என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருவானைக்காவல் அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம். அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?
பஞ்சபூதத் தலங்களில் அப்பு (நீர்) தலமாக விளங்குவது திருவானைக்காவல். மூலவர் ஜலகண்டேசுவரராகவும், அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியாகவும் வீற்று இருக்கின்றனர்.
வராகி அம்சமான அகிலாண்டேசுவரி ஆரம்ப காலத்தில் உக்கிர மூர்த்தியாகவே இருந்தாள். எனவே பூஜை செய்பவர்களும், பக்தர்களும் கோவிலின் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்தே வழிபாடுகளை நடத்தி வந்தார்கள்.
இதை அறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தினார். உடனே இரண்டு ஸ்ரீசக்கரங்கள் செய்து அதில் அம்மனின் கோபம் இறங்க வேண்டும் என்று வேண்ட, அதன்படியே அம்பாளின் கோபம் ஸ்ரீ சக்கரத்தில் இறங்கியது. அம்பாள் சாந்த சொரூபியானாள். ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார். எனவே இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.
ஒன்று சிவச்சக்கரம். மற்றொன்று ஸ்ரீசக்கரம். இந்த சக்கரங்கள் மற்ற அம்பாளின் சந்நிதியில் இல்லாத சிறப்பம்சம் பெற்றவை ஆகும். மேலும் அம்பாளுக்கு எப்போதும் கோபம் ஏற்படாதவாறு பிரசன்ன விநாயகரை அம்பாளுக்கு முன்னேயும், முருகனைப் பின்னேயும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து விட்டார்.
வராகி அம்சமான அகிலாண்டேசுவரி ஆரம்ப காலத்தில் உக்கிர மூர்த்தியாகவே இருந்தாள். எனவே பூஜை செய்பவர்களும், பக்தர்களும் கோவிலின் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்தே வழிபாடுகளை நடத்தி வந்தார்கள்.
இதை அறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தினார். உடனே இரண்டு ஸ்ரீசக்கரங்கள் செய்து அதில் அம்மனின் கோபம் இறங்க வேண்டும் என்று வேண்ட, அதன்படியே அம்பாளின் கோபம் ஸ்ரீ சக்கரத்தில் இறங்கியது. அம்பாள் சாந்த சொரூபியானாள். ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார். எனவே இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.
ஒன்று சிவச்சக்கரம். மற்றொன்று ஸ்ரீசக்கரம். இந்த சக்கரங்கள் மற்ற அம்பாளின் சந்நிதியில் இல்லாத சிறப்பம்சம் பெற்றவை ஆகும். மேலும் அம்பாளுக்கு எப்போதும் கோபம் ஏற்படாதவாறு பிரசன்ன விநாயகரை அம்பாளுக்கு முன்னேயும், முருகனைப் பின்னேயும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து விட்டார்.
ஒவ்வொரு வீட்டிலும் அவர்களுடைய இடத்திற்குத் தகுந்தாற்போலும் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறும் பல விதமான டிசைன்களில் பூஜை அறையை அமைத்துக் கொள்ள முடியும்..
ஒவ்வொரு வீட்டிலும் வரவேற்பறை, சமையலறை, படுக்கை அறையை போன்று இன்றியமையாத மற்றொரு அறை பூஜை அறை என்று சொல்லலாம்.பூஜை அறை வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை வழங்குவதாக மக்களிடம் நம்பிக்கை நிலவுகின்றது.எனவே, ஒவ்வொரு வீட்டிலும் அவர்களுடைய இடத்திற்குத் தகுந்தாற்போலும் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறும் பல விதமான டிசைன்களில் பூஜை அறையை அமைத்துக் கொள்ள முடியும்..
* இப்பொழுது அமைக்கப்படும் பூஜை அறைகள் பெரும்பாலும் வரவேற்பறையின் மூலையில் கதவுகள் இல்லாமல் திறந்தவெளியில் இருப்பது வித்தியாசமான தோற்றத்தை தருவதாக இருக்கின்றது. இரண்டு அல்லது மூன்று படிக்கட்டுகள் வைத்து அதில் ஒரு சிறிய மேடை இருப்பது போன்றும் அந்த மேடை மீது கடவுள் சிற்பங்களை வைத்துக்கொள்வது போன்றும் அமைக்கப்படுகின்றது. இதன் பின்புறத்தில் படிக்கட்டுகளின் நிறத்திலேயே சுவற்றில் பார்டர் டைல்கள் ஒட்டப்பட்டு நடுவில் வெளிர் வண்ணங்களில் டைல்களை ஒட்டுகிறார்கள். இவை பார்ப்பதற்கு அங்கு வைக்கப்படும்சிற்பங்களை பளிச்சென்று எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது. அந்த படிக்கட்டுகளின் மீது விளக்குகள் வைத்து வழிபடுவது போல் வடிவமைத்து படிக்கட்டுகள் முடிந்தவுடன் தரையில் அழகிய கார் பெட்களை விரிப்பதும் தற்கால பூஜை அறை டிசைன்களின் ஒரு அங்கம் என்று சொல்லலாம்.
* சிறிய வீடாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிறிய அலமாரியை கூட பூஜை அறையாக மாற்றிக் கொள்ளலாம். அலமாரியானது இரண்டு மூன்று அடுக்குகளாக கண்ணாடியால் அமைக்கப்பட்டு அதன் மேற்புறம் மரத்தில் வளைவுகள் இருப்பது போன்றும் பக்கவாட்டு பகுதிகள் மெல்லியதாக இருப்பது போன்று அமைக்கப்பட்டு வெள்ளை, வெளிர் மஞ்சள் போன்ற நிறங்களில் வண்ணங்கள் தீட்டப்பட்டு அமைக்கப்படும் பூஜை அறைகள் மிகவும் அழகான தோற்றத்தைத் தருகின்றன. கண்ணாடி அலமாரிகளுக்கு அடியில் மரத்தினால் செய்யப்பட்ட சிறிய ட்ராயர்களை அமைத்து பூஜைக்கு தேவையான சாமான்களை வைத்துக் கொள்வது போல் வடிவமைக்கலாம். இந்த பூஜை அலமாரிகளுக்கு கதவுகள் வைப்பதும் வைக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம் ஆகும்.
