)” மிகவும் அருள் வாய்ந்தவர். வெள்ளிக் கிழமை செவ்வாய் கிழமைகளில் மாலை 6 லிருந்து 7:30 க்குள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தல் விசேசம். குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும். இங்கு நின்று வழிபட்டுக்கொண்டிருக்கும்போதே சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். இவர் கூறியதுபோலவே எல்லா விசயங்கள் நிகழ்ந்திருப்பதாக இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர்.
வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாகத் புராணம் கூறுகிறது. ஊழிக் காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி, தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு “வில்வவனேசுவரர்” என்றும் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பரோ அது போல் சுவாமி, அம்பாள் சந்நிதிகள் உள்ளன. தீர்த்தங்களில் குளித்தாலோ அல்லது தெளித்து கொண்டாலோ பிணிகள் நீங்கும். தோசங்கள் விலகும்.
சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக – திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது என்பது ஐதீகம்.
இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. முகப்பில் விநாயகர் காட்சி தருகின்றார். முகப்பு வாயில் மட்டுமே ஐந்து கலசங்களுடன் கிழக்குநோக்கி காட்சி தருகிறது. உள் நுழைந்தால் நந்தி நம்மைநோக்கி திரும்பி (கிழக்குநோக்கி) இருப்பதைக் காணலாம். உள் கோபுரவாயில் நுழைந்தால் – வாயிலில் இடப்பால் வேடன் நிகழ்ச்சி கதையால் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மகிழலாம். வெளிப் பிராகாரத்தில் சப்தகன்னியர் சந்நிதியும், சுந்தரமூர்த்தி விநாயகர் சந்நிதியும், வள்ளிதெய்வானையுடன் கூடிய ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை:
வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில்,
திருவைகாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம்.
திருப்பதி வராக சாமி கோவிலில் ஜீர்ணோத்தரணம் மற்றும் அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷம் நாளை முதல் 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
திருப்பதியில் ஏழுமலையான் கோவில் அருகில் தெப்பக்குளம் அருகே வராஹ சாமி கோவில் உள்ளது. இங்கு பாலாலய பணிகள் நடந்து கருவறை விமானத்தில் தங்க மூலாம் பூசும் பணி முடிந்துள்ளது.
இதையொட்டி கோவிலில் ஜீர்ணோத்தரணம் மற்றும் அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷம் நாளை முதல் 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான அங்குரார்ப்பணம் இன்று தொடங்கியது.
நாளை வைதிக நிகழ்ச்சிகளும், 27-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 28-ந்தேதி மகா சாந்தி ஹோமமும், 29-ந்தேதி அஷ்டபந்தன மகா சம்ப்ரோசவம் மற்றும் பூர்ணாயுதி நடைபெறுகிறது.
அன்று இரவு உற்சவ மூர்த்திகளான விஸ்வகேஸ்வரர் மற்றும் ஏழுமலையான் ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிகளில் ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி கோவிலில் ஜீர்ணோத்தரணம் மற்றும் அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷம் நாளை முதல் 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான அங்குரார்ப்பணம் இன்று தொடங்கியது.
நாளை வைதிக நிகழ்ச்சிகளும், 27-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 28-ந்தேதி மகா சாந்தி ஹோமமும், 29-ந்தேதி அஷ்டபந்தன மகா சம்ப்ரோசவம் மற்றும் பூர்ணாயுதி நடைபெறுகிறது.
அன்று இரவு உற்சவ மூர்த்திகளான விஸ்வகேஸ்வரர் மற்றும் ஏழுமலையான் ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிகளில் ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சபரிமலை நாதனை, அவரின் மகா மந்திரம் ஜபித்து மனதார வழிபடுங்கள். சகல ஐஸ்வரியங்களையும் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவான் மணிகண்ட சுவாமி!
