என் மலர்
கிறித்தவம்
நாம் அனைவரிடமும் நீதியோடும் இரக்கத்தோடும் இருந்தாக வேண்டும். இதுவே நம்மோடு இருக்கும் கடவுளோடு நாம் இருப்பதற்கான அடிப்படைத் தகுதி.
நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு உலகிற்கு மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. வெறுப்பும், வன்செயலும் கோலோச்சும் உலகில் அது ஓர் இறைவாக்கினரின் பிறப்பு. உண்மை விளம்பியவரின் பிறப்பு. இறைவனை தவிர வேறு எவருக்கும் மண்டியிடாத மாவீரத்தின் பிறப்பு. இயேசுவின் பிறப்பு உலகையே கி.மு. என்றும் கி.பி. என்றும் பிரிக்கச் செய்தது. அத்தகைய பேராளுமைக்கும், பேரன்பிற்கும் முன்னெடுத்துக்காட்டாக அவர் விளங்கினார். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தார். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமானார்.
எது நடந்தாலும் அவர் இறை நம்பிக்கையில் தளர்வுறாதிருந்தார். வன்முறைக்கு அன்பினால் பதிலுரைத்தார். தீமை புரியும் பகைவரையும் நேசிப்பது எப்படி என்று நமக்கு கற்றுத் தந்தார். கெத்சமனி தோட்டத்தில் நாம் வன்முறையை அகற்றி வாழ்தலின் தேவையை வலியுறுத்தினார். நம் கடவுள் அன்பின் கடவுள். சுதந்திரத்தின் கடவுள். வாழ்வின் கடவுள். மன்னிப்பின் கடவுள் என்பதை தெளிவுபடுத்தினார். தன்னலம் துறத்தலே சிறந்த ஜெபம், வாழ்வின் வரம் என்றார்.
இயேசு உண்மையின் வடிவமானவர். இயேசுவை மீட்பராக ஏற்கும் நாம் எத்தனை பேரை மீட்டுள்ளோம்? எத்தனை பேருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளோம்? ஒரு கிறிஸ்தவன் என்று யாரும் இருக்க முடியாது, இருந்தால் அவர் கிறிஸ்தவன் கிடையாது என்றார் மார்ட்டின் லூதர். இயேசு ஒரே மனமும் ஒரே வாழ்வும் கொண்டுள்ள ஒரு சமுதாயத்திற்கு உரியவர். தனித்தனியே வந்து, தனித்தனியே சாமி கும்பிட்டுவிட்டு, தனித்தனியே சென்று விடுவதற்கு பெயர் கிறிஸ்துமஸ் அல்ல.
தேவைக்கு மேல் அதிகமாக நீங்கள் வைத்திருக்கும் உணவு பசித்திருப்போருக்குரியது. பயன்படுத்தாமல் நீங்கள் அடுக்கி வைத்துள்ள ஆடைகள் ஆடையின்றி இருப்போருக்கு உரியது. வீணே இடத்தை அடைத்துக் கிடக்கும் உங்கள் காலணிகள் வெறும் காலோடு நடப்போருக்குரியன. யாருக்கும் பயன்படாமல் நீங்கள் பதுக்கி வைத்துள்ள பணமும், மறைத்து வைத்துள்ள செல்வமும் ஏதும் இன்றி வாடும் ஆதரவற்றோருக்குரியது. சுருங்கச் சொல்வதென்றால் தேவையில்லாமல் நீங்கள் வாங்கிக் குவிக்கும் உங்களின் தேவைகள் யாவும் எங்கோ யாருக்கோ அடிப்படைத் தேவையாக பயன்படக் கூடியவை. அந்த யாரோ தான் நமக்கு அருகில் நமக்காக காத்துக் கிடக்கும் கடவுள். மனுவுரு எடுத்தார் கடவுள் என்றால் மனிதர் ஒவ்வொருவரும் கடவுள் உருவில் இருப்பவர் தான். எனவேதான் நாம் அனைவரிடமும் நீதியோடும் இரக்கத்தோடும் இருந்தாக வேண்டும். இதுவே நம்மோடு இருக்கும் கடவுளோடு நாம் இருப்பதற்கான அடிப்படைத் தகுதி.
கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வைத்துள்ள கனவை நாம் நிறைவேற்றுவோமா?விண்ணரசை கொண்டு வருவோமா? மண்ணுலக மாந்தருக்கெல்லாம் மகிழ்ச்சியை கொண்டு வருவோமா? தேவைப்படுபவர்களுக்கு எல்லாம் உப்பாகவும், ஒளியாகவும், உரமாகவும், வரமாகவும் இருப்போமா? ஏழைகளின் தோழமையிலும் ஆதரவற்றவர்களின் புன்முறுவல்களிலும் நமது சாயல் வெளிப்படுமா? கடவுளிடம் இருந்து தப்பித்து ஓடுவதற்கு பெயர் ஜெபம் அல்ல. அவரை சந்திப்பதே ஜெபம். அவரோடு இணைந்து அனைவரையும், அனைத்தையும் மீட்க போராடுவதும் மாற்றங்களை கொண்டு வருவதும் தான் ஜெபம் என்பதை உணர்வோமா?
யூதர்கள் யூத மெசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அனைவரின் இதயங்களையும் அன்பால் நிரப்பிட உலக மெசியாவாக அவர் உருவெடுத்ததை நாம் உணர்கிறோமா? மனுவுரு என்பதையும், மனுமகன் என்பதையும் நாம் மானுடத்தின் மகுடங்களாக பார்க்கின்றோமா? மனிதனாக பிறந்தும் மனிதராக வாழ முடியாத ஏழைகள் வாழ்வதற்காக பிறப்பெடுத்தவரே இயேசு என்ற எளிய உண்மையை நம் நெஞ்சில் தாங்கி நிற்போமா? இன்று புதிதாக பிறக்கும் ஒவ்வொருவரிலும் இயேசு பிறக்கிறார்.
மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி
திண்டுக்கல் மறைமாவட்டம்.
எது நடந்தாலும் அவர் இறை நம்பிக்கையில் தளர்வுறாதிருந்தார். வன்முறைக்கு அன்பினால் பதிலுரைத்தார். தீமை புரியும் பகைவரையும் நேசிப்பது எப்படி என்று நமக்கு கற்றுத் தந்தார். கெத்சமனி தோட்டத்தில் நாம் வன்முறையை அகற்றி வாழ்தலின் தேவையை வலியுறுத்தினார். நம் கடவுள் அன்பின் கடவுள். சுதந்திரத்தின் கடவுள். வாழ்வின் கடவுள். மன்னிப்பின் கடவுள் என்பதை தெளிவுபடுத்தினார். தன்னலம் துறத்தலே சிறந்த ஜெபம், வாழ்வின் வரம் என்றார்.
இயேசு உண்மையின் வடிவமானவர். இயேசுவை மீட்பராக ஏற்கும் நாம் எத்தனை பேரை மீட்டுள்ளோம்? எத்தனை பேருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளோம்? ஒரு கிறிஸ்தவன் என்று யாரும் இருக்க முடியாது, இருந்தால் அவர் கிறிஸ்தவன் கிடையாது என்றார் மார்ட்டின் லூதர். இயேசு ஒரே மனமும் ஒரே வாழ்வும் கொண்டுள்ள ஒரு சமுதாயத்திற்கு உரியவர். தனித்தனியே வந்து, தனித்தனியே சாமி கும்பிட்டுவிட்டு, தனித்தனியே சென்று விடுவதற்கு பெயர் கிறிஸ்துமஸ் அல்ல.
தேவைக்கு மேல் அதிகமாக நீங்கள் வைத்திருக்கும் உணவு பசித்திருப்போருக்குரியது. பயன்படுத்தாமல் நீங்கள் அடுக்கி வைத்துள்ள ஆடைகள் ஆடையின்றி இருப்போருக்கு உரியது. வீணே இடத்தை அடைத்துக் கிடக்கும் உங்கள் காலணிகள் வெறும் காலோடு நடப்போருக்குரியன. யாருக்கும் பயன்படாமல் நீங்கள் பதுக்கி வைத்துள்ள பணமும், மறைத்து வைத்துள்ள செல்வமும் ஏதும் இன்றி வாடும் ஆதரவற்றோருக்குரியது. சுருங்கச் சொல்வதென்றால் தேவையில்லாமல் நீங்கள் வாங்கிக் குவிக்கும் உங்களின் தேவைகள் யாவும் எங்கோ யாருக்கோ அடிப்படைத் தேவையாக பயன்படக் கூடியவை. அந்த யாரோ தான் நமக்கு அருகில் நமக்காக காத்துக் கிடக்கும் கடவுள். மனுவுரு எடுத்தார் கடவுள் என்றால் மனிதர் ஒவ்வொருவரும் கடவுள் உருவில் இருப்பவர் தான். எனவேதான் நாம் அனைவரிடமும் நீதியோடும் இரக்கத்தோடும் இருந்தாக வேண்டும். இதுவே நம்மோடு இருக்கும் கடவுளோடு நாம் இருப்பதற்கான அடிப்படைத் தகுதி.
கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வைத்துள்ள கனவை நாம் நிறைவேற்றுவோமா?விண்ணரசை கொண்டு வருவோமா? மண்ணுலக மாந்தருக்கெல்லாம் மகிழ்ச்சியை கொண்டு வருவோமா? தேவைப்படுபவர்களுக்கு எல்லாம் உப்பாகவும், ஒளியாகவும், உரமாகவும், வரமாகவும் இருப்போமா? ஏழைகளின் தோழமையிலும் ஆதரவற்றவர்களின் புன்முறுவல்களிலும் நமது சாயல் வெளிப்படுமா? கடவுளிடம் இருந்து தப்பித்து ஓடுவதற்கு பெயர் ஜெபம் அல்ல. அவரை சந்திப்பதே ஜெபம். அவரோடு இணைந்து அனைவரையும், அனைத்தையும் மீட்க போராடுவதும் மாற்றங்களை கொண்டு வருவதும் தான் ஜெபம் என்பதை உணர்வோமா?
யூதர்கள் யூத மெசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அனைவரின் இதயங்களையும் அன்பால் நிரப்பிட உலக மெசியாவாக அவர் உருவெடுத்ததை நாம் உணர்கிறோமா? மனுவுரு என்பதையும், மனுமகன் என்பதையும் நாம் மானுடத்தின் மகுடங்களாக பார்க்கின்றோமா? மனிதனாக பிறந்தும் மனிதராக வாழ முடியாத ஏழைகள் வாழ்வதற்காக பிறப்பெடுத்தவரே இயேசு என்ற எளிய உண்மையை நம் நெஞ்சில் தாங்கி நிற்போமா? இன்று புதிதாக பிறக்கும் ஒவ்வொருவரிலும் இயேசு பிறக்கிறார்.
மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி
திண்டுக்கல் மறைமாவட்டம்.
இரவிபுத்தன்துறை புனித கேத்தரின் ஆலய திருவிழாவின் 5-ம் நாளான நேற்று தேர்பவனி நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித கேதரின் சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது.
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை புனித கேத்தரின் ஆலய திருவிழா கடந்த 23-ந்தேதி திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாளான நேற்று தேர்பவனி நடந்தது.
அப்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித கேதரின் சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. ஆலய பங்குதந்தை ஜெரோம் அமிர்தைய்யன் தேரை அர்ச்சிப்பு செய்து பவனியை தொடங்கி வைத்தார்.