* சிலர் பூஜை அறையை மிகவும் கலைநயம் மிக்க ஒன்றாக அமைக்க விருப்பப்படுவார்கள்.இந்த வகையில் மண்டபம் போன்று மரத்தினால் அறைகளை அமைத்து கோபுரங்கள் அமைத்து அதன் கதவுகளில் மணிகள் தொங்குவது போன்று அல்லது மணிகள் போன்ற அமைப்பில் துவாரங்கள் இருப்பது போன்று வடிவமைக்கிறார்கள். இன்னும் சிலர் பூஜையறை கதவுகளில் கடவுள் உருவங்களை கார்விங் செய்து அமைத்துக்கொள்ளவும் விரும்புகிறார்கள்.இந்த மண்டபத்தினுள் கடவுள் விக்கிரகங்களை வைப்பதற்கும், கடவுள் படங்களை மாட்டுவதற்கும் வசதியான இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.இதுபோன்ற மண்டபங்களை வேறு வீடுகளுக்கு நாம் செல்லும்பொழுது நம்முடன் எடுத்துச் செல்வது போல் கழற்றி மாட்டும் விதமாக வடிவமைத்து வருவதையே மக்கள் விரும்புகிறார்கள்.
* டைனிங் அறையிலோ அல்லது வரவேற்பறையிலோ வைப்பதற்கு சிறந்ததாக கருதப்படுவது புனித மேடை உடனான பூஜை அறை ஆகும். இந்த வகை பூஜை அறைகளில் கதவுகள் இல்லாமல் கிரானைட் கற்களினால் செய்யப்பட்ட மேடைகள் அமைத்து பின்புறம் சுவரானது மரத்தினால் இருப்பது போன்று வடிவமைக்கப்படுகிறது.இந்த மரச் சுவற்றில் பெரிய அளவிலான சுவாமி படங்களை மாட்டுவது போன்றும் மேடையின் மீது சுவாமி விக்ரகங்களை வைத்துக்கொள்வது போன்றும் செய்யப்படுவது பார்ப்பதற்கு நல்ல தோற்றத்தை தருவதோடு, கோவிலில் கடவுளை தொழுவது போன்ற உணர்வைத் தருகின்றது.
* வெள்ளை மார்பிள் மற்றும் மரத்தாலான சுவரை கொண்டிருக்கும் பூஜை அறை டிசைனானது மிகவும் நேர்த்தியான ஒன்று என்று சொல்லலாம்.வாஸ்து சாஸ்திரத்தின்படி கடவுளை வைக்கும் திசையானது வடக்கு- கிழக்கு அல்லது கிழக்கு மற்றும் தெற்காக இருக்க வேண்டியது அவசியமாகும்..
* முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்ட பூஜை அறை டிசைனை அமைப்பதற்கு பூஜை அறையில் பெரிய ஜன்னல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த மரத்தாலான பூஜை அறையானது நல்ல வெளிச்சமான மற்றும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.
* சில வீடுகளில் அழகான படிகளுடன், பின்னல் வகை மரத் திரையைக் கொண்ட பூஜை அறைகளை அமைக்கிறார்கள். இந்த மரபின்னல் திரையானது வெளிர் மஞ்சள் அல்லது வெண்மை நிறத்தில் இருப்பது போல் வடிவமைக்கப்படும் பொழுது அந்த இடத்தில் விளக்கு வெளிச்சம் மற்றும் லைட் வெளிச்சமானது பூஜை அறைக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. இந்த மரதிரைகளிலேயே ஆங்காங்கே கடவுள் படங்களை மாட்டிக்கொள்ளலாம்.அதேபோல் பித்தளை மணிகளை மாட்டும் பொழுது கோவிலுக்குள் நாம் இருக்கும் உணர்வைத் தருகின்றது.
பூஜை அறையின் வண்ணங்கள் எப்போதும் அமைதியை அதிகப்படுத்தும் இயல்பு உடையவையாக இருக்க வேண்டும். அதற்கு மென்மையான வண்ணங்களை பூஜை அறைகளுக்கு பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.. வெளிர் மஞ்சள்., வெளிர் ஆரஞ்சு மற்றும் வெண்மை போன்ற வண்ணங்கள் பூஜை அறையை அமைதியாக மாற்றக்கூடிய தன்மை கொண்டவை.
* பூஜை அறையின் கதவை தனித்துவமாக வடிவமைப்பது சிறந்தது. பாரம்பரியமான பூஜை அறை தோற்றத்தை விரும்புபவர்கள் மரவேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளை தேர்ந்தெடுக்கலாம். நவீன தோற்றத்தை விரும்புபவர்கள் அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த கண்ணாடி கதவுகளை தேர்ந்தெடுக்கலாம். பூஜை அறை எப்போதுமே திறந்து இருப்பது போன்ற தோற்றத்தை இந்த கண்ணாடி கதவுகள் கொடுக்கும்.
* பூஜை அறையை மேலும் அழகு படுத்துவதற்கு சர விளக்குகளை தேர்ந்தெடுக்கலாம்.மேலிருந்து தொங்கும் சரவிளக்குகள் பூஜை அறையின் வெளிச்சத்தை அழகாக்க உதவும்.