த்யானச் லோகம்
ஸனிக் தாரவ விஸார குந்தல பராம்
ஸிம்ஹா ஸனாத் யாஸினம்
ஸபூர் ஜத் பத்ர ஸுக் லுப்த குண்டல
மஹேஸ் விஸ் வாஸப் ருயோர் யுகம்
நீல கௌம வஸம் நவீன் ஜலத
ஸயாமம் ப்ரபா ஸ்த்யகா
பாயாத் பார்ஸ்வ யுகம் ஸுசரக்தா ஸகலா
கல்பம் ஸ்மரேத் ஆர்யுகம்
ஸனிக் தாரவ விஸார குந்தல பராம்
ஸிம்ஹா ஸனாத் யாஸினம்
ஸபூர் ஜத் பத்ர ஸுக் லுப்த குண்டல
மஹேஸ் விஸ் வாஸப் ருயோர் யுகம்
நீல கௌம வஸம் நவீன் ஜலத
ஸயாமம் ப்ரபா ஸ்த்யகா
பாயாத் பார்ஸ்வ யுகம் ஸுசரக்தா ஸகலா
கல்பம் ஸ்மரேத் ஆர்யுகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை மாதத்திற்கான திருவிழா கொடியேற்றம் 14-ம் தேதி தொடங்கிது. இந்த திருவிழா 23-ந் தேதி வரை நடக்கிறது.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான 15-ம் தேதி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் 8-ம் நாளான 21-ம்தேதி சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கார்த்திகைத் திருவிழாவில் 9-ம் நாளான 22-ம்தேதி சப்தாவரண சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான 15-ம் தேதி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் 8-ம் நாளான 21-ம்தேதி சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கார்த்திகைத் திருவிழாவில் 9-ம் நாளான 22-ம்தேதி சப்தாவரண சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டும் வருகிற இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.
தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி 9-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதே போல 10-ந் தேதி காலையிலும் தேர் பவனி நடக்கும்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.
தொடர்ந்து விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி 9-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதே போல 10-ந் தேதி காலையிலும் தேர் பவனி நடக்கும்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனைத் திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பதி இணை அதிகாரி வீரபிரம்மன் கலந்து கொண்டார்.
காலை 6 மணி முதல் 9 மணி வரை கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனைத் திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, சர்வ தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவில் துணை தாசில்தார் கவுஸ்தூரிபாய் மற்றும் பிரபாகர் ரெட்டி, கண்காணிப்பாளர் சேஷகிரி, கோவில் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
காலை 6 மணி முதல் 9 மணி வரை கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனைத் திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, சர்வ தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவில் துணை தாசில்தார் கவுஸ்தூரிபாய் மற்றும் பிரபாகர் ரெட்டி, கண்காணிப்பாளர் சேஷகிரி, கோவில் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள, செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், நீலா மேலவீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமண் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வேதாரண்யம் கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுகாட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் விழா நாட்களில் மாடவீதியில் நடைபெறும் தேரோட்டம், சாமி வீதி உலா ஆகியவை ரத்து செய்யப்பட்டு, கோவிலின் 5-ம் பிரகாரத்திலேயே நடைபெற்றது.
கடந்த 19-ந்தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கடந்த 20-ந்தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 21-ந்தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நேற்று முன்தினம் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடந்தது.
நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று இரவு கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் விழா நாட்களில் மாடவீதியில் நடைபெறும் தேரோட்டம், சாமி வீதி உலா ஆகியவை ரத்து செய்யப்பட்டு, கோவிலின் 5-ம் பிரகாரத்திலேயே நடைபெற்றது.
கடந்த 19-ந்தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கடந்த 20-ந்தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 21-ந்தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நேற்று முன்தினம் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடந்தது.
நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று இரவு கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சண்டிகேஸ்வரர் உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் திருமால் அருள் பெற்று மிகுந்த செல்வ சேர்க்கை கிடைக்க பெறுகின்றனர். இந்த விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலனை அறிந்து கொள்ளலாம்.
புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் புதன் கிழமையில் வருகிற விசாகம் நட்சத்திர தினத்தன்று விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 புதன் கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் புதனுக்கு பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் ஒரு பிராமணருக்கு தானம் அளிப்பது மிகுந்த நன்மையை தரும். பச்சை நிற ஆடைகள், பச்சை நிற காய்கறிகள் தானம் அளிப்பது உங்களின் புதன் கிரக தோஷங்கள் நீங்கி புதன் பகவானின் ஆசிகளை உங்களுக்கு தரும்.
நவகிரகங்களில் புதன் பகவான் ஆனவர் மனிதர்களுக்கு சுக போகங்களை அளிக்கும் திருமால் அம்சம் கொண்டவராக இருக்கிறார். எனவே புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் திருமால் அருள் பெற்று மிகுந்த செல்வ சேர்க்கை கிடைக்க பெறுகின்றனர். தொழில், வியாபார திறனுக்கு காரகனாக புதன் இருப்பதால் தொழில், வியாபாரங்கள் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி, புகழ் உண்டாகும். அறிவாற்றலுக்கும் புதன் அதிபதி என்பதால் இவ்விரதம் மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள்.
புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் புதனுக்கு பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் ஒரு பிராமணருக்கு தானம் அளிப்பது மிகுந்த நன்மையை தரும். பச்சை நிற ஆடைகள், பச்சை நிற காய்கறிகள் தானம் அளிப்பது உங்களின் புதன் கிரக தோஷங்கள் நீங்கி புதன் பகவானின் ஆசிகளை உங்களுக்கு தரும்.
நவகிரகங்களில் புதன் பகவான் ஆனவர் மனிதர்களுக்கு சுக போகங்களை அளிக்கும் திருமால் அம்சம் கொண்டவராக இருக்கிறார். எனவே புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் திருமால் அருள் பெற்று மிகுந்த செல்வ சேர்க்கை கிடைக்க பெறுகின்றனர். தொழில், வியாபார திறனுக்கு காரகனாக புதன் இருப்பதால் தொழில், வியாபாரங்கள் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி, புகழ் உண்டாகும். அறிவாற்றலுக்கும் புதன் அதிபதி என்பதால் இவ்விரதம் மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள்.
திருமலையில் உள்ள நாராயணகிரி தங்கும் விடுதியில் 2 அறைகள் மட்டுமே சேதம் அடைந்துள்ளன. திருமலையில் மீதமுள்ள 7 ஆயிரம் அறைகளில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை.
திருமலை அன்னமயபவனில் தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசியதாவது:-
திருமலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. கடந்த 18-ந்தேதி முதல் தரிசன டிக்கெட்டுகள் வைத்திருக்கும் பக்தர்களுக்கு வருகிற 30-ந்தேதிக்குள் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும்.
வருகிற 30-ந்தேதிக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு வர விரும்பும் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை சாப்ட்வேர் அப்ளிகேஷனில் 6 மாதங்களுக்குள் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். தற்போது இலவச தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம், ஆர்ஜித சேவைகள், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம் ஆகியவற்றில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
திருமலையில் ஓரிரு இடங்களில் தான் கனமழை பெய்தது. இதனால், பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை. அலிபிரியில் இருந்து திருமலை வரை நடைபாதையில் 13 இடங்களில் சேதம் ஏற்பட்டது. தடுப்புச்சுவர்களும் இடிந்து விழுந்தது. பல இடங்களில் மரங்களும் விழுந்தது. அவை, அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் அச்சமின்றி நடந்து வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
திருமலை-திருப்பதி, திருப்பதி-திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு மலைப்பாதைகளிலும் கடந்த 4 நாட்களாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் வந்து ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்கள்.
அலிபிரி நடைபாதை தற்போது நன்றாக இருக்கிறது. பக்தர்கள் நடந்து திருமலைக்கு செல்லலாம். ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் 4 இடத்தில் சேதம் ஏற்பட்டு இருந்தது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பெரிய பாறைகள் மோதி படிகட்டுகள் சேதம் அடைந்திருந்தது.
ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையை சரி செய்வதற்காக வாகனங்களில் தேவையானப் பொருட்களை கொண்டு செல்ல சரியான பாதை வசதி இல்லை. ஏற்கனவே இருக்கிற பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது. நடைபாதையை சரி செய்ய தேவையான கூலியாட்களும் கிடைக்கவில்லை.
இதனால் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையை சீரமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. ஸ்ரீவாரிமெட்டு வழியாக பக்தர்கள் நடந்து செல்ல தற்காலிக ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பணி நிறைவு பெறும் வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும். அதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
25-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ள நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான பொறியியல், வனவியல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என அனைத்துத்துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் உள்ளனர்.
மீட்புப்பணிகளில் பயன்படுத்த கூடிய பொக்லைன் எந்திரம், லாரிகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மலைப்பாதைகளில் திடீரென மரங்கள், பாறைகள் சரிந்து விழுந்தால் விரைந்து சென்று அகற்ற தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள நாராயணகிரி தங்கும் விடுதியில் 2 அறைகள் மட்டுமே சேதம் அடைந்துள்ளன. திருமலையில் மீதமுள்ள 7 ஆயிரம் அறைகளில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை. கனமழையின்போது கம்ப்யூட்டர்கள் தொடர்பான சர்வர்கள் செயலிழக்காமல் இருக்க, போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஐ.டி. துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்னதானம், கல்யாணக் கட்டா, கோவில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை. பக்தர்கள் தயக்கமின்றி, அச்சமின்றி திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்
இவ்வாறு அவர் பேசினார்.
திருமலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. கடந்த 18-ந்தேதி முதல் தரிசன டிக்கெட்டுகள் வைத்திருக்கும் பக்தர்களுக்கு வருகிற 30-ந்தேதிக்குள் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும்.
