என் மலர்tooltip icon

    கார்

    • கியா இந்தியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு புது வாகனங்களை காட்சிப்படுத்த இருக்கிறது.
    • கியா சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்து வரும் சொரெண்டோ 7 சீட்டர் எஸ்யுவி ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் புது கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பத்து புது வாகனங்களை கியா இந்தியா காட்சிக்கு வைக்க இருக்கிறது. இந்த பட்டியலில் கியா மோட்டார்ஸ் சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் சொரெண்டோ 7 சீட்டர் எஸ்யுவி மாடல் இணைந்திருக்கிறது.

    முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2018 நிகழ்வில் கியா சொரெண்டோ மாடலை இந்தியாவில் காட்சிக்கு வைத்திருக்கிறது. இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட சொரெண்டோ மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் சொரெண்டோ மாடல் அதன் நான்காவது தலைமுறையை சேர்ந்தது. இந்த கார் 2020 வாக்கில் விற்பனைக்கு வந்தது. இந்த மாடல் தான் தற்போது ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.

    கியா சொரெண்டோ மாடலின் வெளிப்புறம் கியாவின் டைகர்-நோஸ் கிரில், 3-பாட் எல்இடி ஹெட்லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அப்ரைட் எஸ்யுவி ஸ்டான்ஸ் மற்றும் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பின்புறம் செங்குத்தாக டெயில் லைட் செட்டப் மற்றும் டெயில்கேட் பகுதியில் சொரெண்டோ எழுதப்பட்டுள்ளது.

    சொரெண்டோ மாடல் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட், 1.6 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட், 2.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் என நான்கு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், முன்புற வீல் அல்லது ஆல்-வீல் டிரைவ் செட்டப் உடன் வழங்கப்படுகிறது.

    Photo Courtesy: Rushlane

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா CNG மாடல் லிட்டருக்கு 26.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
    • புதிய கிராண்ட் விட்டாரா மாடலில் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய கிராண்ட் விட்டாரா CNG கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிராண்ட் விட்டாரா CNG மாடல் விலை ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் டெல்டா மற்றும் சீட்டா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் சீட்டா மாடல் விலை ரூ. 14 லட்சத்து 84 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா CNG மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் இது 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த காரின் CNG வெர்ஷன் லிட்டருக்கு 26.6 கிலோமீட்டர் வரை செல்லும்.

    அம்சங்களை பொருத்தவரை மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா CNG மாடலில் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, சுசுகி கனெக்ட் டெலிமேடிக்ஸ், ஆறு ஏர்பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய CNG வேரியண்ட் மாதாந்திர சந்தா முறையிலும் கிடைக்கிறது. இதற்கான கட்டணம் மாதம் ரூ. 30 ஆயிரத்து 723 என துவங்குகிறது.

    • கியா இந்தியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கார்னிவல் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • 2020 வாக்கில் கியா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை கார்னிவல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    கியா இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை கார்னிவல் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய தலைமுறை கியா கார்னிவல் மாடல் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது விற்பனை செய்யப்படும் நான்காம் தலைமுறை கியா கார்னிவல் மாடலுக்கு மாற்றாக புதிய கார்னிவல் மாடல் இருக்கும். இந்த மாடல் ஏற்கனவே நடைபெற்ற பயெனியல் மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

    சர்வதேச சந்தையில் 2020 ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், நான்காம் தலைமுறை கியா கார்னிவல் மாடல் டீசர்களில் ஏராளமான அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய காரில், பிரஷ்டு சில்வர் இன்சர்ட்கள், கிரில் பகுதியில் இண்டகிரேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், புதிய செவ்வக வடிவம் கொண்ட ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், பாடி கலர் கிலாடிங், ராப்-அரவுண்ட் 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கியா கார்னிவல் மாடல் சர்வதேச சந்தையின் சில நாடுகளில் KA4 அல்லது செடோனா பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசரின் படி புதிய கார்னிவல் மாடல் புளூ நிறம் கொண்டிருக்கும் என்றும் சி பில்லரில் பிரஷ்டு சில்வர் இன்சர்ட்கள், ரூஃப், ORVM-கள், பில்லர் மற்றும் ரூஃப் ரெயில்களில் பிளாக்டு அவுட் அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய டிசைன் மட்டுமின்றி அடுத்த தலைமுறை கியா கார்னிவல் மாடல் சர்வதேச சந்தையில் டூயல் டோன் இண்டீரியர், டூயல் சன்ரூஃப், ADAS, Uvo டெலிமேடிக்ஸ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங், ஹேண்ட்ஸ்-ஃபிரீ பவர்டு டெயில்கேட், ஸ்லைடிங் டோர்கள், 12.3 இன்ச் அளவில் இரண்டு ஸ்கிரீன்கள் (ஒன்று டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்), 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12-ஸ்பீக்கர் போஸ் மியூசிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த கார் ஏழு, ஒன்பது மற்றும் பதினொரு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் அடுத்த வாரம் தனது ஐயோனிக் 5 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் ஹூண்டாய் நிறுவனம் தனது புது கார் மற்றும் கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்த இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் பெரும் அறிவிப்புகளை வெளியிட இருக்கிறது. புது கார்கள் மட்டுமின்றி கான்செப்ட் மாடல்களை காட்சிக்கு வைக்க ஹூண்டாய் முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில், ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் ஐயோனிக் 5 கிராஸ்ஒவர் மாடல் வெளியாக இருக்கிறது. இத்துடன் எதிர்கால சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடலை காட்சிப்படுத்த இருக்கிறது.

    புதிய கான்செப்ட் மாடல் இந்த ஆண்டு இரண்டாவது அரையாண்டு வாக்கில் விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் காட்சிப்படுத்திய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கியா EV6 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், கியா போன்று இல்லாமல் ஹூண்டாய் கார் உள்நாட்டிலேயே அசெம்பில் செய்யப்பட இருக்கிறது.

    இதன் மூலம் ஹூண்டாய் ஐயோனிக் 5 விலையை சற்று குறைவாக நிர்ணயம் செய்ய முடியும். தற்போது கியா EV6 காரின் விலை இந்திய சந்தையில் ரூ. 59 லட்சத்து 96 ஆயிரம் என துவங்குகிறது. இதன் காரணமாக ஹூண்டாய் தனது ஐயோனிக் 5 விலையை ரூ. 50 லட்சத்திற்கும் குறைந்த விலையில் வெளியிட திட்டமிட்டு வருகிறது. ஐயோனிக் 5 மாடல் ஒற்றை மோட்டார், ரியர்-வீல் டிரைவ் செட்டப் உடன் வழங்கப்பட இருக்கிறது.

    இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 217 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இத்துடன் 800 வோல்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இது காரை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.

    ஐயோனிக் 5 தவிர ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 6 EV செடான் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கலாம். இது சர்வதேச சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும். இந்த கார் ஹூண்டாய் குழுமத்தின் e-GMP ஸ்கேட்போர்டு ஆர்கிடெக்ச்சரில் உருவாகி வருகிறது. அளவீடுகளில் இந்த கார் டெஸ்லா மாடல் 3, போல்ஸ்டார் 2 மற்றும் பிஎம்டபிள்யூ i4 மாடல்களுக்கு நெருக்கமாக இருக்கும் என தெரிகிறது.

    புதிய ஐயோனிக் 6 மாடல் 53 கிலவோவாட் ஹவர், 77 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் உள்ள RWD செட்டப் இந்த காரின் ஸ்டாண்டர்டு வேரியண்ட் ஆகும். இதுதவிர டூயல் மோட்டார் AWD ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதன் டூயல் மோட்டார் செட்டப் 320 ஹெச்பி பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    • இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவன கார் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • சிட்ரோயன் C3 மாடல் புதிதாக டூயல் டோன் வேரியண்டில் கிடைக்கிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C5 ஏர்கிராஸ் மற்றும் C3 மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. கடந்த அக்டோபரில் விலை உயர்த்தப்பட்ட நிலையில், புது விலை உயர்வு ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வு கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஷைன் டூயல் டோன் எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலின் விலை தற்போது ரூ. 37 லட்சத்து 17 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    C3 மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 500 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் NA பெட்ரோல் வேரியண்ட்களின் விலை ரூ. 27 ஆயிரத்து 500 கூடுதலாக அதிகரித்து இருக்கிறது. டர்போ பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு தவிர ஃபீல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், டூயல் டோன் எனும் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விலை உயர்வு தவிர சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் சிட்ரோயன் eC3 பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சிட்ரோயன் eC3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், ஸ்டீல் வீல் மற்றும் கவர்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், ரூஃப் ரெயில்கள், டூயல் டோன் பெயிண்ட் கொண்டிருக்கிறது.

    இந்த காரில் 20 முதல் அதிகபட்சம் 30 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 200 முதல் 250 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமையும்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிசம்பர் மாத பயணிகள் வாகன விவரங்களை வெளியிட்டு உள்ளது.
    • உள்நாடு மற்றும் வெளிநாட்டு விற்பனையில் டாடா மோட்டார்ஸ் அசத்தல் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டு வாகன விற்பனையில் 10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் 72 ஆயிர்து 997 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது 2021 டிசம்பர் மாதத்தில் விற்பனையான 66 ஆயிரத்து 307 யூனிட்களை விட அதிகம் ஆகும்.

    உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதத்தில் மட்டும் 40 ஆயிரத்து 043 யூனிட்கள் ஆகும். 2021 டிசம்பரில் இது 35 ஆயிரத்து 299 என இருந்தது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவு 13.4 சதவீதம் வளர்ச்சியை பெற்று இருக்கிறது. கடந்த மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 868 ஆகும். இது 2021 டிசம்பரில் விற்பனையான 2 ஆயிரத்து 355 யூனிட்களை விட 64.2 சதவீதம் அதிகம் ஆகும்.

    "2022 ஆண்டு டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனை அமோகமாக இருந்துள்ளது. சந்தை வளர்ச்சியை கடந்து, ஐந்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 26 ஆயிரத்து 798 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிடடி லிமிடெட் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.

    "ஒவ்வொரு மாநிலமும் அறிவிக்கும் புதுமை மிக்க திட்டங்கள் மற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் பிரபலத்தன்மை காரணமாக எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். அடுத்த காலாண்டிலும் பயணிகள் வாகன பிரிவு கணிசமான வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கிறோம். வினியோக பிரிவு சார்ந்த சிக்கல் தொடர்பாக சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை உற்று நோக்கி வருகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வரும் புது எஸ்யுவி பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
    • புது ஹோண்டா கார் பெட்ரோல், பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய எஸ்யுவி மாடல் 2023 ஏப்ரல் மாத வாக்கில் பெட்ரோல் என்ஜின் கொண்ட சிட்டி (அதன் ஹைப்ரிட் வெர்ஷன்) மற்றும் அமேஸ் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வைத்திருக்கும். ஜாஸ் மற்றும் WR-V, 4-th Gen சிட்டி, டீசல் என்ஜின் கொண்ட சிட்டி மற்றும் அமேஸ் போன்ற மாடல்களை நிறுத்தப்பட்டு விடும்.

    2023 மத்தியில் அறிமுகமாக இருக்கும் புது எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இதன் விற்பனை 2023 பண்டிகை கால வாக்கில் துவங்கலாம்.