அதைதொடர்ந்து தேர் ஊர் முழுவதும் சுற்றி வந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை, ஆலய கட்டுமான குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
அப்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித கேதரின் சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. ஆலய பங்குதந்தை ஜெரோம் அமிர்தைய்யன் தேரை அர்ச்சிப்பு செய்து பவனியை தொடங்கி வைத்தார்.
அதைதொடர்ந்து தேர் ஊர் முழுவதும் சுற்றி வந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை, ஆலய கட்டுமான குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
வள்ளியூர் அருகே கண்டிகைப்பேரி சேகரம் கண்டிகைப்பேரியில் சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயம் கட்டிடம் விரிவாக்கத்துடன் புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் வள்ளியூர் அருகே கண்டிகைப்பேரி சேகரம் கண்டிகைப்பேரியில் சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயம் கட்டிடம் விரிவாக்கத்துடன் புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தின் சாவியை ஊர் பெரியவர்கள் அருள், செல்வமணி ஆகியோர் நெல்லை திருமண்டல பிஷப் பர்னபாஸிடம் வழங்கினார்கள். அதனை பெற்று கொண்ட பிஷப் பர்னபாஸ் ஜெபம் செய்து பிரதிஷ்டை செய்தார். பின்னர் அசன விருந்து நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நெல்லை திருமண்டல உபதலைவர் சுவாமிதாஸ், குருத்துவ செயலர் பாஸ்கர் கனகராஜ், லே செயலாளர் ஜெயசிங், வள்ளியூர் டி.டி.என் குழும தலைவர் டி.டி.என்.லாரன்ஸ், ஹெலன் லாரன்ஸ், தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் அருள்ராஜ், தொழிலதிபர்கள் ஞானராஜ், எட்வின்ஜோஸ், பொன்சிங், ரதிஷ்ராஜா, பன்னீர்தாஸ், கெர்சோன், சிம்சோன், பெனட் ஞானசெல்வன், கமிட்டி உறுப்பினர்கள் ரூபான் சாலமோன், துரைசிங், இம்மானுவேல் ஜெபா, ஜேசன்ராஜ், கெர்சோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கண்டிகைப்பேரி சேகர குரு ரவி மோகன்ராஜ், பெருமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஞானதுரை, செயலாளர் பாலசிங், பொருளாளர் எட்வின்ஜோஸ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் உள்பட பலர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நெல்லை திருமண்டல உபதலைவர் சுவாமிதாஸ், குருத்துவ செயலர் பாஸ்கர் கனகராஜ், லே செயலாளர் ஜெயசிங், வள்ளியூர் டி.டி.என் குழும தலைவர் டி.டி.என்.லாரன்ஸ், ஹெலன் லாரன்ஸ், தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் அருள்ராஜ், தொழிலதிபர்கள் ஞானராஜ், எட்வின்ஜோஸ், பொன்சிங், ரதிஷ்ராஜா, பன்னீர்தாஸ், கெர்சோன், சிம்சோன், பெனட் ஞானசெல்வன், கமிட்டி உறுப்பினர்கள் ரூபான் சாலமோன், துரைசிங், இம்மானுவேல் ஜெபா, ஜேசன்ராஜ், கெர்சோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கண்டிகைப்பேரி சேகர குரு ரவி மோகன்ராஜ், பெருமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஞானதுரை, செயலாளர் பாலசிங், பொருளாளர் எட்வின்ஜோஸ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் உள்பட பலர் செய்திருந்தனர்.
கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயம் புதுப்பிக்கப்பட்டதையொட்டி அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.
கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. திருச்சி மாவட்டத்தின் வேளாங்கண்ணி என அழைக்கப்படும் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டதையொட்டி அர்ச்சிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கி ஆலயத்தை அர்ச்சிப்பு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மேலும் ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு பாடற்திருப்பலியில் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினார். விழாவில் சுற்றுவட்டார பங்குதந்தைகள், திருச்சிலுவை கன்னியர்கள், கோவாண்டகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வியாகுலஈஸ்வரி ஜெயக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் ஆலய உதவி பங்குத்தந்தை அருளப்பன் நன்றி கூறினார். விழாவில் வடுகர்பேட்டை, ஆரோக்கியபுரம், காமராஜபுரம், மல்லிகைபுரம், விரியூர் பகுதிவாழ் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
மேலும் ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு பாடற்திருப்பலியில் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினார். விழாவில் சுற்றுவட்டார பங்குதந்தைகள், திருச்சிலுவை கன்னியர்கள், கோவாண்டகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வியாகுலஈஸ்வரி ஜெயக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் ஆலய உதவி பங்குத்தந்தை அருளப்பன் நன்றி கூறினார். விழாவில் வடுகர்பேட்டை, ஆரோக்கியபுரம், காமராஜபுரம், மல்லிகைபுரம், விரியூர் பகுதிவாழ் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
சாமியார்மடம் தூய யூதா ததேயு திருத்தல விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா ஜனவரி 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
சாமியார்மடம் தூய யூதா ததேயு திருத்தல விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருத்தல அதிபர் திவ்யா ஆனந்தம் முன்னிலையில் தமிழக கார்மல் சபை மாநில தலைவர் நேசமணி கொடியை ஏற்றி வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். தமிழ்மாநில கார்மல் சபை ஆலோசகர் பீட்டர் ஜூலியன் மறையுரையாற்றினார். நள்ளிரவு 11.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா ஜனவரி 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு நாஞ்சில் கல்லூரி தாளாளர் எக்கர்மென்ஸ் மைக்கிள் மற்றும் குலசை பெலிக்ஸ் ஆகியோர் நடத்துகின்றனர்.
29-ந்தேதி மாலை 6 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் திருப்பலியை நிறைவேற்ற, அருட்பணியாளர் சைமன் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு புனிதரின் சிறிய தேர் பவனி நடக்கிறது.
31-ந்தேதி இரவு 11 மணிக்கு புத்தாண்டு நிகழ்ச்சி பெருவிழாவும், திருப்பலியும் நடைபெறுகிறது.