வருகிற 30-ந்தேதிக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு வர விரும்பும் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை சாப்ட்வேர் அப்ளிகேஷனில் 6 மாதங்களுக்குள் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். தற்போது இலவச தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம், ஆர்ஜித சேவைகள், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம் ஆகியவற்றில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
திருமலையில் ஓரிரு இடங்களில் தான் கனமழை பெய்தது. இதனால், பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை. அலிபிரியில் இருந்து திருமலை வரை நடைபாதையில் 13 இடங்களில் சேதம் ஏற்பட்டது. தடுப்புச்சுவர்களும் இடிந்து விழுந்தது. பல இடங்களில் மரங்களும் விழுந்தது. அவை, அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் அச்சமின்றி நடந்து வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
திருமலை-திருப்பதி, திருப்பதி-திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு மலைப்பாதைகளிலும் கடந்த 4 நாட்களாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் வந்து ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்கள்.
அலிபிரி நடைபாதை தற்போது நன்றாக இருக்கிறது. பக்தர்கள் நடந்து திருமலைக்கு செல்லலாம். ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் 4 இடத்தில் சேதம் ஏற்பட்டு இருந்தது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பெரிய பாறைகள் மோதி படிகட்டுகள் சேதம் அடைந்திருந்தது.
ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையை சரி செய்வதற்காக வாகனங்களில் தேவையானப் பொருட்களை கொண்டு செல்ல சரியான பாதை வசதி இல்லை. ஏற்கனவே இருக்கிற பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது. நடைபாதையை சரி செய்ய தேவையான கூலியாட்களும் கிடைக்கவில்லை.
இதனால் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையை சீரமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. ஸ்ரீவாரிமெட்டு வழியாக பக்தர்கள் நடந்து செல்ல தற்காலிக ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பணி நிறைவு பெறும் வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும். அதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
25-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ள நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான பொறியியல், வனவியல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என அனைத்துத்துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் உள்ளனர்.
மீட்புப்பணிகளில் பயன்படுத்த கூடிய பொக்லைன் எந்திரம், லாரிகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மலைப்பாதைகளில் திடீரென மரங்கள், பாறைகள் சரிந்து விழுந்தால் விரைந்து சென்று அகற்ற தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள நாராயணகிரி தங்கும் விடுதியில் 2 அறைகள் மட்டுமே சேதம் அடைந்துள்ளன. திருமலையில் மீதமுள்ள 7 ஆயிரம் அறைகளில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை. கனமழையின்போது கம்ப்யூட்டர்கள் தொடர்பான சர்வர்கள் செயலிழக்காமல் இருக்க, போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஐ.டி. துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்னதானம், கல்யாணக் கட்டா, கோவில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை. பக்தர்கள் தயக்கமின்றி, அச்சமின்றி திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகைத் திருவிழாவில் 9-ம் நாளான நேற்று சப்தாவரண சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை மாதத்திற்கான திருவிழா கொடியேற்றம் 14-ம் தேதி தொடங்கிது. இந்த திருவிழா 23-ந் தேதி வரை நடக்கிறது.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான 15-ம் தேதி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் 8-ம் நாளான 21-ம்தேதி சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கார்த்திகைத் திருவிழாவில் 9-ம் நாளான நேற்று சப்தாவரண சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் நடைபெறாது.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான 15-ம் தேதி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் 8-ம் நாளான 21-ம்தேதி சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கார்த்திகைத் திருவிழாவில் 9-ம் நாளான நேற்று சப்தாவரண சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் நடைபெறாது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை லட்ச வில்வார்ச்சனை மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு குங்கும லட்சார்ச்சனை நடக்க உள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி வரை லட்ச வில்வார்ச்சனை மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு (உற்சவ மூர்த்திகளுக்கு) குங்கும லட்சார்ச்சனை நடக்க உள்ளது. அதையொட்டி தினமும் காலை, முதல் கால அபிஷேகம், 2-வது கால அபிஷேகம், 3-வது கால அபிஷேகத்துக்கு பின்னர் மற்றும் மாலை 4-வது கால பிரதோஷ கால அபிஷேகத்துக்கு பின்னர் வில்வார்ச்சனை நடக்க உள்ளது.
அதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 3-ந்தேதி காலை அஷ்டோத்திர கலசாபிஷேகம், மாலை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வெள்ளி அம்பாரிகளில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 3-ந்தேதி காலை அஷ்டோத்திர கலசாபிஷேகம், மாலை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வெள்ளி அம்பாரிகளில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.