* இப்பொழுது அமைக்கப்படும் பூஜை அறைகள் பெரும்பாலும் வரவேற்பறையின் மூலையில் கதவுகள் இல்லாமல் திறந்தவெளியில் இருப்பது வித்தியாசமான தோற்றத்தை தருவதாக இருக்கின்றது. இரண்டு அல்லது மூன்று படிக்கட்டுகள் வைத்து அதில் ஒரு சிறிய மேடை இருப்பது போன்றும் அந்த மேடை மீது கடவுள் சிற்பங்களை வைத்துக்கொள்வது போன்றும் அமைக்கப்படுகின்றது. இதன் பின்புறத்தில் படிக்கட்டுகளின் நிறத்திலேயே சுவற்றில் பார்டர் டைல்கள் ஒட்டப்பட்டு நடுவில் வெளிர் வண்ணங்களில் டைல்களை ஒட்டுகிறார்கள். இவை பார்ப்பதற்கு அங்கு வைக்கப்படும்சிற்பங்களை பளிச்சென்று எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது. அந்த படிக்கட்டுகளின் மீது விளக்குகள் வைத்து வழிபடுவது போல் வடிவமைத்து படிக்கட்டுகள் முடிந்தவுடன் தரையில் அழகிய கார் பெட்களை விரிப்பதும் தற்கால பூஜை அறை டிசைன்களின் ஒரு அங்கம் என்று சொல்லலாம்.
* சிறிய வீடாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிறிய அலமாரியை கூட பூஜை அறையாக மாற்றிக் கொள்ளலாம். அலமாரியானது இரண்டு மூன்று அடுக்குகளாக கண்ணாடியால் அமைக்கப்பட்டு அதன் மேற்புறம் மரத்தில் வளைவுகள் இருப்பது போன்றும் பக்கவாட்டு பகுதிகள் மெல்லியதாக இருப்பது போன்று அமைக்கப்பட்டு வெள்ளை, வெளிர் மஞ்சள் போன்ற நிறங்களில் வண்ணங்கள் தீட்டப்பட்டு அமைக்கப்படும் பூஜை அறைகள் மிகவும் அழகான தோற்றத்தைத் தருகின்றன. கண்ணாடி அலமாரிகளுக்கு அடியில் மரத்தினால் செய்யப்பட்ட சிறிய ட்ராயர்களை அமைத்து பூஜைக்கு தேவையான சாமான்களை வைத்துக் கொள்வது போல் வடிவமைக்கலாம். இந்த பூஜை அலமாரிகளுக்கு கதவுகள் வைப்பதும் வைக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம் ஆகும்.
* சிலர் பூஜை அறையை மிகவும் கலைநயம் மிக்க ஒன்றாக அமைக்க விருப்பப்படுவார்கள்.இந்த வகையில் மண்டபம் போன்று மரத்தினால் அறைகளை அமைத்து கோபுரங்கள் அமைத்து அதன் கதவுகளில் மணிகள் தொங்குவது போன்று அல்லது மணிகள் போன்ற அமைப்பில் துவாரங்கள் இருப்பது போன்று வடிவமைக்கிறார்கள். இன்னும் சிலர் பூஜையறை கதவுகளில் கடவுள் உருவங்களை கார்விங் செய்து அமைத்துக்கொள்ளவும் விரும்புகிறார்கள்.இந்த மண்டபத்தினுள் கடவுள் விக்கிரகங்களை வைப்பதற்கும், கடவுள் படங்களை மாட்டுவதற்கும் வசதியான இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.இதுபோன்ற மண்டபங்களை வேறு வீடுகளுக்கு நாம் செல்லும்பொழுது நம்முடன் எடுத்துச் செல்வது போல் கழற்றி மாட்டும் விதமாக வடிவமைத்து வருவதையே மக்கள் விரும்புகிறார்கள்.
* டைனிங் அறையிலோ அல்லது வரவேற்பறையிலோ வைப்பதற்கு சிறந்ததாக கருதப்படுவது புனித மேடை உடனான பூஜை அறை ஆகும். இந்த வகை பூஜை அறைகளில் கதவுகள் இல்லாமல் கிரானைட் கற்களினால் செய்யப்பட்ட மேடைகள் அமைத்து பின்புறம் சுவரானது மரத்தினால் இருப்பது போன்று வடிவமைக்கப்படுகிறது.இந்த மரச் சுவற்றில் பெரிய அளவிலான சுவாமி படங்களை மாட்டுவது போன்றும் மேடையின் மீது சுவாமி விக்ரகங்களை வைத்துக்கொள்வது போன்றும் செய்யப்படுவது பார்ப்பதற்கு நல்ல தோற்றத்தை தருவதோடு, கோவிலில் கடவுளை தொழுவது போன்ற உணர்வைத் தருகின்றது.
* வெள்ளை மார்பிள் மற்றும் மரத்தாலான சுவரை கொண்டிருக்கும் பூஜை அறை டிசைனானது மிகவும் நேர்த்தியான ஒன்று என்று சொல்லலாம்.வாஸ்து சாஸ்திரத்தின்படி கடவுளை வைக்கும் திசையானது வடக்கு- கிழக்கு அல்லது கிழக்கு மற்றும் தெற்காக இருக்க வேண்டியது அவசியமாகும்..
* முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்ட பூஜை அறை டிசைனை அமைப்பதற்கு பூஜை அறையில் பெரிய ஜன்னல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த மரத்தாலான பூஜை அறையானது நல்ல வெளிச்சமான மற்றும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.
* சில வீடுகளில் அழகான படிகளுடன், பின்னல் வகை மரத் திரையைக் கொண்ட பூஜை அறைகளை அமைக்கிறார்கள். இந்த மரபின்னல் திரையானது வெளிர் மஞ்சள் அல்லது வெண்மை நிறத்தில் இருப்பது போல் வடிவமைக்கப்படும் பொழுது அந்த இடத்தில் விளக்கு வெளிச்சம் மற்றும் லைட் வெளிச்சமானது பூஜை அறைக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. இந்த மரதிரைகளிலேயே ஆங்காங்கே கடவுள் படங்களை மாட்டிக்கொள்ளலாம்.அதேபோல் பித்தளை மணிகளை மாட்டும் பொழுது கோவிலுக்குள் நாம் இருக்கும் உணர்வைத் தருகின்றது.