1-ந்தேதி இரவு 8 மணிக்கு புனிதரின் திருத்தேர் பவனி நடைபெறுகிறது. அருட்பணியாளர் மிக்கேல்ராஜ் மறையரையாற்றுகிறார். 2-ந்தேதி காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் மறையுரையாற்றி ஆடம்பர திருப்பலியை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் திவ்யா ஆனந்தம் தலைமையில் கார்மல் அருட்பணியாளர்கள், அருட் பேரவையினர், அனைத்து நிர்வாகிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.
திருத்தல அதிபர் திவ்யா ஆனந்தம் முன்னிலையில் தமிழக கார்மல் சபை மாநில தலைவர் நேசமணி கொடியை ஏற்றி வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். தமிழ்மாநில கார்மல் சபை ஆலோசகர் பீட்டர் ஜூலியன் மறையுரையாற்றினார். நள்ளிரவு 11.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா ஜனவரி 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு நாஞ்சில் கல்லூரி தாளாளர் எக்கர்மென்ஸ் மைக்கிள் மற்றும் குலசை பெலிக்ஸ் ஆகியோர் நடத்துகின்றனர்.
29-ந்தேதி மாலை 6 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் திருப்பலியை நிறைவேற்ற, அருட்பணியாளர் சைமன் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு புனிதரின் சிறிய தேர் பவனி நடக்கிறது.
31-ந்தேதி இரவு 11 மணிக்கு புத்தாண்டு நிகழ்ச்சி பெருவிழாவும், திருப்பலியும் நடைபெறுகிறது.
1-ந்தேதி இரவு 8 மணிக்கு புனிதரின் திருத்தேர் பவனி நடைபெறுகிறது. அருட்பணியாளர் மிக்கேல்ராஜ் மறையரையாற்றுகிறார். 2-ந்தேதி காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் மறையுரையாற்றி ஆடம்பர திருப்பலியை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் திவ்யா ஆனந்தம் தலைமையில் கார்மல் அருட்பணியாளர்கள், அருட் பேரவையினர், அனைத்து நிர்வாகிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு களையிழந்து காணப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா, இந்த ஆண்டு மீண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சென்னை :
கிறிஸ்துமஸ் பெருவிழா உலகம் முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் பல்வேறு வகையான குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேவாலயங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் மற்றும் அலங்கார தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்தவ மக்கள் புத்தாடைகள் அணிந்து பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு ஆலயங்களுக்கு வந்திருந்தனர்.
சென்னை மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், கிண்டி சாந்தோம், அடையாறு, பெசன்ட் நகர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்கள்.
சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதேபோல் எழும்பூரில் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.
சாந்தோம் தேவாயலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்துவ மக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன், இனிப்புகளை பரிமாறி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள் மேலும் தேவாலயங்களில் உள்ள கிறிஸ்துமஸ் குடில்களில் செல்பி போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தார்கள்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு களையிழந்து காணப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா, இந்த ஆண்டு மீண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் பெருவிழா உலகம் முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் பல்வேறு வகையான குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேவாலயங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் மற்றும் அலங்கார தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்தவ மக்கள் புத்தாடைகள் அணிந்து பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு ஆலயங்களுக்கு வந்திருந்தனர்.
சென்னை மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், கிண்டி சாந்தோம், அடையாறு, பெசன்ட் நகர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்கள்.
சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதேபோல் எழும்பூரில் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.
சாந்தோம் தேவாயலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்துவ மக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன், இனிப்புகளை பரிமாறி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள் மேலும் தேவாலயங்களில் உள்ள கிறிஸ்துமஸ் குடில்களில் செல்பி போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தார்கள்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு களையிழந்து காணப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா, இந்த ஆண்டு மீண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதையும் படிக்கலாம்...கிறிஸ்து பிறப்பும், நற்செய்தியும்..
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு நள்ளிரவு வழிபாடு நடந்தது. குழந்தை இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் குடில் அமைக்கப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் விழா கிறிஸ்துமஸ் பண்டிகையாக இன்று (சனிக்கிழமை) உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு நேற்று நள்ளிரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு நள்ளிரவு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. அதன்படி ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
நேற்று இரவு ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான் சேவியர் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. 2021 ஆண்டுகளுக்கு முன்பு பெத்தலேகம் என்ற இடத்தில் மாட்டு தொழுவத்தில் மாதாவின் வயிற்றில் இருந்து பிறந்த இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஆலயத்தில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குடிலில் குழந்தை இயேசுவின் சிலை (சொரூபம்) வைக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜான்சேவியர், உதவி பங்குத்தந்தை ராயப்பதாஸ் ஆகியோர் பிறந்த குழந்தை இயேசு சிலையை பவனியாக எடுத்து வந்து குடிலில் வைத்தனர். தொடர்ந்து திருப்பலி (பூஜை) நடந்தது.
இந்த வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புனித அமல அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருப்பலி முடிந்ததும் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதுபோல் ஈரோடு ரெயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய யூதா ததேயு தலைமையில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடக்கிறது. பண்டிகையை முன்னிட்டு சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயத்தில் வண்ண விளக்கு அலங்காரம் மிக அழகாக செய்யப்பட்டு இருந்தது. பார்க்கும் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த வண்ண விளக்குகளை ஏராளமானவர்கள் வந்து பார்த்து சென்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதை முன்னிட்டு நேற்று நள்ளிரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு நள்ளிரவு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. அதன்படி ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
நேற்று இரவு ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான் சேவியர் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. 2021 ஆண்டுகளுக்கு முன்பு பெத்தலேகம் என்ற இடத்தில் மாட்டு தொழுவத்தில் மாதாவின் வயிற்றில் இருந்து பிறந்த இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஆலயத்தில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குடிலில் குழந்தை இயேசுவின் சிலை (சொரூபம்) வைக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜான்சேவியர், உதவி பங்குத்தந்தை ராயப்பதாஸ் ஆகியோர் பிறந்த குழந்தை இயேசு சிலையை பவனியாக எடுத்து வந்து குடிலில் வைத்தனர். தொடர்ந்து திருப்பலி (பூஜை) நடந்தது.
