search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varaha Moorthy"

    திருமலையில் உள்ள வராஹசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 29-ந்தேதி நடக்கிறது. இரவு கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் வீதிஉலா நடக்கிறது.
    திருமலையில் உள்ள வராஹசாமி கோவில் விமான கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் பதிக்கும் பணி நடந்து வந்தது. அதற்காக, கோவில் முக மண்டபத்தில் வராஹசாமி மாதிரி கோவில் அமைக்கப்பட்டு, அதன் கருவறையில் வராஹசாமி, லட்சுமி தாயாரின் சிலைகளை அத்திமரத்தால் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. அங்கு தினமும் வராஹசாமிக்கும், லட்சுமி தாயாருக்கும் பூஜைகள் செய்யப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் பதிக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது.

    இந்தநிலையில் வராஹசாமி கோவில் மகா கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டது. அதையொட்டி நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை ஏழுமலையான் கோவிலில் இருந்து விஷ்வக்சேனர் வசந்த மண்டபம் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். வராஹசாமி கோவிலில் இரவு 9.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை அங்குரார்ப்பணம் நடந்தது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை வராஹசாமி கோவில் சன்னதியில் யாக சாலையில் காரியக்கர்மங்கள் நடக்கிறது. இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பிரபந்த பாராயணம், வேத பாராயணம் நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும், மீண்டும் இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் வைதீக காரியக்கர்மங்கள் நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வராஹசாமி கோவிலில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    28-ந்தேதி வராஹசாமி கோவில் யாக சாலையில் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை வைதீக காரியக்கர்மங்கள், மாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மகாசாந்தி பூர்ணாஹுதி, மகாசாந்தி திருமஞ்சனம், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை யாக சாலையில் சயனாதி வாசம் ஆகியவை நடக்கிறது.

    29-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து காலை 9 மணி வரை பூர்ணாஹுதி, பிரபந்த சாத்துமுறை, வேதபாராயண சாத்துமுறை, காலை 9.15 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை தனுர் லக்னத்தில் கோவில் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் வீதிஉலா நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருப்பதி வராக சாமி கோவிலில் ஜீர்ணோத்தரணம் மற்றும் அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷம் நாளை முதல் 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
    திருப்பதியில் ஏழுமலையான் கோவில் அருகில் தெப்பக்குளம் அருகே வராஹ சாமி கோவில் உள்ளது. இங்கு பாலாலய பணிகள் நடந்து கருவறை விமானத்தில் தங்க மூலாம் பூசும் பணி முடிந்துள்ளது.

    இதையொட்டி கோவிலில் ஜீர்ணோத்தரணம் மற்றும் அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷம் நாளை முதல் 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான அங்குரார்ப்பணம் இன்று தொடங்கியது.

    நாளை வைதிக நிகழ்ச்சிகளும், 27-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 28-ந்தேதி மகா சாந்தி ஹோமமும், 29-ந்தேதி அஷ்டபந்தன மகா சம்ப்ரோசவம் மற்றும் பூர்ணாயுதி நடைபெறுகிறது.

    அன்று இரவு உற்சவ மூர்த்திகளான விஸ்வகேஸ்வரர் மற்றும் ஏழுமலையான் ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
    ஸ்ரீ வராக மூர்த்திக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். திருமண தடை நீங்கும்.
    வராக அவதாரத்தில், லக்ஷ்மியிடம், எம்பெருமான் கூறியது.
    ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
    தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
    ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
    அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;

    “எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும்போது, என்னையே நினத்துக்கொண்டு இருக்கின்றானோ, அவனது கடைசி காலத்தில், மூச்சு, பேச்சின்றி, நாக்கு தடுமாறும் நிலையில், மரக்கட்டையாக இருக்கும்போது, என்னை நினைக்கத்தேவை இல்லை. நானே அவனை வந்து கூட்டிச்செல்வேன். “அஹம் ஸ்மராமி மத்ப்க்தம், நயாமி பரமாம்கதிம்”.

    ஆகையினாலே தான், அதற்கு முன்பே மனத்திலே எம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும். அந்திம காலம் என்பது எல்லோருக்கும் கட்டாயம் உண்டு. அது நமது கட்டுப்பாட்டிலே இல்லை.

    அதனால் தான், இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். என் திருவடியில் ஆத்மா சமர்ப்பணம் பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான். அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒருநாளும் நான் கைவிடேன். நானே வந்து அவனை உத்தம கதிக்கு அழைத்துப் போவேன் என்கிறான் வராஹஸ்வாமி.

    எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹ அவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும் மிக்க அவதாரம். அந்த வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம். அர்ச்சித்தல், ஆத்மா சமர்ப்பணம், திருநாமம் சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு.

    பகவானின் இந்த மூன்று கட்டளைகளைத்தான் பூமி பிராட்டி தன்னுடைய ஆண்டாள் அவதாரத்திலே நடத்திக் காட்டினாள்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள வராக மந்திரத்தை கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் படித்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
    ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
    கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
    தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
    தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

    பொருள் : சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளி படைத்தவரே, வராக மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராகமூர்த்தியே நமஸ்காரம்.

    இந்த வராக மந்திரத்தை கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய அனுதினமும் படிக்கலாம்.
    ×