search icon
என் மலர்tooltip icon

    கார்

    கார்களை அப்டேட் செய்து புதிய அம்சங்களை வழங்கிய மாருதி சுசுகி
    X

    கார்களை அப்டேட் செய்து புதிய அம்சங்களை வழங்கிய மாருதி சுசுகி

    • மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களில் புதிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • மாருதி கார்களில் தற்போது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளராக இருக்கும் மாருதி சுசுகி, தனது பலேனோ, XL6 மற்றும் எர்டிகா கார் மாடல்களை அப்டேட் செய்து கனெக்டிவிட்டி அம்சங்களை வழங்கி இருக்கிறது. புதிய மாடல்கள் அனைத்திலும் தற்போது ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 9 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் புதிய கார்களில் ஸ்பீடோமீட்டர் எம்ஐடி-யில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பலேனோ வாடிக்கையாளர்களுக்கு ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. கூடுதலாக XL6 மற்றும் எர்டிகா மாடல்களில் சரவுண்ட் சவுண்ட் அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாடிக்கையாளர்கள் புதிய கனெக்டிவிட்டி அம்சங்களை ஒவர்-தி-ஏர் அப்டேட் முறையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போன் அல்லது மாருதி சுசுகி வலைதளம் மூலம் அப்டேட் செய்து கொள்ளலாம்.

    சமீபத்தில் மாருதி சுசுகி தனது 40 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வமகையில் பிளாக் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் பியல் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

    Next Story
    ×