என் மலர்tooltip icon

    கார்

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இரு கார் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் பத்து மாதங்கள் வரை குறைகிறது.
    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேபேக் GLS மற்றும் AMG G63 மாடல்களுக்கு அதிக மாதங்கள் காத்திருப்பு காலம் இருந்து வந்தது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரு டாப் எண்ட் மாடல்களின் முன்பதிவு துவங்குவதாக அறிவித்து இருக்கிறது. இரு கார்களின் உற்பத்தி கூடுதலாக அதிகரிக்கப்பட்டு இருப்பதை அடுத்து, முன்பதிவு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் வாரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்கள் மட்டும் பிரத்யேகமாக கார்களை முன்பதிவு செய்ய முடியும். அதன் பின் மற்ற வாடிக்கையாளர்கள் புதிய பென்ஸ் கார்களை வாங்க முன்பதிவு செய்யலாம்.

    தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் CBU மாடல்களான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS 600 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63 உள்ளிட்டவைகளுக்கு அதிக யூனிட்கள் ஒதுக்கீடு மற்றும் வினியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது.

     

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் டாப் எண்ட் மாடல்களாக AMG E53 கேப்ரியோலெட், மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63, மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS, மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ், மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மேபேக் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் EQS EV உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது.

    கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்த பிரிவில் 69 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்தது. கடந்த ஆண்டு அதிக வளர்ச்சியை பதிவு செய்த இந்த பிரிவில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டும் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு முழுக்க மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்யும் கார்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்த பிரிவை சேர்ந்தவைகளாக இருக்கும்.

    ஒவ்வொரு மாடலுக்கு ஏற்ப இந்த வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் ஆறில் இருந்து அதிகபட்சம் பத்து மாதங்கள் வரை குறையும் என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் எதிர்பார்க்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63 மாடலுக்கான காத்திருப்பு காலம் 24 முதல் 36 மாதங்களில் இருந்து 12 முதல் 16 மாதங்களாக குறைந்து இருக்கிறது. இதே போன்று மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS 600 காரின் ஒற்றை நிற வேரியணட்டுக்கான காத்திருப்பு காலம் எட்டு மாதங்களாகவும், டூயல் டோன் வேரியண்டிற்கு எட்டு முதல் பத்து மாதங்களாகவும் குறைந்து இருக்கிறது.

    "பல மாதங்களாக இந்த வாகனங்களுக்காக காத்திருக்கும் எங்களின் வாடிக்கையாளர்களுக்காக முன்பதிவை மீண்டும் பிரத்யேகமாக துவங்குகிறது. இது போன்ற டாப் எண்ட் மாடல்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் செலுத்துவதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் குளோபல் தொகுப்பில் இருந்து புதிய மாடல்களை இந்த பிரிவில் தொடர்ந்து அறிமுகம் செய்வோம்." என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ சந்தோஷ் ஐயர் தெரிவித்தார்.

    • ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 ஸ்போர்ட்பேக் மாடல் Fully Loaded ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
    • புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் தனது புதிய Q3 ஸ்போர்ட்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலின் விலை ரூ. 51 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் Fully Loaded ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் டெக்னாலஜி + S லைன் என அழைக்கப்படுகிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் கூப் ரூஃப்லைன், ஐந்து ஸ்போக்குகள் கொண்ட 18 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், ஹை-கிலாஸ் ஸ்டைலிங் பேக்கேஜ், எல்இடி டெயில் லைட்கள், S-லைன் எக்ஸ்டீரியர் பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டர்போ புளூ, கிளேசியர் வைட், க்ரோனோஸ் கிரே, மிதோஸ் பிளாக் மற்றும் நவரா புளூ என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    இண்டீரியர்கள் புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், நான்கு வித லம்பர் சப்போர்ட், ஆடி டிரைவ் செலக்ட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் டெயில்கேட், குரூயிஸ் கண்ட்ரோல், மூன்று ஸ்போக் வீல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆறு ஏர்பேக், TPMS, பார்கிங் ஏய்ட் பிளஸ் ரியர் வியூ கேமரா, ஆடி சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் TFSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆடிடோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஆடி நிறுவனத்தின் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலுடன் ஐந்து ஆண்டுகளுக்கு RSA சர்வீஸ், 2+3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி குறுகிய காலக்கட்டத்திற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 எலெக்ட்ரிக் கார் வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.
    • புதிய மஹிந்திரா XUV400 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி, XUV400 மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. மேலும் இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு ஜனவரி 26 ஆம் தேதி துவங்கியது. குடியரசு தின வார இறுதி வரையிலான காலக்கட்டத்திற்குள் புதிய எலெக்ட்ரிக் காரை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில், அறிமுகமான 13 நாட்களில் புதிய மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் காரை வாங்க சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் தற்போது முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார்களை வினியோகம் செய்ய அதிகபட்சம் ஏழு மாதங்கள் வரை ஆகும் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது.

