search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சாமியார்மடம் தூய யூதா ததேயு திருத்தல விழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    சாமியார்மடம் தூய யூதா ததேயு திருத்தல விழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    சாமியார்மடம் தூய யூதா ததேயு திருத்தல விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    சாமியார்மடம் தூய யூதா ததேயு திருத்தல விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா ஜனவரி 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    சாமியார்மடம் தூய யூதா ததேயு திருத்தல விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருத்தல அதிபர் திவ்யா ஆனந்தம் முன்னிலையில் தமிழக கார்மல் சபை மாநில தலைவர் நேசமணி கொடியை ஏற்றி வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். தமிழ்மாநில கார்மல் சபை ஆலோசகர் பீட்டர் ஜூலியன் மறையுரையாற்றினார். நள்ளிரவு 11.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா ஜனவரி 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு நாஞ்சில் கல்லூரி தாளாளர் எக்கர்மென்ஸ் மைக்கிள் மற்றும் குலசை பெலிக்ஸ் ஆகியோர் நடத்துகின்றனர்.

    29-ந்தேதி மாலை 6 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் திருப்பலியை நிறைவேற்ற, அருட்பணியாளர் சைமன் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு புனிதரின் சிறிய தேர் பவனி நடக்கிறது.

    31-ந்தேதி இரவு 11 மணிக்கு புத்தாண்டு நிகழ்ச்சி பெருவிழாவும், திருப்பலியும் நடைபெறுகிறது.

    1-ந்தேதி இரவு 8 மணிக்கு புனிதரின் திருத்தேர் பவனி நடைபெறுகிறது. அருட்பணியாளர் மிக்கேல்ராஜ் மறையரையாற்றுகிறார். 2-ந்தேதி காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் மறையுரையாற்றி ஆடம்பர திருப்பலியை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் திவ்யா ஆனந்தம் தலைமையில் கார்மல் அருட்பணியாளர்கள், அருட் பேரவையினர், அனைத்து நிர்வாகிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×