என் மலர்tooltip icon

    கார்

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டியாகோ EV மாடலை வாங்குவதற்கான காத்திருப்பு காலம் நான்கு மாதங்களாக உள்ளது.
    • டாடா டியாகோ EV மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV ஹேச்பேக் மாடலின் வினியோகத்தை துவங்கி விட்டது. நாடு முழுக்க 133 நகரங்களில் 2 ஆயிரம் யூனிட்கள் முதற்கட்டமாக வினியோகம் செய்யப்பட்டன. இதுவரை டாடா டியாகோ EV மாடலை வாங்க சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. இவற்றில் முதல் 10 ஆயிரம் முன்பதிவுகள் முதல் நாளிலேயே நடைபெற்று இருக்கிறது.

    அறிமுக நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ EV மாடலை வாங்கும் முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுக விலை பொருந்தும் என அறிவித்து இருந்தது. எனினும், அமோக வரவேற்பு காரணமாக அறிமுக விலையை மேலும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு நீட்டித்தது.

    தற்போது டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 79 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்பதிவுகள் அதிகமாகி வருவதால், இந்த விலை விரைவில் மாற்றப்படும் என்றே தெரிகிறது.

    இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடல் 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலின் வினியோகத்திற்கு டாடா மோட்டார்ஸ் முன்னுரிமை அளித்து வருகிறது. இம்மாத இறுதியில் 19.2 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட கார்களின் வினியோகம் துவங்க இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா டியாகோ EV மாடலின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் வேரியண்டை வினியோகம் பெற வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்றும் சற்றே குறைந்த ரேன்ஜ் கொண்ட மாடல்களை வினியோகம் எடுக்க ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் CNG மாடல்கள் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.
    • டாடா அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் மாடல்களில் டுவின் சிலிண்டர் செட்டப் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் ஹேரியர் EV, சியெரா EV, கர்வ் ICE, அல்ட்ரோஸ் ரேசர் மற்றும் பல்வேறு மாடல்களை காட்சிப்படுத்தது. இத்துடன் பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் CNG மாடல்களையும் காட்சிக்கு வைத்தது. தற்போது டாடா பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் CNG மாடல்கள் இந்திய சந்தையில் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என உறுதியாகி இருக்கிறது.

    டாடா பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் iCNG வெர்ஷன்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 97 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள டுவின் சிலிண்டர் தொழில்நுட்பம் காரணமாக CNG திறன் 60 லிட்டர்களாக இருக்கும்.

    புதிய டாடா அல்ட்ரோஸ் CNG மாடலில் ஆறு ஏர்பேக், எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 16 இன்ச் டூயல் டோன் ஆலாய் வீல்கள், 7 இன்ச் ஹார்மன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, லெதர் இருக்கைகள் வழங்கப்படுகிறது.

    டாடா பன்ச் iCNG மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய Fronx மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    • மாருதி சுசுகி Fronx இருவித என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய பலேனோ மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட Fronx மாடலை ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. மேலும் இந்த காம்பேக்ட் கிராஸ்ஒவர் மாடலுக்கான முன்பதிவும் அதே நாளில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய மாருதி சுசுகி Fronx மாடலை வாங்க அதற்குள் 5 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்திய சந்தையில் புதிய Fronx மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. Fronx மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் நெக்சா டீலர்ஷிப்களின் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது எஸ்யுவி / கிராஸ்ஒவர் மாடல் ஆகும். இதுதவிர பிரெஸ்ஸா மாடலை மாருதி சுசுகி தனது அரினா டீலர்ஷிப்களின் மூலம் விற்பனை செய்து வருகிறது.

    மாருதி சுசுகி Fronx மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் பூஸ்டர்ஜெட் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இவை முறையே 100 ஹெச்பி பவர், 147.6 நியூட்டன் மீட்டர் மற்றும் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

    டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், NA பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி Fronx மாடல்- சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், சீட்டா மற்றும் ஆல்ஃபா என ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி Fronx மாடலின் விலை ரூ. 8 லட்சம் பட்ஜெட்டில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஸ்ஸா தவிர மாருதி சுசுகி Fronx மாடல் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்சான், மஹிந்திரா XUV300, நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னவோ ஹைகிராஸ் வினியோகம் பற்றிய தகவல் வெளியானது.
    • புது இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைப்ரிட் மோட்டார் கொண்டிருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் தனது புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை விவரங்களை வெளியிட்டது. புது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை ரூ. 18 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என ஆகும். முன்பதிவு டொயோட்டா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம்.

    இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் - சூப்பர் வைட், பிளாட்டினம் வைட் பியல், சில்வர் மெட்டாலிக், ஆடிட்யூட் பிளாக் மைகா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல் ஷைன், அவாண்ட் கிரேடு பிரான்ஸ் மெட்டாலிக் மற்றும் பிளாகிஷ் அகெஹா கிளாஸ் ஃபிளேக் என ஏழு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதோடு G, GX, VX, ZX மற்றும் ZX(O) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜினுடன் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

    ஹைப்ரிட் யூனிட் 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய ஹைகிராஸ் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படவில்லை.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தத்தில் 17 கார்களை விற்பனை செய்து வருகிறது.
    • இதுதவிர Fronx மற்றும் ஜிம்னி மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அங்கமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் இந்திய சந்தையில் 25 மில்லியன் யூனிட்கள் எனும் விற்பனை இலக்கை எட்டியுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி இந்த மைல்கல் எட்டியதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. 1983 வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் கார், மாருதி 800 மாடலை அறிமுகம் செய்தது.

    இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் 25 ஆவது மில்லியன் யூனிட் ஆக கிராண்ட் விட்டாரா மாடல் அமைந்துள்ளது. மாருதி 800 மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது 17 வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

    இவற்றில் பெட்ரோல் மற்றும் CNG மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை உள்நாட்டிலேயே நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் பத்து லட்சம் CNG கார்களை விற்று அசத்தியது.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் Fronx மற்றும் ஜிம்னி மாடல்களை அறிமுகம் செய்தது. இரு கார்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இரு மாடல்களின் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஹைரைடர் CNG மாடல் 26.06 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
    • புதிய டொயோட்டா ஹைரைடர் CNG மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடல் மாடலின் CNG வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது அர்பன் குரூயிசர் CNG மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 23 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் ஹைரைடர் CNG மாடல் S மற்றும் G என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய டொயோட்டா ஹைரைடர் CNG மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட K சீரிஸ் என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 102 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 26.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் CNG மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆறு ஏர்பேக், 9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், டொயோட்டா i-கனெக்ட், ஆட்டோ-ஃபோல்டிங் ORVM-கள், ஆட்டோ டிம்மிங் IRVM, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

    • பிஎம்டபள்யூ நிறுவனத்தின் 2023 பிஎம்டபள்யூ X1 மாடல் இந்திய வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
    • புதிய பிஎம்டபள்யூ X1 மாடல் பெட்ரோல், டீசல் என இரண்டு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    பிஎம்டபள்யூ நிறுவனம் அடுத்த தலைமுறை X1 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 பிஎம்டபள்யூ X1 மாடலின் விலை ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய X1 மாடல் ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் டீசல் வேரியண்ட் வினியோகம் மார்ச் மாதத்திலும், பெட்ரோல் வேரியண்ட் வினியோகம் ஜூன் மாதத்திலும் துவங்க இருக்கிறது.

    புதிய பிஎம்டபள்யூ X1 மாடல் 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 136 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 150 ஹெச்பி பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    இரு என்ஜின்களுடன் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய 2023 பிஎம்டபள்யூ X1 மாடலில் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், புது எல்இடி டிஆர்எல்கள், பெரிய கிட்னி கிரில், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், புதிய முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    காரின் உள்புறம் பெரிய வளைந்த டிஸ்ப்ளே உள்ளது. இதில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இத்துடன் முற்றிலும் புதிய ஐடிரைவ் 8 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் செண்டர் கன்சோலில் ஃபுளோடிங் ஆர்ம்ரெஸ்ட், செங்குத்தாக பொருத்தப்பட்ட வயர்லெஸ் சார்ஜர் உள்ளது.