பூஜை அறையின் வண்ணங்கள் எப்போதும் அமைதியை அதிகப்படுத்தும் இயல்பு உடையவையாக இருக்க வேண்டும். அதற்கு மென்மையான வண்ணங்களை பூஜை அறைகளுக்கு பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.. வெளிர் மஞ்சள்., வெளிர் ஆரஞ்சு மற்றும் வெண்மை போன்ற வண்ணங்கள் பூஜை அறையை அமைதியாக மாற்றக்கூடிய தன்மை கொண்டவை.
* பூஜை அறையின் கதவை தனித்துவமாக வடிவமைப்பது சிறந்தது. பாரம்பரியமான பூஜை அறை தோற்றத்தை விரும்புபவர்கள் மரவேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளை தேர்ந்தெடுக்கலாம். நவீன தோற்றத்தை விரும்புபவர்கள் அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த கண்ணாடி கதவுகளை தேர்ந்தெடுக்கலாம். பூஜை அறை எப்போதுமே திறந்து இருப்பது போன்ற தோற்றத்தை இந்த கண்ணாடி கதவுகள் கொடுக்கும்.
* பூஜை அறையை மேலும் அழகு படுத்துவதற்கு சர விளக்குகளை தேர்ந்தெடுக்கலாம்.மேலிருந்து தொங்கும் சரவிளக்குகள் பூஜை அறையின் வெளிச்சத்தை அழகாக்க உதவும்.
எவ்வகையில் பாவம் செய்யப்பட்டதோ அவ்வகையில் தானே அதனை தீர்க்க முடியும். ஐந்து விதமான சேவைகள் மூலம் பாவங்களை போக்க முடியும். அவை:
மனித உடல் இறைவனால் பஞ்ச பூதத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை பஞ்ச பூதங்களாகும். பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கும் மனிதன், தான் வாழும் காலத்தில் பஞ்ச இந்திரியங்களான மெய், வாய், கண், காது, மூக்கு ஆகியவற்றின் மூலமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு விளைவிக்கும்போது ஏற்படும் பாவங்களால் கர்மவினைகள் உண்டாகிறது.
எவ்வகையில் பாவம் செய்யப்பட்டதோ அவ்வகையில் தானே அதனை தீர்க்க முடியும். ஐந்து விதமான சேவைகள் மூலம் பாவங்களை போக்க முடியும். அவை:
1. யாதனம் : கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.
2. சிரவணம் :- இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.
3. கீர்த்தனம் :- இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.
4. பூஜார்த்தனம் :- அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத் தியம் படைத்து பூஜை செய்தல்.
5. ஸ்துதி - : இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.
இந்த ஐந்து விதமான சேவைகளை செய்து வர கர்ம வினைகளால் உடல், உயிர் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் கிடைக்கும். இந்த வழிபாட்டை ஜென்ம நட்சத்திர நாளில் செய்யும் போது பலன் இரட்டிப்பாகும்.
குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும். அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள் ஆகும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
எவ்வகையில் பாவம் செய்யப்பட்டதோ அவ்வகையில் தானே அதனை தீர்க்க முடியும். ஐந்து விதமான சேவைகள் மூலம் பாவங்களை போக்க முடியும். அவை:
1. யாதனம் : கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.
2. சிரவணம் :- இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.
3. கீர்த்தனம் :- இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.
4. பூஜார்த்தனம் :- அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத் தியம் படைத்து பூஜை செய்தல்.
5. ஸ்துதி - : இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.
இந்த ஐந்து விதமான சேவைகளை செய்து வர கர்ம வினைகளால் உடல், உயிர் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் கிடைக்கும். இந்த வழிபாட்டை ஜென்ம நட்சத்திர நாளில் செய்யும் போது பலன் இரட்டிப்பாகும்.
குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும். அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள் ஆகும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள். அன்னை அகிலாண்டநாயகியை வணங்கி வழிபட்ட தாயுமானவர்.
அன்னை அகிலாண்டேவரி அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே என்றாலும், பின்னரும் கன்னி என மறைபேசும் ஆனந்த வடி மயிலாக விளங்குகின்றாள். கருணை நோக்குடன் கருவறையில் காட்சியளிக்கும் அன்னையின் எதிரில், சங்கராச்சாரிய சுவாமிகள் வைத்த விநாயகர், உள்ளார். அன்னையின் திருவுருவம் நல்ல கம்பீரமான திருத்தோற்றம்.
கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள். அன்னை அகிலாண்டநாயகியை வணங்கி வழிபட்ட தாயுமானவர்.
“அட்டசித்தி நல் அன்பருக்கு அருள
விருது கட்டிய பொன் அன்னமே!
அண்டகோடி புகழ்காவை வாழும்
அகிலாண்டநாயகி என் அம்மையே”
என்று அன்னையின் அருள் நிலையைப போற்றுகின்றார். அன்னை அகிலாண்ட நாயகியைக் கண்ணாரக் கண்டு வழிபட்ட மற்றொரு கவிஞன்.
“அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை
அணிஉருப் பாதியில் வைத்தான்
தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
சடைமுடி வைத்தனன் அதனால்
பிளவியல்மதியம் சூடிய பெருமான்
பித்தன் என்றொருபெயர் பெற்றான்
களமர்மொய் கழனி சூழ்திரு ஆனைக்
கா அகிலாண்ட நாயகியே”
என்று பாடிப் போற்றுகின்றான்.
அகிலம் ஈன்ற அன்னையாகிய அகிலாண்ட நாயகியை (உமையை) ஒரு பாகத்தில் வைத்து கங்கையாகிய மங்கையைச் சடைமுடியில் வைத்துக்காட்சி தருபவன் இறைவன். அன்னையைக் கண்டு வழிபட்ட அக் கவிஞன், அம்மையே! அகிலாண்ட நாயகியே என் போன்ற அடியார்கள் புரியும் எண்ணிறந்த பிழைகளைப் பொருத்தருள் புரியும் அன்னையாகிய உன்னை ஒரு பாகத்தில் வைத்த பரமன் மூன்று பிழைகட்கு மேல் பொறுக்காத ஒரு மங்கையைத் தன் சடைமுடியின் மேல் ஏற்றிவைத்தானே! இதனால் அன்றே பித்தன் என்ற ஒரு பெயரையும் பெற்றான் என்று பாடுவதன் வாயிலாக, அகிலாண்ட நாயகியின் அருட்சிறப்பினைப் போற்றுகின்றான்.