இந்த வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புனித அமல அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருப்பலி முடிந்ததும் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதுபோல் ஈரோடு ரெயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய யூதா ததேயு தலைமையில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடக்கிறது. பண்டிகையை முன்னிட்டு சி.எஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயத்தில் வண்ண விளக்கு அலங்காரம் மிக அழகாக செய்யப்பட்டு இருந்தது. பார்க்கும் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த வண்ண விளக்குகளை ஏராளமானவர்கள் வந்து பார்த்து சென்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ந்த திருவிழா வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல் நகரில் திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலஞ்சி பங்குத்தந்தை மரிய சூசை வின்சென்ட் கொடியேற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து அகத்திய முனி குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தேவசகாயம் மவுண்ட் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் மறையுரை நிகழ்த்தினார்.
விழாவை பங்கு நிர்வாகிகள் சிறப்பித்தனர். இதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் நிகழ்வுகளை இளைஞர் இயக்கத்தினர் சிறப்பித்தார்கள். இந்த திருவிழா வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கார்மல் நகர் பங்குத்தந்தை சகாய பிரபு, பங்கு தலைவர் ஜோசப் ஆன்றனி, செயலாளர் டூறிங் ஆன்றனி தனிஸ், பொருளாளர் லியோன் ஜேசு ரத்தினம் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அகத்திய முனி குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தேவசகாயம் மவுண்ட் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் மறையுரை நிகழ்த்தினார்.
விழாவை பங்கு நிர்வாகிகள் சிறப்பித்தனர். இதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் நிகழ்வுகளை இளைஞர் இயக்கத்தினர் சிறப்பித்தார்கள். இந்த திருவிழா வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கார்மல் நகர் பங்குத்தந்தை சகாய பிரபு, பங்கு தலைவர் ஜோசப் ஆன்றனி, செயலாளர் டூறிங் ஆன்றனி தனிஸ், பொருளாளர் லியோன் ஜேசு ரத்தினம் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.
கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் மகிழ்ச்சிப் பெருவிழா என்று கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
பண்டிகை என்றாலே உற்சாகம்தான். அதிலும் குளிர்காலத்தில் வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகை கூடுதல் உற்சாகத்தை தரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது..
பளிச்சிடும் வண்ண வண்ண விளக்குகள், குழந்தை இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் விதவிதமான குடில்கள், பலவகையான சுவையான கேக்குகள், பரிசுகளைச் சுமந்துவரும் அன்பான கிறிஸ்துமஸ் தாத்தா, கண்ணைக் கவரும் கிறிஸ்துமஸ் மரங்கள், வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள்என அனைத்துமே மனதிற்குள் கூடுதல் குதூகலத்தை கொண்டுவரும். கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் மகிழ்ச்சிப் பெருவிழா என்று கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
*டிசம்பர் 25 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 5ஆம் தேதி வரை ‘கிறிஸ்துமஸ்டைட்’ அல்லது ‘ பனிரெண்டு புனித நாட்கள்’ என்று கூறப்படுகிறது.
*ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையில் உள்ள X,கிரேக்கத்தில் ‘கிரைஸ்ட்’என்ற பொருளில் இருந்து வந்தது.
*ஜெர்மனியில் பதினாறாம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் தோன்றியதாக நம்பப்படுகிறது.
*கிறிஸ்துமஸ் மரத்தை வீடுகளில் அலங்கரிக்கும் பாரம்பரியமானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
* நார்ட்மேன்ஃபிர் எனப் பெயர் கொண்ட மரமே கிறிஸ்துமஸ் மரங்களின் தலைவர் என்ற பட்டத்தை பெற்றுள்ளது.
*பத்தொன்பதாம் நூற்றாண்டின் போது ஜெர்மனியில் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் உருவாக்கப்பட்டு பின்னர் அவை மற்ற நாடுகளில் பிரபலமடைந்தன.
*2007 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் 85 மீட்டர் உயரமுடைய மிகப்பெரிய மிதக்கும் கிறிஸ்துமஸ் மரமானது மைக்ரோ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
*கிறிஸ்துமஸ் மரமானது முதன்முதலில் ஆப்பிள் பழங்களை கொண்டுதான் அலங்கரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. பின்னர் 1895ஆம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் மரமானது விளக்குகள்.மற்றும், மெழுகுவர்த்தி ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.
*டட்ச் புராணக் கதையின் வாயிலாக காலுறைகளை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கவிடும் மரபு துவங்கியது. செயின்ட் நிக்கோலஸ் என்பவர், வீதியில் வாழ்ந்த ஏழை மனிதரின் மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்ய பணம் இல்லாமல் தவித்ததைப்பார்த்து அவர்கள் நெருப்பூட்டும் இடத்தில் தங்க நாணயங்களைப் போட்டாராம்.அங்கு காய்ந்து கொண்டிருந்த காலுறைக்குள் தங்க நாணயங்கள் விழுந்தது.அதனால், வீதியில் வாழும் நிலை மாறி அந்த ஏழை தன்னுடைய மூன்று மகள்களுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். அதனை நினைவு கூறும் விதமாக இன்றளவும் காலுறைகளை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்க விடும் பழக்கம் தொடர்கின்றது.
*கிறிஸ்துமஸ் தாத்தா, நத்தார் தாத்தா, சாண்டா கிளாஸ், புனித நிக்கலஸ் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் தொன்ம வரலாறு, மற்றும் நாட்டார் பாடல்களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும் .இவர் கிறிஸ்துமஸ் நாளுக்கு முதல் நாள் இரவில் குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை கொண்டு வருபவராக குறிப்பிடப்படுகிறார்.
