என் மலர்
- படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று கோலாகலமாக தொடங்கியது.
- மலேசியாவில் அதிகம் பேர் கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழா ஜனநாயகன்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று கோலாகலமாக தொடங்கியது.
இந்த விழாவில் படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். 80 ஆயிரம் இருக்கைகள் கொண்ட புக்கிட் ஜலில் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் மலேசியாவில் அதிகம் பேர் கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழா என மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பிடித்து 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா வரலாறு படைத்துள்ளது.
- ஜனநாயகன் உங்க கடைசிப் படம் என்பது வருத்தமாக இருக்கிறது.
- மாஸ்டர் மற்றும் லியோ என் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படங்கள்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெற்று வருகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. குறிப்பாக இயக்குனர் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்:-
ஜனநாயகன் வெற்றி பெற வாழ்த்துகள். அப்படியே உங்க உங்க பெரிய ஆசையும் வெற்றி பெற வாழ்த்துகள். ஜனநாயகன் உங்க கடைசிப் படம் என்பது வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும், வாழ்த்துகள் அண்ணா. மாஸ்டர் மற்றும் லியோ என் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படங்கள் என கூறினார்.
- ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது.
- 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று கோலாகலமாக தொடங்கியது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெற்று வருகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. இசை வெளியிட்டு விழாவில் நடைபெறும் பல சுவாரஸ்சிய சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார். அதன்பின்னர் விஜய் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார்.
இதனையடுத்து மேடையில் விஜய் நின்று கொண்டிருந்த போது ரசிகர்கள் TVK... TVK... என கோஷமிட்டனர். இதனை சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்த விஜய், ஒரு கட்டத்தில் இது அதற்கான மேடை இல்லை என்பது போல சைகை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது.
- இந்த விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார்.
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட பலர் நேற்று விமானத்தில் மலேசியாவுக்கு சென்றனர்.
இம்முறை இசை வெளியீட்டு விழாவாக நடத்தாமல் தளபதி கச்சேரி என்கிற பெயரில் கான்செர்ட்டாக நடத்தப்பட உள்ளது. தற்போது புக்கட் ஜலீல் ஸ்டேடியம் அருகே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். சுமார் 80,000 பேர் கலந்து கொள்வார்கள் என கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார். அதன்பின்னர் விஜய் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார்.
அதனை தொடர்ந்து தனது வழக்கமான பாணியில் அவருடன் சேர்ந்து ரசிகர்களை செல்பி வீடியோ எடுத்துக் கொண்டார்.
அதன்பிறகு விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், லோகேஷ் கனகராஜ், அட்லி ஆகியோர் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து தளபதி பாய்ஸ் என்ற டைட்டில் திரையில் வெளியிடப்பட்டது. அப்போது மேடையில் விஜய் உடன் இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கட்டி அணைத்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது.
- 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெறுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெறுகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மலேசியாவிற்கு படையெடுத்துள்ளதால் கோலாம்பூர் நகரமே களை கட்டியுள்ளது.
இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து காணப்படுகிறது. மேலும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் மைதானத்தில் வெளியே ரசிகர்கள் விஜய் முகம் பொறித்த கொடியுடன் நடனாமாடி கொண்டாடி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் தொடர்பான புகைப்படம் மற்றும் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
- இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியிட தயாராக உள்ளது. இதனால் இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், 'சூர்யா 46' படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகிறது. அதாவது 'சூர்யா 46' படத்தின் கதை 45 வயது இளைஞனுக்கும் 20 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவைப் பற்றியது. இந்தப் படம் பலவிதமான உணர்ச்சிகளை கொண்டு இருக்கும். மேலும் கஜினியில் வரும் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தின் பாணியில் இருக்கும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி கூறியுள்ளார்.
- பல்வேறு யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.
- சில நாட்களில் தவிர்க்க முடியாத காரணங்களில் அப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி தெரிவித்தார்.
கடந்த 2004-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி. மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான குஷ்பு ஆகியோர் இணைந்து தொடங்கப்பட்ட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் அவ்னி சினிமேக்ஸ். சுந்தர் சி. இயக்கும் படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தற்போது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதாவது, இது ஒரு முக்கியமான மெசேஜ்... உங்க சார்ஜர்ல இருக்கிற ஹோல்ல இருந்து படிங்க... என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சுந்தர் சி-யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, தமன்னா மீண்டும் நடிக்க வருகிறார் என பல்வேறு யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் படி அது Sundar C's Next Loading என தெரியவருகிறது.
முன்னதாக, கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சில நாட்களில் தவிர்க்க முடியாத காரணங்களில் அப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி தெரிவித்தார். இதனால் இது அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.
- திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மலேசியாவிற்கு படையெடுத்துள்ளதால் கோலாம்பூர் நகரமே களை கட்டியுள்ளது.
- விஜய் பேசிய வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெறுகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மலேசியாவிற்கு படையெடுத்துள்ளதால் கோலாம்பூர் நகரமே களை கட்டியுள்ளது.
இதனிடையே, 'ஜன நாயகன்' படம் விஜயின் கடைசி படம் என்று சொல்லப்படுவதால் இசை வெளியீட்டு விழாவில் அவர் சொல்லும் 'ஒரு குட்டி ஸ்டோரி'-க்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் 'One Last Time... ORU KUTTI STORY...' என்று விஜய் பேசிய வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
- இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
- அனைத்து மொழியிலும் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜனவரி 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் 'ராஜாசாப்' திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார்.
இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜனவரி 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், 'ராஜாசாப்' திரைப்படத்தில் மாளவிகா மோகனின் கதாபாத்திரம் தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பைரவி என்ற கதாபாத்திரல் மாளவிகா மோகனன் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
- ‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் 'சிறை' படம் வெளியான 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில், 'சிறை' படம் முதல் நாளிலேயே உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது என்றும் இதனால் 2 நாட்களில் ரூ.2 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
- அடுத்தப்படங்களில் அதிக விமர்சனங்களை தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடப்போகிறேன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி.' கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மேலும் படம் வசூல் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'கூலி' படம் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'கூலி' படம் மீது 1000 விமர்சனங்கள் இருந்தன. விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அடுத்தப்படங்களில் அதிக விமர்சனங்களை தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடப்போகிறேன்.
ரசிகர்களிடமிருந்து ஒரு படத்திற்கு விமர்சனம் வரும்போது, அதை ஏற்றுக்கொள்வது முக்கியம். அதே நேரத்தில், விமர்சனங்களை தாண்டியும் ரஜினி சாருக்காக மக்கள் தியேட்டரில் போய் படம் பார்த்து இருக்காங்க. படம் 500 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. மக்களுக்கு நன்றி.
அடுத்த படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததாலும், வாய்ப்பு கிடைக்காததாலும், படம் வெளியான நேரத்தில் விமர்சனம் குறித்து பேச முடியவில்லை என்று கூறினார்.
- அரபு நாடுகள் துரந்தர் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.
- மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
மும்பை:
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான படம் துரந்தர். இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், படம் வெளியாகி 21 நாளான நிலையில், துரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன்மூலம் 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.








