என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல் முறையாக பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
    கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்ததில்லை. அதிலும் குறிப்பாக கொல்லிமலையின் சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது ஆகாய கங்கை என்கிற 1500 அடி உயரமுள்ள அருவியாகும்.

    சாதாரணமாக சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டுத் தான் இந்த அருவிக்கரையை அடைய முடியும். மலையிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் இந்த அருவி கண்களுக்குப் புலப்படாது. மிக ரகசியமாக 1250 செங்குத்தான படிகளில் வலிகளை பொருட்படுத்தாமல் இறங்கினால் மாத்திரமே கடைசிப் படி இறங்கி திரும்பினால் அருவி முழுத் தோற்றம் கண்களுக்குத் தெரியும் வகையில் இயற்கையாகவே அமைந்துள்ள ரகசிய பிரமாண்டமாகும் இந்த ஆகாய கங்கை அருவி. 

    கொல்லிமலை பகுதி

    இந்த ஆகாய கங்கையில் முதல்முறையாக எம்.எஸ்.மூவிஸ் கே.முருகன் தயாரிப்பில், பா.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும்  புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முறையான அனுமதி பெற்று நடந்துள்ளது. ஆகாயகங்கை அருவிக்கரைக்கு செல்வதற்கு படப்பிடிப்பு குழுவினர் அதிகாலை சுமார் 5 மணியில் இருந்தே டோலி மூலமும் உள்ளூர் மக்கள் உதவிகளைப் பெற்றும் நடிகர், நடிகைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க ஆரம்பித்து, பல கற்பாறைகள், மழை, காற்று இவற்றையெல்லாம் சமாளித்து தொழில்நுட்ப கருவிகளை மிகவும் சிரமப்பட்டு சுமந்துகொண்டு அருவிக்கரையை பதினொரு மணிக்கு அடைந்துள்ளனர். அதன் பிறகு ஏராளமான வலிகளையும் சிரமங்களையும் தாங்கி முதல்முறையாக ஆகாயகங்கை பகுதியில் பிரபுதேவா, மகிமா நம்பியார் உட்பட பல நடிகர்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர்.
    நடிகர் கமல் தனது பிறந்தநாளை முன்கூட்டியே விக்ரம் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
    கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    படக்குழுவினர்

    நடிகர் கமல் தனது பிறந்தநாளை நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். இதையொட்டி விக்ரம் படக்குழுவினர் இன்றே படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், இணை தயாரிப்பாளர் மஹேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
    எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் சர்வானந்த், அமலா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கணம்’ படத்தின் முன்னோட்டம்.
    எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கத்தில் அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் பிக்சன் படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. கணம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை அமலாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்தின் கதையை கேட்டு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கண்கலங்கி விட்டாராம். 25 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அமலா, இந்த படத்தில் அம்மாவாக நடிக்கிறாராம். இவரது மகனாக சர்வானந்த் நடிக்கிறார். ஸ்ரீ கார்த்திக் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.
    ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் நந்திதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஐபிசி 376’ படத்தின் விமர்சனம்.
    நாயகி நந்திதா நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு இரவு நேரத்தில் மர்ம நபரிடம் இருந்து குறுஞ்செய்தி வருகிறது. அந்த மர்ம நபர், நந்திதாவிடம் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுக்கிறார். போனில் வரும் குருஞ்செய்தியில் வருவது போல் நிஜத்திலும் நடக்கிறது. இந்த சமயத்தில் ஒரு தொழிலதிபர் குறித்து நந்திதாவிற்கு துப்பு கிடைக்கிறது.

    அவர் கொலை செய்யப்பட உள்ளதாகவும் அந்த மர்ம நபர் நந்திதாவிடம் தெரிவிக்கிறார். இதையடுத்து சம்பந்தப்பட்ட தொழிலதிபரை நேரில் சந்தித்து, “உங்களது உயிருக்கு ஆபத்து” இருப்பதாக சொல்கிறார் நந்திதா. அந்த தொழிலதிபரோ, நந்திதாவின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அசால்டாக இருக்கிறார். நந்திதா சொன்னபடி அந்த தொழிலதிபர் கொல்லப்படுகிறார். 

    ஐபிசி 376 விமர்சனம்

    இதையடுத்து மற்றொருவரும் இதே பாணியில் கொல்லப்படுகிறார். இந்த கொலையின் பின்னணியில் இருப்பது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் நந்திதா. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. இறுதியில் கொலையின் பின்னணியில் உள்ளவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகி நந்திதா, வழக்கமான கிராமத்து பெண்ணாக படங்களில் காட்சிதந்த இவர், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். கச்சிதமான தேர்வு. புதுவிதமான கதாபாத்திரம் என்றாலும் திறம்பட நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளிலும் துணிச்சலுடன் நடித்து அசத்தி இருக்கிறார். மதுசூதன் ராவ், மகாநதி சங்கர் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    ஐபிசி 376 விமர்சனம்

    இயக்குனர் ராம்குமார் சுப்பாராமன், கதையில் ஹாரர், சேஸிங், ஆக்‌ஷன் என பல்வேறு அம்சங்களுடன் கதையை அமைத்துள்ள அவர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். கதபாத்திரங்கள் தேர்வு கச்சிதம். 

