என் மலர்
நீங்கள் தேடியது "Sameera Reddy"
- சமீரா ரெட்டி 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
- மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்.
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்திலன் கீழ் ரத்தப் பரிசோதனைகள், சர்க்கரை நோய், இருதய நோய் என எல்லாவிதமான பரிசோதனையும் அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக செய்து கொள்ள முடியும். இந்த முகாம்களில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "9 வருடங்களுக்கு முன்பு எனக்கு முடி உதிர்தல் தொடர்பான நோய் பாதிப்பு ஏற்பட்ட பின்புதான் எனது உடல்நலம் குறித்து நான் கவலைப்பட ஆரம்பித்தேன்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள், நோய் பாதிப்புகள் அதிகமான பின்புதான் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஆனால் ஆரம்பகட்டத்திலேயே நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. இதன்மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக, 1256 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் மத்தியில் நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இது பல உயிர்களைக் காக்கும்.
குறிப்பாக கிராமப்புற மக்களிடமும் நவீன மருத்துவ சேவை சென்றடையும் வகையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொருளாதார தடையின்றி அனைத்துத்தரப்பு மக்களும் இலவசமாக பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டக்கூடியது" என்று புகழ்ந்து பேசியுள்ளார்.