இங்ஙனம் அருள்பாலிக்கும் வகையில் சிறந்து விளங்குகின்ற அன்னை அகிலாண்டேசுவரி, மிகப்பெரிய தனித் திருக்கோவிலில், அடர்ந்த தென்னந் தோப்பினுள் திருச் சந்நிதி கொண்டு தனிப் பொலிவுடன் திகழ்கின்றாள். அன்னை சந்நிதிக்குச் செல்லும் வழியில் பெரிய தூண் ஒன்றில் ஏகபாத மூர்த்தி காணப்படுகின்றது. மும்மூர்த்திகளையும் தமது திருமேனியில் படைத்து, பிறகு அவர்களைத் தமது திருமேனியிலே ஒடுக்கி விடுகின்றார். சிவபெருமான் என்பதை ஏகபாத மூர்த்தி சிற்பம் உணர்த்துகின்றது. அன்னை சந்நிதியின் தென்மேற்கு மூலையில் பஞ்ச முக விநாயகர் விளங்குகின்றார். அவருக்குத்தலைமேல் ஒரு முகமும். இரு காது புறமும் இரு முகங்களும், பின்புறமாக ஒரு முகமும் சேர்ந்து ஐந்து முகங்களுடன் காட்சி தருகின்றார்.
அன்னை பூலோகம் வந்து முனிவர்கள் எல்லாம் தவம் புரிந்து கொண்டிருந்த திருவானைக்கா சோலையை கண்டு அவ்விடத்திலேயே தானும் தவம் செய்ய முனைந்தாள்.
ஒருமுறை அன்னை பார்வதிக்கு பெரிய சந்தேகம் வந்து விட்டது. யோக தட்சிணாமூர்த்தியாக விளங்கும் இறைவன் போக மூர்த்தியாகவும் இருக்கும் காரணம் என்ன என்ற ஐயத்தை எழுப்பினாள். ஐயன் உடனே அதற்குப் பதில் சொல்லவில்லை.
பூலோகம் சென்று அங்குள்ள ஞானத்தலத்தில் தவமியற்றுமாறும் உரிய நேரத்தில் தாம் வந்து அன்னையின் ஐயத்தைத் தீர்ப்பதாகவும் கூறிவிட்டார். அதன்படியே அன்னை பூலோகம் வந்து முனிவர்கள் எல்லாம் தவம் புரிந்து கொண்டிருந்த திருவானைக்கா சோலையை கண்டு அவ்விடத்திலேயே தானும் தவம் செய்ய முனைந்தாள்.
தன் தவ வலிமையால் நீரை திரட்டி லிங்கமாக்கி பூசித்து வரலானாள். நீரின் வடிவமாக விளங்கியதால் இறைவனுக்கு அப்புலிங்கம் என்ற திருநாமமும் ஏற்பட்டது.
உரிய காலத்தில் இறைவன் தோன்றி உலகம் தொடர்ந்து இயங்க வேண்டுமானால் யோகம் போகம் இரண்டுமே அவசியம் என்பதை உலக ஆன்மாக்களுக்கு உணர்த்த முடிவு செய்தார். இதற்காகவே தான் யோகியாகவும் போகியாகவும் இருக்க வேண்டியுள்ளது என்னும் உண்மையை உணர்த்துகிறார்.
இந்த விளக்கத்தை அன்னை பெற்ற இடமான திருவானைக்காவிற்கு அப்பெயர் எப்படி வந்தது தெரியுமா? கயிலையைச் சேர்ந்த இரண்டு கணநாதர்கள் தாம் பெற்ற சாபத்தால் யானையாகவும் சிலந்தியாகவும் இல்லத்தில் வந்து பிறந்தனர். நாவல் மரமொன்றின் அடியில் அன்னை ஸ்தாபித்த அப்புலிங்கத்தை வழிபட்டு வந்தனர்.
ஆற்றுநீரை தும்பிக்கையில் எடுத்து வந்து யானை அபிஷேகம் செய்ய, சிலந்தியோ மரத்தில் இருந்து விழும் உலர்ந்த சரகுகள் இறைவன்மேல் படாவண்ணம் தன் வாயால் நூல் பந்தல் அமைத்தது. யானை போற்றிப் பரவிய இடம் என்பதால் இத்தலம் திருஆனைக்கா என்று அழைக்கப்பட்டது. சிலந்தி அடுத்த பிறவியில் கோச்செங்கட் சோழன் அரசனாகப் பிறந்து காவிரிக்கரையில் எண்ணற்ற சிவன் கோவில்களைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
பூலோகம் சென்று அங்குள்ள ஞானத்தலத்தில் தவமியற்றுமாறும் உரிய நேரத்தில் தாம் வந்து அன்னையின் ஐயத்தைத் தீர்ப்பதாகவும் கூறிவிட்டார். அதன்படியே அன்னை பூலோகம் வந்து முனிவர்கள் எல்லாம் தவம் புரிந்து கொண்டிருந்த திருவானைக்கா சோலையை கண்டு அவ்விடத்திலேயே தானும் தவம் செய்ய முனைந்தாள்.
தன் தவ வலிமையால் நீரை திரட்டி லிங்கமாக்கி பூசித்து வரலானாள். நீரின் வடிவமாக விளங்கியதால் இறைவனுக்கு அப்புலிங்கம் என்ற திருநாமமும் ஏற்பட்டது.