    புதிய ஹோண்டா மிட் சைஸ் எஸ்யுவி அளவில் 4.2 முதல் 4.3 மீட்டர் நீளம் கொண்டிருக்கும். இது அமேஸ் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் எப்படி காட்சியளிக்கும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த மாடல் சோதனை செய்யப்படும் படங்கள் எதுவும் இணையத்தில் இதுவரை வெளியாகவில்லை.

    இந்த காரின் முகப்பு பகுதியில் பெரிய, ஹெக்சகோனல் கிரில், ராப்-அரவுண்ட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் என்பதால், இதில் ஏராளமான க்ரோம் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக உள்ளது.
    • சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியதாக அசத்தல் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதம் தனது 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை அறிவித்தது. பூனேவில் செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் ஆலையில் இருந்து 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் கார் வெளியிடப்பட்டது. தற்போது டெலிவரியில் டாடா மோட்டார்ஸ் 50 ஆயிரம் கார்களை எட்டியதாக அறிவித்து இருக்கிறது.

    டெலிவரியிலும் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV ஆக அமைந்தது. 50 ஆயிரமாவது யூனிட் டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் இடம் டெலிவரி செய்யப்பட்டது. தற்போது இந்திய சந்தையில் டிகோர் EV, X-Pres T மற்றும் நெக்சான் EV, டியாகோ EV போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது.

    சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV மாடலின் விலைகளை அறிவித்தது. இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடல் விவரங்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. எனினும், விலை விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

    இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது அறிமுக விலை தான் என்றும், இந்த காரின் விலை அடுத்த மாதம் மாற்றப்பட இருப்பதாகவும் டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. 

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் முற்றிலும் புதிய ஹெக்டார் காரை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய உற்பத்தியில் ஒரு லட்சமாவது யூனிட் எனும் மைல்கல்லை கடந்தது.

    பிரிடிஷ் மோட்டார் பிராண்டான் எம்ஜி மோட்டார்ஸ் 2023 ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றிய விவரங்கள் பெரும்பாலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் எம்ஜி நிறுவனம் ஒரு லட்சமாவது காரை தனது உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிட்டது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஒரு லட்சமாவது காராக ஹெக்டார் மாடல் வெளியிடப்பட்டது.

    புதிய ஹெக்டார் மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட முன்புற ப்ரோஃபைல், பின்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புது ஹெக்டார் மாடலில் அகலமான, பிரமாண்ட முன்புற கிரில், அதிக ஆங்குலர் சரவுண்ட்கள், டார்க் க்ரோம் ஃபினிஷ், மற்றும் இன்சர்ட்கள் வழங்கப்படலாம். இந்த காரில் ஸ்ப்லிட் ரக டேடைம் ரன்னிங் லைட்கள், பின்புறம் ஃபௌக்ஸ் எக்சாஸ்ட் டிப்கள், டெயில் லைட்களில் எல்இடி இன்சர்ட்கள் வழங்கப்படுகிறது. இதன் 18 இன்ச் அலாய் வீல்கள் புது டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    உள்புறம் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 14 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, எம்ஜி நிறுவனத்தின் நெக்ஸ்ட்-ஜென் ஐ ஸ்மார்ட் டெக் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ரிவைஸ்டு டேஷ்போர்டு லே-அவுட், D-வடிவ ஏசி வெண்ட்கள் வழங்கப்படுகிறது.

    இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்திய விலை அறிவிக்கப்பட்டது.
    • இந்திய சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் ஐந்து வேரியண்ட், ஏழு வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் மாடலின் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய இன்னோவா ஹைகிராஸ் விலை ரூ. 18 லட்சத்து 30 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 28 லட்சத்து 97 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய TNGA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் G, GX, VX, ZX மற்றும் ZX (O) என ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இத்துடன் சூப்பர் வைட், பிலாட்டினம் வைட் பியல், சில்வர் மெட்டாலிக், அட்டிட்டியூட் பிளாக் மைக்கா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல் ஷைன், அவாண்ட் கார்ட் பிரான்ஸ் மெட்டாலிக், பிலாகிஷ் அகெஹா கிலாஸ் ஃபிளேக் என ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், TNGA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜினுடன் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 11 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்து"ன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இறுக்கிறது. ஹைகிராஸ் மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படவில்லை.

    டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர்களுக்கு ஸ்டாண்டர்டு வாரண்டி, 2 லட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு எக்ஸ்டெண்டட் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இதனுடன் வரும் பேட்டரிக்கு எட்டு ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தனது கவனத்தை அதிகரித்து வருகிறது.
    • இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வருகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஐயோனிக் 5 ஆல்-எலெக்ட்ரிக் கிராஸ்ஒவர் மாடலை இந்திய சந்தையில் டிசம்பர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்து இருந்தது. இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஹூண்டாய் ஐயோனிக் 5 இந்திய விலை விவரங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஐயோனிக் 5 மாடல் ஒற்றை ஃபுலி லோடெட் வேரியண்ட் ஆக விற்பனைக்கு வருகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மூன்று வித நிறங்களில் கிடைக்கும். புதிய ஐயோனிக் 5 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் பிரத்யேக சர்வீஸ் பேக்கேஜ் வழங்குகிறது.

    அதன்படி மூன்று ஆண்டுகள் அல்லது அன்லிமிடெட் கிலோமீட்டர்கள், எட்டு ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் பேட்டரி வாரண்டி வழங்க இருக்கிறது. இதுதவிர மூன்று ஆண்டுகளுக்கு ரோட்-சைடு அசிஸ்டண்ஸ், வாரண்டியை ஐந்து ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 40 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் இரண்டு (3.3 கிலோவாட் மற்றும் 11 கிலோவாட்) ஹோம் சார்ஜர்களை இலவசமாக வழங்கவும் ஹூண்டாய் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இவைதவிர ஐகேர் மெயின்டனன்ஸ் பேக்கேஜ் வழங்க இருக்கிறது. இதில் வெஹிகில்-டு-வெஹிகில் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த வசதி நான்கு நகரங்களில் வழங்கப்பட இருக்கிறது.

    • சிட்ரோயன் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே தனது புது எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
    • புது எலெக்ட்ரிக் கார் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் சிட்ரோயன் நிறுவனத்தின் பட்ஜெட் மாடலாக சிட்ரோயன் C3 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் சிட்ரோயன் நிறுவனம் அறிவித்து இருந்தது. சில வாரங்களுக்கு முன் இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார் சிட்ரோயன் eC3 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்றும் சிட்ரோயன் அறிவித்தது. இதனிடையே புதிய சிட்ரோயன் eC3 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் சிட்ரோயன் eC3 மாடலின் புது ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.

    தற்போதைய ஸ்பை படங்களில் உள்ள சிட்ரோயன் eC3 மாடல் ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது. இந்த கார் சார்ஜிங் மையம் ஒன்றில் டாடா நெக்சான் மாடலின் அருகில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. நெக்சானுடன் சிட்ரோயன் eC3 மாடலும் சார்ஜ் ஏற்றிக் கொண்டிருக்கும் போது ஸ்பை படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. வெளிப்புறத்தில் புதிய சிட்ரோயன் eC3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், ஸ்டீல் வீல் மற்றும் கவர்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், ரூஃப் ரெயில்கள், டூயல் டோன் பெயிண்ட் கொண்டிருக்கிறது.

    இவை புது எலெக்ட்ரிக் கார் தோற்றம் அதன் பெட்ரோல் மாடலுக்கு இணையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. புதிய eC3 மாடலின் இண்டீரியர் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. எனினும், இந்த காரில் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் ஓட்டுனர் இருக்கை மற்றும் பவர் விண்டோக்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த காரின் தொழில்நுட்ப விவரங்கள் மர்மாகவே உள்ளது. எனினும், இந்த காரில் 20 முதல் அதிகபட்சம் 30 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 200 முதல் 250 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமையும்.

    ×