என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு வெற்றிப்பயணத்தை தொட்டுள்ளார்.
    • ரவி மோகன் காட்டும் வில்லத்தனம் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.

    நாயகன் சிவகார்த்திகேயன் 1958 காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரம் காட்டுகிறார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் உயர் காவலதிகாரி ரவிமோகன் சிவகார்த்திகேயனை ஒழித்துக்கட்ட நினைக்கிறார். இருவருக்கும் நடக்கும் சண்டையில் ரவி மோகன் ஒரு விரலை இழக்கிறார். அதன்பின் சிவகார்த்திகேயன் குழுவில் ஒரு இளைஞன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கொல்லப்பட, சிவகார்த்திகேயன் போராட்டத்தை கைவிடுகிறார்.

    அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் முன்னெடுத்த அதே எதிர்ப்பு போராட்டத்தை அவரின் தம்பியான அதர்வா கையிலெடுக்கிறார். முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவகார்த்திகேயன் முடிவில் அவரும் மீண்டும் இந்தி எதிர்ப்பில் களம் இறங்குகிறார். ரவி மோகனும் சிவகார்த்திகேயனை அழித்தொழிக்க வேலை செய்கிறார்.

    இறுதியில் சிவகார்த்திகேயன் ரவிமோகனின் மோதலின் முடிவு என்ன? இந்தி போராட்டத்தின் விளைவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு வெற்றிப்பயணத்தை தொட்டுள்ளார். அபாரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். உடல் மொழி, ஆக்சன், வசனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    ரவி மோகன் காட்டும் வில்லத்தனம் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது. நாயகி ஸ்ரீலீலா முதல் படம் என்ற சுவடே தெரியாமல் நடித்துள்ளார். அதர்வாவின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. சேத்தன், குரு சோமசுந்தரம், கெஸ்ட் ரோலில் வரும் ராணா ஆகியோரும் நல்ல கவனம் ஈர்க்கின்றனர். இந்திரா காந்தி, பக்தவச்சலம் தோற்றத்தில் வருபவர்கள் நன்றாக நடித்துள்ளனர்.

    இயக்கம்

    1937-ல் துவங்கி, 1940-ல் தற்காலிக முடிவுக்கு வந்து, பின் 1963-ல் மூர்க்கமாக வெளிப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வைத்து படத்தை பரபரப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. படம் புரட்சி பேசினாலும் கமர்சியல் மீட்டரிலிருந்து விலகவில்லை. நடிகர்களை சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.

    இசை

    ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டுமே படத்திற்கு பெரிய பலம்.

    ஒளிப்பதிவு

    ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தின் உச்சம். அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

    • படத்தை தணிக்கை செய்வது தொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும்
    • தணிக்கைக்கு செல்லும் படத்தின் காட்சிகளை திருத்தவும் நீக்கவும் வெளிப்படைத்தன்மை அவசியம்

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜன நாயகன் தணிக்கை விவகாரம் தொடர்பாக நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "பகுத்தறிவால் வழிநடத்தப்படும் இந்திய அரசியலமைப்பு கருத்து சுதந்திரத்தை உத்தரவாதம் செய்கிறது.

    இந்த தருணம் எந்த ஒரு படத்தையும் விட பெரியது, இது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் கலைக்கும் கலைஞர்களுக்கும் நாம் அளிக்கும் இடத்தை பிரதிபலிக்கிறது.

    சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, நியாயமான மற்றும் சரியான நேரத்தில் செயல்படும் ஒரு திட்டத்தைச் சார்ந்து வாழும் எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் சிறு வணிகங்களின் கூட்டு முயற்சியாகும்.

    தெளிவு இல்லாதபோது, படைப்பாற்றல் தடைபடுகிறது, பொருளாதார செயல்பாடு சீர்குலைகிறது. மேலும் பொது நம்பிக்கை பலவீனமடைகிறது.

    தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் சினிமா ஆர்வலர்கள் கலைகளுக்கான ஆர்வம், பகுத்தறிவு மற்றும் முதிர்ச்சியைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள்.

    இப்போது தேவைப்படுவது, தணிக்கை சான்றிதழுக்கான வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு மற்றும் ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட வெட்டு அல்லது திருத்தத்திற்கும் எழுதப்பட்ட, நியாயமான நியாயப்படுத்தலுடன் கூடிய சான்றிதழ் செயல்முறைகளை கொள்கை ரீதியான மறுபரிசீலனை செய்வதாகும்.

