என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில் மூன்று காதல் இருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார். #MehandiCircus
    ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். 

    இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.



    அதில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, "இது காதல்படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில் மூன்று காதல் உள்ளது. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப்படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தில் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்" என்றார்.
    விஜய் நடிப்பில் வெளியான `மெர்சல்' படத்தில் இடம்பெற்றிருந்த `ஆளப்போறான் தமிழன்' பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. #Mersal #AalaporanThamizhan #Vijay
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான `மெர்சல்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்' பாடலுக்கு சமூக வலைதளங்களில் ஏகோபத்திய வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

    கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. யூடியூப்பில் இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டியிருக்கிறது.  



    ஏ.ஆர்.ரகுமான் இசையில், விவேக் வரிகளில் கைலாஷ் கெர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா இந்த பாடலை பாடியுள்ளனர். தமிழையும், தமிழர்களின் பெருமையையும் சொல்லும் வரிகளில் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் மாஸ் காட்டி வருகிறது. 

    அட்லி இயக்கிய இந்த படத்தில் விஜய் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Mersal #Vijay #AalaporanThamizhan 
    தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் விஜய்யின் புகைப்படம் மற்றும் கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. #Vijay
    நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். 2004-ல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்க அமைப்பாக மாற்றிய விஜய் அதன் மூலம் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்தார்.

    ஒரு அரசியல் கட்சிக்கு இணையாக விஜய் மக்கள் இயக்கத்துக்கு மாவட்ட, நகர, ஒன்றிய அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை உருவாக்கி அவற்றுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் வலுவான அமைப்பாக மாறி இருக்கிறது.



    நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்கி தேர்தலில் குதித்துள்ளார். ரஜினிகாந்த் நதிநீர் இணைப்பை செயல்படுத்தும் கட்சிக்கு ஓட்டுபோடுமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். நடிகர் விஜய் ஆதரவு யாருக்கு? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தனது படம் மற்றும் மக்கள் இயக்க கொடியை ரசிகர்கள் பயன்படுத்த கூடாது என்றும், பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து கொள்ளலாம் என்றும் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்மன்ற நிர்வாகிகள் மூலம் இந்த தகவல் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    பிரித்வி, ஓவியா நடிப்பில் ரதீஷ் இரேட் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ படத்தின் விமர்சனம். #GaneshaMeendumSanthippom
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் பிரித்வி. அவர் தேடி வந்த நபர் கைதாகி சிறைக்கு சென்றுவிடுகிறார். செய்வதறியாது தவிக்கும் பிரத்விக்கு, ஆட்டோ டிரைவர் கிரேன் மனோகரின் நட்பு கிடைக்கிறது. அவர் மூலம் தீப்பெட்டி கணேசனின் ரூமில் இணைகிறார்.

    சென்னையில் யாருக்கும் தெரியாமல் திருட்டு வேலைகள் செய்து பணம் சேர்க்கிறார் பிரித்வி. அவரை அவ்வப்போது போனில் தொடர்பு கொள்ளும் சிங்கம்புலி, விரைவாக பணத்தை ரெடி செய்து கொண்டு வரும்படி கூறுகிறார். இதற்கிடையே, பிரித்வியை வலை வீசி தேடுகிறார் வில்லன் கட்டாரி.

    இந்நிலையில், பிரித்விக்கு ஓவியாவின் நட்பு கிடைக்கிறது. அவரையும் ஏமாற்றி பணம் பறிக்கிறார். ஒருகட்டத்தில் தீப்பெட்டி கணேசன் தனது தங்கை திருமணத்திற்காக கடன் வாங்கி வைத்திருக்கம் ரூ.2 லட்சம் பணத்தையும் திருடிக் கொண்டு புறப்படுகிறார் பிரித்வி.



    இறுதியில் பிரித்வி எதற்காக திருடி பணம் சேர்க்கிறார்? யாருக்காக பணம் சேர்க்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    திருட்டுதனம் செய்து முழிப்பது, பதறுவது, காதலியை நினைத்து ஏங்குவது என தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளார் பிரித்வி. முதல் பாதியில் மட்டும் துணை நடிகை போல் வருகிறார் ஓவியா. 90 எம்எல் படத்தை போலவே இதிலும், தம்மடிப்பது, பீர் குடித்து என சகலமும் செய்கிறார். 

    ஹீரோயின் தேவிகாவுக்கு படத்தில் பெரிதாக வேலை எதுவும் இல்லை. வில்லன் கட்டாரியாக வரும் விஜயன், நன்றாகவே மிரட்டியிருக்கிறார். 