    • டொயோட்டா நிறுவனத்தின் 2023 இன்னோவா க்ரிஸ்டா 2.4 லிட்டர் டீசல் என்ஜின் உடன் கிடைக்கிறது.
    • புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது இன்னோவா க்ரிஸ்டா மாடலை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹைகிராஸ் உடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இந்த மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின், நான்கு வேரியண்ட்கள், இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. 2023 இன்னோவா க்ரிஸ்டா மாடலின் முன்புறம் மாற்றப்பட்டு, அதிகளவு க்ரோம் ஹைலைட்களை பெற்று இருக்கிறது. இதன் முன்புற கிரில் பகுதியில் கிடைமட்டமான க்ரம் ஸ்டிரைப், பம்ப்பரில் க்ரோம் இன்சர்ட், ஃபாக் லேம்ப் ஹவுசிங் கொண்டிருக்கிறது.

    இவை தவிர புதிய க்ரிஸ்டா மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த கார் G, GX, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரின் கேபின் பகுதியில் பவர்டு டிரைவர் சீட், ரியர் ஏசி வெண்ட்கள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, செட்பேக் டேபிள், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த கார் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. 2023 இன்னோவா மாடலில் ஏழு ஏர்பேக், முன்புறம் மற்றும் பின்புற பார்கிங் சென்சர்கள், பிரேக் அசிஸ்ட் மற்றும் 3-பாயிண்ட் சீட் பெல்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய க்ரில்சா மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 148 ஹெச்பி பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. வரும் வாரங்களில் இந்த மாடலுக்கான விலை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.

    • இந்தியாவில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக புதிய eC3 விற்பனைக்கு வர இருக்கிறது.
    • IC என்ஜின் மாடல் வெளியான ஆறு மாதத்தில் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது புதிய சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய சிட்ரோயன் எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் சிட்ரோயன் டீலர்ஷிப் மற்றும் சிட்ரோயன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம். கடந்த ஆண்டு சிட்ரோயன் C3 IC என்ஜின் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆறு மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டது.

    தோற்றத்தில் சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் மற்றும் அதன் IC என்ஜின் வெர்ஷன் ஒரே மாதரியே காட்சியளிக்கிறது. இரு கார்களிலும், செவ்ரன் லோகோ முன்புற கிரில் மீது பொருத்தப்பட்டு இருக்கிறது. மற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களை போன்று, eC3 மாடலில் க்ளோஸ்டு கிரில் அல்லது பெட்ரோல் மாடலில் இருப்பதை விட முற்றிலும் புது முன்புறத்தை பெறவில்லை.

    இரு கார்களிடையே உள்ள ஒற்றை வித்தியாசமாக காரின் வெளிப்புறம் ஃபெண்டர் மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவைகளில் eC3 பேட்ஜ்கள் உள்ளன. இந்த காரில் சார்ஜிங் போர்ட் முன்புறம் வலதுபுற ஃபெண்டரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. சிட்ரோயன் C3 மாடல் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் நோக்கிலேயே சிட்ரோயன் உருவாக்கியது.

    இதன் காரணமாகவே சிட்ரோயன் C3 மாடலில் நீண்ட வீல்பேஸ் வழங்கப்பட்டது. வெளிப்புறம் போன்றே, காரின் உள்புறமும் ஒரே மாதிரி காட்சியளிக்கிறது. எனினும், எலெக்ட்ரிக் வெர்ஷனில் மேனுவல் டே/நைட் IRVMகள் உள்ளன. இதில் உள்ள ORVMகளை எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் செய்ய முடியாது. மேலும் ஏசி மேனுவல் யூனிட் வடிவில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த காரில் மோனோக்ரோம் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 10 இன்ச் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. சிட்ரோயன் eC3 மாடல்- லைவ் மற்றும் ஃபீல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டச் ஸ்கிரீன், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஒட்டுனர் இருக்கையை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை ஃபீல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் கனெக்டெட் கார் அம்சங்கள் மைசிட்ரோயன் கனெக்ட் செயலி மூலம் வழங்கப்படுகிறது. சிட்ரோயன் eC3 மாடலில் 29.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் 57 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 107 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும். 

    • மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்கள் இந்தியாவில் ரிகால் செய்யப்படுகின்றன.
    • அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இரு கார்களும் இதுவரை மூன்று முறை ரிகால் செய்யப்பட்டுள்ளன.

    மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா இந்தியா நிறுவனங்கள் தங்களின் கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்துள்ளன. இரு கார்களின் ரியர் சீட் பெல்ட் மவுண்ட் பிராகெட்-இல் ஏற்பட்டுள்ள பிழை காரணமாக ரிகால் செய்யப்படுகின்றன.

    மாருதி கிராண்ட் விட்டாரா மாடலின் 11 ஆயிரத்து 177 யூனிட்களும், டொயோட்டா ஹைரைடர் மாடலின் 4 ஆயிரத்து 026 யூனிட்களும் ரிகால் செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் 8, 2022 முதல் நவம்பர் 15, 2022 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்கள் இம்முறை பாதிக்கப்பட்டுள்ளன.

    இரு நிறுவன உற்பத்தியாளர்கள் சார்பில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவர். பாதிக்கப்பட்ட வாகனங்களை வைத்திருப்போர், அவற்றை சரி செய்ய சர்வீஸ் மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ரிகால் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனத்தை விரைந்து சரி செய்வது பெரும் ஆபத்தை தவிர்க்க உதவும்.

    முன்னதாக இரு எஸ்யுவி மாடல்களும் இருமுறை ரிகால் செய்யப்பட்டுள்ளன. ஒருமுறை காரின் முன்புற சீட் பெல்ட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வதில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் மறுமுறை ஏர்பேக் கண்ட்ரோலர் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் இரு கார்களும் ரிகால் செய்யப்பட்டன. ரிகால் நடவடிக்கைகள் கார்களின் நீண்ட நாள் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் முயற்சி ஆகும். 

    • ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் நான்கு வேரியணட்களில் கிடைக்கிறது.
    • புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஆரா காரின் விலை ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேம்பட்ட புது ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறுவித நிறங்கள் மற்றும் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் E, S, SX மற்றும் SX (O) போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் CNG வேரியண்ட் 68 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

    ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பிளாக் கிரில், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ரியர் ஸ்பாயிலர், பூட் லிட் மீது க்ரோம் இன்சர்ட் உள்ளது. இந்த கார் போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், டியல் புளூ, ஃபியெரி ரெட் மற்றும் ஸ்டாரி நைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறம் நான்கு ஏர்பேக், TPMS, ABS மற்றும் EBD, ESC, VSM, HAC, 3.5 இன்ச் கிளஸ்டர் மற்றும் MID, ஃபூட்வெல் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், டைப் சி போர்ட்கள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரெகக்னீஷன், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரிக் அட்ஜஸட் வசதி கொண்ட ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவன எலெக்ட்ரிக் கார் மாடல்கள் இந்தியாவில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
    • ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சியெரா எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடலை காட்சிக்கு வைத்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு 50 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை மைல்கல்லுடன் நிறைவு செய்தது. உள்நாட்டு சந்தையில் டாடா நெக்சான் EV மற்றும் டிகோர் EV மாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டே டியாகோ EV மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இவை தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயார் நிலையில் இருக்கும் ஹேரியர் EV மற்றும் சியெரா EV மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. அந்த வகையில், ஜனவரி 2023 மாதத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    அதன்படி டாடா நெக்சான் EV பிரைம் 2022 மாடலுக்கு ரூ. 40 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் மொத்தத்தில் ரூ. 80 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வகையில் தள்ளுபடியாக பெற முடியும். டாடா நெக்சான் EV பிரைம் XM வேரியண்ட் தவிர வேறு அனைத்து மாடல்களுக்கும் கிடைக்கும்.

    2022 நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் போனஸ் வழங்கப்படுகிறது. டாடா நெக்சான் EV மேக்ஸ் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வரை சேமிக்க முடியும். 2022 டிகோர் EV மாடலுக்கு்ம இதே போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 நெக்சான் EV மாடல்களின் விலையை சமீபத்தில் அறிவித்தது. இதில் நெக்சான் EV மேக்ஸ் ரேன்ஜ் நீட்டிக்கப்பட்டு, சில வேரியண்ட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 2023 நெக்சான் EV பிரைம் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் கிரீன் போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    2023 டாடா நெக்சான் EV மேக்ஸ் வாங்குவோருக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கிரீன் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2023 டாடா டிகோர் EV மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கிரீன் போனஸ் மற்றும் ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ×