என் மலர்
இது புதுசு
மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடலை இந்தியாவில் அரிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடலை ஜூன் 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு ஸ்பை படங்கள், வீடியோக்கள் வெளியான நிலையில், இந்த மாடலுக்கான டீசர் வீடியோக்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் இந்த மாடல் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கிறது.
டீசர் வீடியோவின் படி புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் முற்றிலும் மேம்பட்ட ஸ்டைலிங், முன்புறம் புது கிரில், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், முன்புற பம்ப்பரில் ஃபாக் லேம்ப் ஹவுசிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டூயல் டோன் அலாய் வீல்கள், க்ரோம் டோர் ஹேண்டில்கள், க்ரோம் விண்டோ லைன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
காரின் உள்புறம் புதிய ஸ்கார்பியோ மாடலில் மேம்பட்ட கேபின், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், எலெக்ட்ரிக் சன்ரூப், முன்புறம் பார்த்த நிலையில் மூன்றாம் அடுக்கு இருக்கைகள், ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பீக்கர்கள், யு.எஸ்.பி. சி சார்ஜிங் போர்ட்கள், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கீலெஸ் எண்ட்ரி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இத்துடன் 4-வீல் டிரைவ் வசதி வழங்கப்படலாம்.
புத்தம் புதிய லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
நீண்ட வீல்-பேஸ் கொண்ட லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலின் டீசர் வெளியாகி இருக்கிறது. புதிய லேண்ட் ரோவர் டிபெண்டர் மாடல் மே 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக 2020 வாக்கில் லேண்ட் ரோவர் டிபெண்டர் மாடல் முழுமையாக ரிவாம்ப் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் 8 சீட்டர் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலுக்கான முன்பதிவு, அறிமுக நிகழ்வு நிறைவுற்றதும் தொடங்கும். தற்போதைய தகவல்களின் படி புதிய டிபெண்டர் 130 மாடலின் வீல்பேஸ் 3300 மில்லிமீட்டராக இருக்கும் என கூறப்படுகிறது. டீசரில் வெளியாகி இருக்கும் ஒற்றை புகைப்படத்தில் 8 சீட்டர் லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடல் பற்றி அதிக விவரங்கள் இடம்பெறவில்லை.

எனினும், புதிய டிபெண்டர் 130 மாடலின் 8 சீட்கள், மூன்று அடுக்குகளில் 2-3-3 வரிசையில் இடம்பெற்று இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரின் மூன்றாவது அடுக்கிலும் மூன்று பேரும் அமரும் இருக்கை வழங்கப்பட இருப்பது உறுதியாகி உள்ளது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட 7 சீட்டர் டிபெண்டர் 110 மாடலில் 2-3-2 முறையில் இருக்கைகள் வழங்கப்பட்டன.
லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலில் வழங்கப்பட இருக்கும் என்ஜின் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த மாடலில் சக்திவாய்ந்த மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அம்சங்கள் மற்றும் இந்திய வெளியீடு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
பி.எம்.டபிள்யூ. குழுமத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் அப்டேட் செய்யப்பட்டு 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. புதிய 3 சீரிஸ் மாடலில் கூர்மையான டிசைன், மேம்பட்டு இண்டீரியர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் பவர்டிரெயின் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், 2023 பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடல் அடுத்த ஆண்டு துவக்கம் அல்லது 2023 ஆண்டு மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 2023 பி.எம்.டபிள்.யூ. 3 சீரிஸ் மாடலின் வெளிப்புறம் ஸ்டிரக்ச்சர் செய்யப்பட்ட சர்பேஸ்கள், டைனமிக் லைன் மற்றும் பெரிய ஏர் இண்டேக் உள்ளிட்டவை உள்ளன. இவை காரின் முன்புறத்திற்கு அதிரடியான ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது.

இதன் ஹெட்லைட் மற்றும் கிட்னி கிரில்கள் ரி-டிசைன் செய்யப்பட்டு உள்ளன. ஸ்டாண்டர்டு எல்.இ.டி. ஹெட்லைட்கள் தற்போது மிக மெல்லியதாக மாற்றப்பட்டுள்ளன. இதன் டேடைம் டிரைவிங் லைட்கள் தலைகீழாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இவை காருக்கு அதிநவீன தோற்றத்தை வழங்குகின்றன.