    முழு திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து நமது அரசு நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாக்கும், அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தும், அதன் கலைஞர்கள் மற்றும் அதன் மக்கள் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

    • 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று வழங்கப்படாததால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    • தணிக்கைத்துறையை விமர்சித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜன நாயகன் தணிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய தணிக்கைத்துறையை விமர்சித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
    • மேல்முறையீட்டின் போது தங்களது தரப்பு பாதிப்புகளை எடுத்து கூறுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    'ஜன நாயகன்' படத்துக்கான தணிக்கை தொடர்பாக மறு விசாரணை குழுவினருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்காத நிலையில் சட்ட ரீதியாக அதனை எதிர்கொண்டு படத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது அடுத்த கட்ட ஆயத்த பணிகளை பட குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து படக்குழுவினர் கூறும் போது, பொங்கலுக்கு விஜயின் 'ஜன நாயகன்' படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் . விநியோகஸ்தர்கள் மற்றும் பட அதிபர்களின் நிலையை கருத்தில் கொண்டும், தொழில் மற்றும் வியாபார நஷ்டங்களை தவிர்க்கும் வகையிலும் 'ஜன நாயகன்' படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டில் தங்களது தரப்பு பாதிப்புகளை படக்குழு விரிவாக கூறியுள்ளது. 

    • பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
    • திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா , ஷாலினி அஜித்குமார் ஆகியோர் சென்னை சத்யம் தியேட்டரில் பராசக்தி படத்தை பார்க்க வந்தனர். அண்மையில் மலேசியாவில் அஜித்குமாரை நடிகை ஸ்ரீலீலா சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
    • திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், நடிகர் ரவி மோகன், கெனீஷா ஆகியோர் சென்னை காசி தியேட்டரில் பராசக்தி படம் பார்க்க ஒன்றாக வந்தனர். 

    • திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பேனருக்கு பாலாபிஷேகம், இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
    • நடிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


    திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பேனருக்கு பாலாபிஷேகம், இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடினர். 'பராசக்தி' படத்தை பார்க்க அப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் மற்ற நடிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.


    முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது. 

    • மறு ஆய்வு கமிட்டிக்கு செல்ல நேரம் இல்லாததாலும், புகார் தெரிவித்தது யார் என்றே தெரியாததாலும் உடனடியாக நீதிமன்றம் சென்றோம்.
    • நீதிமன்றமும் சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்ட போதும், தணிக்கை வாரியம் உடனே மேல்முறையீட்டுக்கு சென்று இடைக்கால தடை வந்துவிட்டது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, 'ஜன நாயகன்' பட தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வெங்கட் நாராயணா எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவில் வெங்கட் நாராயணா கூறியிருப்பதாவது:

    * டிசம்பர் மாதமே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி அவர்கள் சொன்ன திருத்தங்களையும் செய்து மீண்டும் சமர்ப்பித்தோம்.

    * U/A சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த போது ஜன.5-ந்தேதி மாலை படத்தை மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்புவதாக அதிர்ச்சி செய்தி வந்தது.

    * மறு ஆய்வு கமிட்டிக்கு செல்ல நேரம் இல்லாததாலும், புகார் தெரிவித்தது யார் என்றே தெரியாததாலும் உடனடியாக நீதிமன்றம் சென்றோம்.

    * நீதிமன்றமும் சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்ட போதும், தணிக்கை வாரியம் உடனே மேல்முறையீட்டுக்கு சென்று இடைக்கால தடை வந்துவிட்டது.

    * ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவரிடமும் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

    * சொன்ன தேதியில் படத்தை கொண்டுவர எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால் அனைத்தும் கையை மீறி சென்று விட்டது.

    * எங்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார். 

    • 1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
    • இப்படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகுகிறது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில், 'பராசக்தி' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாவதையொட்டி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீண்ட காலத்துக்குப் பிறகு, நமது தாய்மொழியைப் போற்றியும் உயர்த்தியும் பேசும் ஒரு திரைப்படம்… தமிழ் மீது கொண்ட பேரன்புடன், உங்களுக்காக பராசக்தி — என் 100வது திரைப்படம் என்று கூறியுள்ளார். 



    • சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த திரைப்படப் பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியது.
    • இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 22 அன்று வெளியாகும்.

    சென்னை:

    2026-ம் ஆண்டிற்கான 98-வது ஆஸ்கார் விருதுவிழா மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், விருதுகளுக்கான தகுதியுடைய 201 திரைப்படங்களின் பட்டியலை ஆஸ்கார் அகாடமி வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப்பட்டியலில் சிறந்த திரைப்படப் பிரிவில் தமிழில் இருந்து சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி தேர்வாகியுள்ளது.

    இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 22 அன்று வெளியாகும்.

    இந்நிலையில், ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றதற்காக அனைவர்க்கும் நன்றி என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சசிகுமார்.

    • படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

    பிரபாஸ் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். ஆனால், அந்த பாட்டி ஞாபக மறதி உடையவர். ஆனால், தொலைந்து போன கணவர் பற்றி மட்டும் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார். கண்டிப்பாக தன் கணவரை பார்க்க வேண்டும் என சொல்கிறார்.

    இதனால் தன்னை வளர்த்த பாட்டிக்காக அவரை தேடி பிரபாஸ் கிளம்ப, சென்ற இடத்தில் நிதி அகர்வால், மாளவிகாவுடன் காதல் வயப்படுகிறார்.

    அதே நேரத்தில் தாத்தாவான சஞ்சய் தத் ஒரு மாந்திரிகவாதி, பணத்தை திருடுபவர் என்றெல்லாம் தெரியவர, மறு பக்கம் சமுத்திரகனியும் சஞ்சய் தத் தேடி வர, பிறகு என்ன ஆனது ? தாத்தாவை பிரபாஸ் கண்டுப்பிடித்தாரா? சமுத்திரகனி எதற்கு தேதி வருகிறார் என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்

    பிரபாஸை எப்போதும் வயலண்ட்டாகவே பார்த்த நமக்கு, இந்த படத்தில் புதியதாக தெரிகிறார். ஹீரோயின்களான மாளவிகா, நிதி, ரிதி என 3 பேரும் அவர்களுக்கு வழங்கிய கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். படம் ஆரம்பித்து சஞ்சய் தத் வரும் வரை பெரும் சோதனையாகவே செல்கிறது.

    இயக்கம்

    எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் கதை ஒரு இடத்திலேயே சுற்றிக்கொண்டு இருப்பது பொறுமையை சோதிக்க வைக்கிறது. படத்தின் நீளமும் அதிகம். எப்படா படம் முடியும் என்று படம் பார்க்க செல்பவர்களை கலங்கடிக்க வைத்திருக்கிறது.

    இசை

    தமன் இசை படத்திற்கு பலமே.

    ஒளிப்பதிவு

    படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

    ரேட்டிங்- 1.5/5

    படத்தின் பின்னணி இசை கதையின் கனத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

    படத்தின் ஆரம்பத்திலேயே இளம்பெண் (ஜெனி) ஒருவரை மர்மகும்பல் கொடூரமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கொலை செய்துவிடுகின்றனர். இதுபோன்ற சில கொலைகளும் அங்கு நடக்கிறது. ஆனால் போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை.

    ஜெனியின் நெருங்கிய தோழிதான் படத்தின் கதாநாயகி. பள்ளியில் தொடங்கிய நட்பு இருவரும் நீட் தேர்வு எழுதி மருத்துப் படிப்பில் சேரும் தருவாயில் ஜெனியின் கொலை சம்பவம் நிகழ்கிறது.

    ஜெனியின் மரணத்திற்காக போராட நினைக்கும் கதாநாயகி, மருத்துவம் படிக்காமல் சட்ட படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது தோழியின் மரணத்திற்காக சட்டரீதியாக போராடுகிறார்.

    இறுதியில் ஜெனிக்கு நீதி கிடைத்ததா? குற்றவாளியை கண்டுபிடித்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    படத்தின் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி, வலியையும் துயரத்தையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சிகளில் உணர்ச்சிகரமான நடிப்பு அனைவரையும் கவர்கிறது. காவல்துறை அதிகாரியாக வரும் நடிகையும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    இயக்கம்

    பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதி, குறிப்பாக ஒரு இளம்பெண்ணுக்கு (ஜெனி) நேரும் பாதிப்பு மற்றும் அதற்காக அவரது குடும்பமும் சமூகமும் போராடும் நீதியைப் பற்றியதுதான் இந்தக் கதை. சட்டப் போராட்டங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஒரு வழக்கின் போக்கை எப்படி மாற்றுகின்றன என்பதை யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

    வழக்கமான பழிவாங்கும் கதையாக இல்லாமல், சட்டத்தின் மூலமாக நீதியைத் தேடும் 'கோர்ட் ரூம் டிராமா' பாணியில் விறுவிறுப்பாக நகர்கிறது.

    சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டும் கூர்மையான வசனங்கள் படத்திற்குப் பெரிய பலம். ஒரு சமூக விழிப்புணர்வுப் படத்தை போரடிக்காமல் கொடுத்த இயக்குநருக்குப் பாராட்டுகள்.

    இசை

    படத்தின் பின்னணி இசை கதையின் கனத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

    ஒளிப்பதிவு

    படத்திற்குத் தேவையான அழுத்தமான காட்சிகளை இவர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.

    ×