உரிய காலத்தில் இறைவன் தோன்றி உலகம் தொடர்ந்து இயங்க வேண்டுமானால் யோகம் போகம் இரண்டுமே அவசியம் என்பதை உலக ஆன்மாக்களுக்கு உணர்த்த முடிவு செய்தார். இதற்காகவே தான் யோகியாகவும் போகியாகவும் இருக்க வேண்டியுள்ளது என்னும் உண்மையை உணர்த்துகிறார்.
இந்த விளக்கத்தை அன்னை பெற்ற இடமான திருவானைக்காவிற்கு அப்பெயர் எப்படி வந்தது தெரியுமா? கயிலையைச் சேர்ந்த இரண்டு கணநாதர்கள் தாம் பெற்ற சாபத்தால் யானையாகவும் சிலந்தியாகவும் இல்லத்தில் வந்து பிறந்தனர். நாவல் மரமொன்றின் அடியில் அன்னை ஸ்தாபித்த அப்புலிங்கத்தை வழிபட்டு வந்தனர்.
ஆற்றுநீரை தும்பிக்கையில் எடுத்து வந்து யானை அபிஷேகம் செய்ய, சிலந்தியோ மரத்தில் இருந்து விழும் உலர்ந்த சரகுகள் இறைவன்மேல் படாவண்ணம் தன் வாயால் நூல் பந்தல் அமைத்தது. யானை போற்றிப் பரவிய இடம் என்பதால் இத்தலம் திருஆனைக்கா என்று அழைக்கப்பட்டது. சிலந்தி அடுத்த பிறவியில் கோச்செங்கட் சோழன் அரசனாகப் பிறந்து காவிரிக்கரையில் எண்ணற்ற சிவன் கோவில்களைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.
ஆனைக்கா என்னும் பெயரையொட்டியே வடமொழியில் இத்தலத்தைத் கஜாரண்ய சேத்திரம் என்று கூறினர். திருத்தலத்தில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அன்னையின் திருப்பெயர் அகிலாண்டேசுவரி.
பூலோக வைகுந்தம் என்று போற்றப்படுகின்ற திருவரங்கத்துக்கு அருகில் காவிரிக்கரை ஓரத்தில் திருவானைக்கா என்ற சிவத்தலம் உள்ளது. கா என்பது சோலை என்று பொருள்படும். காவிரியாற்றின் இடையே யானை உலவும் நெடுஞ்சோலை ஒன்று இருந்துள்ளது. அதனால் அதனை ஆனைக்கா என்ற பெயரால் அழைத்துள்ளனர்.
பழங்காலத்தில் வளம் நிறைந்த பயன்தரும் மரம், சோலைகள் போன்றவை இறைவன் உறையும் கோவில்கள் ஆயின. சோழநாட்டில் உள்ள நெல்லி மரச்சோலை திரு நெல்லிக்கா என்றும், குரங்காடும் பழஞ்சோலை குரக்குக்கா என்றும், (குரக்கினம் குதிகொள்ளும் குரக்குக்கா -தேவாரம்) ஆனை உலவிய சோலையை ஆனைக்கா என்றும் அழைத்தனர்.
ஆனைக்கா என்னும் பெயரையொட்டியே வடமொழியில் இத்தலத்தைத் கஜாரண்ய சேத்திரம் என்று கூறினர். திருத்தலத்தில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அன்னையின் திருப்பெயர் அகிலாண்டேசுவரி. இறைவனின் திருப்பெயர் ஜம்புகேசுவரர். இருவர் கோவில்களும் தனித்தனியே அமைந்து இணைந்த ஒரு பெருங்கோவிலாகத் திகழ்கின்றது.
பழங்காலத்தில் வளம் நிறைந்த பயன்தரும் மரம், சோலைகள் போன்றவை இறைவன் உறையும் கோவில்கள் ஆயின. சோழநாட்டில் உள்ள நெல்லி மரச்சோலை திரு நெல்லிக்கா என்றும், குரங்காடும் பழஞ்சோலை குரக்குக்கா என்றும், (குரக்கினம் குதிகொள்ளும் குரக்குக்கா -தேவாரம்) ஆனை உலவிய சோலையை ஆனைக்கா என்றும் அழைத்தனர்.
ஆனைக்கா என்னும் பெயரையொட்டியே வடமொழியில் இத்தலத்தைத் கஜாரண்ய சேத்திரம் என்று கூறினர். திருத்தலத்தில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அன்னையின் திருப்பெயர் அகிலாண்டேசுவரி. இறைவனின் திருப்பெயர் ஜம்புகேசுவரர். இருவர் கோவில்களும் தனித்தனியே அமைந்து இணைந்த ஒரு பெருங்கோவிலாகத் திகழ்கின்றது.
எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.
படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார்.
அதன்பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை.
எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.
படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார்.
அதன்பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை.
எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
தர்மபுரி அதியமான் கோட்டையில் உள்ளது பைரவர் கோவில். உன்மந்திர பைரவர் இக்கோவிலில் வீற்றிருக்கிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே காலபைரவர் கோவில் உள்ளது. முதல் இடம் காசியில் தட்சிண காசி உள்ளார். இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டையில் உள்ளது. ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் இக்கோவிலில் வீற்றிருக்கிறார்.
9-ம் நூற்றாண்டில் ஏதிரிகளால் நிறைய இந்து கோவில்கள் இடிக்கப்பட்டது. அப்பொழுது அதியமான் மன்னரால் வெல்ல முடியாத சூழ்நிலை அப்பொழுது ஆஸ்தான ஜோதிடர்கள் காலபைரவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும் காலபைரவருக்கு தனிக்கோவில் கட்டக்கூடாது என்றும் கூறினர். தனிக்கோவில் காசியில் மட்டுமே உள்ளது. எனவே அங்கு சென்று சிலைகளை எடுத்து வந்து இங்கு பூஜைகள் செய்யலாம் என்று ஜோதிடர்கள் கூறினர்.
