search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Holy Family"

    • தேர்பவனியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    • ஆலய திருவிழா 10 நாட்கள் நடந்தது.

    நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல் நகர் தூய திருக்குடும்ப ஆலய திருவிழா 10 நாட்கள் நடந்தது. இதில் 8 மற்றும் 10-ம் நாள் தேர் பவனி நடைபெற்றது. 10-ம் நாள் விழாவன்று காலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், பகல் 2 மணிக்கு ஆலய வளாகத்தில் இருந்து தேர் பவனியும் புறப்பட்டது. இதில் பங்குத்தந்தை அருட்பணியாளர் சகாய பிரபு கலந்து கொண்டு தேர்பவனியை ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.

    மேளதாளத்துடன் புறப்பட்ட தேர்பவனிக்கு ஊரின் முக்கிய வீதிகள், சந்திப்புகளில் வரவேற்பு அளிக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது. இதில் பக்த சபையினர், பாடகர் குழுவினர், இளைஞர் இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ராமன்புதூர் சந்திப்பில் ஊர் நிர்வாகக்குழு தலைவர் ஜோசப் சுந்தர்ராஜ், செயலாளர் ஜீலியன், பொருளாளர் ஆன்றோ ஜெபின் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, ஊர் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பங்குமக்கள் இணைந்து செய்து இருந்தனர்.

    • விழா வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • நிகழ்ச்சியில் பங்குமக்கள், சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அருகே உள்ள ராமன்புதூர் கார்மல்நகர் தூய திருக்குடும்ப ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு கொடியேற்றம், 6.45 மணிக்கு திருவிழா திருப்பலி போன்றவை நடந்தது. திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதன்மை தந்தை அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கினார். முதன்மை அருட்பணியாளர் சகாய ஆனந்த் மறையுரையாற்றினார்.

    திருப்பலியை பங்கு நிர்வாகம், திருத்தூது கழகங்களின் ஒருங்கிணைப்புகுழுவினர் சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்குமக்கள், சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அருட்பணியாளர் சகாயபிரபு, ஊர் நிர்வாக குழு தலைவர் ஜோசப் சுந்தர் ராஜ், செயலாளர் ஜுலியன், பொருளாளர் ஆன்றோ ஜெபின் ஆகியோர் வழிகாட்டுதலில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    • இந்த திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 1-ந்தேதி மதியம் 2 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் தூய திருக்குடும்ப ஆலய பங்கு குடும்ப விழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல்நாள் விழாவான நாளை மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம். 6.45 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதன்மை தந்தை ஹிலாரியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் சகாய ஆனந்த் மறையுரையாற்றுகிறார்.

    விழாவில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மேலராமன்புதூர் பங்குதந்தை மரிய சூசை வின்சென்ட் தலைமையில் திருப்பலி, இரவு 11.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 30-ந்தேதி காலை 7 மணிக்கு மண்ணின் மைந்தர் அருட்பணியாளர் நெல்சன் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலி நிறைவேற்றுகிறார். 31-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புது வருட திருப்பலி நடைபெறுகிறது.

    விழாவின் 10-ம் நாளான வருகிற 1-ந்தேதி காலை 6.30 மணிக்கு கிறிஸ்துநகர் பங்குதந்தை டோனி தலைமை தாங்கி திருக்குடும்ப திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆன்மிக இயக்குனர் அருட்பணியாளர் பெலிக்ஸ் மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்பவனி, மாலை 6 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதம், திருவிழா கொடியிறக்கம், இரவு 7.30 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சகாய பிரபு, ஊர் நிர்வாக குழு தலைவர் ஜோசப் சுந்தர்ராஜ், செயலாளர் ஜூலியன், பொருளாளர் ஆன்ரோ ஜெபின் ஆகியோர் வழிகாட்டுதலின்படி செயற்குழு உறுப்பினர்கள், பங்கு இறைமக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    ×