    ஒரு சாதாரண விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதனை சஸ்பென்ஸ் படமாகவும், காமெடி படமாகவும் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ரதீஷ் இரேட். ஆனால் படம் திரில்லிங்காவும் இல்லாமல், காமெடியாகவும் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது. திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

    என்எல்ஜி சிபி இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் தான். பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விபிந்த் வி ராஜ். 

    மொத்தத்தில் ‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ ஒருமுறை போதும்.
    மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் விக்ரம்பிரபு, மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. #Maniratnam
    இருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணன், காற்று வெளியிடை மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டான செக்க சிவந்த வானம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ். இந்த நிறுவனத்தின் 19 - வது படைப்பாக "வானம் கொட்டட்டும்" என்ற புதிய படம் உருவாக இருக்கிறது.

    இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவர் முதன்முறையாக மணிரத்னம் நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள்.

     

    மணிரத்னத்தின் உதவியாளரான இவர் ஏற்கனவே "படை வீரன்" என்ற படத்தை இயக்கியுள்ளார். அனைவராலும் பாராட்டு பெற்ற இவர் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். "96" புகழ் கோவிந்த வசந்தா இசை அமைக்கிறார். பிரீத்தா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்குகிறது. 
    தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். #Ilayaraja
     தேர்தல் களத்தில் சில கட்சிகள், பிரச்சார யுக்திக்காக நடிகர்களின் புகைப்படங்களைப் பயன் படுத்துவது வழக்கம். அவ்வாறு பயன்படுத்தும் போது சம்பந்தப்பட்ட நடிகர்கள், அறிக்கை மூலமாக இதற்கு விளக்கம் அளிப்பார்கள். அதே போல் இந்தத் தேர்தலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. 



    இது சர்ச்சையாவதற்குள் அதை தடுப்பதற்காக, இளையராஜா தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘’சில அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான வாக்குகளைப் பெற இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்து கின்றனர். எந்த‌ அரசியல் க‌ட்சிக‌ளும் அவரது பெயரையோ அல்லது அவ‌ர‌து புகைப்படத்தையோ அர‌சிய‌ல் லாப‌த்திற்காக பயன்படுத்த வேண்டாம்‘’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழில் தலைவன், என்னமோ ஏதோ, நாரதன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிகிஷா படேல், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். #NikeshaPatel
    தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல். அரவிந்தசாமி நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நிகிஷா படேல் தற்போது இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார்.

    எழில் இயக்கும் படம் எதுவாக இருந்தாலும் அதில் ஹீரோவிற்கு போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அதனால் இப்படத்திற்குப் பிறகு தமிழில் நிகிஷா படேல் கவனம் ஈர்க்கும் நாயகியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படம் பற்றி நடிகை நிகிஷா படேல் கூறியதாவது, "இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜிவி பிரகாஷுடன் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அவர் தனிநபராகவும் திரைநட்சத்திரமாகவும் நேசிக்கத்தக்க நபர். அவருடைய காமெடி டைமிங் எல்லாம் ஜோர். 



    எழில் சாருடைய படங்கள் எப்போதுமே குடும்பத்துடன் ரசிக்கும் அளவுக்கும் இருக்கும். பிரச்சினைகளை மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். எழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன். எத்தனையோ கதைகள் பற்றி ஆலோசித்திருந்தாலும் இந்த கேரக்டர் எனக்குப் பொருந்திப் போயிற்று. எழில் சார் மிகவும் அமைதியான நபர். கடினமாக உழைக்கும் இயக்குநரும் கூட. இந்த கதை மீது எழில் சார் சிறப்பான பார்வை கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. இன்னும் நிறைய படங்களில் அவருடன் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்றார்.
    தமிழில், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்த மியா ஜார்ஜ், தற்போது தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். #MiaGeorge
    தமிழில், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். தற்போது, லோக்சபா தேர்தலில் இவரை கோட்டயம் பகுதிக்கான நல்லெண்ணத் தூதுவராக நியமித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இதற்கான பொறுப்பை சமீபத்தில் கோட்டயத்தில் உள்ள பசீலியஸ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இவரிடம் ஒப்படைத்தது தேர்தல் ஆணையம்.