அவர்கள் சொன்னதற்கு இனங்க அதியமான் மன்னர் சிலைகளை எடுத்து வந்து பூஜைகள் செய்து அதியமான் கோட்டையில் காலபைரவர் ஆலயம் கட்டினார்.
இந்த வரலாற்றின் செயல்கள் அனைத்தும் இக்கோவிலில் சிற்ப்ப கலைகளாக உள்ளன. ஆதியமான் மன்னரால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது கட்டப்பட்ட பின்புதான் மன்னர் போரில் வென்றார். இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன. இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார்.
அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும் அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விலங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். இக்கோவிலில் உன்மந்திர பைரவர் உள்ளார் (முதன்மை பைரவர்). இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.
மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார். இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும்.
நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாம்பபூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.
9-ம் நூற்றாண்டில் ஏதிரிகளால் நிறைய இந்து கோவில்கள் இடிக்கப்பட்டது. அப்பொழுது அதியமான் மன்னரால் வெல்ல முடியாத சூழ்நிலை அப்பொழுது ஆஸ்தான ஜோதிடர்கள் காலபைரவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும் காலபைரவருக்கு தனிக்கோவில் கட்டக்கூடாது என்றும் கூறினர். தனிக்கோவில் காசியில் மட்டுமே உள்ளது. எனவே அங்கு சென்று சிலைகளை எடுத்து வந்து இங்கு பூஜைகள் செய்யலாம் என்று ஜோதிடர்கள் கூறினர்.
அவர்கள் சொன்னதற்கு இனங்க அதியமான் மன்னர் சிலைகளை எடுத்து வந்து பூஜைகள் செய்து அதியமான் கோட்டையில் காலபைரவர் ஆலயம் கட்டினார்.
இந்த வரலாற்றின் செயல்கள் அனைத்தும் இக்கோவிலில் சிற்ப்ப கலைகளாக உள்ளன. ஆதியமான் மன்னரால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது கட்டப்பட்ட பின்புதான் மன்னர் போரில் வென்றார். இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன. இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார்.
அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும் அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விலங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். இக்கோவிலில் உன்மந்திர பைரவர் உள்ளார் (முதன்மை பைரவர்). இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.
மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார். இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும்.
நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாம்பபூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.
உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார்.
பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. உலக உயிர்களையெல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலைக்கேறி சிவபெருமானையே கேலி செய்தான். இதனையறிந்த சிவன் பிரம்மனின் ஆணவத்தை அடக்கி உலக மக்களுக்காக தன் அங்கமான சர்வசக்தி படைத்த பைரவரை உண்டாக்கினார். பிறகு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவ மூர்த்தி பிரம்மனின் ஒருதலையைக் கிள்ளி எடுத்தார்.
இப்படி பிரம்மனின் ஆணவத்தை அழித்த இந்த செய்தி அகந்தை கொண்டவர்கள், தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளிலிருந்தும் நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் உணர்த்தும் மிகப்பெரும் தத்துவமாகும்.
பிரம்மனின் தலையைத் துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவனை பைரவர் வேண்டினார். சிவன் பைரவரை பூலோகத்தில் தோஷம் நீங்க பிட்க்ஷை எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூறினார்.
அவ்வாறு பூலோகம் சென்று பிட்க்ஷை பெற்று வருகையில் குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம நீங்கிற்று. பின்பு அங்குள்ள ஸ்வேத விநாயகரை வழிபட்டவுடன் விநாயகர் தோன்றி, ‘உம் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசு. அது எங்கு சென்று சேர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில் கோவில் கொண்டிருப்பாயாக’ என அருளினார்.
பைரவர் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது தற்போதுள்ள சேத்திரபாலபுரம் இடத்தில் விழுந்தது. அந்த இடத்தில் இருந்த ஸ்வேத விநாயகரை வழிபட்டு அவ்விடத்திலேயே கோவில் கொண்டார். சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு சேத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயரே அந்த ஊருக்கு அமைந்து சேத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று.
இந்த சேத்திர பாலபுரம் மயிலாடுதுறை தாலுகா, குற்றாலம் அருகிலுள்ளது. இவ்வாறு கோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார். இதைத் தவிர எல்லைக் காவல் தெய்வமாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.
இப்படி பிரம்மனின் ஆணவத்தை அழித்த இந்த செய்தி அகந்தை கொண்டவர்கள், தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளிலிருந்தும் நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் உணர்த்தும் மிகப்பெரும் தத்துவமாகும்.
பிரம்மனின் தலையைத் துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவனை பைரவர் வேண்டினார். சிவன் பைரவரை பூலோகத்தில் தோஷம் நீங்க பிட்க்ஷை எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூறினார்.
அவ்வாறு பூலோகம் சென்று பிட்க்ஷை பெற்று வருகையில் குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம நீங்கிற்று. பின்பு அங்குள்ள ஸ்வேத விநாயகரை வழிபட்டவுடன் விநாயகர் தோன்றி, ‘உம் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசு. அது எங்கு சென்று சேர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில் கோவில் கொண்டிருப்பாயாக’ என அருளினார்.
பைரவர் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது தற்போதுள்ள சேத்திரபாலபுரம் இடத்தில் விழுந்தது. அந்த இடத்தில் இருந்த ஸ்வேத விநாயகரை வழிபட்டு அவ்விடத்திலேயே கோவில் கொண்டார். சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு சேத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயரே அந்த ஊருக்கு அமைந்து சேத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று.
இந்த சேத்திர பாலபுரம் மயிலாடுதுறை தாலுகா, குற்றாலம் அருகிலுள்ளது. இவ்வாறு கோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார். இதைத் தவிர எல்லைக் காவல் தெய்வமாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.