*புனித நிக்கோலஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு- வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார்.
*கிறிஸ்துமஸ் தாத்தாவை ‘ கனக லோகா’ என்று ஹவாயிலும்;க்ரிஸ் க்ரிங்கில் என்று ஜெர்மனியிலும்; லீ பெஃபனா இன்று இத்தாலியிலும்; பெரே நோயல் என்று பிரான்சிலும்; டியூஷ்கா மோரோஸ் என்று ரஷ்யாவிலும் அழைக்கிறார்கள்.
*சாண்டா கிளாஸ் குறித்து டாக்டர் மூர் எழுதிய புகழ்பெற்ற கவிதை இன்றளவும் அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளது.
*கடும் குளிர் நிறைந்த துருவப் பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் இருந்ததாகவும் இந்த பறக்கும் மான்களையே கிறிஸ்துமஸ் தாத்தா தனது வாகனமாக பயன்படுத்தினார் என்றும் கதைகள் கூறுகின்றன.
* முதன்முதலில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் முறையை தோற்றுவித்தவர் இத்தாலி நாட்டில் வாழ்ந்த’ புனித பிரான்சிஸ்’ என்ற துறவி ஆவார்.
*இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் முதல் வாழ்த்து அட்டையை உருவாக்கியவர் என்ற பெருமையை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு அனுப்பினார். அவர் ஆயிரம்பேருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதன்பிறகே கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது .
*வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ் மாலுமி கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்திய பெருங்கடலில் உள்ள ஒரு தீவை கண்டு பிடித்தார். அதன் காரணமாகவே அந்த தீவிற்கு “கிறிஸ்துமஸ்” என்ற பெயர் சூட்டப்பட்டது.
*“ஜிங்கிள் பெல்ஸ்” என்ற பிரபலமான கிறிஸ்துமஸ் பாடலை இசையமைத்தவர் அமெரிக்காவின், ஜேம்ஸ் பியர்பாண்ட் என்பவராவார்.
*உலகின் பல நாடுகளிலும் கிறிஸ்துமஸ் சந்தைகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.
*உதவும் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக கொண்டாடப்படுவது தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி தேவாலயங்களில் உண்டியல் பெட்டிகளை வைத்து விடுவார்கள். பணம் படைத்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அப்பெட்டிகளில் பணத்தை போட்டு வருவார்கள.. வருடத்துக்கு ஒருமுறை அப்பபெட்டியானது திறக்கப்பட்டு அதிலிருக்கும் பணமானது ஏழை எளிய மக்களின் பொருளாதாரத் தேவையை நிறைவேற்றுவதற்காக வழங்கப்படுகின்றது.
பளிச்சிடும் வண்ண வண்ண விளக்குகள், குழந்தை இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் விதவிதமான குடில்கள், பலவகையான சுவையான கேக்குகள், பரிசுகளைச் சுமந்துவரும் அன்பான கிறிஸ்துமஸ் தாத்தா, கண்ணைக் கவரும் கிறிஸ்துமஸ் மரங்கள், வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள்என அனைத்துமே மனதிற்குள் கூடுதல் குதூகலத்தை கொண்டுவரும். கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் மகிழ்ச்சிப் பெருவிழா என்று கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
*டிசம்பர் 25 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 5ஆம் தேதி வரை ‘கிறிஸ்துமஸ்டைட்’ அல்லது ‘ பனிரெண்டு புனித நாட்கள்’ என்று கூறப்படுகிறது.
*ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையில் உள்ள X,கிரேக்கத்தில் ‘கிரைஸ்ட்’என்ற பொருளில் இருந்து வந்தது.
*ஜெர்மனியில் பதினாறாம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் தோன்றியதாக நம்பப்படுகிறது.
*கிறிஸ்துமஸ் மரத்தை வீடுகளில் அலங்கரிக்கும் பாரம்பரியமானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
* நார்ட்மேன்ஃபிர் எனப் பெயர் கொண்ட மரமே கிறிஸ்துமஸ் மரங்களின் தலைவர் என்ற பட்டத்தை பெற்றுள்ளது.
*பத்தொன்பதாம் நூற்றாண்டின் போது ஜெர்மனியில் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் உருவாக்கப்பட்டு பின்னர் அவை மற்ற நாடுகளில் பிரபலமடைந்தன.
*2007 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் 85 மீட்டர் உயரமுடைய மிகப்பெரிய மிதக்கும் கிறிஸ்துமஸ் மரமானது மைக்ரோ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
*கிறிஸ்துமஸ் மரமானது முதன்முதலில் ஆப்பிள் பழங்களை கொண்டுதான் அலங்கரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. பின்னர் 1895ஆம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் மரமானது விளக்குகள்.மற்றும், மெழுகுவர்த்தி ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.
*டட்ச் புராணக் கதையின் வாயிலாக காலுறைகளை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கவிடும் மரபு துவங்கியது. செயின்ட் நிக்கோலஸ் என்பவர், வீதியில் வாழ்ந்த ஏழை மனிதரின் மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்ய பணம் இல்லாமல் தவித்ததைப்பார்த்து அவர்கள் நெருப்பூட்டும் இடத்தில் தங்க நாணயங்களைப் போட்டாராம்.அங்கு காய்ந்து கொண்டிருந்த காலுறைக்குள் தங்க நாணயங்கள் விழுந்தது.அதனால், வீதியில் வாழும் நிலை மாறி அந்த ஏழை தன்னுடைய மூன்று மகள்களுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். அதனை நினைவு கூறும் விதமாக இன்றளவும் காலுறைகளை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்க விடும் பழக்கம் தொடர்கின்றது.