    புதிய மஹிந்திரா XUV400 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் EL வேரியண்ட் வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் XUV400 EC வேரியண்ட் வினியோகம் துவங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் 20 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் 34.5 கிலோவாட் ஹவர் மற்றும் 39.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 375 மற்றும் 456 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.

    இத்துடன் 3.3 கிலோவாட் மற்றும் 7.2 கிலோவாட் சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. இதன் 39.4 கிலோவாட் ஹவர் வேரியண்டிற்கு 7.2 கிலோவாட் சார்ஜர் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் டாடா நெக்சான் EV, எம்ஜி ZS EV, ஹூண்டாய் கோனா மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரு கார்களின் விலையை மாற்றி இருக்கிறது.
    • டியாகோ EV அனைத்து வேரியண்ட்களுக்கும் புதிய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களுக்கு பொருந்தும். இந்த முறை நெக்சான் விலை ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி, ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக நெக்சான் விலையை டாடா மோட்டார்ஸ் உயர்த்தி இருக்கிறது.

    விலை உயர்வின் படி டாடா நெக்சான் புதிய விலை ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 95 ஆயிரம் என மாறி இருக்கிறது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் மொத்தத்தில் 25-க்கும் அதிக வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த முறை நெக்சான் மாடல் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    நெக்சான் மாடலை தொடர்ந்து டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலின் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். விலை உயர்வின் படி டாடா டியாகோ EV விலை தற்போது ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என மாறி இருக்கிறது.

    டியாகோ EV புதிய விலை விவரங்கள்:

    டாடா டியாகோ EV XE 19.2kWh 3.3KW AC ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம்

    டாடா டியாகோ EV XT 19.2kWh 3.3KW AC ரூ. 9 லட்சத்து 29 ஆயிரம்

    டாடா டியாகோ EV XT 24kWh 3.3KW AC ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம்

    டாடா டியாகோ EV XZ+ 24kWh 3.3KW AC ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம்

    டாடா டியாகோ EV XZ+ Tech Lux 24kWh 3.3KW AC ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம்

    டாடா டியாகோ EV XZ+ 24kWh 7.2KW AC ரூ. 11 லட்சத்து 49 ஆயிரம்

    டாடா டியாகோ EV XZ+ Tech Lux 24kWh 7.2KW AC ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ EV மாடல் அறிமுக சலுகையாக ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 79 ஆயிரம் ஆகும். இது இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். 

    • ஜீப் நிறுவனத்தின் புதிய கிளப் எடிஷன் கார் அதன் பேஸ் வேரியண்டை விட குறைந்த விலை கொண்டிருக்கிறது.
    • கிளப் எடிஷன் காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் எஸ்யுவி காம்பஸ் மாடலின் புதிய கிளப் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் மெரிடியன் காரின் கிளப் எடிஷனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு எஸ்யுவி மாடல்களும் அதன் எண்ட்ரி லெவல் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    இவை குறைந்த எண்ணிக்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. ஜீப் காம்பஸ் கிளப் எடிஷன் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது காம்பஸ் ஸ்போர்ட் டீசல் மேனுவல் வேரியண்டை விட ரூ. 10 ஆயிரம் விலை குறைவு ஆகும். எனினும், இதன் என்ஜின் அம்சங்கள் மற்றும் டியூனிங்கில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    காஸ்மடிக் மாற்றங்களை பொருத்தவரை டூயல் டோன் ரூஃப், பொனெட்டில் புதிய கிராஃபிக், டெயில்கேட்டில் "Club Edition" பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஜீப் காம்பஸ் கிளப் எடிஷன் மாடலிலும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ரிஃப்லெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 8.4 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, பார்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் உள்ளது. இத்துடன் ஸ்போர்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்டில் உள்ள அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய வெர்னா மாடல் பெட்ரோல் என்ஜின், ADAS தொழில்நுட்பம், டூயல் ஸ்கிரீன் செட்டப் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும்.

    ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இந்த மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இந்த நிலையில், புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடலின் உற்பத்தி பணிகள் மார்ச் மாத வாக்கில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியில் பெரும்பாலான யூனிட்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. தற்போது ஆண்டுக்கு 40 ஆயிரம் வெர்னா யூனிட்களை ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து வந்தது. இவற்றில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1600 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை பொருத்தவரை ஹூண்டாய் நிறுவனம் ஆண்டிற்கு 70 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இவற்றில் பெரும்பாலான யூனிட்கள் ஏற்றுமதிக்காகவே பயன்படுத்தப்படும். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணமாக உதிரிபாகங்கள் இல்லாததால், கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஆலையில் வெர்னா மாடல் உற்பத்தியை ஹூண்டாய் நிறுத்தியது. தற்போதைய வெர்னா மாடல் ரஷ்ய ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

    எனினும், அடுத்த தலைமுறை வெர்னா மாடலின் உற்பத்தியை இந்திய ஆலைகளுக்கு மாற்ற ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா போன்ற சந்தைகளுக்கு புதிய தலைமுறை வெர்னா மாடல் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களில் புதிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • மாருதி கார்களில் தற்போது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளராக இருக்கும் மாருதி சுசுகி, தனது பலேனோ, XL6 மற்றும் எர்டிகா கார் மாடல்களை அப்டேட் செய்து கனெக்டிவிட்டி அம்சங்களை வழங்கி இருக்கிறது. புதிய மாடல்கள் அனைத்திலும் தற்போது ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 9 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் புதிய கார்களில் ஸ்பீடோமீட்டர் எம்ஐடி-யில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பலேனோ வாடிக்கையாளர்களுக்கு ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. கூடுதலாக XL6 மற்றும் எர்டிகா மாடல்களில் சரவுண்ட் சவுண்ட் அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாடிக்கையாளர்கள் புதிய கனெக்டிவிட்டி அம்சங்களை ஒவர்-தி-ஏர் அப்டேட் முறையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போன் அல்லது மாருதி சுசுகி வலைதளம் மூலம் அப்டேட் செய்து கொள்ளலாம்.

    சமீபத்தில் மாருதி சுசுகி தனது 40 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வமகையில் பிளாக் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் பியல் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

    • ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 ஸ்போர்ட்பேக் புதிய Q3 மாடலை விட அதிக ஸ்போர்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் Q3 ஸ்போர்ட்பேக் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q3 மாடலை விட அதிக ஸ்போர்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஆடி Q3 விலை ரூ. 44 லட்சத்து 90 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 50 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிது.

    புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடல் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q3 எஸ்யுவி-யை விட புதிய Q3 ஸ்போர்ட்பேக் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புது ஸ்போர்ட்பேக் மாடலில் ஹனி-காம்ப் கிரில், பிளாக்டு-அவுட் எலிமண்ட்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் அலாய் வீல்கள், காரின் பின்புறம் டுவீக் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. புதிய Q3 ஸ்போர்ட்பேக் டிசைன் மற்றும் ஸ்டைலிங் அதிக கவனமுடன் உருாக்கப்பட்டு இருப்பது அதன் தோற்றத்திலேயே அறிந்து கொள்ள முடிகிறது. காரின் கேபின் பகுதியில் Q3 ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்ற தோற்றம், ஸ்போர்ட் அக்செண்ட்கள் உள்ளன.

    இத்துடன் ஆடியின் டிஜிட்டல் காக்பிட், 8.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்டம், MMI நேவிகேஷன், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஆடி ஸ்மார்ட்போன் இண்டர்ஃபேஸ், ஆடி சவுண்ட் சிஸ்டம் உள்ளது. இந்தியாவில் ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 45 TFSI வெர்ஷன் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 241 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.6 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 233 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டியாகோ EV மாடலை வாங்குவதற்கான காத்திருப்பு காலம் நான்கு மாதங்களாக உள்ளது.
    • டாடா டியாகோ EV மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV ஹேச்பேக் மாடலின் வினியோகத்தை துவங்கி விட்டது. நாடு முழுக்க 133 நகரங்களில் 2 ஆயிரம் யூனிட்கள் முதற்கட்டமாக வினியோகம் செய்யப்பட்டன. இதுவரை டாடா டியாகோ EV மாடலை வாங்க சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. இவற்றில் முதல் 10 ஆயிரம் முன்பதிவுகள் முதல் நாளிலேயே நடைபெற்று இருக்கிறது.