    இதுகுறித்து மியா கூறும்போது, “இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இதன் மூலம் இளம் தலைமுறையினரை, குறிப்பாக கல்லூரி மாணவர்களை அதிகப்படியாக ஓட்டளிக்க வைக்க முயற்சிப்பேன். ஓட்டு போடுவதை தவிர்த்து மற்றபடி எந்தவிதமான தேர்தல் நடைமுறைகளிலும் நான் ஒருபோதும் தலையிடப்போவதில்லை” என கூறியுள்ளார் மியா.
    ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்ற குறும்பட விழாவில் கலந்துக் கொண்ட ராதாரவி, நான் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். #RadhaRavi
    நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் திரைப்பட விழாவில் ராதாரவி கலந்துகொண்டு பேசியது சர்ச்சையானது. நயன்தாரா குறித்து அவரது பேச்சு பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக திமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

    இந்தப் பிரச்சினை குறித்து ராதாரவி மீண்டும் பேசியுள்ளார். சென்னையில் ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்ற குறும்படம் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு, ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ராதாரவி பேசும் போது, பயம் என்பது எங்களுடைய குடும்பத்திலேயே கிடையாது. எதற்கு பயப்பட வேண்டும்? சிலர் நடிப்பதை நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அது முடியாது, நான் நாடகத்தில் நடித்தால் உங்களால் எப்படி நிறுத்த முடியும்.



    நான் சந்தித்தது ஒரு பிரச்சினையே இல்லை. இதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்பதே கிடையாது. ஏனென்றால் இதெல்லாம் தற்காலிகப் பிரச்சினை. இவர் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கு இது என்ன ஐ.நா. சபை பிரச்சினையா? நம்ம பேசினதில் உண்மை இருக்கா இல்லையா. அவ்வளவுதான். உண்மை என்றவன் ஏத்துக்குட்டு போ, இல்லை என்றவன் விட்டுவிடு” என்று பேசினார்.
    தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகி பாபு நாயகனாக நடிக்கவுள்ள புதிய படம் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்துடன் மோதவிருக்கிறது. #YogiBabu #Darbar
    யோகி பாபு தான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்துக்காக கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

    கிட்டத்தட்ட 18 படங்களுக்கு மேல் தன் கைவசம் வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு, தற்போது காமெடி கலந்த கதாநாயகன் வேடங்களுக்கு முக்கியத்துவமளித்து வருகிறார்.

    சென்ற வாரம் இவர் கதாநாயகனாக நடித்த ‘தர்மபிரபு’ படத்தின் டீசர் வெளியானது. மே மாதம் வெளிவரவுள்ள இப்படத்தை தொடர்ந்து, ‘கூர்கா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட படங்களிலும் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். தான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதை, திரைக்கதை வசனம் எழுதுகின்றார். இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.



    ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க, ராஜசேகர் இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீசாகும் என தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநாளில் தான் ரஜினியின் தர்பார் படமும் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #YogiBabu #Darbar #Rajinikanth

    கே.சி.பொகாடியா இயக்கத்தில் ஸ்ரீகாந்த் - எஸ்நயா நடிப்பில் உருவாகி இருக்கும் `ராக்கி' படத்தின் முன்னோட்டம். #RockyTheRevenge #Srikanth
    பி.எம்.பி. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பொகாடியா தாயாரித்துள்ள படம் `ராக்கி'.

    ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்நயா நாயகியாக நடித்திருக்கிறார். நாசர், பிரம்மானந்தம், ஷாயாஜி ஷிண்டே, ஓஏகே சுந்தர், கராத்தே ராஜா, ரமேஷ்.டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது.

    படத்தொகுப்பு - பி.லெனின், இசை - பாப்பி லாஹிரி, சரண் அர்ஜூன், ஒளிப்பதிவு - அஸ்மல் கான், பாடல்கள் - ஏ.ஆர்.பி. ஜெயராம், நடனம் - பாப்பி, தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - கே.சி.பொகாடியா.



    விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார் ஸ்ரீகாந்த். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்சனையில், ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், ராக்கி ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

    படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #RockyTheRevenge #Srikanth #Eshanya

    ராக்கி டீசர்:

    சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமான சமீரா ரெட்டி சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. #SameeraReddy
    வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி கடந்த 2 வருடத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் 2வது முறையாக கர்ப்பமாகியிருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் சமீரா. அவர் அணிந்து வந்த ஆடையால் சர்ச்சையில் சிக்கி யிருக்கிறார்.

    உள்ளாடை தெரியும் அளவிற்கான கண்ணாடி போன்று டிரான்ஸ்பரன்ட் ஆடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் வயிறும் நன்கு தெரியும்படியாக சமீராவின் உடை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது தான் அவரை சர்ச்சையில் சிக்க வைத்திருக்கிறது.



    வெறுமனே பார்த்தாலே கர்ப்பமாக இருப்பது தெரிந்துவிடும், அதற்காக கண்ணாடி ஆடை அணிந்து வயிற்றை காட்ட வேண்டுமா என்று ரசிகர்கள் அவரை வசைமாரி பொழிந்து கொண்டிருக்கின்றனர். #SameeraReddy

    ×