*கிறிஸ்துமஸ் தாத்தா, நத்தார் தாத்தா, சாண்டா கிளாஸ், புனித நிக்கலஸ் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் தொன்ம வரலாறு, மற்றும் நாட்டார் பாடல்களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும் .இவர் கிறிஸ்துமஸ் நாளுக்கு முதல் நாள் இரவில் குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை கொண்டு வருபவராக குறிப்பிடப்படுகிறார்.
*புனித நிக்கோலஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு- வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார்.
*கிறிஸ்துமஸ் தாத்தாவை ‘ கனக லோகா’ என்று ஹவாயிலும்;க்ரிஸ் க்ரிங்கில் என்று ஜெர்மனியிலும்; லீ பெஃபனா இன்று இத்தாலியிலும்; பெரே நோயல் என்று பிரான்சிலும்; டியூஷ்கா மோரோஸ் என்று ரஷ்யாவிலும் அழைக்கிறார்கள்.
*சாண்டா கிளாஸ் குறித்து டாக்டர் மூர் எழுதிய புகழ்பெற்ற கவிதை இன்றளவும் அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளது.
*கடும் குளிர் நிறைந்த துருவப் பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் இருந்ததாகவும் இந்த பறக்கும் மான்களையே கிறிஸ்துமஸ் தாத்தா தனது வாகனமாக பயன்படுத்தினார் என்றும் கதைகள் கூறுகின்றன.
* முதன்முதலில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் முறையை தோற்றுவித்தவர் இத்தாலி நாட்டில் வாழ்ந்த’ புனித பிரான்சிஸ்’ என்ற துறவி ஆவார்.
*இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் முதல் வாழ்த்து அட்டையை உருவாக்கியவர் என்ற பெருமையை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு அனுப்பினார். அவர் ஆயிரம்பேருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதன்பிறகே கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது .
*வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ் மாலுமி கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்திய பெருங்கடலில் உள்ள ஒரு தீவை கண்டு பிடித்தார். அதன் காரணமாகவே அந்த தீவிற்கு “கிறிஸ்துமஸ்” என்ற பெயர் சூட்டப்பட்டது.
*“ஜிங்கிள் பெல்ஸ்” என்ற பிரபலமான கிறிஸ்துமஸ் பாடலை இசையமைத்தவர் அமெரிக்காவின், ஜேம்ஸ் பியர்பாண்ட் என்பவராவார்.
*உலகின் பல நாடுகளிலும் கிறிஸ்துமஸ் சந்தைகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.
*உதவும் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக கொண்டாடப்படுவது தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி தேவாலயங்களில் உண்டியல் பெட்டிகளை வைத்து விடுவார்கள். பணம் படைத்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அப்பெட்டிகளில் பணத்தை போட்டு வருவார்கள.. வருடத்துக்கு ஒருமுறை அப்பபெட்டியானது திறக்கப்பட்டு அதிலிருக்கும் பணமானது ஏழை எளிய மக்களின் பொருளாதாரத் தேவையை நிறைவேற்றுவதற்காக வழங்கப்படுகின்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இப்பேராலயம் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு 11 மணிக்கு திருப்பலியுடன் தொடங்கியது. வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மறையுரை, கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
பேராலய அதிபர் இருதயராஜ் கிருஸ்துமஸ் திருப்பலிகளை நிறைவேற்றினார். பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவிப் பங்குத் தந்தைகள் பூஜைகளை நடத்தினர். திருப்பலிகளின் நிறைவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார்.
அப்போது அனைவரும் மண்டியிட்டு இயேசு துதி வாசகங்களை ஜெபித்தனர். பேராலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் கிருஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டி கையையொட்டி பேராலய கோபுரங்கள் மட்டுமின்றி வேளாங்கண்ணி நகரமே மின்னொளி பந்தலில் ஜொலித்தது.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு 11 மணிக்கு திருப்பலியுடன் தொடங்கியது. வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மறையுரை, கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
பேராலய அதிபர் இருதயராஜ் கிருஸ்துமஸ் திருப்பலிகளை நிறைவேற்றினார். பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவிப் பங்குத் தந்தைகள் பூஜைகளை நடத்தினர். திருப்பலிகளின் நிறைவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார்.
அப்போது அனைவரும் மண்டியிட்டு இயேசு துதி வாசகங்களை ஜெபித்தனர். பேராலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் கிருஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டி கையையொட்டி பேராலய கோபுரங்கள் மட்டுமின்றி வேளாங்கண்ணி நகரமே மின்னொளி பந்தலில் ஜொலித்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் பேராலய விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் சேவியர் திடலில் வழிபாடு நடத்தப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இதையும் படிக்கலாம்...கிறிஸ்து பிறப்பும், நற்செய்தியும்..
கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை ஏசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர்.
ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டை மற்றும் பரிசுகளை் பரிமாறல் போன்றவை ஆகும். கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்று தேவாலயங்கள், கிறிஸ்தவர்கள் வீடுகள் என்று களைக்கட்டி இருக்கும். கிறிஸ்துமஸ் பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் கிறிஸ்தவ கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுமுறை நாட்கள் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி மற்றும் கிறிஸ்து பிறப்புவிழா ஆகும். டிசம்பர் 24-ந் தேதி நள்ளிரவில் கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்குச் சென்று திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை ஏசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர். விண்மீன்களுக்கு அடையாளமாக காகிதத்தாலான விண்மீன்களை வண்ண விளக்குக்களால் அலங்கரிப்பர். வீடுகளில் விருந்து நடைபெறும்.
எல்லாரும் புத்தாடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும், இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும். பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளில் உள்ளவர்களை சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள்(கரோல்ஸ்) இசைப்பார்கள். கிறிஸ்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்து பிறப்பு விழா மதநல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.