வாத்திய இசைகள் முழங்க இதில் அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் கோவிலை வலம் வந்து அக்னி கம்பம் நடப்பட்டது. பின்பு கோனியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
கோவையில் பிரசித்திபெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 2-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. நேற்று இரவு கோனியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதையொட்டி கோனியம்மன் தங்க கவசத்தில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கோனியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் முன்பு அக்கினி கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. வாத்திய இசைகள் முழங்க இதில் அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் கோவிலை வலம் வந்து அக்னி கம்பம் நடப்பட்டது. பின்பு கோனியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோனியம்மனை தரிசித்து சென்றனர்.
பின்னர் இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கோனியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் முன்பு அக்கினி கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. வாத்திய இசைகள் முழங்க இதில் அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் கோவிலை வலம் வந்து அக்னி கம்பம் நடப்பட்டது. பின்பு கோனியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோனியம்மனை தரிசித்து சென்றனர்.
இன்று (புதன்கிழமை) மாலையில் அருட்பணியாளர் டோமினிக் சாவியோ தலைமையில் நடக்கும் நற்கருணை கொண்டாட்டத்தில் அருட்பணியாளர் ஜார்ஜ் மறையுரை நிகழ்த்துகிறார்.
தூய அந்தோணியார் திருத்தல பங்கு மார்த்தாண்டம் வெட்டுவெந்நியில் அமைந்துள்ளது. இங்கு குமரி மாவட்டம் மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் சாதி மத வேறுபாடு இல்லாமல் வந்து செல்கிறார்கள். இந்த திருத்தல பங்கின் திருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு நேற்று இன்று காலை 10 மணிக்கு ஜெபமாலை, நவநாள், நற்கருணை கொண்டாட்டம் ஆகியவை அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமையில் நடந்தது. அருட்பணியாளர் அல்போன்ஸ் மறையுரை நிகழ்த்தினார்.
மாலை 5 மணிக்கு ஜெபமாலை நவநாள் கொடி பவனியும் அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடியேற்றமும், நற்கருணை கொண்டாட்டமும் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் யேசு ரத்தினம் தலைமையில் நடந்தது.
இன்று (புதன்கிழமை) மாலையில் அருட்பணியாளர் டோமினிக் சாவியோ தலைமையில் நடக்கும் நற்கருணை கொண்டாட்டத்தில் அருட்பணியாளர் ஜார்ஜ் மறையுரை நிகழ்த்துகிறார். நாளை மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் ஆனந்த் தலைமையிலும், 25-ந் தேதி காலை 10 மணிக்கு அருட்பணியாளர் மார்ட்டின் தலைமையிலும், மாலை 5 மணிக்கு அருட்பணியாளர் ஆல்பர்ட் தலைமையிலும், 26-ந் தேதி மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் ஆல்வின் விஜய் தலைமையிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடக்கிறது.
27-ந் தேதி காலை 8 மணிக்கு முதல்திருவிருந்து விழா கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அகஸ்டின் தலைமையிலும், 28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் பீட்டர் தலைமையிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடக்கிறது.
மார்ச் 1-ந் தேதி காலை 8 மணிக்கு மலையாளத்திலும், 9.30 மணி, 11 மணிக்கு தமிழிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் மற்றும் திருவிழா நிறைவு நற்கருணை கொண்டாட்டம் நடைெபறும். நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்குகிறார்.
இதை முன்னிட்டு நேற்று இன்று காலை 10 மணிக்கு ஜெபமாலை, நவநாள், நற்கருணை கொண்டாட்டம் ஆகியவை அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமையில் நடந்தது. அருட்பணியாளர் அல்போன்ஸ் மறையுரை நிகழ்த்தினார்.
மாலை 5 மணிக்கு ஜெபமாலை நவநாள் கொடி பவனியும் அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடியேற்றமும், நற்கருணை கொண்டாட்டமும் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் யேசு ரத்தினம் தலைமையில் நடந்தது.
இன்று (புதன்கிழமை) மாலையில் அருட்பணியாளர் டோமினிக் சாவியோ தலைமையில் நடக்கும் நற்கருணை கொண்டாட்டத்தில் அருட்பணியாளர் ஜார்ஜ் மறையுரை நிகழ்த்துகிறார். நாளை மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் ஆனந்த் தலைமையிலும், 25-ந் தேதி காலை 10 மணிக்கு அருட்பணியாளர் மார்ட்டின் தலைமையிலும், மாலை 5 மணிக்கு அருட்பணியாளர் ஆல்பர்ட் தலைமையிலும், 26-ந் தேதி மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் ஆல்வின் விஜய் தலைமையிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடக்கிறது.
27-ந் தேதி காலை 8 மணிக்கு முதல்திருவிருந்து விழா கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அகஸ்டின் தலைமையிலும், 28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் பீட்டர் தலைமையிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடக்கிறது.
மார்ச் 1-ந் தேதி காலை 8 மணிக்கு மலையாளத்திலும், 9.30 மணி, 11 மணிக்கு தமிழிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் மற்றும் திருவிழா நிறைவு நற்கருணை கொண்டாட்டம் நடைெபறும். நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்குகிறார்.
திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களில், தினமும் 15 ஆயிரம் இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்தமாதம் (மார்ச்) தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.
ரூ.300 கட்டண தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இதுவரை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை ஒரு நாளைக்கு கூடுதலாக 13,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.
இதேபோல், திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களில், தினமும் 15 ஆயிரம் இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கூடுதலாக 5,000 டோக்கன் வினியோகிக்கப்படும்.
இதையும் படிக்கலாம்....யாரெல்லாம் பைரவரை விரதம் இருந்து வழிபடலாம்...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்தமாதம் (மார்ச்) தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.
ரூ.300 கட்டண தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இதுவரை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை ஒரு நாளைக்கு கூடுதலாக 13,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.
இதேபோல், திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களில், தினமும் 15 ஆயிரம் இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கூடுதலாக 5,000 டோக்கன் வினியோகிக்கப்படும்.
இதையும் படிக்கலாம்....யாரெல்லாம் பைரவரை விரதம் இருந்து வழிபடலாம்...