புதிய 2023 பி.எம்.டபிள்.யூ. 3 சீரிஸ் மாடலில் முந்தைய வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின்களே வழங்கப்பட்டு உள்ளன. இதன் பேஸ் வேரியண்ட் 330i மாடலில் 2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 255 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. 330e பிளக்-இன் ஹைப்ரிட் மாடலில் 288 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 3 லிட்டர் I6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஹூண்டாய் மற்றும் டாடா பவர் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்து உள்ளன.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் டாடா பவர் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்து உள்ளன. கூட்டணியின் படி இரு நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, நாடு முழுக்க ஹூண்டாய் விற்பனை மையங்களில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நெட்வொர்க்-ஐ கட்டமைக்க முடிவு செய்துள்ளன.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான அன்சு கிம், டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் பிரவீர் சின்ஹா இடையே புது கூட்டணி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின் இருவரும் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். கூட்டணி பற்றிய அறிவிப்பு ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள ஹூண்டாய் இந்தியா தலைமையகத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது 29 நகரங்களில் 32 எலெக்ட்ரிக் வாகன டீலர்களை வைத்து இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா எலெக்ட்ரிக் வாகன டீலர்ஷிப்களில் தற்போது 7.2 கிலோவாட் AC சார்ஜர்களே உள்ளன. புது ஒப்பந்தத்தின் படி டீலர்ஷிப்களில் உள்ள சார்ஜர்களை 60 கிலோவாட் DC பாஸ்ட் சார்ஜர்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது டீலர்ஷிப்களில், இடவசதி மற்றும் அனைத்து விதமான ஒப்புதல்களை டாடா பவர் நிறுவனத்திற்கு வழங்கும். இங்கு சார்ஜிங் மையங்களை நிறுவி அவற்றை பராமரிக்கும் பணிகளை டாடா பவர் மேற்கொள்ள இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் உருவாக்கி புதிய இன்னோவா மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் பிரபல எம்.பி.வி. மாடலாக இன்னோவா இருக்கிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் டொயோட்டா இன்னோவா விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், டொயோட்டா இன்னோவா மாடல் விரைவில் அப்டேட் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேம்பட்ட அம்சங்களுடன் உருவாகி வரும் இன்னோவா கார் அடுத்த தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய டொயோட்டா இன்னோவா மாடல் இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டம் அதாவது அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய டொயோட்டா இன்னோவா மாடல் மோனோக் சேசிஸ் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடலில் டீசல் என்ஜினுக்கு மாற்றாக பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் புதிய டொயோட்டா இன்னோவா மாடலில் அதிக மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. இதோடு புதிய இன்னோவா மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா மாடல் 4.7 மீட்டர் நீளமாக இருக்கும் என தெரிகிறது. இது இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட அளவில் சிறியது ஆகும். அளவில் சிறியதாக இருந்தாலும் புதிய மாடல் அதிக இடவசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய இன்னோவா மாடல் வீல்பேஸ் 2850 மில்லிமீட்டர் அளவிலும், வீல்களுக்கு இடையில் அதிக இடைவெளி உள்ளது. இதனால் காரின் உள்புறத்தில் அதிக இடவசதி கிடைக்கும்.
கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் EV6 எலெக்ட்ரிக் கார் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா, தனது இந்திய வெளியீட்டை ஒத்திவைத்து இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் அதிகளவு இறக்குமதி வரி காரணமாக டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கும முடிவை ஒத்தி வைப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இதனிடையே கியா இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஹூண்டாய் நிறுவனம் தனது EGMP EV பிளாட்பார்மை இந்தியா கொண்டு வருகிறது. இந்த பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் கியா EV6 மாடலும் இதே பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனத்தின் EGMP EV பிளாட்பார்ம் கொண்டு உருவாக்கப்பட்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் கார் மாடல் என்ற பெருமையை கியா EV6 பெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய கியா EV6 காரின் ஏர் வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் கான்பிகரேஷன் கொண்டிருக்கிறது. கியா EV6 GT லைன் மாடலில் ஏராளமான அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் பில்ட் இன் டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ABS, BAS, ESC, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹைவே டிரைவிங் அசிஸ்ட் மற்றும் வெஹிகில் ஸ்டேபிலிட்டி மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய 3 சீரிஸ் பேஸ்லிப்ட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதுபற்றி தொடர்ந்து பார்ப்போம்.
பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் பிரீமியம் செடான் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி இந்த காரில் நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது.
மாற்றங்களை பொருத்தவரை புதிய 3 சிரிஸ் மாடலில் ஒட்டுமொத்தமாக ஸ்டைலிங் அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களின் படி புதிய காரின் முன்புறம் 3 சீரிஸ் தோற்றத்தை வெளிப்படுத்தும் கூர்மையான புது ஹெட்லேம்ப் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ரிவைஸ்டு கிரில், குரோம் இன்சர்ட்கள், காரின் ப்ரோபைல் பகுதி அதிக மாற்றங்களை கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பின்புறம் அப்டேட் செய்யப்பட்ட ட்வீக்டு பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேபின் பகுதியில் அதிக ஹை-டெக் இன்போடெயின்ட வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய பி.எம்.டபிள்யூ. கார் இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் 3 சீரிஸ் மற்றும் 3 சிரிஸ் GL மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி பி.எம்.டபிள்யூ. M340i மாடலுடன் 3 லிட்டர், 6 சிலிண்டர், ட்வின் டர்போ என்ஜின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படிகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் காரின் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
சில நாட்களுக்கு முன் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த மாடலுக்கான இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி 2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 1 கோடியே 64 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
புதிய தலைமுறை லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் SE, HSE, Autobiography மற்றும் Fist Edition போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலின் வினியோகம் நவம்பர் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது. மேற்கத்திய சந்தைகளில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஆனால் இந்திய சந்தையில் இந்த மாடல் ஒற்றை டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. நிறங்களை பொருத்தவரை ஏராளமான புது ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புது விலைகளுடன் லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் அம்சங்களும் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் வரும் மாதங்களில் இதன் விலையும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

2023 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் இந்திய மாடலில் டிஜிட்டல் எல்.இ.டி. ஹெட்லைட்கள், ஹீடெட் ரியர் வியு மிரர்கள், இலுமினேட் செய்யப்பட்ட சீட்பெல்ட் பக்கில்கள், மெரிடியன் 3D சவுண்ட் சிஸ்டம், செண்ட்ரல் இன்பர்மேஷன் ஸ்கிரீன் ப்ரோ, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஹெட்-அப் டிஸ்ப்ளே, டிரைவர் அசிஸ்ட் பேக் மற்றும் சரவுண்ட் வியு கேமரா செட்டப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் 2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட, டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 345 பி.ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும்.
மேலும் மணிக்கு அதிகபட்சமாக 234 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்டில் 2996சிசி, 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது புதிய X1 மாடலுக்கான புது டீசரை வெளியிட்டு உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
பி.எம்.டபிள்யூ. தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வரிசையில், பி.எம்.டபிள்யூ. அறிமுகம் செய்ய இருக்கும் புது மாடல் X1 EV ஆகும். புதிய எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் டீசர் முதல் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஸ்வீடன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆர்ஜ்ப்ளாக் ஆலை அருகில் சோதனை செய்யப்படுகிறது.
புதிய எலெக்ட்ரிக் மாடல்களை போன்றே பி.எம்.டபிள்யூ. iX1 மாடலும் ஐந்தாம் தலைமுறை இடிரைவ் பவர்டிரெயினில் உருவாக்கப்படுகிறது. இதில் டூயல் மோட்டார் செட்டப் மற்றும் AWD சிஸ்டம், அதிக வோல்டேஜ் பேட்டரி பேக் வழங்கப்பட இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 413 முதல் 438 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.

பி.எம்.டபிள்.யூ. iX1 மாடலின் இதர தொழில்நுட்ப விவரங்கள் தற்போது வெளியாகவில்லை. எனினும், இவை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பாக்கலாம். புதிய X1 மாடலின் பிளக் இன் ஹைப்ரிட் வெர்ஷன்களும் வழங்கப்படுகிறது. இவை அதன் சர்வதேச வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
புது பி.எம்.டபிள்.யூ. மாடல்கள் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இவற்றின் இந்திய வெளியீடு அடுத்த ஆண்டு வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
போக்ஸ்வேகன், ஸ்கோடா மற்றும் குப்ரா நிறுவனங்கள் கூட்டணியில் புதிதாக காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.
