search icon
என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    வள்ளியூர் அருகே கண்டிகைப்பேரியில் சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலய பிரதிஷ்டை விழா
    X
    வள்ளியூர் அருகே கண்டிகைப்பேரியில் சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலய பிரதிஷ்டை விழா

    வள்ளியூர் அருகே கண்டிகைப்பேரியில் சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலய பிரதிஷ்டை விழா

    வள்ளியூர் அருகே கண்டிகைப்பேரி சேகரம் கண்டிகைப்பேரியில் சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயம் கட்டிடம் விரிவாக்கத்துடன் புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
    தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் வள்ளியூர் அருகே கண்டிகைப்பேரி சேகரம் கண்டிகைப்பேரியில் சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயம் கட்டிடம் விரிவாக்கத்துடன் புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தின் சாவியை ஊர் பெரியவர்கள் அருள், செல்வமணி ஆகியோர் நெல்லை திருமண்டல பிஷப் பர்னபாஸிடம் வழங்கினார்கள். அதனை பெற்று கொண்ட பிஷப் பர்னபாஸ் ஜெபம் செய்து பிரதிஷ்டை செய்தார். பின்னர் அசன விருந்து நடந்தது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நெல்லை திருமண்டல உபதலைவர் சுவாமிதாஸ், குருத்துவ செயலர் பாஸ்கர் கனகராஜ், லே செயலாளர் ஜெயசிங், வள்ளியூர் டி.டி.என் குழும தலைவர் டி.டி.என்.லாரன்ஸ், ஹெலன் லாரன்ஸ், தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் அருள்ராஜ், தொழிலதிபர்கள் ஞானராஜ், எட்வின்ஜோஸ், பொன்சிங், ரதிஷ்ராஜா, பன்னீர்தாஸ், கெர்சோன், சிம்சோன், பெனட் ஞானசெல்வன், கமிட்டி உறுப்பினர்கள் ரூபான் சாலமோன், துரைசிங், இம்மானுவேல் ஜெபா, ஜேசன்ராஜ், கெர்சோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கண்டிகைப்பேரி சேகர குரு ரவி மோகன்ராஜ், பெருமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஞானதுரை, செயலாளர் பாலசிங், பொருளாளர் எட்வின்ஜோஸ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் உள்பட பலர் செய்திருந்தனர்.
    Next Story
    ×