search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துவ ஆலயம்"

    • அண்ணாமலை உள்ளே வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
    • தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக என் மண், என் மக்கள் நடைபயணம் நடைபெற்றது. இதற்காக மேட்டூரிலிருந்து நேற்று மாலை பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு வந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரும் வழியில் பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டி லூர்து மலை அன்னை மேரி தேவாலயத்திற்கு, வந்தார். தொடர்ந்து லூர்து அன்னைக்கு மாலை அணிவிக்க சென்றார்.

    அப்பொழுது கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர், அண்ணாமலை உள்ளே வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

    அப்பொழுது மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில், என் மக்களின் இறப்பை ஏன் கேட்கவில்லை, என கேள்வி கேட்டு நீங்கள் மாலை அணிவிக்க கூடாது என, உள்ளே வராதே, திரும்பி போ என கிறிஸ்தவ இளைஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து முழக்கமிட்ட இளைஞர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு வார்த்தை நடத்தினார். அப்பொழுது மணிப்பூரில் எங்கள் மக்கள் தாக்கப்பட்டனர். அதற்கு பாஜக தான் காரணம். இந்த இடம் புனிதமானது, இங்கே நீங்கள் வரக்கூடாது என ஆவேசமாக பேசினர்.

    இதனை அடுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலை அந்த இளைஞர்களை சமாதானப்படுத்தியும் இளைஞர்கள் எங்கள் அன்னைக்கு மாலை அணிவித்து இழிவு படுத்த வேண்டாம் என கூறி மாலை அணிவிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

    பின்னர் அண்ணாமலை லூர்து மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி சென்றார்.

    தொடர்ந்து லூர்து மாதா அன்னை சிலைக்கு மரியாதை செலுத்த வந்த, பாஜக தலைவர் அண்ணாமலையை, இளைஞர்கள் தடுத்து முழக்கமிட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர், ஆசீர்வாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கொடிய காலரா நோய்க்கு பலியாகி உள்ளனர்.
    • ஒவ்வொரு ஆலயத்திலும் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் பாயாசத்தை ஆர்வமுடன் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர், ஆசீர்வாதபுரம் உள்பட சுமார் 5 சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயங்களில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் ஆண்கள் மட்டுமே நடத்தும் பாயாச பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர், ஆசீர்வாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கொடிய காலரா நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் அரிசி, தேங்காய் உள்ளிட்ட பாயாசத்துக்கு தேவையான பொருட்களை நேர்ச்சையாக வீடு வீடாக சென்று வாங்கி வருவார்கள்.

    பின்னர் குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ஆண்கள் பாயாசம் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கியதாகவும், அதன்பின் நோயின் தாக்கம் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.

    அதனை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் இந்த பாயாச பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஆண்கள் மட்டுமே நடத்திய பாயாச பண்டிகை கடையம் சுற்றுவட்டார கிறிஸ்தவ ஆலயங்களில் கொண்டாடப்பட்டது.

    ஒவ்வொரு ஆலயத்திலும் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் பாயாசத்தை ஆர்வமுடன் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

    மேட்டூரில் பரி.திரித்துவ ஆலயத்தில் சேகர உதவிகுரு ஜோயல் சாம் மெர்வின் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.

    ×