போக்ஸ்வேகன், ஸ்கோடா மற்றும் சியட் நிறுவனத்தின் குப்ரா பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்யப்பட இருக்கும் காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கும் பணிகளை போக்ஸ்வேகன் குழுமம் துவங்கி இருக்கிறது. மூன்று மாடல்களும் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MEB EV பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட இருக்கின்றன. இவற்றில் ஒரே மாதிரியான அடையாளங்கள் இடம்பெற்று இருக்கும்.
புதிய கார்கள் பொதுவாக MEB ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு, போக்ஸ்வேகன் ID.3 மற்றும் ID.4 மாடல்களை சார்ந்து உருவாக்கப்பட இருக்கிறது. இவை ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படு வரும் போஸ்க்வேகன் e-UP, ஸ்கோடா சிட்டிகோ e-IV மற்றும் சியட் Miii எலெக்ட்ரிக் அர்பன் EV மாடல்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

போக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் அர்பன் EV மாடல்கள் ஸ்பெயின் நாட்டில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த பகுதியில் புதிய பேட்டரி ஆலையை கட்டமைக்க போக்ஸ்வேகன் குழுமம் இந்திய மதிப்பில் ரூ. 81 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பேட்டரிகள் மர்டோரெல் மற்றும் பம்ப்லோனா வாகன உற்பத்தி மையங்களுக்கு அனுப்பப்பட இருக்கின்றன.
2030 ஆண்டு வாக்கில் போக்ஸ்வேகன் உருவாக்க இருக்கும் ஆறு பேட்டரி உற்பத்தி ஆலைகளில் இது மூன்றாவது ஆலையாக இருக்கும். இரு பேட்டரி உற்பத்தி ஆலைகள் ஜெர்மனி மற்றும் ஸ்வீடனில் உருவாகி வருகின்றன. இவை தவிர செக் குடியரசு, ஸ்லோவேகியா, போலாந்து மற்றும் ஹங்கேரி போன்ற பகுதிகளிலும் போக்ஸ்வேகன் பேட்டரி உற்பத்தி ஆலைகள் துவங்கப்பட இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2022 மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய C கிளாஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பென்ஸ் C Class மாடல் விலை ரூ. 55 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 61 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய 2022 C Class மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆறாவது தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் இந்த மாடல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய C கிளாஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டனன. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடலின் விலை விவரங்கள் மே 10 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய C கிளாஸ் மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி ஒரு பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. டீசல் என்ஜின் இருவித டியுனிங்கில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் வடிவில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ள 2 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக அமைந்துள்ளது. டீசல் என்ஜின் 2 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட் ஆகும். இது 200 ஹெச்.பி. திறன், 440 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதே என்ஜின் 265 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் டியுனிங்கிலும் கிடைக்கிறது. மூன்று என்ஜின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. இது 20 ஹெச்.பி. பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் அதிக திறன் வழங்குகிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடலின் பெட்ரோல் கார் லிட்டருக்கு 16.9 கிலோமீட்டர்களும், டீசல் என்ஜின் லிட்டருக்கு 23 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹைனெஸ் மோட்டார்சைக்கிள் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஹைனெஸ் CB350 மோட்டார்சைக்கிள் மாடலுக்கு ஐ.ஓ.எஸ். இண்டகிரேஷன் வசதியை வழங்கி இருக்கிறது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளில் ஆண்ட்ராய்டு ஆட்டோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு அழைப்புகள், மெசேஜ் மற்றும் நேவிகேஷன் போன்ற விவரங்களை காண்பிக்கும்.
எனினும், இந்த அம்சம் முதற்கட்டமாக ஹோண்டா ஹைனெஸ் டாப் எண்ட் மாடலான DLX ப்ரோ மற்றும் ஆனிவர்சரி எடிஷன் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 03 ஆயிரத்து 179 என்றும் ரூ. 2 லட்சத்து 05 ஆயிரத்து 679 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

புதிய ஐ.ஓ.எஸ். வசதி தவிர, இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சைடு ஸ்டாண்டு மற்றும் என்ஜின் கட்-ஆப், டூயல் சேனல் ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாடலில் 348.3சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 21 பி.ஹெச்.பி. பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.