    அறிமுக நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV மாடலை வாங்கும் முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுக விலை பொருந்தும் என அறிவித்து இருந்தது. எனினும், அமோக வரவேற்பு காரணமாக அறிமுக விலையை மேலும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு நீட்டித்தது.

    தற்போது டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 79 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்பதிவுகள் அதிகமாகி வருவதால், இந்த விலை விரைவில் மாற்றப்படும் என்றே தெரிகிறது.

    இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடல் 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலின் வினியோகத்திற்கு டாடா மோட்டார்ஸ் முன்னுரிமை அளித்து வருகிறது. இம்மாத இறுதியில் 19.2 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட கார்களின் வினியோகம் துவங்க இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா டியாகோ EV மாடலின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் வேரியண்டை வினியோகம் பெற வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்றும் சற்றே குறைந்த ரேன்ஜ் கொண்ட மாடல்களை வினியோகம் எடுக்க ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் CNG மாடல்கள் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.
    • டாடா அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் மாடல்களில் டுவின் சிலிண்டர் செட்டப் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் ஹேரியர் EV, சியெரா EV, கர்வ் ICE, அல்ட்ரோஸ் ரேசர் மற்றும் பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தது. இத்துடன் பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் CNG மாடல்களையும் காட்சிக்கு வைத்தது. தற்போது டாடா பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் CNG மாடல்கள் இந்திய சந்தையில் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என உறுதியாகி இருக்கிறது.

    டாடா பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் iCNG வெர்ஷன்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 97 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள டுவின் சிலிண்டர் தொழில்நுட்பம் காரணமாக CNG திறன் 60 லிட்டர்களாக இருக்கும்.

    புதிய டாடா அல்ட்ரோஸ் CNG மாடலில் ஆறு ஏர்பேக், எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 16 இன்ச் டூயல் டோன் ஆலாய் வீல்கள், 7 இன்ச் ஹார்மன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, லெதர் இருக்கைகள் வழங்கப்படுகிறது.

    டாடா பன்ச் iCNG மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய Fronx மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    • மாருதி சுசுகி Fronx இருவித என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய பலேனோ மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட Fronx மாடலை ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. மேலும் இந்த காம்பேக்ட் கிராஸ்ஒவர் மாடலுக்கான முன்பதிவும் அதே நாளில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய மாருதி சுசுகி Fronx மாடலை வாங்க அதற்குள் 5 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்திய சந்தையில் புதிய Fronx மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. Fronx மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் நெக்சா டீலர்ஷிப்களின் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது எஸ்யுவி / கிராஸ்ஒவர் மாடல் ஆகும். இதுதவிர பிரெஸ்ஸா மாடலை மாருதி சுசுகி தனது அரினா டீலர்ஷிப்களின் மூலம் விற்பனை செய்து வருகிறது.

    மாருதி சுசுகி Fronx மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் பூஸ்டர்ஜெட் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இவை முறையே 100 ஹெச்பி பவர், 147.6 நியூட்டன் மீட்டர் மற்றும் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

    டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், NA பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி Fronx மாடல்- சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், சீட்டா மற்றும் ஆல்ஃபா என ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி Fronx மாடலின் விலை ரூ. 8 லட்சம் பட்ஜெட்டில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஸ்ஸா தவிர மாருதி சுசுகி Fronx மாடல் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்சான், மஹிந்திரா XUV300, நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னவோ ஹைகிராஸ் வினியோகம் பற்றிய தகவல் வெளியானது.
    • புது இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைப்ரிட் மோட்டார் கொண்டிருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் தனது புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை விவரங்களை வெளியிட்டது. புது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை ரூ. 18 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என ஆகும். முன்பதிவு டொயோட்டா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம்.

    இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் - சூப்பர் வைட், பிளாட்டினம் வைட் பியல், சில்வர் மெட்டாலிக், ஆடிட்யூட் பிளாக் மைகா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல் ஷைன், அவாண்ட் கிரேடு பிரான்ஸ் மெட்டாலிக் மற்றும் பிளாகிஷ் அகெஹா கிளாஸ் ஃபிளேக் என ஏழு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதோடு G, GX, VX, ZX மற்றும் ZX(O) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜினுடன் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

    ஹைப்ரிட் யூனிட் 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய ஹைகிராஸ் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படவில்லை.

    ×