    சூப்பர் சுப்பராயனின் ஸ்டண்ட் காட்சிகள் அருமை. யாதவ் ராமலிங்கத்தின் பின்னணி இசையும், தில்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஐபிசி 376’ வேகமில்லை.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, ஜெய் பீம் படத்தில் பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.
    சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் நாளை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கி இருக்கும் இப்படம் இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

    ஜெய் பீம் படத்தின் போஸ்டர்
    ஜெய் பீம் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், இருளர் பழங்குடியை சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார். அப்போது ஜோதிகா, துர்கா ஸ்டாலின் மற்றும் இருளர் பழங்குடியை சேர்ந்த மக்கள் சிலரும் உடனிருந்தனர். நடிகர் சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், சிறந்த நடிகராக வலம் வந்தது மட்டுமின்றி, பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்த புனித், 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார். 

    இந்நிலையில், புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும், 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் தான் ஏற்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார்.

    புனித் ராஜ்குமார் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஷால்
    புனித் ராஜ்குமார் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஷால்

    மேலும் இந்நிகழ்ச்சியில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். விஷால் நடித்துள்ள எனிமி படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ராஜமவுலி இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராஜமவுலி இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிவிவி தனய்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்
    ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், அஜித்தின் ‘வலிமை’ பாணியில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரம்மிப்பூட்டும் காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


    இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது இதுவே முதன்முறை ஆகும்.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சசிகுமார், இவர் கைவசம் எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. அதன்படி, பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.

    இதேபோல் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்புவச்ச சிங்கம்டா’ திரைப்படம் வருகிற நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

    கொம்புவச்ச சிங்கம்டா, ராஜவம்சம் படங்களின் போஸ்டர்
    கொம்புவச்ச சிங்கம்டா, ராஜவம்சம் படங்களின் போஸ்டர்

    இந்நிலையில், அந்த படத்துக்கு போட்டியாக, சசிகுமாரின் மற்றொரு படமும் களமிறங்கி உள்ளது. கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராஜவம்சம்’ திரைப்படமும் நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சசிகுமார் நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    புனித் ராஜ்குமாரின் இறப்பு, குழந்தையை இழந்துவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளதாக நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
    கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்க முடியாமல் ரசிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில், புனித் ராஜ்குமாரின் சகோதரரான நடிகர் சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு, எங்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி தங்களின் குழந்தைகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவு ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

    அவர் என்னை விட 13 ஆண்டுகள் சிறியவர். அவர் இறப்பு எனது குழந்தையை இழந்துவிட்டது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் தீவிர வேதனை அடைகிறார்கள். எங்களுக்கு அவரது இழப்பால் ஏற்பட்டுள்ள வேதனை நிரந்தரமாக இருக்கும். ஆனால் நாம் அனைவரும் வாழ்க்கையை முன்னெடுத்து வாழ வேண்டும். நடந்த விஷயங்களை மறந்து பயணிக்க வேண்டியுள்ளது.

    சிவராஜ்குமார்
    சிவராஜ்குமார்

    கர்நாடக அரசு குறிப்பாக போலீசார் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். எனது தந்தை இறந்தபோது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. ஆனால் இப்போது எந்த இடத்திலும் சிறு அசம்பாவித சம்பவங்கள் கூட நடக்கவில்லை. இதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்கள் குடும்பத்தின் மீது அவர் மிகுந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்க முடியாமல் ரசிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். யாரும் இத்தகைய முடிவை எடுக்கக்கூடாது. புனித் ராஜ்குமாரே இதை விரும்ப மாட்டார். அன்பு இருக்க வேண்டும். அதற்காக யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது. தங்களின் குடும்பத்தை பார்க்க வேண்டும். குடும்பத்தை கவனித்து கொள்வது முக்கியம்”. 

    இவ்வாறு சிவராஜ்குமார் கூறினார்.
    கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக இந்தியன் பட நடிகை தெரிவித்துள்ளார்.
    தமிழில் இந்தியன் மற்றும் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து இருப்பவர் நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி, சிவசேனாவில் இணைந்தார். 

    ஊர்மிளா மடோன்கர்
    ஊர்மிளா மடோன்கர்

    இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், "எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமாக உள்ளேன். வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
    ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    தமிழில் ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமான அஞ்சலி, இதையடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சமீப காலமாக தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

    அண்மையில் தெலுங்கில் அவர் நடித்த ‘வக்கீல் சாப்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஞ்சலி, அடுத்ததாக மேலும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    அஞ்சலி

    மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘நயாட்டு’ என்கிற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் அஞ்சலி ஹீரோயினாக நடிக்க உள்ளார். கருணா குமார் இப்படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள பிரியதர்ஷி என்பவர் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க உள்ளாராம்.
    தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ந்தேதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர்.

    ஆனால், ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது.

    இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து இன்று இரவு வீடு திரும்பினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், நான் நலமுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
    ×