இந்தியாவில் கிறிஸ்தவ கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுமுறை நாட்கள் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி மற்றும் கிறிஸ்து பிறப்புவிழா ஆகும். டிசம்பர் 24-ந் தேதி நள்ளிரவில் கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்குச் சென்று திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை ஏசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர். விண்மீன்களுக்கு அடையாளமாக காகிதத்தாலான விண்மீன்களை வண்ண விளக்குக்களால் அலங்கரிப்பர். வீடுகளில் விருந்து நடைபெறும்.
எல்லாரும் புத்தாடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும், இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும். பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளில் உள்ளவர்களை சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள்(கரோல்ஸ்) இசைப்பார்கள். கிறிஸ்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்து பிறப்பு விழா மதநல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.
காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில் 477-வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழமைவாய்ந்த காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில் 477-வது ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது.
மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு இருதயராஜ் பர்னாந்து அடிகளார் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கொடியேற்று விழா திருப்பலியில்
வீரபாண்டியன்பட்டணம் பங்குத்தந்தைகள் கிருபாகரன் அடிகளார், கர்லோஸா அடிகளார், கொம்புத்துறை பங்குத்தந்தை சில்வர்ஸ்டர் அடிகளார், கொம்புத்துறை பங்குத்தந்தை பிரதீஷ் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரதீஸ் அடிகளார் மற்றும் ஊர் கமிட்டி தலைவர் மரியநாயகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தொடர்ந்து ஆலயத்தில் திருவிழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காலையில் புத்தாண்டு திருப்பலியை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை நிறைவேற்றுகிறார். மாலையில் ஆராதனையையும் அவர் நடத்துகிறார். 2-ம் தேதி காலை 7 மணியளவில் சேலம் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் சிங்கராயர் ஆண்டகை கலந்து கொண்டு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.
அதில் சிறுவர், சிறுமியர் முதல் நற்கருணை உட்கொள்ளுதல், மற்றும் உறுதிப்பூசுதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து அன்று காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து திருப்பலி நடைபெறும்.
முதலில் ஆறுமுகநேரி இறை மக்களுக்காக அலாய்சியஸ் அடிகளாரும், சிங்கித்துறை மக்களுக்காக சில்வெஸ்டர் அடிகளாரும், தூத்துக்குடி, குரும்பூர், பங்கு மக்களுக்காக பபிஸ்டன் அடிகளார், பழையகாயல் பங்கு மக்களுக்காக அருட்பணியாளர் அமலன் அடிகளாரும், புன்னக்காயல் பங்கு மக்களுக்காக புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார், மற்றும் துணை பங்குத்தந்தை சுதர்சன் அடிகளாரும், மாலை 4 மணியளவில் வீரபாண்டியன்பட்டணம் பங்குமக்களுக்காக பங்குத்தந்தை கிருபாகரன் அடிகளார், உதவி பங்குத்தந்தை பணிமயம் அடிகளாரும் திருப்பலி நிறைவேற்றுகின்றனர்.
தொடர்ந்து ஆலந்தலை அமலிநகர் ஜீவாநகர் மக்களுக்காக அருட்பணியாளர்கள் ஜெயக்குமார் அடிகளார், ரவீந்திரன் அடிகளார் ஆகியோர் திருப்பதி நிறைவேற்றுகின்றனர்.
2-ஆம் தேதி திருவிழா நாளன்று சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பிற மதத்தவர்களும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.
மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு இருதயராஜ் பர்னாந்து அடிகளார் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கொடியேற்று விழா திருப்பலியில்
வீரபாண்டியன்பட்டணம் பங்குத்தந்தைகள் கிருபாகரன் அடிகளார், கர்லோஸா அடிகளார், கொம்புத்துறை பங்குத்தந்தை சில்வர்ஸ்டர் அடிகளார், கொம்புத்துறை பங்குத்தந்தை பிரதீஷ் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரதீஸ் அடிகளார் மற்றும் ஊர் கமிட்டி தலைவர் மரியநாயகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தொடர்ந்து ஆலயத்தில் திருவிழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காலையில் புத்தாண்டு திருப்பலியை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை நிறைவேற்றுகிறார். மாலையில் ஆராதனையையும் அவர் நடத்துகிறார். 2-ம் தேதி காலை 7 மணியளவில் சேலம் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் சிங்கராயர் ஆண்டகை கலந்து கொண்டு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.
அதில் சிறுவர், சிறுமியர் முதல் நற்கருணை உட்கொள்ளுதல், மற்றும் உறுதிப்பூசுதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து அன்று காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து திருப்பலி நடைபெறும்.
முதலில் ஆறுமுகநேரி இறை மக்களுக்காக அலாய்சியஸ் அடிகளாரும், சிங்கித்துறை மக்களுக்காக சில்வெஸ்டர் அடிகளாரும், தூத்துக்குடி, குரும்பூர், பங்கு மக்களுக்காக பபிஸ்டன் அடிகளார், பழையகாயல் பங்கு மக்களுக்காக அருட்பணியாளர் அமலன் அடிகளாரும், புன்னக்காயல் பங்கு மக்களுக்காக புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார், மற்றும் துணை பங்குத்தந்தை சுதர்சன் அடிகளாரும், மாலை 4 மணியளவில் வீரபாண்டியன்பட்டணம் பங்குமக்களுக்காக பங்குத்தந்தை கிருபாகரன் அடிகளார், உதவி பங்குத்தந்தை பணிமயம் அடிகளாரும் திருப்பலி நிறைவேற்றுகின்றனர்.
தொடர்ந்து ஆலந்தலை அமலிநகர் ஜீவாநகர் மக்களுக்காக அருட்பணியாளர்கள் ஜெயக்குமார் அடிகளார், ரவீந்திரன் அடிகளார் ஆகியோர் திருப்பதி நிறைவேற்றுகின்றனர்.
2-ஆம் தேதி திருவிழா நாளன்று சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது பிற மதத்தவர்களும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.






